இளம் உதயசந்திரன் ஐஏஎஸ், ஐபிஎம் 1620, கிண்டி பொறியியல் கல்லூரி, தொழில் நுட்பவரலாறு: அறியாமைப் பொய்கள்
July 4, 2019
இவர் இப்படி ஏன் ‘நம்மில் எவ்ளோ பேருக்கு இதுதெரியும்‘ ரீதியில் எழுதவேண்டும்? தேவையா? நமக்கு ஏற்கனவே இருக்கும் யுவகிருஷ்ண மதிமாற விடுதலைவீரமணிய உளறல்பரப்புரைக்காரர்கள் போதமாட்டார்களா? :-(
‘புதியன விரும்பு,’ சரி – ஆனால் புதுப் புட்டியில் பழைய+புதிய புளுகுகளைக் கலந்தடித்துப் பரிமாறவேண்டுமா? எனக்குத் தெரிந்தவரை, இவர் தமிழ் அலக்கியக்காரர்கூட அல்லரே! ஆக, பின்புலம் பிடிபடாத, அறிமுகமற்ற விஷயங்களில் அனுதினமும் அட்ச்சிவுடவேண்டிய அவசியமேயில்லையே!
-0-0-0-0-0-
பிரச்சினை என்னவென்றால், சுமார் இரண்டு வருடங்கட்குமுன் இந்த இளைஞரை அவர் அலுவலகத்திற்குச் சென்று ஏதோ வேலை விஷயமாகச் சந்தித்திருக்கிறேன். என் அத்யந்த நல்லெண்ணக்கார (=Gingelly Oil Vendor, ©S. Ramakrishnan, 2019 c/o Sahitya Acadummy) நண்பர் ஒருவர், அவரிடம் என்னைக் கூட்டிச் சென்றிருந்தார். அவர் பரிந்துரை: “உதயசந்திரனை அவசியம் நீ சந்திக்கவேண்டும். அவர் தமிழகத்தில் கல்வி குறித்த குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார்; நம் தமிழகத்தில் கல்விதொடர்பாக நாம் செய்யக்கூடிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன, அதலபாதாளத்தில் அல்லவா இருக்கிறோம் நாம். இன்னபிற.” நானும் ஹைய்யா எனக் கதனகுதூகலத்துடன் சென்றேன்.
எனக்கு உதயசந்திரன் அவர்களைப் பற்றிப் பெரிதாக முன்னனுபவம், செய்திநுகரல் எதுவும் இருந்திருக்கவில்லை; ஆனால் ஊழலற்றவர், ‘media savvy’ என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனாலும், நான் போன காரியம் பெரிதாக ஒன்றும் நகரவில்லை. அதிக ஆர்வமும் காண்பிக்கப் படவில்லை; இப்போது யோசித்தால், காட்டப்பட்ட அளவுக்குமேகூடச் செயல்பாடுகள் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் கேட்ட சிலபல தஸ்தாவேஜுகளை அனுப்பிக் கொஞ்சம் ஃபால்லொஅப் செய்தேன். (காரியம்முடியாமையையே விடுங்கள், அது தொடங்காமைக்கே அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளத்தக்க காரணங்கள் இருந்திருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்கிறேன்)
நானும் பலப்பல (எல்லாம் அல்ல) மாநில அரசுகளின் கல்வித்துறை ஆசாமிகளுடன், ஒருவருடத்துக்கு முன்வரை, ஓரளவு பழகியிருக்கிறேன். ஆனால் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தெலெங்காணா, குஜராத், ஜார்கண்ட், த்ரிபுரா, அஸாம், (கொஞ்சம் சிறிய அளவில்) தில்லியும் சத்தீஸ்கட்டும் தவிர – பிற சிலமாநிலங்களில் (புதுச்சேரி, தமிழகம் உட்பட!) எங்கள் குழு ஒன்றையும் பிடுங்க முடியவில்லை. ஒவ்வொரு தடைக்கல்லுக்கும் ஒவ்வொரு முக்கியக் காரணக் கும்பல். இவைகளை/இவர்களையெல்லாம் மீறித்தான் பாரதம் மேலெழும்பவேண்டும், என்ன செய்ய.
எப்படியும், கல்வி போன்ற நெடுங்காலத் தாக்கத்து விஷயங்களில், அதிகாரி/அரசியல்வாதிகளில் பெரும்பாலோருக்கு நம்மெல்லாரையும் போலவே அடிப்படை நல்லெண்ணங்களிருந்தாலும் ‘நான் இங்கிருந்து பணிமாற்றம் அடைவதற்குள் என்பெயர் பொன்னெழுத்துகளில் பொறிரிக்கப்படவேண்டிய விஷயங்களைச் செய்வதற்கு என்னவேண்டுமெல்லாம், அதற்கெல்லாம் ஆவன செய்யவேண்டும்’ எனும் (பொதுவாகவே ஒப்புக்கொள்ளக்கூடிய ‘what is in it for me, for my career?’) முனைப்பு எதிர்மறையாக வேலைசெய்யும் எனும் நிதர்சன உண்மையையும் கண்டுகொண்டிருக்கிறேன். ஆக, என் வாழ்க்கையில் மிகை எதிர்பார்ப்புகள் இல்லை. மேலும், என் ரெவல் எனக்குத் தெரியும். ஆக, முடிந்ததைச் செய்வேன், நிந்தனை உட்பட – ஆனால் சர்வ நிச்சயமாகத் தரவுகள் மேற்பட்டுமட்டுமே!
