போராளிக் குண்டிகள் பரிணாம வீழ்ச்சியடைந்து ‘விவசாயி’ அம்மணக்குண்டிகளான கதை

April 15, 2017

இன்று காலை எனக்குத் தெரியவந்த அழகான விஷயம் – நம் ஊடகப்பேடிகளின் செல்லங்களான, தில்லியைக் கலக்கிக் கொண்டிருக்கும் ‘விவசாயி’ அற்ப நாடகக்காரர்கள் – முற்றும் திறந்த முனியாண்டிகளானகதை. கோபமாக இருக்கிறது – ஏண்டா இப்படி போராளிக்குண்டிகளைப் பற்றி எழுத ஆரம்பித்து இப்படி திகம்பரக் கூவான்களைப் பற்றியும் எழுதவேண்டிவந்து விட்டதேயென்று.

இதையும் எனக்குச் சொன்னவன் அதே தில்லி ஆசாமிதான். அவனுக்கு ஒரேயடியாகச் சிரிப்பு.   மறுபடியும்   ‘நீங்கள் மகாமகோ நடிகர்கள்தான் ஆனால் இப்படி போர்னோ படக்காரர்கள் போலவா, வாய்ப்புக் கிடைத்தவுடன் இந்தத் திராவிடர்கள் உடுக்கை அவிழ்த்து புடுக்கைக்* காண்பிப்பார்கள்‘ என்று ஹாஹ்ஹா ஹோஹ்ஹோவென ஒர்ரே சிரிப்பு மயம்! (அவன் உபயோகப்படுத்திய பதம் = *dravidian ‘show and tell’) :-(

இன்று சனிக்கிழமை; ஆக, ஆனந்தமாகத் தோட்டவேலை செய்ய நேரம் வாய்க்கும்போது அதனைச் செய்யவேண்டும் என்று மும்முரத்தில் இருந்தவனுக்கு இவனுடைய தொல்லைப்பேச்சினால் ஒரே வெறுப்பு. வெட்கம் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது. சில அம்மணக்குண்டி விவசாயிகளின் படங்களை டெலெக்ராம் மூலம் அனுப்பியிருந்தான். அந்த எழவுகளைப் பிரசுரிக்க எனக்கே ஒருமாதிரி இருப்பதால் அவற்றை விடப் படுமோச ஆபாசமான படத்தொகுப்பு ஒன்றைப் பிரசூரித்துத் திருப்தியடைகிறேன். நன்றி.

(சட்டசபையில் நடிகர்பொட்டு அவர்கள் (நடிகர்திலகம், மக்கள்திலகம் எல்லாம் முன்னமே தடுத்தாட்கொள்ளப்பட்டமையால், மேதகு இசுடாலிர் அவர்களுக்கு எவ்வளவு அமர்க்களமாக நடித்தாலுமேகூட – இந்தப் பெயர்தான் மிச்சம், பாவம்) முதல் சில ஸீன்களில் நடித்தபின் – சட்டசபையிலிருந்து காந்திசிலை வரை,  சகதிராவிடர்களுடன் அதிதிராவிடத்தனமாக நடத்திய மேற்கண்ட தண்டி குண்டியாத்திரையைத்தான் தான் சொல்கிறேன். தங்கள் சட்டையைத் தாமே கோட்டித்தனமாகக் கிழித்துக்கொண்ட ஊழல் குண்டிகள், அமரிக்கையுடனும் ஆரவாரத்துடனும் ஊடகப் பேடிகள் புடைசூழ வசதியாக நாற்காலிகளில் கஷ்டப்பட்டு தங்கள் குண்டிகளை அடக்கிக்கொண்டு – இன்னுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதைப் பாரீர்! அதுவும் இவர்கள் அண்ணாசிலைக்கருகிலோ சதுக்கப்பூதத்திலோ இதனை அரங்கேற்றியிருந்தால் பரவாயில்லை.  ஆனால் காந்திசிலை இருக்கும் இடத்தில் இந்த ஆபாசப் போராட்டத்தை அட்ச்சுவுட்டிருக்கிறார்கள்! தேவையா?  (குறிப்பு: ‘உண்மையில்லாத எதுவுமே ஆபாசம்‘ – இது ஒருகாலத்தில் லெனின் சொன்னதன் ஒருமாதிரி வடிவம் என நினைக்கிறேன்! )) (படங்கள் ஐபிஎன்டைம்ஸ் தளத்திலிருந்து)

