இதுதாண்டா – திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (2/n)

சரி. இவ்வரிசையில் முதல் பாகம். கண்டிப்பாக அதனைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாமல் இங்கு வந்தால், மேலே இப்பதிவையும் தலையை வெகுவேகமாகச் சொறிந்துகொண்டு ரத்தக்களறியுடன் படித்து, மேலதிகமாகப் புரியாமல் புளகாங்கிதம் அடையலாம். நன்றி.

திராவிடம் தொடர்கிறது…

Read the rest of this entry »

எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை  ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.

இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)

பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்

Read the rest of this entry »

| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்:  ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |

சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.

ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.


பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…

Read the rest of this entry »

இக்கட்டுரையின் முதல்பாகம்.   இப்பதிவு(ம்) ரொம்பவே நீளம். பொறுமையாகப் படிக்கவும். தேவையற்றுப் பொங்கவேண்டாம். சரியா? :-(

-0-0-0-0-0-0-0-0-

என் பள்ளித் தோட்டத்திற்கு சுமார் 45 வகை விதம்விதமான பறவைகள் (சில, பிரமிக்க வைக்கும் அழகுடன்) வருகின்றன. கூடவே பலப்பல பட்டாம் பூச்சிகளும், சிலவகைத் தேனீக்களும், பலப்பல பூச்சிகளும், ஊர்வனவும். இவற்றைப் போக்கத்துப் பார்த்து, குறிப்புகள் எடுத்து மகிழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு,  சிலவகை கருங்குருவிகளைப் (Drongo, Dicrurus macrocercus) பற்றிக் கொஞ்சமேனும் மேலதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

அதேபோல வெண்டைக்காய்களில் (Okra, Ladies Finger, Hibiscus esculentes) எனக்குச் சில பிரச்சினைகள் இருந்தன. இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நமைச்சலெடுத்ததால், இணையத்திற்குச் சென்றேன். ஆனால், சில ‘சுட்டிக்’ குதிப்புகளுக்குப் பிறகுதான்… பிரச்சினையே!

என் தலைவிதிதான், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைப் பார்க்க வைக்கிறது…

Read the rest of this entry »

(அல்லது) நம் ஆராய்ச்சிச் சிகாமணிகளின் அதிஅற்புத அநுபூதி நிலை ஆயோதிஆய்வுகள்!

அம்மணிகளே, அம்மணர்களே, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. இதை இருமுறை அடிக்கோடிட்டுக்கொள்ளவும். எனக்கு அது பிடிக்கவேறு வேண்டுமா என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். உங்கள் விதண்டாவாதம் சரிதான். மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதுதான்!

ஆனாலும் இப்பதிவு கருங்குருவி+வெண்டைக்காய்+தர்ப்பை பற்றித்தான். பயப்படாதீர்கள்.

Read the rest of this entry »

எனக்குத் தெரிந்து, என் செல்ல பெங்காலிபாபு உட்பட, இதற்கெல்லாம் பொங்கவேயில்லை. வீரமிலா, நேர்மையிலா ஞமலிகள், வேறென்ன சொல்ல.

இதே விஷயங்கள், தலைகீழாக நடந்திருந்தால் நம் போலிப் போராளிகளும், சமதர்மப்பூங்காவினரும், ஊடகப் பேடிகளும் எப்படியெல்லாம் ஆடியிருப்பார்கள் என்பதை நினைத்தால்…

Read the rest of this entry »

அய்யோ மூடர்காள், அந்த வேலைவெட்டியற்ற வரலாற்றாளர் சுப்பராயலுவின் சோழர் கதை, எழவெடுத்த  நீலகண்ட ஸாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்றில் எழுதிய கதையெல்லாம் சோழர் வரலாறேயல்ல! மன்னிக்கவும்!

Read the rest of this entry »

‘பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்’ எனும் வேலைவெட்டியற்ற உரையாடல் எழவின் சாராம்சம், சோகக்கதை தொடர்கிறது. இதன் முதல் பகுதி இங்கே – பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்; இதைப் படித்தால் – கீழேகாண்பது கொஞ்சம் புரியலாம். ஆகவே.

