ராஜனி திராணகம: சில நினைவுகள், குறிப்புகள்
September 21, 2014

ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)
பிரபாகரனின் விசிலடிச்சான்புலிக் குஞ்சப்பர்களால், ராஜனி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 35தான்! நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு, இறந்து, அவர் கீழே வீழ்ந்ததற்குப் பின்னரும்கூட, பின் மண்டையில் இரண்டு தடவை மேலதிகமாகச் சுட்டு தங்கள் அற்பத்தனத்தை நிரூபித்துக் கொண்டார்கள் – சுட்டவர்கள்.
சரியாக 25 வருடங்கள் முன் – 1989ல் கொலைவெறி எல்டிடிஇ கும்பலால் அழித்தொழிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான இவர் – யாழ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், ஒரு (மெய்யாலுமே) மனிதவுரிமைக் காரராகவும் இருந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்‘ எனும் அமைப்பின் தொடங்கிகளில் ஒருவர். (இவரை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிட்டு, எனக்கு, இவர் ஆகிருதியை குறைத்து மதிப்பிட ஆசையில்லை)
அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர், இளமையில் சில ஆண்டுகள் எல்டிடிஇ அமைப்பில் இருந்தாலும் – மனம் மேம்பட மேம்பட, சிந்தனைகள் விரிவடைய, அனுபவங்கள் கற்றுத்தர – பின்னாட்களில் – எல்டிடிஇ உட்பட பல தமிழக் கூலிப்படை வன்முறை இயக்கங்களின், ஸ்ரீலங்கா அரசின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிராகவெல்லாம் பலமாகவே குரல் கொடுத்து வந்தவர். (இவர் ஐபிகேஎஃப்-க்கும் எதிராகக் கருத்துடையவராக இருந்தார்; பல சமயங்களின் இவரும் பரப்புரைகளுக்கு மயங்கினார்தான்)
இவருடைய கணவர் – தயாபால திராணகம, சிங்கள பௌத்தர்; நம்முடைய 2013 ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் போராகோமாளித்தன மாணவமணிகள் போலல்லாமல், அரசியல் நிலவரம் அறிந்த, அறிவுள்ள மாணவர் தலைவர் – நேர்மையாளர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ராஜனி படித்துக் கொண்டிருக்கும்போது, இவருடன் ஏற்பட்ட அறிமுகம் – ராஜனிக்கு இளம் 23 வயது திருமணத்தில் தொடர்ந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என எனக்கு நினைவு.
ஏனெனில் பிரபாகர போல்பாட்வாதிகளுக்கு, ராஜனி போன்றவர்கள் எதிரிகள் மட்டுமே!
ஃபாஸ்ஷிஸ்ம் என்பதற்கு – நம் தமிழ் நாட்டில், தமிழைக் கூறு போடும் நல்லுலகில், வேறெங்கெல்லாமோ மஸ்ஸோலினியிடமோ செல்லவே வேண்டாம். நம் உலகத்தின் மகாமகோ ஃபாஸ்ஷிஸ்ட் – பிரபாகரன் தான்.
பயங்கர துரோகங்கள் செய்து, போதை மருந்து கடத்தி, பாண்டி பஜாரில் ‘பெண் விஷயமாக’ துப்பாக்கி விளையாட்டு விளையாடி, பொதுமக்களிடம் கப்பம் வசூலித்து, அடாவடிக் கட்டப் பஞ்சாயத்து செய்து, ஆயிரக்கணக்கில் சகோதர இயக்கக்காரர்களை – பொதுமக்களை ஒழித்து, எதிர்காலத்தில் மகத்தான சமூகத் தலைவர்களாக உருவாகியிருக்கக் கூடுபவர்களை முளையிலேயே இனம் கண்டு கிள்ளியெறிந்து, பச்சிளம் பாலகர்களைக் கொலை செய்து, குடும்பங்களைச் சிதைத்து, இரண்டு தலைமுறை தமிழ் இளைஞர்களை வலிந்து வன்முறை முட்டுச் சந்துக்குள் செலுத்தி ஒழித்துக்கட்டி, ரத்தக் களறிக் கபடியாடிய அதே சமயத்தில், தன் குடும்பத்தை ராஜபோகத்தில் வாழவைத்த இந்தக் கபடவாதி -ஒரு வழியாக போய்ச் சேர்ந்தது, உலகத்துக்கு நிம்மதி.
ஹிட்லர் ஒரு பரிதாபத்துக்குரிய அரைகுறை – அவருடைய குணாதிசியங்கள், அற்பத்தனங்கள் ரீதியாக நம்முடைய சொந்த பிரபாகரனுடன் அவரைப் பொருத்திப் பார்த்தால்.
