கேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன?

June 30, 2015

இந்தக் கருத்துகள், மேதகு தயாநிதி மாறன் (= பிஏ-எகனாமிக்ஸ் படித்து, லயொலா கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்தவர் + முன்னாள் மத்திய அமைச்சர் + ‘சுடுவதை’ பொழுதுபோக்காகக் கொண்டவர்: ஆதாரம்: இந்திய அரசின் வலைத்தளம்; மேலதிகமாக – உழையோஉழை என திராவிடத்தனமாக உழைத்து வெளியிலே பகிரங்கமாகத் தெரிந்தே 2010லேயே ரூ 17,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருந்த கலாநிதி மாறனின் ச கோதரர். ஆதாரம்: கலாநிதி மாறனின் வலைத்தளம்; மேல்மேலதிகமாக – வருடம் சுமார் ரூ 60 கோடி சம்பளம் பெறும் காவேரி கலாநிதி மாறனின் மைத்துனர். ஆதாரம்: ப்லூம்பர்க் தளம்)  – ‘கருணாநிதிகளின் உள்வட்டத்திலிருந்து’ 2007 இறுதிவாக்கில் துரத்தப்பட்ட பின் அவரால் உதிர்க்கப் பட்டவை.

… ஆனால் பலவிதங்களிலும் கருணாநிதிகள் பழம்பெரும் திராவிடப் பாரம்பரிய வகைமுறைகளின்படி அமோகமாகக் ‘கவனித்துக்கொள்ளப் பட்டு’  பின்னர் மிகுந்த நெகிழ்வளிக்கும் வகையில்  ‘இதயம் இனிக்க, கண்கள் பனிக்க’  மேலதிகமாக ‘தேனை பிழிந்தெடுத்தபின், விடாமல் கூடவே புறங்கையையும் நக்க’ அவர்களுடன் கேடி சகோதரர்கள், ஏகோபித்து மீண்டும் ராசியானதற்கு முன்பாக – விரக்தியின் காரணமாக உண்மை விளம்பப் பட்டவை.

திமுக ஈயத்தைப் பார்த்து இளிக்கும் கேடி சகோதரப் பித்தளைகளின் பராக்கிரமும், அவர்கள் தங்களின் தோல் நிறங்களை பச்சோந்திகளை விட விரைவாக மாற்றிக் கொள்ளும் தன்மையும், கூசாமல் பொதுச் சொத்துகளைப் பக்குவமாகத் திருடும் திறமையும் – படு அலாதிதான், வேறென்ன சொல்ல!

-0-0-0-0-0-0-0-0-

2008 வாக்கில் மத்திய அரசு வழியாகவும் தமிழ்நாட்டிலும் திமுக சார்பு திராவிடக் கொள்ளைகள் அமோகமாக நடந்து கொண்டிருந்தன; தேர்தல்களும் வந்துகொண்டிருந்தன, ஆனால் கேடி மாறன் சகோதரர்கள் கள்ளச் சொத்துச் சண்டையின் காரணமாக – கொள்ளைப் பங்கிடல்கள் சரியாக இல்லாததாக கருணாநிதி தரப்பால் நினைக்கப்பட்டதால், திமுகவைப் பொறுத்தவரை ஒருவிதமான அஞ்ஞாத வாசத்தில் இருந்தார்கள். கட்சிப் பதவியும் கொள்ளைலாபம் தரும் அமைச்சுப் பதவிகளும் பறிபோயின. ஆகவே விரக்தியின் காரணமாக ஜுரவேகத்தில் உண்மைகளையும் பேச ஆரம்பித்தார்கள்.

இச்சூழலில் – 15 ஃபெப்ருவரி 2008 அன்று  அமெரிக்க தூதரக அதிகாரி பொலொஃப்-இடம் தயாநிதி மாறன், திமுக, கருணாநிதி ஆட்சி பற்றி விரக்தியில் புலம்பிய உண்மைகள்தான் இப்பதிவின் ஓலப்பாடுபொருள் – இவற்றின் ஒரு அவசரகதி தமிழ் சாராம்சத்தையும் கொடுத்திருக்கிறேன்.

