திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை!
February 24, 2017
(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.
தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »
தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-(
February 22, 2017
இதில் மூன்று விஷயங்கள்: 1) எஸ்கேபி கருணா என்ற மனிதரைப் பற்றி அரைகுறை நண்பர் ஒருவர் சிலாகித்து பின்னூட்டம் எழுதியதால், நான் அதனைத் தொடர்ந்ததன் முடிவு; ஏனெனில் தொங்கல் கேஸாக என்னால் இதனை விட்டுவிடமுடியாது, இது நம் தமிழகத்துப் பிள்ளைகளின் கல்வியைக் குறித்தவொரு பிரச்சினை 2) பொறியியலாளர்களின் பொறியில் அகப்பட்ட நண்பரொருவர் எழுதிய கடிதம் 3) பெங்களூர் ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியில் நம் சராசரி இளைஞப் பொறியியலாளர்களின் பங்களிப்பு குறித்து.
ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.
அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.
கருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள்
February 18, 2017
சசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு(!) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ! – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே!
…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)
ஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ? சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா?
போங்கடா போங்க, போக்கத்த பேமானீங்களா!
February 12, 2017
ஆயிற்று, அந்தோணீ மார்க்ஸ் அவர்களின் உளறிக்கொட்டலில் ஆரம்பித்து, அவரைப் பின் தொடரும் அரைவேக்காட்டுத் தாந்தோணி அரைவாளிகள் ஊடாக, ‘விடுதலை’யின் தறுதலைவர் வீரமணி அவர்கள் வரை, அமோகமாகக் கருத்துச் சொல்கிறார்கள். சதி என்கிறார்கள். அடுத்து என்னவெல்லாம் நடக்கும் எந்தக் கட்சி எப்படிப்போகும் என்று ஆரூடம் சொல்கிறார்கள்! Read the rest of this entry »
மகாமகோ ஃபேஸ்புக்டிவிட்டர்வாட்ஸப் விஞ்ஞானிகள் (அல்லது) யேஸ்ஸுவே! பாவப்பட்ட என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்! :-(
February 9, 2017
இந்த தட்டச்சரிப்பாளனுங்கோ இப்டீ ரவுண்டு கட்டிக்கினு அறிவொரைங்கள சான்றோக்கூமுட்டெத்தனமா கொட்த்துக்கினே கீராங்களேடா! நான் இன்னாடா செய்வேன்! றொம்ப படுபயங்கரபீதியாக் கீதேடா! பேதீ வர்தேடா! Read the rest of this entry »
#தமிழண்டா!
January 31, 2017
இந்தத் தமிழேண்டா, திராவிடண்டா, வீரமறவன்டா, வீழமாட்டோம்டா, வீரிட்டெழுவோம்டா, வீரவேல்டா, வெற்றிவேல்டா, வாளாவிருக்கமாட்டோம்டா, வாளைச் சுழற்றுவோம்டா, திமிறி எழுவோம்டா, திர்ப்பி அடிப்போம்டா, நெருப்புடா, செருப்புடா++ வீரவசனக் கொந்தளிப்புக் கோமாளி வகையறா தினவாளர்களைக் கவனிக்க நேரும்போதெல்லாம் சங்கடமாகவும் கூச்சமாகவும் (கொஞ்சம் கோபமாகவும், மிகவும் வெறுப்பாகவும்) இருக்கிறது; ஜிகினா மினுமினுக்கும் அவர்களுடைய அட்டைக்கத்திகளைப் பிடுங்கி சகதிராவிடர்களுக்கு ஈந்து இனமானக் கழுதைகளின் பசியை ஆற்றலாம் எனப் படுகிறது. ஆகவே முத்தாய்ப்பாக மட்டுமே, முக்கியமான இந்தக் கருத்துப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், இந்தப்பதிவை வெறும்வெட்டி நகைச்சுவை – என நினைக்காதீர்கள். படு ஸீரியஸ் கட்டுரைதான் இது. கவலை வேண்டேல். சரியா? (இதில் சுமார் 2350 வார்த்தைகள்; ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!)
கருத்துப்படம் #1: தமிழண்டா! ^%&*$#@!
Read the rest of this entry »
freakin’ jallikkattu – a quickie discussion
January 25, 2017
hmmm… one ‘Aathma’ commented on a post that I wrote – saying things like:
Nobody can be politically incorrect and paint themselves villain on this ticklish issue than you sir, yet truth..Truth..
But I feel the Ban is unnecessary and govt making false promises year after year..Making them wait till last minute..Strange situation..State govt wants jallikattu.. Opposition wants jallikattu..PM wants jallikattu..CM wants jallikattu..All parties want the event held..Yet nothing happens..For years together.. Please opine on this..
