இதுதாண்டா மாவோயிஸம்! :-(
March 2, 2014
… இன்றோடு நியமத் அன்ஸாரி எனும் சமூகப் ப்ரக்ஞை மிக்க இளைஞர், நக்ஸலைட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன; இந்த இளைஞரை எப்படி நாம் மறக்க முடியும்?
(அல்லது) நக்ஸல்பாரி கூலிப்படை அரைகுறைகள், ஏன் நியமத் அன்ஸாரியைக் கொலை செய்தனர்? (சுமார் 1600 வார்த்தைகளுள்ள நீளப்பதிவு இது. பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் வினவிக்கொள்ளவும்)
ஏனெனில், அவர்களுக்கு — வினவு-தினவு கூச்சல்களுக்கு மேற்பட்டு, முடிந்தால் எதிரிகளாகத் தென்படுவர்களை அழித்தொழிப்பது தான் நீண்டகால பொழுதுபோக்குத் திட்டம் – கட்சித் திட்டமும் கூட.
ஏனெனில் — மாவோயிஸ்டுகள், வாய்கூசாமல் புளுகுவதில் வல்லவர்கள். நாக்கில் நரம்பில்லாமல் அபாண்டங்களை அடுக்கி தங்களுக்கேற்றாற்போல உண்மையை வளைத்து உடைப்பதில் சுயகாரியப் புலிகள்.
ஏனெனில் – அவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாமலிருந்தாலும், அரைகுறைத்தனத்தால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் — அவர்களுக்கு, எதனையும் சும்மனாச்சிக்கும் கேள்வி கேட்டு அதற்குப் பின்புலத்தில் ஒரு ஏகாதிபத்திய, பெருந்தரகுமுதலாளிய, பெருந்தேசிய கற்பனைச் சதித்திட்டத்தைக் காணுவது ஒரு வீரவிளையாட்டு.
ஏனெனில் – பெரும்பாலான நக்ஸல்பாரிகள் ஊழல்களில் திளைப்பவர்கள் – அதை யாராவது தட்டிக் கேட்டால், அவர்கள் தங்கள் சார்பினராகவே இருந்தாலும் கூட அவர்களை துரோகிகளாகக் கருதுபவர்கள். கருதியபின் – அவர்களிடம் செல்ஃபோன் இருக்கிறது ஆகவே அவர்கள் ‘போலீஸிடம் போட்டுக் கொடுப்பவர்கள்’ என, வெகுச் சுலபமாக நிறுவி விடுபவர்கள்.
(அல்லது) விதண்டாவாதம் செய்வது எப்படி?
(அல்லது) எதையும் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று ஆகாத்தியம் செய்வது, பிலாக்கணம் வைப்பது ரொம்ப லேசு!
முதலில் இந்த அயர்ச்சியளிக்கும் பின்னூட்டத்தைப் படிக்கிறீர்களா? (இதே தொனியில் இரண்டு மின்னஞ்சல்களும் வந்திருக்கின்றன)
அய்யாமார் அவர்களே,
வெறுமனே செய்தித்தாள்களையும் (=குப்பைகள்) படித்து, அரைகுறை தொலைக்காட்சிகள் பார்த்து, கற்பனாசக்தியால் பல விஷயங்களை ஆய்ந்தறிந்து பல கருத்துகளையும், காழ்ப்புகளையும் வளர்த்தெடுக்கலாம். ஆனால்…
1. வருந்தத் தக்க வகையில், உங்கள் பின்னூட்டத்தில் – சில உண்மைகளும் (அதாவது மோதி குஜராத்தின் முதலமைச்சர் போன்றவை), உண்மைகள் அல்லாதவையும் (= மிச்சம் இருப்பவை) இருக்கின்றன. நான் பின்னவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். Read the rest of this entry »
ஸஃபர் ஸரேஷ்வாலா – மோதியின் பல முஸ்லீம் ஆதரவாளர்களில் ஒருவர்: சில குறிப்புகள், சுட்டிகள்
October 2, 2013
ஸஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) அவர்கள் ஒரு இந்தியர். குஜராத்தியர். கடவுள் நம்பிக்கையுடைய ஒரு முஸ்லீமும் கூட.