ஆனால் ஒரு விஷயம்: பலப்பல காரணங்களினால், எனக்கு இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின்மீது(ம்) மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்த ஒத்திசைவு எழவின் மூலமாக அவர்களில் இருவருடன் கொஞ்சமேனும் கடுகளவு அறிமுகம் இருக்கிறது. செயலூக்கமும், படிப்பும், நேர்மையும், எடுத்த காரியங்களை முடிக்கும் திறன்உடையவர்களாகவும் எனக்குத் தெரிந்தவரை அவர்கள் தோன்றுகிறார்கள்கூட. அவர்கள் நீடூழி வாழ்க. (பெயர்களைச் சொல்லமாட்டேன்; ஆனால் இருவரும் தமிழகத்தில் தற்போது பணிபுரியும் தமிழர்கள், ஆச்சரியத்துக்குரிய வகையில் தமிழும் தெரிந்தவர்கள்! ஐயகோ!!)
ஹ்ம்ம்… ஆனாலும், இளம் உதயசந்திரன் செய்திருப்பதுபோல – தெரியாத விஷயங்களைத் தெரிந்தது போலக் காட்டிக்கொள்வதும், தன் அலுவல்சார் தகுதியை வைத்துக்கொண்டு டகீல் விடுவதும், தன்னுடைய பின்புலம் இப்படியென்பதால் யாருமே கேள்விகேட்கமாட்டார்கள் எனத் தெகிர்யமாக அட்ச்சிவுடுவதும், இப்படியெல்லாம் எழுதி இளைஞர்களுக்குத் தவறான வழிகாட்டுவதுமெல்லாம், சர்வ நிச்சயமாக அசிங்கமான ஊழல்கள்தான்! பண ஊழலாக இல்லாவிட்டாலும் இம்மாதிரி விஷயங்கள், அதனைவிட நேர்மையற்றவையும் அறமற்றவையும்தான். எனக்கு இதில் மாற்றுக் கருத்தில்லை. நன்றி.
இம்மாதிரி, தமிழ் ஹிந்து பத்திரிகை போன்ற அரைகுறைப் பப்பரப்பாத் தினசரியில் இவர் இப்படி அட்ச்சிவுட்டால் அதன் தாக்கத்து குறைவாக இருக்கலாம்; ஆனால், இன்னொரு நண்பர் சொல்கிறார் – இளம் உதயசந்திரன், கல்லூரிகளுக்கெல்லாம் போய் பேச்சுக்கச்சேரிகள் செய்து இதேமாதிரி வாய்க்கு வந்ததுபோல் அட்ச்சிவுடுகிறார் என்று… விசனம் தருவது இந்தக் காலத்தின் கோலம். நம் இளைஞர்கள் விதம்விதமாகக் காயடிக்கப்பட்டு வரும் இன்னாட்களில் படித்த/உயர்பதவியிலிருக்கும் இவர் போன்றவர்களும் ஆர்வத்துடன் கொட்டைச்சிதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோகம்தான்; என்னவோ, இவரும் இன்னொரு மறை கழன்ற அதிகாரி உமாஷங்கராக மாறி ‘அந்தக் காலத்திலேயே, ஜெஹோவா ஜீஸஸ் உதவியுடன் புற்னானுற்றுட் டமிளன் தொட்ட மிச்சமில்லா உச்சங்கள்’ என்றெல்லாம் பகபகவென்று பகரும் திராவிடப்பகீர் லெமூரியதாசனாகாமலிருந்தால் சரி.
எது எப்படியோ, இளம் உதயசந்திரன் அவர்கள் இனிமேலாவது இம்மாதிரி முதிர்ச்சியற்ற விஷயங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு தானும் கொஞ்சமேனும் சுயமுன்னேற்றப் பாதையில் பீடுநடை போட்டு, ஊக்கபோனஸ்ஸாக, நம் தமிழகத்து இளைஞர்களையும் தயைசெய்து உய்விக்கவேண்டும் எனத்தான் நான் விழைகிறேன் – அவரிடம் கண்ணீர் மல்க, நாத்தழுதழுக்க, மூக்கில் சளியொழுக, கோரிக்கை வைக்கிறேன்!
-0-0-0-0-0-
இளம் உதயசந்திரன் அவர்கள் அருளிச்செய்த உருப்படாத காட்டுரையில் — பெரியார், அவர்தம் மொழிகுறித்த ‘கர்த்துகள்,’ ‘காட்டுமிராண்டி பாஷை’ என ஈவெராவே கரித்துக்கொட்டிய மொழியில் ஆச்சரியம் தரும் விதத்தில் கலைச்சொல் வளர்ச்சி குறித்த அவருடைய டகீல் ‘கரிசனம்,’ இன்னபிற தொழில் நுட்ப ஜல்லியடித்தல்கள், புளகாங்கிதங்கள் பற்றி, ஆதாரபூர்வமாக விமர்சனம் செய்ய என ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால் (என் நேரம்+பொறுமையின்மை காரணங்களால்) அச்சகதிகளில் செல்ல ஆசையில்லை. (யாராவது இதுகுறித்தும் எழுத முற்படுவானார்களானால் அவர்களுக்கு, பெரியார் தொடர்பான பெரும்பாலான விஷயங்களையும் படித்துத் தொலைத்திருக்கும் நான், சிலபல குறிப்புகளை மட்டும் தரத் தயார்!)
