பிஏகிருஷ்ணன், ஹிந்தி-உருது விளக்கம், அவர் கருத்துகள்/பரப்புரைகள், தொடர் வீழ்ச்சி, நரேந்த்ரமோதி – குறிப்புகள்
March 18, 2019
பொறுமையாகப் படிக்கவும். இல்லாவிட்டால், ஓடவும். இப்பதிவில் ~2000 வார்த்தைகள் இருக்கின்றன, எச்சரிக்கை!
பிஏகிருஷ்ணன் அவர்களுடைய கருத்து ஒன்றைக் குறித்த பதிவில் அவர் அட்ச்சிவுட்டதைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு அவர் ஒருமாதிரியான தன்னிலை விளக்கம் அளித்தார் – ஏதோ வேலைகளில் அதனை மறந்து விட்டேன். கடந்த சில வாரங்களில் தனிப்பட்ட உரையாடல்களில் இவர் + இவர் கருத்துகள் தொடர்பாகச் சிலபல தெளிவுகள் கிடைத்தன. ஆகவே.
தன்னிலை விளக்கம்:
அன்புள்ள நண்பருக்கு,
நீங்கள் எழுதியிருப்பதை இன்றுதான் பார்த்தேன். நான் சொன்னது இந்தி மொழியே நூறு ஆண்டுகளுக்கு முன்னால்தான் பிறநதது என்ற பொருளில் அல்ல.
நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டதைப் பார்க்கும்போது நான் இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பேசப்பட்ட உருது கலந்த இந்தியை இப்போது பேசப்படுவதில்லை எழுதப்பட்டுவதில்லை என்ற பொருளில் நான் சொன்னேன். அதுவும் எரிச்சலில் சொன்னதுதான். சப்பைக்கட்டு அல்ல. உண்மையாகவே அந்தப் பொருளில்தான் சொன்னேன்.
என்னைப் பொறுத்த அளவில் நான் இந்தியை வெகுவாக மதிக்கிறவன். அது வளர்ந்திருக்கும் விதம் பிரமிக்கத் தக்கது. ஆனால் தென்னிந்தியர் பேசும் மொழிகளை இங்கு சிலர் கேலி செய்வதைப் பார்த்தால் உங்களுக்கே தனியாகப் பிரிந்து போய் விடலாமா என்று தோன்றும். இந்திய ஒற்றுமைக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற கூற்றுக்கு உங்கள் ஒப்புதல் இருக்கும் என்று நம்புகிறேன்.
!? என்னவோ போங்க. :-(
தில்லியில் கேலி மனப்பான்மை குறித்து: அங்காவது கேலி மட்டும்தான் செய்கிறார்கள். (அதுவும் மகாமகோ ஸர்தார்ஜிக்களை பாரதமெங்கும் கேலி செய்துகொண்டே இருக்கிறார்கள் – அதற்காகவா அவர்கள் தனியாகப் பிரிந்துபோய்விடலாம் என யோசிக்கிறார்கள், சொல்லுங்கள்?).
ஆனால், தமிழகத்தின் பிரத்யேகமான கழிசடையான தீராவிடத்துக்கு நன்றியுடன், தமிழகத்தில் ஒருவிதமான முகாந்திரமும் இல்லாமல் ஹிந்தியையும் ஹிந்திபேசுபவர்களையும் வெறுக்கிறார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.