தொழில்முனைவில் இருக்கும் இவர் – உலகளாவிய பிரசித்தி பெற்ற பிஎம்டபிள்யு கார் விற்கும் ஒரு பெரிய ‘டீலர்ஷிப்’ + கார் பராமரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர். அந்த நிறுவனம்: குஜராத்தில் அஹ்மெதாபாத், ஸூரத் நகரங்களிலிருந்து இயங்கி வரும் பர்ஸொலி மோட்டர்ஸ். இந்த நிறுவனம் நல்ல லாபகரமாகவும் தொடர்ந்த காலாண்டு-மேல்-காலாண்டு வளர்ச்சியுடனும் இயங்குகிறது. செல்வச்செழிப்புடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் எண்ணற்ற குஜராத்தி முஸ்லீம்களைப் போலவே – இவரும் பாஜக/மோதி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடனும், திருப்தியுடனும் இருக்கிறார். Read the rest of this entry »
நரேந்த்ர மோதியும், மாலினி பார்த்தசாரதி எனும் பன்மொழிப் புலவியும்
September 30, 2013
அம்மணி மாலினி அவர்கள், அண்ணன் என் ராம் (’த அன்டிஹிந்து’ பத்திரிக்கைக் குழுமம் சார்ந்தவர்) அவர்களுக்கு உறவுமுறை.
இவர் – மனிதவுரிமை, ஸெக்யூலரிஸ்ம் என்றெல்லாம் கலந்தடித்து நேர்மைக்கீற்று என ஒன்று கூட தெரியாதபடி அவ்வப்போது‘ ஆங்கிலத்தில்’ பரிமாறுபவர். ஆனால் எல்லா மாலினிகளும் இப்படியில்லை. எனக்கு மிகவும் பிடித்த படுபுத்திசாலி பெண்களில் ஒருவர் – மாலினி என்ற பெயருடையவர் – பெங்களூரில் இருக்கிறார். இவரை நான் செல்லமாக மால் எனத்தான் கூப்பிடுவேன்.
அதேபோல, இந்த மாலினி பார்த்தசாரதி அம்மணியை செல்லமாக, இனிமேலிருந்து மால்வேர் எனத்தான் கூப்பிடப் போகிறேன். அவ்வளவு குசும்பும் குயுக்தியும் நிரம்பியவராக இருக்கிறார், இந்த மால்வேர்! Read the rest of this entry »
[மங்களம்] மோதி, ஒழிக ஒழிகவே…
September 18, 2013
I against my brother
I and my brother against our cousin
I, my brother and our cousin against the neighbors
All of us against the foreigner.— A Bedouin proverb, quoted by Bruce Chatwin, in The Songlines
ஒரு சுய பரிசோதனை…
(அல்லது) [+5] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [103 -108; + பின்னுரை]
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
1- 21 காரணங்கள் | 22-50 காரணங்கள் | 51-70 காரணங்கள் | 71-90 காரணங்கள் | 91-102 காரணங்கள் | 103-108 காரணங்கள் |
… … ஏனெனில்:
103. சரி, மோதி ராஜ்ஜியத்தில் 2002-க்குப் பிறகு ஒரு மதக் கலவரமும் இல்லை. இருந்தாலும், அந்த கோத்ராக் கலவரம் நிகழ்ந்தது நிகழ்ந்தது தானே! அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போதுமே! ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு மட்டுமே பதமல்லவா??
