பத்ரி சேஷாத்ரி அவர்களின் உபயத்தில்  ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம்ஆத்மிகட்சி  வேட்பாளரும் அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணருமான மேதகு ஞாநி சங்கரனார் அவர்கள் நடத்திச் சிறப்பித்த சவப்பெட்டி உற்சவத்தைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.

அவருடைய ஒருகாலத்திய செல்லங்களான நக்ஸல்பாரிக் குஞ்சாமணிகளின் போராட்டகோஷம்:

தேர்தல் பாதை, திருடர் பாதை!

ஆக,  ஒரு பெரிய சுற்று சுற்றிவந்த நாடகத் தன்மை மிக்க ஞாநி சங்கரனார் அவர்களின் தற்போதைய புதிய கோஷம்:

தேர்தல் பாடை, திருடர் பாடை!

… ஹ்ம்ம்ம்… … என்னவோ போங்க. :-(

மேலதிகமாக  Modern Keechaka Vadham – எனும் நாடகத்தை வேறு நடத்தினாராம் – இது நம்  நவநாகரீக அறிவுஜீவிகளின் ‘மாடர்ன் கீச்சகவாதம்’  – அதாவது கீச்சு கீச்சென்று ட்விட்டரில் கீச்சி மட்டுமே தேர்தலில் வெல்லலாம் என்கிற கோட்பாடான கீச்சகவாதத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமோ??

எது எப்படியோ — வாழ்க, நமது அறிவுஜீவிகளின் நகைச்சுவையுணர்ச்சி, வளர்க அவர்தம் தொண்டான குண்டு. (அதாவது குடமுருட்டி வகையறா) வெல்க அவருடைய கட்சி, டெபாஸிட்டையாவது!

-0-0-0-0-0-0-0-

2014 தேர்தலில் – பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் ரங்கசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும் (=ராதாகிருஷ்ணன்),  நாராயணசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும்தான் (= நாராயணசாமி) சரியான போட்டி.  மற்றபடி  அஇஅதிமுக (ஓமலிங்கம்), திமுக (நாஜிம்), பாமக (அனந்தராமன்), கம்யூனிஸ்ட் (விசுவநாதன்), ஆம் ஆத்மி (ரெங்கராஜன்) கட்சிகள் எல்லாம் சும்மனாச்சிக்கும் கூடவோடிகள் போலத்தான் இருக்கின்றன… Read the rest of this entry »

(அல்லது) மோதி-யின் ஆட்சியில் ஜொலிக்கும் நீதிபரிபாலனமும் நீதிமன்றங்களும் – சில குறிப்புகள்.

ஊழலும் கையூட்டு பெறுதலும் இந்திய நடைமுறைவிதியாக ஆகிவிட்ட சூழலில் – நீதித் துறையிலும் அது எதிரொலிப்பது என்பதை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது சரியே; ஆனால், இது அத்தனையளவு, முதலுக்கே மோசமில்லை என்கிற அளவில் இருக்கிறது என்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; கருணைமிக்க, நேர்மையான, தைரியசாலிகளான, செயலூக்கமுள்ள நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்தான் – சென்னை உயர் நீதிமன்றத்திலேயே, என்னால் குறைந்த பட்சம், ஒரு நீதிபதியை அப்படிச் சொல்ல முடியும் – அவர்தான் ஆர் மகாதேவன் அவர்கள்; இவரைப் பற்றி முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறேன்.

ஆனால் – இச்சமயம், தமிழக நீதித் துறை ஊழல்களிலும், தொழில்முறை வழக்காடிகள் (இவர்கள் வழக்குரைஞர்கள் அல்லர்; மிக முக்கியமாக,  வழக்கறிஞர்கள் அல்லவேயல்லர்! வழக்கின் துட்டுசம்பாதிக்கும் திறனுக்கேற்ப ஆடுபவர்கள்தான், அவ்வளவே!) படு கேவலமாக ஜாதி வாரியாக அணிகளில் பிரிந்து அடிதடிகளிலும், மழபுலவஞ்சித்தனமாகக் கல்லெறிவதிலும், சுவரொட்டிகளை கண்டமேனிக்கும் ஒட்டுவதிலும் தமிழகம்தான் புள்ளியியல் ரீதியாக,  முன்னே நிற்கிறது என்பதிலும் நாம் பெருமைப்படவேண்டியது நம் திராவிட இயல்பே!