எனக்குப் பிரத்யட்சமாகத் தெரிந்தே, ஹிந்தியில் பேசிய யாத்ரீகர்கள் உதைக்கவும் பட்டிருக்கிறார்கள்; 1990வாக்கில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து அருகாமையில் உள்ள சென்னை பூங்கா ரயில் நிலையம் செல்ல (ஒரு கிலோமீட்டர் கூட இல்லை!) வலிந்துபோய் ஒரு ஆட்டோவுக்கு ரூ150/- கேட்டது மட்டுமில்லாமல், ‘எங்களுக்கு வேண்டாம், நடந்தே போய்க்கொள்கிறோம்’ என்று ஹிந்தியில் சொல்லிவிட்டு விலகிய பாவப்பட்ட ஏழை யாத்ரீகர்களை, ‘நீங்கள் ஹிந்தியில் திட்டுகிறீர்கள்’ எனச் சொல்லி ‘ஆட்டோக்களில் ஏறியாகவேண்டும் இல்லாவிட்டாலும் ரூபாய் கொடுக்கவேண்டும்’ என அடித்து, தள்ளி மிரட்டினார்கள் – இந்தப் பேடிகள், திமுகவையும் மார்க்ஸிஸ்ட்களையும் சார்ந்த (LPF and CITU) ஆட்டோ ஓட்டுநர்கள்.
சுற்றிக் கூட்டம் திரண்டது – ஆனால் வீரமிலா, நேர்மையிலா நாய்கள் கூட்டம்; வெறும் வேடிக்கை பார்க்கத் திரண்டிருந்தது (இக்காலமாக இருந்திருந்தால் ஸ்மார்ட்ஃபோன்களில் இதனைப் படமெடுத்து வாட்ஸ்அப் எழவில் இதனை ‘மீம்’களுடன் சுற்றுக்கு விட்டிருப்பார்களோ என்ன எழவோ!). இதனை நேரில் பார்த்து வெறுத்துப்போய் , திராவிட ஸ்டாலின் போலல்லாமல் என் சட்டை உண்மையாகவே தள்ளுமுள்ளில் கிழிந்துபோய், பின் அங்கிருந்த ட்ராஃபிக் பொலீஸ் கான்ஸ்டபிளுடன் சேர்ந்து ‘மத்தியஸ்தம்’ செய்து, நான், அந்த யாத்ரீகர்களுக்கு ‘விடுதலை’ வாங்கிக்கொடுத்தேன். அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. கண்ணீர். மிகவும் பயந்துபோயிருந்தார்கள். ஆகவே ஷுக்ரியா. கொஞ்சம் பயந்துகொண்டே ராம் ராம். நான் சிரித்துக்கொண்டே, கபரானா மத், மேரா நாம் பீ ராம் ஹை, ராவண் நஹீ. தன்யவாத். ஜெய்போலோ, ஜெய் ராம்ஜி கி. சிரிப்பு. பாவம். அவர்களுடன் பேசிக்கொண்டே பூங்கா ரெயில் நிலையம் வரை சென்று அவர்களை விட்டுவிட்டு வந்தேன். ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே, புஹாரி ஹோட்டல் பக்க டீக்கடை ஒன்றில் எல்லோரும் சாய் குடித்தோம்.கொஞ்சம் உரையாடல். அவர்கள் பிஹாரிகள் – கயா பக்கத்தில் ஏதோ ஒரு குக்கிராமம்; மொத்தம் இருபத்தைந்து முப்பது பேர் இருந்திருப்பார்கள். அக்குழுவில் எல்லா ஜாதிக்காரர்களும், இப்போது ‘தலித்’ என அழைக்கப்படுபவர்கள் உட்பட சகோதரத்துவத்துடன்தான் இருந்தார்கள். ராமேஸ்வரம் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி தவிர வேறெங்கும் போகத் திட்டமில்லை.