-0-0-0-0-0-0-
இப்புத்தகத்தின் 367ஆம் பக்கத்தில் ராஜனி – எல்டிடிஇ கும்பலைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பு (என் அவசர மொழிமாற்றத்தில்):
“… புலிகளின் வரலாறு, அவர்களுடைய சிந்தாந்த வெற்றிடம், அரசியல் முதிர்ச்சியின்மை, சகிப்புத் தன்மையில்லாமை, வெறித்தனமான அடிபணிதல் – இக்காரணங்களாலேயே அந்த அமைப்பு தகர்ந்து விடும். புலிகளால் அநியாயமாக அழித்தொழிக்கப் பட்டவர்களின் ரத்தத்தாலும் கண்ணீராலும் நனைக்கப்பட்ட வரலாறுகள் மிஞ்சியிருக்க – புலிகள் முடிந்து விடுவார்கள். ஒரு புதுப் புலி – அந்தச் சாம்பலில் இருந்து வெளிவராது.”
இப்படியெல்லாம் பட்டவர்த்தனமாக எழுத, ஒரு மனிதருக்கு (=ராஜனி) எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்!
ஏப்ரெல்-மே 1986 – என்னுடைய கடைசிவருட பொறியியல் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன; மிச்சமும் சொச்சமுமாக முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டிருந்த என் ஆராய்ச்சி வேறு. கருணாநிதி தம்முடைய வழக்கம்போல கபட நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் – அதாவது தமிழன் ரத்தம், தொப்புள்கொடியுறவு என்றெல்லாம் சுளுவாகப் பொய் பேசிக்கொண்டே, சர்வசாதாரணமாக ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு. இந்தியாவுக்கு துரோகம் செய்துகொண்டிருந்தார்.
தமிழகத் தமிழர்கள், நம் தானைத்தலைவருக்கு ஒரு பொருட்டேயல்லர் – ஏனெனில், அவர்கள்தாம் திராவிடமாயை சகதியில் மாட்டிக்கொண்டு முடிந்தபோதெல்லாம் அவரை பதவியில் உட்காரவைத்து, அவரது குடும்பத்துக்கு மட்டுமே, தமிழகத்தை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடிக்க அனுமதித்துக் கொண்டேயிருந்தனரே!
ஹ்ம்ம்… அப்போது – என்னுடைய சில நண்பர்கள், அறிமுகமானவர்கள், என் வயதையொத்தவர்கள் – டெலொ (தமிழீழ விடுதலை இயக்கம் – TELO) அமைப்பில் இருந்தார்கள். இவர்கள் படித்தவர்கள், யோசித்தவர்கள். பண்பாளர்கள். செயலூக்கம் மிக்கவர்கள்; இவர்களுக்கும் தங்களுடைய டெலோ அமைப்பால் சிலர் கொலை செய்யப் பட்டது பிடிக்கவில்லை – இவர்கள் தேவையற்ற வன்முறைகளை, அரசியல்-நிராயுதபாணிக் கொலைகளை ஆதரிக்கவில்லை. டெலோ ஒரு ஆயுதம் தாங்கி இயக்கமானாலும் – அதற்குள் ஏகப்பட்ட முரண்களும், ரத்தம் சிந்திப் பதவிப்போட்டிகளும் இருந்தாலும், அதில் ஓரளவுக்கு ஜனநாயகம், மாற்றுக் கருத்துகளை அறிதல் போன்றவை இருந்திருக்க வேண்டும்; இவர்கள் நிதி சேகரிப்பு உட்பட சில விஷயங்களுக்காகவும் சென்னையில் தங்கியிருந்தார்கள். அப்போது எனக்கு இவர்களுடன் கொஞ்சம் பழக்கம்.
சரி. ஏப்ரல் முதல்வார வாக்கில் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள் முகங்களில் சிரிப்பு இல்லை. ஒரு இறுக்கம் தான், பாவம்; தயக்கத்துடன் நான் அவர்களை தடுத்து, பின்னர் போய்க் கொள்ளலாமே என நானும் என் பிற நண்பர்களும் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை.
ஏனெனில், டெலொ இயக்கத்தினரை (ஜெகன், குட்டிமணி போன்றவர்கள் ஆரம்பித்த இந்த இயக்கத்தின் அப்போதைய தலைவர் சிறீ சபாரத்தினம்) அடியோடு ஒழிக்க, ஃபாஸ்ஷிஸ்ட் பிரபாகரனின் எல்டிடிஇ கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆக, டெலொ விசுவாசிகள் எல்லோரும் தாய் நாட்டை நோக்கி – தங்கள் இயக்கத்தைக் காக்கச் சென்று கொண்டிருந்தார்கள் என நினைக்கிறேன்.
