பேராசிரியர் பெர்னார்ட் ‘பார்ணி’ பேட் (1961 – 2016) – சில குறுங்குறிப்புகள்

April 16, 2016

இந்த மானுடவியல் அறிஞர், தமிழச் சமூகத்தைப் பற்றிய மிக முக்கியமான அவதானிப்புகளை அளித்துள்ளவர், ஏப்ரல் மார்ச் 10, 2016 அன்று இறந்துபோனதை இன்றுதான் அறிந்துகொண்டேன். இவர் எப்படி, ஏன் இறந்தார் என்ற விவரமெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவும், ஹேஷ்யங்களாகவும் மட்டுமே இருக்கின்றன.

இவரைப் போன்றவர்கள் – படிப்பாளிகள், சிந்தனையாளர்கள், கறாரான ஆராய்ச்சியாளர்கள், செயலூக்கத்துடன் தொடர்ந்து பணிபுரிபவர்கள், அழகான நகைச்சுவையுணர்ச்சி கொண்டவர்கள் – ஏனிப்படி தங்கள் நடுவயதிலேயே திடுதிப்பென்று இறந்துவிடுகிறார்கள் என்பது எனக்குப் புரிபடவில்லை; பார்ணி போன்றவர்களின் ஆழத்துக்கும் வீச்சுக்கும், அவர்கள் இன்னமும் 30-40 வருடங்களுக்குக் காத்திரமான பங்களிப்புகளை அளித்திருக்க முடியும். ஹ்ம்ம், அவரிடம் கற்றுக்கொண்டிருந்த  இளம் மாணவர்கள் யாராவது, அவருடைய ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருப்பார்களா என்றும் தெரியவில்லை.

-0-0-0-0-0-

சுமார் பத்துவருடங்களுக்கு முன், இந்த மனிதருடன் அளவளாவ ஒரு சிறு சந்தர்ப்பம் வாய்த்ததை, நான் வாஞ்சையுடன் நினைவுகூர்கிறேன்.

…பேராசிரியர் அவர்களின் புத்தகம் ஒன்றைப் பற்றிய குறிப்புகள் என்னுடைய பதிவு ஒன்றில் இருக்கின்றன. முடிந்தால் படிக்கவும்: தமிழக் கலாச்சாரம் திடம் வாய்ந்ததல்ல, அது வெறும் உரக்கக் கத்தப்படுவதான ஒன்று மட்டுமே! 17/02/2014)

அவருடைய நண்பர் அலெக்ஸ் கொலுப் அவர்கள் எழுதியுள்ள ஒரு இரங்கல் செய்தி: Vale Bernard Bate

…And then one day you find ten years have got behind you
No one told you when to run, you missed the starting gun

— டைம் / பிங்க் ஃப்லாய்ட்

-0-0-0-0-0-0-

என் தகப்பனார் (சாமினாதன்: மறுசுழற்சி 13/02/2014) உபயோகப்படுத்திய பதங்களில் ஒன்று, நம் சொரணையற்ற தனத்தைக் குறித்தது. அது: ‘எருமைமாடு மேல மழை பெய்வதைப்போல…

தமிழர்களாகிய நாம் சொரணையற்றவர்கள். எது எப்படி நடந்தால் என்ன, அடுத்த விஜய்குஜய் படம் எப்படா ரிலீஸ் போன்ற கவலைகள்தாம் நமக்குப் பிரதானம். தமிழாவது ஆராய்ச்சியாவது மசுராவது… போங்கடா!

​​இந்திய_தமிழகப் பல்கலைக்கழக வட்டாரங்களில், ஏன், ஜெர்மனி-ஃப்ரான்ஸ்-அமெரிக்கா (குறிப்பாக, ஜெர்மனி) போன்ற நாடுகளில் நம் தமிழ்ச் சிகாமணிகள் செய்யும் சமூக/மானுடவியல் ஆராய்ச்சி எழவுகளை முடிந்த வரை தொடர முயன்று, எனக்கு என் செல்ல எஸ்ராமகிருஷ்ணனே போதும் என்ற அலுப்பில் அல்லாடிக்கொண்டிருக்கும் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் – பார்ணி போன்றவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்ப ஓராயிரம் ஆஇரா வேங்கடாசலபதிகளாலும் முடியாது.

கொடிது கொடிது, தமிழக ஆராய்ச்சிச்சூழல் கொடிது. சராசரித்தனத்திலும் அதிசராசரித்தனத்தில் அமர்க்களமாக மூழ்கிக்கொண்டு, இன(!)மான(!!) அரசியல் மாய்மாலங்களை அரங்கேற்றிக்கொண்டிருப்பது அது…

2 Responses to “பேராசிரியர் பெர்னார்ட் ‘பார்ணி’ பேட் (1961 – 2016) – சில குறுங்குறிப்புகள்”

  1. Dinesh Says:

    ஐயா, பெர்னார்ட் இறந்தது மார்ச் 10 அல்லவா? அவரது நண்பரின் இரங்கல் மார்ச் 11ம் தேதியில் எழுதப்பட்டுள்ளது. நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s