See, ‘aathma,’
There are many reasons and no reason, I mean no reasoning anywhere, honest. :-( Read the rest of this entry »
ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்கட்டுடைத்தல் (பாகம் 2/3)
January 24, 2017
முதல் பாகம். அதாவது மாடொரு பாகம்.
Read the rest of this entry »
ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்கட்டுடைத்தல் – சில குறிப்புகள் (+ கொஞ்சம் பேலியோடயட் கோமாளிகள் பற்றி) (பாகம் 1/2)
January 21, 2017
‘த ஹிந்து’ அரைவேக்காட்டு மடத்திலிருந்து இன்னொரு சாம்பிராணி!
January 9, 2017
எப்படித்தான் தேடித்தேடி இந்த மாதிரி அரைகுறைகளைப் பிடிக்கிறார்களோ இந்த ஊடகப்பேடிகள்! Read the rest of this entry »
ஆனால்… புறநானூற்றுக் காலத்தில் ஆனை கட்டிப் போரடித்த தமிழனுக்கு, மொழிப்போர் இனப்போர் தன்மானப்போர் சுயமரியாதைப்போர் ஈழப்போர் அக்கப்போர் எனப் போர்பல கண்ட மரத்தமிழனுக்கு, நீளநீள மெகாமகோ தொலைக்காட்சி ஸீரியல்களையும் வைத்து தொழில் நுட்ப ரீதியாகவும் தொடர்ந்து போரடிக்கும் தமிழனுக்கு – இந்தப் போர் எம்மாத்திரம்! ஹ்ஹ.
கூறுகெட்ட திராவிடத்தில் இதெல்லாம் சகஜமப்பா
December 12, 2016
பொதுவாகவே, நம் தங்கத் தமிழ் நாட்டில், திராவிடத்தின் ‘வீறு’ குறித்த பிரமைகள் அதிகம்.
புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி: சில குறிப்புகள்
December 3, 2016
புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி அவர்கள், போய்ச் சேர்ந்துவிட்டார். அவரது உடல், அவர் விருப்பப்படியே, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்பதை ‘த மண்டு‘ தினசரி மூலம் இன்று அறிந்துகொண்டேன். ஒர்ரே அந்தக்கால நினைவுகள்…
உப்புமாவோயிஸம்
November 29, 2016
உப்புமா செய்யலாம்தான். ஆனால் உப்புமா மட்டுமேதான் செய்யவேண்டுமென்றில்லை. இணைய உப்புமா கிண்டப்படுவதையும் கிண்டல் செய்யவேண்டியதுதான்.
வோத்தாடேய்! இன்னொரு தபா எங்கிட்ட பேலியோ டயட்டுன்னிட்டு வந்தீங்க, ங்கொம்மாள, கொன்னே புடுவேன், கம்மினாட்டிங்களா…
November 25, 2016
இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?
தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(
நம்முடைய செல்லங்களான அரைகுறைத் தமிழ் எழுத்தாளர்களின் – பொதுவாகவே மோசமான, சராசரித்தனமான நிலைக்குக் காரணம்…
November 12, 2016
… நம்மைப் என்னைப் போன்ற கூறுகெட்ட முட்டாக்கூ சோம்பேறி வாசகர்கள் – கதிமோட்சமேயில்லாமல் இந்தக் கோமகன்களின் வால்களைப் பிடித்து – ஆராதித்துக்கொண்டும், ஆமோதித்துக்கொண்டும், கொம்புசீவி விட்டுக்கொண்டும் அமோகமாக அலைவதுதான்; எனக்கு இதில் சந்தேகமேயில்லை! :-( தேவையா இது? :-(
பாரதத்துக்கான புதிய கல்விக்கொள்கையும், நம்முடைய செல்லங்களான விடுதறுதலை இசுடாலிர் வகையறா ஞானக்கொழுந்துகளும்
August 11, 2016
…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »
மன்னிக்கவும். ஆனந்தவிகடவிடுதலை நக்கீர நியாஸ்அகமது வகையறாக்கள், ஊடகப்பேடிகளோ ஊடகப்பொறுக்கிகளோ அல்லவேயல்லர்!
August 1, 2016
ஏனெனில் அவர்களை அப்படியழைத்தால், அது அக்மார்க் ஊடகப்பொறுக்கிகளும், தரம்தாழ்ந்த ஊடகப்பேடிகளுமான ஸன் டீவி, என்டிடிவி, ‘த ஹிந்து’ போன்ற உதிரி ஊடகக் குழுமங்களுக்கு நான் செய்யும் துரோகம். Read the rest of this entry »
12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை, நான் அறிந்துகொண்டேன். ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)
எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!


