ஜிஹாத் அல்-நிக்காஹ், சபிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், பாரத இஸ்லாம்: சில குறிப்புகள்
August 4, 2017
இது சோகங்களைக் குறித்த பதிவு. ஆகவே — தேவையில்லாமல் மனவுளைச்சல் அடைவதைத் தவிர்க்க விரும்புவர்கள், வெகுசுளுவாக மனம்புண்படுபவர்கள், மதரீதியான சமனமற்றவர்கள் – இந்தப் பதிவை மும்முரமாகத் தவிர்க்கலாம். நன்றி. (+ இதில் ~1500 வார்த்தைகள்! உங்களுக்கு இது தேவையா? தீவிரமாக யோசிக்கவும். சரியா?)
இப்பதிவில் நான் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் உரையாடல்கள் + வாக்குமூலங்கள் குறித்த ஒலிப்பதிவுகள் தொடர்புள்ள சில (முடிந்தவரை அனாமதேயப்படுத்திய) விவரங்களையும் என் எதிர்வினைகளையும் எழுதுகிறேன்.
…சரி. என்னிடம், நான் கேட்டுக் குறிப்பெடுக்கவேண்டிய ஒலிக்-கோப்புகள் 80க்கும் மேலிருக்கின்றன. தற்போது 37ஆம் கோப்பில் இருக்கிறேன். கிட்டத்தட்ட பாதிக்கிணறு தாண்டியாகிவிட்டது.. ஏற்கனவே, என் வாழ்நாளில் சுமார் 60 மணி நேரத்தை இதில் செலவழித்தாகி விட்டது. இத்துடன் இந்தக் குறிப்பெடுத்தலை ஏறக்கட்டி விடலாமென நினைக்கிறேன்; இதற்குக் காரணம்: என் கல்மனத்துக்கும் அப்பாற்பட்டு – இந்தவேலையானது அயர்ச்சியையும், வெறுப்பையும், நம்பிக்கையின்மையையும் தருவதுதான். :-(
…ஹ்ம்ம்… …ஆக, சில வாரங்கள் முன்புதான் இந்த ஜிஹாத் அல்-நிக்காஹ் எனும் மணமுறை(!)யைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இது இஸ்லாமியதேசம் (IS-இஸ்லாமிக் ஸ்டேட்) அமைப்பின் காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு.
அல்லாவுக்காக, மார்க்கத்துக்காகப் போராடுபவர்கள் என்றலையும் அதன் குண்ட ஜிஹாதிகளுக்கு எப்போது வீரமரணம் கிடைப்பது, எப்போது சொர்க்கத்துக்குச் சென்று 72 தேவதைகளுடன் சல்லாபிப்பது, சொல்லுங்கள்? அதற்கும் பெரிய வரிசை இருக்கும் போலிருக்கிறதே, first come first fucked என்று வரிசைக்கிரமமாகத் தானே அய்யா, அங்கு காரியங்கள் நடக்கும்?
ஆனால் அய்யன்மீர், ஜிஹாதிகளாக இருந்தாலும் இறக்கும் வரை புணரவும் வேண்டுமே. ஹார்மோன்களைய்யா ஹார்மோன்! ஹல்ல்ல்லோ…
இஸ்லாமியதேசக் கொலைகாரர்களின் பிரச்சினையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். திராவிடனாக இருந்தாலாவது வீரப்பேச்சு பேசியே ஆனந்தமாக முஷ்டிமைதுனம் செய்துகொள்ளலாம்; ஊக்கபோனஸாக – தமிழினம் இனமானம் சுயமரியாதை ஹிந்திஒழிக பிக்பாஸ்வாழ்க மீத்தேன்திட்டம்ஒழிக ஆனாக்கஎங்கவூட்லகேஸ்அடுப்புவாழ்க அணுசக்திவழிமின்சாரம்ஒழிக ஆனாக்கஎங்கவூட்லடீவிபாக்கமின்சாரம்வாழ்க ஜல்லிக்கட்டுகாளைவாழ்க ஜல்லிக்கட்டுகாளைஇறைச்சியும்வாழ்க போன்ற இன்ப லாகிரி கோஷ்டங்களும் இருக்கின்றனவே!
