நரேந்த்ர மோதி-யின் மேல் புழுதியை வாரியிறைப்பது ரொம்ப லேசு!
April 12, 2014
தேர்தல் ஜனநாயகம் ஒட்டு உணர்ச்சிகரப் புல்லரிப்பு என்றால், பொதுவாகவே குடிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் படிப்பறிவும் அதிகம் இல்லாத நம் நாட்டில் – பல நடைமுறை ரோதனைகள் இருப்பது சகஜமான விஷயமே! மேடைப்பேச்சுகள், வெறும் ஏச்சுகளாக மட்டுமே இருப்பதும், கருத்துவேற்றுமைகள் அடிஉதை சண்டைகளாக மாறுவதும் நடந்துகொண்டிருப்பவைதான்…
ஆனால் இந்த மோதி எதிர்ப்பு விவகாரத்தில்தான்- எனக்குத் தெரிந்து, உரையாடல்கள் மிக மிகக் கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன… கண்டமேனிக்கும் கோமாளித்தனமான குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த கருத்துலகக் கபோதிகள்.
மோடி என்றால் மோடிமஸ்தான், பில்லிசூனியம் வைப்பாரென்பார்கள்; மோதி என்றால் மோதி விடுவார், ஜாக்கிரதை என்று அலறுவார்கள். மோதி இந்தப் பக்கம் வந்தால், ஏன் அந்தப் பக்கம் போகவில்லையென்பார்கள். அந்தப் பக்கம் போனால் – இந்தப் பக்கத்துக்கு ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் வைப்பார்கள்! Read the rest of this entry »
Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2)
April 9, 2014
Foreword: ummm… if you HAD to listen to an old, depleted guy for TWO whole BLOODY hours, extolling the virtues of LEMURIA and the virtuousness of DRAVIDAM ad nauseam, repeating that, Tamilnadu is where it is – all developed, progressive and beautiful – only because of the Dravidian movement and on and on and on…. even an otherwise sane(!) person like me would become an extremely ill-puttogether polemicist, even by my very own bloody standards!
Well, that’s what has happened to me, atleast. And, the fact that this old man is actually well read otherwise and scholarly and is sane, is all the more galling!
Yes. I am of the firm & considered opinion and conviction that, Tamilnadu is where it is now – not BECAUSE of the Dravidian movement – but, IN SPITE of the Dravidian movement. Got it, old man? It is in, whatever that is left of its basic genius, that the Tamil people have gotten some sustenance from, and not from some thieving, idiocy propagating mobs, got it?
Warning: Dear reader of this post, If you seriously believe that the idea of Dravidianism has done any good to my dear Tamilnadu, you should not proceed any further; reading this post would be dangerous to your health. Go back to the hell-hole from which you surfaced for Oxygen. This is PG45 stuff, and is not meant for Twitter trolling adolescents. Period.
Okay. You have been warned enough; read on the rest of the post, if you must; but, don’t squeal rather pathetically, later — got it? Read the rest of this entry »
” The most valuable thing you can make is a mistake – you can’t learn anything from being perfect. “
– Adam Osborne (1939 – 2003)
I do not know how many of us 45+ folks remember Adam, I mean THE Adam.
Perhaps not many. Our memories are short. Our capabilities in respect of studying, mapping, assimilating and knowing in breadth and depth — the details and mappings of any idea or a concept – are rather shallow. We are designed from the beginning to be lusers, Dravidian lusers. We offset our incredible lack of scholarship by manufacturing random histories (such as Aryan invasion or Dravidian superiority theories) and random geographies (such as Lemuria or Kumari-k-Kandam, if you will).
Otherwise, what would be preventing us from celebrating the memories of such a personality? I am not talking about a random Robert Caldwell or a randomer Constantine ‘Veeramaamuniver’ Beschi here – am referring to a fantastic individual, who lived in our midst – after making epochal contributions to the spread of the cult of the portable computer.
But then, am digressing, as is my wont.
Of course, the reason why I am rejiggling my fading memories is that – Adam Osborne, the man, one of my boyhood heroes, moved on – just about 11 years back, after living for so many years in India — on 18th March, 2003 – in our good ol’ Kodaikanal, Tamilnadu.
Snuffed out. Unsung. Unheard of. PBUH.
… … … Having been lost in a dazed reverie, I have been thinking about him for the past few days and just thought I would share a thing or two about this fine man…
இவ்வளவு விலாவாரியாக எழுதுகிறாயே, நீ தமிழகத்திற்காக என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
February 23, 2014
… … தமிழகத்தில் ஒன்றுமே சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.
எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (24/n)
நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.
ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.
பதில் கிடைத்ததா? சரி.
கிடைக்கவில்லையா, அதுவும் சரியே.
இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .
ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே சொல்கிறேன்:
சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »
தமிழகத் தமிழர்களாகிய (அல்லது திராவிடக் கட்சிகளாலாகிய) நாம், இந்த ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு என்னதான் செய்யக்கூடும்?
February 19, 2014
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (21/n)
முந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)
பத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும்? போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா? போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும்? (“What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?”)
நம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.
ஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.
அ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்!)
ஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான் தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.) Read the rest of this entry »
சாமினாதன்: மறுசுழற்சி
February 13, 2014
(அல்லது) खेल खतम!
இந்தத் தொகுப்பில் முந்தைய பதிவுகள்: சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014), முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? (10/02/2014)
பெரியவர்புராணம் தொடர்கிறது…
… அந்தப் பெரியவருக்கு என்னைப் பற்றி – 1) முரடன், 2) பொறுப்பற்றவன், 3) புத்தகங்களுக்கும் வாழ்க்கைக்குமுள்ள வித்யாசங்களைத் துளிக்கூட உணராதவன் ( ‘சிறு வயதில் படிக்கக்கூடாத புத்தகங்களை, தேவைமெனக்கெட்டுப் படித்து வேதாந்தியானவன்’), 4) ரொம்பத் தலைக்கனம் பிடித்தவன் (’பெரியவங்க கிட்ட மட்டு மரியாதையில்லாதவன்’), 5) படித்த(!) படிப்புக்கான(!!) வேலை, சம்பாத்தியம் என்றில்லாமல் கிறுக்குத்தனமாக நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான் 6) பணத்துக்கு உரிய மரியாதையைக் கொடுக்காதவன் (‘வரும் லக்ஷ்மியை உதாசீனம் செய்பவன்’) 7) வேலையற்றவேலைகளில் ஈடுபடுபவன் — — என்றெல்லாம் எண்ணமுண்டு என்று எனக்குத் தெரியும். அவரே பலமுறை நேரடியாக என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
எனக்கும், மேற்கண்ட ஜாபிதாவில் என்னைப் பற்றி மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவதைத் தவிர இதே சுய மதிப்பீடுதான். ஆகவே, அவர் இந்த ஜாபிதாவை ஆரம்பிக்கும்போதெல்லாம் தந்திரோபாயமாக — நீங்கள் சொல்வது சரிதான், இப்போது என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்று பதிலளித்து விடுவேன். அவரும் வாயடைத்துப்போய் அப்போதைக்கு என்னை விட்டுவிடுவார்.
பிரச்சினை என்னவென்றால், அவர் நோக்கில் – நான், மேற்படிப்பும் படிக்காமல், ‘ஸெட்டில்’ம் ஆகாமல், அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு சினிமா இலக்கியம் என அலைந்து கொண்டிருந்தது அவருக்கு உவப்பானதாக இல்லை. இத்தனைக்கும், நான் என்னுடைய பதினேழுச் சொச்ச வயதிலிருந்து அவரிடம் பணரீதியாகவோ, மனரீதியாகவோ கடமைப் பட்டிருக்கவில்லை. Read the rest of this entry »
வாழ்த்துகள்: எஸ் ராமகிருஷ்ணனுக்கு நொக்கர் (2014) விருது!
January 25, 2014
நொபெல் பரிசையும் புக்கர் பரிசையும் இணைத்து, அறிவியல்-இலக்கியங்களுக்காகவென நிறுவப்பட்ட மிகப் பிரபலமான நொக்கர் விருதை, பல்லாண்டுகளாக, ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரியா நாடு அளித்து வருகிறது என்கிற அற்புதமான விஷயம், தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.
மேலதிகமாக, இவ்விருதைப் பெற்ற புத்தகத்துக்கு லைபீரியா, பெரிய லைப்ரரி ஆர்டர் ஒன்றைக் கொடுக்கும் என்கிற விஷயத்தையும் பல தமிழ்ப் பதிப்பாளர்கள் – ராயல்டி ஏய்க்கும் பதர்கள் – மறைத்து விடுவார்கள், என்பதும் பலருக்குத் தெரியாது.
ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த மன்ரோவியா நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பரும், அகழ்வாராய்ச்சியாளரும், மேலதிகமாக ஐ.ஏ.எஸ்-ஸுமான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்).
ஆர்பா அவர்கள் அவருடைய கட்டுரையில் – தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஆர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, பாஷ்யம் ‘சாண்டில்யன்’ அய்யங்கார் போன்றோர்களின் ஆய்வுகளிலிருந்தும், ராஜசிம்ம பல்லவனும் அருண்மொழித் தேவனும் கொள்கைக் கூட்டணி அமைத்து அக்காலத்திலேயே ஆப்பிரிக்கா சென்று குளம் தொட்டு வளம் பெருக்கியதைப் பற்றிப் பேசும் ஜப்பானில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும் இந்த லைபீரிய உண்மையைக் கண்டெடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-0-0-0-0-0-0-0-0-
நிற்க, நாம் நொக்கர் விருது பற்றித்தானே பேசிக் கொண்டிருந்தோம்? … … சரி. இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்: கலகத்தமிழ்ப்பிரதிக்காரரான மேதகு சாருநிவேதிதா அவர்களே கூறியிருக்கிறார்கள் – இந்த நொபெல் விருதானது நொபெல் + புக்கர் + கலைமாமணி + பத்மஸ்ரீ + பத்மப்பிரியா + பத்மநாபன்(வியட்நாம் வீடு) இணைந்து ஒருசேர வழங்கப்படுவதற்கு நிகரானது, என்று.
லிராய் ஜோன்ஸ் = இமாமு அமிரி பராகா: சில குறிப்புகள்
January 22, 2014
லிராய் ஜோன்ஸ் (LeRoi Jones) என்னைப் பொறுத்தவரை ஒரு மிக நல்ல கவிஞரும், மிக மிக அழகான அழகியல் சார் இசை விமர்சரும். உலகத்துக்கு அமெரிக்கா கொடுத்த கொடைகளில் ஒருவர் அவர். ‘கறுப்பர் கலைகள்’ (Black(!) Arts(!!)) என்றழைக்கப்படும் 1960களில் இயங்கிய இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர்.
எனக்கு இவருடைய எழுத்துகளின் அறிமுகம் கிடைத்தது, 1978 வாக்கில் என நினைவு – முதலில் படித்தது இவருடைய டட்ச்மேன் எனும், இன்னமும் என் நினைவில் இருக்கும், படு அற்புதமான, நெஞ்சைப் பிழியும் நாடகத்தை; ஆனால், இதன் நாடகமாக்கத்தைப் பார்க்க இன்றுவரை கொடுப்பினை இல்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், இந்த நாடகத்தின் தமிழாக்கத்தை, தமிழ்ப் பண்பாட்டுடன் பொருத்திப் பார்த்தலைச் செய்தால், லிராய் ஜோன்ஸ்-ன் அரசியல் நகர்வுகளை நோக்கினால் — நமக்கு தலித் இலக்கியம், தலித் கவிதை, தலித் அழகியல் என்றெல்லாம் தேவையற்றுப் பிரித்துப் பேசி, அயோக்கியத்தனமாக நாம் அனைவரும் உளறிக்கொட்டிக் கொண்டிருப்பது தெரியவந்து, நம் தற்காலத் தமிழ்ப் பண்பாட்டுஅரசியலை வெறுக்கவைக்கும்… Read the rest of this entry »
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!)
January 14, 2014
இதாணு: எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?
லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!
… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ ‘எஸ்ராவோடெ ராவுகள்’ — ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள குருத்தங்கெட்ட தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.
… … … … பேடிக்கண்டா! … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?
… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!! aye aegree. zuizide is zimbly no zolution. uou onderztand?
…Besides, ezra is a thick armoured battletank, he can pound away merrily, while you lousy lusers keep complaining. Resistance is futile, yes. :-(
சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.
எச்சரிக்கை: இது ஒரு ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(
கட்டெறும்பு பெருத்து, கழுதையான கதை :-(
January 5, 2014
(அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் ஏன் இப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார், பாவம்…
ஹ்ம்ம்… இதுவரை, பொதுவாக — நம்முடைய பலதடவை முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்கள், எதனைப் பற்றி என்ன சொன்னாலும் எழுதினாலும் – அது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானதாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும்தான் இருக்கும் என்றுதான் அவற்றினை அணுகியிருக்கிறேன். ஆச்சரியம், ஆச்சரியம் – அவையும், ஒரு விதிவிலக்கு கூட இல்லாமல் இதுவரை அப்படியேதான் இருக்கின்றன. இயற்கைக்கு நன்றி.
