கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பாளர்
December 8, 2013
தமிழகத்து மொழிபெயர்ப்பாளர்களில் – அதுவும் பரவலாக வாசிப்பனுபவமும், பிற அனுபவங்களும் – மிக முக்கியமாக, அடிப்படை நேர்மையும் மிக்க படிப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கல்யாண்ராமன் அவர்களை மதிக்கிறேன். அவர்களின் நேர்முகம் சொல்வனம் – கல்யாணராமனுடன் ஒரு காஃபி – ஒரு நல்ல, அமைதியான, பழைய நினைவுகள் பூத்துக் குலுங்கும் நேர்காணல். (இந்தச் சுட்டி, நண்பர் ஒருவரின் மின்னஞ்சலில் இருந்து கிடைத்தது)
சமீபத்தில் நான் படித்த நேர்காணல்களில் நன்றாக, ஆற்றொழுக்கு போல வந்திருக்கும் ஒன்று இது.
நல்ல காஃபி குடித்துக் கொண்டே உரையாடியதால்தான் இது சாத்தியமாகியிருக்கும் என்பதெண்ணம். உலகின் முதல் காஃபி, திராவிடக் காஃபியல்ல என்பதும் இன்னொரு முக்கியமான எண்ணம்.
காஃபி நாமமும், நறுமணமும் வாழ்க, வாழ்கவே! Read the rest of this entry »
நம் வளமையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல்… (ஒரு பணிமனை)
November 6, 2013
எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் திரு ராஜகோபாலன் அவர்கள் நடத்தும் பணிமனை – பேண்தகுநிலை மிகுந்த எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல் – அதாவது ‘Exploring a sustainable future’ டிஸெம்பர் எட்டாம் தேதியில் இருந்து பதினான்காம் தேதி (இந்த 2013 வருடம்தான்) வரை நடைபெறுகிறது.
ராஜகோபாலன் அவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் (IIT-சென்னை, IIT-கான்பூர்) பணி புரிந்தவர். சுற்றுப் புறச் சூழலியலில், ஆழிகள் மேன்மைப் படுத்தப்படல், சமூகவியல், காந்திய சிந்தனை, வாழ்வியல், ஹோமியோபதி போன்ற பல தளங்களில் பணியாற்றியவர், பணி ஆற்றுபவரும் கூட. (இவர் போன்றவர்கள் – நல்லோர், கடற்கோள் இந்தியாவைத் தாக்கியபோது செய்த பணிகள், பின்னர் ஊக்கமூட்டிய புனருத்தாரண, சீரமைப்புப் பணிகள் – பொதுவாக வெளியே தெரிய வருவதே இல்லை)
வயாக்ராபாதர் அருளிச் செய்த ‘வயாக்ரா முன்னால்’
October 20, 2013
அத்வைத் ஆடி கார் விற்பனைக் கடையின் முதலாளி ஆடிகிங்கரர்.
இந்த ஆடிகிங்கரர் அவர்களுடைய பிரதம அடிப்பொடியின் பெயர் தான் வயாக்ராபாதர்.

கருத்துப்படம்: வயாக்ராபாதர் (இவர் பாதங்கள், ப்ஃபீஸர் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த வயாக்ராவினால் உருவாக்கப்பட்டவை)
ஒரு ரகசியம்: உஷ்ஷ்ஷ்… கிட்டே வாருங்கள்; நான் தான் இந்த வயாக்ராபாதர்.வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னொரு விஷயம்: தயவுசெய்து, இந்த கதையை நீங்கள் அத்வைதம் கண்ட ஆதிசங்கரருடனோ அல்லது வியாக்ரபாதருடனோ, குழப்பிக் கொள்ளவே கூடாது. சரியா?
இன்னொரு ரகசியம்: காலடி ஆதிசங்கரருக்கும் இந்த வியாக்ரபாதருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சமயம் தெரிவிக்கிறேன், சரியா?
-0-0-0-0-0-0-
வயாக்ராபாத புராணம் – அதாவது, எஸ்ரா அவர்களின் ‘ஒரிஜினல்’ கட்டுரையில் இருந்த நயாகரா எல்லாம் வயாக்ராவாக மாற்றப் பட்டு, சில சிறு மாற்றங்களுடன் உள்ளேற்றப் பட்டு – வயாக்ரா முன்னால் அல்லது பின்னால்?? – எனத் தலைப்புப் பெயர் மாற்றமும் பெற்று… …
வயாக்ரா முன்னால்
(வயாக்ராபாதர் அருளிச் செய்தது)
… ‘இரவிலே பல முறை’ என சரோஜாதேவி கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். வயாக்ரா கடையின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. Read the rest of this entry »
முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)
இரண்டாம் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (2/3)
19. சோட்டாபீம் போன்ற அற்ப கேலிச்சித்திர அசிங்க அதிகுண்டக் கோமணர்கள் இல்லாமல், வாழ்க்கையில் வீரத்தையும், விடாமுயற்சியையும் – எப்படித்தான் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது? கேளிக்கை முறை ஊடக நிகழ்ச்சிகளினால் மட்டும்தானே குழந்தைகளுக்கு இவ்விழுமியங்களைக் காண்பிக்க முடியும்? சேர்ப்பிக்க முடியும்?
ஆம். இது மிக வருந்தத்தக்க, ஆனால் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.
வேறு வழியில்லை. பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும், இதிஹாசங்களும், புராணங்களும், ஐங்காப்பியங்களும் சொல்லாத, சுட்டாத விஷயங்களை, மிகுந்த நயத்துடன், மிகத் தெளிவாக சோட்டாபீம் அவர்கள் காண்பிக்கிறார்கள். எனக்குப் புல்லரிக்கிறது.
அடிப்படை அறங்களின் ஒரு அங்கமான நேர்மை, தைரியம் போன்ற அடிப்படை விழுமியங்களை, பெற்றோர்களாகிய நம்மால் பல்வேறு அழுத்தங்களால் நம்முடைய குழந்தைகளுக்குப் புகட்டமுடியாமல் போகும்போது, யாராவது தொலைக்காட்சியில் இவற்றைக் காண்பித்தால் என்னைப் போன்ற உலுத்தர்கள், புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தச் சனியன்களுக்கு வேறு வேலையில்லை. மேலும் உங்களுடைய குழந்தைகள், சோட்டாபீம் படம் வரைந்த மேல்சட்டைகளை அணிந்து கொண்டு உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, உங்கள் இதயம் உருகிவிடாதா? Read the rest of this entry »
முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)
10. ஆனால், தொலைக்காட்சியில் நாம் இப்போது பார்க்கும் விஷயங்கள், கண்+செவி கொண்டு நம்மை அடையும் செய்திகள், பிற்காலத்தில் நமக்கு உபயோக கரமாக இருக்கலாமில்லையா? எதிர்காலத்தின் நாம் உபயோகிக்கக்கூடும் நினைவுகள், தற்காலத்திய இந்த்ரியத் துய்த்தல்கள் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன அல்லவா?
நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நம் நினைவில் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ எவ்வளவு கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொண்டவைகளிலிருந்து நாம் எவ்வளவு சதவிகிதத்தை உபயோகித்து நம்மை உய்வித்துக் கொண்டிருக்கிறோம், மகிழ்வித்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்தால் நலம்.
பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு – ஒரு நீண்டகால தாக்கத்து என்பது இல்லை. அவை சாதாரணமான துய்த்தல்கள் தான். அதிக பட்சம் One night stand போன்றவைதான். Read the rest of this entry »
எச்சரிக்கை: இந்தப் பதிவில் 1) ஏன் தொலைக் காட்சி என்பது வெறுக்கப் படவேண்டியதொன்று 2) அதனால் ஒரு சில நன்மைகள் தப்பித் தவறி இருந்தாலும் – உண்மையில் அது எவ்வளவு தீமை செய்கிறது 3) தொலைக்காட்சி முதல்வாத அடிப்படைவாதிகளுக்கு (Television Fundamentalists!), சோம்பேறிப் பார்வையாளர்களுக்கு எதிராக என்றெல்லாம்…
… பிரகடனங்கள் இல்லை. மன்னிக்கவும்.
ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் பின்னொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன். 8-)
மாறாக – என் பார்வையில் – குழந்தைகளுடனான ஒரு குடும்பச் சூழலில், சராசரித் தர (அறிவு, பொருளாதாரம், பார்வை, அனுபவங்கள் இன்னபிற) பெற்றோர்களால் – தங்கள் வீட்டில், தொலைக்காட்சியில்லாமல் என்னதான் செய்யக் கூடும் என்பதை மட்டுமேதான் இப்பதிவில் விவரிக்கப் போகிறேன்; இங்கு ஒரு முக்கியமான விஷயம்: எனக்குத் தெரியும் – நானும் ஒரு சராசரித்தனமான ஆள்தான் – அகஸ்மாத்தாக ஒரு கணவன், தந்தை போன்ற பல பாத்திரங்களில், குணசித்திர வேடங்களில் நடிப்பவன்தான். இன்னும் முக்கியமாக, நான் ஒரு அறிவுஜீவி கிறிவுஜீவியென்றெல்லாம் இல்லை.
ஆகவே, கடந்த சுமார் 30 வருடங்களாகத் தொலைக்காட்சியின் கிட்டவே போகாமல் காலம் தள்ளியிருக்கும் ஒரு சாதாரணன் என்கிற முறையில் மட்டுமே இந்தக் கேள்வி-பதில் நடைப் பதிவு நீளும். யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்விகளை எல்லாம், என்னிடம் பலபேர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்கள்; விதம் விதமான பதில்களையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் மகனை, மேதகு சோட்டாபீம் அவர்களிடமிருந்து மீட்க வேண்டுமாம். ஆக, இந்தப் பதிவு; வழக்கம்போல, யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் !
Read the rest of this entry »
டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு)
October 15, 2013
கடந்த நான்கு மாதங்களில் இலியட் + ஆடிஸ்ஸி காவியங்களைப் பிழிந்து, சக்கையை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்ததை, உதவியாக இருந்த புத்தக ஜாபிதாவைப் பற்றியென்று — இரண்டு பதிவுகளில் எழுதியிருந்தேன்; பாவம் அந்தப் பிள்ளைகள். (ஏன், நீங்களும் தான்!)
இதன் தொடர்ச்சியாக, இந்த டீடலஸ்+இகரஸ் (Daedalus, Icarus) கதைகளை, சென்ற பத்து நாட்களில் – நான்கு நாட்கள் (மொத்தமாக சுமார் ஒன்றரை மணி நேரம்) என் குழந்தைகளுக்குச் சொன்னேன்.
எது எப்படியோ…
இந்த டீடலஸ், ஸிஸிபஸ் (Sisyphus) கதைகளெல்லாம் எனக்குப் பிடித்தமானவை. இதற்கு முக்கியமான காரணம், டீடலஸ் பாத்திரம் – இவன் ஒரு நல்ல பொறியியலாளன், கண்டுபிடிப்போன், கட்டமைப்போன் – என்பவை மட்டுமல்ல, அவன் மனிதனின் உட்கிடக்கையின் உன்னதங்களும் சகல கீழ்த்தரங்களும் உள்ளவனாக – ஒரு சாதாரணனாகச் சித்திரிக்கப் படுவதனாலும்தான் எனக் கருதுகிறேன்.