யோசியுங்கள் – அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் நடந்திருக்கும். அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் உடனே அடக்கப் பட்டிருக்கும்? அவரே பங்கு பெறாமலா இந்தக் கலவரம் ஏற்பட்டிருக்கும்?? Read the rest of this entry »
[+4] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [91-102]
September 16, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
91. குஜராத்தில் பசியே இல்லையா என்ன? பிச்சைக்காரர்களே இல்லையா என்ன? அங்கிருந்த காங்கிரஸ் காரர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள்? மாயமாகி மறைந்து விட்டார்களா என்ன? அவர்களுடைய பசியும் புறங்கையை நக்குதலும் இல்லவேயில்லையா என்ன? முதலில், இந்த மோதி, தன் மாநிலப் பசிப் பிரச்சினைகளை முதலில் தீர்க்கட்டும். பின்னர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றலாம். Read the rest of this entry »
ஆம். நான் மோதி/பாஜக விடம் ‘பொட்டி’ வாங்கியிருக்கிறேன்
September 14, 2013
சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சில பின்னூட்டங்களும். எதையும் பதிவு செய்யப் போவதில்லை – ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை குப்பைகள் – பொருட்படுத்தத் தக்கவையல்ல. இருந்தாலும், வசைகளை, ஏகவசனங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, அவற்றில், எடுத்துக் கொள்ளக் கூடிய சாராம்சமும், என் பதில்களும் கீழே:
அ: நீ பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாய், மோதி / சங் பரிவாரத்திடம். நீ விலை போய் விட்டாய்.
பதில் 1: ஆமாம். அவர்கள் ஒரு வார்த்தைககு பத்து ரூபாய் (மட்டும் தான், என்ன அநியாயம்!) கொடுக்கிறார்கள். கலைஞர் எனக்கு இதற்கு மேல் 10% கொடுத்தால், அல்லது சொக்கத் தங்கம் 15% மேலதிகமாகக் கொடுத்தால், அவர்களுக்கும் ஜால்ரா போடத் தயார். Read the rest of this entry »
[+3] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? [71-90]
September 13, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
71, மோதி ஒரு ஆரிய வெறியர். ஏனெனில் அவர் தமிழர் அல்லர். ஊக்க போனஸாக, அவர் திராவிடர் அல்லர் வேறு.
ஆகவே, அவர் பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர். ஏனெனில்:
- செத்த திராவிடத் தலைவர்களின் கல்லறைகளுக்கு பகுத்தறிவு சார் மூடத் தனத்துடன் மாலை போடுவதையோ,
- கஷ்டப் பட்டு படிக்கட்டுகள் பல ஏறி, திருப்பதீ வேங்கடேசா கோயிந்தா கோஓஓஓயிந்தா எனச் சொல்லாமல் சொல்லி, புறாக்களும் காக்கைகளும் சந்தோஷமாகப் பகுத்தறிவில்லாமல் எச்சமிடும் கருஞ் சிலைகளைக் கண்டடைந்து, மூச்சிரைக்க, பகுத்தறிவுப் பயபக்தியுடன், அந்தக் கற்களின் மேல் வெகு பவ்வியமாக மலர் தூவுவதையோ,
- அல்லது சட்டமிடப் பட்ட வெறும் காகிதப் படங்கள் முன் சுயமரியாதை – பகுத்தறிவுப் பகலவம் இன்னபிற நிமித்தம், கைகூப்பி, கண்ணீர் மல்கி நிற்பதையோ, பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் குண்டியைப் படம் பக்கம் திருப்பி, டீவீகாரர்களுக்கு சரியான கோணத்தில் தன் பகுத்தறிவுப் பேராசான்களின் பரிசுத்த ஆவியினால் தாம் ஆசிர்வதிக்கப்படுவதைக் காண்பிப்பதையோ…
— செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவெல்லாம் — பயிற்சி கியிற்சி என்று ஒரு இழவும் இல்லாதவர் இந்த ஆரியக் கொழுப்பு மோதி. Read the rest of this entry »
[+2] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [51 – 70]
September 12, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
51. மோதி, இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி. பாருங்கள், குஜராத் பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து விட்டாரா என்ன? பின்னர், அதைக்கூட முடிக்காமல் இந்திய அளவில் என்ன செய்ய வர வேண்டும்? அப்படி வெளியே வந்து இந்தியாவைக் கொஞ்சம் ஆண்டு விட்டு, இந்தியப் பிரச்சினகள் அனைத்தையும் தீர்க்காமல், ஐநா சபை கை நாசபையென்று என்று போகாவிட்டாலும் – சொல்ல முடியாது, விசா கொடுத்தால், அமெரிக்கா சென்று அங்கிருந்து திரும்பாமல் அங்கேயே தங்கி, ஆகாத்தியம் செய்து ஒரு சில ஆண்டுகளில், அமெரிக்காவின் ஜனாதிபதியாகக் கூட ஆகி விடுவார் இந்த மனிதர்… ஆக, நம் இந்தியாவுக்கு ஒன்றும் செய்ய முடியாத இவர் – இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி – புரிந்ததா ??
