கருணாநிதிக்கு எதிராக மனுஷ்யபுத்திரக் கழுதையொன்றின் போர்க்கொடி!
July 28, 2018
…இப்படியா பட்டவர்த்தனமாக, கருணாநிதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுச்சாலையை மறித்துப்போடப்பட்ட மேடையைப் பற்றி வாக்கியங்களை ஒடித்து ஒடித்துப்போட்டு முடமாக்கி, இப்படி ஒரு கழுதையை எழுதுவார்?
ஆக்ரமிக்கப்படும் நிலத்தின்மேல்
ஒரு நாய் குறுக்கே செல்கிறது
அதைச்சுடுகிறார்கள்
இப்போது, அவர் எழுதிய கழுதையின் க்ரியா ஊக்கியான கீழ்கண்ட படத்தைப் பாருங்கள்.
ஊழல்வாதியோ கடைந்தெடுத்த அயோக்கியரோ – ஆனால், சாகக்கிடக்கும் ஒரு மனிதரை இப்படியா கேவலப் படுத்துவது? அதுவும் நிதிகளைப் பெற்றகொண்ட பின்னும்? ச்சீ.
செய்நன்றி மறந்த அயோக்கியர்களுக்கு என்ன ஆகும் என்பதை அல்-கொர்ஆனின் ஸுரா இப்ரஹீம் (14:7) என்ன சொல்கிறது என்பதை அறியமாட்டாரா இவர்?
செய்நன்றி மறந்து உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைப்பவர்கள், நரகல்லாகவே இருந்தாலும், நரகத்தில்தான் வெந்து வெம்புவார்கள்…
பொட்டிகளின் பெருமை பெரிதுபொட்டிகளின் ஆளுமை அதிகம்பொட்டிகளை வாங்கும் பொட்டைகள் பலர்பொட்டிகளைக் கொடுப்பவர்கள் பாக்கியவான்கள்பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறேன்நாமெல்லாம் பொட்டில் பூச்சிகள்
மேற்படி மனுஷ்யபுத்திரக் கழுதை (தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே எழுதப்பட்ட போராளித்தன வீரியம் மிக்கது இது!) எழவின் முழுவடிவம்: பெரிய கலகம் வரப்போகிறது : மனுஷ்ய புத்திரன்
இன்னொரு அபத்தக் களஞ்சிய மனுஷ்யபௌத்திரக் கழுதை – இந்த எழவையும் என்னருமை சாருநிவேதிதா பெருமகனார் அவர்கள் மறுபிரசுரம் செய்து ஜீவன்முக்தியை நோக்கிய வடைக்கிருத்தலைச் செய்திருக்கிறார்…
என் தாயும் ஒரு ஏழைத்தாயாகத்தான் இருந்தாள்
ஆனால்
அவள் ஒருபோதும் தன்னை
ஒரு ஏழைத்தாய் என்று சொல்லிக்கொண்டதில்லை
மேலும் எங்களை
ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள் என்று
அவள் எங்களுக்கு சொல்லித்தரவும் இல்லைஅவள் எங்களுக்கு
நிறைய சொல்லித் தந்தாள்
ஏழ்மையை ஒரு மூலதனமாக பயன்படுத்தக் கூடாது
ஏழ்மையை ஒரு விளம்பரப்பொருளாக்கி
ஏழைகளை அவமதிக்கக் கூடாது
ஏழைகளின் தலையில் நடந்துபோய்
அதிகாரத்தின் பீடங்களை அடையக் கூடாது
ஏழமையை மறைக்க விலையுயர்ந்த கோட்டுகளை
அணியக் கூடாது
அதாவது ஏழ்மையைப் பற்றி ஒரு சுக்குக்கும் தம் குழந்தைகளுக்குக் கற்றுத்தராத ஒரு தாய், எப்படியெல்லாம் ஏழ்மையைப் பற்றியே சுற்றிச்சுற்றிச் சிலம்பமாடிக் கற்றுத் தந்திருக்கிறார், அதுவும் ‘நிறைய’ – எனக் கதறக் கதற ஒரு மசுத்துக்குக் கவிதை…
இதைச் சிலாகித்து இன்னொரு அரைகுறையான சாரு நிவேதிதா புளகாங்கிதம்.
இப்படிப் பிள்ளைகளைப் பெற்ற அந்தத் தாய், பெற்றவயிற்றில் பிரண்டைகளைத்தான் வைத்துக்கட்டிக்கொள்ளமுடியும்.
மன்னிக்கவும், அன்பிரண்டை செய்யவே முடியாது.
அரைகுறைகளின் அரைகுறைத்தனத்தை, அரை குரைத்தனத்தை – அரைகுரைகளே அறிவர்.
இப்படிக்கு,
(ஒரு பாவப்பட்ட) அரைகுறை.
—
- Charu Nivedita – The deranged mutant liberal rumormonger 26/07/2018
- சாருநிவேதிதா எனும் வடிகட்டிய பேடி 25/07/2018
- ‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’ 21/07/2018
- சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018
July 28, 2018 at 11:15
அறிவோம்…
July 28, 2018 at 18:33
யாருக்கோ யாரோ முகமூடி !
July 29, 2018 at 18:25
Sir, If you are expressing these feelings to get rid of stiffness in heart (having read their BS) or as a let-out-tool, it is fine . Being relatively a new entrant to the party, he has to exhibit unbounded enthusiasm .If AH alias MP knows of these as means to an end (accumulating wealth) , he will be ok . If he does not, he will be sucked out of his blood to the last drop and will be left high and dry . It is all in the game …you scratch my back and I scratch yours policy. CN & AB.CHAN are all corteges of MP , thanks to vested interests .. From your end, you need to just wish him good luck. Let them live ..you will see MP as RAJYA SABHA MP soon.