குறுங்குறிப்புகள் – சில குறுங்குறிப்புகள் (1/n)
March 29, 2016
பொதுவாக, எந்தக் கட்டுரையையாவது எழுத ஆரம்பித்தால், எனக்கு ஆயிரம் வார்த்தைகளைத்தாண்டாமல் இருக்கவே முடியாது. ஆங்கிலத்தில் எழுதுவதென்றால், இது இன்னமும் அநியாயத்துக்கு நீளமாகி விடுகிறது. இந்த லட்சணத்தில் நான் எழுத்தாளனே அல்லன், இருந்தாலும் இப்படி ஒரு அரிப்பு என, என் செல்ல #எஸ்ரா போல, எனக்கு நானே நமட்டுச் சிரிப்புச் சிரித்துச் சொல்லிக் கொள்கிறேன். ஊக்கபோனஸாக, தமிழும் ஆங்கிலமும் என்னபாவம் செய்தனவோ என்கிற எண்ணத்தையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை! ;-) Read the rest of this entry »
ashokamitran, kalyan raman, two new translations
March 11, 2016
I have always been fascinated by the way my beloved Ashokamitran – delicately weaves & writes remarkable stuff — without resorting to any literary ‘device’ embellishments or verbal hijinks or melodrama or self-flagellation or laboured constructs or faffing roundabouts or philosophical blather or put-on erudition. Read the rest of this entry »
அரைகுறை விகடனின் அகடவிகடம்: ‘மாடி வீட்டுத் தோட்டம்… மர்மத்தை விளக்குமா அரசு?’ – சில குறிப்புகள்
February 10, 2016
‘நீங்களே செய்து பாருங்கள்’ என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.
என்று ஆரம்பித்து, மானாவாரியாக உளறிக் கொட்டியிருக்கிறார்கள். Read the rest of this entry »
ஹார்வர்ட் சாவிக்குறிப்பு முகவரி: ஐயய்யோ! அப்போது, அரவிந்தன் கண்ணையனின் முழுமுதற்சீடர் கமல்ஹாஸனா? நான் இல்லையா? :-(
February 9, 2016
இன்று மதியம்வரை, நான்தான் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முழுமுதற் சீடன் என்கிற முற்றும் துறந்த ஞான நிலையில், இறுமாப்புடன் இருந்துவிட்டேன். இது மிகவும் சோகம் தரும் விஷயம். :-(
அரவிந்தன் கண்ணையன் பெயருக்கும் புகழுக்கும், குந்துமணியளவுகூடக் குந்தகம் வராமல், அவர் பாதையிலேயே அவரை விடாமல் தொடர்ந்து, என்னை மேம்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன்! இதுவா, ஒரு ஏகலவ்ய சிஷ்யன், தன் மகாமகோ துரோணப் பேராசானுக்குக் கொடுக்கும் மரியாதை? :-((
ஆகையால்தான்… Read the rest of this entry »
ஜெயமோகன், கம்யூனிஸ்ட், நொபெல்பரிசு, சரோஜாதேவி: மேதகு வே மதிமாறன் அவர்களின் சரமாரியான அற்ப உளறல்களுக்கு அளவேயில்லை!
January 29, 2016
பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம் வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால் ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.
the imfartance of being aravindan kannaiyan
January 28, 2016
The first part here: the importance of being aravindan kannaiyan.
The thing is that, slander happens rather too easily in the world of Tamil Literature, what with its half-baked & clueless charlatans running amok – but to set it right, to show the twisted bent of mind behind the slander, takes a bloody loooong essay.
