மறப்போமா இவர்களை?
தன் (கஷ்மீரி பண்டிட்) விவசாயக் குடும்பத்தை (லஷ்கரீ-தய்யபா) கொலைவெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மார்ச் 23, 2003 அன்று பலி கொடுத்து (நதிமார்க் படுகொலைகள்), பின்பு ‘தான் மட்டும் இறக்கவில்லை’ என்கிற குற்ற உணர்ச்சியால் பைத்தியம் பிடித்தலைந்து ஒரு வருடத்திற்குப் பின் அதே நாள் பாகீரதியில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொண்ட எனது இளம் நண்பன் ராஜீவ் குமார்-ன் நினைவுக்கு, இப்பதிவு சமர்ப்பணம்.
-0-0-0-0-0-0-0-
2001-2002 வாக்கில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்காக, இளம் பொறியியலாளர்களை, மேலாண்மைக்காரர்களை, மனிதவளமேம்பாட்டுக் காரர்களை தேர்வு செய்வதற்காக, அதுவும் தரமான முஸ்லீம் இளைஞர்களை குறைந்த பட்சம் 80%-ஆவது சேர்த்துக் கொள்ளவேண்டுமென்று திட்டம் போட்டு, ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜாமியா மிலியா ஹம்தர்த், ஜேஎன்யு என்றெல்லாம் டெல்லியில் சில மாதங்கள் வெறிபோலச் சுற்றிக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »
இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள், ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக முக்கியம்.
ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள் புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள். ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »
Άννα Βίσση: Δε με αγαπάς, Συγχαρητήρια
January 17, 2014
πώς έρχονται αυτά τα τραγούδια δεν έχουν ακόμη αντέγραψε σε Ταμίλ? ;-)
Άννα Βίσση – το ελληνικό είδωλο!
எஸ். ராமகிருஷ்ண தாசன்: நெடுங்கொடுமை
January 16, 2014
நானும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம் என இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். ஆனால், இளம் எழுத்தாளர்கள் இங்கே, ஊக்கு எங்கே என்கிற கேள்வி என்னைத் துன்புறுத்துகிறது. என்ன செய்வது, சொல்லுங்கள்.
ஆனால், இப்போதெல்லாம் இந்த ஊக்கு சனியன்களையெல்லாம் சீனாக்காரன்கள் மட்டுமே செய்வதால், அதனை விற்பதை மட்டும் செய்யலாம் என்பதென் எண்ணம்.
மேலும், எல்லா இளம் தமிழ் எழுத்தாளர்களும் சென்னை புத்தகச் சந்தை (2014) சென்று தம் கந்தறகோள புத்தகங்களை விற்பதிலும், எஸ்ரா, சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் கையெழுத்திட்ட புத்தகங்களை வாங்க நீளவரிசைகளில் பின்புறவாயுக்களை வெளியிட்டுக்கொண்டு (=அடுத்தடுத்து புத்தகங்கள் வரவேண்டுமல்லவா?) நின்று கொண்டிருப்பதிலும் படுபிஸியாக இருப்பதால் — நானே ஒரு இதஎவாக உருமாற்றம் கொண்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். உங்கள் ஆதரவை நல்கவும். இதனை ஒரு பிடிஃப் கோப்பாக மாற்றி உங்கள் தளங்களில் தரவேற்றிக் கொள்ளலாம். பாதகமில்லை.
பின் அடித்து, துண்டுப் பிரசூரமாக வெளியிடவும் ப்ரோக்ரியேட்டிவ் மன்மதன்ஸ் (இது க்ரியேட்டிவ் காமன்ஸ் ஷரத்துகள் போன்றதேதான்) படி காப்புரிமை பிரச்சினைகளே கிடையாது. கவலை வேண்டேல்… Read the rest of this entry »
… அழ வைத்துவிடுகிறார்கள், பாவிகள்… :-(
January 16, 2014
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!) பதிவுக்கு வந்த ஒரு சோம்பேறிப் பின்னூட்டமும், என் எதிர்க் கதறலும்… (இரண்டாம் வரைவு)
Anonymous Says:
15/01/2014 at 08:03 e‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் WHAT IS THIS. KINDLY INFORM
—>>>
அய்யா அனானிமௌஸ் கேபிடலிஸ்ட் எலியாரே!
