புறமுதுகு அல்ல இது, வெறும் ஜாக்கிரதை உணர்ச்சியும் சுயபாதுகாப்பும்தான்

August 6, 2021

ஐயா கேஎஸ்ஸி,  (Kentucky Stir-fried Chicken?)

என்னை மன்னித்து விடுங்கள்… நான், உங்களுடைய கலர்கலர்சட்டைக்காரருடன் கோதாவில் இறங்க முடியாது – அதற்கான திராணி என்னிடம் இல்லை. இது என் பிரச்சினைதான்.

நீங்கள் சொன்னீர்களே என்று அன்னாரின் லேட்டஸ்ட் காட்டுரை பக்கம், இன்று சென்றேன். மானுடர்கள் வளர்வார்கள், மாறுவார்கள்,  தம்மை மேம்படுத்திக் கொள்வதில் குவியம் கொண்டு தவறுகளைத் தவிர்த்து மேலெழும்புவார்கள் எனப் பொதுவாக ஒரு கதையாடல் இருக்கிறது இல்லையா… ஆனால், உங்கள் நண்பர்… :-(

அவர் இருள்வாக்கிலிருந்து ஒரு சொட்டு பதம்:

“பரஸ்பரம் ஒருவரையொருவர் பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றியதை வைத்து வெகு நேர்த்தியாக ஊடும் பாவுமாய் ஸ்டாலின் வரலாற்றை நெய்த்திருக்கிறார்.”

மெய்யெழுத்துகளை அக்ரி-ஸ்ப்ரேயர் வழியாக வாரியிறைத்துத் தூவும் தமிழையே விடுங்கள், தமிழ்வார்த்தைகளின் அர்த்தத்தையே ஊடும்(!) பாவுமாகப்(!!) பிரித்துமேய்ந்து அந்தத் தீயில் நெய்யையும் ஊற்றி, கேலிக்குள்ளாக்குகிறார் உங்கள் அன்பர்.

ஊடு பாவு என்பதை warp and weft எனும் ஆங்கிலப் பதத்துடன் நேரடியாக இணைத்து ஊடு என்றால் warp + பாவு என்றால் weft எனும் அத்யாத்ம நிலைக்கு வருகிறாரோ என்னவோ. சொல்லப்போனால் வார்ப் என்றால் பாவு, வெஃப்ட் என்றால் ஊடுநூல்; இந்த ஊடு நூல் என்பது, நெசவைப் பொறுத்தவரை பொதுவாகவே , பாவுநூல் போல உறுதியாக இருக்காது. ஆக என்ன சொல்லவருகிறார், உங்கள் நண்பர்?

“ஸ்டாலின் ராஜாங்கம், உறுதியான தரவுகளையும் உறுதியற்றவைகளையும் கலந்து கட்டி வரலாற்றுப் படையல் செய்திருக்கிறார்” என்றா?

என்ன மசுத்துக்கு இங்கே ஊடுபாவு? பெரிய படிப்பாளி தமிழ்ச் சான்றோன் படாசிந்தனையாளன் எனக் காட்டிக் கொள்வதற்காக இப்படி உதிர் உதிர் என உதிரியாகக் கலைச் சொற்களை உதிர்க்கவேண்டுமா என்ன?

என்ன மசுறு படிமமோ உருவகமோ மண்ணாங்கட்டி எழவோ! ஊடுபாவு!! இப்படியே ஊடுபாவு பாவுபாஜீ பாஜீராவ் ராவல்பிண்டி அநாதபிண்டிகா எனக் குதித்துக்கொண்டே செல்லலாம் போல!

வுருப்படமாட்டீங்கடே.

…உங்கள் நண்பர்…  தம் லேட்டஸ்ட் காட்டுரையை, இப்படி உதாசீனமாக, அசிரத்தையாக இஷ்டத்துக்கும் தமிழைச் சொதப்பி ஆரம்பித்தபோதே, நான் அம்பேல் என விட்டுத் தெறித்து ஓடியிருக்கவேண்டும்:

“ஜூலை 31 2021 அன்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று புத்தகங்களை ஒட்டி “வரலாரு என்னும் மொழி” என்று ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தேன்.” … ” மையச் சரடாக எழுத்து சார்ந்த வரலாறும் மக்களிடையே புழங்கும் வழக்காறும் எப்படி ஒரு சித்திரத்தை அளிக்கிறது”

ஆனால், முழுவதையும் (வதை!) பொறுமையாகப் படித்தேன். நான் சுயவதையில் நம்பிக்கை கொண்டுள்ளவன் போலும்; இல்லாவிட்டால், கேடுகெட்ட கற்றேகொள்ளாத, முட்டாக்கூ நம்பிக்கைவாதியோ?