புலியை முறத்தால் அடித்து விரட்டுவது எப்படி – ஒரு சமையல் குறிப்பு
January 26, 2016
எனக்கு, சாப்பிடுவதும் பிடிக்கும்; சமையல் செய்வதும் (அல்லது யுவகிருஷ்ணாபடுத்தப்பட்ட பரிதாபத்துக்குரிய சுஜாதாத்தனமாக, சமையலிப்பதும்) பிடிக்கும்; ஆகவே.
the importance of being aravindan kannaiyan
January 13, 2016
(OR) HH Aravindan Kannaiyan, Asokamitran, Boris Pasternak, Indira Gandhi, Mel Brooks and little else
Dear Sirs and Ma’ams, this settles it. It is rather unfortunate, but we have to take the bullshit by the barns, am sorry.
Unless the most Venerable, His Holeness Aravindan Kannaiyan, by hook or crook (or by some goddam IT socialmedia revoltingution, and bending of the rules by #trending #twitterstorm #goingviral or some such #brain_dead_fever; or by exploiting the loopholes of the US immigration rules much like the H1B/Greencard scams; or…) becomes the next American President, there is no hope for the feudal society that is India. Read the rest of this entry »
என்னுடைய பிரதம செல்லமான மகாமகோ #எஸ்ரா ஒரு கட்டற்ற கேளிக்கைக் களஞ்சியம்! வேறென்ன சொல்ல. ;-)
எனக்கு இது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இதனை நான் சபையில் வெட்கம்கெட்டுச் சொல்லியே தீரவேண்டும்: மேதகு எஸ்ரா அவர்களின் எழுத்துகளில், இக்காலங்களில், அவ்வளவு அதிகமாக ஒற்றெழுத்துப் பிரச்சினைகள் இல்லை.
‘circular ruins’ vs ‘taare zameen par’ & ‘tinkle’
December 1, 2015
Circa 1972/73, as a little boy, I read a Tamil translation of this mind blowingly beautiful short story of Jorge Luis Borges (JLB) – one of the finest littérateurs that inhabited the earth, an Argentinian – a remarkable essayist and a fine poet too.
This translated ‘circular ruins’ was Vattach-chidhaivugal (=வட்டச் சிதைவுகள் – made available on the web by that fellow-curmudgeon Vimalaadiththa Maamallan, hat tip to him) – artfully and faithfully done-up by a remarkable Srilankan Tamil – Dharumu Aroop Sivaramu (AKA Pramil Banuchenran, Bramil … …) – who, in my opinion, is/was one of the finest littérateurs too. I remember to have been completely bowled over by the translated story and recollect that I tried to hunt for more of JLB’s outputs – not with much success though, as my world then was limited to whatever that was available in the local government lending libraries. Read the rest of this entry »
கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!
ஸாஹித்ய அகா டம்மிகளின் டமார பஜனை (அல்லது) பின்நவீனத்துவப் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது!
October 12, 2015
முதலில்… ஒரு ரகசியச் செய்தியை பகிரங்கமாக்குகிறேன்: இந்த விருதுத் திருப்பலியக்கப் பன்றிக் காய்ச்சலை ஆரம்பித்து வைத்தது – இதுவரை பலப்பல கலைமாமணி விருதுகள் பெற்றிருக்கும் பலப்பலர் தங்கள் பரிசில்களை – தமிழக முதலையமைச்சரின் அலுவலகத்தை நோக்கிக் கடாசியமையே! (இதற்குக் காரணம் – ஐநா சபை அவர்களுக்கெல்லாம் நொபெல் பரிசு கொடுக்கச் சிபாரிசு செய்யவில்லை என்கிற திடுக்கிடவைக்கும் துரோகம்தான்!)
மேஸ்திரிகளின் உலகம் (ஜெயமோகனுக்கு ஒரு பகீரங்கக் கடிதம்!)
October 4, 2015
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை நீங்கள் பார்க்காதது நினைவிருக்கலாம். ஏனெனில் நான் அங்கு போகவில்லை.
