அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்! நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான். Read the rest of this entry »
இந்த மானுடவியல் அறிஞர், தமிழச் சமூகத்தைப் பற்றிய மிக முக்கியமான அவதானிப்புகளை அளித்துள்ளவர், ஏப்ரல் மார்ச் 10, 2016 அன்று இறந்துபோனதை இன்றுதான் அறிந்துகொண்டேன். இவர் எப்படி, ஏன் இறந்தார் என்ற விவரமெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவும், ஹேஷ்யங்களாகவும் மட்டுமே இருக்கின்றன. Read the rest of this entry »
நம்மைப் போன்ற பாவப்பட்ட சாதாரணத் தமிழர்களுக்குத் தெரியும், திராவிடர்கள் என்றாலே அனைத்து எதிர்மறைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கிய வெறும் வெற்றுப் பொறுக்கி கும்பலினர் என்று. தமிழகத்தை, அதன் போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை, நம் தமிழை, தமிழத்தை — துப்புரவாக அழித்தொழிக்கத் தொடர்ந்து முயல்பவர்கள் என்று… Read the rest of this entry »
இவங்கதாண்டா என்னோட புள்ளைங்க!
March 26, 2016
என் குழந்தைகள் தொடர்பான இரண்டு சிறுவீடியோக்களைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். Yes. Unlike what I and others of my ilk think, there are major reasons for hope, and boundless optimism, YES!
ashokamitran, kalyan raman, two new translations
March 11, 2016
I have always been fascinated by the way my beloved Ashokamitran – delicately weaves & writes remarkable stuff — without resorting to any literary ‘device’ embellishments or verbal hijinks or melodrama or self-flagellation or laboured constructs or faffing roundabouts or philosophical blather or put-on erudition. Read the rest of this entry »
இரண்டு நல்ல விஷயங்கள் இன்று, பாகிஸ்தான் தொடர்பாக நடந்திருக்கின்றன. ஒன்று: ஒரு விருது கொடுக்கப்பட்டது; இரண்டாவது: ஒரு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.
[அலி அம்ஜெத் ரிஸ்வி] மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்
February 29, 2016
அலி அம்ஜெத் ரிஸ்வி (Ali A. Rizvi) எனும் டொரன்டொ நகர இளைஞர் எழுதியுள்ள மிக அழகான, தெளிவான, மிகமிக முக்கியமான கட்டுரையின் மொழிமாற்றம் இது. ‘மிதவாத’ முஸ்லீம்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்பவர்களும், இந்திய இஸ்லாமின் தொடர்ந்த பின்னடைவினால் வருத்தம் கொண்டிருக்கும், ஆனால் அதன் மேன்மையையும், வளர்ச்சியையும் விரும்பும் அனைவரும் அவசியம் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டும்.
அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள்
February 3, 2016
டெட்.காம் இணைய தளத்தில் உள்ள 8 நிமிடங்களே ஓடும் ஒரு சிறு வீடியோ ஒன்றின் ட்ரேன்ஸ்க்ரிப்ட்-ன் (உரையாடல்/பேச்சு/வசன வடிவம்) தமிழ்மயமாக்கம் இது.

[ஷர்மீன் ஒபைத்-சினாய்]
ஜெயமோகன், கம்யூனிஸ்ட், நொபெல்பரிசு, சரோஜாதேவி: மேதகு வே மதிமாறன் அவர்களின் சரமாரியான அற்ப உளறல்களுக்கு அளவேயில்லை!
January 29, 2016
பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம் வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால் ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.
பெரியவர், பேராசிரியர் ஜிடி ‘ஸ்வாமி க்யான் ஸ்வரூப் ஸானந்த்’ அக்ரவால், க்ருதக்ஞ – சில குறிப்புகள்
January 16, 2016
பலப்பல வருடங்களாக இவரைப் பற்றிச் சிலபல அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டு / அறிந்துகொண்டிருக்கும் எனக்கு, அடுத்த இரு வருடங்களிலாவது இவர் தங்கியிருக்கும் சித்ரகூட் பிரதேசத்திற்கு செல்லவேண்டும், அவரிடம் உரையாடவேண்டும் என்ற அரிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக, இவ்வரிய சந்தர்ப்பம் இன்று வாய்த்தது.
இம்மாதிரி அபூர்வமான மனிதர்களுடன் பழக, பேச – அழகான, செறிவான அனுபவங்களைப் பெறக் கொடுப்பினை வேண்டும் – ஆனால் எந்த எழவைச் செய்து புண்ணியம் தேடிக்கொண்டதால், எனக்கு இம்மாதிரி விஷயங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது எனக்கு, சத்தியமாக இந்த வினாடி வரை தெரியவில்லை.
அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும்
January 8, 2016
மூன்று நாட்களுக்கு முன் இடப்பட்ட ஒரு பின்னூட்டத்தின் மூலமாகத்தான், அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர் அவர்களை, ஸவூதி அரசாங்கம், ஜனவரி 2, 2016 அன்று சிரச்சேதம் செய்த கோரத்தைப் பற்றிய விவரத்தை அறிந்து கொண்டேன். (எனக்குப் பொதுவாக – பப்பரப்பா டீவியோ, தினசரிகளோ, இணையச் செய்திகளோகூட ஒத்துவரமாட்டா)
Read the rest of this entry »
السهل الممتنع
December 21, 2015
= அல்–ஸஹ்ல் அல்–மம்தானி.
இந்த அரேபியப் பொன்மொழி சொல்வது போல, சுலபமான வழியென்பது கண்டடைவதற்கு அரிது… பல பிரச்சினைகளுக்கு சுலபமான சிடுக்கவிழ்த்தல்கள் சாத்தியம் இல்லை. Yes, there is NO silver bullet kinda solution whatsoever, for NP Complete/hard problems.
படிப்பறிவில்லாத, யோசிக்கும் திறமையுமில்லாத – வெறும் பப்பரப்பா பரப்புரைகளை மட்டுமே காரியார்த்தமாக நம்பும் பலரைப் போல – இவற்றை மட்டுமே நம்பும் இடதுசாரி வாயோர நுரைபொங்கும் அடிப்படைவாதிகளும் தொழில்முறை அறிவுஜீவிகளும் சொல்வதற்கு மாறாக — இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் என்பது அமெரிக்கர்களின் குழப்படிகளினால், இஸ்ரேலிய மொஸ்ஸாத் உளவு ஸ்தாபனத்தால் உருவாக்கப் பட்டதல்ல; இப்பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்கள் பழமைவாத இஸ்லாமிலும் + கறாரான, தற்காலத்திற்கேற்ப செழுமைப் படுத்தப்படாத மதப்புத்தகப் புரிதல்களாலும்தான் இருக்கின்றன.
ஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி? (+ சில கோரிக்கைக் குறிப்புகள்)
October 20, 2015
பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப் போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை! இவை கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:
அது கர்ட் மக்கள் திரள்கள், தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »
paul lockhart: a mathematician’s lament
October 8, 2015
I would gladly admit upfront, to my learned biases (or jaundiced reflections based on my personal experiences, if you will).
I am of the opinion that almost all Christian missionary schools (or for that matter, schools belonging to any other denomination or abomination that is centrally organized) are really a bad idea, at best.
Read the rest of this entry »
9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4)
September 22, 2015
சுமார் இரண்டரை வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)
அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
-0-0-0-0-0-0-
இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
doubteronomy and numbers
September 13, 2015
This is a reflective piece written (some 5/6 years back or so, for me) on ‘doubt’ by my dear friend, a fine educational philosopher and Ms Guide – K. Rama – a respected colleague of mine and a fantastic Montessori teacher. Of course, this is not a hyperbole.
Let me say that, fantastic teachers are generally very hard to find and then – when you add the mighty Montessori twist to it, oh well…
Elementary age children – really, really love her, for the magic that she manages to weave in the impressionable minds of the children – in the process, enthralling the gawking adults like yours truly too…Of course, my kids benefited immensely from all this magic.
I really miss her & the Montessori Magic these days. *sniff*
மசூதிக்கும் போகும் மன்னாரு
September 7, 2015
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)
எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம், குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.
இரண்டுமூன்று தினங்களுக்கு முன் பத்ரி அவர்களின் முக்கியமான, சரியான நேரத்தில் வெளிவந்த பதிவில் (= விண்வெளிப் பயணங்கள்) – அதன் பின்னூட்டங்களுக்கும் சேர்த்து – ஒரு விஸ்தாரமான பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் அது வெளிவரவில்லை/பதிக்கப்படவில்லை; ஏதாவது ஸ்பேம் முடக்கம் போன்ற காரணங்கள் இருக்கும். அல்லது ஐபி பேக்கெட்டுகளை, ஏதாவது வழித்தடப் பிசாசு (=டீமன்) உண்டு ஏப்பமும் விட்டிருக்கலாம்!
ஆனால் – அதற்காக, என் மேலான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள்? ;-) Read the rest of this entry »
பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 16, 2015
இன்று ஆகஸ்ட் 16 – சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.
மகாமகோ லக்ஷ்மண் கதிர்காமர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 12, 2015
ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள், ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.
இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!
சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்… Read the rest of this entry »