ஆனால் அவர், அறிஞர்தனமாக அட்ச்சிவுட்டிருக்கும் கணிநி, இந்தியத் தொழில் நுட்ப வரலாறு போன்றவற்றில் இருக்கும் அபத்தங்களைச் சுட்டவே இதனை எழுதுகிறேன்.
-0-0-0-0-0-
இப்படி ஒரு முதற்கோணல் முத்தாய்ப்பாக ஆரம்பிக்கிறார். பெரும் ஆச்சரியகரமான் உண்மையைப் புட்டுப்புட்டு வைக்கிறார்! பிரச்சினை என்னவென்றால், நம் எழவெடுத்த-பாவப்பட்ட தமிழச் சமூகத்தையே விடுங்கள்; எந்தவொரு பண்பாடும் அதன் வளர்ச்சியும் அடிப்படையில் தொழில்நுட்பக் கூறுகளைத்தான் கொண்டிருக்கிறது. தீயை, மிருகங்களை, தாவரங்களை டொமெஸ்டிகேட் செய்வதில் இருந்து, பனையோலைச் சுவடிகள், கற்களில் சிற்பங்கள் வடித்தல், வீடுகள் கட்டுதல், வண்டிகளைக் கட்டமைத்தல், இசைக்கருவிகள் செய்தல் எனப் பலப்பலப் பரிமாணங்களிலெல்லாம் புகுந்துபுறப்பட்டு அவற்றின் ஆதாரசுருதிகளாக இருப்பவை தொழில் நுட்பங்களே! இதில் என்ன பெரிய்ய முத்தாய்ப்பு, என் ஆசான் எஸ்ராமகிருஷ்ணன் முழிபெயர்க்கக்கூடுவதுபோல, threesome motherhood?
மேலும் லாவகம்! இன்னாபா இது? இந்த லாகவம் எழவை லாவகம் என்று எழுதுபவர்களை/பேசுபவர்களைக் கண்டாலே எனக்குப் பற்றிக்கொண்டுவரும். அடிப்படையில் தமிழை, அதன் திசைச் சொற்களை, அதன் வளமான சொற்களஞ்சியத்தை அறியாமல், மதிக்காமல் அட்ச்சிவுடும் இவர், எப்படித்தான் கூச்சமேயில்லாமல், தமிழ் மொழி வளர்ச்சி கிளர்ச்சி எனவெல்லாம் பிறருக்கு அறிவுரைக்கிறாரோ! இனிமேலிருந்து இவர் பெரியார் என எழுதினால் அது பெயாரிர் எனக் கன்னித்தழிமில் அகறி. நறின், உயதசந்தின்ர!
லாகவம் எனும் வார்த்தை, லகு எனும் ஸம்ஸ்க்ருத வேர்ச்சொல்லில் இருந்து வருவது – சுலபம் ஈஸி, சுலபமாகவே சரியாகக் கையாளும் முறை, (பயிற்சியின் காரணமாக) சுளுவாக ஒரு விஷயத்தை அணுகும் தன்மை என விரிவது. அவ்ளோதான்.
இனி லாவகமாக லவ்வுடன் வகைதொகை எனவில்லாமல் இவர் லபக்கென்று தொழில் நுட்பத்தைக் கடிப்பதைப் பார்ப்போம்.
லாகவத்தின் வாழ்வதனை லாவகம் கவ்வும், கருமம் கவனித்துக் கவணடித்து மறுபடியும் வெல்லும். நன்றி!
உயதசந்தின்ர இங்கு குறிப்பிடுவது கிடிண் பொறியியல் கல்லூரிக்கு 1965ல் ஐபிஎம் 1620 கணிநி வந்ததாக!
மன்னிக்கவும். அந்தக் கணிநி வந்தது 1963ல். ஐஐடி கான்பூருக்கும் அதே வருடத்தில் கொஞ்சம் முன்னால் வந்தது.
கீழே, அக்காலத்தில் படித்த கேஎல் ஜகன்மோஹன் எனும் ஒரு மாணவர், அந்தக் கணிநியைப் பற்றி எழுதியுள்ள ஒரு குறிப்பு.
…ஒரு சிறு/அடிப்படைத் தகவலைச் சரிபார்க்கத் துப்பில்லை.
எவ்ளோ தெகிர்யமாக அட்ச்சிவுடுகிறார்! பயன்பாட்டு எழவையே விடுங்கள்!
இந்தியாவில், இந்தியத் தயாரிப்பாக 1960லேயே கணிநிகள் வந்துவிட்டன! என்ன துக்கிரித்தனம், பாருங்கள்! உதயசந்திரனிடம் முன்னனுமதி வாங்காமலேயே, மும்பய் டிஐஎஃப்ஆர் எழவில் கணிநிகள் தயார் செய்யப்பட்டுவிட்டனவே!
கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் இப்படியா 1972வரை உதயசந்திரனின் திருப்பிறப்புக்குக் காத்திராமல் இருப்பார்கள்! கேவலமாக இருக்கிறதே!
இந்த ஆர் நரஸிம்ஹன், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர். விக்ரம் ஸாராபாய் அவர்களால் தெரிவு செய்யப்பட்டு டிஐஎஃப்ஆர் எழவில் மகோன்னதமாகப் பணி புரிந்தவர்! (எனக்குத் தெரிந்து நரஸிம்ஹன் போன்ற பிதாமகர்களை, அண்ணா பல்கலைக்கழக எழவின் தம்பிகள் மறந்தேவிட்டனர்! மாறாக, இவர் போன்றவர்கள் கொண்டாடப்பட வேண்டுமல்லவா? அதெல்லாம் ஒருக்கால் பிரச்சினையாகி விடும் என, தங்கள் ரெவல் அறிந்து, மதன் கார்கீ சைக்கிள்லாக் போன்ற அரைகுறைகளைக் கொண்டாடுகிறார்களோ?)
சரி. 1957லேயே நரஸிம்ஹன் குழு, ஒரு ப்ரோட்டோடைப் (வெள்ளோட்ட/அடிப்படி வடிவமைப்பு) கணிநியைச் செய்துவிட்டது. பின்னர் ஒரு முழுமையான வடிவமைப்பும் ஆக்கத்தையும் செய்து 1959ல் அதுவும் ரெடியாகி, 1960ல் இந்த டிஃப்ரேக் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது.
என்ன அவமரியாதை! உதயசந்திரனுக்கு இதெல்லாம் தெரிந்துதான் கோபத்துடன், அந்தப் பக்கம் அவர்தம் கடைக்கண் பார்வையை வீசவில்லையோ என்ன எழவோ!
எப்படியும் 1958ல் ஐஎஸ்ஐ (இந்தியப் புள்ளியியல் கழகம்?) ரஷ்ய யூரல் கணிநிகளை உபயோகித்துக்கொண்டிருந்தது என்பதும் ஒர் கொசுறு உண்மை. (இதுவும் உதயசந்திரனுக்கு ஒத்துவராது என்றாலும்…)
இதைத் தவிர 1963ல் மகாமகோ ஸிடிஸி3600 கணிநியும் டிஐஎஃப் ஆர் நிறுவத்தால் வாங்கப்பட்டது எனவும் நினைவு. 1966வாக்கில் இரண்டாம் தலைமுறை (வால்வ்களற்ற, ட்ரான்ஸிஸ்டர்களாலான) டிஜிடல் கணிநியும் ஐஎஸ்ஐயில் வடிவமைத்து உருவாக்கப்பட்டது – பெயர் மறந்துவிட்டது.
ஹ்ம்ம்? அப்படியா என்ன?
1963ல் கிண்டி வந்த ஐபிஎம் 1620, மாடல் 1 வகை. அதற்கு பஞ்ச்/ஹால்லரித் கார்ட் வழி ஏவல்-உள்ளீட்டுவழி கிடையாது. வெறும் காகித டேப் தான்.
1962ல் ஐபிஎம் வெளிக்கொணர்ந்த மாடல் 2 எழவில், இந்த பஞ்ச் கார்ட் வகை இருந்தாலும் – கிண்டியில் 1965 வரை (அதாவது உதயசந்திரன் அவர்களால் குறிப்பிடப்படும் பேறு பெற்ற வருடம்! கொஞ்சம் மரியாதையுடன் இருக்கவும்!!) சர்வ நிச்சயமாக அது இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், உதயசந்திரன் எழுதும் விஷயம் 1970ல் நடந்தது! ஆகவே அச்சமயம் பஞ்ச்கார்ட் இருந்தது. அவர் பீலாவிடுவதற்கு மாறாக, 1965ல் அல்ல!
ஆனால் மானேதேனே என, யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என அட்ச்சிவுடும் மனப்பான்மைக்கு எதிராக, நிதர்சன உண்மைகள் என்ன செய்யமுடியும்! ‘லாவகமாக’ கம்மென்று போகவேண்டியதுதான்!
முதலில் ஈவெராவின் கிண்டி கணிநி விஜயம். இது 1965ல் அவருக்கு 86 வயதாகும்போது நடக்கவில்லை. அது நடந்தது 1970ல் ஜூலை 16 அன்று, அதுவும் ஈவெராவுக்கு 91 வயதாகும்போது!. அன்று அந்த மையத்தில் இருந்த அப்போதைய மாணவனும் இப்போதைய கிழங்கட்டையுமான, ஒரு சகக் கிழத்திடம் ஒருமுறை சரிபார்த்துவிட்டுத்தான் இதனை எழுதுகிறேன்.
மேலும் பெரியார்பிஞ்சு பிஞ்சுபோனதைத் தைத்து எனவொரு சஞ்சிகை விடுதலைவீரமணிகளால் பதிப்பிக்கப்படுகிறது. அதிலும் இந்த விஜயத்தைப் பற்றி, இதே 1970 தேதியில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர். ஆச்சரியம் தரும் விதத்தில், இதனைத் திக கும்பல் பதிப்பித்திருந்தாலும், இது உண்மைதான்!
