இதன் முதல் பாகத்தில் (= நான் நாளொருபாகன், வேறொன்றுமில்லை) கீழ்கண்ட மூன்று விஷயங்கள் பற்றி எழுதப் பட்டன:

  • ஏன் நீங்கள்,  சென்னை புத்தகச் சந்தை தொடங்குவதற்கு முன்னால், என் புத்தகங்களில் ஒன்றையாவது  எரித்தேயாகவேண்டும்
  • எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரைதாங்கி வெளிவரும் ‘“உபபெருங்காயணம்” – சமையற்கலை நூல் பற்றிய குறிப்புகள்
  • சாரு நிவேதிதா அவர்களின் முன்னுரைகொண்டு வெளிவரும் – “பழைய இம்மைக்ரன்ட்” – புதினம் பற்றிய குறிப்புகள்

முதல் பாகம்.  இந்த இரண்டாம் பாகத்தில் –  என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன், ஆஇராவேங்கடாசலபதி, யுவகிருஷ்ணா, வா மணிகண்டன், மருதன் ஆகியோரின் முன்னுரையோடு வெளிவர இருக்கும் மீதமிருக்கும் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரங்கள்… உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

ஆனால் மன்னிக்கவும். இந்த வருடம் கவிதைத் தொகுப்போ, சினிமா விமர்சனத் தொகுப்போ வெளியிடவில்லை.  என்னைப் போன்ற க்ரியாசக்தி ஊறிப்பொங்கும் ஒரு திராவிடப் படைப்பாளிக்கு இம்மாதிரி நிலை, மகத்தான வெட்கம் தரும் விஷயம்தான் – ஆனாலும், கவிதை, சினிமாவிமர்சனத் தொகுப்புகளையாவது – இவற்றை மட்டுமாவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் எனப் பெரியமனதுடன் நினைக்கிறேன். ஆகவே மற்றவர்களின் கழுதைத் தொகுப்பு எதையாவது வாங்கிப் படித்தோ படிக்காமலேயோ, மகிழ்ச்சியாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாகவும். Read the rest of this entry »

தயவு செய்து…

உங்களிடம் கண்ணீர் மல்க மன்றாடி, நெஞ்சு விம்ம, மூக்குச்சளி ஒழுக, நெடுஞ்சாண் கிடையாக உங்கள் காலடியில் விழுந்து, நிபந்தனையற்றுச் சரணாகதியடைந்து கேட்டுக் கொள்கிறேன் –  நம் தமிழகத்துக்காக, பாவப்பட்ட சகதமிழ் வாசகர்களின் மன நிம்மதிக்காக, இதைக்  கூடவா உங்களால் செய்ய முடியாது? :-(

… ஏனெனில், அவர்கள் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு, காணொலியைப் பார்த்துவிட்டு எம்மாதிரி கந்தறகோள தத்துப்பித்துவ மலச்சிக்கல் கவிதையையும், மகாகோர மனிதச்சிங்கநேயக் கட்டுரையையும் ஊசிப்போன உப்புமாப் பிண்டங்களாக, முறையே, முறையாக, ஒரு வரைமுறையே இல்லாமல் அநியாயத்துக்குக் கிண்டி – நம் மாசிலா நற்றமிழ்த் தாயின் உயிரை – முறையே மாறுகவிதை, மாறுகட்டுரை வாங்கி ஒருவழி  செய்துவிடுவார்களோ என்பதை நினைத்துப் பார்த்தாலே கதி கலங்குகிறது… :-(((

அம்மணிகளே, அய்யாமார்களே!  தயவுகூர்ந்து, புரிந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »

கொட்டை (அல்லது) விடுதலைப்புளி
(ஆக்கம்:பெண்ணியக் கவிமாமணி  ராக்ஷசபுத்திரி)
டொன்மைமிகு டொல்காப்பியப் பூங்காவில்
மரத்தின் கீழ் விழுந்த புளியம்பழத்தை
மனுஷ்யபுத்திரன் ஒருவன்
பிய்த்துச் சாப்பிட்டுவிட்டான்.
பிராண்டிப் பிய்ப்பதற்கு முன்
நீ பிரெண்டா இல்லையா என
பத்து நிமிடம் கத்திக் கொண்டே
உற்றுப் பார்த்துக்கொண்டு அதனை
அன்ஃப்ரெண்ட் செய்தான்
கருத்துப் படம்: முன் நவீனத்துவ புளியம்பழமும், பின் நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: மயிர்மை என அறியப்படும் ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றிகள் பல!)

கருத்துப் படம்: முன்நவீனத்துவ புளியம்பழமும், பின்நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றி பல!)