அய்யய்யோ!  நான் இந்தத் தமிழக திராவிட அரசியலானது அதற்கேயுரித்த, ஜாதி அமைப்புகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுமே மேம்படுத்தும் தன்மையைப் பற்றி, அதன் புள்ளியியல்ரீதியான மகாமகோ மேன்மையைப் பற்றிச் சொல்லவரவில்லை இப்பதிவில்… மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

சரி. பொதுவாக, இந்திய நீதி பரிபாலனத்தின், அதன் நிர்வாகத்தின் சில அடிப்படை நிதர்சன, நடைமுறை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்: Read the rest of this entry »

குணோத்ஸவ் = தரத்தைக்  கொண்டாடுதல்!

முன்குறிப்பு:

நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு 1) குஜராத் போகவில்லை (போய்ச் சில வருடங்கள் அங்கு தங்குவதாக, சுற்றுவதாகச் சில திட்டங்கள் இருந்தாலும், அடுத்த ஏழு வருடங்களுக்கு நிச்சயமாக அவற்றைச் செயல் படுத்த முடியாது), 2) ‘கூக்ள் தேடி’ மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இணையத்தையும் ஒற்றியெடுக்கவில்லை (ஏனெனில், எனக்கு திடீரெக்ஸ் காப்பியடித்து ஞானவானாகக் காண்பித்துக்கொள்ளும் முனைப்பும், முக்கியமாக வயதும் இல்லை)

ஆனால், நான் இக்காலங்களில் ஒரு சாதாரண கிராமப்புறப் பள்ளி ஆசிரியன். கல்வியைப் பற்றி, அதன் தமிழக நிலையைப் பற்றி மிகக் கவலைப் படுபவன். நம் இழி நிலையைச் சரிசெய்வதில் இருக்கும் மகாமகோ இடர்களை (ஒரு மண்புழுவினைய பார்வையில்) உணர்ந்து புழுக்கத்தில் இருப்பவன். சில சமயம் – யோசிக்கும் தருணங்களில், வரப்போகும் 10 -20 ஆண்டுகளில் எப்படிப்பட்ட தமிழகத்து இளைஞர்களை எதற்காக  வார்த்தெடுக்கப் போகிறோம் என்று யோசித்து, நொந்துபோய்அடிவயிற்றில் கலவர உணர்ச்சியோடு இருப்பவன்… ஆக, இப்புழுக்கங்களுக்கு எதிராக, பல சமயங்களில் வெறியுடனும் சில சமயங்களில் மகாமகோ அயர்வுடனும் பணியாற்ற (mostly like a headless chicken) முயன்று கொண்டிருப்பவன். பலமுறை கேவலமாகத் தோற்றுக் கொண்டும், சிலதருணங்களில் மட்டும் (ஆசுவாசமளிக்கும் வகையில்) சில சிறு சிடுக்கவிழ்த்தல்களுக்காக, அற்பத்தனமாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டும். :-(  Read the rest of this entry »

தேர்தல் ஜனநாயகம் ஒட்டு உணர்ச்சிகரப் புல்லரிப்பு என்றால், பொதுவாகவே குடிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் படிப்பறிவும் அதிகம் இல்லாத நம் நாட்டில் –  பல நடைமுறை ரோதனைகள்  இருப்பது சகஜமான விஷயமே! மேடைப்பேச்சுகள், வெறும் ஏச்சுகளாக மட்டுமே இருப்பதும்,  கருத்துவேற்றுமைகள் அடிஉதை சண்டைகளாக மாறுவதும் நடந்துகொண்டிருப்பவைதான்…

ஆனால் இந்த மோதி எதிர்ப்பு விவகாரத்தில்தான்- எனக்குத் தெரிந்து, உரையாடல்கள் மிக மிகக்  கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன…  கண்டமேனிக்கும் கோமாளித்தனமான குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த கருத்துலகக் கபோதிகள்.

