திராவிடக்கல்வி (அனிதா, இளம் மாணவி) – சில குறிப்புகள்

September 9, 2017

இந்தச் சிறுமி அனிதா, அகாலமாக இறந்ததை முன்வைத்து ஒரு விதமானபிரமிப்புடன் வருத்தப்பட்டு, தமிழகத்துக் கல்வியின் தற்கால நிலையைக் குறித்து, தான் மேற்கொண்டு என்ன படிக்கவேண்டும் என்பதைப் பற்றியென என் மேலான கருத்துகளைக் கேட்டிருந்தாள், என்னுடைய (முன்னாள்) பிள்ளைகளில் ஒருத்தி.

அதாவது – 4½ + ½ = 5   :-)

இதற்கு என் பதில்: (அச்சிறுமியின் அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்)

-0-0-0-0-0-

யோ!

1. இனிமேலாவது, எனக்கு எழுதும்போது அதனைத் தமிழில் எழுத முயற்சிசெய், சரியா சுட்டிப்பெண்ணே? இந்த அனிதா உனக்கு ஒரு ரோல்-மாடெல் அல்லள். அச்சிறுமி செய்தது தியாகமல்ல. முட்டாள்தனம். இந்தத் தியாகம் என்பதே ஒரு பம்மாத்து. மனவலி, தன்னம்பிக்கை என்பவையெல்லாம் மிகமுக்கியமான விஷயங்கள். கண்டிப்பாக இந்த டீவி எழவுகளைப் பார்க்கவே பார்க்காதே. நன்றாகப் படி. தினமும் ஓடு. தமிழகத்தை விட்டுவிட்டு வேறேதாவது வெளிமாநிலத்தில் மேற்படிப்பு படிக்க முயற்சி செய். உன் மனம் விசாலமாக வேண்டும். திராவிடக் குறுகல் கூடாது. ஆகவே! (நானும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன், பார்க்கலாம் – எப்படியும் புத்திசாலியான உனக்கு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது; தோல்விகள் தற்காலிகமானவைதான், சரியா?)

2. இந்தச் சிறுமியின் இறப்பைக் குறித்து என்னுடைய கருத்து – பாவம், ஆனால்  she fell by the wayside வகை. இதன் மூல காரணம் நீட் தேர்வோ அல்லது வேறெந்த அண்மைய காலக் காரணமோ தனிப்பட்டமுறை சிக்கலோ அல்ல. இந்த நிலைக்கு  ஆதி காரணம் – தமிழகத்தின் அதிசராசரி கல்வி-சமூகச் சூழல் – கல்வித்தந்தை+திராவிட பிஸினெஸ்காரர்களின் கொள்கைளைக் கூட்டணி. தரங்களைத் தரதரவென்று கதறக்கதறக் கீழிழுத்து அதல பாதாளத்தில் தள்ளும் அயோக்கியத்தனம்.

அதாவது — ப்ளூவேல் வழியாக இறக்காதவர்கள், திராவிடத் தமிழகக் கல்வியின் பராக்கிரமம் வழியாகப் பாதிக்கப்பட்டு பிணங்களாகவோ நடைப்பிணங்களாகவோ ஆவார்கள். அவ்வளவுதான். இந்தத் திராவிட ப்ரேண்ட் கல்வி(!) பற்றி, தனியார்+திராவிடக் கூட்டுக்கொள்ளை, சமச்சீரழிவுக் கல்விபற்றியெல்லாம்  நாம் பலதடவை பேசியிருக்கிறோம் அல்லவா?