வழுக்கி விழுந்துகொண்டிருக்கும்
புளியம் பழத்தை பின் வழித்தெடுத்து அதன்
தத்துப் பித்துவார்த்த பிரச்சினையை
நீர்க்கச் செய்து புளியோதரை செய்யலாமா
என எண்ண வேண்டியிருந்தது அவனுக்கு Read the rest of this entry »

இது ஐந்தாம் பதிவு, இந்த வரிசையில். முதல் நான்கு பதிவுகள்: 1) “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” 22/08/2014   2)  !நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி) 23/08/2014 3) [ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள் 26/08/2014  4) நிசப்த அறச்சீற்றமும் ஒத்திசையாத பதில் சீற்றமும் | பிஎஸ்வீரப்பா(“சபாஷ், சரியான போட்டி!”) 30/08/2014

அடுத்த பதிவுதான் இந்த வரிசையில் கடைசியாக இருக்கும் – என்னவோ இந்த எதிர்வினை ஹனுமார் வால்போல நீண்டுகொண்டே போகிறதே! ;-)

… ஆம்… விடாது நிசப்தக் கருப்பு… :-(  ‘அங்க என்னம்மா சத்தம்?’  அலசல்(! – தேவையா??) தொடர்கிறது, பாவம் நீங்கள்.

எழுத்தாளர் இப்படித் தொடர்கிறார்:

” [ஸத்தாம் ஹுஸ்ஸெய்னை] கொன்றால் தொலையட்டும். ஒரு ஸ்திரமான அரசு அமைய உதவியதா? எந்தக் காலத்திலும் அதைச் செய்ய மாட்டார்கள். ஈராக் கதறிக் கொண்டேயிருப்பதுதான் அமெரிக்காவுக்கு நல்லது. இப்பொழுது அங்கே என்ன நடக்கிறது என்பதைத்தான் பார்க்கிறோமே.”

எழுத்தாளர்வாள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார் என்பதை என்னால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடிந்துவிட்டது – அதாவது, மேலோட்டமாகச் செய்திகளை மேய்ந்து சல்லீசாக ‘நாம்’ எல்லாம் போட்டு, அவருடைய அறியாமைக் கும்பலில், தன் லைக்கடிச்சான் குஞ்சப்ப-வாசகர்கள் அனைவரையும் சேர்க்கிறார்! (அய்யய்யோ, என்னையுமேதான்! அடக்கடவுளே!!)

Read the rest of this entry »

…. ‘தாங்கவே முடியவில்லை,’ தொடர்கிறது!

சலபதிஅவர்களுடைய மண்வெட்டிதாச ஆராய்ச்சியையும் வரலாற்றாசிரியத்தனத்தையும் அன்னாருடைய ஆய்வுப் புத்தகங்களோடு, கட்டுரைக் கதையடித்தல்களோடு நிறுத்திக் கொண்டிருந்தால், அவருக்கு ஒரு கால்கோள் விழாவினையே நடத்தியிருப்பேன்! ஆனால், அவர்… :-(

-0-0-0-0-0-0-0-0-0-0-

பொதுவாக தம்மை இப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொள்கிறார் இவர்:  “A.R. Venkatachalapathy is a historian and Tamil writer. chalapathy(at)mids(dot)ac(dot)in”; மேலதிகமாக, சில சமயங்களில் இவர்  “social historian” எனவும் “literary historian” எனவும் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.

இதில் என்னுடைய சிறு பிரச்சினை என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை ‘சலபதி’ ஒரு வரலாற்றாளரோ வேறு ஏதாவது ஆய்வாளரோ அல்லர். ஆனால், அவர் தன்னை அப்படி அழைத்துக்கொள்ள சர்வநிச்சயமாக அவருக்கு உரிமை இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன்.

அதாவது  நான் அடுத்தவருடம் இரு நொபெல் பரிசுகளையும் (இயற்பியல்+இலக்கியம் மற்றவைகளைப் போனால் போகிறது என்று விட்டுவிடுகிறேன்!) ஒரு மேன் புக்கர் பரிசையும் ஒரு நொக்கர் விருதையும் ஒரு பீல்ட்ஸ் விருதையும்  ஒரேசமயத்தில் வாங்கப் போகும் அளவுக்கு ஆழமும் வீச்சும் வல்லமையும் பராக்கிரமும் மிக்கவன் என்ற என்னுடைய சொந்த, வீங்கிய கருத்தை, பரிதாபத்துக்குரிய   நீங்களும் ஒப்புக் கொள்ளமுடியுமென்றால்

இன்டெர்நெட்டில் இருந்து ஒரு விஷயத்தைப் பிடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமா என்ன? இதெல்லாம் என்ன எழவெடுத்த ஆய்வு? இதற்கு என்ன எழவு DISCOVERY??இதற்கு ஒரு 'த ஹிந்து' தினசரியின் பெத்த செய்தி வேறு!

