திராவிடக்கல்வி (அனிதா, இளம் மாணவி) – சில குறிப்புகள்
September 9, 2017
இந்தச் சிறுமி அனிதா, அகாலமாக இறந்ததை முன்வைத்து ஒரு விதமானபிரமிப்புடன் வருத்தப்பட்டு, தமிழகத்துக் கல்வியின் தற்கால நிலையைக் குறித்து, தான் மேற்கொண்டு என்ன படிக்கவேண்டும் என்பதைப் பற்றியென என் மேலான கருத்துகளைக் கேட்டிருந்தாள், என்னுடைய (முன்னாள்) பிள்ளைகளில் ஒருத்தி.
அதாவது – 4½ + ½ = 5 :-)
-0-0-0-0-0-
யோ!
2. இந்தச் சிறுமியின் இறப்பைக் குறித்து என்னுடைய கருத்து – பாவம், ஆனால் she fell by the wayside வகை. இதன் மூல காரணம் நீட் தேர்வோ அல்லது வேறெந்த அண்மைய காலக் காரணமோ தனிப்பட்டமுறை சிக்கலோ அல்ல. இந்த நிலைக்கு ஆதி காரணம் – தமிழகத்தின் அதிசராசரி கல்வி-சமூகச் சூழல் – கல்வித்தந்தை+திராவிட பிஸினெஸ்காரர்களின் கொள்கைளைக் கூட்டணி. தரங்களைத் தரதரவென்று கதறக்கதறக் கீழிழுத்து அதல பாதாளத்தில் தள்ளும் அயோக்கியத்தனம்.
அதாவது — ப்ளூவேல் வழியாக இறக்காதவர்கள், திராவிடத் தமிழகக் கல்வியின் பராக்கிரமம் வழியாகப் பாதிக்கப்பட்டு பிணங்களாகவோ நடைப்பிணங்களாகவோ ஆவார்கள். அவ்வளவுதான். இந்தத் திராவிட ப்ரேண்ட் கல்வி(!) பற்றி, தனியார்+திராவிடக் கூட்டுக்கொள்ளை, சமச்சீரழிவுக் கல்விபற்றியெல்லாம் நாம் பலதடவை பேசியிருக்கிறோம் அல்லவா?
3. சரி. அடுத்த சில நாட்களில் இச்சிறுமியும் மறக்கப்படுவாள். தேவையற்ற உயிர் விரயம். தேவையற்ற உணர்ச்சிகரமும் சுயபச்சாத்தாபமும் தைரியமின்மையும் தன்னில்மூழ்கலும் அதிமானுடனாதலும், வேறென்ன சொல்ல. ஆனால், இந்த விவகாரத்தைத் தொடர, எங்களுக்கு நேரமோ அவகாசமோ இல்லவேயில்லை. ஏனெனில், அடுத்து – ஏதாவது தமிழ்ப்படம் அல்லது நடிகக்கோமாளிச் சர்ச்சையலை ஒன்று வரும். அதில் அதிதீவிரத்துடன் ஈடுபடவேண்டிய கட்டாயம் வரும், நம்மைப்போல படுபிஸியான போராளிகள் உலகத்தில் உண்டா எனத் தெரியவில்லை. :-( திராவிடம் வாழ்க. செப்டெம்பர்2017 இறுதியில் என் மரியாதைக்குரிய புரட்சித்தலைவி கனிமொழி அவர்களின் ஊழல் குறித்த விஷயங்கள் தொடர்பாக நீதிமன்ற விவகாரங்கள் வேறு வெளிவரலாம். ஆகவே அது குறித்துப் பொங்குவதற்கு ப்ளான் செய்யவேண்டுமல்லவா? ஆகவே வீணாகப் பொங்கி என் சக்தியை விரயம் செய்துகொள்வதாக இல்லை. (யார் அந்தப் பையன்? பலவருடங்களுக்கு முன் முத்துகுமாரோ குத்துகுமாரோ – தன்னை வீரத்துடன் விறகுக்கட்டையாக மாற்றிக்கொண்டானே, நினைவிருக்கிறதா? இவனும் திராவிடவீரத்தின் வெளிப்பாடுதான், ஆனால் இவன்பெயரே எனக்கு மறந்துவிட்டது! இவன் எதற்குத் தன்னை எரியூட்டிக்கொண்டான் என்பதே சனியன், நினைவுக்கு வரமாட்டேனென்கிறது! திராவிடத்தின் மறதிசக்தி என்பது மிகவும் நுட்பமானதும் வீரியமிக்கதும், அல்லவா?)
4. என்னைப் பொறுத்தவரை – தமிழகத்தில் 1967ல் ஆரம்பித்த பாரம்பரியமிக்க கந்தறகோளத் தமிழகக் கல்வியின் காரணமாக – இன்னமும் மேலதிகமாக இப்படி அகால மரணங்கள் லட்சக்கணக்கில் ஆர்பரித்து வீரஎக்காளத்துடன் உருமிமேளதாளத்துடன் நடக்காமலிருப்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். 1) திரைப்பட/டீவி கேளிக்கைகள் 2) இந்துத்துவ சதி 3) என்னுடைய சுயமுன்னேற்றக்கட்டுரைகள்.
5. நீட் பரீட்சை எதற்கு, ஏன், அதன் முக்கியத்துவம், அதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் என்பதைப் பற்றி ஒரளவு தெரியும். ஆனால் அப்பரீட்சை எப்படிப்பட்டது என்பதைப் பற்றி விளக்குகிறேன் என்கிற பெயரில், டாக்டர் படிப்பைப் பற்றி ஒன்றும்பெரிதாக அறியாத என்னால் தேவையேயில்லாமல் உளறிக்கொட்ட முடியாது. ஆனால் ஏதாவது ஃபேஸ்புக் / டிவிட்டர் / வாட்ஸப் போன்றவற்றில் உள்ள போராளி அறிவாளிச் சான்றோர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இது பற்றி நிறையவே தெரிந்திருக்கும் என்பது அந்த எழவுகளில் நேரத்தை வீணடிக்கும் உனக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். ஆகவே ஆளை விடு. அரைகுறைகள் ஆர்பரித்து உளறிக்கொட்டுவதைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கவே விருப்பம்.
6. நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் இருந்திருந்தால் அவற்றிலொன்றில் புத்திசாலியான நீ நிச்சயம் படித்திருப்பாய். ஏன் அந்த அனிதாவுமே கூட, அவற்றில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கக்கூடும். ஆக, அவள் இன்று உயிருடன் இருந்திருப்பாள். (இந்த அற்புதமான முற்றிலும்-இலவசம் (மாநில அரசு இவற்றுக்கு ஒரு நயாபைசா செலவு செய்யவேண்டியதில்லை) வகை உயர்தரப் பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் வராமல் இருந்ததற்கு திராவிட அயோக்கியக் கொள்ளைக்காரர்கள் தாம் காரணம்) அவை மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் இன்று சுமார் 24,000 குழந்தைகள் அதனால் பயன்பெற்றிருப்பார்கள்! ஆனால், அந்த அளவு திராவிடக் கொள்ளை நடந்திருக்காது அல்லவா? 24000 குழந்தைகளுக்கு நல்லபள்ளிச்சூழலில் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் தமிழகத்தில் திராவிடக் கல்வித்தந்தைகள், மன்னிக்கவும், மாமாக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில், இஞ்சினீயரிங் கஞ்சினீயரிங் கல்லூரிப் பம்மாத்துகளில் சேரமாட்டார்களல்லவா? இது பிரச்சினைதானே!
