அத்வைத் ஆடி கார் விற்பனைக் கடையின் முதலாளி ஆடிகிங்கரர்.

கருத்துப்படம்: ஆடிகிங்கரரின் அத்வைதம்

கருத்துப்படம்: ஆடிகிங்கரரின் அத்வைதம்

இந்த ஆடிகிங்கரர் அவர்களுடைய பிரதம அடிப்பொடியின் பெயர் தான் வயாக்ராபாதர்.

வயாக்ரபாதர்

கருத்துப்படம்: வயாக்ராபாதர் (இவர் பாதங்கள்,  ப்ஃபீஸர் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த வயாக்ராவினால் உருவாக்கப்பட்டவை)

ஒரு ரகசியம்: உஷ்ஷ்ஷ்… கிட்டே வாருங்கள்; நான்  தான் இந்த வயாக்ராபாதர்.வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

இன்னொரு விஷயம்: தயவுசெய்து, இந்த கதையை நீங்கள் அத்வைதம் கண்ட ஆதிசங்கரருடனோ அல்லது வியாக்ரபாதருடனோ, குழப்பிக் கொள்ளவே கூடாது. சரியா?

இன்னொரு ரகசியம்: காலடி ஆதிசங்கரருக்கும் இந்த வியாக்ரபாதருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சமயம் தெரிவிக்கிறேன், சரியா?

-0-0-0-0-0-0-

வயாக்ராபாத புராணம்  – அதாவது, எஸ்ரா அவர்களின்  ‘ஒரிஜினல்’ கட்டுரையில் இருந்த நயாகரா எல்லாம் வயாக்ராவாக மாற்றப் பட்டு, சில சிறு மாற்றங்களுடன் உள்ளேற்றப் பட்டு – வயாக்ரா முன்னால் அல்லது பின்னால்?? – எனத் தலைப்புப் பெயர் மாற்றமும் பெற்று… …

வயாக்ரா முன்னால்
(வயாக்ராபாதர் அருளிச் செய்தது)

… ‘இரவிலே பல முறை’ என சரோஜாதேவி கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். வயாக்ரா கடையின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. Read the rest of this entry »

முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (1/3)

19. சோட்டாபீம்  போன்ற அற்ப கேலிச்சித்திர அசிங்க அதிகுண்டக் கோமணர்கள் இல்லாமல், வாழ்க்கையில் வீரத்தையும், விடாமுயற்சியையும் – எப்படித்தான் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது? கேளிக்கை முறை ஊடக நிகழ்ச்சிகளினால் மட்டும்தானே குழந்தைகளுக்கு இவ்விழுமியங்களைக் காண்பிக்க முடியும்? சேர்ப்பிக்க முடியும்?

ஆம். இது மிக வருந்தத்தக்க, ஆனால் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.

வேறு வழியில்லை. பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும், இதிஹாசங்களும், புராணங்களும், ஐங்காப்பியங்களும் சொல்லாத, சுட்டாத விஷயங்களை, மிகுந்த நயத்துடன், மிகத் தெளிவாக சோட்டாபீம் அவர்கள் காண்பிக்கிறார்கள். எனக்குப் புல்லரிக்கிறது.

அடிப்படை அறங்களின் ஒரு அங்கமான நேர்மை, தைரியம் போன்ற அடிப்படை விழுமியங்களை, பெற்றோர்களாகிய நம்மால் பல்வேறு அழுத்தங்களால் நம்முடைய குழந்தைகளுக்குப்  புகட்டமுடியாமல் போகும்போது, யாராவது தொலைக்காட்சியில் இவற்றைக் காண்பித்தால் என்னைப் போன்ற உலுத்தர்கள், புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்தச் சனியன்களுக்கு வேறு வேலையில்லை. மேலும் உங்களுடைய குழந்தைகள், சோட்டாபீம் படம் வரைந்த மேல்சட்டைகளை அணிந்து கொண்டு உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, உங்கள் இதயம் உருகிவிடாதா? Read the rest of this entry »

முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (1/3)

10. ஆனால், தொலைக்காட்சியில் நாம் இப்போது பார்க்கும் விஷயங்கள், கண்+செவி கொண்டு நம்மை அடையும் செய்திகள், பிற்காலத்தில் நமக்கு உபயோக கரமாக இருக்கலாமில்லையா? எதிர்காலத்தின் நாம் உபயோகிக்கக்கூடும் நினைவுகள், தற்காலத்திய இந்த்ரியத் துய்த்தல்கள் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன அல்லவா?

நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நம் நினைவில் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ எவ்வளவு கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொண்டவைகளிலிருந்து நாம் எவ்வளவு சதவிகிதத்தை உபயோகித்து நம்மை உய்வித்துக் கொண்டிருக்கிறோம், மகிழ்வித்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்தால் நலம்.

பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு – ஒரு நீண்டகால தாக்கத்து என்பது இல்லை. அவை சாதாரணமான துய்த்தல்கள் தான். அதிக பட்சம் One night stand போன்றவைதான். Read the rest of this entry »

எச்சரிக்கை: இந்தப் பதிவில் 1) ஏன் தொலைக் காட்சி என்பது வெறுக்கப் படவேண்டியதொன்று 2) அதனால் ஒரு சில நன்மைகள் தப்பித் தவறி இருந்தாலும் – உண்மையில் அது எவ்வளவு தீமை செய்கிறது 3) தொலைக்காட்சி முதல்வாத அடிப்படைவாதிகளுக்கு (Television Fundamentalists!), சோம்பேறிப் பார்வையாளர்களுக்கு எதிராக  என்றெல்லாம்…

… பிரகடனங்கள் இல்லை. மன்னிக்கவும்.

calvinhobbes-tv

ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் பின்னொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன். 8-)

மாறாக – என் பார்வையில் – குழந்தைகளுடனான ஒரு குடும்பச் சூழலில்,  சராசரித் தர (அறிவு, பொருளாதாரம், பார்வை, அனுபவங்கள் இன்னபிற) பெற்றோர்களால் – தங்கள் வீட்டில், தொலைக்காட்சியில்லாமல் என்னதான் செய்யக் கூடும் என்பதை மட்டுமேதான் இப்பதிவில் விவரிக்கப் போகிறேன்; இங்கு ஒரு முக்கியமான விஷயம்: எனக்குத் தெரியும் – நானும் ஒரு சராசரித்தனமான ஆள்தான் – அகஸ்மாத்தாக ஒரு கணவன், தந்தை போன்ற பல பாத்திரங்களில், குணசித்திர வேடங்களில் நடிப்பவன்தான். இன்னும் முக்கியமாக, நான் ஒரு அறிவுஜீவி கிறிவுஜீவியென்றெல்லாம் இல்லை.

ஆகவே, கடந்த சுமார் 30 வருடங்களாகத் தொலைக்காட்சியின் கிட்டவே போகாமல் காலம் தள்ளியிருக்கும் ஒரு சாதாரணன்  என்கிற முறையில் மட்டுமே இந்தக் கேள்வி-பதில் நடைப் பதிவு நீளும்.  யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்விகளை எல்லாம், என்னிடம் பலபேர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்கள்; விதம் விதமான பதில்களையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் மகனை, மேதகு சோட்டாபீம் அவர்களிடமிருந்து மீட்க வேண்டுமாம்.  ஆக, இந்தப் பதிவு; வழக்கம்போல, யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் !
Read the rest of this entry »

Very interesting guy, this Daniyal.

I chanced upon a short article in ‘Outlook’ – an otherwise execrable & shady (Indian) magazine – in the ‘waiting room / lounge’ of a local dentist – no, I was not the one with random tooth issues. ;-)

This article talked about how good this Daniyal guy is and stuff — and I got curious… (there was also a picture of him (as under) that would qualify him as a veritable ‘hunk!’)

Daniyal, who is also apparently a practising farmer (earlier avatars included being a Newyork lawyer and stuff) is good with his language, almost RK Narayan-like – in terms of telling an universal story from the particular point of view of a culture, while using a simple story line and leisurely snapshots based character development. Read the rest of this entry »

(அல்லது) டீடலஸ், இகரஸ் –  நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)

இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))

<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>

சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.

அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே  நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-(  ம்ம்ம் B-)!

ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…

என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான  தீர்வு இருந்தது.

கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.

எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது.   இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.

இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம்  என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

கடந்த நான்கு மாதங்களில் இலியட் + ஆடிஸ்ஸி காவியங்களைப் பிழிந்து, சக்கையை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்ததை, உதவியாக இருந்த புத்தக ஜாபிதாவைப் பற்றியென்று — இரண்டு பதிவுகளில் எழுதியிருந்தேன்; பாவம் அந்தப் பிள்ளைகள். (ஏன், நீங்களும் தான்!)

இதன் தொடர்ச்சியாக, இந்த டீடலஸ்+இகரஸ் (Daedalus, Icarus) கதைகளை, சென்ற பத்து நாட்களில்  – நான்கு நாட்கள் (மொத்தமாக சுமார் ஒன்றரை மணி நேரம்) என் குழந்தைகளுக்குச் சொன்னேன்.

எது எப்படியோ…

இந்த டீடலஸ், ஸிஸிபஸ் (Sisyphus) கதைகளெல்லாம் எனக்குப் பிடித்தமானவை. இதற்கு முக்கியமான காரணம், டீடலஸ் பாத்திரம் – இவன் ஒரு நல்ல பொறியியலாளன், கண்டுபிடிப்போன், கட்டமைப்போன் – என்பவை மட்டுமல்ல, அவன் மனிதனின் உட்கிடக்கையின் உன்னதங்களும் சகல கீழ்த்தரங்களும் உள்ளவனாக – ஒரு சாதாரணனாகச் சித்திரிக்கப் படுவதனாலும்தான் எனக் கருதுகிறேன்.

<–/-0-0-0-0- குறிப்பு #1 -0-0-0-0-\–>

கொஞ்சம் அதிகமாகவே  சுருக்கமாக இந்த டீடலஸ், இகரஸ் (கிரேக்க) கர்ண பரம்பரைக் கதைகளை – அவற்றின் ஒருவிதமான கதையாக்கத்தைக் கொடுக்கிறேன்: Read the rest of this entry »

ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்   படித்தீர்களா? (அதில் ஒரு விஷயம் எழுத மறந்துவிட்டேன் – அந்தப் பேச்சுகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன – அதாவது குறுந்தொகை + புறநானூறு குறிப்புகளைத் தவிர)

எனக்குத் தெரிந்து, மேற்கண்ட குறிப்புகளைப்  பார்த்த படித்த  இரண்டே பேர்களில் ஒருவர் எனக்கு உதவியாக இருந்த புத்தகங்களின் ஜாபிதாவைக் கேட்டிருக்கிறார். ஆக, அதனைக் கீழே கொடுக்கிறேன்; எனக்கு எப்போதுமே, ‘யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்’ தான். ;-) Read the rest of this entry »

இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கி செப்டெம்பர் 20 வரை, பெரும்பாலான தினங்களில் (=ஏறக்குறைய 55 நாட்கள்), காலை நேரக் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் 20-22 நிமிடங்கள் (மொத்தமாகச் சுமார் 1100 நிமிடங்கள் – குறைந்த பட்சம் 18 மணி நேரங்கள்) ஹோமர்-ன் இந்த இதிஹாசங்களை – Iliad + Odyssey – ஒரு கதை (பேருரையல்ல. மன்னிக்கவும்) போலச் சொல்லியிருக்கிறேன்.

என்னுடன் வேலை செய்யும் பாவப்பட்ட சகஆசிரியர்களும், பரிதாபத்துக்குரிய 7-10 வகுப்பு மாணவர்களும் தான் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். பாவம், அவர்கள் அபாக்கியவான்கள். பரலோக ராஜ்ஜியம்  நிச்சயம்  அவர்களுடையதில்லை. Read the rest of this entry »

முதலில், சில பத்திகள் – புத்தகச் சந்தை பற்றி… பின்னர் ‘கவிஞர்’ கதை.