இன்டெர்நெட்டில் இருந்து ஒரு விஷயத்தைப் பிடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமா என்ன? இதெல்லாம் என்ன எழவெடுத்த ஆய்வு? இதற்கு என்ன எழவு DISCOVERY?? இதற்கு ஒரு ‘த ஹிந்து’ தினசரியின் பெத்த செய்தி வேறு! http://www.thehindu.com/2005/12/23/stories/2005122302411300.htm

Read the rest of this entry »

ஆ இரா ‘சலபதி’ வெங்கடாசலபதி, ஸ்ரீ வெங்கடேஸம் மனஸா ஸ்மராமி…

Screenshot from 2014-08-08 14:28:51இன்றுதான்  ‘சலபதி’ அவர்கள் நாளைய  ‘தமிழ் ஹிந்து’ தினசரியில் எழுதிய ராமானுஜன் பற்றிய கட்டுரையைப் படித்தேன். இன்புற்றேன்.

இதன் ஒரு பகுதியை உங்களுக்கு  அவசரம்அவசரமாக, தப்பும்தவறுமாக ‘இந்திய இணைய வரலாற்றிலேயே முதல்முறையாக டட்டடா டட்டடாவாக அளிப்பதில்’  பெருமையடைகிறேன்: எனக்கு எப்போதுமே  ‘யாம் பெற்ற அக்கப்போரு பெறுக இவ்வையகம்’தான். Read the rest of this entry »

புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?) எனும் முந்தைய பதிவிற்குப் பின் கீழே (அல்லது மேலே) படித்தால் நலம்.

-0-0-0-0-0-0-0-0-

குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் சந்தன புத்தர்

மந்தஹாசப் புன்னகையுடன் குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் பர்மாக்கார சந்தன புத்தர் – அவருடைய இடது காது மடலின் கீழ்ப்பகுதி கீழ் நோக்கி இருக்கவேண்டுமோ? (இங்கிருந்து)

… இந்த மாதிரி,  புத்தகங்களை நான் சேமித்து வைத்துக்கொள்ளக் கூடாது, தேடித்தேடி வாங்கி பெரும்பாலும் ரசிக்கப் பட்டவையாக இருந்தாலும், அவற்றைப் போர்த்திப் போர்த்தி  என்னிடமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடாது, அது சரியான தர்மமல்ல – புத்தகங்கள் தங்களைப் படிப்பவர்களுக்காகவே காத்திருக்கின்றன – ஆகவே, முடிந்தவைகளையெல்லாம் தானமாகத் தந்துவிடவேண்டும் என்பதற்கும் பல காரணங்கள்: Read the rest of this entry »

புத்தகாயண சூத்திரம்(*) – பாகம் 1

… சுமார் ஐந்து வயதிலிருந்து பலவகையான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாலும், சுமார் 35 வருடங்களாகத்தான் நான் புத்தகங்களை சொந்தப் பைசாவைக் கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும், பல நூலகங்களிலிருந்தும் கடன்வாங்கிப் பல அழகான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன் – முக்கியமாக சென்னையில் இன்றும் உள்ள, பழவந்தாங்கல் வட்டார, இந்தியத் தொழில்நுட்பக் கழக, சென்னை மாவட்ட மத்திய (=தேவனேயப் பாவாணர்), கன்னிமரா, சென்னை பல்கலைக்கழக, ஏலூர் (பெங்களூர்+சென்னை) போன்ற நூலகங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

இதைத் தவிர பல ஊர்களின் பல பழைய புத்தகக் கடைகளிலும் – பெங்களூர், லக்னோ, கொல்கொத்தா, தில்லி, நாக்பூர்  என, சில பிற நாடுகளிலும் – மயிலாப்பூர்  தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆழ்வார் கடை உட்பட — எண்ணற்ற மணி நேரங்களை முதலீடு செய்திருக்கிறேன்.

… பலவிதமான அற்புத அனுபவங்களில், அண்டவெளிகளில் இப்புத்தகப் பக்கங்களினூடே சஞ்சரித்திருக்கிறேன். கனவா நனவா எனத் தெரியாத எண்ணப் பரப்புகளில் நீந்தியிருக்கிறேன். இத்தனைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமேதான் என்னுடைய பெரும்பாலான படிப்புகள்/புரிதல்கள். மற்றமொழிகளில், நான் ஒரு நிரக்ஷரகுக்ஷிதான். :-(