7. என்னுடைய கருத்துகளுக்கு, நீ ஒரளவு செவிசாய்த்தால் போதும். ஏனெனில் அவைதான் உண்மை, வழியும் சத்தியமும் ஜீவனும் என்றெல்லாம் நான் உளற முடியாது. ஆகவே பிறர் கருத்துகளையும் கேட்டுக்கொண்டு உன் அனுபவங்களின் மூலமும் சூழற்தேவைகளின்படியும் உன் சொந்த அணுகல்களை கட்டமைத்துக் கொள்வது சிறந்தது எனப் படுகிறது. உதாரணமாக. என்னைப் பொறுத்தவரை, நீ சார்ந்திருக்கும் மக்கள் திரளுக்கு முதன்மையான, கரிசனம் உள்ள தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எனத்தான் நினைக்கிறேன்; அதே சமயம் – உனக்கு நான் முன்னமே சொல்லியிருப்பதுபோல, சர்வ நிச்சயமாக அவர், தொல்.திருமாவளவன் அல்லர் எனவும்; ஆகவே கிருஷ்ணசாமி அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் (அதாவது சொல்லியிருந்தால்) என்பதைக் கூர்ந்து கவனிக்கவும். (பொதுவாகவே, எனக்கு அவரிடம் மரியாதை உண்டு – அதிகம் அவரைப் பற்றித் தெரியாவிட்டாலும், அவ்வப்போது அவர் குறித்து தனிப்பட்ட முறையில் சிலபல நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவருடைய அனுதினச் செயற்பாடுகள் பற்றிய அறிவு எனக்கு லபிக்கவில்லை என்றாலும், பல்லாண்டுகளாக அவர் எழுப்பி வந்திருக்கும் கருத்துகளில் பல எனக்கு ஒத்துப்போகின்றன, அவர் சமூக மேன்மைக்காக உண்மையாகவே விழைபவர் எனப் படுகிறது – சொல்லப் போனால், இவரும் இவரைப் போன்றவர்களும் தமிழக அரசியலில் வளரவேண்டும். அவ்வளவுதான்.)
8. இந்த அகாலச் சாவு குறித்து, சமனத்துடனும் உண்மையான கரிசனத்துடனும் யார் எழுதியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதாவது, நான் இன்னமும் எழுதவில்லை, எழுதப் போவதுமில்லை.
ஆனால் — இது குறித்துப் பொங்கியிருப்பவர்களில் என்னைப் பொறுத்தவரை முதன்மையானவர், என் பேராசானான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். ஆகவே உனக்கு போராளித்தனமான அறிவுரைகள் வேண்டுமென்றால் – தயவுசெய்து அவரை அணுகவும்.
சரி. நிஜமாகவே உனக்கு ஏதாவது மனவுளைச்சல் ஏற்பட்டால் எதாவது உருப்படியாகப் பேசவேண்டுமென்றால் என்னைத் தொடர்புகொள். ஆனால் — அப்படியில்லாமல் ‘சும்மாதான் ஃபோன் பண்னேன், காலேல என்ன சாப்டீங்க’ வகை வெட்டி அரட்டையாக அது இருந்தால் நிஜமாகவே மனவுளைச்சலை வரவழைத்துவிடுவேன். கபர்தார். :-)
தினமும் ஓடு.
மேற்கண்டதின் மின்னஞ்சல் மூலவடிவத்தை, இன்று காலை அனுப்பினேன். அச்சிறுமி இன்னமும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. படித்துவிட்டுச் சிரித்தேன் என்றாள். ஆகவே, ஒரு ஆசுவாசம். :-)
சரி. பிரச்சினையென்னவென்றால், எஸ்ராமகிருஷ்ணன் அவர்களின் இன்னொரு +1 ‘also ran’ விசிறியாக அவள் மாறாமலிருக்கவேண்டும்.
இன்று காலை, நண்பரொருவர் அனுப்பிய சுட்டியைப் படித்தேன் – இது ஆங்கிலத்தில் இருக்கிறது; ‘நீட்’ குறித்த தமிழகக் குழப்படிகளை எதிர்கொள்ளும் வகையில், மேன்மைக்கான சிலவழிகளைப் பரிந்துரைக்கும் அளவில் – இது ஒரு முக்கியமான கட்டுரை. அவசியம் படிக்கவும்.
Explainer: How NEET has exposed the standard of science education in Tamil Nadu (How do TN students measure up against their peers in south India?)
இம்மாதிரிக் கட்டுரைகளை இந்த கேஎஸ்நாகராஜன் போன்ற இளைஞர்கள் தமிழிலும் எழுதலாமே எனப் படுகிறது.
எது எப்படியோ, இம்மாதிரிக் கட்டுரைகளை விரித்து, வரலாற்றுக்காரணிகளை இணைத்து மேம்படுத்தி – தமிழ்ப்படுத்திஎடுக்கப்படவும் வேண்டும். இது தொடர்பாக நிறைய எழுதப் பட வேண்டும். அது மட்டும் போதாது. மிகமுக்கியமாக நிறைய பணிகள் செய்யப் படவும்வேண்டும்.
பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று.
-0-0-0-0-0-
37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா!