3. சரி.  அடுத்த சில நாட்களில் இச்சிறுமியும் மறக்கப்படுவாள். தேவையற்ற உயிர் விரயம்.  தேவையற்ற உணர்ச்சிகரமும் சுயபச்சாத்தாபமும் தைரியமின்மையும் தன்னில்மூழ்கலும் அதிமானுடனாதலும், வேறென்ன சொல்ல. ஆனால், இந்த விவகாரத்தைத் தொடர, எங்களுக்கு நேரமோ அவகாசமோ இல்லவேயில்லை. ஏனெனில், அடுத்து –  ஏதாவது தமிழ்ப்படம் அல்லது நடிகக்கோமாளிச் சர்ச்சையலை ஒன்று வரும். அதில் அதிதீவிரத்துடன் ஈடுபடவேண்டிய கட்டாயம் வரும், நம்மைப்போல படுபிஸியான போராளிகள் உலகத்தில் உண்டா எனத் தெரியவில்லை. :-( திராவிடம் வாழ்க. செப்டெம்பர்2017 இறுதியில் என் மரியாதைக்குரிய புரட்சித்தலைவி கனிமொழி அவர்களின் ஊழல் குறித்த விஷயங்கள் தொடர்பாக நீதிமன்ற விவகாரங்கள் வேறு வெளிவரலாம். ஆகவே அது குறித்துப் பொங்குவதற்கு ப்ளான் செய்யவேண்டுமல்லவா? ஆகவே வீணாகப் பொங்கி என் சக்தியை விரயம் செய்துகொள்வதாக இல்லை. (யார் அந்தப் பையன்? பலவருடங்களுக்கு முன் முத்துகுமாரோ குத்துகுமாரோ – தன்னை வீரத்துடன் விறகுக்கட்டையாக மாற்றிக்கொண்டானே, நினைவிருக்கிறதா? இவனும் திராவிடவீரத்தின் வெளிப்பாடுதான், ஆனால் இவன்பெயரே எனக்கு மறந்துவிட்டது! இவன் எதற்குத் தன்னை எரியூட்டிக்கொண்டான் என்பதே சனியன், நினைவுக்கு வரமாட்டேனென்கிறது! திராவிடத்தின் மறதிசக்தி என்பது மிகவும் நுட்பமானதும் வீரியமிக்கதும், அல்லவா?)

4. என்னைப் பொறுத்தவரை – தமிழகத்தில் 1967ல் ஆரம்பித்த பாரம்பரியமிக்க கந்தறகோளத் தமிழகக் கல்வியின் காரணமாக – இன்னமும் மேலதிகமாக இப்படி அகால மரணங்கள் லட்சக்கணக்கில் ஆர்பரித்து வீரஎக்காளத்துடன் உருமிமேளதாளத்துடன் நடக்காமலிருப்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். 1) திரைப்பட/டீவி கேளிக்கைகள் 2) இந்துத்துவ சதி 3) என்னுடைய சுயமுன்னேற்றக்கட்டுரைகள்.

5. நீட் பரீட்சை எதற்கு, ஏன், அதன் முக்கியத்துவம், அதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் என்பதைப் பற்றி ஒரளவு தெரியும். ஆனால் அப்பரீட்சை எப்படிப்பட்டது என்பதைப் பற்றி விளக்குகிறேன் என்கிற பெயரில், டாக்டர் படிப்பைப் பற்றி ஒன்றும்பெரிதாக அறியாத என்னால் தேவையேயில்லாமல் உளறிக்கொட்ட முடியாது. ஆனால் ஏதாவது ஃபேஸ்புக் / டிவிட்டர் / வாட்ஸப் போன்றவற்றில் உள்ள போராளி அறிவாளிச் சான்றோர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இது பற்றி நிறையவே தெரிந்திருக்கும் என்பது அந்த எழவுகளில் நேரத்தை வீணடிக்கும் உனக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். ஆகவே ஆளை விடு. அரைகுறைகள் ஆர்பரித்து உளறிக்கொட்டுவதைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கவே விருப்பம்.

6. நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் இருந்திருந்தால் அவற்றிலொன்றில் புத்திசாலியான நீ நிச்சயம் படித்திருப்பாய். ஏன் அந்த அனிதாவுமே கூட,  அவற்றில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கக்கூடும். ஆக, அவள் இன்று உயிருடன் இருந்திருப்பாள். (இந்த அற்புதமான முற்றிலும்-இலவசம் (மாநில அரசு இவற்றுக்கு ஒரு நயாபைசா செலவு செய்யவேண்டியதில்லை) வகை உயர்தரப் பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் வராமல் இருந்ததற்கு திராவிட அயோக்கியக் கொள்ளைக்காரர்கள் தாம் காரணம்) அவை மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் இன்று சுமார் 24,000 குழந்தைகள் அதனால் பயன்பெற்றிருப்பார்கள்! ஆனால், அந்த அளவு திராவிடக் கொள்ளை நடந்திருக்காது அல்லவா?  24000 குழந்தைகளுக்கு நல்லபள்ளிச்சூழலில் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் தமிழகத்தில் திராவிடக் கல்வித்தந்தைகள், மன்னிக்கவும், மாமாக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில், இஞ்சினீயரிங் கஞ்சினீயரிங் கல்லூரிப் பம்மாத்துகளில் சேரமாட்டார்களல்லவா? இது பிரச்சினைதானே!

7. என்னுடைய கருத்துகளுக்கு, நீ ஒரளவு செவிசாய்த்தால் போதும். ஏனெனில் அவைதான் உண்மை, வழியும் சத்தியமும் ஜீவனும் என்றெல்லாம் நான் உளற முடியாது. ஆகவே பிறர் கருத்துகளையும் கேட்டுக்கொண்டு உன் அனுபவங்களின் மூலமும் சூழற்தேவைகளின்படியும் உன் சொந்த அணுகல்களை கட்டமைத்துக் கொள்வது சிறந்தது எனப் படுகிறது. உதாரணமாக. என்னைப் பொறுத்தவரை, நீ சார்ந்திருக்கும் மக்கள் திரளுக்கு முதன்மையான, கரிசனம் உள்ள தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எனத்தான் நினைக்கிறேன்; அதே சமயம் – உனக்கு நான் முன்னமே சொல்லியிருப்பதுபோல, சர்வ நிச்சயமாக அவர், தொல்.திருமாவளவன் அல்லர் எனவும்; ஆகவே கிருஷ்ணசாமி அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் (அதாவது சொல்லியிருந்தால்) என்பதைக் கூர்ந்து கவனிக்கவும். (பொதுவாகவே, எனக்கு அவரிடம் மரியாதை உண்டு – அதிகம் அவரைப் பற்றித் தெரியாவிட்டாலும், அவ்வப்போது அவர் குறித்து தனிப்பட்ட முறையில் சிலபல நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவருடைய அனுதினச் செயற்பாடுகள் பற்றிய அறிவு எனக்கு லபிக்கவில்லை என்றாலும், பல்லாண்டுகளாக அவர் எழுப்பி வந்திருக்கும் கருத்துகளில் பல எனக்கு ஒத்துப்போகின்றன, அவர் சமூக மேன்மைக்காக உண்மையாகவே விழைபவர் எனப் படுகிறது – சொல்லப் போனால், இவரும் இவரைப் போன்றவர்களும் தமிழக அரசியலில் வளரவேண்டும். அவ்வளவுதான்.)

8. இந்த அகாலச் சாவு குறித்து, சமனத்துடனும் உண்மையான கரிசனத்துடனும் யார் எழுதியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதாவது, நான் இன்னமும் எழுதவில்லை, எழுதப் போவதுமில்லை.

ஆனால் — இது குறித்துப் பொங்கியிருப்பவர்களில் என்னைப் பொறுத்தவரை முதன்மையானவர், என் பேராசானான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். ஆகவே உனக்கு போராளித்தனமான அறிவுரைகள் வேண்டுமென்றால் – தயவுசெய்து அவரை அணுகவும்.

(http://www.sramakrishnan.com/?p=6539)
அவர் — தமிழகக் கல்வியை முன்னேற்ற, போராட, கருத்துக்குண்டுகளை அள்ளிவீச என பலப்பல விஷயங்களை இணயத்திலிருந்து டவுன்லோட் செய்து தயாராக வைத்திருக்கிறார், சரியா? (இது கிண்டல்தான்; ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாதே!)

சரி. நிஜமாகவே உனக்கு ஏதாவது மனவுளைச்சல் ஏற்பட்டால் எதாவது உருப்படியாகப் பேசவேண்டுமென்றால் என்னைத் தொடர்புகொள். ஆனால் — அப்படியில்லாமல் ‘சும்மாதான் ஃபோன் பண்னேன், காலேல என்ன சாப்டீங்க’ வகை வெட்டி அரட்டையாக அது இருந்தால் நிஜமாகவே மனவுளைச்சலை வரவழைத்துவிடுவேன். கபர்தார். :-)

தினமும் ஓடு.