இத்தனைக்கும், என்னுடைய தற்கால நிலைமையான – ஸம்ஸ்க்ருதத்தை, க்ரேக்கத்தை எழுத்துகூட்டி வாசித்துப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்து கொள்வதிலிருந்து நான் வெகுவாக முன்னேறியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை – இதற்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம், மரியாதைக்குரிய ஆசான்கள்/குருக்கள் கிடைப்பது (கிடைத்தாலும்கூட அவர்களைக் கண்டுகொண்டு காலடியில் படிப்பது) எனக்கு அரிதாகிவிட்டிருக்கிறது;  இந்த நிலைமையின் முக்கிய காரணங்களில், என் அகங்காரம் வகிக்கும் பங்கு அதிகம். ஆனாலும், குருவே வேண்டாமென்றாலும்கூட, இன்னொரு முக்கியமான முட்டுச் சந்துக் காரணம்  – என்னுடைய நேர மேலாண்மையின்மை. (பாருங்கள், இப்படியே எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நான் விழையும் மற்றகாரியங்களின் மேல் கவனம் கொள்ளலாம் அல்லவா? வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா??) Read the rest of this entry »

ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்; அதுவும், தினசரி குறிப்பிட்ட வேளைகளில், பலவந்தமாகப்  பாலியல் பலாகாரம் செய்தால் கிடைக்கக்கூடிய பலான   பலன்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.

இது அக்கப்போர் அல்ல. இதனை இன்னொரு முறை அடிக்கோடிட்டுக் கொள்ளவும். Read the rest of this entry »

(அல்லது) டக்ளஸ் ஹோஃப்ஸ்டேட்டர்: கெடல், எஷர், பாஹ்: ஒரு முடிவற்ற தங்கப் பின்னல்

1977லேயே வெளிவந்திருந்தாலும், இதனை நான் முதலில் படித்தது 1982ல்தான் என நினைவு. என்னுடைய கல்லூரி நூலகத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது அகஸ்மாத்தாகக் கிடைத்த பொக்கிஷம்; உலகமே அற்புதமாகிவிட்டது எனக்கு! 5 நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து, நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டு படித்து முடித்தேன். படிக்கப் படிக்க பிரமிப்பு. இப்படியெல்லாம் கூட புத்தகங்களை எழுதமுடியுமா என்று. படித்து விட்டு சுமார் மூன்று நாட்கள் தொடர்ந்து சொக்கிப்போய் இதனைப் பற்றியேதான் பேச்சு, மூச்சு எல்லாம். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் – இரண்டு பாவப்பட்ட  பேராசிரியர்கள் உட்பட – ஒரேயடியாக அதன் புகழ்தான்! அந்தக் காலத்தில், கல்லூரி விடுதியில் என் மாடியில் இருந்த என் சகமாணவர்கள் என்னைப் பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓட ஆரம்பித்து விடுவார்கள் – பாவம். :-)

இந்த கிறங்கல் கலைந்து சமன நிலைக்கு வர, எனக்குக் கொஞ்ச நாட்களாகியது. ஐந்து முறைக்கும் மேலாக இந்த நூலகக்கடன் புத்தகத்தை துணைநூலகருடன் சண்டைபோட்டு நீட்டிப்பு செய்து (ஒவ்வொரு முறையும் 14 நாட்கள்) – கடைசியில் வேறு வழியேயில்லாமல், திருப்தியேயில்லாமல், வேண்டாவெறுப்பாகத் திருப்பிக் கொடுத்தேன். Read the rest of this entry »

பயிர் வட்டங்கள் என்று உடும்புத்தைலவாதிகளால் அழைக்கப்படும் ‘crop circles’ளின் உள்ளே பயிர் இருக்காது. இதைப் பயிரற்ற வட்டங்கள் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் வெள்ளைக்கார முட்டாள்கள் இவற்றை இப்படித்தான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களை வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு – இந்தியாவில் ஒரு எழவு ‘பயிர் வட்டமு’ம் இல்லாத போதிலும் பயிர் வட்டம் பற்றி கப்ஸாக்களை,  படு ஸீரியஸாக விடுகிறோம். இம்மாதிரி விஷயங்களைப் பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்!

ஆனால் — அதேபோல மயிர் வட்டங்கள் என்பவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துதெளிந்தோமில்லை! இவை பெரும்பாலும் வயதான ஆண்களின் உச்சந்தலைக்கும் பிடரிக்கும் நடுவில் திடுக்கிடும் வகையில், புரிந்துகொள்ளவே முடியாத வகையில், திகைக்கவைத்து விக்கித்துப் போக உதிக்கும் தலைமயிரில்லாத பகுதிகள் –  அதாவது, இதனைப் படிக்கும் நீங்கள் ஆணாக இருந்து – உங்கள் வயது 45க்கு மேலான பட்சத்தில், உங்கள் பின்னந்தலையை யோசிப்பது போல் தடவிப் பார்த்தால் கொஞ்சம் வழுக்கும் பகுதிகள்தாம் இவை; ஆனால், ஒரு ஆணுக்கு ஒன்று என்று மட்டுமே, அம்மா இலவச வழுக்கைத் திட்டத்தின்படி அளிக்கப்படுவது இது. ஆகவே ஒன்று வாங்கினால் இன்னொன்றும் ஃப்ரீ எனக் கிடந்து ஞமலிபோல அலையவேண்டாம்.  மேலும், உங்கள் மண்டையில் ஒரு ஓளி வட்டத்திற்குத்தான் இடம். இன்னொன்று வந்தால்,  கொஞ்சம் – ரிஃப்லெக்டர் என்பதற்குப் பதிலாக இரு ஹெட் லைட்டுகள் போலக் கண்றாவியாகக் காட்சியளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் பின்னால் அணிதிரண்டு ஆர்பரித்து வருபவர்கள் – கெக்கலி கொட்டிக் கண்கூசச் சிரிப்பார்கள் என்பதை உணரவும். Read the rest of this entry »