05/04/2017
திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை!
24/02/2017
தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-(
22/02/2017
எந்த மசுத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கு ஒரு இயல் என ஒன்றைச் சேர்த்துக் கோர்த்துவிட்டு ஆனந்தமாக முஷ்டிமைதுனம் செய்துகொள்வான் தொழில்முறைத் தமிழ்க்கூவான். Read the rest of this entry »
mathematical pornography
August 19, 2017
Once upon a time, 1/t… Read the rest of this entry »
(What does the ISIS flag carry/mean*: Muhammad is the messenger of Allah / Mohammadun Rasulu Allahi) Read the rest of this entry »
என்னுடைய பாரதம் மஹோன்னதமானது! (+மழையும்!)
August 15, 2017
இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான் கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.
… இன்று நமது சுதந்திர தினம், அதிகாலை 1.15 மணியிலிருந்து, ஒரே சீராக மழை பெய்த மணியம்.
புதுப்புதுத் தமிழ்வார்த்தைகளை உருவாக்குவது எப்படி
August 10, 2017
பாஸ், இந்த வாசகர் கடிதமும் அதுக்கு எழுத்தாளரோட பதிலும் ரொம்ப விரசமாக இருக்கும்னு யிட்சிணி சொல்லுது. நீங்க இப்ப ஒதுங்கிக்கறது உத்தமம். Read the rest of this entry »
வாசகர் கடிதம் – புத்தம்புதிய காப்பி, செம்பதிப்பு*
August 6, 2017
கசப்பு ராமம்,
நீங்கள் எழுதுவது எதுவும் எனக்குப் புரிவதேயில்லை. அதனால், புரிந்துகொள்ள முடியாததையெல்லாம் 1) அற்புதமாகக் கருதுவது அல்லது 2) அற்பமாகக் கருதுவது எனும் தமிழ வழமையின் படி, இரண்டாம் வழியாக உங்களை அணுகுகிறேன். Read the rest of this entry »
ஜிஹாத் அல்-நிக்காஹ், சபிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், பாரத இஸ்லாம்: சில குறிப்புகள்
August 4, 2017
இது சோகங்களைக் குறித்த பதிவு. ஆகவே — தேவையில்லாமல் மனவுளைச்சல் அடைவதைத் தவிர்க்க விரும்புவர்கள், வெகுசுளுவாக மனம்புண்படுபவர்கள், மதரீதியான சமனமற்றவர்கள் – இந்தப் பதிவை மும்முரமாகத் தவிர்க்கலாம். நன்றி. (+ இதில் ~1500 வார்த்தைகள்! உங்களுக்கு இது தேவையா? தீவிரமாக யோசிக்கவும். சரியா?) Read the rest of this entry »
நடைமுறை அரேபிய இஸ்லாம், சோகங்கள்: சில குறிப்புகள்
August 1, 2017
மனது ஒரு நிலையில் இல்லை. Read the rest of this entry »
தயவுசெய்து இப்பதிவைக் குறித்து யாரும் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் கடிதம் எழுதாமலிருப்பீர்களா? :-(
July 28, 2017
ஏற்கனவே நான் பயபீதியில் இருக்கிறேன். :-(( Read the rest of this entry »
…ஜெயமோகன் அவர்கள், போயும்போயும் நான் எழுதிய அற்பப் பதிவைப் படித்துவிட்டுப் பாவம், இப்படி – “…ஆனால் ஒத்திசைவு ராமசாமியை எனக்குத்தெரியும்- இது அவருடைய மாறாத உணர்வுநிலை. கசப்பு, கோபம் இல்லாமல் அவரால் எதையும் விவாதிக்க இயல்வதில்லை” ஆரம்பித்து வசைபாடியெனக் கோடிகாட்டி வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். வஸிஷ்டர் வாயால் ப்ரம்மராக்ஷஸ் எனப் பட்டம் வாங்குவதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். :-) Read the rest of this entry »
…நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள்
July 9, 2017
