இதாணு:  எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?

லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!

… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ  ‘எஸ்ராவோடெ ராவுகள்’ —  ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள  குருத்தங்கெட்ட  தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.

… … … … பேடிக்கண்டா!   … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?

… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!!  aye aegree. zuizide is zimbly no zolution.  uou onderztand?

…Besides, ezra is a thick armoured battletank, he can pound  away merrily, while you lousy lusers  keep complaining. Resistance is futile, yes. :-(

சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.

எச்சரிக்கை: இது ஒரு  ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(

Read the rest of this entry »

ஏண்டா, வொங்களுக்கு நேரடியா ஒரு வெஷயத்தச் சொன்னா புரியவே புரியாதா?

நேத்திக்கு – குறிப்பா அந்த எஸ்ரா-வோட அடிப்பொடி எழுதின முழிபெயர்ப்பு பக்கம் போகவே போகாதீங்கடான்னு படிச்சு படிச்சு சொன்னேனேடா!

நான் சொல்றத கேக்கவேகேக்காம 70-80 பேர் துள்ளிகுதிச்சிக்கிட்டு ஓடிப்போய் அந்தக் கந்தறகோளத்தப் பாத்திருக்கீங்களேடா! உருப்படுவீங்களா?? Read the rest of this entry »

அதாவது, உங்களிடம்.

‘என்னை விட்டுவிடுங்கள்’  என்று நாத்தழுதழுக்க, கண்ணில் நீர் பெருக, குரல் கம்ம, நெஞ்சு படபடக்க, கைகள் நடுங்க – அவர் உங்களிடம் மண்டியிட்டுக் கைகூப்பிக் காலில் விழுந்து இறைஞ்சியதை நானே என் கண்ணால் பார்த்தேன்… என்ன சோகம்! :-(

(அல்லது) எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (2/3)

… … ‘அறிவியலாளர்’களைப் பற்றிய, மகாமகோ எஸ் ராமகிருஷ்ண அமரகாவியமான ‘கலிலியோ மண்டியிடவில்லை‘  புத்தகம் உயிர்மை (மகாமகோ உலகத்தரம் வாய்ந்த கவிஞ்சரின் திராவிடத்தரமான நிறுவனம்தான்!)  பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

சேசுவே! பாவிகளை மன்னியும்.

இந்தப் புத்தகத்தின் அறிமுகமாக, எஸ்ரா அவர்களின் சொந்தமோசொந்தக் குறிப்பு:

“அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.”
— எஸ்.ராமகிருஷ்ணன் (http://www.uyirmmai.com/publications/BookDetails.aspx?bid=375)

கோனார் உரை: கற்பனையான ஜீவராசி = கழுதை என்பதறிக.

ஆனால், ஆசிரிய பல்துறைசார்வாள், இந்த ஜீவராசியின் வாய்வழியே அறிவியலையும் இலக்கியத்தையும் அறிந்து கொள்ள முயன்றாரா, அல்லது பின்னாலிருக்கும் ஓட்டையினூடேவா என்பதைத் தெளிவாக விளக்கவில்லை. Read the rest of this entry »

B-(      8-(     :-(    …  …  :-{

… (அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துகளில் சோகச்சித்திரங்கள்…

முதலில், ஒரு முக்கியமான தன்னிலை விளக்கம்: இக்கட்டுரைத் தொடரில் முதல் பகுதியான கட்டெறும்பு பெருத்து கழுதையான கதை என்பதில் கட்டெறும்பு என்பதுதான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைக் குறிக்கிறது; கழுதையென்பது அடியேனை. அதாவது முன்னவர், தனக்கேயுரிய பாணியில் எழுதி எழுதித் தள்ளி, என்  அளவுக்கு மிக மிகப்  பரிதாபமாக இறங்கி விடுகிறார் என்பதைக் குறிப்பதற்கே, இந்தத் தலைப்பு. இதைத் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