நெடுநாட்களாக, குறிப்பாக 2011லேயே இணையத்தில் பிரபலமாக இருந்த நான், ஒத்திசைவு இணையதளம் மூலமாக எழுதவந்து மேலும் உலகப் புகழ் பெறுவதற்கு முன்பிலிருந்தே – ஒரு வாசகர் குழு ஆரம்பித்து என் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்று என்னுடைய தேர்ந்த வாசகர்கள் கருதி எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  எனக்கு இந்த விஷயம் எல்லாம் ஒத்துவராது என்று கருதினாலும், கடந்த மூன்று வருடங்களாக அவர்களே கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், க்ரேக்க மொழி உட்பட நான் எழுதியுள்ள கட்டுரைகளை அலசுகிறார்கள். நான் எழுதியுள்ள பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். படுத்துகிறார்கள். என்னுடைய செல்லமான களைஞர் அவர்களைக் களைந்து வேகவைக்கிறார்கள்.  ஐன்ஷ்டீன் சொன்னவற்றை நான் சொன்னதுபோல, இசையில் விற்பன்னன், ஞானாசிரியன் போலவெல்லாம் எழுதுகிறார்கள் – எனக்கு இதில் பிரச்சினையில்லை – ஏதோ தமிழர்களுக்கு ஞானம் வளர்ந்து, சார்பு நிலைத் தத்துவம், இசை பற்றியெல்லாம் புரிதல்கள் ஏற்பட்டால் சரி! தமிழனுக்கு ஏதோ என்னாலான உபகாரம்.

இதுதொடர்பான அப்போதைய பிரச்சினையென்னவென்றால்,  என் வாசகர்கள் குழுவிற்கு ஒரு லோகோ, ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டுமாக இருந்தது.  வாசகர் வட்டம் என்றால் தட்டையாகவும், சகல பக்கங்களிலும் மொண்ணையாகவும் இருக்கும்; பிடிபடாமல் வழுக்கிக் கொண்டேயிருக்கும். வாசகர் சதுரம் என்றாலும் தட்டை; பட்டம் தறிகெட்டுப் பறப்பது போன்ற தோற்றம். இவை இரண்டும் முப்பரிமாணமற்றவை.  குழுமம் என்று சொன்னால் – ஏதோ கேப்பங்கூழினை  ‘மம்மம்’ என்று சொல்லி குழந்தைகளுக்குத் தாய்மார்கள் ஊட்டிவிடுவது போன்ற வழவழா கொழகொழா தோற்றம். ஒரே பிரச்சினை!  எனக்கு, பெயருக்கு அப்பால் –  நான் எழுதிஎழுதி,  லோகத்துக்கு அருள் பாலிக்கும் திறனையும் அந்த பெயரும், லோகோவும் வெளிக்கொணர வேண்டும். பரந்துபட்ட எம் தமிழ் மக்களுக்கு, எளிதாகவும் பிடிபடவேண்டும்.  ஆக, யோசித்து, யோசித்து…

… இப்படி, என்னுடைய வாசகர்களே ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்துக் கொண்டு நடத்தும் குழுவை  ‘ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்  நற்பணி இயக்கம்’ எனப் பெயர் சூட்டினார்கள், சூட்டிகையான சூடிக் கெடுத்த சுடற்கேடிகள்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; 20 பக்கங்கள் - முப்பது விளிம்புகள் - 20 கூர்முனைகள்; இது சாதா வட்டம், சதுரம், குழுமம் போன்றதல்லை. இது ஒரு முக்கியமான ப்லேடோனிக் திடமம். இதற்குள்ளே நான் உறைந்திருப்பேன், பல பக்கங்களையும், குத்தும் கூர்மையையும், விளிம்பு நிலை மனிதத்துவங்களையும் உள்ளடக்கி, உலகத்தை ரெமிமார்ட்டினூடே பார்த்து, கொழுப்பெடுத்துக் கொழுப்புகள் பலவகை உண்டு, தொப்பை மிகுந்து விக்கல்களையும் ஏப்பங்களையும் இன்னபிற வாயுத்தொல்லைகளையும் பகிர்ந்துகொள்வதே குறிக்கோள்.  இணைவதற்கு / மேலதிக விவரங்களுக்கு அணுகவும்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; லோகோ!

