(அல்லது) கோத்ரா, தீர்ப்பு, என்னுடைய முயற்சிகள்: சில குறிப்புகள்

மேலே படிப்பதற்குப் பின்புலமாக நீங்கள் என்னுடைய முந்தைய பதிவை (அதன் பாவப்பட்ட பின்னூட்டங்களுடன்) படித்தால் நலம். படிக்காவிட்டாலும் ஒரளவு புரியலாம். (

குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு? கோத்ரா ரயிலெரிப்புக் கொலைகள்: திரித்தல்களும், அற்பத்தனங்களும்…

வெங்கடேசன் அவர்கள், தன்னுடைய பின்னூட்டங்களில் கீழ்கண்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்: ஒன்று, இரண்டு. இவற்றில் இரண்டாவதற்கு இந்த பதில்.

அன்புள்ள வெங்கடேசன்:

உங்கள் கரிசனத்துக்கும் – உண்மை என்னவாக இருந்திருக்கலாம் எனும் சிந்தனைகளுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து பல மனிதர்கள் இப்படி இல்லை.

  • நான், அம்மணி தீஸ்தா ஸெதல்வாத் தளத்திலிருந்த பொதுத் தீர்ப்பைப் படிக்கவில்லை. அவர் மேல் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை; ஏனெனில் தரவுகள் சார்ந்து அவரை ஒரு பண/கருத்து மோசடிப் பேர்வழியாகக் கருதுகிறேன். அதே சமயம் பல வடிவங்களை ஒருங்கிணைத்து எது சரி எதில் என்ன பாடபேதம் என்று ஆராயவேண்டிய அளவு, போயும்போயும் தீஸ்தாக்கள் மேல் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ஏன், உங்களுக்குமே இல்லை — என்பதுதான் என் எண்ணம். மேலும் வெறும் கூக்ல் மூலமாக, மௌஸை உருட்டி இணையத்தில் கிடைக்கும் சத்தற்ற செய்திகளை நான் உடனே நம்பி விடுவதில்லை. என் பயிற்சியும் அனுபவங்களும் (healthy skepticism) அப்படி என்னை ஆக்கிவிட்டிருக்கின்றன. ஆம். இன்டெர்நெட்டித்யேவ நஸாது ஸர்வம். :-( காளிதாஸன் எப்போதுமே காப்பாற்றிவிடுவான்! :-)

Read the rest of this entry »

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
—  (திருக்குறள்(அறத்துப்பால்(வாய்மை)))

அதாகப்பட்டது:  மனதாறத் தெரிந்தே, அண்டப்புளுகுணி மாங்கொட்டையாக இருப்பவர்களை அவர்களுடைய மனச்சாட்சியே சுட்டுவிடும் என்று  திருக்குறள் நீதிபோதனையாகச் சொன்னாலும் – என்னைப் பொறுத்தவரை, எனக்குத் தெரியவந்த மாங்கொட்டைகளை, எனக்கு நேரமும் பொறுமையும் (=பொறுமையின்மை) இருந்தால் நானே சுட்டுவிடுவது வழக்கம்; ஏனெனில் பலருக்கு மனச்சாட்சியே இல்லை. இது ஒரு பிரத்தியட்ச உண்மை.

சரி. Read the rest of this entry »

முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களும் ஒருவருக்கொருவர் மீது பரஸ்பர அவநம்பிக்கையை மட்டுமே கொண்டுள்ளனர்; ஆர்எஸ்எஸ் என்பது ‘ஹிந்துத்துவ’ குண்டர்கள் கும்பல்; முஸ்லீம் என்றாலே அவன் சந்தேகப்படத் தக்கவன்- வெடிகுண்டன்; ஹிந்துத்துவம் என்றாலே மதவெறிதான்; முஸ்லீம் என்றாலே சிறுபான்மைத்தனப் படுத்தப்பட்டு ஒதுக்கப்படுபவன்தான்; ஜாதியென்ற பகுப்பு ஜாதிவெறிக்குள் அடங்கிவிடுவதுதான்;  மதம் சார்ந்து இயங்குபவர்களெல்லாம் முட்டாள் மதவெறியர்கள், ஸெக்யூலரிஸ்ம்தான் புளகாங்கிதம் தரும்; தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் நேர்மையாளர்கள்; தொழில்முறை அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணர்கள், அவர்கள் நிபுணத்துவம் மிகுந்து நிரம்பிவழியும்படியால், கல்வியிலும் நேர்மையிலும் கரைகண்ட ஜாம்பவான்கள்;  நக்ஸலைட்டுகள் அதிமனிதர்கள்; திராவிட இயக்கம் என்று ஒன்று இருந்திருக்கவில்லையென்றால் தமிழகத்துக்கு விமோசனமே இருந்திருக்காது … …