இன்னொரு விஷயம்:வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம்’   என்கிற ஔவையாரின் மூதுரையுடன், நீங்கள் இந்தத் தலைப்பினை இணைத்துக் குழப்பிக்கொண்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளவேண்டாம் எனவும் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தவறான புரிதல்களினால் — சின்னஎஸ்ராவே, கட்டெறும்பு என் மாமியாரக் கடிக்குது-என்றெல்லாம் நான், நடிகை சுகன்யா  நடிகர் பிரபுதேவா அவர்களைப் போல விலுக்விலுக்கென்று இடுப்பை வெட்டிக்கொண்டு பாடியாடவேண்டியிருக்கும், உங்களுக்கு இது  தேவையா?? Read the rest of this entry »

(அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் ஏன் இப்படியே  எழுதிக் கொண்டிருக்கிறார், பாவம்

ஹ்ம்ம்… இதுவரை, பொதுவாக — நம்முடைய பலதடவை முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்கள், எதனைப் பற்றி என்ன  சொன்னாலும் எழுதினாலும் – அது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானதாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும்தான் இருக்கும் என்றுதான் அவற்றினை அணுகியிருக்கிறேன். ஆச்சரியம், ஆச்சரியம்  – அவையும், ஒரு விதிவிலக்கு கூட இல்லாமல் இதுவரை  அப்படியேதான் இருக்கின்றன. இயற்கைக்கு நன்றி.

ஆனால் — இவரைப் புரிந்து கொள்ள முடிவதற்கு, ஒப்புக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் (= இவர் ஒரு தொழில்முறை திராவிடத் தலைவர், தொட்டில் பழக்கம் என்றிருக்கிறதே, மாபெரும் குடும்ப நலன்களைக் கவனித்துக் கொள்ளவேண்டுமே – என்பது போல) இருக்கின்றன.

ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளை – என்னால் இக்காலங்களில் புரிந்து கொள்ள முடியவேயில்லை; தாளவும்  முடியவில்லை! Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா  விமர்சனம்!

மொதல்ல ஒங்க அல்லார்க்கும் ஒரு ஸலாம் வெச்சுக்றேன்!

வணக்கம் ஸார். வணக்கம் லேடீஸ்.

பகத்சிங்க வெள்ளக்காரனுக்குப் போட்டுக்கொட்த்த, அம்பேத்கார் முதுக்ல குத்துன, பெரியார் மேல சூனியம் வெச்ச அந்த ஆரிய காந்தியப் பத்தி – மானாவாரியா, மூச்சுமுட்ட ஒரேடியா வுடாத  ஆதரிச்சிக்கினு தெனாவெட்டா எளுதிக்கினே கீராரே இந்த செயமோகன் – அவ்ரே ஒரு புது பொத்தகத்தையும் எளுதிருக்காரு. புக்கு, பாக்க கொஞ்சம் குண்டாத்தான் கீது. வெள்ளேயானேன்னிட்டு எம்மாந் தெகிர்யத்தோட,  வெள்ளக்காரனுங்க நெஞ்சத்ல கீற மஞ்சாசோத்த எடுக்றாமாரீ, நாக்கப் பிடுங்கிக்றாமாரீ எள்திருக்காரு இந்த செயமோகன்? பொத்தகத்தோட தலப்பே டாப்டக்கராத்தான் கீது.

ஆனாக்க என்க்கு மன்ஸ்ல ஒரு பெத்த கேள்வீ… அந்த குவிட் இண்டியா 1942 ஆகஷ்டு புர்ச்சி மண்ணாங்கட்டீ தெர்ப்பிள்தீ பத்தீ, இப்ப டெசம்பர்லயா – அதுவும் அத் நட்ந்த எளுவ்து வர்ஸத்துக்கு அப்றமாவா ஒரு புக்க எள்தீ  –  அத்த  2013ல  ரிலீஸ் பண்வாங்க?