ஆனால் பெரியார்பிஞ்சு எழுதுவதிலும் சில தவறுகள். அதுவாம் இதுவாம் என்று எழுதியிருக்கிறார்கள்!
ஈவெரா கிண்டி கல்லூரி போனபோது. அந்தக் கணிநி எழவு ஏழு வருடங்களாக அங்கு இருந்திருக்கிறது. அண்மையில், புதிதாக என்று எழுதியிருப்பது குப்பை டகீல்கள்!
ஆனால், போகிறபோக்கில் ‘பல பேராசிரியர்களே கண்டிராத’ என்றெல்லாம் அட்ச்சிவுடுவது ஒரு அசிங்கமான விஷயம். அப்படியெல்லாம் இல்லாமலிருந்தா, நரஸிம்ஹன்கள் உருவானார்கள்? என்னவோ ஈவெரா வந்துதான் கணிநியின் பெருமைகளைத் தமிழர்கள் புரிந்துகொண்டதுபோல அப்படியொரு பில்ட் அப்!
பிரச்சினை என்னவென்றால், தமிழகத்தில் அதுவும் சென்னையில், குறைந்த பட்சம் மூன்று பிற கலாசாலைகளில், கணிநிகள், அச்சமயம் ~1969 வாக்கில், பயன்பாட்டில் இருந்தன.
1. ஐபிஎம் 1130, பயோஃபிஸிக்ஸ் மையம், சென்னைப் பல்கலைக்கழகம் (இப்போதைய அழகப்பா டெக்னாலஜி கல்லூரி)
2. ஐபிஎம் 1130, ஐஐடி, சென்னை
3. <நினைவு வரும்போது; இது வெளியாட்களுக்கு அனுமதியில்லாத ஒரு ப்ரைவேட் விஷயமாக இருந்தது என நினைவு!>
இதைத் தவிர சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் ஒரு 1401 இருந்தது. அதற்கும் பேராசிரியர்களின் பணிகளுக்கு உபயோகப் பட்டது; சொல்லப் போனால் 1960-64ல் 12 அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் + ஐஐடி கான்பூரும் + கிண்டியும் கணிநிகள் வைத்திருந்தன.

-0-0-0-0-
ஈவெரா குறித்து இவர் தம்முடைய காட்டுரையில் எழுதியுள்ள பலவிஷயங்கள் பேடித்தனமான டகீல்கள். ஆனால் அவற்றைச் சாய்ஸில் விடுகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் – அதுவும் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருப்பதால்…
1. உதயசந்திரன் பார்வையில், ஈவெரா, தர்க்கம்+நியாயம் போன்ற ஹிந்து தர்சனங்களையும் அதன் கூறுகளையும் தாராளமாக உபயோகித்திருக்கிறார் போல! ஆக, ஈவெராதான் முதல் ஹிந்துத்துவர். நன்றி!
2. இது அராஜகம். ‘இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடாத தமிழினத்தை உரிமையோடு குட்டும்’ – என்ன பேடித்தனமான, முட்டாள்தனமான கருத்து இது. அறியாமையில் உழலும் உதயசந்திரனுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், ஈவெராவின் தலைக்குமேல் தொழில் நுட்பங்கள் இருந்தால், அவர் தமிழ்இனம்(!) சார்ந்தவர்களைக் குட்டிவிடுவாராமா? என்ன பினாத்தல் இது. தமிழிந்தியர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடவே இல்லையா? நரஸிம்ஹன் தமிழரில்லையா? ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், மேதாவித்தனமாக உளறிக்கொட்டுவது என்ன அராஜகம்! :-(
எனக்குத் தெரிந்தே 1965-75வாக்கில் நூற்றுக் கணக்கில் அழகப்பா கணிநிகளை உபயோகித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். க்றிஸ்டல் வடிவமைப்பிலிருந்து அல்காரிதம்களை வடிவமைப்பது உட்படப் பலவேலைகள், உதயசந்திரனைக் கேட்காமலேயே நடந்திருக்கின்றன.
அதனால்தான், உதயசந்திரனுக்குக் கோபம்போல. ஈவெராவை விட்டு தமிழர்களைக் குட்டுகிறார். சோகம்!
-0-0-0-0-0–
உண்மை நிலவரங்கள், வரலாறுகள் இப்படி இருந்திருக்கும்போது, இளம் உதயசந்திரன் இப்படிக் கண்டமேனிக்கும் அட்ச்சுவுட்டதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்:
1. அவருக்கு உண்மையாகவே வரலாறுகள் தெரியவில்லை; தொழில் நுட்ப அறிவும் கம்மி. ஆகவே வாய்க்கு வந்ததை, ஏதோ ஆர்வக்கோளாறில், உளறிக்கொட்டிவிட்டார். ஆகவே மன்னித்துவிடலாம்.
2. மனம் அறிந்து, பகிரங்கமாகப் பொய் சொல்லியிருக்கிறார் – ஏனெனில் அவர் குவியம், ஈவெராவைத் தேவையேயற்று உயர்த்திப் பிடிப்பதில் இருக்கிறது. ஆகவே இல்லாததையும் பொல்லாததையும் குழப்பியடித்து மினுக்கிக் கொண்டிருக்கிறார்.