…  போன்ற மூச்சுமுட்டவைக்கும் பரப்புரைகளையெல்லாம் (nauseating & nasty propaganda ploys) கயமையுடன் முன்னெடுத்துச் செல்வது பப்பரப்பா ஊடகங்களே என்பதில் (பல அறிவியல்_தொழில்நுட்ப விற்பன்னர்கள் + நேர்மையான களப்பணியாளர்கள் – அதுவும் முஸ்லீம் + ஹிந்து(அதுவும், ஆர்எஸ்எஸ் – அய்யய்யோ!) நண்பர்களைப் பெற்றுள்ள) எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. பொதுமக்களில் பெரும்பாலோர் இப்படிப்பட்ட பரப்புரைகளையெல்லாம் பொதுவாக நம்புவதில்லை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இருந்தாலும்… Read the rest of this entry »

ப்ரியங்கா ஸிங் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரின் கீச்சல்தான் மேற்கண்டது. :-)

இந்தக் கிண்டல்களில், நையாண்டிகளில்  அமிழ்வதற்காகவே ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், டிவிட்டரில் நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடப் போகிறேன்… ;-) Read the rest of this entry »

(அல்லது) ஹர்ஷ் மந்தர், அருந்ததி ராய், தீஸ்தா ஸெதல்வாத் (இப்போது மெஹ்தி ஹஸன்): நவீன நஸ்ருத்தீன்களும் கோதுமைமாவை துணிக்கொடியில் உலர்த்தல்களும்…

ஒரு பழைய முல்லா நஸ்ருத்தீன் கதையொன்று நினைவுக்கு வருகிறது:

முல்லாவின் அடுத்தவீட்டுக்காரர், முல்லாவிடம் கொஞ்சம் கோதுமை மாவு கடன்கேட்டு வருகிறார்.

முல்லா சொல்கிறார்: அய்யய்யோ, இப்பத்தான்  என்னிடம் இருந்த கோதுமைமாவையெல்லாம் தோய்த்துத் துணியுலர்த்தும் கொடியில் உலரப் போட்டிருக்கிறேன்!

அவீகாரர் கேட்கிறார்: எப்படியய்யா கோதுமைமாவை அப்படி உலர்த்தமுடியும்? ரொம்ப கஷ்டமாச்சே!

முல்லா: அய்யா, புரிந்துகொள்ளுங்கள். கடன் கொடுக்க விருப்பமில்லாத என்னால், கோதுமைமாவை வைத்து வெகு சுலபமாக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்… (இக்கதையின் ஒரு அழகான ஆங்கில வடிவம்)

… ஆம்.  மோதி, குஜராத் என்றால் அவைகளுக்கு எதிராக, என்ன விதமான பொய்யையும் வாய் கூசாமல் மறுபடியும் மறுபடியும் சொல்லி மட்டுமே ஸ்தாபனம் செய்து கோதுமைமாவைத் துவைத்துக் கொடியில் உலர்த்திக் காயவைக்க முடியும்.

—000—

… பெங்காலி ‘நஸ்ருத்தீன்’ பாபுவுக்கு மிகவும் சந்தோஷம். “மோதி-யைப் பற்றி இங்கிலாந்தில் உறைந்திருக்கும் மேதகு மெஹ்தி ஹஸன்  அவர்களே எழுதியிருக்கும் இங்கிலாந்தின் ந்யூஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் வந்திருக்கும் கட்டுரையப் படி மொதல்ல” என்று ஒரு குறுஞ்செய்தி.  அவர்களே  என்று எழுதியதற்குக் காரணம் – இதே ஹஸன் அவர்கள் முன்னம் எழுதிய ஒரு கட்டுரைக்கான சுட்டியை அவர் அனுப்பி, நான்  சிலாகித்திருந்ததுதான். (இதே ஈபிடபிள்யு-தர கருத்துதிர்க்கும் பெங்காலியை முன்வைத்து முன்னமும் எழுதியிருக்கிறேன்)

என்னுடைய பழவினைப்பயன் தான் இம்மாதிரி ஆட்களுடன் எனக்குச் சகவாசம் ஏற்பட்டுள்ளது. போங்கடா என்றாலும் விட மாட்டேனென்கிறார்கள் – எனக்கும் இவர்களுடன் முழுமையாகக் கத்தரித்துக் கொள்வதில் விருப்பமில்லை; ஏனெனில், இவர்களுடைய பல  பிறபக்கங்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாகவே இருக்கின்றன; என்னுடைய பிரச்சினை என்னவென்றால், தங்கள் அரைகுறைத்தனத்தைத் திரும்பத் திரும்ப பகிரங்கமாகப் பறைசாற்றுவது அவர்களுக்கு அவ்வளவு வெல்லமாக மாறி விட்டிருக்கிறது, இக்காலங்களில்.