உங்கள் கீபோர்டில் இடது ஓரத்தில் கேப்ஸ்லாக் (capslock / capslk) என்று ஒன்று, பொதுவாக, கீழிலிருந்து (உங்களுடைய கீழ் அல்ல, அது உங்களுடைய கோமணத்தினுள் பத்திரமாக இருக்கட்டும்; இது கீபோர்டின் கீழ்) மூன்றாம் வரிசையில் இருக்கும். அது உங்கள் தொப்பியை அதன் இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாப்பதற்காக இல்லை என்பதை அறிந்து, அதனை அமுக்கிக்கொண்டேயிருக்காமல் கொஞ்சம் சும்மா விடவும்.
இதற்குமுன் ஒரு விண்ணப்பம்: தேவரீர் நீங்கள், மிக முக்கியமாக, கீபோர்ட் என்றால் உங்கள் சாவிகளை பத்திரமாக மாட்டும் பலகை என்று புரிந்து கொள்ளவேண்டாம்…
டேய்… ஏண்டா என் கள்த்த அற்க்கிறீங்க! நான் எள்தறத(!) ஒரு அம்பது பேர் பட்ச்சா போறுண்டா! ஏண்டா எளவெடுத்தவனுங்க, சோம்பேறிக் கூவானுங்கெல்லாம், மூளேன்றதே இல்லாதவனுங்கல்லாம், சும்மானாச்சிக்கும் சொறிஞ்சிக்கினு லைக் போட்றவனுங்கெல்லாம் இங்க வந்து இப்டீ தொந்த்றவ் செய்றீங்க? அரெகொறேங்களா – நீங்க ஸார்னிவேதிதா, எஸ்ராவோட தளங்கள வுட்டுட்டு ஏண்டா இங்க வந்து என்க்கு உஸ்பேத்தறீங்க, சோமாறீங்களா… Read the rest of this entry »
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!)
January 14, 2014
இதாணு: எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?
லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!
… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ ‘எஸ்ராவோடெ ராவுகள்’ — ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள குருத்தங்கெட்ட தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.
… … … … பேடிக்கண்டா! … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?
… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!! aye aegree. zuizide is zimbly no zolution. uou onderztand?
…Besides, ezra is a thick armoured battletank, he can pound away merrily, while you lousy lusers keep complaining. Resistance is futile, yes. :-(
சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.
எச்சரிக்கை: இது ஒரு ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(
படுபாவீங்களா!
January 12, 2014
ஏண்டா, வொங்களுக்கு நேரடியா ஒரு வெஷயத்தச் சொன்னா புரியவே புரியாதா?
நேத்திக்கு – குறிப்பா அந்த எஸ்ரா-வோட அடிப்பொடி எழுதின முழிபெயர்ப்பு பக்கம் போகவே போகாதீங்கடான்னு படிச்சு படிச்சு சொன்னேனேடா!
நான் சொல்றத கேக்கவேகேக்காம 70-80 பேர் துள்ளிகுதிச்சிக்கிட்டு ஓடிப்போய் அந்தக் கந்தறகோளத்தப் பாத்திருக்கீங்களேடா! உருப்படுவீங்களா?? Read the rest of this entry »
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எதிர்த்தாக்குதல்! (ஐயய்யோ!)
January 11, 2014
யுத்த தர்மம் என்று ஒன்று உணடு. ஆனால், வாயையும் கையையும் கீபோர்டையும் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் இக்காலங்களில் பிரயோகிக்கத் தெரியாத என்மேல் — என் குற்றச்சாட்டுகளுக்கு(=தீர்ப்புகள்), நேரிடையாகப் பதில் சொல்லாமல், எதிர்வினை தராமல் – இப்படி ஒரு கெரில்லாத் தாக்குதலை முடுக்கி விட்டிருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்! கிருஷ்ணர்களுக்கும் தருமத்துக்கும் ஒரு தொடர்புமே இல்லையோ!
பாருங்கள் இந்த அநியாயத்தை – அவர் வலைத் தளத்திலிருந்து ஒரு மகாமகோ முழிபெயர்ப்புச் சாத்தானை ஏவி விட்டிருக்கிறார்!