__ரா.
-0-0-0-0-0-0-

மேற்கண்டதின் மின்னஞ்சல் மூலவடிவத்தை, இன்று காலை அனுப்பினேன். அச்சிறுமி இன்னமும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. படித்துவிட்டுச் சிரித்தேன் என்றாள். ஆகவே, ஒரு ஆசுவாசம். :-)

சரி.  பிரச்சினையென்னவென்றால், எஸ்ராமகிருஷ்ணன் அவர்களின் இன்னொரு +1 ‘also ran’ விசிறியாக அவள் மாறாமலிருக்கவேண்டும்.

இன்று காலை, நண்பரொருவர் அனுப்பிய சுட்டியைப் படித்தேன் – இது ஆங்கிலத்தில் இருக்கிறது; ‘நீட்’ குறித்த தமிழகக் குழப்படிகளை எதிர்கொள்ளும் வகையில், மேன்மைக்கான சிலவழிகளைப் பரிந்துரைக்கும் அளவில் –  இது ஒரு முக்கியமான கட்டுரை. அவசியம் படிக்கவும்.

Explainer: How NEET has exposed the standard of science education in Tamil Nadu  (How do TN students measure up against their peers in south India?)

இம்மாதிரிக் கட்டுரைகளை இந்த கேஎஸ்நாகராஜன் போன்ற இளைஞர்கள் தமிழிலும் எழுதலாமே எனப் படுகிறது.

எது எப்படியோ, இம்மாதிரிக் கட்டுரைகளை விரித்து, வரலாற்றுக்காரணிகளை இணைத்து மேம்படுத்தி – தமிழ்ப்படுத்திஎடுக்கப்படவும் வேண்டும். இது தொடர்பாக நிறைய எழுதப் பட வேண்டும். அது மட்டும் போதாது.  மிகமுக்கியமாக நிறைய பணிகள் செய்யப் படவும்வேண்டும்.

முதலில் – திராவிடப் பெருங்கொள்ளைக்காரர்கள் அதிகார மையங்களிலிருந்தும் சமூகப் பீடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்படவேண்டும்.

பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று.

-0-0-0-0-0-

37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா!

05/04/2017

8 Responses to “திராவிடக்கல்வி (அனிதா, இளம் மாணவி) – சில குறிப்புகள்”

  1. RC Says:

    அய்யா,
    நன்றிகள் கட்டுரைக்கு. எதிர்பார்த்திருந்த அம்புகள் தான்.
    ஒரு வாரமாக மனசே சரியில்லை. எங்கூர் பாஷையில், இந்த [அறியாச்] சிறுபெண் செய்தது ”கோட்டித்தனமான” செயலன்றி வேறில்லை. அவள் பொறியியல் CUT -OFF வைத்து குரோம்பேட்டை கல்லூரியில் ”AERONAUTICS ENGINEERING” தேர்வு செய்தது [இச் செய்தி உண்மை எனில்] மேதகு கலாம் உள்ளிருப்பதை காட்டியது எனக்கு [இவ்விஷயத்தில் என்னுடைய அதீத நெகிழ்வும் இப்படி யோசிக்க காரணமாக இருக்கலாம் :-( ].
    கனவும், வாழ்வும் இப்படியா முடிய வேண்டும் !
    அவள் பேசிய வீடியோ பதிவு பார்த்து மீளவில்லை நான்.

    அறியாச் சிறுபெண் அன்றி வேறென்ன சொல்ல? “ஜெய் பீம்”!

    அசட்டு தைரியத்தையும், வேகத்தையும் கொடுத்த திமு + இன்ன பிற கொள்ளைக் கூட்டங்களையும் , விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்து மூளைச் சலவை செய்து சிறு பெண்ணை கோர்ட் படியேற வைத்த அந்த ‘போராளி’ செயல்பாட்டாளர் (!) பயலும் மன்னிக்கப்படவேக் கூடாது.

    /உண்மை பல பக்கங்கள் கொண்ட வைரம்/காந்தியார் சொன்னது.இதை மனதில் வைத்தே என் கருத்தும் கீழே:
    [எதுக்கு விரயப் பேச்சு என்ற என்னுள்ளே எழும் கேள்வியை ஒதுக்கி வைத்தே இதை எழுதுகிறேன்]

    தங்களுடைய ”திராவிடக் கல்வி”’தொடர்பான கருத்துக்கள் குறித்து எனக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதுமில்லை.
    கல்லூரிகள் மட்டுமல்ல, சிற்றூர்,சிறு நகரம் எங்கும் இன்று வியாபித்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் வரை திராவிடச் சாயல் இல்லாதவை அரிது.