மோடி என்றால் மோடிமஸ்தான், பில்லிசூனியம் வைப்பாரென்பார்கள்; மோதி என்றால் மோதி விடுவார், ஜாக்கிரதை என்று அலறுவார்கள்.  மோதி இந்தப் பக்கம் வந்தால், ஏன் அந்தப் பக்கம் போகவில்லையென்பார்கள். அந்தப் பக்கம் போனால் – இந்தப் பக்கத்துக்கு ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் வைப்பார்கள்! Read the rest of this entry »

The first part of this offending two-part series is at: Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2)

In the previous post, it was kind of  ‘proved’ that the dastardly & Dyslexic  Dravidian Leadership has plunged our dear Tamilnadu  into a veritable educational and educative stellar mess.

But moronicities have a momentum of their own – they don’t just stop; they don’t just say enough & exit. They follow a delectable downward spiral. Therefore… this is the second & final part of my illustrious thesis —  ‘Subaltern Studies in Dravidian Regress!’™ ;-)

And so.

-0-0-0-0-0-0-0-

Then came DisclessiaAha!

disklessia \disk*les”i*a\ (d[i^]sk*l[e^]ss”[-e]*[.a]) n.
Any of the various backbone disorders caused by a damaged or a congenitally faulty structure, in a person claiming descent from the Dravidian idea, that constitutes a set of impaired discs, and causing an impairment of the ability to be bold, forthright or to be brave or to be just; to have a propensity to kowtow to perceived authorities; to randomly ingratiate oneself with the powers that be.

Usually, we human beings take pride in the fact that we have a functional Spine or a Backbone, if you will; what we call a backbone consists of a stacking of vertebral bones between which, there are discs, to provide the functionality of a bearing. Sometimes, there would be some malfunction involving the discs, and this impairs the proper functioning of the backbone. However, in the case of the effete  Dravidian leadership, these discs are entirely missing because of which – it lacks a functioning spine. Dravidian leadership is Spineless, period. Read the rest of this entry »

Foreword: ummm… if you HAD  to listen to an old, depleted  guy for TWO whole BLOODY hours, extolling the virtues of LEMURIA and the virtuousness of DRAVIDAM ad nauseam, repeating that, Tamilnadu is where it is – all developed, progressive and beautiful – only because of the Dravidian movement  and on and on and on…. even an otherwise sane(!) person like me would become an extremely ill-puttogether polemicist, even by my very own  bloody standards!

Well, that’s what has happened to me, atleast.  And, the fact that this old man is actually well read otherwise and scholarly and is sane, is all the more galling!

Yes. I am of the firm & considered opinion and  conviction that, Tamilnadu is where it is now – not BECAUSE of the Dravidian movement – but, IN SPITE of the Dravidian movement. Got it, old man? It is in, whatever that is left of its basic genius, that the Tamil people have gotten some sustenance from, and not from some thieving, idiocy propagating mobs, got it?

Warning: Dear reader of this post, If you seriously believe that the idea of Dravidianism has done any  good to my dear Tamilnadu, you should not proceed any further; reading this post would be dangerous to your health. Go back  to the hell-hole from which you surfaced for Oxygen. This is PG45 stuff, and is not meant for Twitter trolling adolescents. Period.

Okay. You have  been warned enough; read on the rest of the post, if you must; but, don’t squeal rather pathetically, later —  got it? Read the rest of this entry »

… இதெல்லாம் தேவையா  என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)

உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் –  உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …

சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு  ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.

இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.

Read the rest of this entry »

:-) உண்மைதான்! இப்படிப்பட்ட பார்வையுடனும் சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு அரைசியல் (கவனிக்கவும், அரசியல் அல்ல) சுற்றுலா போகிறவர்கள், கருத்துதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்!

-0-0-0-0-0-0-0-

நான் குஜராத்தில் (தொழில் ரீதியாக) பயணம் செய்திருக்கிறேன் என்றாலும், நரேந்த்ர மோதி ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு செல்லவில்லை. கட்ச் பகுதியில் பணி செய்துகொண்டிருக்கும் பிஹாரி நண்பர் கடந்த 11 வருடங்களாகக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார் – பல காரணங்களால் அங்கு செல்லவே முடிவதில்லை. இர்மா (IRMA) கல்விசாலையிருக்கும் ஆனந்துக்கும் போயிருக்கவேண்டும், போகவில்லை. ஐஐஎம் பேராசிரியரான அனில்குப்தா அவர்களைப் பார்த்துப் பேசவேண்டுமென பல பத்தாண்டுகளாகத் திட்டம். ஹ்ம்ம்ம்.