சரி. கதை இதோடு முடியவில்லை. எனக்கு மகாமகோ கோபம், ஒருமாதிரி இளமைவேறு. திரும்ப சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து விட்டேனா பார் என அந்தத் திராவிடமார்க்ஸிஸ்ட் குண்டர்களுடைய ஆட்டோ எண்களைக் குறித்துக்கொண்டு பக்கத்திருந்த காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்போனேன் – அப்போதுதான் அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் (LPF and CITU) தொழிற்சங்க குண்டர்கள் எனப் புரிந்தது. லெட்டர்பேடுடன் வந்தார்கள். ஒரு நாள் முழுவதும் போராடியும் கடைசி வரை என் புகாரை வாங்கிக்கொள்ளவில்லை – ஸ்டேஷன் வளாகம் எங்கள் ஜூரிஸ்டிக் ஷனில் இல்லை, அது இது, உங்களுக்கு ஏன் ரௌடிகளுடன் வேலை, ஆர்பிஎஃப் தான் பார்க்கவேண்டும், அறிவுரை இன்னபிற கொடுத்து – ஒன்றும் நகரவில்லை. காலையில் ஸ்டேஷனுக்கு என் அம்மாவை பெங்களுர் ட்ரெய்னில் ஏற்றிவிடப் போன நான், இரவு எட்டு மணிக்குத் தான் மிகவும் வெறுத்துப்போய் வீடு வந்து சேர்ந்தேன். சுபம்.
அந்தச் சுற்றல்களில் நான் கற்றது: அடிக்கடி இம்மாதிரி யாத்ரீகர்களை மிரட்டிப் பணம் வசூலிப்பது (அப்போது) ஒரு தொடரும், சாதாரண நடைமுறை. ஒவ்வொரு முறையும் ‘டேய், இங்க இந்தில பேசாதடா, தமிள்ல்ல பேசுடா’ வகை அன்பும் விருந்தோம்பலும்.
ஆனால், எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் இருந்து தில்லி சென்று ஆகாத்தியமும் கேவலமும் செய்பவர்களைக்கூட (நான் அய்யாக்கண்ணு போன்ற அம்மணக்குண்டிப் பிச்சைக்காரக் கூவான்களைச் சொல்கிறேன்) அங்கு கேவலமாக நடத்தவில்லை. மாறாக ஊடகப் பேடிகளின் ஒர்ரே ஆமோதிப்பு மட்டுமே!
மேலும் கேலி செய்கிறார்கள் போன்ற அற்ப காரணங்களுக்காக மட்டுமே தனியாகப் பிரிந்து போகவேண்டுமென்றால் – என் வீட்டிலேயே நான்கு தனி தேசங்கள் இருக்கும். However, YMMV.
இன்னொன்று – நான் இதுவரை ஒரு வடநாட்டுச் செய்தியைக் கூட (அதாவது பாரத யாத்ரீகர்கள் தமிழகத்தில் படுத்தப்பட்ட பாட்டைக் குறித்தவை!) படிக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாக, அவர்களுக்கு எதிராக ஒன்றும் பெரிதாக நடக்காவிடினும் திராவிடத் தமிழர்கள் ‘அடிக்கறாங்க அடிக்கறாங்க’ எனப் பெட்டைப்புலம்புவதுதான் நடக்கிறது. நன்றி.
-0-0-0-0-0-
“…நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பேசப்பட்ட உருது கலந்த இந்தியை…”
…என எழுதுகிறார். ஆச்சரியமாக இருக்கிறது. விளக்கத்தில் வருந்தத்தக்க பிழைகள். :-(
இதுகுறித்த என் முந்தைய பதிவில், சிலபல புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருக்கிறேன். மேற்படி காத்திரமான கருத்துகளை வளர்த்துக்கொள்ள, குறைந்த பட்சம் அவற்றை மட்டுமாவது படிக்கும்படிக்கு பிஏகிருஷ்ணன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். (ஏற்கனவே படித்திருந்தால், அவர் இப்படி எழுதியிருக்கமாட்டார் என்பதால்தான் இது)
சரி.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் – ஹிந்தியும் உருதுவும் வளர்ந்த விதங்களே தனி. உருது மொழியானது, முகலாய அரச இஸ்லாமின் கவனிப்பையும் அண்டிப் பிழைக்கவைக்கும் பிச்சையையும் பெறவேண்டிய காரணத்தால் பாரசீக வார்த்தைகளைக் கடன் வாங்கிக்கொண்டு வளர்ந்தது.