இவருக்கென்று பிரத்யேகமாக — படு பீதியளிக்கும் பயங்கர ட்ரான்ஸ்லேஷன், டிக்ஷனரி ஆயுதங்களை ஏந்தி, வாசகர்களின் கபாலங்களின் மீது கோரதாண்டவம் ஆடும் பயங்கரவாத ஆபத்துதவிப் படையினர் இருக்கின்றனர் என்று எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. அந்த எழவெடுத்த பொன்னியின்செல்வனில் இது பற்றி ஒன்றுமே இல்லை… Read the rest of this entry »
நோ, எஸ் ராமகிருஷ்ணன்! மன்னிக்கவும், கலிலியோ மண்டியிட்டார்தான்!
January 10, 2014
அதாவது, உங்களிடம்.
‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று நாத்தழுதழுக்க, கண்ணில் நீர் பெருக, குரல் கம்ம, நெஞ்சு படபடக்க, கைகள் நடுங்க – அவர் உங்களிடம் மண்டியிட்டுக் கைகூப்பிக் காலில் விழுந்து இறைஞ்சியதை நானே என் கண்ணால் பார்த்தேன்… என்ன சோகம்! :-(
(அல்லது) எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (2/3)
… … ‘அறிவியலாளர்’களைப் பற்றிய, மகாமகோ எஸ் ராமகிருஷ்ண அமரகாவியமான ‘கலிலியோ மண்டியிடவில்லை‘ புத்தகம் உயிர்மை (மகாமகோ உலகத்தரம் வாய்ந்த கவிஞ்சரின் திராவிடத்தரமான நிறுவனம்தான்!) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
சேசுவே! பாவிகளை மன்னியும்.
இந்தப் புத்தகத்தின் அறிமுகமாக, எஸ்ரா அவர்களின் சொந்தமோசொந்தக் குறிப்பு:
“அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.”
— எஸ்.ராமகிருஷ்ணன் (http://www.uyirmmai.com/publications/BookDetails.aspx?bid=375)
கோனார் உரை: கற்பனையான ஜீவராசி = கழுதை என்பதறிக.
ஆனால், ஆசிரிய பல்துறைசார்வாள், இந்த ஜீவராசியின் வாய்வழியே அறிவியலையும் இலக்கியத்தையும் அறிந்து கொள்ள முயன்றாரா, அல்லது பின்னாலிருக்கும் ஓட்டையினூடேவா என்பதைத் தெளிவாக விளக்கவில்லை. Read the rest of this entry »
எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3)
January 8, 2014
B-( 8-( :-( … … :-{
… (அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துகளில் சோகச்சித்திரங்கள்…
முதலில், ஒரு முக்கியமான தன்னிலை விளக்கம்: இக்கட்டுரைத் தொடரில் முதல் பகுதியான கட்டெறும்பு பெருத்து கழுதையான கதை என்பதில் கட்டெறும்பு என்பதுதான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைக் குறிக்கிறது; கழுதையென்பது அடியேனை. அதாவது முன்னவர், தனக்கேயுரிய பாணியில் எழுதி எழுதித் தள்ளி, என் அளவுக்கு மிக மிகப் பரிதாபமாக இறங்கி விடுகிறார் என்பதைக் குறிப்பதற்கே, இந்தத் தலைப்பு. இதைத் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
இன்னொரு விஷயம்: ‘வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம்’ என்கிற ஔவையாரின் மூதுரையுடன், நீங்கள் இந்தத் தலைப்பினை இணைத்துக் குழப்பிக்கொண்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளவேண்டாம் எனவும் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தவறான புரிதல்களினால் — சின்னஎஸ்ராவே, கட்டெறும்பு என் மாமியாரக் கடிக்குது-என்றெல்லாம் நான், நடிகை சுகன்யா நடிகர் பிரபுதேவா அவர்களைப் போல விலுக்விலுக்கென்று இடுப்பை வெட்டிக்கொண்டு பாடியாடவேண்டியிருக்கும், உங்களுக்கு இது தேவையா?? Read the rest of this entry »
ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு!