ஆனால், என் வயதையொத்த (=மிக்க அனுபவமுடைய), நான் மிகவும் மதிக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை (குஜராத் கேடர்) தனிப்பட்ட முறையில் அறிவேன் – இவர்களுடைய அடிப்படை உற்சாகத்தையும், நேர்மையையும், படிப்பறிவையும் செயலூக்கத்தையும் நிறைய – நேரிடையாகவே தெரிந்துள்ளேன். இவர்களில் இருவருடன் தொடர்பில் உள்ளேன்.

இதைத் தவிர சில குறிப்பிடத்தக்க நண்பர்கள் (தொழில்முறை, ஸூஃபி இசை போன்றவை மூலம் அறிமுகமானவர்கள்) மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். (இவற்றில் ஒரு நண்பர் ஒரு பழுத்த விசுவாசி முஸ்ஸல்மான் என்பதையும் குறிப்பிடுகிறேன்) Read the rest of this entry »

இக்காலங்களில், எனக்கு மிக மிக  வருத்தம் தரும் விஷயம் என்பது இதுதான்: யாருமே, கருணாநிதி அவர்களின் மகன் இசுடாலிர் (பயப்படாதீர்கள், இது ஸ்டாலின் அவர்கள் தான்; அவர் பெயரை, திராவிடத் தமிழ்ப்படுத்தி, மரியாதையாக ர்  சேர்த்திருக்கிறேன், அவ்வளவுதான்!) உட்பட, கருணாநிதி அவர்களைப் பிரதமராக்குவோம் எனக் கேவலம்,  சூளுரைக்கக் கூட மாட்டேன் என்கிறார்கள்.

அடலேறேன ஆர்பரித்து காலயந்திரத்தில் சவாரி செய்து, இறந்தகாலங்களுக்கே ஓடிச்சென்று பெரியார் அவர்களையே திருச்சியில் பிறக்கவைத்த, கொஞ்சு தமிழ் பேசும் கோதையான ஆனானப்பட்ட மேதகு குஷ்பூ அவர்களே கூட இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டேனென்கிறார்.

கவிதைகள் பல எழுதி தமிழ்த்தாயைத் தற்கொலை செய்துகொள்ள ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் கவிஞர் கனிமொழி அவர்களும் கூட, இது பற்றி மேதகு ஜாஃபர் ஸேட் அவர்களிடம்  “[பிற்பகல் 12:04:04] இந்த மனிதரின், ம்ம், ஆசைக்கும் [இரைச்சல்: சரியாகக் கேட்கவில்லை] அளவேயில்லையா?” என ஏசியதாகத்  தெரியவில்லை, குறைந்தபட்சம் இதற்கான ஒலிப்பதிவானதாவது இதுவரை கிட்டவில்லை – ஒருவேளை ‘சவுக்கு’ தன் பணியை ஓய்வொழிவில்லாமல் செய்வதை விட்டுவிட்டு தினமும் ஒரு மணிநேரம்  போலத் தூங்க ஆரம்பித்துவிட்டாரோ?

“தலைவர் உயிருடன் இருக்கும் வரை, அவர்தான் இந்தியாவின் நிரந்தர எதிர்காலப் பிரதமர் [=ஆக ஸ்டாலின் நிரந்தர  திமுக இளைஞரணித் தலைவர் மட்டுமே!]” என அழகிரியும் ஒரு சூடான நேர்கோணல் கொடுக்கவில்லை. இந்தக் கடைக் குடும்பத்தின் ஏவல் ஏற்று, பேய் ஓட்டும் காரியங்களைச் செய்துவரும், ஜெயலலிதா மீது சாத்தான்களை ஏவிவிடும் ஏற்றமிகு எடுபிடியான விடுதலை ‘மானமிகு’ வீரமணி அவர்கள் கூட ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறார் – அவர் கையில்தானே ஜால்ரா இருக்கிறது? வாயில் உள்ள கொழுக்கட்டையைத் துப்பிவிட்டாவது ஏதாவது சொல்லலாமல்லவா?

… ஆக, இது ஒரு திட்டமிட்ட திராவிடக் குடும்பச் சதியோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது. Read the rest of this entry »

… … தமிழகத்தில் ஒன்றுமே  சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி  சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.

எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (24/n)

நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல  விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.

ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.

பதில் கிடைத்ததா? சரி.

கிடைக்கவில்லையா, அதுவும்  சரியே.

இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .

ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே  சொல்கிறேன்:

சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத  தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத  நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »

பத்ரியின் விட்டுப்போன கேள்வி: [தமிழ்நாட்டு மாணவர்கள்] கோபமடையவே கூடாதா?   (“… Should they not get angry at all?”)

(அல்லது) … தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (23/n)

அய்யா பத்ரி, இளைஞர்கள் / மாணவர்கள் கோபப்படலாம். படவேண்டும்தான். இந்த வயதில் ஒரு தார்மீகக் கோபம் இல்லாதவர்களுக்கு, எப்போதுமே அது வராதுதான். அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைதான். ஒப்புக் கொள்கிறேன்.

ஆக, அப்படிக் கோபப்படுபவர்களை, உடனடியாக ஏதாவது உருப்படியாக, உபயோககரமாக, ’ஸ்டூடென் ட் ப்ரொடெஸ்ட்’ அல்லாத,  பணி செய்ய வேண்டும் என விரும்புபவர்களை – கீழ்க்கண்ட உடலுழைப்பு சார்ந்த பணிகள் செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஒரு பணியைச் செய்யவேண்டும் – நடுவில் விட்டு விட்டு ஓடி வரக்கூடாது. இது ஒரு கேளிக்கை உண்ணாவிரதமல்ல – சும்மனாச்சிக்கும் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பது போல – என அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். (இதற்கு தமிழ் நாடு, இந்திய அரசுகள் ஸ்ரீலங்கா அரசிடம் விண்ணப்பித்து முறையாக அனுமதி பெறவேண்டும்; மேலும் இந்நடவடிக்கைகளால், சிங்களப் பொதுஜனங்களுக்கும் உதவி விளைவது போலத்தான் இருக்கவேண்டும்.)

Read the rest of this entry »

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (22/n)

பத்ரி:விஷயங்கள்எல்லை மீறிப் போவதைப் பார்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் என்னதாம்செய்யவேண்டும்? அவர்கள் கோபமடையவே கூடாதா? அவர்கள் நன்றாகப் படித்து, நல்லமதிப்பெண் பெற்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் போதுமா? அவ்வளவுதானா? வேறொன்றுமில்லையா?? (“What should the Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”)

தமிழ் நாட்டு மாணவர்கள் ஈழப்  பிரச்னையில் என்ன செய்யவேண்டும் என்றா கேட்கிறீர்கள், பத்ரி? உங்களுக்கு ஆனாலும்  நகைச்சுவை உணர்ச்சி அதிகம்தான், போங்கள்!.

என்னைப் பொருத்தவரை – ‘கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானா’ எனும் அதி அற்புத அனுபூதிப் பார்வையில் நிறைய எழுதியிருக்கிறேன். (கீழே சில பதிவுகளின் சுட்டிகள்)

இருந்தாலும்… இப்போது இவர்களில் மிகப்பெரும்பாலோர் உடனடியாக ஒன்றும் (எதற்குமே, ஏன்,  தங்களுக்கேகூட!) உதவிகரமாகச் செய்யக்கூடிய நிலைமையில் இல்லை என்றாலும், இவர்கள் செய்யக்கூடியவை இவைபோல் இருக்கலாம் எனக் கருதுகிறேன். கிண்டலையும் நகைச்சுவையையும் முற்றிலும்  தவிர்க்கிறேன். :-(

நான் கீழே கொடுத்திருக்கும் விஷயங்கள் (உண்மையில் தமிழ் இளைஞனுக்கு, அவன் வாழ்வு வளமையும் செறிவும் பெற என் கோரிக்கைகள் / பரிந்துரைகள்) – சுமார் இருபது வருடமுன்பு, ஒரு இந்திய இளைஞன், எப்படி இந்தியாவையும் தன்னையும் அறிந்துகொள்வது என சுமார் 40 பக்க விஸ்தீரணத்தில் நான் எழுதியிருந்த டெலெக்ஸ்நடை ஆங்கிலமூல ஆவணத்திலிருந்து கடன் பெறப்பட்டது. (ஆங்கில மூலம் தொலைந்துபோய்விட்டது; என் நினைவிலிருந்துதான் அதில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை எழுதுகிறேன்.) Read the rest of this entry »

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (21/n)

முந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

பத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும்? போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா? போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும்? (“What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?”)