இத்தனைக்கும் தமிழென்பதைச் சுட்டுப் போட்டாலும் படிக்க முடியாது அவனுக்கு. நான் மோதி-யைப் பற்றித் தமிழில் எழுதுவது ஒன்றையும் படிக்காமலேயே அவனுக்குக் கூடுதல் வெறி – எப்படியடா என்னை வீழ்த்தலாம் என்று. எனக்கு வெறுப்பேற்றுகிறேன் என்று எதையாவது செய்துகொண்டேயிருக்கிறான். (அவனுக்கு இதில் வெற்றிதான்!) Read the rest of this entry »

நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.

இதன் ‘ஒருமாதிரியான’ பொழிப்புரை: ஒரு மலர் அழகாக இருந்தாலும் அதற்கு நறுமணம்  இல்லையென்றால் அது அளிக்கும் ஏமாற்றத்தைப் போல, நீச்சல் தெரியாதவன் படுதைரியமாக ஆழ்நீரில் இறங்கும் சோகத்தைப் போல – ஒரு எழவும் புரிந்துகொள்ள முடியாதவர்களைக் கேள்வி கேட்பதாலும்,  அரைகுறைச் சிறியார்களின் மேல் கோபம் கொள்ளுதலினாலும் ஒரு மசுத்துக்கும்  பிரயோஜனம் இல்லை!  :-(

ஆயிரம்  முறை எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பேன் இந்த இன்னா37ஐ; இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எனக்குப் படித்துப் படித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் –  இருந்தாலும், இந்த அணுக்கருவுலை பற்றிய துறையறியாமல் பொய்மையில் அமிழ்ந்து போகும் அறியார்களையும் (=பொதுவாக நாம்) சிறியார்களையும் (= எஸ்ராமகிருஷ்ண-சுந்தர்ராஜனாதிகள், உதயகுமாரர்கள் இன்னபிறர்) கண்டால் பொறுக்கவே மாட்டேனென்கிறது, என்ன செய்ய…   :-(  Read the rest of this entry »

… life goes on in spite of the 2014 elections, results, all the hair_splitting discussions, chest_thumpings,  blood_curdling war cries  and much release of the intestinal gases by our armed chair ineffectuals…  Of course, it is good that much of it happens over the Internet.

-0-0-0-0-0-0-0-

What was I saying? Oh yeah, the hailstorm… and all hail discordia!

… … It is amazing, but that’s what happened. And, I hope this teaches me humility, seriously.

A few weeks back – to be precise, on the evening of 14th April, we had a sudden thunderstorm and a heavy squall in our suburb of Bangalore. And for 20 minutes or so, there was this hailstone business (ice pebbles of the size of 1 – 2.5 cms in diameter, on an average, incredible!) pounding on everything that was exposed to the elements – and to assist it, there were these incredibly howling high velocity winds!

In and around the place where we live, tin and asbestos roofs developed gaping holes, many compound walls were smashed, many decade old & sprawling  trees were uprooted, oh the danse macabre. Read the rest of this entry »

பொதுவாக, நமது பாரதத்தில் –  நக்ஸல்பாரிகள் என மினுக்கிக்கொண்டு அலைபவர்களை, நக்ஸடார்க்குகள், நக்ஸலைட்டுகள் என இருவகைகளாகப் பிரிக்கலாம்:

நக்ஸடார்க்குகள் (naxadarks) – இவர்கள், ஜனநாயகம் என்கிற ஊரிலேயே பிறக்காத, கொடுமைக்காரக் கொலை வெறியர்கள். மாவோயிஸ்ட்கள் எனப் பொத்தாம்பொதுவாக அறியப் படுபவர்கள். பொருளாதார வளர்ச்சிக்கும், கல்விக்கும், முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும், அடிப்படை அறங்களுக்கும், நேர்மைக்கும், அமைதிக்கும் எதிரானவர்கள். ஆகவே விஷக் கிருமிகள் போல அறவே ஒழிக்கப் படவேண்டியவர்கள். இவர்கள் இக்காலங்களில் தமிழ் நாட்டில் இல்லை; முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுவிட்டார்கள், வால்டர் ஐஸக் தேவாரம் போன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியுடன்.

இதுதாண்டா மாவோயிஸ்ட் எனும் நக்ஸடார்க்!

இதுதாண்டா மாவோயிஸ்ட் எனும் நக்ஸடார்க்!