(திராவிடஇயக்க மேதகு நாயுடுகாரு நண்பர் அவர்கள் – நான் படிக்காவிட்டால் பரவாயில்லை, சரியாகத்தான் வரும், போட்டுக்கொள், எக்கேடோ கெட்டுப்போ, ஆளைவிடு – என்று கோபமாகச் சொன்னதால், இந்த இரண்டாம் பகுதியையும் பிரசுரிக்கிறேன்; இந்தப் பதிவில் – நண்பர் சொன்னதில் இரண்டு ‘திராவிடப் பொய்மை’ விஷயங்களை மட்டும் கையாண்டிருக்கிறேன்)

-0-0-0-0-0-0-

“முதலாவது – கணேஷ்ஸ்ரீ பராட்டா உங்களுக்குப் பிடிக்குமா?”

“என்ன ஸார் இப்படி கேக்கறீங்க? ரொம்ப பிடிக்கும். இத்தனை சல்லீசா எவன் ஸார் கோபி பராட்டா பன்னீர் பராட்டான்னிட்டு சுவையா பண்ணி கொடுப்பான், சொல்லுங்கள்?”

“இது, உங்கள் பார்வையில், ஆரிய வந்தேறிகள் கடை. ஓடிஷாவிலிருந்து பிழைப்புக்காக இங்கு வந்துசேர்ந்த பிராம்மணர்களின் கடை. அவர்கள் கொழுத்த மாதிரி தெரியவில்லை. அநியாயமாக லாபம் அடிப்பதாகவோ அல்லது தரக்குறைவான வஸ்துக்களை விற்பதாகவோ தெரியவில்லை. கடை என்னவோ ஒரு சிறிய பொந்துபோலத்தான் இருக்கிறது. கொஞ்சம் அழகுணர்ச்சியோடு எளிமையான அலங்கரிப்புகள் இருந்திருக்கலாம், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவர்கள் பார்ப்பன வந்தேறிகள். வடவர்கள். ஆக, இவர்களை விரட்டினால், உங்களுக்கு யார் சார் பன்னீர் பராட்டா செய்து, அதுவும் எதையெடுத்தாலும் பூண்டைப் போடும் இந்த பூண்டுச்சேரியில், உங்களுக்கென சல்லீசாகப் பரிமாறுவார்கள்?”

Read the rest of this entry »

:-( இந்த சோகக்கதையை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை.

‘திராவிட இயக்க அறிவுஜீவி’ (இந்தப் பதம் ஒரு நகைக்கத்தக்க ஆக்ஸிமொரான் – ஏனெனில், திராவிடக் கருத்தாக்கத்துக்கும் அறிவுக்கும் ஒரு சுக்குத் தொடர்புமில்லை – சரியாகச் சொல்லவேண்டுமானால், இவை இரண்டும் எதிரெதிர் துருவங்கள்; ஆனால் மேற்படி முயக்கம், பல உதிரிகளை ஜீவிக்க வைப்பது உண்மை! ஆகவே இவரை ஒரு வெறும் தொழில்முறை திராவிடஜீவி என்றழைப்பதே சரி) எனச் சர்வசாதாரணமாகத் தன்னை விவரித்துக்கொள்ளும் ஒருவருடன் பொறுமையாக உரையாடவேண்டிய நிர்பந்தம், இரண்டு நாட்கள் முன்னர்,  மாலையில் புதுச்சேரி  கணேஷ்ஸ்ரீ உணவகத்தில் ஏற்பட்டது, அந்த திராவிடஜீவியின் பூர்வஜென்மப் பாவமாகத் தான் இருக்கும்.
Map of the Ancient Philistines Territory

இதுதான் ஒரிஜினல் திராவிட நாடு. இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி மேலே தெரியவேண்டுமானால் என்னுடைய செல்லமான அர்பன் டிக்ஷ்னரிக்குச் செல்லவும். ஸ்க்ரோல் செய்து அந்த முழு கட்டுரையையும், பலவித பொழிப்புரைகளையும் படிக்கவும். அப்போதுதான் உங்களுக்கு இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியும்! நன்றி.