January 6, 2014
(அல்லது) n = n +1
எல்லா நாட்களிலும் இப்படி நடப்பதில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்தான். ஆனால்…
… நேற்று மாலை, என்னவோ யோசனையில் (யாக்கை நிலையாமை என) ஆழ்ந்துகொண்டு, மெதுவாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது – ஒரு மோட்டார்சைக்கிள் பீய்ங் பீய்ங் என்று ஹார்ன் அடித்துக்கொண்டு என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. முடிந்தவரை இடதுபக்க ஓரம் சென்றாலும் ஒரே பீய்ங் பீய்ங். சாலை என்னவோ விசாலமாக இருந்தாலும் இப்படி! Read the rest of this entry »
கட்டெறும்பு பெருத்து, கழுதையான கதை :-(
January 5, 2014
(அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் ஏன் இப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார், பாவம்…
ஹ்ம்ம்… இதுவரை, பொதுவாக — நம்முடைய பலதடவை முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்கள், எதனைப் பற்றி என்ன சொன்னாலும் எழுதினாலும் – அது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானதாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும்தான் இருக்கும் என்றுதான் அவற்றினை அணுகியிருக்கிறேன். ஆச்சரியம், ஆச்சரியம் – அவையும், ஒரு விதிவிலக்கு கூட இல்லாமல் இதுவரை அப்படியேதான் இருக்கின்றன. இயற்கைக்கு நன்றி.
ஆனால் — இவரைப் புரிந்து கொள்ள முடிவதற்கு, ஒப்புக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் (= இவர் ஒரு தொழில்முறை திராவிடத் தலைவர், தொட்டில் பழக்கம் என்றிருக்கிறதே, மாபெரும் குடும்ப நலன்களைக் கவனித்துக் கொள்ளவேண்டுமே – என்பது போல) இருக்கின்றன.
ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளை – என்னால் இக்காலங்களில் புரிந்து கொள்ள முடியவேயில்லை; தாளவும் முடியவில்லை! Read the rest of this entry »
julia vinograd & bubbles
January 3, 2014
Dunno how popular, this poetess and bubblerina is, with the rather small group of readers (circa 100) of this web journal…
But Julia (a student of the legendary Gary Snyder), IMO has written poems with effortless ease and incredible depth, even as she continued (continues?) to blow bubbles across Berkeley, to amuse children and to annoy ‘adults.’
Samples of her poems are available here and there on the web. Read the rest of this entry »
ஜெயமோகன்(மஹாமஹோபாரதம்) = வெண்முரசு
January 2, 2014
மஹாபாரதம், உலகத்தின் பொக்கிஷங்களில் மகத்தானதொன்று என்பதில் ஒருவருக்கு ஐயமேயிருக்கமுடியாது. அதை நான் எழுதித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதும் இல்லை.
மஹாபாரதம்…
“In a short story by Jorge Luis Borges, the narrator buys from an enigmatic bookdealer an ancient tome written in an indecipherable Indian script: the Book of Sand, so named because like the sand it has no beginning and no end. Whenever he opens the book, he finds different paragraphs and different illustrations on pages whose shifting numbers make no sense. Soon he becomes obsessed by the book’s fathomless depths, and his evenings are spent consumed in its protean secrets. I suspect that when Borges wrote his story, he had the Maha·bhárata in mind.” (Into the Fray: An Introduction to the Maha·bhárata – By Vaughan Pilikian)
… ஒருகாலத்தில், அனுபவித்து அனுபவித்து, பரீட்சைக்குப் படிப்பது போல ஜுர வேகத்தில் பல மஹாபாரதங்களைப் படித்திருக்கிறேன். இங்கு, திளைத்திருக்கிறேன் என்பதுதான் சரியான பதமாக இருக்கும். இனிமையான நாட்கள் அவை.
தட்டுத் தடுமாறி – எழுத்துக் கூட்டி, ஸம்ஸ்க்ருத, தமிழ் மூலங்களையும் உபகதைகளையும், தடுமாறாமல் ஆங்கிலப் பிரதிகளையும் படிக்க முயன்றிருக்கிறேன். யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் என்கிற ரீதியில் சில வருடங்கள் முன்பு ஒரு ஆங்கில மூலப் பதிவொன்றும் எழுதியிருந்தேன். (ebrahim alkazi, studying mahabharatha – some notes 31/03/2008) Read the rest of this entry »
வெள்ளெயானே வெளியேறு!
