மசாலாதோசையை முப்பத்தெட்டு ரூபாய்க்கு விற்று, சூட்டோடுசூடாக மோதி-ஒபாமா போன்றவர்கள் அவரவர்கள் நாட்டை, உலக நிலவரங்களை நிர்வகிப்பதைப் பற்றி, அணுசக்தியைப் பற்றி மேலான அறிவுரைகள், திடுக்கிடவைக்கும் கருத்துகள் பலவற்றை வாரிவாரி (ஆயிரம் வார்த்தைகளுக்குள்) தாராளமாக வழங்குவது எப்படி?
January 28, 2015
எப்படி?
எப்படி?
எப்படி?
… … இப்படித்தான்.
“That’s not writing, it’s typewriting.“
இதைத் தமிழ்ப்படுத்தியெடுத்தால் நீர்த்துப் போய்விடும். :-(
ஆக, கருத்துகுண்டர் தடைச் சட்டம் என ஒன்று வரவேண்டுமோ, என்ன எழவோ!
குறிப்பு: வயிறு குலுங்க, கண்ணீர் தாரைதாரையாகப் பெருக, வாய்விட்டுச் சிரிக்க, அழுத்தங்களை நீக்கிக்கொள்ள – என் நடைமுறை வாழ்க்கை ஒத்துவராதபோது நான் நிபந்தனையற்றுச் சரணடையும் நகைச்சுவை இணையத் தமிழ்த் தளங்கள் இதுவரை – வினவு, விடுதலை, எஸ்ரா, லக்கிலூக். இதனுடன் !நிசப்தம் மிகப் பெருமையுடன் சேர்ந்து கொள்வதை, ஐவரானதை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேறு வழியில்லை.
Yes. I have been embraced by the dark. :-(
இம்மாதிரி தளங்கள் வேறேதும் இருந்தால், அவற்றைப் பரிந்துரைக்க முடியுமா? தயவுசெய்து??
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )
January 28, 2015 at 13:27
எஸ்ரா ஒரு டமாசான ரைட்டர்தான். ‘எறும்புக்கும் காது கேட்கும் என்பது விந்தைதான் இல்லையா? யானையும் காலை உணவை அவசரமாகத்தான் உண்கிறது என்பது ஆச்சரியம் அல்லவா? யாவரும் வெயிலைக் குடித்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தபடியே இருக்கிறார்கள் இல்லையா?’ என்று அவர் நம்மைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது இல்லை, அல்ல என்று நெகேட் செய்து கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது.
நிசப்தம் இன்னொரு சக்கையான நடை.’கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். நேரம் இல்லை. வார இறுதி. பக்கந்தான். போய்ப்பார்க்கலாம். டவுன் பஸ்ஸில் 2 ரூபாய் கட்டணம். ஆனால் பயமாக இருந்தது’ – என்றபடியாக போர்ஹேவுக்கு சவால் விடும் நடை.
January 28, 2015 at 22:09
உங்களுக்கு என்ன சார் பிரச்சினை ?
January 29, 2015 at 07:16
அய்யா கணேஷ்கைலாஷ்!
அவர் வெகுதூரத்த்தில் இருக்கும் ஒபாமா, இஸ்ரேல் ஒழிக, முதலாளி ஒழிக, பன்னாட்டு நிறுவனம் ஒழிக, ஒசோன் ஓட்டை, பன்னாட்டு வர்த்தகம், அணுசக்தி என்றெல்லாம் மேலான கருத்துகளை வாரிவாரி வீசும்போது…
… நான், வெறும் ஒரு சக தமிழனின் தட்டச்சு வேகத்தைப் பற்றி கருத்து சொன்னால், உங்களுக்கு என்ன சார் பிரச்சினை?
அவருடைய நகைச்சுவை உணர்ச்சியை மெச்சித்தானே அய்யா கருத்துதிர்த்திருக்கிறேன்?
இப்படிக்கு:
முருகன்பழநி.
பின்குறிப்பு: அல்லாமே கர்த்துரிமேதாம்பா!
January 29, 2015 at 11:34
இப்போதைக்கு எனக்கு தெரிந்த ஒரே தளம் இதுதான்.சிரிப்புக்கும்,பொழுது போக்குக்கும் நான் கியாரண்டி! :-). இன்றைய பதிவில் பட்டையை கிளப்புகிறார்!
https://mathimaran.wordpress.com/
January 29, 2015 at 11:38
//மற்றபடி, நான் ஜுவினைல் பார்வையுள்ளவன் என்றால் தாங்கள் தாராளமாக என்னை ஒதுக்கிவிட்டுச் செல்லலாம். ///
மணிகண்டன் எழுதுவது அரைகுறை என்றால் நீங்கள் அவரை ஒதுக்கிவிட்டுச் செல்லலாமே!
இணையத்தில் வேறு பதிவுகளா இல்லை? நீங்களே பரிந்துரை கேட்டதால் இதைத் தருகிறேன்.
January 29, 2015 at 18:55
உண்மையிலேயே சூப்பர் தளம்.ஐயோ புல்லரிக்குது!
January 29, 2015 at 20:03
அய்யா சரவணன், படித்தேன். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எவ்வளவு பேர் இப்படி கிளம்பியிருக்கிறார்கள் என நினைத்தால் பயமாகவே இருக்கிறது. ஆகவே உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது, சரியா?
இதையெல்லாம் படிப்பதற்கு உங்களுக்கு, கைவசம் நேரம் அதிகமாகவே இருக்கிறதோ? ;-)
எல்லாம் என் நேரம்! வேறென்ன சொல்ல.
எனக்கு என் செல்ல மணிகண்டர்களே போதும். போதும் என்ற மனமே புண் செய்யும் மருந்து. ஆளை விடும்!