    ஆனால், நீங்கள் சுட்டி கொடுத்த பதிவு [திரு.KS நாகராஜன் எழுதிய http://www.thenewsminute.com/article/explainer-how-neet-has-exposed-standard-science-education-tamil-nadu-66529 ] ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுவதாக நான் நினைக்கிறேன்.
    அவர் வைக்கும் வாதங்களிலேயே உள் முரண் உள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கட்டமைப்பு நன்றாக உள்ளதா? இல்லையா? இக்கேள்விக்கு குழப்பத்தில் விட்டுட்டார் படிப்பவரை ! [பள்ளிக் கட்டமைப்பு என்பது ஆசிரியர் +நிர்வாகம்+{பெற்றோர்+மாணவர்கள்+பள்ளி சுற்று வட்டம்}+பள்ளி அடிப்படை வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது தானே ? ].
    ”தமிழக பள்ளிக் கட்டமைப்பு” கட்டுரையில் ஓரிடத்தில் நன்றாக இருப்பது போல் ஒரு த்வனியும், வேறோரிடத்தில் அதுவே சரியில்லை என்பது போல் உள்ள த்வனியும் என்னைக் குழப்பி விட்டன.
    இல்லை எனக்குத்தான் புரிதல் கோளாறா?

    மேலதிக தகவல் தேடலில் சிக்கியது உங்கள் பார்வைக்கு. தகவல்கள் /அனுபவங்கள் மூலம் வந்தடைந்த கட்டுரை ‘முடிவுகள்’, சிலது ஏற்புடையது சிலது இல்லை எனினும் சிறிதளவு உண்மை இருக்குமோ என்ற குழப்பத்தில் நான்.

    1. https://realitycheck.wordpress.com/2016/05/22/demystifying-neet-caveat-emptor/
    2. https://realitycheck.wordpress.com/2017/08/
    3. https://thewire.in/173963/tamil-nadu-neet/ [எச்சரிக்கை: இக்கட்டுரை ஆசிரியர் data scientist என்று கூறிக்கொள்பவர், எனவே..]
    4. http://sriramintamil.blogspot.qa/2017/09/neet.html
    5. http://www.thehindu.com/news/cities/chennai/after-neet-1-in-7-medical-seats-goes-to-chennai/article19634355.ece [ கட்டுரையின் தலைப்பு உசுப்பேற்றுவது, எனவே ஒதுக்கத்தக்கது. இருப்பினும் கண்ணை உறுத்தும் தமிழக வடக்கு மாவட்ட பள்ளிகள்/ ”நாமக்கல் பள்ளி” சார்ந்த தகவலுக்குக்காக. இன்னும் இரண்டாண்டுகளில் ​மறுபடியும்​ மேலெழுவர் என்பது வேறு கதை.. ]

    என்னுடைய குறைந்தபட்ச புரிதலில், இன்றைய அரசு / தனியார்/ சுயநிதி பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளின் பங்களிப்பு மற்றும் தேவை தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நேரம் இது.
    சந்திக்கும் நேரிடும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தரம், இவ்வகை கல்லூரிகளில் ஆசிரியர் பொறுப்பில் நண்பர்கள் சிலரிடம் இருந்து நான் பெற்ற தகவல்கள் அடிப்படையில் வந்தடைந்த கருதுகோள்.

    திரு.SKP கருணா + தனியார் பொறியியல் கல்லூரி தொடர்பான விவாதத்தில், திரு.ஜெயமோகன் அவருடைய பதிவில் லட்சிய வாதம், யதார்த்த வாதம் என்று பிரித்து, இவ்வகை நிறுவனங்களின் தேவையை நிறுவ முயற்சி செய்திருப்பார். [எனக்கு அது ஏற்புடையது அல்ல என்பது வேறு]

    மேலதிகமாக நான் தமிழகத்தில் வசிப்பவன் அல்ல, எனக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு அருகதையும் இல்லை. ஆனால் ஒன்று மனதுக்கு படுகிறது,
    நீட்டையே நாம் ஒதுக்கும் மனநிலையில் உள்ளோம் என்றால், ஒரு உதாரணத்திற்கு சிங்கப்பூரில் உள்ளது போல PSLE பரீட்சை {PRIMARY SCHOOL LEAVING EXAM} போல என்று வருவது ? [அதன் சாதக பாதகங்கள் தனி பதிவுக்கு உரியது :-)]
    அனைத்தையும் அரசியலாகவும், அவநம்பிக்கையாகவும் பார்க்கவே டமில் மனம் விரும்புகின்றதோ?