… இன்னாடா இது – பிர்யவே மாட்டேங்க்து… இந்தப் பதிப்பாளனுங்க்ளையிம் தூண்ல கட்டி நல்லா ஒதிக்கணும் – பேமானிப் பசங்ளுக்கு எப்போ என்னாமாரீ புக்கு போட்டா அது விக்கும்னிட்டு தெரீயவே மாட்டேங்து… எப்படியோ வித்துட்டானுங்கன்னாலும், எளுத்தாளனுங்க ராயல்டீ கேட்டாக்க, லைப்பரி ஆர்டர் கெடக்கலேன்னிட்டு டபாய்ப்பானுங்க.   எளுத்தாலங்க அல்லாம்,  அவங்க பொண்டாட்டியோட வந்து அள்து பொரண்டுக்கினு  றொம்பொ ப்ரெஸ்ஸர் போட்டாக்க, ராயல்டீ இல்ல கவிஞ்சரே, கொஞ்சம் ரெட்லேபிள் சூப்பர்டஸ்ட் டீதான் கீதுன்னுட்டு ஒரு லோட்டா கொடுப்பானுங்க… சூடா குடிச்சிட்டு சூத்தாமட்டைய தொடச்சிக்கினு ரிட்டர்ன் ஆய்ட்ணும். அவ்ளோதான். Read the rest of this entry »

தமிழகத்து மொழிபெயர்ப்பாளர்களில் – அதுவும் பரவலாக வாசிப்பனுபவமும், பிற அனுபவங்களும் – மிக முக்கியமாக, அடிப்படை நேர்மையும் மிக்க படிப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கல்யாண்ராமன் அவர்களை மதிக்கிறேன். அவர்களின் நேர்முகம் சொல்வனம் – கல்யாணராமனுடன் ஒரு காஃபி – ஒரு நல்ல, அமைதியான, பழைய நினைவுகள் பூத்துக் குலுங்கும் நேர்காணல். (இந்தச் சுட்டி,  நண்பர் ஒருவரின் மின்னஞ்சலில் இருந்து கிடைத்தது)

சமீபத்தில் நான் படித்த நேர்காணல்களில் நன்றாக, ஆற்றொழுக்கு போல வந்திருக்கும் ஒன்று இது.

நல்ல காஃபி குடித்துக் கொண்டே உரையாடியதால்தான் இது சாத்தியமாகியிருக்கும் என்பதெண்ணம். உலகின் முதல் காஃபி, திராவிடக் காஃபியல்ல என்பதும் இன்னொரு  முக்கியமான எண்ணம்.

காஃபி நாமமும், நறுமணமும் வாழ்க, வாழ்கவே! Read the rest of this entry »

என் நண்பர் பகபகத் சிங் அவர்களின் ‘ நான் ஏன் ஆத்திகன்  ஆனேன்’ என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்வதில், உள்ளபடிக்கே மிகவும் பெருமையடைகிறேன்.

இவரை நான் பல வருடங்களாக அறிவேன்; இவர் என்னுடன் வாய்-பாடு — அதாவது 2×3=8 == ரெண்ட் மூண் வொம்போத் வகையறா – ஆனால் தேவனுக்கு நன்றியுடன் சங்கீதமாகப் பாடுவது பாடுபொருள் — கற்றுக் கொள்கிறார்; ஏப்ரல் 1, 2014 அன்று சென்னை தாக்கர் பாபா பள்ளி வளாகத்தில் எங்களுடைய முதல் வாய்பாடுக் கச்சேரி எனத் திட்டம் வைத்திருக்கிறோம்; இவர் பெயரில் உள்ளது ஆங்கில sing – தமிழ் சிங், அதாவது அசிங் (-1 அல்லது -2) அல்.

ஒரு விண்ணப்பம்: கச்சேரிக்கு அலைகடலென ஆர்பரித்துத் திரண்டு வரவும்.

அதற்குள் மறந்து விட்டீர்களானால், மறுபடியும் சொல்கிறேன் – இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழித் தலைப்பு: வை டிட் ஐ பிகம் எ தீய்ஸ்ட்? – அதாவது ஆங்கிலத்தில்: naan yen aaththigan aanen?