உங்கள் வாசகர் உங்களுக்கு எழுதிய ‘மேசன்களின் உலகம்’ கட்டுரைக் கடிதம் படித்தேன். புல்லரித்து அப்படியே உங்களைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் இது ஏதாவது ஓரினச் சேர்க்கை எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுமோ என உடனடியாகப் பயந்து, நாமிருவரும் தமிழினம்தானே, ஆகவேதான் இப்படி இனச்சேர்க்கை என்று சப்பைக்கட்டு கட்டி – உங்கள் வாசகருடைய கடிதப்பதிவை என் எதிரிகளுக்கும் பகிர்ந்திருக்கிறேன்.
மேலும், அந்தக் கடிதத்தின் முழு பாதிப்பில்தான் நான் இதனை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் வரிக்கு வரி சரிபார்த்துக்கொள்ளவும். நன்றி. உள்ளூர் வரிகள் மேலதிகம், கவனிக்கவும்.
[அதிமுக்கியமான பதிவு] 2016ல் எனது கடையேழு புத்தகங்கள்: வெளியீட்டு விழா! + ‘ப்ரொமோ’ படம்!!
October 3, 2015
சுத்தமாக வேலை வெட்டியற்று இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும், என்னால் எழுதப்பட்ட ஏழு புத்தகங்களின் வெளியீட்டை அடிவயிற்றுக்கலக்கத்துடன், படபடக்கும் நெஞ்சுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்* உங்களைப் போன்ற சோம்பேறி வாசக மாக்களுக்கு…
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்கள் வயதுக்கேற்ப திராவிடத்தனமாக வாழ்த்த எனக்கு வயதிருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம். ஆகவே முறையே ஆசிர்வாதம் கொடுக்கிறேன் அல்லது வணங்கி மகிழ்கிறேன்.
ஆனால் மன்னிக்கவும். Read the rest of this entry »
எஸ்.ராமகிருஷ்ணன்: மொழிபெயர்ப்பு விழா
September 26, 2015
புர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது. ஆம், விடாது வெறுப்புக்கசப்பு! :-(
…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… ஆ!
‘டாம் மாமா’ புர்ராமகிருஷ்ணர்
September 25, 2015
புர்ராமகிருஷ்ணம்
September 24, 2015
(அல்லது) புர்ராவும் டர்புர்ராவும்
நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.
எஸ்ராபீடியனின் செந்தில்-கவுண்டமணீயம்
August 26, 2015
விக்குபீடியனான எனக்கு இப்படித் தொண்டை வறண்டு விக்குகிறதே! யாராவது குடிப்பதற்கு நீர் கொடுத்துத் தொலைக்க மாட்டார்களா? க்க்… க்க்…
…வேதாளராமசாமியாகித் திரும்ப எஸ்ராமுருங்கமரம் ஏறினால்தான் தாகம் தீருமோ? விக்கல் போகுமோ?? எம்குறை அகலுமோ??? பிறவிப் பயனை அடைவேனோ????
பகீர் செய்தி! எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு *********!!
August 13, 2015
மன்னிக்கவும்; இந்தப் பதிவை வைத்துக்கொண்டு, ‘விடுதலை’ வீரமணி அவர்கள், ‘சீனர்கள், ஸெராமிக்டைல் கற்காலத் தமிழர்களே!‘ எனச் சினமுடன் சீறும் சிறுத்தை அறிக்கையைச் செவ்வனே வெளியிட்டால், பின்னர் சீமார்சீனார் மேற்கொண்டு, தமிழ்சீனத்துக்காக ‘நாம் தமிழ்ச்சீனர்‘ எனவொரு இயக்கத்தை ஆரம்பித்து, ஒரு சீன் போட்டால் – அந்த எழவுகளுக்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியவேமுடியாது; முதலில் இதனைச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில், திராவிடப் பகுத்தறிவின் பொற்காலம் அப்படிக் கெட்டுக் கிடக்கிறது! எந்தப் புத்தில், எந்த திராவிட ஜீபூம்பா இருக்குமோ, நானறியேன்! Read the rest of this entry »