…ஆனால் அய்யன்மீர், ஜிஹாதிகள் திராவிடர்கள் அல்லரே! வேறு விதமான வெறிகள் பிடித்தவர்கள் தாமே! முஷ்டிமைதுனம் வகையறா சுயஇன்பம்ஸ் ஒத்துவரமாட்டா என மதப்புத்தகமே கோடிகாண்பிக்கிறதே! (கொர்-ஆன் ஸுரா#23 அல்-முமினம் 5-7)
இஸ்டிம்னா (முஷ்டி மைதுனம்) செய்வது ஒரு அருவருக்கத்தக்க ஹராம் அல்லவா? (இஸ்டிம்னா குறித்த, மெத்தப்படித்த சான்றோர் விவாதங்களை உள்ளடக்கிய ஒரு இணையப்பக்கம்)
…அப்படியே வேறுவழியேயில்லாமல் இஸ்டிம்னா செய்தாலும், அது வேறு உணவே கிடைக்கவில்லையானால் பன்றியைப் புசிப்பதற்குச் சமானமான கேவலம் அல்லவா?
இது என்னவென்றால் – கிடைக்கும் அடிமைப் பெண்களை (இவர்களில் பலர் 8+ வயதுச் சிறுமிகள்) முடிந்தவரை ‘பயன்’படுத்திக்கொண்டு — ‘தாம் பெற்ற ஏறு, ஏறுக இவ்வையகம்‘ எனும் பலாத்காரக் கயமை வகை.
அதாவது, நூதன முறைகளில் பல உதிரிகள் தொடர்-பாலியல் பலாத்காரம் செய்யும் ‘பண்பாடு.’ அதாவது – நிக்காஹ் செய்துதான் புணரமுடியும் என இந்த அற்ப ஜிஹாதிஜந்துக்கள் கருதுவதால், அதனைச் செய்துவிட்டுப் புணர்வது.
இப்படி ஒவ்வொரு இஸ்லாமியப் ‘போராளி’யிடமும் ஒவ்வொரு மாதம் –>> பின்னர் தலாக்தலாக்தலாக் –>> அடிமையின் பாலுறுப்பில் ஹைமன் எனும் கிழிந்த திரையைத் தைக்க ஆபரேஷன் –>> புத்தம்புதிய காப்பியாக ‘கற்புடை மகளிராக’ அடுத்த போராளியிடம் விநியோகம் – மறுசுழற்சி; reuse, recycle and reduce. இஸ்லாமியதேச ஜிஹாதிகளைப் போன்ற சுற்றுச்சூழல்வாதிகள் இவ்வுலகில் வேறு எங்கேனும் இருக்கிறார்களா?
இந்த ஆபரேஷனைச் செய்ய மறுக்கும் சுயமரியாதைமிக்க, அறவுணர்ச்சியுள்ள பாவப்பட்ட மருத்துவர்கள் (அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும்) சுட்டுத் தள்ளப் படுவர். கேல் கதம்.
…’அடிமை’ என்றால் போரில் அல்லது இன்னொருவர் வீட்டிலிருந்து (கைப்பற்றப்பட்ட பகுதிகளில்) பிடிக்கப்பட்ட சபிக்கப்பட்ட பெண் பிள்ளைகள் என்பதை அறிக. ஆகவே மதப் புத்தகத்தை ஒருகையில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் இவர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் உணர்க.
இந்த அடிமைகள் – அவிசுவாசிகளாகவோ அல்லது முஸ்லீம் அல்லாதவர்களாகவோ இருக்கவேண்டும். குர்திகள் போல, முஸ்லீம்களாக இருந்தாலும் அவர்கள் காஃபிர்கள்தாம். அவ்வளவுதான். சிம்பிள். என் கடவுளை நீ நம்பவில்லையென்றால் உனக்கு உயிர்வாழவே தகுதியில்லை. இந்த அழகில் உரிமையாவது மசுராவது. போங்கடா.
-0-0-0-0-0-
அவர் ஒரு யேஸிதிப் பெண்மணி, 27 வயதுதான் ஆகிறது, முஸ்லீம் அல்லர். ஆக, ஒரு பாவப்பட்ட திம்மி. அவருடைய குழந்தைகளையும் கண்ணெதிரில் தலைகளைச் சீவிக் கொன்று விட்டனர். கணவன் அதற்கும் முன்னமே ஸிங்கல் போரில் இறந்துவிட்டான். இந்த பாவப்பட்ட அம்மணி அவர்கள் – நேர்காணல் செய்து கொண்டிருக்கும் என் நண்பரிடமும் அவருடைய மொழிபெயர்ப்பாளரிடமும் ஒரு விதமான மிகைஉணர்ச்சியுமில்லாமல் கோரிக்கை வைப்பது – ஆயுதப் பயிற்சிக்கும் ஆயுதத்துக்கும்.