“ஓரிடத்தில் இந்தி எந்திர்ப்பு போராட்டத்தின் போது ராஜாஜி வீட்டின் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை பெரியார் நிறுத்தியதையும் ஸ்டாலின் பதிவுச் செய்கிறார். “

இப்படியா துளிக்கூட செய்நேர்த்தியில்லாமல், வரைவைச் சரிபார்க்காமல் தொடர்ந்து, தமிழுக்கும் சிந்தனைக்கும் எதிராக அட்டூழிய கெர்ரிலாத் தாக்குதல் நடத்துவார்? தம் காட்டுரைகளை படிக்கும் பாவப்பட்டவர்களை அவர் மதிக்கும் அளவு இவ்வளவுதானா? படு கேவலம்…

இந்த அழகில் மூலப் புத்தகங்களைப் படிக்காமல், யோஹான்ஸ் ப்ராங்கர்ஸ்ட் புத்தகத்தைப் படித்து ப்ராஹ்மணியம் பௌத்தம் நிழல் அதுயிது எனப் புளகாங்கித ஜல்லி.

புத்தர் – வேதங்களுக்கோ ப்ராஹ்மணியத்துக்கோ எதிரானவர் என்று ஒரு மூலநூல் சார்ந்த சான்றுமில்லை. நானும் ப்ராங்கர்ஸ்ட் புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என ஏறத்தாழ அனைத்தையும் படித்திருக்கிறேன் – ஓரளவு அவரை மதிக்கிறேன்கூட. ஆனால் உங்கள் நண்பர், அவர் குறிப்பை எடுத்துள்ள அதேபக்கத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார் இந்த ப்ராங்கர்ஸ்ட் – வரலாற்று நினைவுகள் அதன் உருவாக்கங்கள் மீளுருவாக்கங்கள் எனத்தான் அவர் எழுதியிருக்கிறார் எனப் பலவாறு ஜல்லியடிக்கலாம்… ஆனால்:     மஹாவம்ஸம் எழுதப்பட்டது பொயு ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில், ‘அசோகர் உங்க மகரா’ இருந்தது பொயுமு மூன்றாம் நூற்றாண்டில்…

ப்ராங்கர்ஸ்ட் எழுதியதெல்லாம் பீலா எனச் சொல்லவில்லை – ஆனால் அவரைப் படித்துவிட்டு நாம் மேலதிகமாக மூல நூல்களைப் படிக்கவேண்டும்,  அவர் சுட்டியுள்ள பிற ஆராய்ச்சியாளர்களையும் பிற சிந்தனையாளர்களையும் படித்து அசைபோடவேண்டும்…. ஆனாம் மூலஆவணங்கள் / தரவுகள் / சான்றுகள் (primary sources) மிகமிக முக்கியம்… However, for the suitably hypnotized amateur readers of ‘popular histories’ or twistories if you will – the pleasures of selective interpretation and half-baked readings of histories, and ‘jumping to conclusions thereof’ are bleddy tempting, I agree. And, your friend  obviously is not exactly known for scholarship (not even at my level, which is not great to start with) or for his skills of the scalpel.

அதேபக்கத்தில், ப்ராங்கர்ஸ்ட் எழுதியிருக்கிறார்: ~”ஹிந்துமத ஆஸ்ரமங்கள் எனும் கட்டுமானங்கள்/கருத்தாக்கங்கள் மகத அரச காலத்தில் ஆஜீவக, சமண, பௌத்த சமயக் கட்டுமானங்களிலிருந்து கடன்வாங்கப்பட்டவையே!” என்பது போல. “…chapter will concentrate on one feature of renascent Brahmanism, its association with the hermitages called āśramas. This particular feature, it will be argued, was no brahmanical invention, but an adaptation of a notion borrowed from the religions of Greater Magadha. We have seen that at least from the time of the Mauryas on, shelters came to be created for the ascetic members of the religious movements of Greater Magadha, primarily the Jainas, the Ājīvikas and the Buddhists.”