இன்று பகல்நேரத்தில் எனக்குச் சுளையாக நான்கு மணி நேர அவகாசம் கிடைத்ததால், ஆங்க்லோ-ஃப்ரெஞ்ச் நெசவாலைத் திடலில் புதுச்சேரி அரசு நடத்திக் கொண்டிருக்கும்  புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தேன்; சிறிய அளவில் சுமார் 80த்திச் சொச்சம் கடைகளே விரிக்கப் பட்டிருந்தாலும் – அதன் மேலாண்மை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. (வழக்கம்போல, குடி நீர், கழிப்பறை வசதிகளெல்லாம், சந்தைக்குச் செல்பவர்களையே விடுங்கள் – சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களுக்குக் கூட பரிதாபமான கட்டுமானங்கள் தான்; இதைத் திருத்த பலபத்தாண்டுகளாகும் எனத்தான் நினைக்கிறேன்.)

வாங்கும் புத்தகங்களுக்கு 25% கழிவு; நுகர்வோர் ரொக்க ரசீதுகள் அனைத்தும் புதுச்சேரி அரசின் கலை-பண்பாட்டுத்துறை கொடுத்திருக்கும் பில்-புத்தகங்களில் போடப்பட்டன. அரசு இந்தக் கழிவில் 15%த்தை கடைக் காரர்களுக்குத் திரும்பிக் கொடுத்துவிடுமாம். ஆக – புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஏகக் கெடுபிடி. வெளிவாசலில் – பில்களையும் புத்தகங்களையும் மாய்ந்து மாய்ந்து சரிபார்த்து ஒவ்வொன்றிலும் ‘15% DISCOUNT – NOT FOR RESALE’ என ரப்பர்ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார்கள். ஏனென்று கேட்டால் சில கடைக்காரர்கள் அரசு கொடுக்கும் தள்ளுபடியைக் கயமையாகக் ‘கறக்க’ மறுபடியும் மறுபடியும் புத்தகங்களையும், பில்களையும் மறு சுழற்சி செய்தவண்ணம் இருந்ததால் தான் என்றார்கள்.

என்னவாக இருந்தாலும் நாம் வாங்கும் புத்தகங்களிலெல்லாம் இப்படி அச்சடித்துக் கொடுத்தது ‘இந்த டம்ப்ளர் வசந்தாபவனிலிருந்து திருடியது’ என வசந்தாபவன் காரர்களே அவர்கள் டம்ப்ளர்களில் பொறித்துக் கொள்வது போல, கொஞ்சம் அசிங்கமாகவே இருந்தது, என்ன செய்ய… Read the rest of this entry »

பல மாதங்களுக்கு முன்னால், குவிந்திருந்த பல வேலைகள் காரணமாக, சென்னையில் இரண்டு நாள் ‘சூறாவளிச் சுற்றுப் பயணம்’ செய்தேன் – அதன் மேம்பாலங்களும், ஒரு வழிச் சாலைகளும், புதிய மகாமகோகடைகளும், அலை மோதிக் கொண்டிருந்த மக்களும், ஹாரன்களும், சாலை நெரிசல்களும், புகையும், ப்ளாஸ்டிக் குப்பைமேடுகளும், அதிகப்பளீர் விளக்குகளும், சதாசர்வ காலமும் செல்போனில் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருக்கும் மக்களும் – எனக்குப் பல இடங்களில் எங்கிருக்கிறேன் என்ன செய்கிறேன் என்பதெல்லாம்கூட ஒன்றுமே புரியவில்லை!

இந்த நகரத்தில் தானா நான் பலபத்தாண்டுகள் குட்டையில் ஊறிய மட்டையாகக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்? பதினேழாண்டுகளில் இவ்வளவு மாற்றங்களா?