சும்மா குஜராத்தில் குறு நில மன்னராக இருக்காமல், என்ன திடீரென்று தினவு – இந்தியாவைக் கட்டியாள வேண்டுமென்று? குண்டு குஜராத் சட்டியில் ஒட்டகம் ஓட்டிக் கொண்டிருக்காமல், ஏதோ பித்துப் பிடித்து — அவர் சும்மனாச்சிக்கும் உத்தராகண்ட்வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது போல பாவ்லா காட்டி, நிவாரணம் கொடுக்கிறேன் பேர்வழியென்று அற்பக் கோடிகள் கொடுத்து – அந்த மாநிலத்தை அவமானம் எல்லாம் வேறு செய்திருக்கிறார். இவர், உத்தராகண்ட் மாநிலத்துக்கு எதிரி நம்பர் 1.
52, மோதி, மலைவாழ் ஜனங்களுக்கு எதிரி – பாருங்கள் – அவர் மாநிலத்தில் பொதுவாக மலைகளே இல்லை – இப்போது குஜராத் வரைபடத்தைப் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். இப்படி மலைகளையே ஒழித்து, அதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்த இந்த மனிதரை நான் எப்படி உயர்த்திப் பிடிக்கமுடியும்? Read the rest of this entry »
[+1] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [22 – 50]
September 10, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
22. என்னால் என் குடும்பத்தை – என் சுற்றுச்சூழலை – இவற்றையே விடுங்கள் – என்னையே கூட, ஒரு அடிப்படை அளவிற்காவது மேலாண்மை செய்து கொள்ள முடியாமல் இருக்கலாம் – ஆனால் அதற்காக, குஜராத் பற்றி, மோதியின் அரசு பற்றி, நாட்டை நிர்வகிப்பது பற்றியெல்லாம் திட்டவட்டமான அறிவுரைகளும், கருத்துரைகளெல்லாம் வழங்கமுடியாமல், இருக்கமுடியாது. ஆகவே மோதி சரியாக ஆட்சி செய்யவில்லை.
23. நான் ஒரு சராசரி ஆள். வெகு சராசரித்தனமான சராசரி ஆள். எனக்கு உன்னதம் கின்னதம் போன்றவை பின்னாலெல்லாம் போக முடியாது. அதே சமயம், யாராவது அதனருகே போகிறார்கள் என்றால், அவர்கள் மேல் கல்லெறிதல் பிடிக்கும். கண்டடைந்தவர்கள் மீது பொறாமைகொண்டு என் ஆற்றாமையை அவர்கள் மேல் கவிழ்த்துவது பிடிக்கும். ஆகவே.
24. என் உலகப் பார்வையில் — அதிமனிதர்கள், செயலூக்கம் கொண்டவர்கள், நெடுனோக்கில் திட்டமிட்டுப் பணிகள் ஆற்றுபவர்கள், எடுத்த பணியைச் செவ்வனே செய்பவர்கள் என்று யாராவது சொன்னால், சொல்லப் படப் பட்டால் – அது பொய்தான், பொய் மட்டுமேதான் என்று எனக்கு நன்றாகத் தெரியும். என் நோக்கில் அனைவரும் என்னைப் போலவே அரைகுறைகள். என்னைச் சுற்றித்தானே உலகம் சுழல்கிறது? Read the rest of this entry »
108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ?
September 9, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
1. எனக்குத் தெரியும் – மோதியை எதிர்ப்பது என்பது ஒரு ஸெக்ஸியான விஷயம்; எதிர்ப்பதால் மட்டுமே நான் ஒரு சமதர்ம சமுதாயத்தை நோக்கிச் செல்ல விழையும் அறிவுஜீவியாகி விடமுடியும் – அப்படியில்லா விட்டாலும்கூட, மிகமிக முக்கியமாக, குறைந்த பட்சம், அப்படிப்பட்ட ஒரு அறிவுஜீவியாகக் கருதப் படவாவது, வெகு வெகு சுலபமாக முடியும்.