… 1) இது ஒன்றே போதும் இவர்கள் திராவிடர்கள், ஏமாந்தால் குஞ்சாமணிகளைக் காட்டிக்கொண்டு மினுக்கிக்கொண்டு அலைபவர்கள் எனவும், 2) திராவிடக் குஞ்சாமணிதான் உலகத்தின் முழுமுதற் குஞ்சாமணி எனும் அகழ்வாராய்ச்சி உண்மையை எப்படித்தான் பறைசாற்றுவதாம் 3) இந்தியாவிலுள்ள அனைத்து மாநில விவசாயிகளுக்கும் இருக்கும் பிரச்சினைகளையும் எங்கள் விவசாயிகள் தீர்த்துக்கொண்டிருப்பதை ஆதரிக்காமல் இருப்பது + கிண்டல் செய்வது தேசத்துரோகம் 4) பாவம், தில்லியிலுமேகூட கோடை ஏறிக்கொண்டிருக்கிறதே  போராளிக்கூவான்களும் என்னதான் செய்வார்கள் எனப் பலவாறாக நான் அவனிடம் சால்ஜாப்புகளை சிரித்துக்கொண்டே சொன்னாலும்… :-(

எங்கள் சிந்தனை எழவுகளையும் ஆக்கபூர்வமாகப் பரிமாறிக்கொண்டோம்.

அவன் சிந்தனை:

அர்விந்த் கெஜ்ரீவாலர் என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குத்தெரியாத நாட்டில் முழியோமுழியென முழித்துக்கொண்டிருக்கையிலே, உங்கள் பிதாமகர்கள் இப்படியெல்லாம் எடுத்துக் காட்டி எடுத்துக்காட்டு கொடுத்தால்…

…விளைவுகள் படு பயங்கரமாக இருக்குமே! நினைத்துப்பார்க்கவே படுபீதியாக இருக்கிறதே!

என் எதிர்வினை/பதில்: அர்விந்த் கெஜ்ரீவாலுக்காவது அசிங்கமான தொப்பையில்லை – கொஞ்சம் அது எட்டிப்பார்த்து வெளிவந்துகொண்டிருந்தாலும், எங்கள் தமிழக விவசாயிகள் போலில்லை அவர்!

ஆக, அவர் பிறந்தமேனி உடலை அழகுணர்ச்சியுடன் பார்த்து ஆராதிக்கலாமே! ஆம் டிங்டாங் பார்ட்டி எனக் கட்சியின் பெயரையும் மாற்றலாம்; உடனடியாக எங்களூர் திராவிடக் குஞ்சாமணிகள் அனைவரும் அலைகடலென ஆர்பரித்து ஆடிபியில் சரணமடைந்து விடுவர்.  பின்னர் என்ன, அரவிந்தனார் கெஜ்ரிவாலரார் தான் எங்கள் தமிழகத்தின் அடுத்த முதலையமைச்சர்…  எங்கள் தலைவிதி அப்படித்தான் விரியும்.

என் சிந்தனை:

…கனிமொழி போய்ப் பார்த்ததினாலோ என்னவோ, அந்த எலிவாய் விவசாயிகளைப் பார்த்து ஆதரவு தெரிவிக்க — இசுடாலிர் அங்கு போனதாகவோ அல்லது போகப்போவதாகவோ சொன்னான் அந்த தில்லித் துரோகி.

ஹ்ம்ம், ஆகவே… திமுக திராவிடத்தனங்களை நன்றாகவே அறிந்துகொள்ள வாய்ப்பிருந்திருக்கும் அந்த ‘விவசாயி’கள் – ஏமாந்தால், இந்த இசுடாலிர் வகையறா திராவிடர்கள்  தங்கள் கோமணத்தையும் உருவிக்கொண்டு ஓடிவிடுவார்கள் என மிகச் சரியாகவே புரிந்துகொண்டு – தங்கள் கோமணங்களை பத்திரப்படுத்தியிருக்கலாம். எங்களால்  மிக நன்றாகவே புரிந்துகொள்ளக்கூடிய விஷயம் தானே இது? (கருணாநிதி பற்றி இம்மாதிரி கருத்தொன்றை நம் பாமக ராமதாஸ் அவர்கள் சொன்னார் என நினைவு!)

இதனை ஊடகப் பேடிகள், அதற்குத் தேவையான திராவிடப் பின்னணியில் புரிந்துகொள்ளாமல் – பொத்தாம் பொதுவாக, என் செல்ல ‘விவசாயி’கள் புத்தர் போல நிர்வாண நிலையை அடைந்துவிட்டதாக பரப்புரை செய்திருக்கின்றனரோ?