‘என்னிடம் இழப்பதற்கு வேறொன்றுமில்லை. சகோதரர்களே‘ ‘என்னுடைய ஒரே ஆசை – டைய்ஷ்*களை என் கைகளால் கொல்லப் போவதுதான்‘ — வாழ்க்கை இவ்வளவு மோசமாகவா இருக்கும்? என்னால் நம்பவே முடியவில்லை, இப்படியும் அசிங்கங்கள் நடக்குமா என்று. சரியாகக் குறிப்பெடுப்பதற்காக இரண்டுமூன்றுமுறை இவ்வொலிப்பதிவைக் கேட்டேன். அநியாயச் சோகம். (*இஸ்லாமிக் ஸ்டேட் காரர்களை இவர்கள் விளிப்பது டைய்ஷ் என்று – இது அந்த பயங்கரவாத அமைப்பின் அரேபிய பெயரின் சுருக்கம்)
இவருடைய கதையைக் கேட்கக்கேட்க, பொதுவாகவே கல் நெஞ்சக்காரனான எனக்கே கண்களில் நீர் தளும்பி விட்டது.
‘பேயவள் காணெங்கள் அன்னை!’ தான் நினைவுக்கு வந்துகொண்டிருந்தாள்.
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்.
இவருடைய நியாயமான ஆசைகள் நிச்சயம் நிறைவேறவேண்டும். அது சர்வ நிச்சயமாக வன்முறை என்றாலுமேகூட. (தனிப்பட்ட முறையில், என் அமெரிக்கப் பணக்கார நண்பர்களை வைத்து இம்மாதிரி ஜீவன்களுக்கு ஏதாவது உருப்படியாக உதவமுடியுமா என முயன்று கொண்டிருக்கிறேன். ஹ்ம்ம்… பார்க்கலாம். வாழ்க்கை எப்படி விரிகிறதென்று :-().
இதேபோல 35+ மேலதிக உரையாடல்-நேர்காணல்கள். அதில் பனிரெண்டு பேர் 8-13 வயதுச் சிறுமிகள்!
அப்பாவிக் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்வது – அதுவும் ஜிஹாத் அல்-நிக்காஹ் என்ற பெயரில் அலங்கோலம் செய்வது, என்ன கோரம். மதவெறி என்பது இப்படியா விரியும்? ஜெர்மானிய நாட்ஸிகள் கூட இப்படியெல்லாம் யூதக் குழந்தைகளைத் துன்புறுத்தியாகக் கேள்விப் படவில்லையே!
ஒரு குழந்தை சொல்கிறது (துளிக்கூட அழுகையே இல்லாமல், வாழ்க்கையில் எதனை எதிர்பார்ப்பது என்றே தெரியாமல் தொடர்ந்து வன்புணர்ச்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் இப்படியாகிவிடுமோ, பாவம்!) – என் சினேகிதி மூச்சுமுட்டி செத்துப் போய்விட்டாளென்று. மேலே வரிசையாக தொப்பைக்கார ஜிஹாதிகள் விழுந்துகொண்டே இருந்தால் பால்மணம் மாறாத 8 வயதுச்சிறுமியின் உடம்பு என்னத்துக்காகும், சொல்லுங்கள். அக்குழந்தை இறந்தபின்னும் தொடர்ந்து இப்படியே நடந்திருக்கிறது. (இது ஜிஹாத் அல்-நிக்காஹ் வழிமுறை அல்ல, வெறும் பலாத்காரவெறி வகைதானாம்; இது மொழிபெயர்ப்பாளரின் உபயோககரமான குறிப்பு. நன்றி அம்மணி!)
இந்த ஒலிக்கோப்பு குறித்த மொழிபெயர்ப்பாளக் கருத்துகளில், ஒருவர் சொல்கிறார் – தன் பிரியத்திற்குரிய அம்மணி இறந்தபின்னர் இறைதூதர் மொஹம்மதும் அச்சடலத்துடன் உறவு கொண்டார் – ஆகவே இந்த ஜிஹாதிகள் அப்படிச் செய்ததற்கு முகாந்திரம் இருக்கிறதென்று. ஹ்ம்ம்… இந்த மொழிபெயர்ப்பாளரும் ஒரு இஸ்லாமியர், நுரை தள்ளும் பிற்போக்காளரல்ல, அதேசமயம் முற்போக்காளத்தன மேட்டிமையும் இல்லைதான் – ஆனால் இவர், சரியாக ஹோம்வர்க் செய்யவில்லை என நினைக்கிறேன்.