2. மோதியை ஆதரித்தால் – எனக்கு உடனடித் தீட்டு – நான் வெறியனாகக் கருதப் படுவேன். அய்யய்யோ!

நரேந்த்ர தாமோதர்தாஸ் மோதி (’ஸமாஜிக் சம்ரஸ்தா’ எனும் ஹிந்தி புத்தகத்திலிருந்து / ப்ரபாத் புக்ஸ் / டெல்லி / 2012)
3. மோதியை ஆதரிக்க வேண்டுமானால் எனக்குத் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப — என் நிலைப்பாட்டின் காரணங்களை, உண்மைகளை, ஒரு கீறல் விழுந்த ரெகார்ட் போல, விளக்கிக் கொண்டேயிருக்கவேண்டும்; ஒரு பெரிய்ய்ய்ய சுற்றுச் சுற்றி வந்தவுடன், திரும்பவும் முதல் கேள்வியைக் கேட்பார்கள். எனக்கு இது அலுப்பு தரும் விஷயம்.
4. மோதியை எதிர்க்கும் நிலையை எடுப்பது மிகவும் சுலபம். காற்று வாக்கில் நான் கேட்ட, ’ஹம் பாஞ்ச் – ஹமாரே பச்சீஸ்’ இருக்கவே இருக்கிறது. அல்லது ’முஸ்லீம்கள் – காரோட்டம் – நாய்க்குட்டி’ விவகாரம் இருக்கவே இருக்கிறது. அல்லது கோத்ரா கீத்ரா என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த உச்சாடனங்கள் வெகு சுளுவானவை.
5. எனக்கு, என்னுடைய நேரடி அனுபவங்களைவிட – மற்றவர்களிடம் கடன் வாங்கிய அனுபவங்களை, கோட்பாடுகளை, கருத்துக்களை வைத்துத் தான் காலம் தள்ள முடியும். யோசிக்கும் திறமையெல்லாம் இல்லை என்பதை எண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு, என்னை மேலெழுப்பிக் கொண்டுசெல்ல என்றெல்லாம், என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது.
6. பொதுவாக, எனக்குக் கடன் வாங்குவதை விட, கமுக்கமாகக் காப்பியடிப்பது, அச்சுஅசலாக நகலெடுப்பது – அவை கோட்பாடுகளாகவிருந்தாலும் சரி, கருத்துகளானாலும் சரி – மிக மிகப் பிடிக்கும். ஆக, திக்விஜய்ஸிங் என்ன சொன்னாலும், அதைப் பொதுவாகப் பின்மொழிந்தால் போதுமானது, இவர் போன்றவர்கள் அவ்வளவாக யோசித்து, மூளையை உபயோகித்துத்தான் பேசுகிறார்கள் என்றில்லை. ஆக, இப்படி வெளிவரும் கருத்துக்களை, என் மூளையையும் தேவையில்லாமல் உபயோகிக்க விரும்பாத நான், செரிப்பது சுலபம் தானே?
7. எனக்கு மதச்சார்பின்மை முக்கியம். ஆனால் இது என்ன எழவென்றெல்லாம் ஆய்ந்து புரிந்து கொள்ளவெல்லாம் எனக்கு நேரமோ அறிவோ கிடையாது. என்னுடைய மதச்சார்பின்மை ஹீரோ: கலைஞர் கருணாநிதி; ஹீரோயின்: சொக்கத்தங்கம் சோனியா; இவர்கள் எது சொல்கிறார்களோ அதுவே சரி. அது மட்டும்தான் சரி. அவர்கள் நடைமுறையில் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும் அது முக்கியமேயில்லை. இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காணும் பரிதாபகரமான நிலையில் நான் இல்லை. ஆக, இவர்கள் சொல்வதுபோல மோதி ஒரு மதச்சார்புக்காரர்தான். ஆகவே.
8. மோதியே சொல்லியிருக்கிறார் அவர் ஒரு ஹிந்து என்று. அப்படியென்றால் அவர் முஸ்லீம் க்றிஸ்தவர்களுக்கு எதிரானவர் என்றுதானே பொருள்?