… ஒரு வழியாக வேலைகள் முடிந்ததும், ‘புதிய’ நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்கு பனகல் பார்க் அருகில் சென்றேன். ஒன்றும் புரியவில்லை! அங்கு ஒரு மேம்பாலம் வேறு – குழம்பிப்போய் இரண்டு சுற்றுச் சுற்றினேன். ஆரெம்கேவி என்ற ஒரு பளபளப்பு ஜவுளிக்கடை முன்னால் ஐந்து நிமிடத்தில் இரண்டாம் முறை என்னைப் பார்த்த ஒரு பூக்காரம்மா கன்ஃபூஸ் ஆய்டுச்சுங்களா என்றார். ஆமாம்மா வய்சாட்ச்சில்ல என்றேன். Read the rest of this entry »

ஸஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) அவர்கள் ஒரு இந்தியர். குஜராத்தியர். கடவுள் நம்பிக்கையுடைய ஒரு முஸ்லீமும் கூட.

தொழில்முனைவில் இருக்கும் இவர் – உலகளாவிய பிரசித்தி பெற்ற பிஎம்டபிள்யு கார் விற்கும் ஒரு பெரிய ‘டீலர்ஷிப்’ + கார் பராமரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர். அந்த நிறுவனம்: குஜராத்தில் அஹ்மெதாபாத், ஸூரத் நகரங்களிலிருந்து இயங்கி வரும் பர்ஸொலி மோட்டர்ஸ். இந்த நிறுவனம் நல்ல லாபகரமாகவும் தொடர்ந்த காலாண்டு-மேல்-காலாண்டு வளர்ச்சியுடனும் இயங்குகிறது. செல்வச்செழிப்புடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் எண்ணற்ற குஜராத்தி முஸ்லீம்களைப் போலவே – இவரும் பாஜக/மோதி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடனும், திருப்தியுடனும் இருக்கிறார். Read the rest of this entry »

I’ve read the Odyssey and the Iliad a few times, soaked in them (not in the original Greek though, sadly), I respect them – but nothing that I have ever read so far, comes even reasonably close to that grand  epic mahabharatha.

It is not because, I am from India or anything that I think so about mahabharata. I would consider the likes of  Kurosawa Akira, Johannes Sebastian Bach, Dawn Upshaw, Parveen Sultana, Kiri Te Kanawa, M S Subbulakshmi (this listing is delightfully endless..) – not to mention ‘The Brothers Karamazov,’  ‘Remembrance of things past’  etc etc – all part of my tradition & hoary past too! In my view, all great and grand things &  people of the world are part of our common tradition. Ahem!

So, one can ask why? What is so significant about mahabharata?? Read the rest of this entry »

“நாலு வயசாச்சு, ஒண்ணுமே தெரியல இவளுக்கு!” அலுத்துகொண்டார் அந்த தாய். நாலு வயசு குழந்தைக்கு என்ன என்ன தெரிஞ்சிரிக்கணும்? என்ற அவரது கேள்விக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில்கள், எனக்கு கவலையையும், எரிச்சலையும் தருகின்றன.

ஒரு தாய் மிகப் பெருமையாக கொடுத்த பட்டியலில், நூறு வரை எண்ணத் தெரியும், பெயர் எழுத தெரியும், ஒன்பது கோள்களின் பெயர்கள், என்று அடுக்கிக் கொண்டேபோனார். இன்னும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு பல விஷயங்கள் மூன்று வயதிலிருந்தே தெரியுமென்று வெறுப்பேற்றினார்கள். சொற்பமான சில பேர் ஒவ்வொரு குழந்தையும் அதனது வேகத்தில் கற்றுக் கொள்ளும், கவலைப்படத் தேவையில்லை என்றாரர்கள்.

ஏற்கனவே நொந்து போய் கேள்வி கேட்ட அந்த தாய், மற்ற குழந்தைகளுக்கு இவ்வளவு தெரியுமா என்று இன்னும் அதிகமாக கவலைப் பட ஆரம்பித்து விட்டார்.

மேலும் படிக்க:  நான்கு வயது குழந்தைக்கு என்ன தெரிய வேண்டும்?