இப்படி என் தமிழகத்தின் மானம் கோமணம் எல்லாம் பறந்துவிட்டனவே! :-(

இதற்கு அவன் பதில்/எதிர்வினை: கவலைப் படாதே! உங்களூர் விவசாயிகளின் முன்சரிந்த மெகாதொந்திகளால் எப்படியும் திராவிட உதிரி ஆண்குறிகள்* மறைக்கப்பட்டிருக்கும்… ஆக நீ போய் இதற்கெல்லாம் பைத்தியக் காரத்தனமாக வெட்கப்படவேண்டிய அவசியமேயில்லை.  காமெராக்கள் எந்தக் கோணத்தில் இருந்து எடுத்தாலும் முன்னமே தொந்திகளால் நசுக்கப்பட்ட ஆண்குறிகளை எப்படி மைக்ராஸ்கோப் வைத்தா எடுத்திருக்கப் போகிறார்கள்? கவலையை விடு. அல்லது உங்களூர் நிர்வாண ஜோதியில் நீயும் ஐக்கியமாகிவிடு! (அவன் உபயோகப்படுத்திய பதம் = *‘lumpen dravidian pricks’) :-)

19 Responses to “போராளிக் குண்டிகள் பரிணாம வீழ்ச்சியடைந்து ‘விவசாயி’ அம்மணக்குண்டிகளான கதை”

  1. Aathma Says:

    What to do? They are compelled to resort to this kind of protests because of the abject poverty of Tamil Farmers. Great injustice to Tamils….


    • Dear Sir, are you serious? I would assume not.

      IMO, the ‘self respect’ of the Tamils is gone because of the ‘self respect’ parties. These ‘farmers’ are merely a symbol of this reality.

      Also sire, is there any other state (there are states and farmers that are worse off) that is indulging in gimmicks like this?

      I am really sad and ashamed about this. Hope you would commiserate with me. :-(

      __r.

  2. ravi Says:

    pellet guns may be the right method for sorting such problems..

  3. Dinesh Babu Says:

    http://m.tamil.thehindu.com/opinion/columns/அய்யாக்கண்ணு-ஆடி-கார்-வைத்திருந்தால்தான்-என்ன-பிரச்சினை/article9621464.ece

    ஐயா, இங்கு..கொடுத்துள்ள கட்டுரைக்கான..தங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள விருப்பம்..


    • மேதகு தொழில்முறை அறிவுரையாளர் சமஸ் அவர்களுக்கு ஒரு சுயதொழில் முனைவு ஆலோசனை:

      அய்யா, சுடச்சுட மனிதவுரிமை தொப்பையுரிமைச்சார்பு ஸமோஸா கடை போட்டால், அதை உண்டுவிட்டு – ஊக்கபோனஸாக ஏப்பம்விட்டு போராளித்தனமான பச்சாத்தாப நெகிழ்வுக் கட்டுரையைப் படித்துவிட்டு போலித்தனமாகப் பொங்க என தமிழ அரைகுறைகளின் மகாமகோ கும்பல் ஒன்று இருக்கிறது.

      இந்தக் கிறுக்குக் கருத்துலகப் பொறுக்கிகள்தாம் உங்கள் அடிவருடிகள். நீங்களும் அமோகமான நுனிப்புல் மேய்பவராக இருக்கிறீர்கள்! எங்கள் புல்லரிப்புக்குக் கேட்பானேன்?

      ஆகவே சமஸ் அவர்களே! நீவிர் ஸமோஸா கடை ஒன்றையும் போட்டு வாழ்வில் பொலிக, பொலிக…

      … எனச் சொல்லி வாழ்த்த வயதும் இருக்கிறது இடிக்க இடமும் கொடுக்கிறீர்கள் – என இந்தக் காலை நேர பின்னூட்ட எழவை முடிக்கிறேன்.

      __ரா.

  4. Aathma Says:

    Sir..They have started drinking urine…Please understand the severity of the issue….


    • u run.

      __r. :-(
      ps: actually drinking urine is not bad at all – at least for ‘demo’ purposes. no biotic content there.

      • ravi Says:

        by understanding the severity, can ram solve all the problems ?? 234 mla , 37 mp.. what r for they .. seems they r good at inventing new methods to avoid evaporation..


      • Sir, Ravi – I did not understand the bit about evaporation… some funny thing happened or what? (am not accessing any noosepaper or mag lately at all
        – under severe stress for delivery and doing nightouts etc)

  5. Aathma Says:

    It was just an experiment with Thermocol to prevent evaporation. I dont find it any wrong to try. But too much ridicule in the media is saddening.


    • oh. thanks Aathma. The general trends with the mediasses are these 1) endless ‘holier than thou’ pontification 2) content free but ridicule/venom/hate spewing 3) plainly lying in the name of entertainment/freedom 4) acting like mr.knowalls all the time.

      Sometimes I think – may be another ’emergency’ is in order. Seriously.

      Thanks for the info.

      __r.
      Now, gotta run.

  6. ravi Says:

    Ram, our scientists in governments(aka MLA, in TN government), were trying to cover the vaigai dam with thermocol to prevent evaporation, with budget running in lakhs..the function went with all photo-ops , fanfare and ended in a disaster…

  7. ஆனந்தம் Says:


    இந்த வீடியோவைப் பார்த்தீர்களா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s