aao77ckn

May 31, 2016

கடந்த சில நாட்களாக ராஜஸ்தானின் ஒரு வறண்ட டொக்கில் ஆசிரியர் பயிற்சி முகாம் ஒன்றில் வேலை.

சிலபல கணிநி-சார் கற்பித்தல்களுக்கான முஸ்தீபுகள் – அறிவியல், கணிதம் என. கணிநிகள் எப்படி நம் நண்பர்கள், அவற்றிடமிருந்து வேலை வாங்கிக்கொள்வது எப்படி, அவை கொடுக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்துகொள்வது எப்படி என்றெல்லாம் விரிந்தன/விரிகின்றன அவை… பயிற்சிமுகாம் பெரும்பாலும் ஹிந்தியில் தான் நடந்தது. ஆகவே கொஞ்சம் தடுமாறிவிட்டேன். ஏனெனில் ஹிந்தி கலைச்சொற்கள் பலவும் என் மண்டையில் இல்லை. ‘ஏக் கான்வ் மே, ஏக் கிஸான் ரகுதாத்தா’ பாக்கியராஜ் பலமுறை நினைவுக்கு வந்தார். :-(

Read the rest of this entry »

குடமுருட்டி குண்டனார், இந்தத் தள்ளாத வயோதிக வயதில் இப்படியெல்லாம் ஜன்னிகண்டதுபோல் உளறிக்கொட்டுவது ரொம்ப அவசியமா?

Read the rest of this entry »

பாளாப்போற எலிக்ஸன் முடிய்ற வரிக்கும் இவ்னுங்களோட வாந்திகள பொற்த்துக்கணுமேடா! கெதி கலங்குதேடா என்க்கு! :-( Read the rest of this entry »

ஆனால், அடியேன்: வெறுமனே உணவைத் தின்பவன், அம்புட்டுதேன்!

Read the rest of this entry »

இடக்கை வலக்கை வழுக்கை பொக்கை. Read the rest of this entry »

அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்!  நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான். Read the rest of this entry »

பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;

he has evidence, how can u assume he has no evidence

yaar madayan? neeya? thope aa

… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என… Read the rest of this entry »

இவருடைய பல கட்டுரைகளை கவனத்துடன் படித்திருக்கும் எனக்கு,  முன்னெப்போதோ இவருடைய கட்டுரைக்களஞ்சியமான  ‘அறியப்படாத தமிழகம்’ படித்துத் துணுக்குற்றவனுக்கு – இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைத் தலைவராக இருந்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருவது என்பதை ஒப்புக்கொள்கிறேன்… Read the rest of this entry »

அருவருக்கத்தக்க அசோகமித்திரனின் அடிவருடி வாசகனான அற்ப அடியேனின் தெண்டனிட்ட தாழ்மையான விஞ்ஞாபனம். உபயகுரங்குகுசலாபரி.

Read the rest of this entry »

அட! தலைப்பே அமர்க்களமாக இருக்கிறதே!  ஆனால், பயப்படாதீர்கள்! மேலே படியுங்கள், ஜமாயுங்கள். Read the rest of this entry »

​அழகியசிங்கர் அவர்களை நெடு நாட்களாகவே, உண்மையைச் சொல்லப்போனால், நான் அரைநிஜார் போடாத காலத்திலிருந்தே அறிவேன். அவர் பழகுவதற்கு இதமானவர். எனக்கு மிகவும் அணுக்கமானவர். வாழ்க்கையின் உள்ளார்ந்த உடுக்கைகளின் ஊடுபாவுகளை, ​அவரைப் போல அணுகுபவர்களை நான் அதிகம் பார்த்ததில்லை.