ஆனால், ஹிந்தி அதற்கு மாறாக, மேலதிக ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைக் கடன் வாங்கிக்கொண்டு வளர்ந்தது; இந்த இரண்டு வளர்ச்சிகளுக்கும் மதரீதியான காரணங்களும் இருந்தன. கங்கா-ஜமுனி தெஹ்ஸீப் என்பதெல்லாம் பெரும்பாலும், ரத்தக்கறைகள் விலக்கப்பட்ட கதையாடல்கள்தாம்.
இதற்காக வேண்டுமளவு தரவுகள் இருக்கின்றன. (மறுபடியும் அந்தப் புத்தகங்கள், குறைந்த பட்சம்!)
நிலைமை இப்படி இருக்கையிலே – இவர் சொல்வதற்கு மாறாக – பஜார் மொழிகளையே அவற்றின் பேச்சுவழக்கு உபயோகங்களையே விடுங்கள் – 1) உருது கலக்கப்பட்ட ஹிந்தி ஆக்கங்கள் என ஒரு சரடு இருந்தது என்பதற்கு ஆவணரீதியான அசைக்கமுடியாத தரவுகள் இருக்கின்றனவா? 2) அப்படி இருந்தால் நூறு வருடங்களுக்கு முன் அப்படி இருந்தது என்பதற்கு? 3) அப்படியே இருந்தாலும் அது இப்போது பேசப்படுவதில்லை என்பதற்கு முகாந்திரம் இருக்கிறதா?
அல்லது – அவருடைய கருத்துக்கு அந்தப் பக்கமாக – ஹிந்தி கலக்கப்பட்ட உருது வகையறாக்கள் என உருதுமொழி படி ஒழுகுபவர்களால் பேசப்பட்டிருக்கிறதா?
என் படிப்பறிவுக்கு எட்டியவரையில் அவை அப்படி இல்லை; அதாவது அவையும் அவருடைய மேலதிக அட்ச்சிவுடல் தான்.
பிஏகிருஷ்ணன் அவர்கள் இதற்கு மாறாகத் தரவுகள் தந்தால், அதிலிருந்து நான் கற்றுக்கொள்ளவும் தயார். என் அறியாமையில் இருந்து எனக்கு மோட்சம் அளிக்க அவருடைய பராக்கிரமத்துக்கு முடியும்தான்.
இந்த அக்கப்போருக்கெல்லாம் அப்பாற்பட்டு எனக்கு மறுபடியும் மறுபடியும் தோன்றும் கேள்வி என்னவென்றால்:
படிப்பறிவுக்கும் செறிவான அனுபவங்களுக்கும் வாய்ப்புப் பெற்ற பிஏகிருஷ்ணன் அவர்கள், ஏன் அரவிந்தன்கண்ணையன், ராஹுல்காந்தி போன்றவர்களின் மௌடீக ரேஞ்சுக்குப் போய்த் தன்னை இறக்கிக்கொள்கிறார்?
வருத்தம்.
மற்றபடி, “இந்திய ஒற்றுமைக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்” – பிஏகிருஷ்ணன் அவர்களின் இந்தக் கூற்றுக்கு என் மனதாற ஒப்புதல். ‘ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து’ ‘பாரதீயம்’ எனும் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, வெறும் சுயநலப் பிண்டமாக இந்தக் கூற்றை நான் பார்த்தாலும் கூட இப்படியே தான் சொல்வேன். ஏனெனில் என்னுடைய பாரதம் மகோன்னதமானது. நன்றி.