இந்த பயங்கரவாத இயக்கத்தினால் முதலில், மிகத் துப்புறவாக அழித்தொழிக்கப் படுபவர்கள் என்றால் – அவர்கள் கோலோச்சும் பகுதிகளில் வசிக்கும் துர்பாக்கியவான்களான பாவப்பட்ட பொதுமக்கள். இவர்கள் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் பகுதிகள் ஜார்கண்ட், சத்தீஸ்கட், ஆந்திரா, ஒடிஷ்ஷா, பிஹார் பிராந்தியங்களில் இருக்கின்றன. Read the rest of this entry »

QED.

(அல்லது) ஹ்ம்ம்… சில சமயங்களில், என் பதிவுகளின் தலைப்புகளை முழுவதும் படித்துப் புரிந்துகொள்வதற்குள்ளாகவே நெஞ்சுவலி வந்துவிடும்தான், உங்களை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது… ஆனால், கணிதம் மூலமாக, எந்த  விஷயத்தைத்தான் புரிந்து கொள்ளமுடியாது, சொல்லுங்கள்!

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

திராவிடத் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த மேற்கண்ட பொதுவிதிச் சமன்பாடு மூலம் மட்டுமே தேர்தலைப் புரிந்துகொள்ள முடியும். முன்னேற்றமாவது, வளர்ச்சியாவது, வளமாவது, நீதியாவது கொள்கையாவது மசுராவது… போங்கடா.

இந்தக் கேடுகெட்ட விதிக்கு விதிவிலக்குகளென்றால் – எனக்குத் தெரிந்தவரை கம்யூனிஸ்ட்கள், பாஜக-வினர் போன்றவர்கள் மட்டுமே! இவர்களுக்குத்தான் கொள்கை  என்று ஒன்று (மற்றவர்களுக்கு இது பிடிக்குமோ பிடிக்காதோ, அது வேறு விஷயம்) இருக்கிறது.  சுய-அர்ப்பணிப்புள்ள அடித்தளம் என்று ஒன்று இருக்கிறது.  இவைகளில், உண்மையான தலைவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் பலர் இருக்கின்றார்கள். ஓரளவு, இந்த விடுதலைச் சிறுத்தைகளையும் இந்தக் கணக்கில் – அதாவது பைசா கொடுக்காத கட்சிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் — சீமார் வகையறா, வினவு வகையறா, தவ்ஹீத்ஜமாத், ஆம்ஆத்மி வகையறா போன்றவை மானாவாரி, மேகம்பார்த்தபூமிச் சாகுபடி பப்பரப்பா உச்சாடன இயக்கங்கள் மட்டுமே, அவை அரசியல் கட்சிகளல்ல. Read the rest of this entry »

பத்ரி சேஷாத்ரி அவர்களின் உபயத்தில்  ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம்ஆத்மிகட்சி  வேட்பாளரும் அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணருமான மேதகு ஞாநி சங்கரனார் அவர்கள் நடத்திச் சிறப்பித்த சவப்பெட்டி உற்சவத்தைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.

அவருடைய ஒருகாலத்திய செல்லங்களான நக்ஸல்பாரிக் குஞ்சாமணிகளின் போராட்டகோஷம்:

தேர்தல் பாதை, திருடர் பாதை!

ஆக,  ஒரு பெரிய சுற்று சுற்றிவந்த நாடகத் தன்மை மிக்க ஞாநி சங்கரனார் அவர்களின் தற்போதைய புதிய கோஷம்:

தேர்தல் பாடை, திருடர் பாடை!

… ஹ்ம்ம்ம்… … என்னவோ போங்க. :-(

மேலதிகமாக  Modern Keechaka Vadham – எனும் நாடகத்தை வேறு நடத்தினாராம் – இது நம்  நவநாகரீக அறிவுஜீவிகளின் ‘மாடர்ன் கீச்சகவாதம்’  – அதாவது கீச்சு கீச்சென்று ட்விட்டரில் கீச்சி மட்டுமே தேர்தலில் வெல்லலாம் என்கிற கோட்பாடான கீச்சகவாதத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமோ??

எது எப்படியோ — வாழ்க, நமது அறிவுஜீவிகளின் நகைச்சுவையுணர்ச்சி, வளர்க அவர்தம் தொண்டான குண்டு. (அதாவது குடமுருட்டி வகையறா) வெல்க அவருடைய கட்சி, டெபாஸிட்டையாவது!

-0-0-0-0-0-0-0-

2014 தேர்தலில் – பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் ரங்கசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும் (=ராதாகிருஷ்ணன்),  நாராயணசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும்தான் (= நாராயணசாமி) சரியான போட்டி.  மற்றபடி  அஇஅதிமுக (ஓமலிங்கம்), திமுக (நாஜிம்), பாமக (அனந்தராமன்), கம்யூனிஸ்ட் (விசுவநாதன்), ஆம் ஆத்மி (ரெங்கராஜன்) கட்சிகள் எல்லாம் சும்மனாச்சிக்கும் கூடவோடிகள் போலத்தான் இருக்கின்றன… Read the rest of this entry »

என்னுடைய மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும் ஓத்திசைவின் தொழில்முறை பின்னூட்டக்காரருமான சரவணன் அவர்கள் அண்மையில் நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:

ஒன்றைக் கவனித்தீர்களா? பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைவிட திராவிட இயக்கத்திடம் நிச்சயம் சிந்தனை, அறிவியக்க செயல்பாடுகள் அதிகம். பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ் பற்றி, ஜெயமோகன் சொல்வதைப் பார்ப்போமா?

**** இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது *********

இந்தக் கேவலத்துக்கு திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள் ஆயிரம் பங்கு மேல்!! பிராமண மேட்டிமைவாதத்தை முன்வைப்பதை விட பிறப்பால் அனைவரும் சமம் என்பதைக் கருத்தளவிலாவது ஒப்புக்கொண்டு, அதை நோக்கி சிறிய முயற்சிகளையாவது செய்தவர்கள் மேலானவர்கள் அல்லவா?

… ஹ்ம்ம்… முக்கால்வாசி, நீங்கள் எந்தக் குறிக்கோளுடன் இந்தப் பின்னூட்டத்தை எழுத முற்பட்டீர்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லைதான் என நினைக்கிறேன்; ஆனால், நான் புரிந்துகொண்டவகையில் இதற்கு பதில் அளிக்கிறேன். Read the rest of this entry »

(அல்லது) மோதி-யின் ஆட்சியில் ஜொலிக்கும் நீதிபரிபாலனமும் நீதிமன்றங்களும் – சில குறிப்புகள்.

ஊழலும் கையூட்டு பெறுதலும் இந்திய நடைமுறைவிதியாக ஆகிவிட்ட சூழலில் – நீதித் துறையிலும் அது எதிரொலிப்பது என்பதை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது சரியே; ஆனால், இது அத்தனையளவு, முதலுக்கே மோசமில்லை என்கிற அளவில் இருக்கிறது என்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; கருணைமிக்க, நேர்மையான, தைரியசாலிகளான, செயலூக்கமுள்ள நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்தான் – சென்னை உயர் நீதிமன்றத்திலேயே, என்னால் குறைந்த பட்சம், ஒரு நீதிபதியை அப்படிச் சொல்ல முடியும் – அவர்தான் ஆர் மகாதேவன் அவர்கள்; இவரைப் பற்றி முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறேன்.

ஆனால் – இச்சமயம், தமிழக நீதித் துறை ஊழல்களிலும், தொழில்முறை வழக்காடிகள் (இவர்கள் வழக்குரைஞர்கள் அல்லர்; மிக முக்கியமாக,  வழக்கறிஞர்கள் அல்லவேயல்லர்! வழக்கின் துட்டுசம்பாதிக்கும் திறனுக்கேற்ப ஆடுபவர்கள்தான், அவ்வளவே!) படு கேவலமாக ஜாதி வாரியாக அணிகளில் பிரிந்து அடிதடிகளிலும், மழபுலவஞ்சித்தனமாகக் கல்லெறிவதிலும், சுவரொட்டிகளை கண்டமேனிக்கும் ஒட்டுவதிலும் தமிழகம்தான் புள்ளியியல் ரீதியாக,  முன்னே நிற்கிறது என்பதிலும் நாம் பெருமைப்படவேண்டியது நம் திராவிட இயல்பே!

அய்யய்யோ!  நான் இந்தத் தமிழக திராவிட அரசியலானது அதற்கேயுரித்த, ஜாதி அமைப்புகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுமே மேம்படுத்தும் தன்மையைப் பற்றி, அதன் புள்ளியியல்ரீதியான மகாமகோ மேன்மையைப் பற்றிச் சொல்லவரவில்லை இப்பதிவில்… மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

சரி. பொதுவாக, இந்திய நீதி பரிபாலனத்தின், அதன் நிர்வாகத்தின் சில அடிப்படை நிதர்சன, நடைமுறை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்: Read the rest of this entry »

‘ராஜ்’ என்பவர் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுதியிருப்பதன் தமிழ்வடிவ சாராம்சம்:

மோதி ஒரு நல்ல நிர்வாகி என்பதையோ, குஜராத்தின் வளர்ச்சி பற்றியோ நான் சந்தேகப் படவில்லை. எனக்கு, பாஜக ஆட்சிக்கு வருவதில் ஒப்புதலிருந்தாலும் ஒரு பிரச்சினை.

நமக்கு ராம் மந்திர் தேவையா? இதன் காரணத்தால் எவ்வளவோ இறப்புகள் நிகழ்ந்துவிட்டனவே! பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் ராம் மந்திர் பற்றி சொல்வது கொஞ்சம் கவலைதருவதுதானே? மோதி இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பாரா?