ஆனால் — இவரைப் புரிந்து கொள்ள முடிவதற்கு, ஒப்புக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் (= இவர் ஒரு தொழில்முறை திராவிடத் தலைவர், தொட்டில் பழக்கம் என்றிருக்கிறதே, மாபெரும் குடும்ப நலன்களைக் கவனித்துக் கொள்ளவேண்டுமே – என்பது போல) இருக்கின்றன.
ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளை – என்னால் இக்காலங்களில் புரிந்து கொள்ள முடியவேயில்லை; தாளவும் முடியவில்லை! Read the rest of this entry »
வெள்ளெயானே வெளியேறு!
January 1, 2014
(அல்லது) இதுதாண்டா விமர்சனம்!
மொதல்ல ஒங்க அல்லார்க்கும் ஒரு ஸலாம் வெச்சுக்றேன்!
வணக்கம் ஸார். வணக்கம் லேடீஸ்.
பகத்சிங்க வெள்ளக்காரனுக்குப் போட்டுக்கொட்த்த, அம்பேத்கார் முதுக்ல குத்துன, பெரியார் மேல சூனியம் வெச்ச அந்த ஆரிய காந்தியப் பத்தி – மானாவாரியா, மூச்சுமுட்ட ஒரேடியா வுடாத ஆதரிச்சிக்கினு தெனாவெட்டா எளுதிக்கினே கீராரே இந்த செயமோகன் – அவ்ரே ஒரு புது பொத்தகத்தையும் எளுதிருக்காரு. புக்கு, பாக்க கொஞ்சம் குண்டாத்தான் கீது. வெள்ளேயானேன்னிட்டு எம்மாந் தெகிர்யத்தோட, வெள்ளக்காரனுங்க நெஞ்சத்ல கீற மஞ்சாசோத்த எடுக்றாமாரீ, நாக்கப் பிடுங்கிக்றாமாரீ எள்திருக்காரு இந்த செயமோகன்? பொத்தகத்தோட தலப்பே டாப்டக்கராத்தான் கீது.
ஆனாக்க என்க்கு மன்ஸ்ல ஒரு பெத்த கேள்வீ… அந்த குவிட் இண்டியா 1942 ஆகஷ்டு புர்ச்சி மண்ணாங்கட்டீ தெர்ப்பிள்தீ பத்தீ, இப்ப டெசம்பர்லயா – அதுவும் அத் நட்ந்த எளுவ்து வர்ஸத்துக்கு அப்றமாவா ஒரு புக்க எள்தீ – அத்த 2013ல ரிலீஸ் பண்வாங்க?
… இன்னாடா இது – பிர்யவே மாட்டேங்க்து… இந்தப் பதிப்பாளனுங்க்ளையிம் தூண்ல கட்டி நல்லா ஒதிக்கணும் – பேமானிப் பசங்ளுக்கு எப்போ என்னாமாரீ புக்கு போட்டா அது விக்கும்னிட்டு தெரீயவே மாட்டேங்து… எப்படியோ வித்துட்டானுங்கன்னாலும், எளுத்தாளனுங்க ராயல்டீ கேட்டாக்க, லைப்பரி ஆர்டர் கெடக்கலேன்னிட்டு டபாய்ப்பானுங்க. எளுத்தாலங்க அல்லாம், அவங்க பொண்டாட்டியோட வந்து அள்து பொரண்டுக்கினு றொம்பொ ப்ரெஸ்ஸர் போட்டாக்க, ராயல்டீ இல்ல கவிஞ்சரே, கொஞ்சம் ரெட்லேபிள் சூப்பர்டஸ்ட் டீதான் கீதுன்னுட்டு ஒரு லோட்டா கொடுப்பானுங்க… சூடா குடிச்சிட்டு சூத்தாமட்டைய தொடச்சிக்கினு ரிட்டர்ன் ஆய்ட்ணும். அவ்ளோதான். Read the rest of this entry »
தமிழ இயல்பு: ஸ்னெல் ஒளித்தடம் + ஸிப்ஃப் மானுட இயல்புக் கோட்பாடுகள்
December 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)
சாளரம் #8: ஸ்னெல் ஒளித் தடக் கோட்பாடு: ஓளியானது, எதிர்ப்பு குறைவாகவுள்ள பாதையில், ஆக அது வேகமாக செல்லக்கூடிய, நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடிய பாதையில் மட்டுமே செல்லும்.