-0-0-0-0-
கடந்த பலமாதங்களாகவே, ஒரு அமெரிக்க அன்பர் – மறுபடியும் மறுபடியும் – பிஏகிருஷ்ணன் இப்படி மோதி பற்றிச் சொன்னார், அப்படிக் கருத்துதிர்க்கிறார், braying brigade :-) என்கிறார் – என்றெல்லாம் அனுப்பி என் கருத்தென்ன, அதற்கு விலாவாரியாக பதிலளிக்க முடியுமா என்று கேட்டிக்கொண்டிருந்தார்.
நானும் (வெண்முரசிலும் எஸ்ராமாயணத்திலும் படுபிஸியாக இருப்பதால்) ஏதோ சால்ஜாப்பு சொல்லிக்கொண்டே, தட்டிக் கழித்தேன். மத்யஸ்தம் செய்வதற்கும், உரையாடல்களின் எல்லைகளைப் பற்றிப் பிறருக்கு மேலான அறிவுரை கொடுப்பதற்கும், எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதற்கும், நானா கிடைத்தேன்?
மேலும், மோதியை ஒன்றுமற்ற வெத்துவேட்டு ராஹுல்காந்தியே ‘விமர்சனம்’ செய்யும்போது நம் படிப்பாளி பிஏகிருஷ்ணன் ஏன் செய்யக்கூடாது என்றே அலுப்பில் பதிலளித்தேன். மேலும், எனக்குப் பிடிக்கிறதோ பிடிக்காதோ – அனைவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்பதில் எனக்கு ஒரு பிடிப்பு. ஆனால் அக்கருத்துகளுக்கு காத்திரமான தரவுகள் இருக்கவேண்டும் என்பதுதான் என் அணுகுமுறை. இல்லாவிட்டால், அந்தக் கருத்துகள் வெறும் குசுக்கள் மட்டுமே என்பதிலும். (எடுத்துக்காட்டாக அமெரிக்க அரவிந்தன் கண்ணையன் – இவரை ஒரு மாபெரும் குசுவாளராகத்தான் நான் கருதுகிறேன் – அப்படியே எழுதியுமிருக்கிறேன்)
ஆனால் இரண்டுமூன்று நாட்கள் முன் பிஏகிருஷ்ணன் ‘மோதியை வழிபடும் தமிழ் பிராமணப் பொறுக்கிகள்’ என எழுதினார், இது அப்பட்டமான ஜாதிவெறி இல்லையா என்று மறுபடியும் ஒரு மின்னஞ்சல். (ஸ்க்ரீன்ஷாட்டுடன்)
(அதை வெட்டி நறுக்கி – அவர் ஃபோன் எண்/பெயர், பிற ருசுக்கள் தெரியாமல் செய்திருக்கிறேன்; ஆனால் தஹிந்து என்.ராம் செய்த அயோக்கியத்தனத்துடன் இதனைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டா. ஆனால் மேற்கண்டது 100% பிஏகிருஷ்ணன் அவர்களால்தாம் உதிர்க்கப்பட்டது)
முதலில் – இப்படிச் சமனம் இழந்து பிஏகிருஷ்ணன் எழுதுவார் என எனக்கு நம்பிக்கை இருந்திருக்கவில்லை. ஏனெனில் மோதி குறித்து வேண்டுமானாலும் ஃப்யூரர் ஹிட்லர் பட்லர் என அட்ச்சிவுடுவாரே தவிர இப்படி அப்பட்டமான ஜாதிவெறியில் ஈடுபடமாட்டார் என நினைத்துக்கொண்டிருந்தேன். மேலும் எனக்கு இந்தச் சம்பவத்தின் முன்னேபின்னே தெரியாது. எதற்காக, ஏன் அப்படிச் சொன்னார் என்றெல்லாம்.