என் நல்லூழ் காரணமாக மட்டுமே அவரை நன்றாகத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு லபித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை… Read the rest of this entry »

நம்மைப் போன்ற பாவப்பட்ட சாதாரணத் தமிழர்களுக்குத் தெரியும், திராவிடர்கள் என்றாலே அனைத்து எதிர்மறைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கிய வெறும் வெற்றுப் பொறுக்கி கும்பலினர் என்று. தமிழகத்தை, அதன் போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை, நம் தமிழை, தமிழத்தை — துப்புரவாக அழித்தொழிக்கத் தொடர்ந்து முயல்பவர்கள் என்று… Read the rest of this entry »

ஸோம்பேறி ஸோங்குகளா, வொங்க கொஸ்க்கடி தாங்கவே முடியலியேடா!
Read the rest of this entry »

எனக்கு, சாப்பிடுவதும் பிடிக்கும்; சமையல் செய்வதும் (அல்லது யுவகிருஷ்ணாபடுத்தப்பட்ட பரிதாபத்துக்குரிய சுஜாதாத்தனமாக, சமையலிப்பதும்) பிடிக்கும்; ஆகவே.

Read the rest of this entry »

என்னுடைய பிரதம செல்லமான மகாமகோ #எஸ்ரா ஒரு கட்டற்ற கேளிக்கைக் களஞ்சியம்! வேறென்ன சொல்ல. ;-)

கடந்த சில நாட்களாக, நண்பர்கள் (=துரோகிகள்) பரிந்துரைத்த சுட்டிகளையும், அக்கப்போர் சாராம்சங்களையும் படித்துக்கொண்டிருக்கிறேன்; இந்த கருமாந்திர காரியத்தில் ஈடுபட்டிருக்கும்போது என் கண்ணில் பட்டதுதான் என் பேராசானின் ஸுள்க்கு எள்த்துக் காட்டுரை ஒன்று!

Read the rest of this entry »

…இதுதான் இவ்வரிசையில், உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியப்படக் கூடாத கடைசிப் பதிவு; ஸ்ஸ்ஸ்… அப்பாடா! (இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகள், இப்பதிவின் அடியில்)

-0-0-0-0-0-0-0-

(கடந்த பதிவின் தொடர்ச்சி…) சரி, ஐயன்மீர் – ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு தெளிவுபடுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியாத, சகிப்புத் தன்மையற்ற மூன்றாவது பதிவு இது. வெர்ரி, அட்டர்லி பட்டர்லி அன்சகிக்கப்ள். ஸோர்ரி. மன்னிப்பீர்களா?

…எப்படியும், இந்தப் பதிவு எழவையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டேயாகவேண்டும் என்பதெல்லாம் அனாவசியம், சரியா? இதனை மேற்கொண்டு படிப்பதற்கு மாறாக, பலப்பலவழிகளில் உங்கள் சகிப்பின்மையை எதிர்கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டாக, மேதகு ஞானி இருமேனி  முபாரக்கார் போல என்னை ஆர்எஸ்எஸ்காரன் எனப் புகழலாம். அல்லது, தாராளமாக, துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போகலாம்;  எப்படியும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. :-(

ஏனெனில் ஐயன்மீர், புண்பட்டு புண்பட்டு என் பாவப்பட்ட சகிப்புத் தன்மை, அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ;-)

Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.

முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!

Read the rest of this entry »

கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி,  எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அவர் பழைய ஃபேஷன்!

புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?

Read the rest of this entry »

கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!

அதாவது, என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு கோட்பாட்டுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கும். அப்போது அக்கோட்பாடுகளின் பெயர்களை மட்டும் கேட்டுவிட்டு,  உள்ளூர் நிலவரங்களுக்கேற்ப ஆனந்தமாக, நாம் நமக்கேற்றவாறு பொருளை விரித்துக்கொள்வோம்.  உருகுவோம். உனர்ச்சிவசப் படுவோம்.  புல்லரித்துக்கொள்வோம். மாய்வோம். அலைபாய்வோம். இணையத்திலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம். அடுத்த Y கோட்பாட்டு எழவுக்கு லாட்டரி அடிக்கும்வரை இதனை இந்த X கோட்பாட்டுக்குச் செய்வோம். அவ்வளவுதான்!

Read the rest of this entry »