Read the rest of this entry »

பத்ரி சேஷாத்ரி (என நினைக்கிறேன்) அவர்களுடன் ஒரு முறை (பொதுவாக, நம் கல்லூரிகளில் அறிவியல் போதிக்கப்படும் நிலை பற்றி பல கோணங்களினூடே) பேசிக் கொண்டிருந்த போது – அவர் சொன்னார்: நம் தமிழ் சினிமாவில் யாராவது ஹீரோ அல்லது ஹீரோயின் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்றவர்களைப் பற்றிப் பேசுபவராகவோ அல்லது படிப்பவராகவோ காண்பிக்கப் பட்டால் ஒருவேளை நாம் ஆவலுடன் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்போமோ? மேலெழும்பி வருவோமோ?

சில சமயம், இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். சில நாட்கள் தூக்கமின்மையால் புரண்டு புரண்டு படுத்து, படு பயங்கரக் கனவுகள் சிலவும் கண்டிருக்கிறேன்.

மேலும் — சினிமாவிமர்சனம், சினிமாவிமர்சனமாக எழுதித்தள்ளும் மனிதர்களைக் கொஞ்சம் பொறாமையுணர்ச்சியுடனேயே பார்க்கும் நான், சில சமயம், கண் துஞ்சாது, மெய்வருத்தம் பார்க்காது சினிமாசினிமாவாகப் பார்த்து — விமர்சனமெல்லாம் உடனுக்குடன் அமர்க்களமாகச் செய்வதாகவெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அதில் ஒன்று…

 ‘எங்கும் தமிள், ஏங்கும் டமில்’

— புதிய படத்தின் ’சுடச்சுட’ விமர்சனம் Read the rest of this entry »

அத்வைத் ஆடி கார் விற்பனைக் கடையின் முதலாளி ஆடிகிங்கரர்.

கருத்துப்படம்: ஆடிகிங்கரரின் அத்வைதம்

கருத்துப்படம்: ஆடிகிங்கரரின் அத்வைதம்

இந்த ஆடிகிங்கரர் அவர்களுடைய பிரதம அடிப்பொடியின் பெயர் தான் வயாக்ராபாதர்.

வயாக்ரபாதர்

கருத்துப்படம்: வயாக்ராபாதர் (இவர் பாதங்கள்,  ப்ஃபீஸர் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த வயாக்ராவினால் உருவாக்கப்பட்டவை)

ஒரு ரகசியம்: உஷ்ஷ்ஷ்… கிட்டே வாருங்கள்; நான்  தான் இந்த வயாக்ராபாதர்.வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

இன்னொரு விஷயம்: தயவுசெய்து, இந்த கதையை நீங்கள் அத்வைதம் கண்ட ஆதிசங்கரருடனோ அல்லது வியாக்ரபாதருடனோ, குழப்பிக் கொள்ளவே கூடாது. சரியா?

இன்னொரு ரகசியம்: காலடி ஆதிசங்கரருக்கும் இந்த வியாக்ரபாதருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சமயம் தெரிவிக்கிறேன், சரியா?

-0-0-0-0-0-0-

வயாக்ராபாத புராணம்  – அதாவது, எஸ்ரா அவர்களின்  ‘ஒரிஜினல்’ கட்டுரையில் இருந்த நயாகரா எல்லாம் வயாக்ராவாக மாற்றப் பட்டு, சில சிறு மாற்றங்களுடன் உள்ளேற்றப் பட்டு – வயாக்ரா முன்னால் அல்லது பின்னால்?? – எனத் தலைப்புப் பெயர் மாற்றமும் பெற்று… …

வயாக்ரா முன்னால்
(வயாக்ராபாதர் அருளிச் செய்தது)

… ‘இரவிலே பல முறை’ என சரோஜாதேவி கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். வயாக்ரா கடையின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. Read the rest of this entry »

Very interesting guy, this Daniyal.

