புதுதில்லி சென்று விவசாயி ‘ப்ரொட்டெஸ்ட்’ செய்வது எப்படி
March 21, 2017
அசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம்! வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே! (உண்மைதான்! நாங்கோ #தெராவிடனுங்கோடா!)
இவனும் ஜேஎன்யு காரன் தான் (ஆனால் மன்னித்துவிட்டேன்!) – பாபா ஆம்டே அவர்களுடன் பலகாலம் இருந்து பின்னர் மேதாபட்கர் அவர்களிடம் போய் பின் ஓடிப்போய் – கடைசியில் தில்லியில் உள்ள பல திங்க்டேங்க் வகையறாக்களில் ஒன்றில் அடைக்கலக் காதை. திருந்தி விட்டான். என்னைப் போலவே ஸ்ரீ தரம்பால் அவர்களால் உந்தப் பட்டவன் – முதலில் எதிர்மறையாக, இப்போது அதற்கு எதிர்ப்பதமாக!
அவன் சொல்வது + நானும் (என் சொற்ப ஊடக ஞானத்தில்) ஒப்புக்கொள்வது போன்றவற்றின் சாராம்சம் – நான் மேலதிகமாகச் சேர்த்தவற்றுக்குப் பழுப்பு நிறம்:
1. இவர்களில் பெரும்பாலோர் விவசாயிகளே அல்லர்; கூலிக்குக் கூத்தாடும் நபர்களே! (ஆமென்!)
3. வேளாவேளை சோறுபோட்டு இவர்களை நன்றாகவே கவனித்துக்கொள்கின்றனர் – இதில் மனிதாபிமானம் பளிச்சிடுகிறது. (ஆனால் தமிழனுடைய மானம் போச்சே!)
5. ஆகவே, இவர்களை வேறு யாரோ அரசியல் காரணங்களுக்காகக் கொணர்ந்திருக்கவேண்டும் – ஷரத்ஜோஷி (ஷேத்காரி ஸங்கதனா), பூபீந்தர்ஸிங் மண், நாராயணசாமி நாயுடு (நம்மூர்), நஞ்சுண்டஸ்வாமி (கர்நாடகா), சரண்சிங், மஹேந்திரஸிங் டிகெய்த் (பாரதீய கிஸான் ஸங்) உட்பட எவ்வளவோ விவசாயிகளின் போராட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம் – ஆனால் இம்மாதிரி கேவலங்களை நாங்கள் பார்த்ததேயில்லை… … ஆனால் ‘கனிமொஜி’ அழகாக இருக்கிறார் – இவரா இப்படி மோசமாக 2G ஊழல் செய்தார்? (என் சந்தேகம் – என் வழக்கம்போலவே திமுக வகையறா திராவிட கொள்ளைக்காரர்கள் தாம் இதன் பின்புலத்தில் இருக்கவேண்டும் – நேற்றோ அல்லது அதற்கு முன் தினமோ இந்த நடிகர்களை நேரடியாகப் பார்த்து அளவளாவினார் கனிமொழி எனச் சொன்னான் இவன்; யோசிக்கிறேன் – கனிமொழிக்கு தில்லியிலாவது தன் பிரதாபத்தைக் காட்ட முடியுமா, இசுடாலிருக்கு எதிராகத் தாக்குப் பிடிக்கமுடியுமா என்ற நிலையில், அவர் இந்த ‘சென்னை சங்கமம்’ போல ‘தில்லி தில்லுமுல்லுவம்‘ என இதனை அரங்கேற்றியிருப்பாரோ என்ன எழவோ!)
6. ஏழ்மையில் வாடும் விவசாயிகளாக இருப்பதால் இந்தப் போராளி நடிகர்களில் பெரும்பாலோருக்குப் பெரிய்ய்ய்ய்ய தொப்பை! (பாவம் இந்த ஆண்களெல்லாம் நிறைமாத கர்ப்பிணிகளாக நடுரோட்டில் அல்லாடுவது சோகம்)
7. தில்லியில் தற்போது – இந்த ப்ரொடெஸ்ட் வகையறா ஷோவுக்கு ஏற்ற சீஸன் தான் – இதையே மேமாதத்திலெல்லாம் அரங்கேற்ற முடியாது. இப்போது இதமான குளிர், வெப்பமும் அவ்வளவாக இல்லை. (தில்லியே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, உண்மைதான்!)