பாவம், அவருக்கு என்னைப் பலவருடங்களாகத் தெரியும். முன்னாட்களில் புத்திசாலியாகவே (அதிகமாகவெல்லாம் அல்ல – ஆனால், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும் படியாக) இருந்தவர்தான் – பரவலான வாசிப்பும் + செறிவூட்டும் வாழ்க்கை அனுபவங்களும் பெரும்பாலும் இல்லாமல் இருந்தாலும்கூட  –   எனத்தான் நினைவு. திராவிடக் குண்டுச் சட்டியில், கழகக் கழுதைகளை ட்ரீயோட்ரீயோ என ஓட்டுவது என்பது மிகமிக லேசு எனும் உண்மைக்கு அப்பாற்பட்டு  – வயதாகவயதாக நிலைப்பாடுகளில் முதிர்ச்சியின்மை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது – மறுபக்கம், மறுபரிசீலனை செய்யும் ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது, என்ன செய்ய. (அவருக்கு மட்டுமல்ல, எனக்கும்தான்! :-( ஒப்புக் கொள்கிறேன்!)

Read the rest of this entry »

தகத்தகாய மாஜி ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் குஞ்சாமணிகளே! எனக்கு மன்னிப்பு உண்டா?

Read the rest of this entry »

… வரவர, ஜன்னியில் உளறிக் கொண்டேயிருக்கிறார்கள், இந்த மேதா பட்கர் அம்மணியும், மதிமுக ‘வைகோ’ கோபால்சாமியும். கோபத்தில் எனக்கே ஜுரம் வந்துவிட்டது போலிருக்கிறது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும், எத்தை எதிர்த்தால் ஊடக மாமாக்கள் ஓடி வந்து ‘கவர்’ செய்வார்கள் என்பதையெல்லாம் யோசித்து, ‘செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது’ என்கிற எழவையெல்லாம் – இந்த பொழுதன்னிக்கும் பப்பரப்பா யுகத்தில், நம்மால் மண்டையில் அடித்துக்கொண்டு புரிந்துகொள்ள முடியும்தான்… இருந்தாலும், பீலா விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? :-(
Read the rest of this entry »

கல்பாக்கம்! கூடங்குளம்!! நியூட்ரான் ஆய்வு மையம்!!! நச்சுக் கிருமி ஆராய்ச்சிகள்!!!! மீத்தேன் எரிவாயு!!!!! பச்சைவயல்காடுகள் கபளீகரம்!!!!!! பன்னாட்டு நிறுவனங்கள்!!!!!!! ஊழல் முதலாளியம்!!!!!!!! பெருச்சாளி அரசியல்வாதிகள்!!!!!!!!! தட்டச்சு வீரதீர இணையப் போராளிகள்!!!!!!!!!! அய்யய்யோ!

… ஏற்கனவே மேற்கண்டவற்றால் கண்டமேனிக்கும் பீதியில் இருக்கும் – திராவிடம் போன்ற மொக்கைப் படுபயங்கரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும், பொட்டல் காடாகப்பட்டுக்கொண்டிருக்கும் நம் தமிழகத்தில்…

… இப்போது இன்னொரு அசுரன்!  பெயர் – டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்! ஆ! அய்யோ!!

Read the rest of this entry »

கனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன்? அநியாயமாகத்  தவறு செய்து விட்டேனோ??

“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?”

— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))

ஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை  திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? :-)

Read the rest of this entry »

2013 மார்ச் திங்கள் எட்டாம் தேதி! நினைவிருக்கிறதா?

… வரும் மார்ச் எட்டாம்தேதி – தமிழக மாணவக் குஞ்சாமணிகளின் யுகப்புரட்சி வெடித்துக் கிளம்பிய தினத்தின் இரண்டாம் ஆண்டு கருமாந்திர திவசம்! இதற்கு இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது!

இது – தினவெடுத்த மாணவமணிகள், தங்கள் தமிழீழக் கனவுகளைக் கைமுஷ்டிகளின் ஏந்தி குவலயபீடங்கள் போல ஆர்ப்பரித்துக் கிளம்பிய தினம்!!

தமிழக மாணவமறவர்கள், ஈழத்தைக் காப்பதற்காக ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் ஷாமியானாக்களில் வாடி வதங்கிய தினங்கள்!!!

பேருந்துகளின் மீது கல்விட்டெறிந்து, கோஷ்டம் பல போட்டுக்கொண்டு, டீவிகேமராக்களுக்கு முன் ஆர்பாட்டம் செய்து தளுக்காக மினுக்கிக்கொண்டு,  ‘தமிழ்’ஈழத்தை வடதுருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் தேடிக்கொண்டு, வெறி தலைக்கேற குத்தாட்டம் ஆடி, புட்டத்தைச் சொறிந்துகொண்டு பவனிவந்த காலங்கள்…

Read the rest of this entry »

ஒரு மாஜி துணை விரிவுரையாளரே, பெரும்பேரும்புகழும் பெற்ற பேராசிரியராகத் தன்னைக் கருதிக்கொண்டு, வெட்கமில்லாமல் பலரால் அப்படியே விளிக்கப்பட்டுக்கொண்டு கடந்த பல மாமாங்கங்களாக, ஒரு திராவிட இயக்கத் தலைவராய், முதிர்ந்த வயதில், மகாமகோ பெருமையுடன் பவனிவரும்போது….