In Tamil Nadu, Maran said that the DMK party and its partners would lose about half of their seats if things continue as they are. Talking about the increasing anti-incumbency factor in the state,
… தமிழகத்தில் ஆளும்கட்சிக் கூட்டணிக்கு எதிராக உணர்ச்சி இருப்பதால், திமுக இப்படியே தொடர்ந்தால் தங்கள் வசம் இப்போது இருக்கும் தொகுதிகளில் அரைவாசியை இழந்துவிடும்!
Maran alluded to the general impression that the DMK is especially corrupt, saying “when people get into power they lose concentration and start focusing on making money.”
… தயாநிதி, பொதுவாக இருக்கும் கருத்தான திமுக-வின் ஊழலாட்சியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னார்: “மனிதர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் அவர்களுடைய கவனம் பணம் பண்ணுவதில் போய்விடுகிறது.” அதாவது கருணாநிதிகள் ஆட்சிக்கு, அதிகாரத்துக்கு வந்தால் கொள்ளையடிப்பார்கள்.

He also spoke about perils of providing freebies: “the problem when you come to power by promising people free TVs is that people soon forget the TVs you gave them and then ask ‘what are you doing for me now?'”
… இலவசங்களைக் கொடுப்பதில் இருக்கும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும் அவர் பேசினார்; “பிரச்சினை என்னவென்றால் – மக்களுக்கு இலவச டீவி கொடுப்பதாகச் சொல்லி ஆட்சியைக் கைப்பற்றினாலும், மக்கள் கிடைத்ததை மறந்துவிட்டு மேலதிகமாக என்ன நீ கொடுப்பாய் என்றுதானே கேட்பார்கள்?”
(COMMENT: Maran’s recent falling out with the DMK leadership was in part due to financial reasons, so his swipe at DMK corruption, although largely accurate, reflects some sour grapes. Also, when in favor with Karunanidhi, Maran joined in the TV and other give-away schemes that helped the DMK win the 2006 state elections.
…தூதரின் கருத்து, என்னால் ஜனரஞ்சகமாக ஆக்கப்பட்டு: திமுக தலைமை – மாறன் விரிசலுக்கு ‘பணமும்’ ஒரு காரணம். ஆக – திமுக ஊழல்களைப் பற்றி மாறன் பேசுவது, அவை பெரும்பாலும் உண்மைதான் என்றாலும் – கொஞ்சம் ‘ச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ எனச் சொல்லும் குள்ள நரியின் பேச்சுபோல உள்ளது. மேலும் கருணாநிதியின் கூடவே மாறன் இருந்த காலத்தில், இலவசங்களையும், ஓசி டீவிக்களையும் விட்டெறிந்து 2006 தேர்தலில் வெற்றி பெற்றதும் நடந்ததே!

-0-0-0-0-0-0-0-0-

தயாநிதி இப்படியெல்லாம் தன் தாத்தா (​+கட்சித் தலைவர்)  கருணாநிதி பற்றிய பல உண்மைகளைப் பேசிவிட்டு, அதே சமயம் கருணாநிதியும் தன் பங்கிற்கு ‘என் பேரர்களே, என் மனச்சாட்சியின் பிள்ளைகளே இப்படி முதுகில் குத்திவிட்டார்களே‘  எனப் பிலாக்கணம் வைத்துவிட்டு – பின் எந்த முகங்களை வைத்துக்கொண்டு இருவரும் ராசியானார்களோ – எல்லாம் அந்த ‘நிதி’களுக்குத் தான் வெளிச்சம்.
http://www.tehelka.com/sunspots-cast-a-glare-on-the-marans/
-0-0-0-0-0-0-
But his views on the likelihood of Rahul Gandhi taking the reins in Congress are perhaps colored by his view of himself as part of a new breed of young Indian politicians, playing a similar role in Tamil Nadu’s DMK as Rahul does for the Congress party. To the extent he sees Rahul going places, he is seeing a brighter future for himself too.

இப்படித் தன்னையும் ராஹுல் காந்தியையும் பொருத்திப் பார்த்து தன்னைப் பற்றிய வீங்கிய சுயபிம்பங்களை ஏற்படுத்திக்கொள்ளும் தயாநிதி மாறனின் மனப் பிறழ்வுகள் பற்றி,  பணிமூப்பு பெற்ற மத்திய அரசு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சொன்னதையும் நான் நினைவு கூர்கிறேன்.

…இந்த தூதரக மனிதர்களின் அவதானிப்பு 100% சரியாக இருப்பதை நினைத்து நான் மிகவும் ஆச்சரியப் படுகிறேன்.
இப்படிப்பட்ட காரணங்கள் இருப்பதாலும்தான் அமெரிக்கா சர்வ வல்லமை பெற்று விளங்குகிறதோ?
மேலதிக விவரங்களுக்கு, தூதரகக் கடிதத்தின் மூலத்திற்கு: FORMER IT MINISTER MARAN SAYS INDIA’S RULING COALITION IN TROUBLE

-0-0-0-0-0-0-

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s