3. பீலா விட்டால்தான் தமிழ் ஹிந்துவில் கட்டுரை வரும், பேச்சுக்கச்சேரிகளுக்கு அழைப்புகள் வரும். சுயமுன்னேற்றம் அடையலாம் எனவொரு அறம்வாய்ந்த மனப்பான்மை.
எது சரி என நீங்கள் ‘டிக்’ செய்துகொள்ளவும். (அனைத்தும் சரியாகவே இருக்கலாமோ என்ன எழவோ!)
நம்மில் எவ்ளோ பேருக்குத் தெரியும், நம் மெத்தப்படித்த, முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் ஜாலிலோ ஜிம்கானா என அட்ச்சிவுடுவார்கள் என்று?
பின்குறிப்பு: பெரும்பாலான இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் இவ்வளவு மோசமாக இருக்கமாட்டார்கள் என நம்பவே எனக்கு ஆசை. பார்க்கலாம். :-(
—
July 4, 2019 at 21:53
Ram, am not annoyed nor upset with you. I am not taking it personally either.
But, why do you drag IAS into this? He did not claim that he is an an IAS officer in that article. In my opinion, you should have treated this as a normal, routine, mediocre @the_hindu verbiage.
Will talk to you.
July 5, 2019 at 07:09
ஐயா, புரிந்துகொண்டமைக்கு நன்றி.
ஆனால் பாருங்கள், உகங்ள் உயதச்சதிந்ன்ர் அர்வகள் தாம் இந்த அகாதிர விகாவரத்தை லாவகமாக ஆம்ரம்பித்தார்.
அவர் கட்டுரையின் முடிவில் தன்னை, ‘த. உதயச்சந்திரன், தொல்லியல் துறை ஆணையர்’ என எழுத்தாளர் பெயர்/தகுதிவிவரமாக அளிக்கிறார். தன்னுடைய அளப்பரிய அகழ்வாராய்ச்சி அளப்பினை அளித்திருக்கிறார். கீழே, அதன் ‘திரைச் சொட்டு.’
அதனால்தான் என் இகழ்வாராய்ச்சி. மன்னிக்கவும்.
தன்னை, நேரடியாக ‘ஐஏஎஸ்’ எனச் சொல்லவில்லை – அரசுத்துறை ‘ஆணையர்’ ஆக இருக்கிறேன் எனக் குறிப்பிடுகிறார்; ஆனால் ஐஏஎஸ் இல்லாத, என்னைப் போன்ற ஒரு டுபாகுர் குமாஸ்தா, இப்படியொரு கலாச்சாரரீதியில் முக்கியமான துறைக்கு ஆணையர் பெணையர் திருநங்கையர் திருமதிநங்காவையர் இயக்குநர் ஒட்டுநர் நடத்துநர் வல்லுநர் கில்லுநர் உளறுநர் டர்புர்நர் என்றெல்லாம் ஆகி விடமுடியுமா?
ஒரு சாதா சாமானியத் தமிழனாக, அவர் இந்த உளறல்குவியலை எழுதவில்லை – தான் ‘ஆணையர்’ என்கிற ஹோதாவில்தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே அகழ்வாராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார், புரிந்துகொள்ளுங்கள். கொள்ளென்று ஜிரியுங்கள்!
எனக்குப் பயமாகவே இருக்கிறது. தொல்லியல்துறை ஆணையர் எனும் ‘தகுதியை’ படு ஸீரியஸ்ஸாக இவர் எடுத்துக்கொண்டு இதேமாதிரி கொல்லென்று சிரிக்கவைக்கும் அகழ்வாராய்ச்சிகளைத் தூங்கி எழுந்ததும் அனுதினமும் எழுதுவது என்று நம் பெரும்பேராசான் போல அட்ச்சிவுட ஆரம்பித்துவிடுவாரோ? அதனையும் நம் சக விசிலடிச்சான் குஞ்சப்பப் போராளிகள் சிரமேற்கொண்டு மீம்ஸ் போட்டுக் கொதித்து, மெரீனாவில் திரண்டு மூத்திரம் அடிக்க ஆரம்பித்துவிடுவார்களோ?
ஆக, அவர் இதேமாதிரி அகள்வாறாச்சி செய்ய அடுத்த தலைப்பு ஒன்றைக் கொடுப்பதில் இறும்பூதடைகிறேன்:
“கீழடியில் தமிழனின் குஞ்சு மத்தியஅரசு நஞ்சால் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து, நான் தன்னந்தனியாகப் போராடி ஹிந்திநெஞ்சின் மஞ்சாசோற்றை எடுத்து வெச்சுசெஞ்சு விஞ்சுவது எப்படி?’
ஊக்கபோனஸ்ஸாக இன்னொன்று: ‘ஈவெராவின் அருளால்தான் தமிழகத்தில் அறிவியல்/தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது! இதை ஒப்புக் கொள்ளாவிட்டால் படையுடன் வந்து உரிமையுடன் உங்கள் மண்டையில் ஓங்கிக் குட்டுவேன்!
இது புனைபெயரில் வெளிவரலாம்: “தமிழ்க்குட்டு செங்குட்டுவன்”
நன்றி.