அன்புள்ள ‘ராஜ்,’

நான் பாஜக அங்கத்தினன் அல்லன்.  மேலும், மோதி-யின் மனம் எப்படி வேலைசெய்யலாம் என்பதை என்னால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆனாலும் பலபத்தாண்டுகளாக இக்கட்சியை(யும்) ஊன்றிக் கவனித்து வருபவன், சில நேர்மை+செயலூக்கம் கொண்ட பாஜக-வினரை நேரடியாக அறிந்துள்ளவன் என்கிற முறையில் என் கருத்துகள்:

  • பாஜக கட்சி என்பது ஒரு ஒருமைவாத, ஒற்றைக்குறிக்கோளினால் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியாக இல்லை. அதில் பல போக்குகள், பார்வைகள், பிரிவுகள் இருக்கின்றன. அக்கட்சியில் ஒரு பிரிவுக்கு, ராம் மந்திர் தேவை. ஆனால், பல பிரிவுகளுக்கு அது ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமாக இருந்தாலும், இப்போது அது ஒரு தேவையற்ற விஷயம்.

Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா ஸ்த்ரீஷக்தி! :-)

ஆஸிஃபா கான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலிருந்து...

ஆஸிஃபா கான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலிருந்து…

… அத்தனை செய்திகளை நகைச்சுவையுணர்ச்சியுடன், எளிமையான ஹிந்தியில், வசைகள் இல்லாமல் தொடர்ந்து சொல்கிறார்! தெளிவான, ஸ்பஷ்டமான உச்சரிப்புகள். செதுக்கியெடுக்கப் பட்ட கிண்டல்கள்.  நைச்சியமான நையாண்டிகள். தேவையானபோது சரியான ஆங்கிலப் பதங்கள். கூட்டத் திரள்கள் மயங்கிக் கேட்கின்றன, ஆரவாரம் செய்கின்றன! காங்க்ரெஸ் கட்சிக்கும், தீஸ்தா செதல்வாத் தர அழுகுணி ஆட்டம் ஆடும் புளுகுணி மாங்கொட்டைகளுக்கும், தொழில்முறை கஞ்சிக் கலய மனிதவுரிமைவாதிகளுக்கும் திருப்பித் திருப்பிச் சவுக்கடி.

குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றிய அங்குள்ள மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய – எளிதில் சரிபார்த்துவிடக் கூடிய விவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது எளிமையாக்கி அவற்றைச் சாமானியர்களின் வாழ்க்கைகளோடு பொருத்திச் சரியாகப் புரிந்துகொள்ள வைக்கிறார்.  நரேந்த்ரமோதிக்காக வாக்குச் சேகரிக்கிறார். குஜராத்திய கிராம/ நகர ஜனங்களிடம் ‘அர்ரே பாயீ  ’ என்று இழுத்துப் பேசி (என் மனதையும்) கொள்ளை கொள்கிறார். Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா தீஸ்தா செதல்வாத்! :-(

“என்னுடைய வாழ்க்கையின் ஒரே கோஷம் – நான் இந்தியனாகப் பிறந்தவன், ஒரு உண்மையான இந்தியனாக இருப்பதில் பெருமைப் படுபவன்”

— ரயிஸ்கான் பதான்

ரயிஸ்கான் அவர்களை – போராளிப் பெண்மணி, நிரந்தர மனிதவுரிமை மாதர் திலகம், குஜராத்தின் புரட்டுத்தலைவி அம்மணி மகாமகோ தீஸ்தா செதல்வாத் (Teesta Setalvad) அவர்களின் செல்லக் கைத்தடியாகத் தான் அறிந்திருந்தேன் – அதுவும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என நினைவு.

இப்போதிருப்பதை விட மிக மும்முரமாக, அமெரிக்க அரசிடமிருந்தும், தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிச்சை போடும் கனவானிய ஸ்தாபனங்களிலிருந்தும் பணம் வாங்கிக் கொண்டு – ஒரு மோதி எதிர்ப்பு நிலையையும், ஆகவே ‘ஸெக்யூலரிஸ’  காதலுணர்ச்சியை ஏற்றிக் கொண்டு, தீஸ்தா அம்மணி பவனி வந்து கொண்டிருந்த கால கட்டங்கள் அவை… இந்த அம்மணியைப் பற்றி ஒரு பதிவை முன்னமே எழுதியிருக்கிறேன். (பிச்சை போடுபவர்களும், பிச்சைக்காரர்களும்…)