I chanced upon a short article in ‘Outlook’ – an otherwise execrable & shady (Indian) magazine – in the ‘waiting room / lounge’ of a local dentist – no, I was not the one with random tooth issues. ;-)

This article talked about how good this Daniyal guy is and stuff — and I got curious… (there was also a picture of him (as under) that would qualify him as a veritable ‘hunk!’)

Daniyal, who is also apparently a practising farmer (earlier avatars included being a Newyork lawyer and stuff) is good with his language, almost RK Narayan-like – in terms of telling an universal story from the particular point of view of a culture, while using a simple story line and leisurely snapshots based character development. Read the rest of this entry »

(அல்லது) டீடலஸ், இகரஸ் –  நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)

இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))

<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>

சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.

அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே  நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-(  ம்ம்ம் B-)!

ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…

என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான  தீர்வு இருந்தது.

கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.

எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது.   இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.

இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம்  என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

கடந்த நான்கு மாதங்களில் இலியட் + ஆடிஸ்ஸி காவியங்களைப் பிழிந்து, சக்கையை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்ததை, உதவியாக இருந்த புத்தக ஜாபிதாவைப் பற்றியென்று — இரண்டு பதிவுகளில் எழுதியிருந்தேன்; பாவம் அந்தப் பிள்ளைகள். (ஏன், நீங்களும் தான்!)

இதன் தொடர்ச்சியாக, இந்த டீடலஸ்+இகரஸ் (Daedalus, Icarus) கதைகளை, சென்ற பத்து நாட்களில்  – நான்கு நாட்கள் (மொத்தமாக சுமார் ஒன்றரை மணி நேரம்) என் குழந்தைகளுக்குச் சொன்னேன்.

எது எப்படியோ…

இந்த டீடலஸ், ஸிஸிபஸ் (Sisyphus) கதைகளெல்லாம் எனக்குப் பிடித்தமானவை. இதற்கு முக்கியமான காரணம், டீடலஸ் பாத்திரம் – இவன் ஒரு நல்ல பொறியியலாளன், கண்டுபிடிப்போன், கட்டமைப்போன் – என்பவை மட்டுமல்ல, அவன் மனிதனின் உட்கிடக்கையின் உன்னதங்களும் சகல கீழ்த்தரங்களும் உள்ளவனாக – ஒரு சாதாரணனாகச் சித்திரிக்கப் படுவதனாலும்தான் எனக் கருதுகிறேன்.

<–/-0-0-0-0- குறிப்பு #1 -0-0-0-0-\–>

கொஞ்சம் அதிகமாகவே  சுருக்கமாக இந்த டீடலஸ், இகரஸ் (கிரேக்க) கர்ண பரம்பரைக் கதைகளை – அவற்றின் ஒருவிதமான கதையாக்கத்தைக் கொடுக்கிறேன்: Read the rest of this entry »

ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்   படித்தீர்களா? (அதில் ஒரு விஷயம் எழுத மறந்துவிட்டேன் – அந்தப் பேச்சுகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன – அதாவது குறுந்தொகை + புறநானூறு குறிப்புகளைத் தவிர)

எனக்குத் தெரிந்து, மேற்கண்ட குறிப்புகளைப்  பார்த்த படித்த  இரண்டே பேர்களில் ஒருவர் எனக்கு உதவியாக இருந்த புத்தகங்களின் ஜாபிதாவைக் கேட்டிருக்கிறார். ஆக, அதனைக் கீழே கொடுக்கிறேன்; எனக்கு எப்போதுமே, ‘யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்’ தான். ;-) Read the rest of this entry »

இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கி செப்டெம்பர் 20 வரை, பெரும்பாலான தினங்களில் (=ஏறக்குறைய 55 நாட்கள்), காலை நேரக் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் 20-22 நிமிடங்கள் (மொத்தமாகச் சுமார் 1100 நிமிடங்கள் – குறைந்த பட்சம் 18 மணி நேரங்கள்) ஹோமர்-ன் இந்த இதிஹாசங்களை – Iliad + Odyssey – ஒரு கதை (பேருரையல்ல. மன்னிக்கவும்) போலச் சொல்லியிருக்கிறேன்.