பின்னர் அன்பர் தொலைபேசியில் ஒரே தொணதொண. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கினார். ஃபேஸ்புக் ஸ்க்ரீன்ஷாட்களை அனுப்பினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர், நேற்று அகஸ்மாத்தாக சில நண்பர்களுடன் இது தொடர்பாக மின்னஞ்சல் பரிமாற்றம் செய்துகொண்டபோது – யார் வாயை அடைப்பதற்காக பிஏகிருஷ்ணன் இப்படிச் சொன்னாரோ, அவருடைய ஆப்த நண்பர்களில் என் நண்பரும் ஒருவர், எனத் தெரிந்து தெளிந்தேன். முகச் சுளிப்பு, வேறென்ன செய்ய.
“தமிழ் பிராமண பொறுக்கிகள்” பற்றி:
நான் ஜாதிகளின் தன்மையை அவற்றின் நேர்மறை எதிர்மறைக் கூறுகளை ஒரளவு புரிந்துகொண்டவன். அவற்றின் உண்மை வரலாறுகளையும், இஸ்லாமின் எதிர்மறை தாக்கத்தையும், அவற்றின் மேன்மைகளையும் கீழ்மைகளையும், பின்னவை இறுகியதையும், அவற்றின் மீதான காலனிய-மதமாற்ற சக்திகளின் ஆகாத்தியத்தையும், எதிர்வினைகளையும் – தொடந்து நடந்துகொண்டிருக்கும் சமரசங்களையும், சில அட்டூழியங்களையும் ஒரு மாணவனாக, களத்தில் இறங்கிக் கற்றுக்கொண்டிருக்கிறேன். போகவேண்டிய தூரமும் மிக அதிகம். ஒப்புக்கொள்கிறேன். நான் இவ்விஷயத்தில் அறிவாளியல்லன்; வெறும் மண்புழுதான்.
இதுதான் நிலைமை. ஆனால் எக்காரணம் கொண்டும், ஜாதி எதிர்ப்பு பாவலா செய்துகொண்டே ஜாதிகள் பெயரைச் சொல்லி ஒரு குழுவைக் கேவலப்படுத்தமாட்டேன்.
இன்னொரு விஷயம்: நான் பொறுக்கி எனும் தமிழ்ச்சொல் செஞ்சொல்லை உபயோகிக்காத ஒழுக்கசீலன் அல்லன், என்னால் ‘கெட்ட வார்த்தைகளை’ சரளமாக உபயோகிக்க முடியும், அவ்வப்போது தேவை ஏற்பட்டால் உபயோகிக்கிறேன்கூட – அதாவது – தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உர்து, கன்னடம், தெலுகு போன்றவற்றில். ஊக்கபோனஸாக, ஸம்ஸ்க்ருதத்திலும் வசைச்சொல்களை உபயோகிக்க முடியும்.
ஆனால், கண்டமேனிக்கும் எனக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் அர்ச்சனை செய்ய, ‘பொறுக்கி’ எனும் சொல்லை விரயம் செய்யமாட்டேன். அதே சமயம் பொறுக்கிக்கும் பொறுக்கித்தனத்துக்கும் உள்ள வித்யாசங்களை அறிவேன். பொறுக்கிகள் பொறுக்கித்தனத்தை மட்டுமே செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் பொறுக்கித்தனம் செய்பவர்கள் எல்லாம் பொறுக்கிகள் அல்ல; பின்னதற்கு எடுத்துக்காட்டு: தமிழகத்தின் எழுத்தாளப் பிதாமகர்கள். நன்றி.
என்னைப் பொறுத்தவரை:
1. பொறுக்கிகளும் பேடிகளும் – எல்லா மதங்களிலும், கட்சிகளிலும், ஜாதிகளிலும், நாடுகளிலும் நிரந்தர இடஒதுக்கீடுடன் இருக்கிறார்கள். (சில கட்சிகளில் அவர்கள் ஏகபோக உரிமை பெற்றவர்களாக இருக்கலாம் – எடுத்துக்காட்டுகள்: ஜார்ஜிய ஸ்டாலின் கட்சி, கம்போடிய போல்பாட் கட்சி, ஹிட்லரிய நாட்ஸி கட்சி, சீன மாசேதுங் கட்சி – ஆனால் எல்லா கட்சிகளும் அப்படியல்ல!)