…ஏனெனில் இஸ்லாம் பற்றி ஓரளவு (ஓரளவுதான்) அறிந்துள்ள எனக்குத் தெரியும் – இதன் சாத்தியக்கூறு குறைவென்று. ஏனெனில் ஃபாத்திமா பின்ட்-அஸத் அம்மணி, மொஹெம்மத் அவர்களுக்கு அத்தைமுறை, ஒருவகையில் வளர்ப்புத்தாய். அம்மணியைப் புதைக்கத் தயார் செய்யப்பட்ட அக்கல்லறையில் மொஹெம்மத் அவர்கள் படுத்தார் என்பதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம் – படுத்து, அச்சடலம் சரியாக வைக்கப்படமுடியுமா எனப் பார்த்திருக்கலாம் – இறைதூதராகிய தான் ஒரிரவு படுத்து ‘சுத்திகரிக்கப்பட்ட’ இடத்தில் தம் அத்தையின் சடலம் இடப்பட்டால் அந்த அம்மணிக்குச் சொர்க்கம் கியாரண்டி என்றெல்லாம் இருந்திருக்கலாம் எனக் கற்பித்துக்கொள்ளலாம்; அல்லது அவர், சடலத்தின் கூடவே படுத்தார் எனவும் புரிந்து கொள்ளலாம், இன்னமும் நீட்டித்தால் அவர் சடலத்துடன் உறவு கொண்டார் எனவும் கற்பனை செய்துகொள்ளலாம் … பிரச்சினையென்னவென்றால் மதம் தொடர்பான எல்லாமே கற்பனைதான், அனுமானங்கள்தாம் + அரபிய மொழியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓராயிரம் அர்த்தங்கள், அதுவும் மாறிக்கொண்டே இருக்கும். மேலும் இக்காலங்களில் நாம் அருவருப்புடன் பார்ப்பவை அக்காலத்தில் அப்படியல்ல; இதைத் திருப்பிப்போட்டாலும் அதுவும் உண்மை. ஆகவே.
பிரச்சினை என்னவென்றால் கொர்-ஆனையும் ஹடித்களையும் ஓரளவாவது புரிந்துகொண்டு படிப்பவர்கள் முஸ்லீம்களிலும் சொற்ப ஆசாமிகள்தாம்; இவர்களிலும் அவற்றை அக்காலகட்டத்திற்கேற்ப அப்புத்தகங்களை – கையேடுகளைப் போல விமர்சனரீதியாகப் புரிந்துகொள்பவர்கள் அதில் இன்னமும் சொற்பம். இது சோகம்தான்! ஏனெனில் ஆழ்ந்து படித்தால் இவ்விரு இஸ்லாமிய கருத்தாக்க மூலங்களிலும் எடுத்துக்கொள்ளவேண்டியவையும், புறம் தள்ளப் படவேண்டியவையும் இருக்கின்றன என்பது புரியும். ஆனால் அப்படி ஆழ்வது மிகவும் கஷ்டம். ஆகவே, கடன் வாங்கிய புல்லரிப்பு/நுரைதள்ளல் வகையறாக்களிலேயேதான் – வெட்டி முல்லா/உலீமாக்களின் உளறல்கள் வழியாகவேதான் பெரும்பாலும் காலட்சேபம் நடந்துகொண்டிருக்கிறது, வேறென்ன சொல்ல!
ஒரு 12 வயதுப் யேஸிதிப் பெண்குழந்தை சொல்லும் கதை இன்னமும் சோகம். அதனுடைய பேச்சில் ஒரே குழறல். மொழி பெயர்ப்பாளர் மறுபடியும் மறுபடியும் என்னம்மா சொல்கிறாய் எனக் கேட்டுத்தான் புரிந்துகொள்கிறார். ஒரு ஜிஹாதி அக்குழந்தையின் வாயில் தன் ஆண்குறியை வைத்து அதனைச் சப்பச் சொல்லியிருக்கிறான். ஆனால் அக்குழந்தை அதன் வாய் மிகவும் வலித்ததினாலும் அருவருப்பினாலும் அதனைக் கடித்துவிட்டிருக்கிறது. அவ்வளவுதான், அந்த அற்பன் தொடர்ந்து பலமுறை அக்குழந்தையின் கன்னத்தில் அறைந்து தன் துப்பாக்கியின் பின்புறத்தால் அக்குழந்தையின் வாயில் பலமுறை குத்தியதால் அதற்குப் பற்களெல்லாம் உடைந்துபோய், நாக்கு கிழிந்து இப்படி. முகமும் கோரமாகச் சிதைந்துபோய்விட்டது.