என்னுடன் வேலை செய்யும் பாவப்பட்ட சகஆசிரியர்களும், பரிதாபத்துக்குரிய 7-10 வகுப்பு மாணவர்களும் தான் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். பாவம், அவர்கள் அபாக்கியவான்கள். பரலோக ராஜ்ஜியம்  நிச்சயம்  அவர்களுடையதில்லை. Read the rest of this entry »

முதலில், சில பத்திகள் – புத்தகச் சந்தை பற்றி… பின்னர் ‘கவிஞர்’ கதை.

இன்று பகல்நேரத்தில் எனக்குச் சுளையாக நான்கு மணி நேர அவகாசம் கிடைத்ததால், ஆங்க்லோ-ஃப்ரெஞ்ச் நெசவாலைத் திடலில் புதுச்சேரி அரசு நடத்திக் கொண்டிருக்கும்  புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தேன்; சிறிய அளவில் சுமார் 80த்திச் சொச்சம் கடைகளே விரிக்கப் பட்டிருந்தாலும் – அதன் மேலாண்மை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. (வழக்கம்போல, குடி நீர், கழிப்பறை வசதிகளெல்லாம், சந்தைக்குச் செல்பவர்களையே விடுங்கள் – சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களுக்குக் கூட பரிதாபமான கட்டுமானங்கள் தான்; இதைத் திருத்த பலபத்தாண்டுகளாகும் எனத்தான் நினைக்கிறேன்.)

வாங்கும் புத்தகங்களுக்கு 25% கழிவு; நுகர்வோர் ரொக்க ரசீதுகள் அனைத்தும் புதுச்சேரி அரசின் கலை-பண்பாட்டுத்துறை கொடுத்திருக்கும் பில்-புத்தகங்களில் போடப்பட்டன. அரசு இந்தக் கழிவில் 15%த்தை கடைக் காரர்களுக்குத் திரும்பிக் கொடுத்துவிடுமாம். ஆக – புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஏகக் கெடுபிடி. வெளிவாசலில் – பில்களையும் புத்தகங்களையும் மாய்ந்து மாய்ந்து சரிபார்த்து ஒவ்வொன்றிலும் ‘15% DISCOUNT – NOT FOR RESALE’ என ரப்பர்ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார்கள். ஏனென்று கேட்டால் சில கடைக்காரர்கள் அரசு கொடுக்கும் தள்ளுபடியைக் கயமையாகக் ‘கறக்க’ மறுபடியும் மறுபடியும் புத்தகங்களையும், பில்களையும் மறு சுழற்சி செய்தவண்ணம் இருந்ததால் தான் என்றார்கள்.

என்னவாக இருந்தாலும் நாம் வாங்கும் புத்தகங்களிலெல்லாம் இப்படி அச்சடித்துக் கொடுத்தது ‘இந்த டம்ப்ளர் வசந்தாபவனிலிருந்து திருடியது’ என வசந்தாபவன் காரர்களே அவர்கள் டம்ப்ளர்களில் பொறித்துக் கொள்வது போல, கொஞ்சம் அசிங்கமாகவே இருந்தது, என்ன செய்ய… Read the rest of this entry »

முதல் விதி: சிரியா திரும்.

முதற்கண் — சுஜாதாத்தனமாக, மெலிதாக முறுவலிட்டுக் கொண்டு, சிறியதாகச் சிரித்துக் கொண்டிருப்பவள் சிரியி, அப்படிச் செய்யாதவள் சிரியா — என்பதறிக.

பயப்படாதீர்கள். இவள் செந்தமிழ்ச் செல்வி, செம்மொழிச் செவ்வி நடிகை சிரேயா அவர்களின அத்தை பெண் தான்.

இந்தச் சிரேயா அவர்களே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ்மொழி செம்மொழி மாநாடு கண்ட கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆசி பெற்றவர்தான்.