January 1, 2014
(அல்லது) இதுதாண்டா விமர்சனம்!
மொதல்ல ஒங்க அல்லார்க்கும் ஒரு ஸலாம் வெச்சுக்றேன்!
வணக்கம் ஸார். வணக்கம் லேடீஸ்.
பகத்சிங்க வெள்ளக்காரனுக்குப் போட்டுக்கொட்த்த, அம்பேத்கார் முதுக்ல குத்துன, பெரியார் மேல சூனியம் வெச்ச அந்த ஆரிய காந்தியப் பத்தி – மானாவாரியா, மூச்சுமுட்ட ஒரேடியா வுடாத ஆதரிச்சிக்கினு தெனாவெட்டா எளுதிக்கினே கீராரே இந்த செயமோகன் – அவ்ரே ஒரு புது பொத்தகத்தையும் எளுதிருக்காரு. புக்கு, பாக்க கொஞ்சம் குண்டாத்தான் கீது. வெள்ளேயானேன்னிட்டு எம்மாந் தெகிர்யத்தோட, வெள்ளக்காரனுங்க நெஞ்சத்ல கீற மஞ்சாசோத்த எடுக்றாமாரீ, நாக்கப் பிடுங்கிக்றாமாரீ எள்திருக்காரு இந்த செயமோகன்? பொத்தகத்தோட தலப்பே டாப்டக்கராத்தான் கீது.
ஆனாக்க என்க்கு மன்ஸ்ல ஒரு பெத்த கேள்வீ… அந்த குவிட் இண்டியா 1942 ஆகஷ்டு புர்ச்சி மண்ணாங்கட்டீ தெர்ப்பிள்தீ பத்தீ, இப்ப டெசம்பர்லயா – அதுவும் அத் நட்ந்த எளுவ்து வர்ஸத்துக்கு அப்றமாவா ஒரு புக்க எள்தீ – அத்த 2013ல ரிலீஸ் பண்வாங்க?
… இன்னாடா இது – பிர்யவே மாட்டேங்க்து… இந்தப் பதிப்பாளனுங்க்ளையிம் தூண்ல கட்டி நல்லா ஒதிக்கணும் – பேமானிப் பசங்ளுக்கு எப்போ என்னாமாரீ புக்கு போட்டா அது விக்கும்னிட்டு தெரீயவே மாட்டேங்து… எப்படியோ வித்துட்டானுங்கன்னாலும், எளுத்தாளனுங்க ராயல்டீ கேட்டாக்க, லைப்பரி ஆர்டர் கெடக்கலேன்னிட்டு டபாய்ப்பானுங்க. எளுத்தாலங்க அல்லாம், அவங்க பொண்டாட்டியோட வந்து அள்து பொரண்டுக்கினு றொம்பொ ப்ரெஸ்ஸர் போட்டாக்க, ராயல்டீ இல்ல கவிஞ்சரே, கொஞ்சம் ரெட்லேபிள் சூப்பர்டஸ்ட் டீதான் கீதுன்னுட்டு ஒரு லோட்டா கொடுப்பானுங்க… சூடா குடிச்சிட்டு சூத்தாமட்டைய தொடச்சிக்கினு ரிட்டர்ன் ஆய்ட்ணும். அவ்ளோதான். Read the rest of this entry »
education: a taxonomy towards understanding the beastess!
December 21, 2013
You see, every once in a while, some guys (peace be upon them, poor things) become unfortunate enough to take part in my random training sessions – wherein I pretend to bestow my infinite wisdom on an otherwise normal and happy bunch of people; there was one such workshop that I conducted a couple of weeks back, in which a few of us discussed the various angles / prisms (or axes, if you will) through which one can see the myriad facets of that phantasmagorical beastess (yes, education is a female!) called education; this note was circulated to seed some discussions and here it is, as some food for your thoughts, that is, if you are the type which likes to think…
But then, this is a rather looooong document, that has taken very many years of practical experience, observation and a sort of reasonable scholarship to get assembled – and so some patience is advised. If you do not have the patience, you please stop right here. And, go away. Seriously.
-0-0-0-0-0-0-0-0-0-
In this document, we would look at the common ways of stereotyping education in terms of what sociologists call their sociological categories, Ideal Types.