மொழிபெயர்ப்பாளரும், உரையாடல் நடத்துபவரும் அழுகிறார்கள். அந்தச் சிறுமி அழவில்லை.
ஒரு குர்தி (ஸுன்னி முஸ்லீம்) பெண்மணி – 34 வயது. இவர் முஸ்லீம் அவிசுவாசி (+கொஞ்சம் கார்ல்மார்க்ஸ் பாதிப்பு) வேறு. ஆகவே ஸ்பெஷல் கவனிப்பு கிடைத்திருக்கிறது. தினம் 12-14 மணி நேரம் ஜிஹாதிகளுக்கு ஸர்வீஸ். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டிருந்திருக்கிறார். துவளவேயில்லை. இவருடைய தகப்பன் அப்துல்லாஹ் ஒஸலன் அணியில் இருந்தவர். ஆகவே இவருடைய திரும்பியெழும் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கலாம்.
… இவர் தப்பித்து ஓடிவந்து, இப்போது குர்திகளின் ஸ்பெஷன் ஃபோர்ஸஸில் இருக்கிறார். டிஷா டிரர் அணியோ, யெகினெயன் அன்டி டிரர் அணியோ அல்லது வேறு ஏதாவதோ (இது எனக்குச் சரியாகப் புரியாத பகுதி) இவற்றில் ஒன்றில் ஒரு முன்னணி கமேண்டோவாக இருக்கிறார் – சிரித்துக்கொண்டே சொல்கிறார் ‘கடந்த 8 மாதங்களில் ஐம்பதுக்கும் மேலான டைய்ஷ்களை மேலுலகத்திற்கு தேவதைகளுடன் சல்லாபிக்கவென பிரத்தியேகமாக, ஸ்பெஷல் டெலிவரி குரியர் ஸர்வீஸில் அனுப்பியிருக்கிறேன்’ (குறிப்பெடுத்த கிட்டத்தட்ட நாற்பது ஒலிப்பதிவுகளில் இது ஒன்றைக் கேட்கத்தான் கொஞ்சம் ஆசுவாசமும் மீட்சியும் நம்பிக்கையும்…)
ஹ்ம்ம்… தொடரும் சோகம் – கணவன் கண்ணைக் கட்டாயமாகத் திறந்துவைத்து அவன் கண்முன்னால் அவன் மனைவியைத் தொடர்ந்து பல இஸ்லாமிய வெறியர்கள் கொர்-ஆனின் அல் அன்ஃபல் உச்சாடனம் செய்துகொண்டே வரிசைக்கிரமமாக பலாத்காரம் செய்வது ஒரு வகை.
இன்னொரு வகை – பெற்றோர்களை வலுக்கட்டாயமாகக் கண்ணைத் திறந்துகொண்டு – தம் பெண்பிள்ளைகள் இப்படி பலாத்காரம் செய்யப்படுவதைப் பார்க்கவைப்பது. பின்னர் ஆண்களைச் சுட்டுக்கொன்று விட்டு அனைத்துப் பெண்களையும் பாலியல் வக்கிரங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வது…
அவிசுவாசிகளின் குழந்தைகளை பீரங்கி வாய்களில் வைத்துச் சிதற வைக்கும், கழுத்தில் வெடிகுண்டுகளை மாட்டிவிட்டுச் சிதையவைக்கும் காட்சிகள் குறித்த வாக்குமூலங்கள்.
…குழந்தைகளையும் இளைஞர்களையும் மூளைச் சலவை செய்து அவர்களை மனிதகுண்டுகளாக ஆக்கினால் எந்தப் பிரச்சினை தீரும்? அதன் வீரியம்தான் அதிகமாகும்…
ஹ்ம்ம்… எனக்கு, நம்மூர் ரத்தவெறி வேலுப்பிள்ளை பிரபாகரன் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இம்மாதிரிக் கொலை/தற்கொலைக் குண்டப்ப வழிகளை உலகிற்குப் பரவலாக அறிமுகப் படுத்தியதே இந்த உதிரிதான்.
நடைமுறை இஸ்லாம் என்பது வெறிவாதம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது – ஆகவே அது சாதா முஸ்லீம்களுக்கு எதிராகவே இருக்கிறது. இஸ்லாம் Vs பிறநம்பிக்கைககள் என்பதையே விடுங்கள், இது இஸ்லாம் Vs முஸ்லீம் எனவொரு திகைக்கவைக்கும் நடைமுறை உண்மையில் திளைத்துக்கொண்டிருக்கிறது.
