தேனி ந்யூட்ரினோ ஆய்வு மையமும் தேவரடியார் புதல்வர்களும்
October 29, 2016
Read the rest of this entry »
பாரதத்துக்கான புதிய கல்விக்கொள்கையும், நம்முடைய செல்லங்களான விடுதறுதலை இசுடாலிர் வகையறா ஞானக்கொழுந்துகளும்
August 11, 2016
…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »
மொழிவெறி, திராவிடம், கருணாநிதிகள் – சில குறிப்புகள்
June 17, 2016
என்னைப் பொறுத்தவரை (மட்டுமல்ல; நான் மதிக்கும், தொடர்பிலிருக்கும் பல அறிஞர்/சான்றோர்கள் கருத்தும்கூட): Read the rest of this entry »
30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று: தீர்மானம் 5(ஆ!) Read the rest of this entry »
இசுடாலிர்: மாணவர்கள் ஊக்கு விக்கவேண்டும்!
October 18, 2015
கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி, எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.
ஆனால் அவர் பழைய ஃபேஷன்!
புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?
ஒவ்வொரு முறை எம் இனமானத்தலைவர், சுயபச்சாதாபப் பிலாக்கணம் வைக்கும்போதும் – ஏதாவது அப்பட்டமான உண்மையை வாய் தவறிச் சொல்லிவிடுகிறார். ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல ஒருமாதிரித் தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, கல் நெஞ்சினனான என்னையேகூட திடுக்கிடச் செய்துவிடுகிறார்.
அட்ச்சு வுடு தல வீரமணி ஸ்பெஷல்: மொட்டத்தலைக்கும், மசுத்துக்கும் பகுத்தறிவு முடிச்சுபோடுவது எப்படி?
August 6, 2015
மேற்கண்ட கட்டுரையின் நீதி:
டப்பா ஒரு ஆண்: ஆக, டப்பாவிலிருந்து சாப்பிடுபவர்களுக்கு வழுக்கை விழுந்தேயாகவேண்டும். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)
டப்பி ஒரு பெண்: ஆக டப்பியிலிருந்து சாப்பிட்டால் ஒரு எழவும் ஆகாது. ஆகவே – 90 வயதிளம் ஆண்களும்கூட அமோகமாகத் தலைவாரிப் பின்னிப் பூச்சூடிக்கொள்ளலாம். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)
எச்சரிக்கை: இது சுமார் 1300 வார்த்தைகள் கொண்ட நீண்ண்ண்ண்ண்ட பதிவு.
போராளித்தன அரைகுறைகளிடமிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலையே கிடைக்காதா? அவர்கள் பாட்டுக்கு கடையை மாற்றிக் கடையை விரித்துக்கொண்டு — பொறுப்போ, சமூகவுணர்ச்சியோ துளிக்கூட இல்லாமல் தொடர்ந்து நம்மைக் காயடித்துக்கொண்டிருக்கிறார்களே!
தொல்.திருமாவளவன்: தமிழக அரசே! திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு!
April 29, 2015
நம் தமிழகத்தில், நேர்மையாகவும் தர்மாவேசத்துடனும் அரசியலை நடத்திக் கொண்டு செல்வதில் தொல். திருமாளவன் அவர்களுக்கு ஈடு இணையே கிடையாது, பாவம். :-(
அதனால்தான் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார், அவர். :-((
அவசரம் அவசரமாக லிமிடெட் தாலி மீல்ஸ் சாப்பிட்டு, அதனைக் கழுவியெடுத்து, நீதிமன்றத் தடைக்கு முன்னே, படுதெகிர்யமாக இனமானம் காத்த விடுதலை புகழ் வீரமணியாரின் புகழ் ஓங்குக!
அய்யோ மூடர்காள், அந்த வேலைவெட்டியற்ற வரலாற்றாளர் சுப்பராயலுவின் சோழர் கதை, எழவெடுத்த நீலகண்ட ஸாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்றில் எழுதிய கதையெல்லாம் சோழர் வரலாறேயல்ல! மன்னிக்கவும்!
கவிஞ்ஜர் கனிமொழி அவர்களுக்கு கலைஞ்ஜர் கருணாநிதி அவர்கள் கொடுக்கும் படுகோர, கொடூர சாபம்! :-(
March 15, 2015
பாவம், கனிமொழி அவர்கள். பெண்ணாகப் பிறந்ததுதான் அவருடைய முதல் குற்றமோ? பிற்காலத்தில் திடுதிப்பென்று கவிஞ்சரானது வெறும் வெகுதூர இரண்டாம் குற்றம்தானோ?
கருணாநிதி: “ஏன், நான் இந்தியப்பிரதமர் ஆகிடக் கூடாதா?”
March 19, 2014
இக்காலங்களில், எனக்கு மிக மிக வருத்தம் தரும் விஷயம் என்பது இதுதான்: யாருமே, கருணாநிதி அவர்களின் மகன் இசுடாலிர் (பயப்படாதீர்கள், இது ஸ்டாலின் அவர்கள் தான்; அவர் பெயரை, திராவிடத் தமிழ்ப்படுத்தி, மரியாதையாக ர் சேர்த்திருக்கிறேன், அவ்வளவுதான்!) உட்பட, கருணாநிதி அவர்களைப் பிரதமராக்குவோம் எனக் கேவலம், சூளுரைக்கக் கூட மாட்டேன் என்கிறார்கள்.
அடலேறேன ஆர்பரித்து காலயந்திரத்தில் சவாரி செய்து, இறந்தகாலங்களுக்கே ஓடிச்சென்று பெரியார் அவர்களையே திருச்சியில் பிறக்கவைத்த, கொஞ்சு தமிழ் பேசும் கோதையான ஆனானப்பட்ட மேதகு குஷ்பூ அவர்களே கூட இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டேனென்கிறார்.