(இந்தக் கட்டுரையை எழுதியுள்ள ராமசுப்புவை (+ அவர் குடும்பத்தை) எனக்குப்  பல வருடங்களாகத் தெரியும்)

27 செப்டம்பர் 2013 – 1630: மன்னிக்கவும்; எழுத்துருக் குழப்பத்தைச் சரிசெய்து விட்டேன். சில பரிசோதனைகள் செய்யும்போது தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.

the art of the possible

September 22, 2013

The problem of the dialogue between the individual and society, which has come up in connection with the question of intelligence and instinct. . . is nothing other than this capacity human beings have of distancing themselves from their environment, both external and internal. This detachment, which expresses itself in the separation between tool and hand and between word and object, is also reflected in the distance society creates between itself and the zoological group…

The most striking material fact is certainly the “freeing” of tools, but the fundamental fact is really the freeing of the word and our unique ability to transfer our memory to a social organism outside ourselves.

— André Leroi-Gourhan(1911-1986) in Gesture and Speech / MIT Press / 1993

As usual,  the end of the term saw to it that complete exhaustion  started creeping in – and one longs to get a decent 6 hours sleep, during most of the nights – at least during the holidays…

But then, we were able to do a significant number of things with our children in this term – have started working with our TinkerLab & a basic electronics lab and stuff.There is a fine chap (one of my junior boys from my good ol’ almamater) who has landed up with whom lot of things have suddenly become possible – especially, math, oh the lovely mathemagics and ah the la la land of puzzles…
Read the rest of this entry »

the legend of matajuro

September 20, 2013

One of the most ‘deep’ and clueful stories in the yoga – dhyaana – buddhism – shinto – zen – performing_martial_arts continuum, in my humble opinion, is the story of Yagyu Matajuro.

However, nowhere on the web could one find a good coverage or an even a faithful reproduction of the story. It is in this context that I am reproducing here, the story as retold / written by Dave Lowry (Autumn Lightning – The education of an American Samurai / Shambala / 1985 /  isbn  1 57062 115 2) in his eminently readable autobiographical work.

This story is narrated in ‘Autumn Lightning’ in the context of ‘zanshin’ – constant peripheral awareness, concentration and attention at all times – the ‘continuing mind,’ if you will.

And, I have used the story – many a time, in my sessions / training programmes – in significantly useful ways – whether it was for newbie employees / team members or for school going adolescent kids.

I have been fortunate enough to have been privy to very interesting discussions and thought fragments on that beast called ‘work ethic‘ and its cousins ‘unswerving focus‘ & ‘awareness‘ – subsequent to group readings of this legend and improvised theatrical enactments based on it. I used to have a loosely translated Tamil version of this legend fogr distribution to Tamil knowing kids, but I seem to have misplaced it, which is rather sad, but then…

And — Oh, the story of the impromptu  DNA double helix structure…

சில நாட்கள் மிக அழகாகக்  கழிந்து விடுகின்றன – குழந்தைகளுடைய குதூகலப் போக்கில் அவர்களுடன் ஒத்திசைந்து போவதில்.

சென்ற இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்கள் மப்பும் மந்தாரமுமாகவே கழிந்தன. பகல் வேளையிலேயே ஒரே ஜிலுஜிலுப்பு, மதிய வேளையில் பூந்தூரல்… கருகும்மென்று மேகம் நிரம்பிய வானம் திடீரென்று சில சமயம் எட்டிப் பார்க்கும் வெயில். மனதிற்கு, ஆன்மாவிற்கு அற்புதச் சுகமளிக்கும் (ஆனால் பரிசுத்த ஆவியை வேலைவெட்டியற்றுத் தட்டியெழுப்பாத) தருணங்கள்.

தலைக்குள், உணவுப் பாதைக்குள் செரட்டனின் ந்யூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் அநியாயத்துக்குச் சுரந்து, இப்பூவுலகில் அனைத்தும் இனியன இனியன  என்று சொல்லிக் கொண்டேயிருந்தன… இருந்தாலும் மெலிதான துக்கம் படர்ந்து கொண்டிருந்தது. (அடிப்படைப் புரிதல் #1: அய்யய்யோ! சுஜாதாத் தனமாக எழுத பிரயத்தனப் படவேண்டிய அவசியமேயில்லையா?)