ரயிஸ்கான் அவர்களும் தீஸ்தா சொல் கேட்டு, மோதிக்கு எதிராக, குஜராத் அரசுக்கு, காவல்துறைக்கு எதிராகச் சாட்சிகளை ஜோடிப்பதையும், பொய்வதந்திகளைப் பரப்புவதையும், பொய் ஆவணங்களைத் தயாரிப்பதையும் — கொஞ்சம் வெள்ளந்தியாகவே செய்திருக்கிறார்; ஏனெனில் ரயிஸ்கான் உண்மையாகவே, தான் தன்னுடைய சக முஸ்லீம்களுக்கு உதவுவதாகவும், தீஸ்தா ஒரு ‘மாறாது போல வந்த மாமணி’ போலவுமெல்லாம் ஒரு மனப் பிரமையில் இருந்திருக்கிறார்.    Read the rest of this entry »

எச்சரிக்கை: அய்ஜஸ் இல்மி அவர்கள் பொஜக-வின் (= ஆம்ஆத்மி டீ பார்ட்டி) தலைவர்களின் ஒருவரான அம்மணி ஷஸியா இல்மி அவர்களின் சகோதரர். இந்த ஷஸியா அம்மணியானவர், ஊழலுக்கு எதிராக கொதித்துக் கொண்டிருக்கும்போதும், காங்க்ரெஸ்ஸுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும்போதும், தொலைகாட்சிக்காரர்களால் அடிக்கடி ஆம்ஆத்மி கட்சி சார்பாக பப்பரப்பா நேர்காணல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோதும்…

… முடிந்தபோதெல்லாம் மன்மோஹன் ஸிங் அவர்களுடன் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் துள்ளிக்குதித்துக் கொண்டு இந்திய அரசுச் செலவில் (= நம்முடைய வரிப்பணம்), இலவச வெளி நாட்டுப் பயணங்கள் சென்றவர்! இதுதான் பெரும்பாலான தொழில்முறை ‘பொதுவாழ்வில் தூய்மை விரும்பி’களின் அழகு; ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம், விட்டெறியப்பட்ட எலும்புகளைப் பொறுக்கித் தின்றுகொண்டு, அற்ப மாறாட்ட போங்காட்டம்!

ஆனால், ஷஸியா அம்மணியின் சகோதரர் அய்ஜஸ் அப்படியல்லர். இரட்டை வேடமணிபவர் அல்லர்.

அய்ஜஸ் அவர்களின் குடும்பம்  ஸியாஸத் ஜதித் (Siyasat Jadid)   எனும் உருது தினசரியை நடத்திக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியிலும் இல்லாமல் ஒரு இந்தியவிரும்பியாக மட்டுமே இருந்த இந்த அய்ஜஸ், எம்ஜெ அக்பர் (நாம் மிகவும் மதிக்கும் படிப்பாளிகளில், சிந்தனையாளர்களில், பத்திரிகையாளர்களில்  ஒருவர் இவர்) அவர்களுடன் பாஜக-வில் அண்மையில் இணைந்தார்.

Read the rest of this entry »

(அல்லது) பாமோலின் கவரால்…

பாமாயில் (PalmOil) என்ற பெயரை வக்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்.

அடச் சட்… :-(

நான் எழுத வந்தது:   ‘கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்‘ என்றவொரு மகாமகோ படுபயங்கர பயபீதியளிக்கும்,  திடுக்கிடவைத்துத் தூக்கிவாரிப்போடும்  தகவலுடன் ஆரம்பிக்கும் ‘கோகோலின் பெயரால்’  எனும் தலைப்புடைய மிக முக்கியமான கட்டுரையைப் பற்றித்தான். :-((

சரி. பெயரைப் பெயரிடுவார்கள் – ஆகவே,  மயிரை மயிரிடுவார்கள் எனும் அடிப்படைப்  புரிதலுடன் ஆரம்பிக்கத்தான் நினைக்கிறேன். :-((( இருந்தாலும் அழுகைஅழுகையாக வருகிறது. Read the rest of this entry »

சிஷ்டி அவர்கள் ஒரு சூரத் நகர இளைஞர் –  மத நல்லிணக்கத்துக்கும், இந்தியகுஜராத்தி முஸ்லீம்களின் மேன்மைக்கும் பாடுபடும் மதத் தலைவர். ஆனால் இவர், ஒரு சாதாரண, படிப்பறிவற்ற, மற்ற நம்பிக்கைகளின் மீது வெறுப்பைக் கக்கும் தொழில்முறை மதத்தலைவர் அல்லர்.  வெறுப்பை மூலதனமாக வைத்துப்  பணத்தையும் புகழையும் அடைய நினைப்பவர் அல்லர்.