Read the rest of this entry »

நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.

இதன் ‘ஒருமாதிரியான’ பொழிப்புரை: ஒரு மலர் அழகாக இருந்தாலும் அதற்கு நறுமணம்  இல்லையென்றால் அது அளிக்கும் ஏமாற்றத்தைப் போல, நீச்சல் தெரியாதவன் படுதைரியமாக ஆழ்நீரில் இறங்கும் சோகத்தைப் போல – ஒரு எழவும் புரிந்துகொள்ள முடியாதவர்களைக் கேள்வி கேட்பதாலும்,  அரைகுறைச் சிறியார்களின் மேல் கோபம் கொள்ளுதலினாலும் ஒரு மசுத்துக்கும்  பிரயோஜனம் இல்லை!  :-(

ஆயிரம்  முறை எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பேன் இந்த இன்னா37ஐ; இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எனக்குப் படித்துப் படித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் –  இருந்தாலும், இந்த அணுக்கருவுலை பற்றிய துறையறியாமல் பொய்மையில் அமிழ்ந்து போகும் அறியார்களையும் (=பொதுவாக நாம்) சிறியார்களையும் (= எஸ்ராமகிருஷ்ண-சுந்தர்ராஜனாதிகள், உதயகுமாரர்கள் இன்னபிறர்) கண்டால் பொறுக்கவே மாட்டேனென்கிறது, என்ன செய்ய…   :-(  Read the rest of this entry »

என்னுடைய மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும் ஓத்திசைவின் தொழில்முறை பின்னூட்டக்காரருமான சரவணன் அவர்கள் அண்மையில் நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:

ஒன்றைக் கவனித்தீர்களா? பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைவிட திராவிட இயக்கத்திடம் நிச்சயம் சிந்தனை, அறிவியக்க செயல்பாடுகள் அதிகம். பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ் பற்றி, ஜெயமோகன் சொல்வதைப் பார்ப்போமா?

**** இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது *********

இந்தக் கேவலத்துக்கு திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள் ஆயிரம் பங்கு மேல்!! பிராமண மேட்டிமைவாதத்தை முன்வைப்பதை விட பிறப்பால் அனைவரும் சமம் என்பதைக் கருத்தளவிலாவது ஒப்புக்கொண்டு, அதை நோக்கி சிறிய முயற்சிகளையாவது செய்தவர்கள் மேலானவர்கள் அல்லவா?

… ஹ்ம்ம்… முக்கால்வாசி, நீங்கள் எந்தக் குறிக்கோளுடன் இந்தப் பின்னூட்டத்தை எழுத முற்பட்டீர்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லைதான் என நினைக்கிறேன்; ஆனால், நான் புரிந்துகொண்டவகையில் இதற்கு பதில் அளிக்கிறேன். Read the rest of this entry »

(அல்லது) பாமோலின் கவரால்…

பாமாயில் (PalmOil) என்ற பெயரை வக்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்.

அடச் சட்… :-(

நான் எழுத வந்தது:   ‘கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்‘ என்றவொரு மகாமகோ படுபயங்கர பயபீதியளிக்கும்,  திடுக்கிடவைத்துத் தூக்கிவாரிப்போடும்  தகவலுடன் ஆரம்பிக்கும் ‘கோகோலின் பெயரால்’  எனும் தலைப்புடைய மிக முக்கியமான கட்டுரையைப் பற்றித்தான். :-((

சரி. பெயரைப் பெயரிடுவார்கள் – ஆகவே,  மயிரை மயிரிடுவார்கள் எனும் அடிப்படைப்  புரிதலுடன் ஆரம்பிக்கத்தான் நினைக்கிறேன். :-((( இருந்தாலும் அழுகைஅழுகையாக வருகிறது. Read the rest of this entry »