பிரச்சினை என்னவென்றால் – மஹாபாரதத்திலும் (அதன் முந்தைய/ஆதி வடிவமான ‘ஜயா’ விலிருந்தே) ராமாயணத்திலும் வால்மீகி, பாரத்வாஜ, ஸாந்தீபநி எனப் பலப்பல ஆசிரமங்கள்  குறிப்பிடப் பட்டுள்ளன – புத்தரே தன்னை ஸ்ரீராமன் பரம்பரை எனக் குறிப்பிட்டுக்கொண்டுள்ளார் – தன்னையே ஸ்ரீராமனுக்கு நிகரானவன் என்றும்.

காலவரிசைகள் முக்கியம். இடைச்செருகல்கள், பிற்காலத் திணிப்புகள் எனக் குறிப்பிட்டு இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் புறம்தள்ள வாய்ப்பே இல்லை.

ஆனால், சான்றோர்கள் அட்ச்சிவுடக்கூடாது என யார் சொன்னார்கள்? ப்ராங்கர்ஸ்ட் எழுதியது அனைத்தும் அட்ச்சிவுடல் எனச் சொல்லவில்லை. ஆனால், சிலசமயங்களில் அவரும் “யார் சரி பார்க்கப் போகிறார்கள்” என தனக்குப் பிடித்தமான கதையாடலைக் கதைத்துக்கொண்டே போகிறார் எனத்தான் நினைக்கிறேன்.

(நானும் என் மேற்கத்தியபல்கலைக்கழகம் ஒன்றில் வரலாற்றாளனாக இருக்கும் நண்பன் ஒருவனும் சேர்ந்து காத்திரமான கட்டுரை ஒன்றினை இது தொடர்பாகச் சுமார் 20 மாதங்களுக்கு முன் எழுதி, ஒரு சஞ்சிகைக்கு அனுப்பினோம். பியர்-ரிவ்யு நடந்துவிட்டது – ஆனால் கிணற்றில் போட்ட கல், என்ன செய்ய – என் வாழ்நாளில் இது வெளியிடப்படுவதைப் பார்ப்பேனா என்பதே எனக்குச் சந்தேகம்! இடதுசாரி-லிபரல்களின் சக்தி என்பது அளவிடமுடியாததுதான்! எனக்கு ஆவணத்தர சஞ்சிகைகளில்  எழுதுவது, பேடண்ட் வாங்குவது, ஸ்டாக்மார்க்கெட் விவகாரம் போன்றவற்றில் பெரிய முனைப்போ ஆர்வமோ இல்லை – இருந்தாலும் பயங்கரமாக உழைத்து, எனக்குத் திருப்திதரும் அளவில் ஒன்றை எழுதினாலும் இப்படியாகிவிடுகிறது)

சரி.

…பொதுவாகவே, நம் பாவப்பட்ட சோனித்தனமான அரைகுறை தமிழறிவுஜீவியச் சூழலில், ஸ்டாலின்ராஜாங்கம் அவர்கள் ஓரளவாவது பொறுத்துக்கொள்ளக் கூடியவர் என்கிற எண்ணம் எனக்கு இதுவரை இருந்தது. ஆனால், நாருடன் சேர்ந்த பூவும் டார்டாராகும் எனவும், உங்கள் நண்பர் அறிவுஜீவியர் – ஸ்ரா அவர்களைச் சிலாகிப்பதிலிருந்து தெளிவாகிறதோ? என்ன செய்ய, சொல்லுங்கள். :-(

என்னை விட்டுவிடுங்கள். சொல்லித் தெரிவதில்லை செய்நேர்த்தி. +தத்தம் அறிவின் அளவு குறித்த அனுமானமும்.

எனக்குப் பொறுமையோ கருணையோ இல்லை. உங்கள் நண்பர் அளவுக்கு மேதாவித்தனமும் படுதெகிர்யமும் எனக்கு வாய்க்கவில்லை. (நகைச்சுவையைப் பொறுத்தவரை எனக்கு என் செல்ல எஸ்ராமகிருஷ்ணர்களே போதும், நன்றி!)

உங்களுக்கு நன்றியுடன் – இனி அவர் பக்கமே போவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்.