இந்தப் பெண் சிரியா, பாவம் — நம்மூர் பாண்டி நன்னாட்டில், அதாவது பாண்டிச்சேரியில் – ஏதோ, கண்ணைக் கட்டிக் கொண்டு, சகதோழிகளுடன் ஏரோப்ளேன் பாண்டியாட்டம் ஆடிக்கொண்டே போனபோது –  விளையாட்டு சுவாரசியத்தில் துருக்கிக்கும், இராக்கிற்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடையே உள்ள சிறிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டுவிட்டது நமக்கெல்லாம் தெரிந்ததே…

இந்தப் பெண்ணை மீட்கத்தான் நாமெல்லாம் வலைப்பூக்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவெல்லாம் போராளித்தனமாகப் போராடி  வருகிறோம், தெரிந்ததா?

ஹ்ம்ம்ம்… எப்படியாவது இந்தப் பெண்ணை மீட்டு, ஏதாவது ஒரு  தமிழ்ப் படத்திலாவது நடிக்கவைத்து விடவேண்டும்…

<T_’Vijaya’_Rajendher> சின்னக்கிளி சிரியா, இப்ப நீ பிரியா? அப்போ இங்க வர்ரியா? நாஞ் சொல்றது சரியா?? </T_’Vijaya’_Rajendher> Read the rest of this entry »

… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.  அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு  ஒன்றுதானே!

எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு  நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!

… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே!  ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான்எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.

Read the rest of this entry »

(அல்லது)  “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?”

ஆ! க ம் ப ன். % ^ # @ ! *&   சும்பன்.

கம்பன் அப்படி என்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?

சரி. ஒப்புக் கொள்கிறேன். அவன் ஒன்றும் பெரியதாகச் செய்து கிழித்து விடவில்லைதான். நானும் கம்பராமாயணம் முழுக்கவெல்லாம் படித்துக கரைத்துக் குடித்தவனில்லை – ஆகவே என் அரைகுறைப் படிப்பு தந்த அதிகாரத்தில், அற்பகுஷியில், நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

என்ன பெரியதாகப் புடுங்கி  விட்டான் இந்தக் கொம்பன்? நேரடித் தன்மையும், புதிய பைந்தமிழ்ச் சொல்லாடல்களும் ( = ’ஜிங்குச்சான்’) கொண்டு வீரிட்டெழும் நம் திரைப்படப் பாடல் எழுத்தாளர்களின் வீரியத்துக்கும், ஆழத்துக்கும் வீச்சுக்கும் எதிரில் –  இந்தக் கம்பன் எம்மாத்திரம்!

நம்மவர்கள் அடலேறுகள் போல் ஆர்பரித்து முன்னேறிச் சென்றால் – அவன் வீட்டிலிருந்து கட்டுத்தெறிக்க, விதிர்விதிர்த்து, தட்டுத்தடுமாறி ஓட விட மாட்டானா?

கட்டுத் தறியாவது, கவி பாடுவதாவது, காட்டுக்கோழிக் கறியாவது! ஆழி சூழ் உலகாம் – அண்டப் புளுகாம்…

இதெல்லாம் இன்னாடா? ரொம்ப ஊத்திக்கினு மானாவாரியா கத வுட்ரயே கம்பா!

வொங்க வூரு டாஸ்மாக்கு சரக்கு எப்டீ? மப்பு சுர்ருன்னு ஏறுமோ?? Read the rest of this entry »

coyote’s perspective

March 27, 2013

“What’s your view of things, Coyote?”

“Well, it mostly depends on how I’m looking at them, I guess. The angle of perception is important too, of course. And whether or not of open or closed eyes and mind.

“All in all, I’d say I tend to view things thru my crystal, Much more clarity there, and it tends to filter-out misconceptions, too.”

“You know what, Coyote? You talk too damned much!”

“Yes, I agree. And you, Asshole, ask too many questions.”

(From  – Elderberry Flute Song Contemporary Coyote Tales. Peter Blue Cloud is one of the finest native american story tellers and poets)

JournalEntry: 13th June, 2006.