… எங்கள் பள்ளியில் ஆஹாவென்று வளமாக வளர்ந்துள்ள பசும் பூச்செண்டு மரங்களினால், மழை நாட்களில் பல வகுப்பறைகள் இருட்டாகவே இருக்கும். குழல் விளக்குகளை உபயோகிக்கலாம்தான் – தொடர்ந்து வகுப்புகளை நடத்தலாம்தான். ஆனால், இம்மாதிரி சமயங்களில் நாங்கள் எல்லோரும் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்து விடுவோம். Read the rest of this entry »

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

51-70 காரணங்கள்

71-90 காரணங்கள்

… … ஏனெனில்:

91. குஜராத்தில் பசியே இல்லையா என்ன? பிச்சைக்காரர்களே இல்லையா என்ன? அங்கிருந்த காங்கிரஸ் காரர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள்? மாயமாகி மறைந்து விட்டார்களா என்ன? அவர்களுடைய பசியும் புறங்கையை நக்குதலும் இல்லவேயில்லையா என்ன? முதலில், இந்த மோதி, தன் மாநிலப் பசிப் பிரச்சினைகளை முதலில்  தீர்க்கட்டும். பின்னர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றலாம். Read the rest of this entry »

சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சில பின்னூட்டங்களும். எதையும் பதிவு செய்யப் போவதில்லை – ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை குப்பைகள்  – பொருட்படுத்தத் தக்கவையல்ல. இருந்தாலும், வசைகளை, ஏகவசனங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, அவற்றில், எடுத்துக் கொள்ளக் கூடிய  சாராம்சமும், என் பதில்களும் கீழே:

:   நீ பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாய், மோதி / சங் பரிவாரத்திடம். நீ விலை போய் விட்டாய்.

பதில் 1: ஆமாம். அவர்கள் ஒரு வார்த்தைககு பத்து ரூபாய் (மட்டும் தான், என்ன அநியாயம்!) கொடுக்கிறார்கள். கலைஞர் எனக்கு இதற்கு மேல் 10% கொடுத்தால், அல்லது சொக்கத் தங்கம் 15% மேலதிகமாகக் கொடுத்தால், அவர்களுக்கும் ஜால்ரா போடத் தயார். Read the rest of this entry »

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

51-70 காரணங்கள்

… … ஏனெனில்:

71, மோதி ஒரு ஆரிய வெறியர். ஏனெனில் அவர் தமிழர் அல்லர். ஊக்க போனஸாக, அவர் திராவிடர்  அல்லர் வேறு.

ஆகவே, அவர் பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர். ஏனெனில்:

  • செத்த திராவிடத் தலைவர்களின் கல்லறைகளுக்கு பகுத்தறிவு சார் மூடத் தனத்துடன் மாலை போடுவதையோ,
  • கஷ்டப் பட்டு படிக்கட்டுகள் பல ஏறி, திருப்பதீ வேங்கடேசா கோயிந்தா கோஓஓஓயிந்தா எனச் சொல்லாமல் சொல்லி, புறாக்களும் காக்கைகளும் சந்தோஷமாகப் பகுத்தறிவில்லாமல் எச்சமிடும் கருஞ் சிலைகளைக் கண்டடைந்து, மூச்சிரைக்க,  பகுத்தறிவுப் பயபக்தியுடன், அந்தக் கற்களின் மேல் வெகு பவ்வியமாக மலர் தூவுவதையோ,
  • அல்லது சட்டமிடப் பட்ட வெறும் காகிதப் படங்கள் முன் சுயமரியாதை – பகுத்தறிவுப் பகலவம் இன்னபிற நிமித்தம்,  கைகூப்பி, கண்ணீர் மல்கி நிற்பதையோ, பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் குண்டியைப் படம் பக்கம் திருப்பி, டீவீகாரர்களுக்கு சரியான கோணத்தில் தன் பகுத்தறிவுப் பேராசான்களின் பரிசுத்த ஆவியினால் தாம் ஆசிர்வதிக்கப்படுவதைக் காண்பிப்பதையோ…

— செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவெல்லாம் — பயிற்சி கியிற்சி என்று ஒரு இழவும்  இல்லாதவர் இந்த ஆரியக் கொழுப்பு மோதி. Read the rest of this entry »