பின்குறிப்பு: மறுபடியும், புரிந்துகொள்ளப் போவதற்கு நன்றி! ;-) நீங்களும் விட்டுவிடுங்கள். நானும் விட்டுவிட முயல்கிறேன்.
July 5, 2019 at 16:31
When an IAS officer writes an baseless article, it has to be countered for sure. And I don’t think he would have got a chance to write this article if he is not an IAS officer.
July 5, 2019 at 17:09
Hmm, all kinds of jokers write for TamilHindu. What do do.
Sometime back there was an essay in that noosefaffer from a very scholarly(hic) professor Ahamed Zubair from that New College idiocy at Chennai. He got away after uttering ABSOLUTE rubbish. https://othisaivu.wordpress.com/2019/02/07/post-938/
In fact, I think, as another correspondent pointed out earlier, the basic quality required of a TheHindu scribe is mediocrity. This IAS officer obviously fits the bill, at least as for as the useless essay that he has scribed now.
Most the mediacritters are major mediocritters too, yeah? :-( Apparently there is no solution in sight.
__r.
July 5, 2019 at 12:20
🤦🤦♀️🤦♂️
July 5, 2019 at 15:48
some practice with facepalm emojis or what? (though they all describe the offending essay of the very civil servant very well!)
July 6, 2019 at 03:41
ஐயா ஒத்திசைவு அவர்களே வணக்கம்.
உங்களின் கட்டுரை தரவுகளின் படி,நீங்கள் குறிப்பிட்ட,மூன்று காரணங்களில் 1ம்,3ம் சரியாக இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.
July 6, 2019 at 08:30
புரிந்துகொண்டேன் நன்றி. (என்னிடம் இருக்கும் பிற தரவுகள் சார்ந்து, அவர் இரண்டாவதிலும் கோல் அடித்துள்ளார் என நினைக்கிறேன்.)
அவற்றைக் குறிப்பிட்டு நான் எழுதவில்லை; ஆனால் இந்தக் காரணத்தைச் சார்ந்தும் அபத்தக் களஞ்சியமாகத்தான் இருக்கிறது அவரது அரைகுறைக் காட்டுரை.
July 6, 2019 at 10:03
வேசி மகன்
இதப்பாரு https://www.facebook.com/permalink.php?story_fbid=1214693912056714&id=100005483508307
July 6, 2019 at 12:20
ஐயா,
தங்களை அறிமுகம் செய்துகொண்டதற்கு நன்றி. இதற்கெல்லாம் வெட்கப்படவேண்டிய அவசியமே இல்லை. என்னைப் பொறுத்தவரை வேசிகளும் சமூகங்களில் முக்கியமாக கடமைகளை ஆற்றுபவர்கள்தாம்.
சுட்டியையும் படித்தேன். நன்றி. இருவரும் (ஒருவரோ?) தொடர்ந்து பணி செய்ய வாழ்த்துகள்.
July 7, 2019 at 13:52
Maanam ulla Dravid’rae,
Ungal comment proves Othisaivu’s point. Neenga Dravid’a veerar’na unga saadhanai enna, veera cheyal enna appidingaradha ellam sollalame. Summa irutulla, gumbala sound vidura madhiri, yen anonymous comment.
July 9, 2019 at 19:05
யோவ்! இன்னாபா இப்டீ டங்க்லீஸில் எள்தி ஸாவ்டிக்கறே!
ஆனால், ஐயா – இவர்களிடம் தரவுகிரவு எல்லாம் கேட்டால் எங்கே போவார்கள், சொல்லுங்கள்? உங்களுக்குக் கருணை தேவை.
அவர்களிடம் வீரத்தையும் எதிர்பார்க்கவேண்டா! பாவம். காயடிக்கப்பட்டவர்களிடம் கருணையைக் காட்டவும்.
பின்னூட்டமிட்டுத் தெம்பு அளித்ததற்கு நன்றி! நன்றி!! நன்றீ!!!
July 9, 2019 at 13:46
திராவிடன் சமூகத்தார்க்கு !
கட்டுரை பிழைபட்டது எனில் அதை ஆதாரத்தோடு விளக்கி ஒத்திசைவின் முகத்திரையை கிழித்து வீசலாமே ? உங்களவர்களுக்கெல்லாம் அதற்கு வக்கோ வாக்கோ இல்லையோ ? அல்லது உங்களுக்கு என்றென்றும் கைவராத ஒன்றா ?
அது ஏன் இந்த திராவிடர்கள் (பாஸ்டனிலேயே இருந்தாலும்கூட) என்று தம்மை விளித்துக்கொள்பவர்கள் ஒரு உருப்படியான விவாதத்திற்கு முன்வராமல் சாக்கடை வார்த்தைப்பிரயோகத்தில் சட்டென்று குதித்துவிடுகிறார்கள் ? சாக்கடையில் மூழ்கி முக்குளிப்பதுதன் அவர்களுக்கு உச்ச இன்ப லாகிரியை அளிக்கவல்லதோ ? ஒருவேளை அதுதான் அவர்களது homeground-ஆ ?
July 9, 2019 at 18:56
நண்பருக்கு நன்றியும் வணக்கமும்.