(அல்லது) அய்யய்யோ அணுசக்தி! நெஞ்சு பொறுக்குதில்லையே…

நான் மரபுசாரா, மறுசுழற்சி செய்யக்கூடிய எரிபொருள்களினுடைய, தொழில் நுட்பங்களுடைய மகாமகோவிசிறிதான். பல பத்தாண்டுகளுக்கு முன்னால் வீட்டிலேயே தாமிரத் தகடுகளை வைத்து, மெலிதாக ஆக்ஸிடேஷன் செய்து அவற்றை உபயோகப் படுத்தி சூரியசக்தியை மின்சாரமாக (இது, ஏறக்குறைய – பிவி – ஃபோட்டோவால்டாய்க் தொழில்நுட்ப வழிமுறை போலவேதான் – ஆனால் ஸிலிகனை உபயோகிக்கவில்லை) மாற்றி உபயோகித்திருப்பவன். என்னுடைய ஜீப்பினை டீஸலுக்குப் பதிலாக புங்கமரக்கொட்டை எண்ணையை உபயோகித்து வேதியியல் மாற்றம் செய்து  (அதற்காக எஞ்சினை மாற்றியமைத்து) கொஞ்ச நாள் ஓட்டி, பல படிப்பினைகள் (=பல குளறுபடிகள், எஞ்சின் கெட்டுப்போதல்கள் + சில ‘வெற்றிகள்’) பெற்றவன். காற்றாடி டர்பைன்களுடன் பரிச்சயம் உள்ளவன். சாணஎரிவாயு தயாரிப்பு செய்து அதில் மோட்டார் வண்டியை ஓட்ட முயன்று மகத்தான தோல்வி கண்டவன்; மனித மலத்தை (=என் மலம்) கம்போஸ்ட் செய்து மட்கவைத்து அதனையும் உபயோகித்து மேல்மாடியில் காய்கறித் தோட்டம் போடுதல், ருடால்ஃப் ஷ்டெய்னர் இலக்கண வழி வேளாண்மை  போன்றவைகளை ஓரளவு நன்றாகவே, சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை செய்திருப்பவன். என்னளவில், முடிந்த நேரத்தில், கொஞ்சம் சக்திக்கலன்கள் தொடர்பாக சிறு ஆராய்ச்சிகள்(!) செய்து கொண்டும் வருபவன்; தாறுமாறான எரிபொருள் உபயோகத்தைப் பற்றியும், மின்சாரத்தின் எதிர்காலத்தைப் பற்றியும்  ஓரளவுக்குப் பீதி அடைந்திருப்பவன்.

மரபுசார் / மரபுசாரா / மறுசுழற்சி செய்யப்படக்கூடிய / முடியாத மின்சார உற்பத்தியில் முனைப்பும் பயிற்சியும், ஆர்வமும் உள்ள பலரை அறிந்தவன்.  மேலும், அணுக்கருவுலைகளில் பணிசெய்யும் சில மகத்தான மனிதர்களை நான் நேரிடையாக அறிவேன். ஆனால்  நான், இந்தத் துறைகளில் ஓரளவுக்கு படிப்பும், அனுபவமும்  உள்ளவன் மட்டுமே – ஆனால் சுயபயிற்சிதான், இவற்றுக்காக முறையாகக் கல்லூரி சென்று மேற்படிப்புப் பயின்றவன் அல்லன்.

எதற்கு மேற்கண்டவற்றை கோடிட்டுக் காட்டி சுயதம்பட்டத்தனத்துடன் (=வழக்கம்போல)  எழுதுகிறேன் என்றால்…

… இருந்தாலும், அதே சமயத்தில் நான் அணுசக்தியின் – மிகச் சரியாகச் சொல்லவேண்டுமானால்,  அணுக்கரு சக்தியின் மீதும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பவன். அதன் தேவையையும் அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மகத்தான ஆராய்ச்சிகளையும்,அந்த ஆராய்ச்சிகளினால் மானுடத்துக்குக் கிடைத்திருக்கும் மகத்தான, அருமையான பயன்களையும்  (+பயங்களையும்தான்!) உணர்ந்தவன். Read the rest of this entry »

The Sweeping Generalissimo strikes again! Oh mommeeeee!!! (or) Oh Gladwell, what a sad  sickness! (or) there is absolutely NO reprieve, sorry.

The problem with some  kinds of popular science writing is that, well, they are written to be popular with the people who want to be popular – which they do by being seen  with the book. It is of course, a wince-wince  situation. The best-selling author and the  ‘best-seller buying readers‘ both enjoy the reflected glories of the symbiotic relationship.

I understand that these kinds of work always aim at the Minimum Common Denominator – the likes of the uncritical, all accepting fans of Oprah Winfrey (the Grand ol’ Ma’am of moralization & mediocrity) and Rahul Gandhi  (the Grand Duke of terrible, terrible snafus) & Arvind Kejriwal (the Chief Propagandist of preachy middle-class morality and middle-classy vicarious rabble rousing). But, still

Yes. This Malcolm veX, reminds me of another of those sweeping theorists who grandly generalize based on exactly one single rather lonely  data point or even  less, if they could help it.