‘விடுதலை’களுக்கும் என்டிடிவி ஸன்டிவி கும்பல்களுக்கும் ஈடு கொடுக்கும்படியான – இந்த அண்டப்புளுகு ஆனந்தவிகடன் குழுமத்தின் அயோக்கிய செய்தி திரித்தல்களை படிக்கும்போதெல்லாம் (எப்போதாவது ஒருமுறை அவற்றை ஒரு நோட்டம் விட நேரும்போதும் கூட) எனக்குப் பயங்கரமாக எரியும். வயிற்றில் அமிலம் சுரக்கும். Read the rest of this entry »
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன… (இவ்வரிசையின் முதல் பகுதி. இரண்டாம் பகுதி; இவற்றை வாசித்துவிட்டு வந்து கீழே படித்தால் ஓரளவு புரியலாம். ஆனால், உங்களுக்கு மேம்போக்கான சொதப்பலுளறல் கருத்துகள்தாம் வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக விடுதலைவீரமணிகளிடமும் திருமாவளவன்களிடமும் மண்வெட்டி மம்பட்டிய இசுடாலிர்களிடமும் சரணடையலாம். நன்றி!) Read the rest of this entry »
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன…
…கவலை வேண்டேல். இதுதான் கடைசி. (ஹ்ம்ம்… + 1 வரலாம். திருவண்ணாமலைக்காரர் தொடர்பதிவுக்காகப் பிடுங்கி எடுத்ததினால் இப்படி. மன்னிக்கவும்)
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள்
June 26, 2017
ராம்நாத் கோவிந்த் அவர்களைப் பற்றி – அவர், நம் ஜனாதிபதியாகப் போவதைக் குறித்து, நம்மில் பலருக்கும் பலப்பலப் பலான பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள்? Read the rest of this entry »
our teachers, teacher professional development, children, learning, future – some notes
June 17, 2017
I think, at my university – we recently had a very interesting discussion-thread about ‘education’ and so have collated my notes and responses to my notes and then my response – in this post (with some links thrown in + typos to boot) – in a chronological order. (the idea is to make some of our harebrained thoughts public, in exchange for brickbats, mainly!). Thanks! (R1->R4 are various respondents in the thread)
Warning: This is 1700+ words loooong. Go away if you can help it. nahi nahi rakshati twitterkarane; or facebookmarane.
அழு தமிழகமே, அழு…
June 15, 2017
மன்னிக்கவும். இப்படி அழுமூஞ்சி உணர்ச்சிகரமான ஆவேசத் தலைப்புகளை என் பதிவுகளுக்கு வைப்பதில்லை; ஆனால் இது காலத்தின் கோலம், என்ன செய்வது சொல்லுங்கள். Read the rest of this entry »
… இது வாலுக்கும் பையனுக்கும் இடையில் இருக்கும் ஜந்து. Read the rest of this entry »
அய்யா எஸ்ரா! தயவு செய்து கிரேக்க நாடகங்களை விட்டுவிடவும்! அவை என்ன பாவம் செய்தன, சொல்லுங்கள்?
June 11, 2017
:-( எஸ்ராமகிருஷ்ணம் தொடர்கிறது… Read the rest of this entry »
மேதகு ‘கூடங்குளம் புகழ்’ உதயகுமார், அற்பப் பொய்யர்…
June 8, 2017
அணுக்கரு சக்தி பற்றி ஒரு மசுரும் தெரியாவிட்டாலும் அறிவியலில் அடிப்படைகளை அறிந்திலர் என்றாலும் மிகைப்போராளித்தனமாகக் குரைப்பவர், புரளிகளை ஏகோபித்துப் பரப்புபவர், அறிவிலித்தனமான பிரிவினைவாத வெறியையும் தொழில்நுட்பதுவேஷத்தையும் கர்மயோகி போலக் கடைபிடிப்பவர், ஊக்கபோனஸாக மாதாந்திரக் காலட்சேபத்துக்கு வெறும் மனிதவுரிமைத் தொழிலில் அமோகமாக முனைந்துள்ளவர்தாமே – ஆனாலும், நான் இதுவரை கேள்விப்பட்டிருந்தபடிக்கு பிச்சைக்காசுகளைப் (‘நல்கை!’) பெற்றுக்கொண்டு அடியாள் போலச் செயல்படுவரில்லைபோலுமே ஆக வெறும் முட்டாக்கூத் தனமாக நடந்துகொள்பவர்தாமே, அயோக்கியரில்லைபோலுமே அதனால் விட்டுவிடலாமா எனப் பார்த்தால்… Read the rest of this entry »