நம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.

ஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.

அ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென  ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்!)

ஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான்  தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே  இல்லை என்றுதான் தோன்றுகிறது.) Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (20/n)

சாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…

‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.

நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி,  நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும்  குறிப்பிடத்தக்க அளவில் தரம்  வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.

albert-einstein-good-quotes-sayings-indifference-people

எப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட  இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.

இம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:

‘நம் தாக்கத்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்?’ Read the rest of this entry »

சாளரம் #11:  Tamil culture is not sound, it is merely loud. That’s all.  ஆம். தற்காலத் தமிழக் கலாச்சாரத்தின் ஆதாரசுருதி sound-ஆன ஒன்றல்ல, மீளாத் தலைவலி கொடுக்கும் loud-ஆன ஒன்று தான்!

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (19/n)

தமிழையும் ஆங்கிலத்தையும் அடுத்தடுத்து அடுக்காமல்  தொடர்ந்து முழிபெயர்த்து, உங்களுக்கு மேதகு  நடிகர் ‘மேஜர்’ சுந்தர்ராஜன் அவர்களை   நினைவுறுத்துவதைத் தவிர்க்கமுடியவில்லை, ஐ குட் நாட் அவாய்ட் இட்.  என்னை மன்னிக்கவும், ஐ ஆம் ஸாரி. ;-)

ஆ! இப்போது, பாரம்பரியமிக்க  நம் டமில்ட்டாய் அவர்களிடம் போவோம்!! அதாவது La Decibelle  Tamil Dame Sans merci அம்மணியிடம்…  (மன்னிக்கவும்)

டமில்ட் டாய் + ஓசைபெருக்கி

டமில்ட் டாய் படம் + அவளுடைய புத்தம்புதிய, டமிள் வரளாற்றிலேயே மொதள்மொறையாக அவள் கையிள் எடுத்துக்கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் ஆயுதமான ஓசைபெருக்கி

மேலேயிருப்பது, 1941 வாக்கில் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாயின் படம். அவள் ஆர்வத்துடனும் ஏக்கத்துடமும்  வாயைக் குவித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ‘கொம்பு’ ஓசை பெருக்கி, என் உபயம்.  அவளுக்கு ஒருகால், ஒரு கை மேலதிகமாக இருந்திருந்தால், அந்த ஓசைபெருக்கியையும் தூக்கிக் கொண்டிருக்கலாமே என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாள் அவள், பாவம்  — அவளுக்கு நிச்சயம் தெரியும் எண்ணித் துணிக கருமாந்திரம்  என்று…

ஆக, இயல்-இசை-நாடகம் என ஆர்வத்துடனும் ஆர்பாட்டத்துடனும் ஆரம்பித்த திராவிடத்தமிழ்ப் பண்பாடு தற்போது ஓயின்-ஓசை-ஊடகம் என்று அற்புதமாக விரிந்திருப்பதை (=சுருங்கியிருப்பதை) பார்த்தால் இறும்பூதடைவார் நம் தமிழணங்கார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? Read the rest of this entry »

எனக்குக் கிடைத்திருக்கும் பலதரப்பட்ட ஜொலிக்கும்  அனுபவங்கள், பல அற்புதமான மனிதர்களுடன் நெருங்கிப் பழகக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் — என்னைத் தொடர்ந்து மேலெடுத்துச் செல்வதற்கு எனக்கு மிக உதவிகரமாக இருந்திருக்க, இருக்கவேண்டும் என்பது சரியே. இவற்றைப் பற்றி எழுதவே எனக்குக் காலம் போதாது என்பதும் உண்மைதான். ஆனால் — சிலபல காரணங்களினால் – கண்ட, தேவையற்ற, எதிர்மறையான விஷயங்களைப் பற்றி எழுதுவதிலேயே, நிறைய நேரம் செலவழிக்கிறேன் என்பதுதான் சரி. எனக்குச் சமன நிலையில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகளினால் ஆன பயனென்கொல்…

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

…சரி.  இந்தப் பெரியவரை, கடந்த சுமார்  நாற்பத்தைந்து வருடங்களாக எனக்கு மிக மிக   நன்றாகத் தெரியும். இவர் மனைவியையும் ஏறக்குறைய அதேயளவு ஆண்டுகளாக நல்ல அறிமுகம்.