கவிதைகள் பல எழுதி தமிழ்த்தாயைத் தற்கொலை செய்துகொள்ள ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் கவிஞர் கனிமொழி அவர்களும் கூட, இது பற்றி மேதகு ஜாஃபர் ஸேட் அவர்களிடம் “[பிற்பகல் 12:04:04] இந்த மனிதரின், ம்ம், ஆசைக்கும் [இரைச்சல்: சரியாகக் கேட்கவில்லை] அளவேயில்லையா?” என ஏசியதாகத் தெரியவில்லை, குறைந்தபட்சம் இதற்கான ஒலிப்பதிவானதாவது இதுவரை கிட்டவில்லை – ஒருவேளை ‘சவுக்கு’ தன் பணியை ஓய்வொழிவில்லாமல் செய்வதை விட்டுவிட்டு தினமும் ஒரு மணிநேரம் போலத் தூங்க ஆரம்பித்துவிட்டாரோ?
“தலைவர் உயிருடன் இருக்கும் வரை, அவர்தான் இந்தியாவின் நிரந்தர எதிர்காலப் பிரதமர் [=ஆக ஸ்டாலின் நிரந்தர திமுக இளைஞரணித் தலைவர் மட்டுமே!]” என அழகிரியும் ஒரு சூடான நேர்கோணல் கொடுக்கவில்லை. இந்தக் கடைக் குடும்பத்தின் ஏவல் ஏற்று, பேய் ஓட்டும் காரியங்களைச் செய்துவரும், ஜெயலலிதா மீது சாத்தான்களை ஏவிவிடும் ஏற்றமிகு எடுபிடியான விடுதலை ‘மானமிகு’ வீரமணி அவர்கள் கூட ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறார் – அவர் கையில்தானே ஜால்ரா இருக்கிறது? வாயில் உள்ள கொழுக்கட்டையைத் துப்பிவிட்டாவது ஏதாவது சொல்லலாமல்லவா?
… ஆக, இது ஒரு திட்டமிட்ட திராவிடக் குடும்பச் சதியோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது. Read the rest of this entry »
uranium paranoiaum
November 13, 2013
“India’s generation of children crippled by uranium waste” screams the ‘World news’ section of the British tabloid The Observer.
The byline reads: ‘Observer investigation uncovers link between dramatic rise in birth defects in Punjab and pollution from coal-fired power stations’
Ahem! Let us go through this article first and then treat it with the contempt & disdain that it deserves.
http://www.guardian.co.uk/world/2009/aug/30/india-punjab-children-uranium-pollution
Let me say, I admire this excellent effort at factifuging. However, never mind the facts, if you do a google search, you get copious amounts of random rumours and fearmongering… No real analysis, no understanding at all – all are characterized by a mere store-and-forward procedure!
“…he was systematical, and, like all systematic reasoners, he would move both heaven and earth, and twist and torture everything in nature to support his hypothesis.”
— Laurence Sterne, in Tristram Shandy. Read the rest of this entry »
நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு!
November 8, 2013
உபயம்: ஸ்ரீமான் வை ‘வைகோ’ கோபால்சாமி அவர்கள்.
உபஉபயம்: ஸ்ரீஸ்ரீ க்ரேவிடி(2013) எனும் பொருளீர்ப்பு சக்தி ஹாலிவுட் ரீல்.
நம் தமிழைக் கூறு போட்டுக் கூவி விற்கும், ’உலகத்தின் வரலாறிலேயே முதல் முறையாக’ ஃப்ரீ ‘ஆஃபர்’ (இத்தை வாங்கினால் அத்து ஃப்ரீ, அத்தை வாங்கினால் மாமா ஃப்ரீ!) கொடுக்கும் நல்லுலகத்தினரால், அறிவுஜீவி குமாஸ்தாக்களால் — ஏற்கனவே –
- அய்யய்யோ_அணுசக்தி,
- அடேங்கப்பா_மரபணு,
- வணக்கத்துக்குரிய திருவாளர் கடவுள்(!) துகள்(!!),
- கந்தறகோளக் கயாஸ் கோட்பாடு,
- உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு, (புதுமைப்பித்தன்?)
- உலகின் முதல் கழுதை, திராவிடக் கழுதை, (புதுமைப்பித்ததாசன்??)
- பாவப்பட்ட ஜென் கவிதைக் கட்டுடைப்பு,
- ஜென் கவிஞர்கள் பொழுது விடிந்தால், வழக்கமாக சாலையோர வேசிகளிடம் போவது,
- ஷ்ராதிங்கனார் அவர்களின் பூனை,
- வௌவால்கள் குருட்டு ஜென்மங்கள்,
- கமுக்கமாகப் காப்பியடிப்பது எப்படி,
- கம்பன் என்ன பெரிதாகத் தமிழுக்குச் செய்துவிட்டான் அரைகுறை ராமாயணம் ஒன்றை எழுதியதைத் தவிர,
- நயாகரா வீழ்ச்சி! = வயாக்ரா எழுச்சி!!
…உள்ளிட்ட பல சிடுக்கல் பிரச்சினைகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு செரிக்கப் பட்டுள்ளன என்பதை – இந்த ஒத்திசைவை வேண்டாவெறுப்பாக ஒத்திசையாமல் தலையில் அடித்துக் கொண்டு படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் (=எண்ணி, பத்து பேர்! இது கொஞ்சம் அதிகம்தான்!) அறிவீர்கள்.