உப ஸிப்ஃப் கோட்பாடு: மனிதனின் தாங்குசக்தியும் மனவலிமையும் பொதுவாக மிகக் குறைவு – அப்படியே அவை இயங்கினாலும் அவை, எதிர்ப்பு குறைவாகவுள்ள, சுளுவான வழிமுறைகளில் மட்டுமே ஈடுபடுபவை.

இது 1949-ல் வெளிவந்த, பின்னர் பலராலும், மொழியியல் உட்படப் பல துறைகளிலும் மிகவும் பேசப்பட்ட ஒரு புத்தகம். பேராசிரியர் ஸிப்ஃப் அவர்கள் ஒரு மாமேதை என்பதில் ஐயமேயில்லை. (என்னிடம் இருப்பது, இந்தப் பழைய பதிப்பு தான்)
இதன் புதுக் கருக்குக் குலையாத ஒரு அச்சுஅசலான ஃபேக்ஸிமிலி பதிப்பு 2012ல் வந்திருக்கிறது. அதன் அட்டைப் படம் (அமேஸானிலிருந்து), கீழே: Read the rest of this entry »
what is education?
December 18, 2013
Every once in a while, I do conduct some random workshops (or training sessions if you will), pontificating on what fancies me at that moment.
And so, it was the turn of a few hapless fellow teaching-colleagues who were unfortunate enough to be part of the conscripted audience of a 2.5 hour talk (spread over two days – conducted a few weeks back) delivered by yours truly (of the I-Me-Myself fame).
I wanted to do the talk in Tamil – but that was not to be, because 1) Most of the audience was made up of fellow Tamils – so they wanted it in English 2) There were a few non-Tamils who of course wanted it in English.
Normally my talks (*gasp*) are just plain ol’ stand-up comedy types – but this time, it was done with a few handouts and all that paraphernalia. I even made a powerpoint presentation, O tempora, O mores! :-(
இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »
கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பாளர்
December 8, 2013
தமிழகத்து மொழிபெயர்ப்பாளர்களில் – அதுவும் பரவலாக வாசிப்பனுபவமும், பிற அனுபவங்களும் – மிக முக்கியமாக, அடிப்படை நேர்மையும் மிக்க படிப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கல்யாண்ராமன் அவர்களை மதிக்கிறேன். அவர்களின் நேர்முகம் சொல்வனம் – கல்யாணராமனுடன் ஒரு காஃபி – ஒரு நல்ல, அமைதியான, பழைய நினைவுகள் பூத்துக் குலுங்கும் நேர்காணல். (இந்தச் சுட்டி, நண்பர் ஒருவரின் மின்னஞ்சலில் இருந்து கிடைத்தது)
சமீபத்தில் நான் படித்த நேர்காணல்களில் நன்றாக, ஆற்றொழுக்கு போல வந்திருக்கும் ஒன்று இது.
நல்ல காஃபி குடித்துக் கொண்டே உரையாடியதால்தான் இது சாத்தியமாகியிருக்கும் என்பதெண்ணம். உலகின் முதல் காஃபி, திராவிடக் காஃபியல்ல என்பதும் இன்னொரு முக்கியமான எண்ணம்.
காஃபி நாமமும், நறுமணமும் வாழ்க, வாழ்கவே! Read the rest of this entry »
நம் தமிழர்களின் அதிசயிக்கவைக்கும் அறியாமையும், அது குறித்து நாம் கொண்டிருக்கும் பெருமையும்
December 1, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (11/n)
சாளரம் #5: தமிழகத்தில் பொதுவாக – மானுடப் பரிணாமம், இனம், மொழி, இயக்கம், வர்க்கம், ஜாதி, போராட்டம், கட்சி, அரசியல், அரசு போன்ற அடிப்படைகளின் மீது சரியான புரிதல்கள் இல்லை; போராட்டங்களும், இயக்கங்களும் – அரசியல் கட்சிகள் போலல்லாமல் இன்னொரு வித ஜந்துக்கள் என்றுகூட நாம் புரிந்துகொள்ள மாட்டோம் – ஆக, கந்தறகோளங்களை நம் புரிதல்களாக அவதானித்து, மகாமகோ கர்வத்துடன், பொறுக்கமுடியாத இறுமாப்புடன் பவனி வருபவர் நாம்.