9. அவர், தான் ஒரு இந்தியன் என்றுகூட தேவையில்லாமல் சொல்லியிருக்கிறார். இப்படி வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளும் ஒருவரால் எப்படி சீனர்களிடமும், பாகிஸ்தானியர்களிடமும், பங்க்ளாதேஷிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அவர்கள் இவரைச் சந்தேகமாகப் பார்க்க மாட்டார்களா? தேசவெறி மிக்க இவரால் எப்படி நம் எல்லைகளில் அமைதியைப் பராமரிக்க முடியும்? ஆகவே.
10. நான் பெண்ணியவாதி, மனிதவுரிமைவாதிகளான, தொலைக்காட்சிப் பப்பரப்பாக்காரர்களான – தீஸ்தா அம்மணி சொன்னால், பர்கா அம்மணி சொன்னால், ஸோனியா ராணி உச்சாடனம் செய்தால் – மேலதிகமாக தொழில்முறை மனிதவுரிமை வாதிகள் (பியூஸிஎல் போன்றவர்கள்) சதா — மோதிக்கு அக்னியால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தால் – கூட நானும் ரெண்டு கல் வுடுவது, நாக்கைத் துருத்திக் கொண்டு போடாங் சொல்வது போன்றவை – எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
11. எனக்கு, கறுப்பு அல்லது வெள்ளை என்று மட்டுமே, அதிபாமரத்தனமாக உலகத்தைப் பார்க்க முடியும். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எனக்குச் சிக்கலில்லாத எளிமைப் படுத்தல்கள் தேவை. ராமன் நல்லவன். ராவணன் கெட்டவன். ராமன் ஆரியன், ஆகவே கெட்டவன். ராவணன் திராவிடன், ஆகவே நல்லவன். என்ன? அய்யய்யோ, ராவணன் பார்ப்பானா? அப்போது அவனும் வெறியன் தான்… இவைகளுக்கு, இந்த அளவுக்கு மேலே யோசித்தால் என் மூளை உருகி விடும். ஆகவே.
12. நான் மோதி, பிரதமராகக்கூடிய சாத்தியக் கூறுகளை நமது நாட்டின் நல்லூழ் என நினைத்தாலும் கூட, மோதியை ஆதரித்தால் – அவர் செய்யும் / சொல்லும் அனைத்தையும் ஆதரிக்கவேண்டிவரும். அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை, பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டி வரும். மேலும் காங்க்ரெஸ் கட்சியை எதிர்க்கவேண்டி வரும். என்னால் ஆதரிப்பென்றால் ஒரேயடியாக ஆதரிப்பு எதிர்த்தால் ஒரேயடியாக எதிர்ப்பு என்று மட்டுமே தான் செய்யமுடியும். எனக்கு எளிமை, சிக்கலில்லாத தன்மை போன்றவை மட்டுமே முக்கியம். ஆதரிக்கவேண்டியவைகளை ஆதரித்து, எதிர்க்கவேண்டியவைகளை எதிர்த்து என்றெல்லாம் என்னாலா யோசிக்க முடியும்??
13. எனக்குச் சமன நிலைமை பிடிபடுவதில்லை. முட்டியடி எதிர்வினைகளின் மூலமாக மட்டுமே என்னைச் சுற்றியிருக்கும் நிகழ்வுகளை அணுக முடியும்.
14. எனக்கு படிப்பறிவும் இல்லை, அதைப் பெறும் முனைப்பும் இல்லை, உளறிக் கொட்டல்களில், அதற்கு கைத்தட்டல் வாங்குவதில் இருக்கும் சுகமே அலாதிதான். நான் என்னதான் பிதற்றினாலும், உளறிக் கொட்டினாலும், அநியாயத்துக்கு அட்டைக் காப்பியடித்தாலும், அதற்கும் வேண்டிய அளவு ‘லைக்’கர்களும், ‘ரீட்வீட்டர்’களும், ‘ஃபால்லோயர்’களும், பின்னூட்டக்கார விசிலடிச்சான் குஞ்சப்பனார்களும் இருக்கிறார்களே! அடேய்! இதோ பிடிச்சிக்கோ ஒர் ஸாம்பிள்: மோதி ஒரு டம்மிபீஸ். ஆகவே.