இதுவா வேண்டும்?
(ஒரு ஐரோப்பிய ஜிஹாதி – ஒரு கையில் மதப்புத்தகம், இன்னொரு கை இஸ்லாமியதேச குண்டரமைப்பின் கொடியைச் சுட்டுகிறது)
மேற்கண்டவர்களை ஆதரிப்பது, அல்லது அவர்கள் முஸ்லீம்களே அல்லர் எனச் சொல்வது – தர்க்கரீதியாக முடிவது இங்குதான், இப்படித்தான்…
(பாகிஸ்தானின் க்வெட்டா பகுதியில் நடந்த மனிதகுண்டின் விளைவுகள் – தம் குழந்தைகளும் மனைவியும் சிதறியதைப் பார்த்துப் பேதலித்துக் கதறும் மனிதர்கள்)
-0-0-0-0-0-0-0-
…இந்த வெறிப்ரேண்ட் அரேபிய பெண்வெறுப்பிய இஸ்லாமுக்கு நம்மூரில் ஒரு வெட்டி ஆதரவு.
இஸ்லாமியமுதல்வாதக் கட்சிகள், சாதா-பாவப்பட்ட முஸ்லீம்களின் விரோதிகள். அதே நிலைதான் பெரும் பாலான முல்லா-உலீமாக்களைப் பொறுத்தவரையிலும் கூட.
இஸ்லாமுக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளினால் ஏற்படும் அவப்பெயர் என்பது சுலபத்தில் அழிக்கப்படாத அளவில் இருக்கிறது. ஏனெனில் அதன் மதப் புத்தகங்களில் சிலபல வரிகள் இம்மாதிரி அயோக்கிய நடவடிக்கைகளுக்கு உந்துதலாக மட்டுமில்லாமல், இப்படிச் செய்வதெல்லாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவதாகவும், சர்வநிச்சயமாக மறுமையில் ஊக்கபோனஸ் கொடுக்கப்பட ஏதுவானவைதாம் – என விரிகின்றன. இவற்றைச் செம்மை படுத்தமுடியாத சூழல்வேறு.
க்றிஸ்தவ புதிய/பழைய ஏற்பாடுகளிலும் இப்படிப்பட்ட சிலபல கொடுமையான வரிகள் இல்லாமலில்லை; ஆனால் அவற்றை வைத்துக்கொண்டு உச்சாடனம் செய்து கொள்ளைகளையும் படுகொலைகளையும் பாலியல் பலாத்காரங்களையும் அரங்கேற்றும் போக்கு, இக்காலங்களில் சர்வ நிச்சயமாக இல்லை.
…ஹ்ம்ம்ம். இந்த அழகில், தேவையேயில்லாமல் – இந்தியாவில் சாதா முஸ்லீம்களை உசுப்பி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் – அவர்களுடைய மதத் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் நம் அறிவுஜீவிப் பெருமகனார்களும்… இவையெல்லாம் நல்லதற்கேஇல்லை.
சர்வ நிச்சயமாக – பாரதத்தைவிட ஒரு அழகான தேசம், முஸ்லீம்களை மரியாதையுடனும் ஜனநாயகரீதியிலும் – ஒரு சகபயணியாக நடத்தும் தேசம், வேறொன்றில்லை.
சக பாரதவாசிகளாக அவர்கள் அடையக்கூடும் முன்னேற்றங்கள், தொடர்முன்னெடுப்புகள், விகசிப்புகள், அழகுகள் – வேறெந்த ‘இஸ்லாமிய’ நாட்டிலும் சாத்தியமேயில்லை. (குர்திஸ்தான் வந்தாலொழிய)
ஆமென்.