… ஒரு இப்போதைய ‘அப்பாவி‘ இளைஞன், திராவிட இயக்க மறவன், சொல்லின் சிங்கம், ஜால்ராக்களின் ஜிங்கம், பப்பரப்பா பத்திரிகையாளர்களில் பர்க்காதத்,  சினிமா விமர்சனத்தில் வின்சென்ட்கேன்பி, புரட்சிக்காரர்களில் சேகுவேரா, பிரபாகரன்களில் புலி, புளிகளின் கொட்டை, காஃபியில் நரசூஸ், காப்பியின் ஸெராக்ஸ் —  பிற்காலப் பேராசிரியனாய், பின் நவீனத்துவத் திராவிடப் பேராசானாய் – 2040 வாக்கில் அறியப்படமாட்டானா என்ன?

ஏனெனில், நம் தமிழ்த்திருநாட்டில் எப்போதுமே ஜனரஞ்சக நாயகர்கள் தாம் வழிகாட்டுபவர்களாக, சமூகத்தை மேல் நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? :-(
Read the rest of this entry »

என்னால் சிலசமயங்களில், சிலவிஷயங்களை நேரிடையாகப் புரிந்துகொள்ளமுடியாதபோது, என்னுடைய செல்லங்களான சில கருதுகோள்களின் ஊடாக அவற்றை அவதானிக்க முயல்வேன். இதன் காரணமாகத்தான் ஒருவருடம் முன்புபோல, ஒரு காட்டுரை வரிசை எழுதப்பட்டது. (= தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

இந்த பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் விஷயத்திலும் அப்படித்தான்.

Read the rest of this entry »

எந்த மசுத்தை எங்கே யாருக்குப் புடிங்கினாலும் ஏதாவது ஒரு திராவிட டொக்கு மூலையில் மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு திராவிடத் தமிழன் புண்பட்டே தீருவான் என்பது தமிழகத்தின் மாளா, மீளாத் திராவிடத் தலைவிதிகளில் ஒன்று.

… ஆனால் அதற்கு, சோம்பேறித் தமிழனான அவன் — — பெண்-பெண்ணின்மை, ஆண்-ஆணின்மை, திருநங்கை-திருமதிநம்பி, ஜாதி-ஜாதியின்மை, மதம்-மதச்சார்பின்மை, புண்-புண்ணின்மை, சீழ்-சீழின்மை, சினிமா-உப்புமா என்றெல்லாம் விலாவாரியாக, பொதுவாக மூளை-மூளையின்மை எனக் காரணம் கொடுப்பான் என்பது ஒரு நடைமுறை உண்மை; சார்லி ஹெப்டொ கொலைகாரர்களே, அடிப்படையில் திராவிடர்களாமே! அய்யய்யோ!!

தமிழனுக்கு பண்படுதல் என்பதே புண்படுதல்தான்!

திராவிடத் தமிழன் = Mad ஒரு பாகன்

திராவிடத் தமிழன் = Mad ஒரு பாகன்

Read the rest of this entry »

ஓரிருமாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது: நண்பர் ஒருவருடன் மாமலைகளையும் (ஹரல்ட் கார்ஃபின்கெல், எர்விங் காஃப்மன்) அதலபாதாள மடுக்களையும் (ஆஇரா வேங்கடாசலபதியின் பிரமிக்கவைக்கும்  ‘ஆராய்ச்சி!’, ஜேஆர்ஆர் டோல்கீனின் அலுப்பு சராசரிக் களஞ்சியமான  ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்‘) பற்றியெல்லாம் சுகமாக அளவளாவிவிட்டு திரும்பி வீட்டுக்குவந்து, மாலைக்கடனெழவுகளை முடித்துவிட்டு, யார்யார் மின்னஞ்சல்களில் திட்டியிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம் எனக் கொஞ்சம் கணினி முன் உட்கார்ந்தால் ஒரு அதிர்ச்சி!