எதிர்காலம், ஆகவே, பளிச்சென்று நிர்மலமாக இருக்கிறது.

நன்றி.

__ரா.

6 Responses to “புறமுதுகு அல்ல இது, வெறும் ஜாக்கிரதை உணர்ச்சியும் சுயபாதுகாப்பும்தான்”


  1. அனுப்பிய மின்னஞ்சலின் பதிவாக்கத்தில், அன்னாரின் காட்டுரைக்கான சுட்டியைக் கொடுக்க மறந்துவிட்டேன்.

    தாங்கள் இன்புற: http://contrarianworld.blogspot.com/2021/08/blog-post.html

  2. Vel Says:

    சில அரசியல்வாதிகள் நாங்கள் தலித் வீடுகளில் சாப்பிடுவோம் என்று கூறுவார்கள். அதாவது அவர்கள் சாதி பார்க்க மாட்டார்களாம். ஆனால் உண்மையில் பலர் மார்தட்டி கொள்ளாமலே இப்படி பட்ட காரியங்களை செய்து வருவார்கள், அவர்கள் உண்மையிலேயே சாதிக்கு எதிரானவர்கள், போலியானவர்கள் அல்ல. ஆனால் இந்த அக நான் முன்னால் கூறிய அரசியல்வாதியை போன்றவர். ஸ்டாலின் ராஜாங்கத்தை மறுத்து பத்ரி ஒரு பதிவை எழுதி இருந்தார், இந்த அகவிற்கு வந்ததே கோபம், பத்ரி இவருக்கு எதிராக சதி செய்கிறார் என்கின்ற ரீதியில் அன்றில் இருந்து எழுதி கொண்டு இருக்கிறார். இதுநாள் வரைக்கும் இந்த தண்டக்கருமாந்திர அக வைக்கும் குற்றச்சாட்டே இந்தியாவில் வரலாற்றுடன் கதைகளை கலந்து எழுதுவார்கள் என்பதுதான். ஆனால் அதை ஸ்டாலின் ராஜாங்கம் செய்யலாமாம், அதை சுட்டி காட்டினால் அது சாதி வெறியாம்.


    • ஓ! நன்றி.

      எனக்கு இந்த பின்புல விவகாரம் பற்றி ஒன்றும் தெரியாது.

      அவர் இப்படி இரட்டைவேடம் போடுவது பெரிய விஷயமில்லை – ஆனால் அதையாவது, ‘செய்வன திருந்தச் செய்’ எனச் செய்யலாமே எனப் படுகிறது; திரிப்பதை நன்றாக, தொழில்முறையில் செய்யலாமே!

      அரவிந்தன் கண்ணையன் அவர்கள் மீது (சிலவருடங்கள் முன்புவரை) ஓரளவு மதிப்பு வைத்திருந்தேன் – ஆனால், விஷயங்கள் பொய்த்துப்போவதும் வாழ்க்கையின் நியதிகளில் ஒன்றுதான்.

      (ஐயா, நீங்கள் தொடர்ந்து நிறையப் படித்து ஜெரிக்கிறீர்கள்போல, நீங்கள் என் ஸீரியஸ்ஸாக எழுதக்கூடாது?)

  3. Alagappaiyengar Seshagiri Says:

    ” இந்த பின்புல விவகாரம் பற்றி ஒன்றும் தெரியாது”
    அந்த விவகாரத்திற்கான பத்ரி அவர்கள் எழுதிய முகநூல் பதிவின் சுட்டி
    (முடிந்தால் அதிலுள்ள பின்னூட்டங்களையும் படிக்கவும்)

    • dagalti Says:

      நன்றி.
      திரு. பத்ரி தன் வழக்கமான தெளிவுடன் ‘I am afraid His Excellency is substantially sartorially challenged’ என்று போட்டு உடைத்துவிட்டார்.

      அங்கு comments section படாதபாடு படுகிறது!

      முதலிலேயே உருப்படியான கறாரான academic interoggation வழிவகை இல்லா அறிவுச்சூழல் நமது. இதில் மேலும் ஒரு முக்கியமான மேலெழு விசை: திராவிடத்தால் வேண்டுமென்றே மறக்கடிப்பட்ட சிந்தனையாளர் என்று பழிக்கப்பட்டதால், இவரை திராவிட தரப்பினரே சர்வ ஜாக்கிரதையாக exalt செய்யும் போக்கு தெரிகிறது.