<–/-0-0-0-0- குறிப்பு #1 -0-0-0-0-\–>
கொஞ்சம் அதிகமாகவே சுருக்கமாக இந்த டீடலஸ், இகரஸ் (கிரேக்க) கர்ண பரம்பரைக் கதைகளை – அவற்றின் ஒருவிதமான கதையாக்கத்தைக் கொடுக்கிறேன்: Read the rest of this entry »
ஹோமர்-ன் காவியங்கள்: இவற்றை, நான் (கொஞ்சமாவது) புரிந்து கொள்வதற்கு உதவிய புத்தகங்கள்
October 13, 2013
ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள் படித்தீர்களா? (அதில் ஒரு விஷயம் எழுத மறந்துவிட்டேன் – அந்தப் பேச்சுகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன – அதாவது குறுந்தொகை + புறநானூறு குறிப்புகளைத் தவிர)
எனக்குத் தெரிந்து, மேற்கண்ட குறிப்புகளைப் பார்த்த படித்த இரண்டே பேர்களில் ஒருவர் எனக்கு உதவியாக இருந்த புத்தகங்களின் ஜாபிதாவைக் கேட்டிருக்கிறார். ஆக, அதனைக் கீழே கொடுக்கிறேன்; எனக்கு எப்போதுமே, ‘யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்’ தான். ;-) Read the rest of this entry »
ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்
October 12, 2013
இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கி செப்டெம்பர் 20 வரை, பெரும்பாலான தினங்களில் (=ஏறக்குறைய 55 நாட்கள்), காலை நேரக் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் 20-22 நிமிடங்கள் (மொத்தமாகச் சுமார் 1100 நிமிடங்கள் – குறைந்த பட்சம் 18 மணி நேரங்கள்) ஹோமர்-ன் இந்த இதிஹாசங்களை – Iliad + Odyssey – ஒரு கதை (பேருரையல்ல. மன்னிக்கவும்) போலச் சொல்லியிருக்கிறேன்.
என்னுடன் வேலை செய்யும் பாவப்பட்ட சகஆசிரியர்களும், பரிதாபத்துக்குரிய 7-10 வகுப்பு மாணவர்களும் தான் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். பாவம், அவர்கள் அபாக்கியவான்கள். பரலோக ராஜ்ஜியம் நிச்சயம் அவர்களுடையதில்லை. Read the rest of this entry »
ebrahim alkazi, studying mahabharatha – some notes
September 28, 2013
I’ve read the Odyssey and the Iliad a few times, soaked in them (not in the original Greek though, sadly), I respect them – but nothing that I have ever read so far, comes even reasonably close to that grand epic mahabharatha.
It is not because, I am from India or anything that I think so about mahabharata. I would consider the likes of Kurosawa Akira, Johannes Sebastian Bach, Dawn Upshaw, Parveen Sultana, Kiri Te Kanawa, M S Subbulakshmi (this listing is delightfully endless..) – not to mention ‘The Brothers Karamazov,’ ‘Remembrance of things past’ etc etc – all part of my tradition & hoary past too! In my view, all great and grand things & people of the world are part of our common tradition. Ahem!
So, one can ask why? What is so significant about mahabharata?? Read the rest of this entry »
the magical child
September 25, 2013
Am reproducing some of the notes that I jotted down from my readings of Joesph Chilton Pearce and Jean Piaget and a couple of basic evolutionary biology books – these notes are slightly dated – only 20 years old, but then… they continue to fascinate me…
-0-0-0-0-0-0-0-
Apparently, it is the heart that gets formed first. Not the brain. And, I am talking about the foetus. We were all one in our earlier avatars, though we may not remember it. Foetal attraction, yeah.
Apparently, post conception, the mother’s heart sends a signal to the mass of cells that is in the womb and a few of these cells start pulsating in rhythm to that of the mother’s heart – this group develops into the heart of the foetus. Eventually there is some kind of magnetism (or may be not) that sets in due to this pulsation and the cells around this heart, get a signal to go become a this or that in the body of the child in the womb. The brain also is formed as some cells receive such an instruction from the incipient heart of the foetus. Read the rest of this entry »
ஒத்திசை/தொடரிசை மின்சுற்று வடிவமைப்பு: கலை, அறிவியல், ஆளுமைகள்
September 7, 2013
ஆஹா! நான் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் செய்தவன். எனக்குத் தொடர்ந்து கிடைக்கும் அற்புதச் சந்தர்ப்பங்களும், கதவு திறப்புகளும் – என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ‘ நல்லூழ்’ என்றெல்லாம் பேசவைத்து, ‘கர்மா’ கோட்பாடுகள் கிட்டே அழைத்துக் கொண்டு போய், பின்னர் என்னை ஒரு ஆத்திகனாகவே ஆக்கி விடுமோ என்று நினைத்தால்… அய்யய்யோ. :-(
ஆனால், பாதகமில்லை. :-)
ஓவ்வொரு இரண்டொரு ஆண்டு இடைவெளிகளிலும், என்னுடைய பொதுவான தாமச குணத்தையும் மீறி, சில மிக அழகான புத்தகங்கள் கண்ணில் பட்டுவிடுகின்றன. அவற்றின் வடிவமைப்பிலும், செய்நேர்த்தியிலும் (அவற்றின் உள்ளடக்கத்தையே விடுங்கள்) அவை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகின்றன. Read the rest of this entry »
on death
August 20, 2013
Happy new day everyday and all that…
On to the subject – I have been thinking about this interesting idea of death for a few years now – and this is to just give the readers of the blog, two links and so.