பார், யாருக்கெல்லாம் இந்த விருது கிடைக்கலாம் என்று  புளகாங்கிதமுற்ற நண்பனின் பரவசம். “தமிழ்ஹிந்து-வில் எப்படி மெனெக்கெடுகிறார்கள் பார்!” அந்த சுட்டி எழவு இங்கேயிருக்கிறது: சாகித்ய விருது இந்த ஆண்டு யாருக்கு?

Read the rest of this entry »

ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில மேலதிகமான கருத்துகளை கொஞ்சம் காட்டமாகவே கொடுக்கும் என்னுடைய காட்டுரைகள் –  [2], [3].  இவற்றைப் படித்துவிட்டு முடிந்தால் தொடரவும்.(பின்புலம்: டிஸிஎஸ் நிறுவனம், தனக்குத் தேவையற்ற 25000 வேலையாட்களை – அவர்கள் தங்களைச் செழுமை செய்துகொள்ள உதவிகரமாக,  சராசரித்தனத்திலிருந்து மேலெழும்ப ஏதுவாக – வெளியே அனுப்பப்போகும் சாதாரணச் செய்தி)

முதலில் மூன்று வெவ்வேறூ எதிர்வினையாளர்களின் மின்னஞ்சல் கருத்துகளின் சாராம்சம்:

1.  எனக்கு, கஷ்டத்திலிருப்பவர்களிடம், கடும் துன்பத்தில், திக்குத் தெரியாமல் வாடுபவர்களிடம் கரிசனம் இல்லை. மனிதாபிமானமேயில்லை.

2. நான் ஒரு மேட்டிமைவாதி (elitist!). உச்சாணிக் கொம்புகளில் இருக்கும் ஆட்களைப் பற்றி மட்டும்தான் எனக்குக் கவலை. என் பார்வையில், கீழே இருப்பவர்களெல்லாம் ஒதுக்கத் தக்கவர்கள், வெறுக்கப் படவேண்டியவர்கள்.

3. ஜெயமோகன் மேல் பொறாமையுடன் புழுதி வாரியிறைக்கும் கும்பலில் நான் ஐக்கியமாகி விட்டேன். நான் அவருடன் நேரடியாக கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்வதை விடுத்து, எதிர்க்கருத்து சொல்லி, ஒத்திசைவில் பதிவிடுகிறேன். நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களை இப்படியா வெளியில் கொட்டுவது, கல்லெறிவது?

Read the rest of this entry »

(அல்லது ) ஐடி குளுவான்களின், பரவலாக வெளியே தெரியவராத பிரச்சினைகள்!!!!!

அய்யய்யோ! குளுவான்களென்றாலே எனக்கு ஆச்சரியம்தான்!! அதனால்தான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இந்த எழவெடுத்த ஆச்சரியக்குறிகளை உபயோகித்து விட்டேன்!!! மன்னிக்கவும்!!!!

சரி!!!!! இவ்வரிசைப் பதிவுகளின் முதல்பாகம்!!!!!! இது இரண்டாம் பாகம்!!!!!!!

-0-0-0-0-0-0-0-

ஆம்.

ஐடி குளுவான் மந்தையினர் அபாக்கியவான்கள். பரலோக நரகம் மட்டுமல்ல, இகலோக நரகமும் அவர்களுடையதே!  யேசுவுக்கு நன்றி.  [மேத்யு( 5: 3)]

விடலைப் பருவத்திலிருந்து – மேலெழும்பவே மாட்டோம், வளரவே மாட்டோம் என அடம் பிடித்து, ‘எனக்கு அந்த வேல பொம்மெ வேணும்’ என மூக்குச் சளி ஒழுக உருண்டுபுரண்டு ஒப்பாரி சகிதம் பிலாக்கணம் வைக்கும் குளுவான் கும்பலுக்கு,  ‘ஐயகோ, எங்கள் நிராதரவான கையறு நிலையைப் பாரீர்‘ என விசும்பிவிசும்பி அழும் அரைகுறைகளுக்கு – ஒரேயொரு அருமருந்துதான் இருக்கிறது என்று – என் பேராசானும் சித்தபைத்திய குருநாதருமான சிவபோதைவார்த்தையார் அவர்கள் தன்னுடைய தேரையதவளையர்  நிகண்டுவில் இப்படிச் சொல்கிறார்:
Read the rest of this entry »