Yes, you are verrrry corrrrect… immediately,  the image of The  Jared Diamond floats up, claiming his inherent  right to be the Grand Duke of the Great hall of Grandiose theorists – but then, it would be kinda jarring to bring up this rather pricey carbon allotrope, so I choose to desist from dealing with this man… I merely gnash my teeth, for the time being. Oh my GAWD! Read the rest of this entry »

நொபெல் பரிசையும் புக்கர் பரிசையும் இணைத்து, அறிவியல்-இலக்கியங்களுக்காகவென நிறுவப்பட்ட மிகப் பிரபலமான நொக்கர் விருதை, பல்லாண்டுகளாக, ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரியா நாடு அளித்து வருகிறது என்கிற அற்புதமான விஷயம், தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.

மேலதிகமாக, இவ்விருதைப் பெற்ற புத்தகத்துக்கு லைபீரியா, பெரிய லைப்ரரி ஆர்டர் ஒன்றைக் கொடுக்கும் என்கிற விஷயத்தையும் பல தமிழ்ப் பதிப்பாளர்கள் – ராயல்டி ஏய்க்கும் பதர்கள் – மறைத்து விடுவார்கள், என்பதும் பலருக்குத் தெரியாது.

லைபீரியா-வின் தலை நகர் மன்ரோவியா. இது ஒரு தமிழ்ப் பெயர். ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்)

லைபீரியா-வின் தலைநகர் மன்ரோவியா – இது ஒரு தமிழ்ப் பெயர்!!!

ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த மன்ரோவியா நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பரும், அகழ்வாராய்ச்சியாளரும், மேலதிகமாக ஐ.ஏ.எஸ்-ஸுமான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்).

ஆர்பா அவர்கள் அவருடைய கட்டுரையில் – தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஆர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி,  பாஷ்யம் ‘சாண்டில்யன்’ அய்யங்கார் போன்றோர்களின் ஆய்வுகளிலிருந்தும், ராஜசிம்ம பல்லவனும் அருண்மொழித் தேவனும் கொள்கைக் கூட்டணி அமைத்து அக்காலத்திலேயே ஆப்பிரிக்கா சென்று குளம் தொட்டு வளம் பெருக்கியதைப் பற்றிப் பேசும் ஜப்பானில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும் இந்த லைபீரிய உண்மையைக் கண்டெடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-0-0-0-0-0-0-0-0-

நிற்க,  நாம் நொக்கர் விருது பற்றித்தானே பேசிக் கொண்டிருந்தோம்? … … சரி. இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்: கலகத்தமிழ்ப்பிரதிக்காரரான மேதகு சாருநிவேதிதா அவர்களே கூறியிருக்கிறார்கள் – இந்த நொபெல் விருதானது நொபெல் + புக்கர் + கலைமாமணி + பத்மஸ்ரீ + பத்மப்பிரியா  + பத்மநாபன்(வியட்நாம் வீடு) இணைந்து ஒருசேர வழங்கப்படுவதற்கு நிகரானது, என்று.

Read the rest of this entry »

இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள்,  ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர  ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக  முக்கியம்.

ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள்  புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள்.  ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »

நானும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம் என இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். ஆனால்,  இளம் எழுத்தாளர்கள் இங்கே, ஊக்கு எங்கே என்கிற கேள்வி என்னைத் துன்புறுத்துகிறது. என்ன செய்வது, சொல்லுங்கள்.

ஆனால், இப்போதெல்லாம் இந்த ஊக்கு சனியன்களையெல்லாம் சீனாக்காரன்கள் மட்டுமே செய்வதால்,  அதனை விற்பதை மட்டும் செய்யலாம் என்பதென் எண்ணம்.

மேலும், எல்லா ளம்மிழ் ழுத்தாளர்களும் சென்னை புத்தகச் சந்தை (2014) சென்று தம் கந்தறகோள புத்தகங்களை விற்பதிலும், எஸ்ரா, சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் கையெழுத்திட்ட புத்தகங்களை வாங்க நீளவரிசைகளில் பின்புறவாயுக்களை வெளியிட்டுக்கொண்டு (=அடுத்தடுத்து புத்தகங்கள் வரவேண்டுமல்லவா?)  நின்று கொண்டிருப்பதிலும் படுபிஸியாக இருப்பதால் — நானே ஒரு இதஎவாக உருமாற்றம் கொண்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். உங்கள் ஆதரவை நல்கவும். இதனை ஒரு பிடிஃப் கோப்பாக மாற்றி உங்கள் தளங்களில் தரவேற்றிக் கொள்ளலாம். பாதகமில்லை.

பின் அடித்து, துண்டுப் பிரசூரமாக வெளியிடவும் ப்ரோக்ரியேட்டிவ் மன்மதன்ஸ் (இது க்ரியேட்டிவ் காமன்ஸ் ஷரத்துகள் போன்றதேதான்) படி காப்புரிமை பிரச்சினைகளே கிடையாது. கவலை வேண்டேல்… Read the rest of this entry »