இக்கணவன் – மனைவி தம்பதியினரின்  இருபுறப் பெற்றோர்களும் அவர்களின் மூதாதையர்களும் ஆசிரியர் தொழிலினைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்திருந்த காரணத்தால், அக்காலத்தில், ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி’யில் சுற்றிச் சுற்றி பணி புரிந்திருக்கிறார்கள்.

… சிறுவயதிலேயே தாயை இழந்து, தன் சித்தியிடம்  குழந்தைப்பருவத்தில் வசித்து, பின்னர் ஆந்திராவின் அனந்தபூர் நகரத்தில் பெரும்பாலும் வளர்ந்தமையால் இப்பெரியவருக்கு தெலெகு மொழி தான் தாய்மொழி ஸ்தானத்தில் இருந்திருக்கிறது. இவர் மனைவியும் ஆந்திராவில் உள்ள கூடவல்லியில் இம்மாதிரியே வளர்ந்திருக்கிறார். ஆக, இவர்கள் இருவரும் தமிழ் வம்சாவழியினராக இருந்தாலும் இக்குடும்பத்தில் தெலெகு மொழிக்குத்தான் முக்கியமான இடம். இருந்தாலும் அவர்களுடைய 20 வயதுகளில், சென்னை வந்தவுடன் தமிழ் மொழியில் பாண்டித்தியத்தை தாங்களாகவே வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியவருடைய மனைவியின் — தமிழ்ப் பண்பாடு/இலக்கியம் பற்றிய புரிதல்கள் அபாரமானவை… இவர் ஒரு பாரதி உபாசகர் வேறு.

இவர்களுடைய இளம்பிராய வாழ்க்கையில், பல சுவாரசியமான நிகழ்ச்சிகள், இவர்களுடைய பெற்றோர்கள் பங்கேற்றவை – என பல இருக்கின்றன —  ’தாது’ வருஷப் பஞ்சம், பின்னர் அதனைப் பின் தொடர்ந்த பல பஞ்சங்கள் பற்றிய செவிவழி, படுகோரக் கதைகள் — பல கிறிஸ்தவ மிஷனரிகளின் அயோக்கியத்தனம், சில மிஷனரிகளின் நேர்மை, சுய அர்ப்பணிப்பு — ப்ரிட்டிஷாரின் புண்ணியத்தால் ஒடுக்கப் பட்டுக் கொண்டிருந்த நாமும் சேர்ந்து   ஒடுக்கிய நம் ஹரிஜன்களுக்குக் கல்வியறிவு கொடுத்தல் —  எப்படி, படிப்படியாக முஸ்லீம்களை அவர்கள் தலைவர்களும் சேர்ந்து கொண்டு பிரித்தமை, பிரிவினை விஷம் ஊட்டியமை, மத்தியதரவர்க்கம் இல்லாமல் போனமை — தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களில் பங்கு பெற்றமை —  காந்தி  ‘ஹரிஜன் நிதி’க்குக் கேட்டாரென்று அணிந்திருந்த சொற்ப நகைகளையும், அவர் ரயில் பயணமாக ஆந்திரா வந்தபோது அளித்த தாயார்கள் —  ராட்டையில் நூல் நூற்று, பின் நெசவு செய்து முரட்டுக் கதர் துணிமணிகளை அணிந்தமை  — பெண்கள் நீச்சல் வீராங்கனைகளாகத் திகழ்ந்தமை — பாத்தியதைப்பட்ட மஞ்சள் காணி நிலத்துக்குக்காகக் கூட வெகு தைரியமாக, ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட நேர்ந்தமை —  தீபாவளிக்கான பட்டாசு மத்தாப்புக்களைத் தாங்களே வீட்டில் செய்துகொள்ளும் தொழில் நுட்ப சாதுரியமும், அறிவும், செயலூக்கமும் மிக்க தாயார்கள் — ‘புட்டபர்த்தி’ சாயிபாபாவின் இளமைக்கால நினைவுகள் —  அனந்தபூர் நகரத்தில் தரமான கல்விக்கு அடிகோலியது (பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பணிசெய்த நீலம் சஞ்சீவ ரெட்டியும், இந்தப் பெரியவருடைய தகப்பனாரின் மாணவர்),  பழம்பெரும் காங்க்ரெஸ் குடும்பங்களாக அமைந்தமை – இன்னபிற, இன்னபிற என ஒரு நீளமான ஜாபிதா… Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (18/n)