    ஆத்மஹத்திக்கு விடிவில்லையே [என் நம்பிக்கை தான் எனினும்​..​] அதுதான் மிக்க வருத்தம் இச் சிறு பெண்ணிடம்.
    கொஞ்சம் நல்லோர் சூழ வாழ்வதும் பேசக்கேட்பதும் ‘அதிர்ஷ்டம்’ வேண்டும் என்று சொல்ல​க் ​ கூசுகிறது..
    வேறு வார்த்தை இல்லையே என்ன செய்வது :-(


    • அய்யா,

      நீளமான பின்னூட்டத்திற்கு நன்றி.

      1. நான் கேஎஸ் நாகராஜன் அவர்களின் பார்வை முழுமையானது என நினைக்கவில்லை. ஆனால், வெட்டி அரட்டை மனோபாவங்கள் மட்டுமே பிலுக்கிக்கொண்டிருக்கும் இணையத்தில், அது தரவுகளுடன் எழுதப்பட்ட ஒன்று என்பதால் குறிப்பிட்டேன். தரவுகள் சரியென்றாலும் – ஆட்டோமேடிக்காக, அதில் குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் — டேப்லெட், கணிநி வழிக் கல்வி மூலமாகத் தீரும் என்று அவர் சொல்லியிருப்பது நடைமுறைக்கு ஒத்துவராது (எனக்கு இதில் நேரடி அனுபவம் இருக்கிறது) என்பது பிரச்சினை. இன்னொன்று, நீங்கள் சொல்லும் அந்த internal consistency இல்லாமை. இதற்கெல்லாம் காரணம் அக்கட்டுரை அளவு கருதி எடிட் செய்யப்பட்டிருக்கக்கூடும் நடைமுறைப் பிரச்சினையோ!

      2. உங்களுடைய #2 சுட்டியில் இருக்கும் காட்டுரையை எழுதியது – ‘புறம்பாலிடிக்ஸ்’ என்கிற பெயரில் உளறிக்கொட்டும் இளைஞர் என நினைக்கிறேன். மகத்தான அரைகுறை. இவர்மேல் என் நேரத்தை வீணடிக்கமுடியாதய்யா! மன்னிக்கவும்.

      3. பிற சுட்டிகளை இரண்டொரு நாட்களில் படிக்கிறேன், நன்றி.

      4. எனக்கு இந்த விமான டிக்கெட் வாங்கல் திமுக அயோக்கியர்களின் நேரடிப் பங்கு என ஒன்றும் பெரிதாகத் தெரியாது – ஆனால் இன்று அறிந்துகொண்டேன். இந்த அயோக்கியர்கள் அச்சிறுமியை ஒரு பகடைக்காயாக உபயோகித்து, பின்னர் அவள் அவமானப்பட்டதாக உணர்ந்து போய்ச்சேர்ந்த பின்னரும் பிணத்தீயில் குளிர்காய்கிறார்கள். திராவிடம் அரசு செய்தால் இப்படித்தான்.

      ஆனால் – அந்த அனிதாவின் யூட்யூப் வீடியோவையும் பார்க்கப்போவதில்லை. மன்னிக்கவும்.

      5. அந்த ஜெயமோகன் எஸ்கேபிகருணா விவகாரம். எனக்கு என் பிஸினெஸ், என் ஒண்ணரைக்கண் பார்வை. அவர்களுக்கு அவர்கள் பிஸினெஸ். அவ்வளவுதான். நான் பிஸினெஸ் விஷயங்களை மதிப்பவன். CAPITALIST.

      6. ரொம்ப அலட்டிக் கொள்ளாதீர்கள் பாவம். உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. இவை கடந்துவிடும். நாம் மரத்தமிழர்கள். அவர்கள் கட்டுமரத்தமிழர்கள். சரியா?

      7. ஆனால் இவற்றைவிடப் பெரிய கொடுமைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. நான் தொடர்ந்து எழுதப் போகிறேன்.

      நன்றி.


  2. Ram,

    Finally Navodya is here.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s