இம்மாதிரி சிலபல பின்னூட்டங்கள் வரும்போது, பொதுவாக அகற்றிவிடுவேன். ஆனால் இதில் ஒரு ஃபேஸ்புக் சுட்டி தமாஷும் கொடுக்கப்பட்டிருந்தது. பார்த்தால் பாவம், காரணம் துப்புரவாகப் புரியவில்லையென்றாலும் அந்த அன்பருக்கு என்மேல் ஏகபட்ட கடுப்பு இருக்கிறது எனப் புரிந்துகொண்டேன். பேடி என்று நான் குறிப்பிட்டால் இவர், உண்மையாகவே, திராவிடர்கள் டிங்டாங் அற்றவர்கள் எனச் சொல்லவருகிறேன் என நினைத்துவிட்டார்போல. சொல்லப் போனால் திராவிடர்களின் டிங்டாங்கிய குவியம் மிகவும் அதிகம் என அறிந்த நான், இப்படிச் சொல்வேனா?
கீழே அந்த அன்பரின் கோபாவேசம். எனக்கு, ஒரு ரெஃபெரன்ஸுக்காகக் கொடுக்கிறேன்.
ஆக, நகைச்சுவையாகவே இதனைக் கருதி அகலலாம். இவர்களிடன் தரவு கிரவு என்றெல்லாம் கேட்கமுடியாதும்கூட!
இன்னமும் ஒத்திசைவைப் படிக்கிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது! நலமா?
July 8, 2019 at 15:15
//ஆனால், போகிறபோக்கில் ‘பல பேராசிரியர்களே கண்டிராத’ என்றெல்லாம்// புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே ஒத்திசைவு ! சில பேராசிரியர்கள் கண்டிருக்கலாம் . அவர்கள் சில மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கலாம் . அவர்களில் ஒருவர்தான் நரசிம்மன். மேலும் நரசிம்மன் என்னும் பெயரை கவனியுங்கள். பார்ப்பனப் பெயர். உண்மைத் தமிழர்களுக்கு கணினித் தொழில்நுட்பம் சென்று விடாதவாறு பார்ப்பனர்கள் தடுத்துள்ளனர். இது ஒரு ஆரியச் சதி.
July 9, 2019 at 11:59
:-)
July 9, 2019 at 18:59
ஐயா, பாடத்துக்கு நன்றி. ஆனால் நீங்கள் இப்படி ஏடாகூடமாக எழுதப்போய், உங்கள் கிண்டலை வைத்து விடுதலைவீரமணி ஒரு பெரிய்ய்ய காட்டுரையையே எழுதிவிட்டால் நன்றாகவா இருக்கும்? ரோசிக்கவும்.
July 8, 2019 at 21:25
It is a case of blind leading the blind. Unllke in my time in the IAS ( I retired over two decades back and when we were generally neither seen nor heard) there seems to be a craze for publicity and I can see that one vital point ( I learnt this from an ICS mentor) was “always check and crosscheck.” is absent these days.
Incidentally in 1972 a report I had drafted on computerisation in Government was placed before the cabinet in Kerala and response was quite negative with the suggestion that I should be “sent away”
When Nirmala Seetharaman quoted from the Purnaanooru in her budget speech a few of my friends approvingly sent me the clip. When I asked them what it meant all of them (professionals who had studied in Tamil medium) hardly understood it.(I was educated mostly outside Tamilnadu)
Incidentally those interested in Sedlec may look at https://www.johnconnollybooks.com/sedlec-ossuary
Connolly has a novel with the ossuary as background.
July 9, 2019 at 11:57
Sir, thanks for responding and for the ref. So many young folks are in a terrible and tearing hurry. What to do.
For the rest wondering why Bmniac mentions sedlec – it was a response to my tweet – https://twitter.com/othisaivu/status/1147764733971316738
July 9, 2019 at 19:28
எதிர்கால செய்தி:
தமிழ்நாட்டில் கணினிப் பயன்பாடு பரவ தந்தை பெரியாரே காரணம். IAS ஆபீஸரின் ஆராய்ச்சி சொல்கிறது!
July 10, 2019 at 05:56
யாரங்கே! இந்த ஆளுக்கு இம்மீடியட்டா ‘தமிழ்க்குட்டு செங்குட்டுவன்’ விருதா கொடுங்கப்பா!
யோவ் கிரீ! இது படா டேஞ்சர்பா!
இதப் புட்ச்சிக்கினு நெசம்மாவே நம்ப உளறாறு எள்தறவுனுங்கோ மாத்தீ ரோசிச்சி எள்திருவானுங்கோ! :-(
July 11, 2019 at 14:50
[…] இந்த திருதிரு அஸ்தமனசூரியன் ஐஏஎஸ், திரு உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களின் தம்பியா விரோதியா […]
October 15, 2019 at 15:32
[…] இயக்குந ஐஏஎஸ் அதிகாரிகள் – நம் இளம் உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்! […]
November 4, 2019 at 19:25
[…] உயரதிகாரி உதயசந்திரன் ஐஏஎஸ், அகழ்வாராய்ச்சித்துறை […]
November 29, 2019 at 07:37
[…] எனக்கும் தலையோ காலோ ஒரு மண்ணுமோ (= உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களின் ஐடி ஆராய… !) சுத்தமாகப் புரியவில்லை. […]
May 7, 2021 at 21:28
[…] […]