கருணாநிதிக்கு எதிராக மனுஷ்யபுத்திரக் கழுதையொன்றின் போர்க்கொடி!

July 28, 2018

திருவாளர் மனுஷ்யபௌத்திர பிரச்சார பீரங்கியார், காலையில் எழுந்து காலைக்கடன்களைக் கழிப்பதைக் குறித்த முதற்கவிதை வெளியேற்ற எழவிலிருந்து அமர்க்களமாக – பிற காலாகாலக் கடன்களை மானுடர் கழிப்பதுபோலக் கழுதைகழுதையாக வேளாவேளைக்கு எழுதித் தள்ளுவதெல்லாம், தமிழர்களின் சோகமான பழவினைப்பயன் என்றாலும்…

…இப்படியா பட்டவர்த்தனமாக, கருணாநிதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுச்சாலையை மறித்துப்போடப்பட்ட மேடையைப் பற்றி வாக்கியங்களை ஒடித்து ஒடித்துப்போட்டு முடமாக்கி, இப்படி ஒரு கழுதையை எழுதுவார்?

ஆக்ரமிக்கப்படும் நிலத்தின்மேல்
ஒரு நாய் குறுக்கே செல்கிறது
அதைச்சுடுகிறார்கள்
திமுகவினர் இவருக்குக் கொடுக்கும் பொட்டிகளை விட, அதிகக் கொள்ளுமானப் பொட்டிகளை இவருக்கு திமுகவின் அரசியல் எதிரிகள் (அதாவது பாவப்பட்ட பொதுமக்கள்) கொடுத்துவிட்டார்களா என்ன?

இப்போது, அவர் எழுதிய கழுதையின் க்ரியா ஊக்கியான கீழ்கண்ட படத்தைப் பாருங்கள்.

​ஊழல்வாதியோ கடைந்தெடுத்த அயோக்கியரோ – ஆனால், சாகக்கிடக்கும் ஒரு மனிதரை இப்படியா கேவலப் படுத்துவது? அதுவும்  நிதிகளைப் பெற்றகொண்ட பின்னும்? ச்சீ.​

செய்நன்றி மறந்த அயோக்கியர்களுக்கு என்ன ஆகும் என்பதை அல்-கொர்ஆனின் ஸுரா இப்ரஹீம் (14:7) என்ன சொல்கிறது என்பதை அறியமாட்டாரா இவர்?

செய்நன்றி மறந்து உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைப்பவர்கள், நரகல்லாகவே இருந்தாலும், நரகத்தில்தான் வெந்து வெம்புவார்கள்…

ஹ்ம்ம்… ஆனால், நாளைக்கே – அவருடைய அதிகாலைக்கடனாக…
பொட்டிகளின் பெருமை பெரிது
பொட்டிகளின் ஆளுமை அதிகம்
பொட்டிகளை வாங்கும் பொட்டைகள் பலர்
பொட்டிகளைக் கொடுப்பவர்கள் பாக்கியவான்கள்
பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறேன்
நாமெல்லாம் பொட்டில் பூச்சிகள்
என, அடுத்து ஒரு கழுதையை எழுதித் தள்ளிவிடுவாரோ?

மேற்படி மனுஷ்யபுத்திரக் கழுதை (தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே எழுதப்பட்ட போராளித்தன வீரியம் மிக்கது இது!) எழவின் முழுவடிவம்: பெரிய கலகம் வரப்போகிறது : மனுஷ்ய புத்திரன்

​அல்லது, இசுடாலிருக்கு எதிராக ஒரு கலகம் உருவாகப்போகிறது என மறைமுகமாக ஒரு அறைகூவலிடுகிறாரோ இந்த அரைகுறையார்?​

இன்னொரு அபத்தக் களஞ்சிய மனுஷ்யபௌத்திரக் கழுதை – இந்த எழவையும் என்னருமை சாருநிவேதிதா பெருமகனார் அவர்கள் மறுபிரசுரம் செய்து ஜீவன்முக்தியை நோக்கிய வடைக்கிருத்தலைச் செய்திருக்கிறார்…

அது இப்படி ஆரம்பித்து எப்படியோ போகிறது…

என் தாயும் ஒரு ஏழைத்தாயாகத்தான் இருந்தாள்
ஆனால்
அவள் ஒருபோதும் தன்னை
ஒரு ஏழைத்தாய் என்று சொல்லிக்கொண்டதில்லை
மேலும் எங்களை
ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள் என்று
அவள் எங்களுக்கு சொல்லித்தரவும் இல்லை

அவள் எங்களுக்கு
நிறைய சொல்லித் தந்தாள்
ஏழ்மையை ஒரு மூலதனமாக பயன்படுத்தக் கூடாது
ஏழ்மையை ஒரு விளம்பரப்பொருளாக்கி
ஏழைகளை அவமதிக்கக் கூடாது
ஏழைகளின் தலையில் நடந்துபோய்
அதிகாரத்தின் பீடங்களை அடையக் கூடாது
ஏழமையை மறைக்க விலையுயர்ந்த கோட்டுகளை
அணியக் கூடாது

அதாவது ஏழ்மையைப் பற்றி ஒரு சுக்குக்கும் தம் குழந்தைகளுக்குக் கற்றுத்தராத ஒரு தாய், எப்படியெல்லாம் ஏழ்மையைப் பற்றியே சுற்றிச்சுற்றிச் சிலம்பமாடிக் கற்றுத் தந்திருக்கிறார், அதுவும் ‘நிறைய’ – எனக் கதறக் கதற ஒரு மசுத்துக்குக் கவிதை…

இதைச் சிலாகித்து இன்னொரு அரைகுறையான சாரு நிவேதிதா புளகாங்கிதம்.

இப்படிப் பிள்ளைகளைப் பெற்ற அந்தத் தாய், பெற்றவயிற்றில் பிரண்டைகளைத்தான் வைத்துக்கட்டிக்கொள்ளமுடியும்.

மன்னிக்கவும், அன்பிரண்டை செய்யவே முடியாது.

அரைகுறைகளின் அரைகுறைத்தனத்தை, அரை குரைத்தனத்தை – அரைகுரைகளே அறிவர்.

இப்படிக்கு,

(ஒரு பாவப்பட்ட) அரைகுறை.

 

 

3 Responses to “கருணாநிதிக்கு எதிராக மனுஷ்யபுத்திரக் கழுதையொன்றின் போர்க்கொடி!”


  1. அறிவோம்…

  2. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    யாருக்கோ யாரோ முகமூடி !

  3. Unknown's avatar Anonymous Says:

    Sir, If you are expressing these feelings to get rid of stiffness in heart (having read their BS) or as a let-out-tool, it is fine . Being relatively a new entrant to the party, he has to exhibit unbounded enthusiasm .If AH alias MP knows of these as means to an end (accumulating wealth) , he will be ok . If he does not, he will be sucked out of his blood to the last drop and will be left high and dry . It is all in the game …you scratch my back and I scratch yours policy. CN & AB.CHAN are all corteges of MP , thanks to vested interests .. From your end, you need to just wish him good luck. Let them live ..you will see MP as RAJYA SABHA MP soon.


Leave a Reply to nparamasivam1951 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *