கோடம்பாக்கம் ஜெயமோகனின் தொடர்பொய்மைகள், ஸூஃபி உளறல், ப்ருத்விராஜ் சௌஹான் + ஜெயச்சந்திரன் மீதான அவதூறுகள், அரவிந்தனின் நீளகண்டனம் – தரவுகள், குறிப்புகள்

October 26, 2021

1

நண்பர் ஒருவர் அருளால், முதலில் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவையும் – பின்னர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில்,அவருடைய விக்கிபீடியக் கட்டுரை மானேதேனேயையும் (அஜ்மீர் பயணம்-6)படிக்க நேர்ந்தது.

நீங்களும் அவற்றைப் படியுங்கள்; அவற்றைப் படிக்காவிட்டாலும் – அவை இப்போது இணையத்தில் இல்லையென்றாலும் பரவாயில்லை – தேவையானவற்றை ஸ்க்ரீன்ஷாட்களாக இப்பதிவில் கொடுக்கிறேன்.

சரி.

முதலில் எனக்குத் தோன்றியது என்னவென்றால் – ஜெயமோகன் ஆக்கம் என்றால் ஜேஜேயென்று கதைவசனம் புனைவு டகீல் எழவுதானே   + கடந்த பலப்பல ஆண்டுகளாகவே என்று-எப்போதுதான் அவர் உண்மையான விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார் + இந்த அழகில் நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமான அவருடைய தொடர்ந்த அட்ச்சிவுடலைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் + வரவர அவர் எழுதுவதை, நேரடிக்கதைப் புனைவுகள் உட்பட, படிக்கவே முடிவதில்லையே… +++

அல்லது, சுருக்கமாக: இன்னுமாடா நாம்ப அவர் எளுதறத அப்டியே நம்புறோம்?

ஆனால்,  என் செல்ல ஜெ – அளவுக்குமீறித் தொடர்ந்து மனச்சாட்சியோ அறவுணர்ச்சியோ, ஏன் துளிக்கூடக் கூச்ச நாச்சமோ இல்லவேயில்லாமல் கண்டமேனிக்கும் கைக்கு வந்ததுபோல் தட்டச்சி அட்ச்சிவுடுவதை வேதவாக்காக நம்பும் இளைஞர்களும் , முதிய கூறுகெட்டவர்களும் வாழும் இந்தத் தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் – அயோக்கியத் தனங்களை எதிர்கொள்வது முக்கியம்.

அதனைத் தொடர்ந்து செய்வதற்கு நம் ஆலையில்லா ஊரில் நிறையபேர் இல்லை – ஆனால் நம் அரவிந்தன் நீலகண்டன் தொடர்ந்து, ஒழிந்தபோதெல்லாம் அவருடைய எதிர்வினைகளைத் தரவுகளுடன் ஹோம்வர்க் செய்து பதிவு செய்கிறார். பொலிக, பொலிக

கீழ்கண்டபகுதிகளில் ஒருமாதிரி முழுமைக்காகவும், பின்புலத்துக்காகவும் அவற்றின் ஸ்க்ரீன்ஷாட்களைக் கொடுக்கிறேன்.

பின்னர், என் வியாக்கியானம். (தேவையா?)

ஏனெனில், அநீ –  ப்ருத்விராஜ் சௌஹான் குறித்து ஜெயமோகன் அருள்வாக்களித்திருக்கும் சில பெரும் பொய்களைக் கருத்தில்கொண்டு எழுதியிருக்கிறார், ஜெயமோகனின் அடிப்படைப் பொய்மை உடனடியாகத் தகர்க்கப் படவேண்டியதே – ஆனால் அதே காட்டுரையில் அதற்குமேலும் சிலபல ஜெயமோக மானேதேனேக்களும் சில்லரைத்தனங்களும் இருக்கின்றன அவையும் ஒருமாதிரி, முடிந்தவரை தரவுகளுடன் கோடிகாட்டப்பட வேண்டும் என்பது என் கருத்து. (தேவையா, தேவையா??)

2

கீழே முதலில் ஜெயமோகனின் (வழக்கமேபோல) அட்ச்சிவுடல்கள் – இவற்றில் பெரும்பாலும் விக்கிபீடியப் பீலாக்களில் அவருடைய சொந்த மானேதேனே சரக்கும் 50:50 என இருக்கின்றன… (அநீ எதிர்வினைக்கு முகாந்திர விஷயங்கள் இவை)

பெரும்பேராசானுக்குப் பாவம், ஓடிப்போய் மூச்சிரைக்க விக்கிபீடிய வகையறா விஷயங்களைப் படித்துக் கரைத்து ஏகத்துக்கும் குடிப்பதால் மறுபடியும் மறுபடியும் ஒர்ரே விஷயம் சௌஹான்-அப்பா-ஸோமேஸ்வரன் என எழுதவேண்டியிருக்கிறது. ஐயோ பாவம்.

வாசகக் குஞ்சாமணிகளும் இதனை மறுபடியும் வேளைக்கு ஒருதடவை உணவின் பின்னர், மூன்று நாட்களுக்குப் படித்து, மன்னிக்கவும் வாசித்து, அல்லது ப்ளடி உள்வாங்கி – சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள். இறும்பூது!

ஆ! அது பிருத்விராஜ் ரஸோ அல்ல! ப்ரிதிராஜ் ரஸ. (ஆனால் பொதுவாகவே இது இப்படி கோணாமாணாவாக விக்கிபீடியர்களால் அழைக்கப்படுவதால் அப்படியே இருக்கட்டும்!)

ப்ரிதி ராஜ் ரஸோ புத்தகம் ப்ருத்வி ராஜ் இறந்து கிட்டத்தட்ட 400 வருடங்களுக்குப் பின் எழுதப் பட்டது; துளிக்கூட ஒப்புக்கொள்ளமுடியாத இட்டுக்கட்டுகள் நிரம்பியது – ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்! இந்த மானேதேனே பெரும்பாலும் நம் பெரும்பேராசான் எழுத்துகள் போலவேதான்!

மேலும் இந்த கதம்பவாசர்/கைமஸ் அமைச்சர், பிராம்மணர் அல்லர்; அவர் தஹிமா எனும் போர்க்குடி மக்கள்திரளைச் சேர்ந்தவர்!

மேலும் கடவுளே! இந்த ப்ரதாபசிம்மன் தளபதி இல்லை; வெறும் வேலேந்திய மெய்க்காப்பாளன் தான்! ஏன் தளபதி கிளபதி என ஸ்டாலின் பஜனை ஏகத்துக்கும்?

அதற்குமேலும் கடவுளே! இந்த ப்ரதாபசிம்மன் ப்ருத்விராஜனுக்குப் போட்டுக்கொடுத்தவிஷயம், ப்ரபந்தத்தின்படி – கைமஸ் துருக்கியர்களுக்காக ஒற்றுவேலை செய்வதாகத்தான் – இதெல்லாம் கதையாடல் என்றாலும்! ஆனால் இம்மாதிரியே கிட்டத்தட்ட நான்கு கதைகள் விதம்விதமாக இருக்கின்றன என்பதை ஏன் பேராசான் குறிப்பிட மறந்தார்?

“கதம்பவாசர் என்பவர் [கைமாசர், கைலாசர் என்னும் பெயர்களிலும் அறியப்படுபவர்] ராஜஸ்தானின் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவர். தெனாலிராமன் போல விவேகியான அறிஞராக நாட்டார் கதைகளில் இடம்பெறுபவர்.

இந்த விவேகி, புகழ்பெற்ற அறிஞர் விஷயங்களுக்கெல்லாம் ஒரு தரவாவது நம் பேராசானால் கொடுக்கமுடியுமா?

இல்லாவிடில் எம் பேராசான் வாயால் இப்பட்டங்களெல்லாம் எனக்கும் கிடைக்குமா?

“பிருதிவிராஜ ரசோ என்னும் நூல் கதம்பவாசர் பிருத்விராஜின் ஆசைநாயகியான கர்நாடி என்பவளின் படுக்கையறையில் பிடிபட்டதனால் தான் கொல்லப்பட்டார் என்கிறது.

பேராசானே! மூலம், வெறுமனே கர்நாடக தேசத்திலிருந்து வந்த அழகுப்பெண் கைமஸ் பேரில் மையல் கொண்டாள் என வருகிறது. இதுகுறித்துத் துணுக்குற்ற பட்டத்துராணி சொன்னதால் அவள் பணிப்பெண் ஊருக்கு வெளியில் தங்கியிருந்த ராஜாவிடம் சொல்லி…. அவருக்குக் கோபம் வந்து – கிடுகிடுவென்று கைமஸ்ஸிடம் போய்ச் சண்டைபோட்டுக் கொன்றதாகவும்…. பின்னர் அதே கைமஸ் வகையறா மொஹம்மத்கோரியிடம் சரணடைந்ததாகவும் எல்லாம்… கதைகதையாய்…. விதம்விதமாய்…

ஆனால், ஜெயமோகன் ஏதோ தானே ‘ பிருதிவிராஜ ரசோ!’ படித்தது போல அந்த இளம்பெண்ணின் பெயர் கர்நாடி என்கிறார்!  கதைகதையாய்…

இப்படியெல்லாம் பீலா விடுவதற்கு, பேசாமல் நம் பெரும்பேராசான் ஒரு அரசவைக் கவிஞர் ஆகிவிடலாம்தான்!

பீலா விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா, ஜெயமோகனாரே! :-(

அசிங்கமான பொய்மை இது, ஒரு இழிபிறவியாக இருந்தால்தான் இப்படியெல்லாம் பொய்பொய்யாகவும் மேதாவித்தனமாகவும் அட்ச்சிவுடமுடியும். (ஆனால் அநீ, இதற்குப் பொறுமையாக விமர்சனத்தை எழுதியிருக்கிறார் – அது அடுத்த பகுதியில்…)

ப்ருத்விராஜவிஜயம் என்ன சொல்கிறது? அது முழுமையானதா?

அரசவைக் கவிஞர்கள் புகழ்ச்சிக்காகச் சொல்வதெல்லாம் வரலாறு ஆகி விடுமா? ஜெயமோகன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்குமா?

ஆகவே, அவருக்கு அறம் பற்றிய கவலையோ, மூல நூல் குறித்த அறிவோ நேர்மையோ இல்லாத காரணத்தால் அவருக்குக் கண்டமேனிக்கும் அட்ச்சிவுட முடிகிறது.

கிடைத்த ஒரேயொரு சுவடி கண்டமேனிக்கும் சிதைந்ததுமில்லாமல் அது முழுமையாகவும் இல்லை எனக் கருத்து தெரிவித்திருக்கின்றனர், சான்றோர் – விஷயம் அறிந்தவர்கள்.

ஆனால், ஊர்சுற்றிப் பார்த்துவிட்டு நாலு விக்கிபீடியா பக்கங்கள் படித்தவுடன், நம் ஜெயமோகனாருக்கு ஞானம் பொங்கி வழிகிறது… பளிச்சென்று அவரது ஞானதிருஷ்டியில் அவருக்கு மொத்தவரலாறும் கிட்டி விடுகிறது… பொறாமையாக இருக்கிறதே!

எப்படியும் – அதே ப்ருத்விராஜவிஜ்யத்தில் பத்தாம் சர்க்கத்தில் ஜெயமோகன் புளுகியிருப்பதுக்கு மாறாக விஷயங்கள் இருக்கின்றன.

இதில் எங்கே வருகிறது பெண்பிள்ளைகளையும் குழந்தைகளையும் கொலைசெய்தது?

பதவிச்சண்டை போட்டுத் தோற்றோடிய நாகார்ஜுனனின் அன்னை, ப்ருத்விராஜனுக்குச் சித்தி. அவரையும் நாகார்ஜுனனின் மனைவி+குழந்தைகளையும் தம் கோட்டைக்கு அழைத்துச் சென்றதாக அல்லவா இருக்கிறது? நாகார்ஜுனனுக்கு உதவியாகக் கலகம் செய்து கோட்டையைப் பிடித்தவர்களின் தலையைக் கொய்தது போலத்தானே வருகிறது?

ஜெயமோகன் செய்தது (அநீ சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது போலவே) அறியாமையின் பாற்பட்டது அல்ல – மாறாக அவர் தொடர்ந்து செய்யும் அயோக்கியத் திரித்தல்களின் நீட்சியே!

இரு விஷயங்கள்: 

1. இம்மாதிரி புனைவுகள் பொதுவாகவே மானேதேனே வகை – அரசனின் மாண்பை உயர்வு நவிற்சி செய்பவை. அவன் பராக்கிரமத்தைப் பறை சாற்றுபவை; இருந்தாலும், இந்த விஜயத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிரண்டு விஷயங்கள் – கால விவரணைகள் சார்ந்தவை சரியாக இருக்கின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும்.

2. எடுத்துக்காட்டுகளாகவும் பயமுறுத்துவதற்காகவும் –  தோற்ற வீரர்களின் தலைகளைக் கொய்து தோரணம் கட்டுவது, மண்டையோட்டு மலை அமைப்பது, கொத்தளத்தில் ஈட்டிமுனையில் தலைகளைச் சொருகி வைப்பது என்பதெல்லாம் மத்திய ஆசிய, இஸ்லாமியத்தின் ஆன்மிக வழிமுறைகள் – சீனாவிலும் இது இருந்திருக்கிறது என்றாலும் – இம்மாதிரி விஷயங்கள் எனக்குத் தெரிந்தவரை (நன்றாகத் தேடிவிட்டுத்தான் சொல்கிறேன்!) பாரத அரசர்களால் அரங்கேற்றப் படவில்லை. (தண்டனையாக சிரச்சேதம் செய்யப்படுவது வேறு விஷயம்)

ஆகவே இந்த தலைசொருகல் உண்மையாக இல்லாமல், அண்மையில் அறிமுகமாகியிருக்கும் இஸ்லாமிய பழக்கவழக்க வீரதீரங்களைக் கவிஞர் பெருமகனார் திரைப்படவசனகர்த்தா செய்து, ப்ருத்விராஜ் தலைமேல் ஏற்றியுமிருக்கலாம்.

(இடைச்செருகல் 27-10-2021: அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் மேற்கண்ட சீவல்+சொருகல் விஷயங்கள் பற்றித் தரவுகள் சார்ந்த ஒரு உண்மையைக் குறிப்பிட்டிருக்கிறார். அதனை ஒரு பின்னூட்டமாகக் கொடுத்திருக்கிறேன், அவருக்கு என் நன்றி.)

“பிருத்விராஜ் மிகக்கொடூரமான படையெடுப்பாளர் என அவரைப்புகழும் நூல்கள் சொல்கின்றன. எதிரிகளை வென்று அவர்களின் குடிகளைச் சூறையாடும் வழக்கம் இருந்தது.”

என்ன அயோக்கியத் தனம் இது!

இதற்கு ஒரு, ஒரேயொரு சான்றையாகவது அவர் காட்டமுடியுமா? (இத்தனைக்கும் அவை வரலாறுகள்கூட அல்ல!)

-0-0-0-0-

அஜ்மெரின் ஸூஃபித்தனங்கள் ஆன்மிகபம்மாத்துகள் பற்றி இந்தவரிசையில் நிறைய அட்ச்சிவுட்டு எழுதியிருக்கிறார்போல; ஆனால் நான் ஸூஃபி வண்டவாளங்களைத் தரவுகளுடன் அறிந்துள்ளபடியாலும், ஜெ பீலாவுடுவதில் விற்பன்னர் என்பதாலும், ஆகவே அவற்றின் கிட்டக்க போகவே படுபீதி பயங்கர பயமாக இருப்பதாலும்…. அவற்றை லூஸ்ல வுட்டுவிட்டேன்.

இனி, அநீ எதிர்வினை; அதற்கடுத்த பகுதியில் இன்னமும் ஜெயமோகத் திரித்தல்கள்…

3

கீழே மேற்கண்டதற்கான எதிர்வினை நீளகண்டனம். அநீ மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், அவருடைய நண்பர் ஒருவர் மூலம் ஸம்ஸ்க்ருத மூலத்தைச் சரிபார்த்தும் எழுதியிருக்கிறார்.

(எப்படி இவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறது எனத் தெரியவில்லை; எனக்கு நேரம் கிடைக்கும்போது நேரில் இவரிடம் அதன் மேலாண்மை குறித்து அறிவுரைகள் பெற்றுக் கொள்ளவேண்டும்!)

மிகவும் அழகாகவும், (அயோக்கியத்தனத்தைப் பார்த்து மிகவும் கோபம் வந்தாலும்) வசைபாடாமலும் விமர்சனம் செய்திருக்கிறார் அநீ.

வாழ்த்துகள்.

4

இப்போது பிற — சில (அனைத்தும் அல்ல!) ஜெயமோக அழிச்சாட்டிய விஷயங்களுக்கு வரலாம்.

ஐயோ! அந்த ‘ஸூஃபி’ ஆசாமி ‘சையத் ஹுசெய்ன் கிங் சர்வார்’ யின் பெயர் சவர் – குதிரைசவாரி செய்பவர். சர்வார் அல்ல!  சர்வார் சுந்தாராமும் அல்ல! அது ‘கிங்’ என்றும் அல்ல, ‘கஹ்ங்’ Khing/Khang – சாம்பல் குதிரை. தலையில் அடித்துக்கொள்ளவேண்டியதுதான்! மொழியைப் புரிந்துகொள்ளாமல் விக்கிபீடியா படித்துவிட்டு மேதாவித்தனம் காட்டினால் என்ன செய்வது?

அவர் கிலெதார் (கோட்டைத் தலைவர்) அல்லர். அவர் வெறும் ஒரு ஷிக்தார் மட்டுமே. அதாவது வரிவசூலிப்பது உள்ளிட்ட ரெவென்யு மேலாண்மை செய்துகொண்டிருந்தவர்தாம்.

அக்பர் நாமா இப்படித்தான் சொல்கிறது. இந்த மீரான் ஸாஹிப் – ஷிஹாபுத்தீன் கோரியின் வேலையாளின் மகன், அவ்வளவுதான்.

மேலும் காலப்போக்கில் இந்த ஆள், மானேதேனே சேர்க்கப்பட்டதையும் பதிவுசெய்கிறது.

இந்த ஸூஃபி ‘தலம்’ பிரபலப் படுத்தப் பட்டதே அக்பர் காலத்துக்குப் பின்னர்தாம். அந்த ஆசாமி ஒருவரா அல்லது பலரின் ஒருங்கிணைப்பா என்றெல்லாம் சந்தேகங்கள் என்றாலும் ஆன்மிகம் ஸூஃபி என்றால் அனைத்தும் லூஸ்லவுடப்பட்டு இறும்பூதடையப்படும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.

எல்லா பிற ஸூஃபி அயோக்கியர்களையும் போலவே – இந்த மீரான் ஸாஹிப் பற்றியும் பலப்பல கதையாடல்கள், காலப்போக்கில் உருவாக்கப் பட்டன.

ஒருகதையின் படி – இந்த மீரான், ஒரு மந்திரவாதியென்றும் ஒரு ‘ஜின்’ பூதத்தை அடிமைப்படுத்தி அதனைக் கொடுமை செய்ததாகவெல்லாம் வருகிறது;

ஆனால், எது முக்கியம்? ஸுஃபி என ஒரு பிணப்புதையல் செய்து அதுவழியாகக் காசு பார்ப்பதுதானே, சொல்லுங்கள்?

இதில் ஒரு தமாஷ் என்னவென்றால் – இந்த தர்காஹ் வாசலில் ஒரு பெரும் உருண்டைப் பாறை – என் நினைவில்  இது சுமார் 15-20 டன் அளவாவது இருக்கவேண்டும். இதன் கதை என்னவென்றால்: இந்த ஸூஃபிகூஃபியைப் பிடிக்காத ஹிந்துக்கள் அவர் மேல் இப்பாறையை விட்டெறிந்தார்களாம்; அந்த ஸூஃபி அசராமல் பாறையை நோக்கி. ” நீ அல்லாவால் அனுப்பப்பட்டிருந்தால் என்ஂமண்டையை உடை, இல்லாவிடில் குஃபர்களின் வெறும் மந்திரமாயமாக இருந்தால் என் காலடியில் வீழ்!”

தடால். அந்தப் பாறை அவர் காலடியில் அல்லது குதிரையடியில் சரணாகதி. கேல் கதம்.
இன்றுவரை முட்டாக்கூ ஹிந்துக்கள், அதாவது குஃபர்கள் – அங்கு சென்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்.

ஜெயமோகப் பீலா:

” மீரான் சாகிப் மனிதநேயராகவும் நீதிமானாகவும் அனைத்து மக்களையும் சமானமாகக் கருதுபவராகவும் இருந்தமையால் அனைவராலும் விரும்பப்பட்டார்.”

இதற்கு எந்த வர்லாற்றுப் புத்தகத்திலும், ஏன், சமகாலத்து மானேதேனேக்களிலும் கூட ஒரு தரவும் இல்லை. (பொதுவாகவே ஸூஃபிகள், வன்முறைவாதிகள் என்பதைச் சிலபலமுறை நிரூபித்திருக்கிறேன்.)

பிரச்சினை என்னவென்றால், நம் அப்பாவி ஹிந்துக்களானவர்கள் ‘ஆன்மிகம்’ என்றாலே கிறங்கிவிடுவார்கள். அதற்குமேலே இப்படி ஜெயமோகன் போன்றவர்கள் நெகிழ்வாலஜி பீலா விட்டால்… கேவலம்

ஜெயமோகனின் அருள்வாக்கு:

1202 விஷயம், பீலா. இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவேயில்லை! (எப்படியும், வெறும் வரிவசூலிப்பவராக மட்டுமே இந்த மீரான் ஸாஹிப் இருந்திருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்)

பேராசிரியர் மஹாமஹோ ஹர் பிலாஸ் ஸார்தா அவர்கள், தம்முடைய அஜ்மெர் புத்தகத்தில் இவ்விஷயத்தை ஆராய்ந்து – இந்த 1202 எழவு நடந்ததாக முகாந்திரமே இல்லை என நிலை நாட்டியிருக்கிறார்!

தாரா ஷூகொ பற்றி ஜெயமோகன் அவர்கள் படுஅசிங்கமாக அறியாமையுடன் உளறியதை, அநீ அவர்கள் கவனித்துவிட்டார். ஆகவே இதனை லூஸ்லவுடுகிறேன்.

” ஆனால் சௌகான் ஆட்சி நடந்தபோதுகூட கோட்டைவாசிகள் மீரான் சாகிப் அவர்களை தொடர்ந்து மதித்து வழிபட்டனர்.”

பொய். இது ஒரு ஹேஷ்யம். தரவில்லை. ஜூலை 1572ல் அக்பருக்கு இப்பகுதி சுற்றிக்காட்டப்பட்ட போது ஒரு பள்ளி அங்கு இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர – சௌஹான் காலத்தில் வழிபட்டதுபோலவெல்லாம் இல்லை. இதற்கு அப்பாற்பட்டும் ஒரு தரவும் இல்லை.

அது ‘வாரணாசி’ அல்ல. வாராணஸீ. (மண்டையில் தொடர்ந்து அடித்துக்கொள்ளவேண்டி இருப்பதால் வலிக்கிறது) – வெறுமனே காஷி/காசி என்று எழுதலாமே! ஆனால் வாரணாசி என்று எழுதினால் பாண்டித்தியம் வெளிப்படுமோ?

சரி – இவர் பெயரை ஜெயமகோன் என்று குறிப்பிட்டால் மஹோன்னதமாகத்தான் இருக்கும்.

ஆ! இந்த ஸம்யுக்தா சுயம்வரம், ராஜஸுய யாகம், கடத்திக் கல்யாணம் என்பதற்கெல்லாம் ஒரு சுக்கு முகாந்திரமும் இல்லை. 

ஜெயமோகனின் அருள்வாக்கு:

“சுயம்வரத்தில் புகுந்து சம்யுக்தாவை அவர் கடத்தியதாகக் கதை. இன்று திரைப்படங்கள் வழியாக புகழ்பெற்றிருக்கும் இக்கதை அபுல் ஃபாசலில் அயினி அக்பாரி உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

ஐயய்யய்யோ!!! அய்ன்-இ-அக்பரி நூலில் இந்தச் சுயம்வரம் குறிப்பிடப்பட்டுள்ளதா!  என்ன தெகிர்யம் வாய்ந்த உளறலப்பா இது!

கோடம்பாக்க ஜெயமோகன் – உர்தூவுட் 1960 மொகலே-ஆஸாம்  பிலிம் படத்தில் நடித்த ப்ருத்விராஜ்குமார் நடிகருடன் இந்தப் பழங்கால ப்ருத்விராஜ் சௌஹானைக் குழப்பிக் கொண்டுவிட்டாரா?

கடவுளே! பெரும்பேராசானின் ஊழிப்பெரும் கூத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுடாப்பா!

தாங்கமுடியவில்லையே!!! தெகிர்யமாகவும் பேடித்தனமாகவும் அட்ச்சிவுடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா!

-0-0-0-0-

ஜெயமோகனின் காட்டுரையில் உள்ள படு அயோக்கியத்தனமான பொய்களில் தலையாயவை கீழ்கண்ட இப்பகுதிகள்தாம்!

பிரச்சினை என்னவென்றால், அரையும் குறையுமாக – அதுவும் இன்னொரு இணையப் பதிவு ஒன்றிலிருந்து செய்திகளை உருவி மானேதேனே சேர்த்துக் கதம்பச்சோற்றுப் படையல் வைத்திருக்கிறார், இந்த ஜெயமோகன், :-(

சில ஆண்டுகள்??

எப்படிச் சொல்கிறார் இவர்? போருக்குப் பின்னர் ப்ருத்விராஜ் மகன் ஏறத்தாழ உடனடியாகப் பதவிக்கு வந்ததை (கோரிக்குக் கப்பம் கட்டிக்கொண்டுதான்) எப்படி ஜெயமோக டகீலுடன் பொருத்திப் பார்ப்பது?

பல களவிவரணைகளின் படியும், சில அக்கால மானேதேனேக்களின் படியும், ப்ருத்விராஜ் சௌஹான் ஏறத்தாழத் தோற்றவுடன் கொலை செய்யப்பட்டதாகத்தான் செய்திகள் இருக்கின்றன;  இவற்றையெல்லாம் ஆழ்ந்து (ஓரளவுக்கு) படித்திருக்கும் வரலாற்றாளர் ஸிந்தியா டால்பட் அவர்கள் கருதுவதும் இப்படியேதான்.

ப்ருத்விராஜ் ஒருமுறையாவது தன்னிடம் தோற்ற மொஹம்மத் கோரியை மன்னித்து அல்லது போய் ஒழி என்று அல்லது விட்டேற்றியாகத் தப்பிக்க விட்டிருக்கலாம்; ஆனால் அப்படியே செய்ய ஒரு இஸ்லாமிய அரசனுக்கு அவன் பயிற்சி இடம் கொடுக்குமா என்ன?

சும்மா அட்ச்சிவுடுகிறார் நம் பெரும்பேராசான்.

ஜெயச்சந்திரன் எப்பவாவது முஹம்மத் கோரிக்குத் துணையாக இருந்தற்கு (அதாவது ப்ருத்விராஜின் எதிரி நம் நண்பன் எனும் கோட்பாடு) ஒரு தரவாவது இருக்கிறதா? மாறாக – அவர் அப்படியில்லாமல் சதா கோரியுடன் பொருதியதுதான் நடந்திருக்கிறது….

சில நாணயங்கள் அம்மாதிரிக் கிடைத்திருப்பது உண்மை; ஆனால் அதன் காரணகாரியங்கள் வேறு.

இப்படிப் பொத்தாம்பொதுவாக ஜெயமோகன் உளறிக்கொட்டுவதில் பல பிரச்சினைகள். ஏனெனில் நாணயவியல் விவகாரங்களை, அவற்றில் ஒன்றிரண்டு நாணயங்களை மட்டும் வைத்து மானேதேனே கலக்கி வரலாறு செய்வதை மட்டுமே அவர் அறிந்திருக்கிறார், என்ன செய்ய!

“முகமது கோரியின் தளபதியான முகம்மது பின் சாம் பெயர் மறுபக்கமும் உள்ளது…”

ஐயய்யோ! இதே மொஹம்மத் கோரியின் பெயர்தாம் இந்த ‘ம்யூஸ் அல்-தீன் மொஹம்மத் பின் ஸாம்!’

ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல் அட்ச்சிவுடுகிறார், தளபதியாம், ஸ்டாலினாம்! வெளங்கிடுண்டே!

முன்னேபின்னே எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்திருந்தால் – கோரியை ‘அஸாவரி ஸ்ரீ ஸமந்த தேவா‘ எனப் பெயரிட்டுப் பொறித்திருப்பதைக் கண்டிருக்கலாம். இந்த ஸமந்த என்பதில் உள்ள ஸாம் தான் கோரி.

ஆண்டவரே! என்னை ஏன் இப்படி ஜெயமோகன் மூலமாகச் சோதிக்கிறீர்!

பாரத வரலாற்றுப் பேராசிரியரும் Numistmatics-நாணயவியலின் (குறிப்பாக பாரத வடக்கின், ராஜபுதன-அவதி பிரதேசங்களினுடையவை) போற்றத்தக்க விற்பன்னருமான ப்ரஃபுல்ல சந்த்ர ராய் என்ன சொல்கிறார்?

~~~ இந்த கோரி-ப்ருத்வி நாணயங்கள், கோரியால் வெளியிடப்பட்டவை; தில்லியின் நாணயசாலை வழியாக இவை வெளியிடப்பட்டிருக்கலாம். குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவாமல் இருக்க, நாணயப் புழக்கத்தைத் தொடர என்பவற்றுக்காக, ப்ருத்விராஜ் பெயரை திடுதிப்பென்று மாற்றாமல், அரசு நிர்வாக, மாற்றங்களை மக்களுக்கு, கொஞ்சம் மெதுவாகக் கொண்டு செல்வதற்காக முதலில் ஆஸாவரி ஸ்ரீ ஸமந்த தேவா என்றும் பின்னர் ஸ்ரீ மஹம்மத தேவா  என்றும் மாற்றினார்…

வரலாற்றியல் பேராசிரியர்கள் ஹெச்டி பாடக், என்எம் கான்ஷல் மேலும் சொல்வது என்ன?

~~கோரி, கன்னௌஜ் நாட்டை (அதன் அரசர் ஜெயச்சந்திரன் ‘ஜெய்சந்த்’) வென்றபின்  வெளியிட்ட நாணயங்களில் ஹிந்து அரசின் குறியீடான லக்ஷ்மி உருவம் தொடர்ந்து பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜெய்சந்த் போரில் இறந்தார். ஆனால் அவருடைய மக்கள் யாரும் அரசில் உட்காரவைக்கப் படவில்லை.

இதன் வழியாகவும் ஜெயமோக உளறலையும் பொய்மையையும் புரிந்துகொள்ளலாம்.

அப்போது ஹிந்துஸ்தானத்தில் சமகாலத்தில் இருந்த அரசுகள், அவற்றினிடையே இருந்த சச்சரவுகள், இஸ்லாமியக் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருந்த காலகட்டத்தில்  – போர்கள், நிர்வாக விஸ்தரிப்புகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன. போர்கள், அரசுகள் என்றாலே இரத்தக் களறிதான். இதுதான் இன்றுவரை, ஏன் என்றுமே உலக நியதி.

ஆனால் ப்ருத்விராஜ் ஒரு கொடிய அடக்குமுறையாளர் (அதே சமயம் பிறர் வாயில் விரல் வைத்து ஜெயமோக வாசகர்கள் போலச் சூப்பிக் கொண்டிருந்தார்கள் என்பதை போல ஒரு சித்திரம் விரித்து) என்றெல்லாம் உளறிக் கொட்டுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்.

ப்ருத்விராஜ் பற்றி எப்படியெல்லாம் வாய்கூசாமல் பொய்சொல்கிறார் இந்த அண்டப் புளுகரும் கருத்துலகச் சோம்பேறியும் ஆன ஜெயமோகன்?

“பிருத்விராஜ் சௌகான் அன்றைய ராஜபுதனத்து அரசர்களின் பார்வையில் ஓர் ஆக்ரமிப்பாளர். கொடிய அடக்குமுறையாளர். அவர் தன் ஆட்சிக்காலம் முழுக்க போரிட்டது பெரும்பாலும் பிற ராஜபுத்திர அரசர்களிடம்தான். அவர்களை அவர் வென்று அவமதித்தார். அவர்களின் நாட்டை சூறையாடினார்.

இதற்கு ஒரு தரவாவது கொடுக்கமுடியுமா?

ஸிந்தியா டால்பட், அவர் புத்தகத்தில் அதே ப்ருத்விராஜ ரஸோ புத்தகம் இன்னபிறவற்றிலிருந்து (ஜெயமோகன், புத்தகத்தில் இல்லவேயில்லாத விஷயத்தைச் சொல்லி அவற்றில்தாம் அது இருக்கிறது என்று தொடர்ந்து அட்ச்சிவுடும்போது) மேற்கோள் காட்டுகிறார்….

இப்படி எதிரியைக் கருணையுடன் நடத்திய (இதற்கு எதிரித் தரப்பிலிருந்தும் தரவுகள் இருக்கின்றன) ப்ருத்விராஜை, அதே எதிரியால் பின்னர் குருடாக்கப் பட்டு பின்னர் தலையும் சீவப்பட்ட அரசனைக் கேவலப்படுத்துவது எந்த அளவில் நேர்மை, சொல்லுங்கள்?

அசிங்கம்.ஜெயமோகனுக்கு அறம் பற்றி முழ நீளம் பேச என்ன தகுதி இருக்கிறது… இப்படிப் படுகேவலமாக செயல்படும்போது…

“ஜெயச்சந்திரன் எந்த ஆட்சியாளரும் செய்வதையே செய்தார், தன் நாட்டை காப்பாற்றிக்கொள்ள எதிரியின் எதிரியிடம் சேர்ந்துகொண்டார்.

…ஜெயச்சந்திரன் (அல்லது ‘ஜெய்சந்த்’) இறந்தபின் நானூறு வருடங்கள் கழித்து எழுதப்பட்ட மானேதேனே புத்தகத்தில் இருந்து ஒற்றியெடுத்து வாந்தியெடுப்பதெல்லாம் வரலாறாகி அதனைத் தமிழ் அலக்கியவாதிகள் உண்டு மேன்மேலும் வாந்தியெடுத்தி ஞானவான்களாகி மினுக்குவது வருத்தம் தருவது.

ஜெயச்சந்திரன் ‘ஜெய்சந்த்’ கோரியுடன் சேர்ந்து (நேரடியாகவோ மறைமுகமாகவோ) ப்ருத்விராஜுக்கு எதிராக கூட்டணி வைத்ததாக ஒரு, ஒரேயொரு காத்திரமான தரவாவது இருக்கிறதா?

பலப்பல வருடங்களாக நான் தேடிக்கொண்டிருக்கிறேன்; எனக்கு முன்னே ஒன்றிரண்டு நூற்றாண்டுகளாகப் பெரும் வரலாற்றாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு ருசுவாவது இருக்கிறதா?

மாறாக, பாரசீக, அரபு வரலாற்றாளர்களும் – அவர்களுக்கு எதிரியாக இருந்தாலு போற்றக்கூடிய வீரராகத்தான் இருந்திருக்கிறார் ஜெயச்சந்திரன், வாராணஸீயின் அரசர்.

பேராசிரியர் ரோமா நியோகி அவர்கள் பக்கம் பக்கமாக இவ்விஷயங்களைக் குறித்து எழுதியிருக்கிறார்.

ஆனால் ஜெயமோகனுக்கு இதெல்லாம் தெரியாது, அவசியமும் இல்லை. ஏனெனில் அவருடைய அலைமோதும் வாசகர் தரம் அப்படி. அவர்களுக்கு ஜெயமோகன் போதும்.

அறிவிலிகளாலும் நேர்மையற்றவர்கலாலும் – முக்கியமாக தடிமன் தோலுடைத்தவர்களாலும் ஆக்கப்பட்ட அச்சமூகம் அவ்வளவுதான்.

ஆகவே தொடர்ந்து இப்படியே வாய்க்குவந்தபடிதான் அட்ச்சிவுட்டுப் படுகேவலமாக வரலாறுகளை உதாசீனம் செய்வார், எம் பெரும்பேராசான்.

எங்கேடா, என்னோட அடுத்த ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பு?

5

ஜெயமோகன் எழுதித்தள்ளுவதன் ஒரு சிறுஅங்கமாக அருளிச்செய்திருக்கும் ஒரு பயணச் சிந்தனை மதச்சார்பின்மைக் காட்டுரைத் தொடரின் ஒரே ஒரு அத்தியாயத்தில் இவ்வளவு பொய்மைகள், இவை வெறும் சொதப்பல்களல்ல – இத்தனைக்கும், இதே அத்தியாயத்திலும் கூடப் பிற பல, போகிறபோக்கில் அட்ச்சிவுட்ட அழிச்சாட்டியங்களை லூஸ்ல வுட்டுவிட்டேன். மிடீல.

இதுவே இப்படியென்றால், இவருடைய பிற விஷயங்களில், கட்டுரைகளில்… ? இவரையெல்லாம் தொடர்ந்து படித்துப் புளகாங்கிதம் அடைந்து மசுர்க்கூச்செறிந்து கொள்வதற்கு, நாம் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்.

இன்னுமாடா நாம்ப அவர் எளுதறத அப்டியே நம்புறோம்?”

ஆம்.

கண்டிப்பாக.

மாற்றுக் கருத்தேயில்லாமல்.

நிரந்தரமாக.

நன்றி.

“தமிழன் என்றொரு ஈனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

:-(

-0-0-0-0-0-

Lectures on The Prithviraja Vijaya. Har Bilas Sarda. Source: Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Apr., 1913), pp. 259-281

The Shrine and Cult of Mu’In Al-Din Chishti of Ajmer. PM Currie. (2006) – https://www.amazon.in/Shrine-Cult-Al-Din-Chishti-Ajmer/dp/0195683293

Historical Coin of Prithviraj Chauhan. Mitresh Singh (2018) – https://www.academia.edu/43122371/Historical_Coin_of_Prithviraj_Chauhan

The Coinage of Northern India The Early Rajaputa Dynasties from the 11th to the 13th Centuries A.D. Prafulla Chandra Roy (1980) – https://www.amazon.in/Coinage-Northern-Indian-P-C-Roy/dp/8170171229

Joint coinages of Prithvi and Ghori – notesonindianhistory.com/2020/09/joint-coins-of-prithviraj-chauhan.html

Ain-i Akbari by Abu L-fazl Allami – translated by Blochmann, H.(1927)

Prithviraja Vijaya Mahakavyam in Sanskrit (1950)

The Antiquity, Authenticity and Genuineness of the Epic called The Prithi Kaj Kasa, and commonly ascribed to Chand Barddi—By Kavi Kaj Shyamal Da’s, M. K. A. S., Poet Laureate and Member of the State Council of Mewar. Journal of the Asiatic Society of Bengal (1832)

Har Bilas Sarda (1935). Speeches And Writings of Har Bilas Sarda. Ajmer: Vedic Yantralaya

Cynthia Talbot (2015). The Last Hindu Emperor: Prithviraj Cauhan and the Indian Past, 1200–2000. Cambridge University Press https://www.amazon.in/Last-Hindu-Emperor-Cynthia-Talbot/dp/1108711715/

R. B. Singh (1964). History of the Chāhamānas

Roma Niyogi (1959) – The History of the Gāhadavāla Dynasty. https://www.google.co.in/books/edition/The_History_of_the_G%C4%81hadav%C4%81la_Dynasty/ZdwJAQAAIAAJ?

The Akbarnama, Abul-Fazl- Vol-2. Annette Beveridge (1907)

++

30 Responses to “கோடம்பாக்கம் ஜெயமோகனின் தொடர்பொய்மைகள், ஸூஃபி உளறல், ப்ருத்விராஜ் சௌஹான் + ஜெயச்சந்திரன் மீதான அவதூறுகள், அரவிந்தனின் நீளகண்டனம் – தரவுகள், குறிப்புகள்”


  1. துவம்சம் சாரே

  2. Muthukumar Says:

    //…மனிதநேயராகவும் நீதிமானாகவும் அனைத்து மக்களையும் சமானமாகக் கருதுபவராகவும் இருந்தமையால் அனைவராலும் விரும்பப்பட்டார்..//
    இப்படிச் சொல்லியே நம்மை FUCKKI விட்டார்கள் ஐயா.. FUCKKI விட்டார்கள் ஐயோ…
    //1. இந்த விவேகி, புகழ்பெற்ற அறிஞர் விஷயங்களுக்கெல்லாம் ஒரு தரவாவது நம் பேராசானால் கொடுக்கமுடியுமா?
    2. …..இதற்கு அப்பாற்பட்டும் ஒரு தரவும் இல்லை.
    3. ….இதற்கு ஒரு தரவாவது கொடுக்கமுடியுமா?
    4. …ஒரு, ஒரேயொரு காத்திரமான தரவாவது இருக்கிறதா?
    5…இதற்கெல்லாம் ஒரு ருசுவாவது இருக்கிறதா?//
    இன்னுமா? இதையெல்லாம் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ஐயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!…..


    • ஐயன்மீர்!

      எதிர்பார்க்கவெல்லாம் இல்லை. ஒருமாதிரி rhetorical device போன்ற questions என வைத்துக்கொள்ளலாம்.

      ஆனால், நப்பாசையும் இருக்கிறது. மீட்சி முக்கியம், தொடர் வீழ்ச்சி அவருக்கே கூட நல்லதல்ல. அவரோ அவருடைய அன்பர்கூட்டமோ, மாற்றுத் தரவுகளை அளித்தால் மகிழ்வேன், என்னைத் திருத்திக் கொள்வேன்.

      இருந்தாலும், நான் ற்றொம்ப நம்பிக்கை வாதியோ?

  3. Aathma Says:

    அவர் ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லையே.. சும்மா அவர் கேள்விபட்ட விடயங்களை பகிர்கிறார்..


    • புரிந்துகொண்டேன். நீங்கள் நக்கலாக எழுதியிருக்கிறீர்கள். இருந்தாலும். :-)

      சரி. அப்படியே இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.

      மாறாக.

      1) விக்கிபீடியா வகை குப்பைகளைப் படிக்கிறார் (விக்குபீடியா முழுவதும் மோசமல்ல – ஆனால் அது, எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்வதற்கு முதற்படிக்குக் கீழ்ப்படி என்ற அளவில் கம்பீரமாக ஜொலிக்கிறது)
      2) படுபீதி அளிக்கும் அளவில் திரிதிரி என்று திரிக்கிறார் திரிபுரம் எறியும் கழிசடை நான்கடவுள்
      3)  இல்லாத விஷயங்களை பயங்கரமாகக் கற்பனை செய்துகொள்கிறார்
      4) அவற்றை வரலாறாகவே போகிறபோக்கில் சொல்கிறார் – பழிக்கிறார் புகழ்கிறார் கீழேபோட்டுத்தேய்க்கிறார் நெகிழ்கிறார்
      5) பின்னர் ‘வரலாற்றில் இதெல்லாம் சகஜமப்பா’ என்கிற ரீதியில் அறமரத்தின் உச்சாணிக்கிளையில் தொங்கிக்கொண்டு அப்படியொரு வியாக்கியானம், ஞானப்பொழிவு

      நீங்கள் முழுமையாக அவருடைய இந்தக் கட்டுரையைப் படித்தீர்களா எனத் தெரியவில்லை, ஐயன்மீர்!

      அவர் சொந்தக் கட்டுக்கதைகளை வரலாறுகளாக மாற்றும் ரஸவாதம் செய்பவர். சமகால இலக்கியவாதிகளிலிருந்து இதனைத் தொடர்ந்து – பல சமயங்களில் அவதூறே செய்பவர் – நான் நேரிலேயே இவ்விஷயங்க்களைப் பார்த்திருப்பதால் சொல்கிறேன்; பிற பல பிரச்சினைகளுள்ள, சங்கடம் கொடுக்கும் அசிங்கங்களையும் அறிவேன – ஆனால் வெளியே பரவலாகச் சொல்வதாக இல்லை. எனக்கு character assassination செய்வதில் நம்பிக்கையில்லை; ஒரளவு வரை, நாம் யாவரும் தவறுகள் செய்கிறோம், அவற்றில் சில படுமோசமாக இருந்தாலும் நம்மை மீட்டுக்கொள்ள முயற்சிசெய்கிறோம். ‘குற்ற உணர்ச்சி’ முக்கியம். அதில் வெந்து தணிவது முக்கியம்.

      அவருக்கும் அதே வாய்ப்பைக் கொடுக்கவேண்டும்.

      மீட்சி உண்டா?

      (அதாவது, நமக்கு)

      • Aathma Says:

        அவர் எழுதியது பயணக்கட்டுரை…படிப்பவருக்கு சுவாரஸ்யம் இருக்கவேண்டும்…

        மேலும் முக்கியமாக அவரின் “ஆடியன்ஸ்” யார் என்று தெரிந்து அதற்கு ஏற்றாப்போல் அவரின் அனுமானங்களை சரித்திரங்களாக பகிர்கிறார்..

        கடைசியில் நான் மீண்டும் சொல்வது கொளம்பு ருசியாக இருக்கா என்றே இங்கு பார்க்கபடவேண்டும் அய்யா …


      • பிர்ஞ்சிது. 😩🤣🙏🏿

    • Muthukumar Says:

      ஐயா, ஐயோ ,ஐயகோ ,பிரச்சனையே அதுதானே ஐயா !!!

  4. Kannan Says:

    ஆசான் டூர் கெளம்புன உடனே நெனச்சேன் ஹிஸ்டரிய மாத்தி எழுதப்போறர்னு.


    • யோவ்! இனிமே அப்டீ அவ்ரு திக்விஜயம் கெளம்ப்றமாரீ துப்பு கெட்ச்சிதுன்னு வெச்சிக்க – உட்னே என்க்கு வாட்ஸப் தட்டிவுட்ரு. அது கெட்சவொட்ன, நான் ஓடி ஓள்ஞ்சிக்கிநு ரெண்டுமாசத்துக்கு அப்பால வெளீல வர்ரேன்…

      மிடீலப்பா, மிடீல…

      • Kannan Says:

        டீல், ஆனா ஒரு கண்டிஷன். 

        அவரு சிஷ்யக்குட்டி எழுத்த இங்க மறுபடியும் போடக்கூடாது. ஒரு வரி படிக்கறதுக்குள்ள மண்டை வலி வந்து விடுகிறது.

        :(


      • யோவ்! எல்லாஞ்செரி – ஆனாக்க இத்தான வோணாண்றது… நான் எள்தற்த பட்ச்சா தலெவலீ வர்லியா? எனக்கே வர்ருதே!

      • Kannan Says:

        ஐயா, நீர் புலவர்.

        சினிமா வஜனம் எழுதிக்கொண்டு மீதி நேரத்தில் அலக்கியம் பண்ணி ஊரை ஏமாற்றாமல் அதற்க்கான உழைப்பை செலுத்தி உள்ளீர்.

        நூறு வருடம் கழித்து(ஹி ஹி..எனக்கு கிறுக்குதான் புடிச்சிருக்கு) இந்தப்பதிவை படிப்பவர்களுக்கு அந்தக்கால அரிஸ்டாட்டில் எப்படி அடிச்சு விட்டுருக்கார்னு புரியும்.

        :)

  5. vijay Says:

    ஆசானிடம் இது history-ஆ என்று கேட்டனர். புன்னகையுடன், இல்லை hysteria என்று பதிலளித்தார்.


  6. என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அநீ அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெளிவு+நினைவுபடுத்தினார் என்பதை நன்றியுடன் தெரிவிக்கவேண்டும் – அதாவது தமிழகத்துச் சோழர்களும் இலங்கைப் படைத் தளபதிகளின் தலைகளை கொய்து ஈட்டிமுனையில் சொருகினார்கள் என்பதன் பின்புலம். உண்மை.

    உடனடியாக, சாண்டில்யன் கன்னிமாடம் முன்னுரையில் வந்திருந்த தரவுகளைப் பற்றிய குறிப்புகளையும் படம்பிடித்து அனுப்பினார். அவருடைய உதவிக்கும் அறிவுரைக்கும் இனிமைக்கும் நன்றி!  அவருடைய ஞாபக சக்தி அலாதியானது. அதுவும் அதற்குமேற்பட்டு தரவுகளுடன் விஷயங்கள் தேவைப்படும்போது சரியாக அவற்றை அடுக்கி விரிப்பது என்பது சாமானியமான விஷயமில்லை. அதற்கும் மேற்பட்டு மூன்றாம் மனிதருக்கு இவ்விஷயங்களை மகிழ்ச்சியுடன் கொடுப்பது என்பது சாதாரண விஷயமேயில்லை.

    அவருக்கு என் நன்றி.

    நீலகண்ட ஸாஸ்த்ரியின் ‘சோழர்கள்’ புத்தகத்தைப் படித்திருக்கிறேன் + கன்னிமாடத்தையும்தான். ஆனால் இவ்விஷயத்தை நான் கருத்தில் கொண்டிருக்கவில்லை. மறதி + கவனக் குறைவு. (இச்சம்பவம் தொடர்பாக The Cholas புத்தகத்தின் பகுதிகளைப் புரட்டிப் பார்த்தேன்)

    ஜெயமோகனாதிகள் கேட்கக்கூடும் ஒரு நியாயமான கேள்வி + அவர்கள் வைக்கக்கூடும் ஒரு கருத்து: “தமிழ்ச் சோழர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள், நீ என்னவோ ப்ருத்விராஜனுக்குச் சப்பைக்கட்ட மத்தியஆசியா இஸ்லாம் சீனா என்று பினாத்துகிறாயே. ஆகவே நீ  விமர்சனம் வைக்கும் எந்த விஷயமும் செல்லுபடியாகாது. ஹைய்யா. ஆசான் சொல்வதே சரி. அவர் சொல்வதே வேதவாக்குமுரசறைவு வெண்முரசுக்கொட்டு.”

    என் குறிப்புகள்:

    தலைகொய்தல்களும் அதன் பின்புலங்களும் அவற்றின் நோக்கங்களும் மிகமுக்கியம். தலை கொய்யல்கள் அங்கும் இங்கும் நடக்காமல் இல்லை. அதன் அலங்காரங்களும் நடந்திருக்கின்றன.

    நான் போரே நடக்கவில்லை. பாரதத்தில் வன்முறையே இருந்திருக்கவில்லை – என்றெல்லாம் சொல்லவில்லை. மானுடச் சமூகம் என்றால் போர்கள் நடக்கும். இனிமேலும் அப்படித்தான். சிலபல காரணங்களால் போர்கள் முக்கியம். அவை அத்தியாவசியம். எடுத்துக்காட்டாக, இஸ்லாமிய ஜிஹாத் எழவை எதிர்த்து உலகளாவிய அளவில் போர் நடக்கவேண்டும். நக்ஸலைட்களும் ஜிஹாதிகளும் புல்பூண்டு இல்லாமல் அழித்தொழிக்கப் படவேண்டும், பொசுக்கப் படவேண்டும்.

    நான் சொல்லவந்தது, குழுவாத, மதவாதக் காரணங்களுக்காக, மத-நம்பிக்கைரீதியாக மக்களை இழிவுபடுத்தச் செய்யப் படும் ‘கூண்டோடு கும்பல் கும்பலாகத் தலை கொய்தல்.’  பொத்தாம் பொதுவாக தலைபோகிறவிஷயம் பற்றியல்ல.

    சோழர்கள் அட்டூழியம் செய்யாமலில்லை – இதில் அவர்களும் சில பிற பாரத அரசர்கள் போலத்தான்.  போர், படையெடுப்பு  தொடர்பாக ஸ்ரீலங்காவில் நடந்த விஷயஙகள் (பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து ~~நடுபதினொன்றாம் நூற்றாண்டு வரை) ஒரு எடுத்துக்காட்டு. நம் ‘சங்ககால’  விஷயங்களில் இந்த மழபுலவஞ்சி உழபுலவஞ்சி எல்லாம் இருந்தன. பின்னர் ‘பெண்டிர் பண்டாரம்’ விஷயங்களும். (ஆனால் பொதுவாக, தேவையேயற்ற மதரீதி மொழிரீதி மக்கள்திரள் நீதி அட்டூழியம் இருந்திருக்கவில்லை – இது இஸ்லாமின் கொடை – அவர்கள் ஆட்சியில்தான் கும்பல்கும்பலாக தலை சீவப்பட்டனர். நாதெர்ஷா உபயத்தில் ஒரே நாளில் தில்லியின் முப்பதாயிரம் குடிமக்கள் தலைசீவப்பட்டதும் நடந்தது; இம்மாதிரிப் பல படுகொலைகள் நடந்தன…)

    சோழர்கள் தமிழகத்துக்கு வந்து மஹாஅட்டூழியம் செய்த இலங்கைப் படையினரின் தலைவர்கள் இருவரை – ஒரு எடுத்துக்காட்டாக தலையைச் சீவி++ செய்தனர். அனைத்துப் படையினரையும் நிராயுதபாணியாக்கிக் கொலை செய்யவில்லை. இது ஏறத்தாழ நாட்ஸி அடால்ஃப் ஐக்மன் தூக்கில் தொங்கவைக்கப்பட்டதுபோலத்தான்.

    ப்ரிதிராஜ் ரஸொ மானேதேனேயிலும்  (இதில் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் காத்திரமானவை அல்ல) சில படைத் தலைவர்கள் தலைகொய்யப்பட்டு++ செய்யப்பட்டனர் என்று வருகிறது. அப்படியே அது உண்மையாக இருந்தாலும் – அது எடுத்துக்காட்டாகச் செய்யப்பட்டிருக்கிறது. ரத்தவெறி-மதவெறி என இருந்தால் அக்பர் உட்பட பலபத்தாயிரக்கணக்கில் செய்த கத்ல்-இ-ஆம் (Qatl-e-aam – அதாவது முஸ்லீம்களல்லாத அனைவரையும் கொல்வது) நடந்திருக்கவேண்டும்.

    twitter.com/othisaivu/status/1260252119803674624

    மேலும் ரஸோவின் படியேயும் சோழர்கள் விஷயத்திலும் – மனைவிகளும் பெண்பிள்ளைகளும் கற்பழிக்கப் பட்டு அடிமைகளாக்கப் படவில்லை. ஸ்ரீலங்காவின் படைத் தளபதிகளுக்கு அப்பாற்பட்டு வேறு எவருக்கும் ‘தண்டனை’ கொடுக்கப் படவில்லை.

    ஆகவே இப்படிப்பட்ட  கொடும் எதிரிகளின் தலைமை சார்ந்த தலை கொய்யல்கள் என்பது வேறு, கும்பல்கும்பலாகச் செய்யப்பட்ட மத்திய ஆசிய சீன இஸ்லாமியத் தலைகொய்யல்களும் + ஈட்டிமுனைச் சொருகல்களும் வேறு – என்பது என் கருத்து.


  7. பெயர் சொல்லவிரும்பா அன்பர் ஒருவர் – இதே ப்ருத்விராஜ்ரஸோ அல்லது ராஸ கதை (அவர் குறிப்பிட்டது ஸம்யுக்தா-ப்ருத்விராஜ் வீரதீரக் காதல் கதை) பிறபுத்தகங்களிலும் இருக்கிறதே என்றார்.  திருப்பித் திருப்பி அதே கீறல் விழுந்த ப்ளேட்.

    உண்மை. ஐஸிஎஸ்இ புத்தகங்களிலேயே கூட இந்த ஸம்யுக்தா கதையைப் பார்த்த நினைவு இருக்கிறது. அதனால் அது உண்மையாகிவிடாது.

    அதேபோல இந்த ரஸோவின் சில பகுதிகளை அப்படியே காப்பியடித்துச் சிலபல பாரசீகப் புத்தகங்களில் வந்திருக்கின்றன – இவை மொகலாயர்களின் சமயம் நடந்ததுதான் – ஏன், ரஸோவே அந்த காலகட்டத்தில் – அக்பர் காலசமயம் என நினைக்கிறேன் – எழுதப் பட்டதுதான்.

    இந்தப் பின்னர் வந்த புரட்டுகளுக்கு எல்லாம் மூலம் ரஸோதான்.

    இதெல்லாம் பெரிய தரவேயில்லை – நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? சரி, இருக்கிறது – அதனால்?

    உங்கள் ஆசானுக்கு முட்டுக்கொடுக்க இன்னமும் பிரயத்தனம் செய்யவும். நன்றி.

    போங்கடே.

    • Muthukumar Says:

      1. முதலில் சும்மா பகிர்வார்கள்
      2. பின் “நான் மெய்யாகவே சொல்லுகிறேன் ” என்பர்
      3. அடுத்து “அக” அநியாயமாய் அடிக்குறிப்புப் பட்டியல் செய்வார்
      4.பாவாடைகள் மற்றும் லேலிகள் ஆடும் பாடும்
      5. ” ஆம் அவ்வாறே ஆகுக ” என்பார் ஆசான்

    • RC Says:

      அன்புள்ள ஐயா,
      மிக்க நன்றி இந்த பதிவுக்கு.
      தங்களின் கடைசி பின்னோட்டமோடு சேர்த்து படித்தால் நல்ல புரிதலைத் தரக்கூடிய பதிவு.
      பொதுவாக பயணக்கட்டுரைகளை விரும்பி படிக்கும் மனநிலை உண்டு எனக்கு.தொடர்ந்து படிப்பவர்களுக்கு அதில் எதை எடுப்பது இல்லை விடுப்பது என்ற மன வடிகட்டி வேலை செய்யும் என்றே நினைக்கிறேன்.
      இதில் திரு.ஜெயமோகனின் எழுத்தும் விதிவிலக்கல்ல. மேலும் முக்கியமாக இது அவரின் நம்பிக்கை சார்ந்த யாத்திரை (தனிமனிதனாக). எனக்கென்ன புகார் இருக்கமுடியும்..
      தமிழின் முக்கிய எழுத்தாளாராக FACTS சரிபார்த்திருக்கலாம் என்ற வருத்தமும் எனக்கில்லை ஏனெனில் நான் அவரிடம் அதை (வரலாற்றெழுத்தை) எதிர்பார்ப்பதில்லை.என் தேர்வு (அதில் வாசிப்பு குறைபாடு இருக்கலாம் தான்).

      நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் இருப்பினும் சொல்லி விடுகிறேன், ஒரு இந்துவான எனக்கு இந்துத்துவர் என்று சொல்லி களமாடும் வேறு எவரின் எழுத்தை விடவும் திரு.ஜெயமோகனின் கட்டுரைகள் கொடுத்தது மிக அதிகம்.அது கோவில், வழிபாட்டு முறைகள்,சிற்பம்,சைவ வைணவ சமண பூசல்கள், தமிழ் சமஸ்கிருதம் வழிபாட்டு சிக்கல்கள் போன்ற பலதை சொல்லலாம். இவற்றில் பல அடிப்படை தவறுகள் இருக்கலாம் தான், ஆனால் ஒட்டுமொத்தமாக அவை கொடுத்த புரிதல்,மன விரிவுக்காக என்றுமே ஜெமோ மேல் மதிப்பிருக்கும். அவரின் தனிப்பட்ட குண வீழ்ச்சிகள், நிலைப்பாடுகள் பற்றி எனக்கென்ன கவலை,அது அவர் பாடெல்லாவா.

      1) ப்ருத்விராஜ் பற்றிய எதிர்மறை பிம்பம் உருவாக்க ஜெமோவிற்கு பிழை நோக்கமும் (நுண்ணிய உள்நோக்கம்/ஆதாயமும்) உண்டு என்று சொல்ல சான்று எங்கே என்று ஒரு வாசகன் கேட்க உரிமை உண்டல்லவா? ஆனால் இவ்வகை எழுத்தை தொடர்ந்து ஜெமோ எழுதும்போது, ஜெமோவின் மற்ற குணக்கேடுகளை(அநீ பார்வையில்) அறிந்ததால் வரும் யூகங்களால் மட்டுமே ஜெமோவின் நோக்கம் பிழையென்கிறேன் என்னும் பட்சத்தில் FACTS மட்டுமே சொல்லி அமர்வதே முறை,தாக்குதல் அல்ல.

      2) ப்ருத்விராஜ் பற்றிய பல கதையாடல்கள் நீங்களே குறிப்பிட்டது போல பலகாலமாக புழங்குபவை தான்.பாட புத்தகங்களில் கூட அரைகுறை தான். அது ஜெயமோகன் எழுதியதால் நான் உக்கிரமாவேன் என்பது என்ன தர்க்கமென்றே புரியவில்லை.

      நீங்கள் விதந்தோதும் திரு.அரவிந்தனின் எழுத்து பொதுவாகவே மிக கடின வார்த்தை பிரயோகங்கள் கொண்டது. இந்த சின்ன முகநூல் பதிவிலேயே எத்தனை கடின வார்த்தை விரயங்கள்,உண்மையில் சலிப்பு,வருத்தம். திரு.சு.வெ யையும் போகிற போக்கில் ஒரு தட்டு. மிடில.
      ஒரு வாசகனாக, இதெல்லாம்தேவையா? நேர விரயமின்றி வேறில்லை என்று தோன்றுவது தவிர்க்க இயலாது தானே.வெற்று அகங்கார விளையாட்டுகள் அவ்வளவே.

      என்னைப்பொறுத்தவரை FACT CHECK தமிழ் கட்டுரைகளின் தரம் கடின வார்த்தை பிரயோகங்களால் வீழ்ச்சி அடைகின்றது என்பது. (ஆங்கில கட்டுரைகள் படிப்பவரின் மன அமைப்பு வேறு என்பதால்,அதை சேர்க்கவில்லை) .

      3)தலைப்புக்கு தொடர்பற்றதுதானெனினும் (மன்னிக்க..), இந்துத்துவர் என்று களமாடும் பலர் சபரிமலை பிரச்சனை,அர்ச்சகர் உரிமைகள்,சம்பிரதாயங்கள்,ஜாதி குறித்த தலைப்புகளில் சொல்லும் கருத்துகள்/எடுத்த நிலைப்பாடுகள் இந்து மதத்துக்கு நல்லது செய்யுமா? என்ற ஐயப்பாடு மிக அதிகமாக உண்டு.(உபயம்- திரு.அனீஸ் நாயர்)

      உண்மையில் நீங்கள் திரு.அ.நீ யின் எழுத்தை புகழ்வது எனக்கு ஆச்சரியம் தான்.
      THINKTANK இல் இருப்பது + களச்செயல்பாடுகள் வேறு (அதற்கான மதிப்பு என்றும் திரு.அ.நீ மேல் உண்டு) ஆனால் எழுத்து வேறு என்பதே என் புரிதல்.
      கொள்கை சார்ந்த தெளிவும் தீவிரமும் இல்லாத + சிறிது வாசிக்கும் பழக்கமும் உடைய எந்த இந்துவுக்கும் இப்படித்தான் இருக்க வாய்ப்புண்டு என்றே கணிக்கிறேன்.ரொம்ப நீண்டு விட்டது மன்னிக்க.. நன்றி.


      • ஐயன்மீர், கருத்துகளுக்கு நன்றி. உங்களை ஓரளவு அறிந்துள்ளவன் என்கிற வகையில் புரிந்து கொள்கிறேன். எனக்கு ஹிந்து X ஹிந்துத்துவா விவரணைகள் பிடிபடுவதில்லை.
        ஹேஷ்யங்களாகவும் காற்றுவாக்கில் கேட்ட (அல்லது அப்படிப்பட்ட பிரமையில்) ஊகங்களை எழுதுவது ஒரு பிரச்சினையுமில்லை – ஆனால் ஆணித்தரமான வரலாற்று உண்மைகளாக அவற்றை எழுதும்போது, மேலும் கற்பனை செய்துகொண்டு எழுதும்போது பயபீதி வந்துவிடுகிறது.  நல்லவேளை – பீஷ்மரின் குஞ்சாமணி அவருடைய பின்பக்கத்தில் துதிக்கைபோல் ஆடிக்கொண்டிருந்தது என மஹாபாரதத்தில் வியாசர் எழுதியிருக்கிறார் என அவர் தைரியமாக எழுதவில்லை என்ற வகையில்… எனக்கு அவர் குறித்துப் பெருமையே!

        அதனால் பொதுவாகவே அவர் எழுதுவது அனைத்தும் புனைவு என்ற முடிவுக்கு வந்துவிட்டாலும் சில சமயங்களில்…ஹ்ம்ம்… (சிறிது நாட்கள் முன்னர் உக்ரைன் பற்றி எழுதியிருந்தார், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது)
        எது எப்படியோ.

        எனக்கு ‘we agree to disagree’ எனும் போங்காட்டத்தில் நம்பிக்கையில்லை – ஆனால், அவரவருக்கு அவரவர் வழி.

        எல்லாரும் – நீங்களும் நானும் உட்பட ஒருமாதிரி குணாம்சங்களின் பேக்கேஜ்.

        +நம்மை நாமே (மன்னிக்கவும், என்னை நானே) லூஸ்லவுடக் கற்றுக் கொள்ளவேண்டும். பார்க்கலாம்,

        நன்றி.


  8. சுட்டிகள் இரண்டையும் படித்தேன்.
    இந்த இடுகையை இன்னும் படிக்கவில்லை. படித்தால் ‘தகவல்கள் கறார்த்தன்மை’ பற்றி நீங்கள் எழுதுவதில் ஆழ்ந்துவிடுவேன். அதனால், மறப்பதற்குமுன், ஒரு மனப்பதிவை இட்டுவிடவேண்டும் என்பதே இந்த கமெண்ட் (பீடிகை முற்றிற்று)

    பயணத்தொடரை வாசிக்கவில்லை (ரொம்ப நாளாக அவரை வாசிக்கவில்லை). நீங்கள் அளித்த சுட்டியை மட்டும் வாசித்தேன். நடையில் ஒரு ப்ரம்மப்ரயத்தனம் தெரிகிறதே :-/

    சொற்சித்திரங்கள் தீட்டுகிறேன் பேர்வழியே என்று trying so hard to be clever, வாக்கிய அமைப்புகளின் சில இடங்களில் கிட்டத்தட்ட எஸ்ராத்தனம் :-|

    பொதுவாக அவர் பயணக்கட்டுரைகளில் இயல்பான விவரணைகள், முனைந்து புகுத்தப்ப்டாத நகைச்சுவை என்று தான் வாசித்த நினைவு. இதில் ஏதோ வலிந்து அடவுகட்டிய தோரணை தெரிகிறது. துல்லியமாக இன்னின்ன இடத்தில்…என்று சுட்டத் தெரியவில்லை. It just struck me as odd.

  9. சாருதாசன் Says:

    இதென்ன பெரிய விஷயம்? எம்பட தலைவன் சாரு எழுதும் நான்தான் அவுரங்கசீப் படிங்க.இதெல்லாம் தூசு என்று விளங்கும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s