உலகளாவிய அளவில், இஸ்லாமை நம்புபவர்களை, அவர் கண்டுகொண்ட ஸூஃபி முறை ஞானமார்க்கத்தில் வழி நடத்துபவர். ஓரளவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு படைத்தவர். சூரத்தின் அதோதராவில் உள்ள தர்காஹ் ஷாரிஃப்-ன் கடினஷின் (=தலைமை உபாசகர்); உம்மா அகிலம் எனும் தொலைக்காட்சி அலை வரிசையை நடத்துபவர். (இந்த அலை வரிசையைப் பற்றிச் சில செய்திகள் அந்தக் கேடுகெட்ட விக்கிபிடியாவில் இருக்கின்றன; வேறு வழியேயில்லாமல், சோம்பேறித்தனமாக இந்தச் சுட்டியைக் கொடுக்கிறேன்; தொலைக்காட்சிக்கும் எனக்கும் வெகுதூரம்)

எச்சரிக்கை: இவர் மோதியின் நண்பர். அவருடைய அரசியல் ஆதரவாளரும்கூட.

இவரும் மாய்ந்து மாய்ந்து மோதிக்கு எதிராக, இந்தியாவின் பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப் படும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், பாவம். Read the rest of this entry »

குணோத்ஸவ் = தரத்தைக்  கொண்டாடுதல்!

முன்குறிப்பு:

நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு 1) குஜராத் போகவில்லை (போய்ச் சில வருடங்கள் அங்கு தங்குவதாக, சுற்றுவதாகச் சில திட்டங்கள் இருந்தாலும், அடுத்த ஏழு வருடங்களுக்கு நிச்சயமாக அவற்றைச் செயல் படுத்த முடியாது), 2) ‘கூக்ள் தேடி’ மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இணையத்தையும் ஒற்றியெடுக்கவில்லை (ஏனெனில், எனக்கு திடீரெக்ஸ் காப்பியடித்து ஞானவானாகக் காண்பித்துக்கொள்ளும் முனைப்பும், முக்கியமாக வயதும் இல்லை)

ஆனால், நான் இக்காலங்களில் ஒரு சாதாரண கிராமப்புறப் பள்ளி ஆசிரியன். கல்வியைப் பற்றி, அதன் தமிழக நிலையைப் பற்றி மிகக் கவலைப் படுபவன். நம் இழி நிலையைச் சரிசெய்வதில் இருக்கும் மகாமகோ இடர்களை (ஒரு மண்புழுவினைய பார்வையில்) உணர்ந்து புழுக்கத்தில் இருப்பவன். சில சமயம் – யோசிக்கும் தருணங்களில், வரப்போகும் 10 -20 ஆண்டுகளில் எப்படிப்பட்ட தமிழகத்து இளைஞர்களை எதற்காக  வார்த்தெடுக்கப் போகிறோம் என்று யோசித்து, நொந்துபோய்அடிவயிற்றில் கலவர உணர்ச்சியோடு இருப்பவன்… ஆக, இப்புழுக்கங்களுக்கு எதிராக, பல சமயங்களில் வெறியுடனும் சில சமயங்களில் மகாமகோ அயர்வுடனும் பணியாற்ற (mostly like a headless chicken) முயன்று கொண்டிருப்பவன். பலமுறை கேவலமாகத் தோற்றுக் கொண்டும், சிலதருணங்களில் மட்டும் (ஆசுவாசமளிக்கும் வகையில்) சில சிறு சிடுக்கவிழ்த்தல்களுக்காக, அற்பத்தனமாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டும். :-(  Read the rest of this entry »

தேர்தல் ஜனநாயகம் ஒட்டு உணர்ச்சிகரப் புல்லரிப்பு என்றால், பொதுவாகவே குடிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் படிப்பறிவும் அதிகம் இல்லாத நம் நாட்டில் –  பல நடைமுறை ரோதனைகள்  இருப்பது சகஜமான விஷயமே! மேடைப்பேச்சுகள், வெறும் ஏச்சுகளாக மட்டுமே இருப்பதும்,  கருத்துவேற்றுமைகள் அடிஉதை சண்டைகளாக மாறுவதும் நடந்துகொண்டிருப்பவைதான்…

ஆனால் இந்த மோதி எதிர்ப்பு விவகாரத்தில்தான்- எனக்குத் தெரிந்து, உரையாடல்கள் மிக மிகக்  கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன…  கண்டமேனிக்கும் கோமாளித்தனமான குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த கருத்துலகக் கபோதிகள்.

மோடி என்றால் மோடிமஸ்தான், பில்லிசூனியம் வைப்பாரென்பார்கள்; மோதி என்றால் மோதி விடுவார், ஜாக்கிரதை என்று அலறுவார்கள்.  மோதி இந்தப் பக்கம் வந்தால், ஏன் அந்தப் பக்கம் போகவில்லையென்பார்கள். அந்தப் பக்கம் போனால் – இந்தப் பக்கத்துக்கு ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் வைப்பார்கள்! Read the rest of this entry »