-0-0-0-0-0-0-
பின்குறிப்பு: இம்மண்ணுக்குத் தொடர்பேயற்ற அரேபிய இஸ்லாமுக்குப் பதிலாக பாரத இஸ்லாமென ஒன்று (ஒன்றென்ன – பலப்பல வடிவங்கள்!) வளர்த்தெடுக்கப்படவேண்டும் என நான் ஆத்மார்த்தமாக நினைக்கிறேன், விழைகிறேன்கூட. சில இளைஞர்களோடு பேசும்போது அது சாத்தியமாகும் எனவும் தோன்றுகிறது. (என்னுடைய குழுவில் என் நேரடி மேற்பார்வையில் இருக்கும், நான் பிரத்தியேகமாகத் தெரிவு செய்த ஒரு இளைஞன் இப்படிப்பட்டவன் – மணி. இவர்கள்தாம் பாரத இஸ்லாமின் விடிவெள்ளிகள்; ஆனால், கிடைச்சது சான்ஸ் என ஐரோப்பாவுக்கோ அமெரிக்கா-கனடாவுக்கோ இவனும் ஓடிப்போகாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்யவேண்டும். ஏனெனில் இம்மாதிரி இளைஞர்களுக்கு அவர்கள் சமூகத்தில் கிடைக்கும் வரவேற்பு(!) என்பது அலாதியானது. பார்க்கலாம்.)
August 4, 2017 at 14:59
Hi Ram,
Just today saw this interview with a wife of an ISIS fighter.
She talks about how the Yazidi girls were treated from ISIS perspective.
August 4, 2017 at 15:11
அய்யா, விநோத்,
நன்றி. இவர் ருக்மிணி காலிமாக்கி எனப் பலபலர் இப்படி இருக்கிறார்கள். தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுகிறார்கள். ஓரளவுக்கு மேல் இவற்றைப் படித்துக்கொண்டிருந்தால், உடல்-மன ஆரோக்கியம் கெட்டுப் போய்விடுகிறது. என்ன செய்ய.
August 4, 2017 at 18:45
Thanks Ramaswamy for the courage with which you have written. Felt very bad world , enlightened muslims, liberals are burying such crimes to dustbins of history. These days of net/web everything can be made open and condemned. Good Russia n USA fought between themselves and in the process destroyed ISIS . But why the religious heads of Saudi and Iraq and our own Deobandis and Oiwasis plus Naiks dont condemn openly
August 4, 2017 at 19:26
அய்யா சம்பத், இதற்கெல்லாம் தைரியம் தேவையா என்பது எனக்குப் பிடிபடவில்லை. நான் மாளா வருத்தத்தில்தான் எழுதுகிறேன். சுந்தர ராமசாமி அவர்களின் ‘பள்ளம்’ சிறுகதை நினைவுக்கு வருகிறது, என்ன செய்ய.
August 5, 2017 at 09:56
எனக்கு ஆறவில்லை. கொல்வது, வெடி வைத்து கொல்வது , கழுத்தை அறுத்து கொல்வது, அதைக் காணொளி எடுத்து வலையில் உலாவ விடுதல் என்று பல கொடுமைகளை படிக்கும் போ து கொதித்து அமைந்தவர்களுக்குக் கூட இது ஆறாது.. ஒரு வலைதள பின்னூட்டமாக இந்த பதிவின் சுட்டி கொடுத்துள்ளேன். ஒரு சிறு பகுதியை மற்றொரு பின்னூட்டமாக தந்துள்ளேன்.
August 5, 2017 at 10:45
கொடுமை.
August 5, 2017 at 15:48
சீக்கிரம் உலகம் அழிந்தால் தேவலாம்.
August 5, 2017 at 17:12
அய்யா செல்வராஜ், உலகம் அவ்வளவு மோசமில்லை. நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு சர்வ மோசமாக இல்லை.
இன்றும் 4 ஒலிப்பதிவுகளைக் கேட்டுவிட்டுத்தான் இப்படிச் சொல்கிறேன்.
கார்மினா புரானா கேளுங்கள். அதுவும் ட்ரேன்ஸ் ஸைபிரியன் ஆர்கெஸ்ட்ராவுடையதை, சரியா?
நன்றி.
August 6, 2017 at 13:53
isis … குறித்து என்னால் ஒன்றும் செய்யமுடியாது ,ஆனால் ராம் அண்ணாவிடமிருந்து https://www.youtube.com/watch?v=e7Qie_tgez8 எடுத்ததற்கு நன்றி செல்வா சார்
August 6, 2017 at 12:34
அய்யா, படித்துவிட்டு ‘ பதில் எழுதி என்ன ஆகப்போது’ என்ற விரக்தி, கழிவிரக்கம், கோபம், அயர்ச்சியுமே மிஞ்சியது .
பொதுவாக சமநிலையோடு எவ்விஷயத்தையும் அணுக முயற்சிப்பவன் தான் எனினும் இப்பதிவு கொஞ்சம் அதீதம் எனக்கு.