      தற்போது மதறாஸ் பல்கலையில் ‘எம்.ஏ தமிழ்’ படிக்கும் மாணவர்கள் தற்போது பெரியாரியல் பற்றி ஒரு தாள் எழுத வேண்டும். கவனிக்க: ‘MSc Political Science’ல் அல்ல, ‘எம்.ஏ.தமிழ்’ல்.

      அதுபோல நாளடைவில் ‘அயோத்திதாசரியல்’ என்பது ‘எல்லாரும்’ படிக்கவேண்டிய ஒன்று ஆகும்.

      தேவநேயப்பாவாணரின் மொழியாராய்ச்சி உள்ளீடு உள்ளதாக நினைப்பவர்களின் நபர்களின் எண்ணிக்கை மலைப்பூட்டுவது. இச்சூழலில் அடுத்து அயோத்திதாசரரின் வரலாற்றாய்வும் mainstream ஆவது quite natural.

      Contrarian – நான் மதித்து படித்த (அரிய தரச்சான்றிதழ் காணீர்) blogகளில் ஒன்று . என்றும் ‘நம் அறிவுச்சூழலின் கறார்த்தான்மையின்மை’ பற்றிய அவரது ஆதங்க அங்கலாய்ப்புகள் மீது மரியாதை உண்டு.

      ஆனால் திரு.பத்ரியின் இவ்விடுகைக்கு பதிலாக அவர் எழுதிய இடுகை, பலஹீனமான, ஆவேசமான, பேத்தலான whataboutry நிறைந்தது. Indefensible ஹேஷ்யங்கள் அடுக்கிச்செல்வது. பத்ரி அயோத்திதாசர் பற்றி எழுப்பிய விமர்சனத்தின் சாரத்தை தவிர்த்துவிட்டு, ஸ்டாலின் ராஜாங்கம் பற்றிய கருத்துகள் மீது கவனம் குவிக்கிறார். அதில் அவர்கள் இருவருக்கும் அபிப்ராய பேதம் கூட இருக்கலாம் – but that’s not the point at all!


      • சேஷகிரி அவர்கள் கொடுத்த சுட்டி: இனிமேல்தான் அந்த அக்கப்போரைப் படிக்கவேண்டும்.

        அக்கப்போர்களைப் படிப்பதற்கும் சலிப்பாக இருக்கிறது; ‘படித்தவன்(!) சூதும்வாதும் பண்ணினால்தர’ இளிப்புகளைப் பார்க்கப் பார்க்க ரத்த அழுத்தமும் ஏகத்துக்கும் அதிகமாகி விடுகிறது; தேவையா, சொல்லுங்கள்?

        (இருந்தாலும் இன்று படிக்கிறேன்!)

        // ‘நம் அறிவுச்சூழலின் கறார்த்தான்மையின்மை’ பற்றிய அவரது ஆதங்க அங்கலாய்ப்புகள்

        ஆ! பிரச்சினை என்னவென்றால், அவரே தன்னுடைய கறார்த்தன்மை குறித்துக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. நாம்தான் இந்த ‘வீழ்ச்சி’ குறித்துக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

        கொஞ்சம் யோசித்தால் – அவருடைய பலவருடம் முந்தைய கட்டுரைகளிலும் (கறார்தன்மையுடன் இருந்தவை என என்னால் நம்பப் பட்டவை!) சிலபல இளித்தல்கள் இருந்தன என்பதும் நினைவுக்கு வருகிறது – நான் தான் அவற்றை லூஸ்லவுட்டுவிட்டேன் + ‘ஆலையில்லா ஊர்’ எனச் சால்ஜாப்பு சொல்லிக்கொண்டேன். பிரச்சினை என்னிடம்தான் இருந்தது – நான் தான் மிகைமதிப்பீடு செய்துவிட்டேன்.

        எது எப்படியோ.

        எது நடந்ததோ அது நல்லதாக நடக்கவில்லை.
        எது நடக்கிறதோ, அதுவும் அப்படியே.
        எது நடக்கப் போகிறதோ…

        ஆகவே: நாம் ஓடவேண்டும். அவ்வளவுதான்.

        நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s