9. எலியை வாயில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் இந்த எலிசாயிகள். (அய்யா, அவைகள் எலியில்லையாம், திராவிடப் பெருச்சாளிகளாம்!)
-0-0-0-0-0-
குறிப்பு: எனக்குத் தெரியும் – பலப்பல விவசாயிகள் இப்படிப் புலம்பலிலும் பசப்பிலும் நாடகத்திலும் பொழுதுபோக்கிலும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான திராவிடத்திலும் ஈடுபடுவர்களல்லரென்று. முடிந்தவரை நீரை வீணாக்காமல், மண்ணினை ஒழிக்காமல் – பாரம்பரிய விவசாயம் ஆர்கனிக் இனார்கனிக் அய்யோமரபணு – எனவெல்லாம் அமோகமாக உளறிக்கொட்டாமல் – அரசிடமோ பிறரிடமோ உதவிக்கென பிச்சைக்காரத்தனமாகக் கையேந்தாமல் – கும்பலைக் கூட்டிக்கொண்டு ஊடகத்துக்காக நடனமாடாமல் – தன்னால் என்ன செய்யமுடியுமோ அதனை ஆக்கபூர்வமாகச் செய்து அமைதியாகக் காலத்தைக் கழிக்கிறார்கள் என்று. இவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியும் வணக்கமும்.
மிச்சமிருக்கும் எச்சங்களுக்கு…
(மேற்படி படத்துக்கான சுட்டி1, சுட்டி2)
பின்குறிப்பு: டேய் மண்டையோட்டுப் பிச்சைக்காரனுங்களா, ஊர் மேல போவாம வூட்டுக்குப் போயி மொதல்ல வொங்க பம்ப்செட்டமோட்டார அணைங்கடா!
March 21, 2017 at 11:34
நடுபக்க கட்டுரை நாயகனின் அந்தரங்க சமாச்சாரத்தில் கசிந்து பிரவாகம் எடுக்க இருந்த ஒரு கண்ணீர் காவியத்தில் இப்படி கல்லை போட்டு விட்டீர்களே?
March 21, 2017 at 11:50
அய்யா வெங்கடேஷ் 1) நீங்கள் யாரென்றும் தெரியாது 2) நீங்கள் பூடகமாகக் குறிப்பிடும் நாயகனும் யாரென்று புரியவில்லை. ஆக, உதவுங்கள் எனக் கதறுகிறேன்! ;-)
March 21, 2017 at 15:10
“சிறப்புப் பேட்டி: டெல்லியில் விவசாயிகளுக்கு அன்னமிட்ட தமிழ் கைகள்..!.”
மின்னம்பலம் இணைய ஊடகத்தில் இந்த தலைப்பில் வந்துள்ள செய்தியையும்,படத்தையும் ஒரு மாறுதலுக்காக படியுங்கள்/பாருங்கள்! :-(
https://minnambalam.com/k/1490080865
March 21, 2017 at 17:52
அய்யா சேஷகிரி,
நன்றி. படித்தேன். இதுவும் உண்மையின் ஒரு பக்கமாக இருக்கலாம்.
ஆனால், இந்தக் காமராஜ் என்பவரின் (இந்த மின்னம்பலம் தளத்தின் முதலாளி) பராக்கிரமத்தைப் பற்றி நெடு நாட்களாக அறிவேன். இவர், ஒரு படுமோசமான நபர். கடைந்தெடுத்த அயோக்கியர்.
அவரையும் மீறி இந்தச் செய்தி உண்மையானதாக இருந்தால் மகிழ்வேன். ஒருவேளை இவர் திருந்திக்கூட இருக்கலாம்.
March 22, 2017 at 09:08
அவர் “நக்கீர பரம்பரையில்” வந்தவர் அல்லவா! வேறு எப்படி இருப்பார்?
March 23, 2017 at 08:00
தலைநகரில் தமிழ்நாட்டின் மானம் பறந்தோடிவிட்டது. இந்த கோவண டிராமா செட்டப்பால் நம்மை தலை குனிய வைத்து விட்டனர்.