பல வருடங்கள் முன், நான் மும்பையில் பணிபுரியும்போது என் மராட்டிய இஸ்லாமிய நண்பனுடன் மேற்கோள் திலகம் ZAKIR NAIK பேருரைகளைக் (!!) கேட்டதுண்டு.
நீங்கள் தங்கள் பதிவில் மேற்கோள்களுடன் கொடுத்தது ”நாயக்” கை ஞாபகப்படுத்தினாலும், இவ்வகை பதிவுகள் என் இஸ்லாமிய நண்பர்களிடம் என்ன வகை? எதிர் வினையைத் தரும் என்று அறிய அவர்களுக்கு சுட்டி அனுப்பியுள்ளேன்.[அவர்கள் ZAKIR மற்றும் PJ கோஷ்டியில் சேராதவர்களே.] எனக்கு அயற்சியைக் கொடுத்தது நிஜம்.
க்றிஸ்தவ மக்கள், இவ்வகை மேற்கோள் வகையறா மதச் செயற்பாடுகளில் இருந்து மேலெழுந்தது எவ்வாறு?
தாங்கள் முன்பொருமுறை எனக்குச் சொன்ன திரு.பீட்டர் காட்ஸ்சாக் எழுதிய Religion, Science, and Empire
Classifying Hinduism and Islam in British India என்ற புத்தகம், சர்ச் அறிவியலை அணுகிய விதம் பற்றி எழுதியதாய் என் ஞாபகம். மசூதிகள் மற்றும் உள்ளூர் தலைமையும் அறிவியலை அணுகும் நோக்கில் மாற்றம் வந்தால் அமைதி கிட்டுமோ? தெரியவில்லை எனக்கு?
இன்று திரு.ஜெயமோகன் எழுதிய திரு.ரசூல் அவர்களின் அஞ்சலிக் குறிப்பில் ‘வட்டாரத் தனித்தன்மை பேணும் இஸ்லாம்’ என்றொரு பதம் உபயோகித்திருந்தார்.நீங்களும் ‘பாரத இஸ்லாம்’ என்று எழுதுகிறீர்கள்.அதை ஸ்திரமாக நிறுவும் பொறுப்பு நெகிழும் தன்மை கொண்ட [பகுத்தறிவு கொண்ட என்று தான் முதல்ல எழுதினேன் பின் பயம் வந்து நீக்கி விட்டேன் !] அனைவருக்கும் உண்டெனவே நம்புகிறேன்.
குணங்குடியின் வரிகள் ஏனோ ஞாபகமாய் ”வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக்
காட்டிற் புகலாமோ கண்ணே ரகுமானே!”
August 6, 2017 at 13:19
ஹ்ம்ம்ம்… உங்கள் கருத்துகளுக்கு நன்றி. முஸ்லீம் நண்பர்களிடம் விவாதித்துள்ளதாகவும் விவாதிக்கப் போவதாகவும் குறிப்பிடுகிறீர்கள். அவசியம் தொடர்ந்து செய்யுங்கள்.
நானும் செய்திருக்கிறேன், செய்வேன். ஆனால் இந்தப் புத்திசாலிகளும் சுயசிந்தனை உடையவர்களும் அமெரிக்கா கனடா ஐரோப்பா ஆஸ்திரேலியா எனப் போய்விட்டார்கள். பெரும்பாலானவர் அமெரிக்காவுக்கு. இந்த ஒரு காரணத்தினாலேயே இந்திய முஸ்லீம்களுக்கு காத்திரமான மத்தியதரவர்க்கத் தலைமை கிடைக்கவில்லையென நினைக்கிறேன். இந்த இடைவெளியில் புகுந்து விளையாடுகிறார்கள் பலர்; பலப்பல முல்லாக்களும் உலீமாக்களும் ‘அரசியல்’ தலைவர்களும் இதில் அடக்கம்.
இம்மாதிரி வேதனை தரும் விஷயங்களை ஒரு மனிதாபிமானமும் மேன்மைவிழைவும் மிக்க ஒரு சாதாரண முஸ்லீம் எப்படி அணுகுவாள் என்பதை யோசிக்கிறேன். பார்க்கலாம், என்ன செய்யலாம் என்று.
:-) எப்படி, பகுத்தறிவு என்கிற வார்த்தையையே, நம் திராவிடர்கள், ஒரு வெட்டி வார்த்தையாக்கி விட்டார்கள் பார்த்தீர்களா?
August 6, 2017 at 22:03
ஒரு அளவுக்கு மேல் படிக்கவே கொடுமையாக இருக்கிறது.