15. என்னுடைய மூளையானது, தொலைக்காட்சிச் சேனல்களால் வடிவமைக்கப் பட்டது. மஞ்சள் பத்திரிக்கைகளால் நிறம் கொடுக்கப் பட்டது. அரைகுறை மதச்சார்பின்மை திலகங்களால் செப்பனிடப்பட்டது. கீபோர்ட் வீரர்களால் குடையப் பட்டது. தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகளால் கூர் செய்யப் பட்டது. நாற்காலி அறிவுஜீவிகளால் புடம் போடப்பட்டது. இந்த விசித்திர ஜந்துக்கள், எந்தப் பருவத்தில், எந்த ஸீஸனில் எவற்றுக்கெல்லாம் எதிரியோ நானும் அவற்றுக்கெல்லாம் எதிரி. இவைகள், கடந்த பல ஸீஸன்களாக, மோதியை எதிர்த்துத்தான் செய்திகள் வெளியிடுகின்றன. இவைகள் சொல்வதெல்லாம் தவறாகவா இருக்கும்? இவைகள் மோதியை ஆதரித்தால், நானும் ஆதரித்துவிட்டுப் போகிறேன்! ஆனால் இப்போதைக்கு எதிர்ப்புத்தான்.
16. இந்தியாவில் இருக்கும் மெக்காலேமுறை அரைகுறைப் படிப்பு, கல்வி முறை — என்னைக் குமாஸ்தாவாக்கி விட்டிருக்கிறது. எனக்கு ஆங்கில அறிவுமில்லை – ஆகவே தாழ்வுணர்ச்சி இருக்கிறது. தாய்மொழி அறிவும் இல்லை – ஆனால் இதனாலான பெருமிதம் இருக்கிறது! ஆக, உள் நாட்டுப் பண்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் மோதியை நான் எப்படி…
17. எனக்கு மார்க்ஸ் வழியாகத்தான், நோம் சோம்ஸ்கி வழியாகத்தான், ’ஸப்ஆல்டெர்ன் ஸ்டடீஸ்’ என்று பேசும் ’மார்க்ஸீய மெய்ஞான’ சமூகவியலாளர்கள் அளிக்கும் பார்வையை வைத்துக் கொண்டு மட்டும் தான் எதனையும் பார்க்க முடியும். இல்லாவிட்டால் சாயம்போன அறிவுஜீவிகள் எனக்கு முழு மார்க்ஸ் கொடுக்கமாட்டார்கள். எனக்கு இது தேவையா? ஆகவே.
18. நம் கலாச்சாரத்தைப் பற்றிய, பாரம்பரியத்தைப் பற்றிய அவமான உணர்ச்சி எனக்கு அதிகம். ஆனால், வரலாற்றிலிருந்து, சூழல்களிலிருந்து நுண்மான் நுழைபுலம் என்றெல்லாம் அறிந்துகொள்ள எனக்கு முடியாது. எதை எடுத்துக் கொள்ளவேண்டுமோ எடுத்து, தள்ளவேண்டியதைத் தள்ளி என்னைச் செழுமைப் படுத்திக் கொள்ள நேரமேயில்லை எனக்கு. நீங்களே பாருங்கள், நீயா- நானா போன்ற மகாமகோ முக்கியமான பல நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிச் சேனல்களில் வருகின்றன அல்லவா?? அவற்றையும் பார்க்கவேண்டும். சினிமா கிசுகிசுவும் பேசவேண்டும். … ஆக, எனக்கு இருக்கும் சொற்ப நேரத்தில், ஒரு அவமான, தாழ்வுணர்ச்சி தரும் விஷயத்தைப் பற்றிப் பெத்த பேச்சு பேசும் மோதியை நான் எப்படி ஆதரிப்பது… ஆனால், அவரும் நீயா- நானா நானாவித நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், ஒருவேளை அவரை ஆதரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்…