ஏப்ரெல் முடிவிலிருந்து படுகொலைகள் ஆரம்பித்தன. மே 5 வாக்கில் நிராயுத பாணியாக்கப் பட்ட சபாரத்தினம், துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்; இவருக்கு ‘மரண தண்டனையை’ பிரத்தியேகமாக வழங்கியவர் -பிரபாகரனின் எடுபிடியான கொலைவெறி சதாசிவம் ‘கிட்டு’ கிருஷ்ணமூர்தி!
ஆனால் – எவ்வளவு முறை இதே சபாரத்தினம், ஆபத்துக் காலங்களில் பிரபாகரனை அரவணைத்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் என்பது இங்கு சிந்திக்கத் தக்கது. பிரபாகரனின் குயுக்தித் துரோக மனப்பான்மைக்கு இணையே இல்லை.
இப்படி எரிக்கப்பட்ட சிலர் பாலகர்கள், 14-15 வயது குழந்தைகள்.
அச்சமயம் – எல்டிடிஇ கும்பலின் இம்மாதிரி அயோக்கியத் தனங்களை, கொலைவெறியை எதிர்த்து – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொதித்தெழுந்தனர். சில (மெய்யாலுமே) ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’கள், பேரணிகள் நடந்தன.
ஆனால் – இந்த மாணவர்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும் எல்டிடிஇ கும்பலால் திட்டமிட்டுக் கொலை செய்யப் பட்டனர். இப்படிப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது – விமலேஸ்வரன்.
இப்போது யோசித்துப் பாருங்கள் – நேர்மையும் வீரியமும் மிக்க மாணவர்களை அயோக்கியத்தனமாகக் கொன்ற இதே கழிசடை எல்டிடிஇ இயக்கத்துக்கு ஆதரவாக – தமிழ் நாட்டு இளைஞமாணவ அறிவிலிக் குளுவான்கள் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’கள் வேறு விமரிசையாக, தொலைக்காட்சி அலைவரிசைகள் புடைசூழ நடத்தினார்கள். கேவலம்….
… எது எப்படியோ – கடைசியில், பிணவமைதியும் எல்டிடிஇ பாணி ஜனநாயகமும் அரங்கேறின.
ஆனால் சரித்திர சக்கரம் சுழன்று – ஒரு வழியாக, ராஜனி அவர்கள் ஆரூடம் சொன்னது போல 2009ல் எல்டிடிஇ கும்பலும் ஒழிக்கப் பட்டது. கெடுவான் கேடு நினைப்பான், வேறென்ன சொல்ல.
“… I had undertaken this journey to visit Rajani’s grave for the first time. Engraved on the tombstone were the words chosen by her mother Mahila Ruppiam, a devout Christian: “Blessed are those who are persecuted for righteousness sake, for theirs is the kingdom of heaven”.She outlived her daughter by nearly two decades and her ashes are now buried with her. “I wondered, when I read those words, whether she had chosen those words as a rebuke to the LTTE and their fervent supporters who had denounced her daughter as a ‘traitor’ to the Tamil people, declared her as an outcast from Tamil Eelam and then brutally murdered her.

புனித ஜேம்ஸ் சர்ச் வளாகத்தில் ராஜனி அவர்களின் கல்லறை – படம் எடுத்தது 2002ல், சபா தம்பி அவர்களால். நன்றி: http://dbsjeyaraj.com/dbsj/archives/33112
-0-0-0-0-0-0-
2005ல் ஹெலென் க்ளடாஸ்கி அவர்கள் சுமார் ஒன்றேகால் மணி நேரம் ஓடக்கூடிய ஒரு ஆங்கில ஆவணப் படத்தை – ‘இனிமேல் கண்ணீர் விடவேண்டாம், சகோதரி’ என்பதை எடுத்தார். ( No More Tears Sister (2005)). 2007 வாக்கில் என நினைவு – நான் பெங்களூரில் இதனைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
இன்று இணையத்தில் தேடிப்பார்த்தால், யூட்யூப் தளத்தில் இந்தப் படம் முழுவதும் (ஆனால் ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு) காணக் கிடைக்கிறது.
ஆக, என் பார்வையில், ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய, பார்த்துவிட்டு ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. முக்கியமாக – அந்த மனிதன், சிந்திக்கவே தெரியாத, வரலாற்றைச் சுத்தமாக அறியாத, அர்த்தமில்லாமல் தினவெடுத்துக் கொண்டு உணர்ச்சிகரமாக கொந்தளித்துக் கொண்டிருக்கும் அற்ப ‘பிரபாகர பூஜை’ செய்யும் தமிழகத் தமிழனானால் – அவன் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்.
சிந்திக்க வேண்டும்.
… ராஜனி! உங்களை எப்படி நான் மறக்க முடியும்? :-(
தொடர்புள்ள பதிவுகள்/சுட்டிகள்:
- தயாபால திராணகம அவர்களின் சில ஆங்கிலக் கட்டுரைகள்: http://www.sacw.net/auteur605.html
- ஓத்திசைவு எல்டிடிஇ(எதிர்) பதிவுகள்:
- ஒத்திசைவு ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ பதிவுகள்:
- ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு! 06/01/2014
- ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ அல்லது முட்டை – இறந்த காலத்தின் நிகழ்காலக் குறிப்புக்கள்08/07/2013
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்… 03/04/2013
- மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++ 30/03/2013
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு 19/03/2013
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா 06/04/2013
- தொகுப்பு: சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள்
- தொகுப்பு: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
September 21, 2014 at 10:03
எல்.டி.டி.இ. இயக்கம் 2009ல் அழிக்கப்பட்டுவிட்டது. 2013ல் நடந்த மாணவர்கள் போராட்டம் எல்.டி.டி.இ-க்கு ஆதவாக நடத்தப்பட்டதாகச் சொல்வது முற்றிலும் தவறு. அவர்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை ஜெனிவாவில் அமெரிக்கா அப்போது கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதே. இறுதிப்போரில் நடந்த போர்க்குற்றங்கள் (இரு தரப்பிலும்தான்) பாரபட்சமின்றி சர்வதேசக் குழு ஒன்றால் விசாரிக்கப்பட வேண்டும், தமிழ் ஈழம் வேண்டுமா என்பதற்குப் பொது வாக்கொடுப்பு நடத்தப்பட வேண்டும் எனபவை மற்ற கோரிக்கைகளாக இருந்தன.
இன்னொன்று, ராஜனி புலிகளைப் பற்றிச் சொன்னது மட்டும் சரி, அவரே ஐ.பி.கே.எஃப். பற்றிச் சொன்னால் ‘பரப்புரைகளுக்கு மயங்கினார்’ என்பது ‘நிசப்தம்’ பதிவு பற்றி அவ்வளவு அறச்சீற்றப்படுபவர் செய்கிற காரியமாகத் தோன்றவில்லை.
September 21, 2014 at 14:01
ஸார், “முறிந்த பனை” தமிழ் வடிவமும் இணையத்தில் கிடைக்கிறது. தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88
சிவா கிருஷ்ணமூர்த்தி
September 21, 2014 at 18:31
The tamil version of ‘The Broken Palmyra’ is here: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88
Thanks.
September 22, 2014 at 03:47
நன்றி! // Blessed are those … // படித்தவுடன் அழுதுவிட்டேன்.
September 22, 2014 at 11:00
wow. Thanks for posting. I never heard of her so far. This is the first time I read about her.
September 22, 2014 at 18:06
இது போல உண்மைகளை உரக்கச் சொல்கிறவர்கள்தாம் தமிழ்நாட்டுக்கு வேண்டும். 2009க்குப்பிறகு பழைய பாவங்கள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டுப் புனிதர்களாக்கப்பட்டு ஐயோ பாவமாக்கப்பட்டு விட்ட அந்த அப்பாவிப் போராளிகளின் (இந்த Oxymoronஇன் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? எனக்குப் புரியவில்லை.) முகத்திரை கிழிக்கப்படும்போதெல்லாம் உண்மை சாகாது என்ற ஆறுதல் சற்றே உண்டாகிறது.
September 23, 2014 at 00:47
ரத்தம் கொதிக்க, கண்கள் சிவக்க, கன்னம் துடி துடிக்க ஐயாவுக்கு ஒரு “தமிழ் துரோகி” பட்டம் பார்சல் பண்ணேய்…………………! :-)
September 28, 2014 at 16:57
தமிழ் துரோகி…
October 15, 2017 at 00:40
http://www.thehindu.com/opinion/op-ed/chronicles-of-a-carnage-foretold/article19814392.ece
July 7, 2018 at 17:47
ஐயா,
தங்களின் இந்த பதிவை முன்னரே படித்திருக்கிறேன்.இரண்டு நாட்களுக்கு முன் தி இந்து வில் ராஜனி திராணகம பற்றி படிக்க நேர்ந்தது. அந்த செய்தி உங்கள் பார்வைக்கு https://www.thehindu.com/books/novel-on-rajani-thiranagama-gets-ready-for-english-readers/article24332479.ece
September 21, 2021 at 07:44
[…] […]