சாளரம் #10: நம் தமிழர்களுக்கு ‘நாம் vs மற்றவர்கள்’ அல்லது ‘நம்மாள் vs வேற்றாள்’ குறித்த இனம் புரியாத (அதாவது, புரிந்த) அடுக்குப் பிரிவு உணர்ச்சி என்பது மிக, மிக  அதிகம்.

அதாவது இந்த உணர்ச்சி – நம்மையும், மற்றவரையும் அடுக்குப் பிரிவு சார்பாகவே பார்த்து, அது மேல், இது கீழ்  என விரித்து, முத்திரை குத்தி – அதன் மூலமாக விரியும் பிம்பங்களினூடே, அவை மூலமாக மட்டுமே  அதுவும், எந்த மானுட அடிப்படை விழுமியங்களினாலும், அறவுணர்ச்சிகளினாலும் பாதிக்கவேபடாமல்  உலகைப் பார்த்தல். Read the rest of this entry »

நான், பல காரணங்களுக்காக மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவர் (மன்னிக்கவும், இவர் ஒரு பார்ப்பனர் அல்லர்; ஆர்க்காட்டு முதலியார், எண்பது வயதிருக்கலாம்; மணிக்கொடி பற்றிப் பேசிப்பேசியே கழுத்தை அறுப்பவர். இக்காலங்களில் இன்டெர்நெட்டிலேயே ஐக்கியம் ஆகி மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருப்பவர்; ஜேஜே: சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனனை நினைவு படுத்துபவர்; தனிமையையும் தமிழையும் விரும்புபவர்; ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர் அதிகம் பேசாதவர்), ஒரு நீள மின்னஞ்சலில், வருத்தப்பட்டு, கோபத்துடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; கீழே அதன் சாராம்சம், என்னுடைய  வார்த்தைகளில்:

ஏன் இப்படிச் செய்கிறாய். மற்ற எழுத்தாளர்க ளெல்லாம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் குறி வைத்துத் தாக்குகிறாய், இம்மாதிரி ஆட்களால் தானே, இலக்கியத்தின் பக்கம் மேன்மேலும் மக்கள் ஈர்ப்படைந்து, பின்னர் நல்ல இலக்கியங்களுக்கு அறிமுகமாவர். சுளுக்கெடுப்பது உன் தொழிலா. ஒரு விமலாதித்த மாமல்லன் போதாதா. தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் கூட கொண்டாடத் தக்கவரில்லையா. நீ ஏன் இப்படி முரடனாக இருக்கிறாய். ஏன் இந்த தேவையற்ற சகதி. அமிலத்தன்மையைக் குறைத்துக் கொண்டால், இன்னமும் நிறைய பேர் படிப்பார்களே…  நல்ல விஷயங்களைப் பற்றி எழுதலாமே. கெட்ட வார்த்தைகளைக் குறைத்துக் கொள்ளலாமே… டட்டடா டட்டடா…

-0-0-0-0-0-0-0-0-0-

அவருக்கு நான் எழுதிய தமிழ் பதிலின், கத்தரிக்கப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட, தனிப்பட்ட விவரங்கள் வெட்டப்பட்ட), ஆக, 1/3 ஆகக் குறைக்கப்பட்ட வடிவம்: Read the rest of this entry »

இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள்,  ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர  ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக  முக்கியம்.

ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள்  புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள்.  ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »

இதாணு:  எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?

லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!

… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ  ‘எஸ்ராவோடெ ராவுகள்’ —  ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள  குருத்தங்கெட்ட  தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.

… … … … பேடிக்கண்டா!   … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?

… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!!  aye aegree. zuizide is zimbly no zolution.  uou onderztand?

…Besides, ezra is a thick armoured battletank, he can pound  away merrily, while you lousy lusers  keep complaining. Resistance is futile, yes. :-(

சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.

எச்சரிக்கை: இது ஒரு  ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(

Read the rest of this entry »