=-=-=
I have not read anything more poignant than this column written by Emily Rapp in NYT, lately.
Please read Notes from a Dragon Mom – and ponder over how fortunate the rest of us are.
Parenting, I’ve come to understand, is about loving my child today. Now. In fact, for any parent, anywhere, that’s all there is. Read the rest of this entry »
… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும். அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு ஒன்றுதானே!
எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!
… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே! ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.
little boys will always be little boys… [oh yeah?]
August 9, 2013
The so called ‘traditional wisdom’ has it that ‘little boys will always be little boys’ and so by extension, ‘little girls will always be little girls.’
How I have always resented, if not deeply hated the set of unjust assumptions and squirmed whenever such statements were uttered by folks who should know better… But, whatever little that I could do – either in my class or elsewhere – and whenever I see a hint of this asinine stereotyping, I try my best to debunk it.
In fact, I would say with arrogant conviction that, the girls in my classes tend to eventually outshine, outsmart, outmaneuver and outclass the boys – this would be in ALL subjects. Read the rest of this entry »
James Clavell on Education
July 17, 2013
James is a guy better known for his novel – Shogun and a few others – not that these novels are great pieces of world class literature. With some effort, one can read them once, that’s all.
But, I had read this rather unusual short story – The Children’s story of his, a few years back and I remember to have been very pleased with it – and thanks to the efforts of good ol’ Arvind Gupta, this is available online and I read it again,
Oh, the horror, the horror…
With shades of the ‘animal farm,’ ‘keep the aspidistra flying’ and ‘1984’ – and even that of that fascist & crazed maniac Pirabakaran’s very own ‘Tamil’ Eelam, if it ever does shape up — this story makes one shudder.
a very personal list of books on ‘Education’
June 27, 2013
> Could you please send the list of books on how children learn which you had
> mentioned in your latest entry.
Dear [names redacted]:
xkcd: ஒத்திசைவு
April 16, 2013
our daughters, education, choices
April 15, 2013
Ross Douthat has written a rant (hat tip to Sriram Naganathan, for the article) – The secrets of Princeton. This is a reaction to the essay that an ex-Princetonian Susan Patton wrote: Advice for the young women of Princeton: the daughters I never had.
I would request all readers of this blog to read the above two articles – as they have a solid bearing and a few valuable insights. Ross’ has more incite than insight, that is – but in the name of preservation of perverse diversity and promotion of Armed Chair Intellectualism, I would give Ross his due too, though I want him to get his just desserts.
My own warped opinion follows: The articles are an interesting read. They confirm my suspicions. Susan Patton’s essay is cool, honest & genuine.
I believe in meritocracy, elitism and all those politically incorrect & inconvenient terminologies – and of course in the basic ideas of that dismal science – Economics. Read the rest of this entry »
If you are in Bangalore, and if you can spare the time, please go listen to the talk. (Oh how I miss these kinds of stuff that are available & accessible only to the city-dwellers!)
In a world that abounds in fake-science, fake-technology, fake-religion, fake-activism and fake-atheism – and various other singletonian views of The Universe – I feel that these kinds of discussions are important to get our bearings right…
Robert Geraci is the Author of ‘Apocalyptic AI: Visions of Heaven in Robotics, Artificial Intelligence, and Virtual Reality‘ a 2010 book that I liked a lot for its integrity – and for its deep knowledge of the semantics of technology and of religion. I strongly recommend this book too!
———- Forwarded message ———- Read the rest of this entry »