இதற்கு – தமிழ், திராவிடம், இனம் என ஆரம்பித்த தமிழ்த்தேசிய அரசியல் – பிரித்தானியக் காலனிய வேலை வாய்ப்புகளில் ஒரு சாராரே உட்புகுகிறார்கள் எனக் கருதி, இன்னொரு சாராருக்கும் பங்கு வேண்டும் என ஆரம்பித்து – பின்னர் வேறு எதற்கோ ஆரம்பித்தோம் எனக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அதற்குப் பின்னர் திராவிட இயக்கமாய் உருமாறி – அதற்குப் பின் தேய்ந்துபோய் கட்டெறும்பு ஆகிவிட்டதும் ஒரு காரணம். (Tamil nationalistic (actually notionalistic) politics – from where it started off – hankering after colonial jobs – is now mainly indulging in the continual institutionalization of sheer lumpen stupidity.)
ஹஹ்ஹா! நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி!! (= நகைச்சுவை)
November 30, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4
சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.
ஆனால், நம்மை யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.
calculus made easy!
November 22, 2013
‘The Annotated Alice‘ of Lewis Carrol and Martin Gardner – was (finally) returned a couple of weeks back by my dear Rama and I was fondly leafing through it, before sentimentally returning it to the library shelves. It is currently rubbing shoulders with the books of the likes of Isaac Asimov, JBS Haldane, Erwin Schrödinger, Enrico Fermi, Paul Dirac, Albert Einstein, Robert Oppenheimer et al and should be feeling happy now; what a work of deep scholarship!
Rest in peace, Martin. You lived to a ripe old age of 96 and also did a great job of living, all the while!
Having thoroughly enjoyed (actually a lame word like ‘enjoyment’ does begin to describe the pure exhilaration one feels studying a Martin Gardner or a Douglas Hofstadter or a Richard Feynman) ‘The Annotated Alice’ among many other works of Martin, I am reminded of that 1910 gem ‘Calculus Made Easy‘ of Silvanus Thompson which was later updated and edited by Martin in 1998. ( I just realized that this classic, a real classic at that, has completed hundred years of its existence!)
Now, what is oh so great about the book? Read the rest of this entry »
(or) USSR (RIP), MIR Publications, and oh yeah – Yakov Isidorovich ‘Y Perelman’: Physics can be Fun! (aka ‘Physics for Entertainment’)
This book published in 1913, – ‘Physics can be Fun’ – is truly a classic and is still a classic. I recommend it heartily to anyone (and everyone) who is fortunate enough to have a passing knowledge of English – well, that’s how I recommended it to myself in the first place!
In my humble opinion, no home is complete without this book on its bookshelves. Really.
I am of the opinion that, if one really goes through the book, it would be next to impossible NOT to appreciate the wonderful world around us. Oh the pure joy! ‘Physics can be fun’ is eminently readable, sprinkled with great insights & cutesy diagrams and is a fantastic work of translation (from the Russian original – or so a little Ruski bird tells me!).
However, I note that these are the stellar times of the gag reflexes – sometimes even from otherwise well accomplished people! You enthusiastically start talking about some delightful aspect of math or literature or film or science or music or whatever, or even cooking for that matter – and you can literally (and immediately) see the eyes of your acquaintances glazing over, eyeballs bulging in disbelief, as they sincerely feel that ‘I can’t do / understand it’ all the time.
They tell themselves forever that they are not good at this, not good at that, they are not made to understand these things, I am like this only etc etc and so very happily settle for Aamir Khan films mediocrity! How sad… What a waste of human potential! Read the rest of this entry »
ஹோமர்-ன் காவியங்கள்: இவற்றை, நான் (கொஞ்சமாவது) புரிந்து கொள்வதற்கு உதவிய புத்தகங்கள்
October 13, 2013
ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள் படித்தீர்களா? (அதில் ஒரு விஷயம் எழுத மறந்துவிட்டேன் – அந்தப் பேச்சுகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன – அதாவது குறுந்தொகை + புறநானூறு குறிப்புகளைத் தவிர)
எனக்குத் தெரிந்து, மேற்கண்ட குறிப்புகளைப் பார்த்த படித்த இரண்டே பேர்களில் ஒருவர் எனக்கு உதவியாக இருந்த புத்தகங்களின் ஜாபிதாவைக் கேட்டிருக்கிறார். ஆக, அதனைக் கீழே கொடுக்கிறேன்; எனக்கு எப்போதுமே, ‘யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்’ தான். ;-) Read the rest of this entry »