“An ideal type is formed from characteristics and elements of the given phenomena, but it is not meant to correspond to all of the characteristics of any one particular case. It is not meant to refer to perfect things, moral ideals nor to statistical averages but rather to stress certain elements common to most cases of the given phenomena.” (The methodology of the social sciences’ – Max Weber – a very fine text; some details below)

The methodology of social sciences / Max Weber / 1949 / The Free Press, Glencoe, Illinois; this is one of the books that I keep getting back to, when I have some fundamental doubts about categorizations – sociological and much else! Strongly recommended for anyone who wants to seriously study societal dynamics and dialectics…
Simply put, the world of ideal types merely allows one to stereotype, simplify and attempt to slot – and then to grapple with things – such as white and black, so that we can easily pretend to understand things.
But you see, the world is NEVER defined in terms of black and white. It has myriad hues – it is a true celebration of gray areas.
Salutations to thee, the Goddess of the Great Gray!
தமிழ இயல்பு: ஸ்னெல் ஒளித்தடம் + ஸிப்ஃப் மானுட இயல்புக் கோட்பாடுகள்
December 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)
சாளரம் #8: ஸ்னெல் ஒளித் தடக் கோட்பாடு: ஓளியானது, எதிர்ப்பு குறைவாகவுள்ள பாதையில், ஆக அது வேகமாக செல்லக்கூடிய, நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடிய பாதையில் மட்டுமே செல்லும்.
உப ஸிப்ஃப் கோட்பாடு: மனிதனின் தாங்குசக்தியும் மனவலிமையும் பொதுவாக மிகக் குறைவு – அப்படியே அவை இயங்கினாலும் அவை, எதிர்ப்பு குறைவாகவுள்ள, சுளுவான வழிமுறைகளில் மட்டுமே ஈடுபடுபவை.

இது 1949-ல் வெளிவந்த, பின்னர் பலராலும், மொழியியல் உட்படப் பல துறைகளிலும் மிகவும் பேசப்பட்ட ஒரு புத்தகம். பேராசிரியர் ஸிப்ஃப் அவர்கள் ஒரு மாமேதை என்பதில் ஐயமேயில்லை. (என்னிடம் இருப்பது, இந்தப் பழைய பதிப்பு தான்)
இதன் புதுக் கருக்குக் குலையாத ஒரு அச்சுஅசலான ஃபேக்ஸிமிலி பதிப்பு 2012ல் வந்திருக்கிறது. அதன் அட்டைப் படம் (அமேஸானிலிருந்து), கீழே: Read the rest of this entry »
what is education?
December 18, 2013
Every once in a while, I do conduct some random workshops (or training sessions if you will), pontificating on what fancies me at that moment.
And so, it was the turn of a few hapless fellow teaching-colleagues who were unfortunate enough to be part of the conscripted audience of a 2.5 hour talk (spread over two days – conducted a few weeks back) delivered by yours truly (of the I-Me-Myself fame).
I wanted to do the talk in Tamil – but that was not to be, because 1) Most of the audience was made up of fellow Tamils – so they wanted it in English 2) There were a few non-Tamils who of course wanted it in English.
Normally my talks (*gasp*) are just plain ol’ stand-up comedy types – but this time, it was done with a few handouts and all that paraphernalia. I even made a powerpoint presentation, O tempora, O mores! :-(
இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »
shah jahan’s tajmahal vs raja’s 2G corruption
December 12, 2013
Oh, yeah. Once in a while, we ‘discuss’ politics and allied goings-on (including the civic structures and civil society) with our impressionable adolescents. We sometimes discuss history too, in spite of the fact that, in these times of the impending ‘secondary school leaving certificate’ exams and prep mode for some of our children, we can’t have interesting discussions like *this all the time.
But, still…
Here is a gist of a rather tricky question posed and some ideas it generated…
1600s CE:
The Moghul emperor – Shahab-ud-din Muhammad Khurram – popularly titled and known as ‘Shah Jahan’ (Ruler of the World – for a given value of the world, that is!) in our horrendous history books – ordered the construction of a mausoleum (basically an elaborately & aesthetically constructed interment monument) – over the grave of his favorite queen (who was also Khurram’s maternal cousin) Arjumand Banu Begum – popularly known as Mumtaz Mahal. Read the rest of this entry »