19. நம்மைப் பற்றிய, நம் கலாச்சாரப் பண்பாட்டுப் பின்புலங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது எதுவுமில்லை – அவை அனைத்தும் வடிகட்டிய குப்பை என்பதை எவ்வளவோ மெத்தப்படித்த வெள்ளக்காரர்களே சொல்லியிருக்கிறார்கள். அவர்களை வழிமொழிந்து நம் உள்ளூர் அறிவிஜீவிகள் பிபின் சந்திரா, ரொமிளா தாபர், ஸோயா ஹஸன், ராஜீவ் பார்கவா, சந்திரசேகர கம்பாரா, அனந்தமூர்த்தி, ஜயதி கோஷ், கிரீஷ் கர்னாட், ஸாகரிகா கோஷ், அசின் வனைக், என் ராம், அருந்ததி ராய் போன்றவர்களும் (+ எஸ் வி ராஜதுரை போன்ற லோக்கல் அறிவுஜீவிகளும், ‘விடு-தலை’ போன்ற தலையை அதனிலிருக்கும் மூளையை அம்போவென்று விட்டுவிட்ட இயக்கத்தினர்களும் ) சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில், மோதி போன்றவர்கள், கவைக்குதவாத இந்தியக் கலாச்சாரம், கிந்திய குலாச்சாரமென்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், எப்படித்தான் நான்…
20. இந்து – இந்தி – இந்தியா போன்ற, நகைக்கத் தக்க முட்டாள் தருக்கங்களும், இதனை நீட்டி – வடவன், ஆக்கிரமிப்பு போன்ற மொண்ணையான கருத்தாக்கங்களும்தான் இங்கே சாஸ்வதம். எனக்கு இதற்குமேலே சிந்திக்க வேண்டுமென்றால், இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையும் உருகியேவிடும். மோதி ஒரு ‘இந்து – இந்தி – இந்தியா’காரர். குறிப்பாக, மோதி ஒரு ‘இந்துத்துவா – இந்தித்துவா – இந்தியாத்துவா’ ஏஜென்ட். இவர் இந்தியர்களின் உலகப் பார்வையைச் சுருக்கி விடுவார். ஆகவே.
21. மோதி ஒரு உலகமயமாக்கலின் ஏஜென்ட். இவர் மேலை நாட்டு வர்த்தகர்களையும் தொழில்முறைகளையும் இங்கு கொண்டுவந்து, அவர்களுடைய மூலதனங்களைக் கொண்டு வருகிறேன் பேர்வழியென்று – நம் நாட்டை சூறையாடுபவர்களின், பன்னாட்டு நிறுவனப் பன்னாடைகளின் பக்கமிருக்கிறார். நம் பாரதியத்தை அழிக்கிறார். நம் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை ஒழிக்கிறார். ஆகவே.
அடுத்த பதிவில்… 22லிருந்து 50 காரணங்கள்
தொடர்புள்ள பதிவுகள்:
- மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013
-
ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா? 01/04/2013
- நரேந்த்ர மோதி!
மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-)
September 1, 2013
என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மது கிஷ்வர் அவர்களைப் பற்றி – சில மாதங்கள் முன்பு என் கருத்துக்களை எழுதியிருக்கிறேன்.
அவர், சென்ற பல மாதங்களாக ( நவம்பர் 2012-லிருந்து என நினைவு) பலமுறை குஜராத் சென்று – மக்களுடன் கலந்து பேசி, அங்கேயே தங்கி ஆராய்ந்து – குஜராத் பற்றி, மோதி ஆட்சி பற்றி, சிறுபான்மையினர் பற்றியெல்லாம் அவர் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். (அதற்கு முன்னும் கூட பலமுறை சென்றிருக்கிறார்; மேலும், மிக முக்கியமாக — அவர் சிரமங்களுக்கும், செலவுகளுக்கும் வேறு எவரையும் நம்பிக் கொண்டிருக்கவில்லை; அதாவது மோதி அவர்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ – மது, ஒரு சுக்குப் பலனும் பெறவில்லை – இது பொதுவாக, நம் ‘துட்டு கொடுத்தால் தூக்கி எழுதும்’ அல்லது சிரத்தையேயில்லாமல் வெறும் அட்டைக்காப்பி அடித்து எழுதி மினுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும்!) Read the rest of this entry »