2. ஒரு சமூகத்தைச் சார்ந்த சில பொறுக்கிகளின் எடுத்துக்காட்டுகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் பொறுக்கியாக்கி விட்டுச் சாடமுடியாது.
3. பொறுக்கியாக ஒருவர் கருதப்படுவதற்கு அதற்கு காத்திரமான சான்றுகள் வேண்டும். (வெறுமனே மோதி வழிபாட்டாளர்கள் அனைவரும் பொறுக்கிகளாகி தில்லியில் வேலை கிடைத்து பொறுக்கிப் பதவிவுயர்வு பெறமுடியாது – மேலும் பிஏகிருஷ்ணனுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையானால், அல்லது அவருக்கு எதிர்க்கருத்தாளராக இருந்தால் ஆட்டோமேடிக்காக ஒருவர் பொறுக்கியாகிவிடமாட்டார்!)
4. விதிவிலக்கு: திராவிடக் கட்சிகள் – இவை பொறுக்கிகளால், பொறுக்கிகளின் லாபத்துக்காக நடத்தப்படும் கட்சிகள். முக்கியமாக திமுக (ஆகவே இதில் சகல மத/ஜாதிகளைச் சார்ந்த கடைந்தெடுத்த பொறுக்கிகள் எல்லாம் அணி சேர்கிறார்கள்; இந்த விஷயத்தில் நம் தமிழகத்தில், அக்மார்க் அயோக்கியர்களை இனம் காண்பது சுலபம்)
ஆகவே – அவர் “தமிழ் பிராமண பொறுக்கிகள்” எனச் சொல்வதை ஒப்புக்கொள்வேன் – எப்போது?
எப்படியென்றால் – கீழ்கண்ட விதங்களில் அநியாயமாக ஒருசிலரின் பொறுக்கித்தனத்துக்கு ஒட்டுமொத்த ஜாதியைப் பழிப்பதாக அவர்பாணி நேர்மையுடனும் லிபரல் நேருவியஸோஷலிஸ சத்யாவேசத்துடனும் அவர் சொல்லமுடியுமென்றால்:
கருணாநிதி, மாறன்கள், ஸ்டாலின், அழகிரி போன்றவர்களெல்லாம், சந்தேகமேயில்லாமல் கடைந்தெடுத்த, புடம்போட்ட முதன்மைப் பொறுக்கிகள்தாம். அவர்களுடைய ஜாதிக்குழு இசைவேளாளர் சமூகம் என இருப்பதால் அவர்களை இசைவேளாளப் பொறுக்கிகள் என அழைப்பது. (பாவம், இசைவேளாளர் சமூகம் – அதென்ன பாவம் செய்தது, சொல்லுங்கள்?)
சசிகலா, தினகரன், டிஆர் பாலு போன்றவர்கள் பெருங்கொள்ளையர்கள், சர்வ நிச்சயமாகப் பொறுக்கிகள். அவர்களுடைய ஜாதிக்குழு தேவர் சமூகம் என இருப்பதால், அவர்களை தேவர் பொறுக்கிகள் என அழைப்பது. (பாவம், தேவர் சமூகம் – அதென்ன பாவம் செய்தது, சொல்லுங்கள்?)
ஜான்பாண்டியன், ரவிக்குமார், திருமாவளவனார் போன்றவர்கள் லும்பன்கள்தாம், அடாவடிகளில் ஈடுபட்டு ஊழல்பணம் பண்ணுபவர்கள்தாம். அவர்களும் தங்களை தலித் எனச் சொல்லிக்கொள்கிறார்கள் என்பதால் அவர்களை தலித் பொறுக்கிகள் என்று அழைப்பது. (பாவம், தலித் சமூகம் – அதென்ன பாவம் செய்தது, சொல்லுங்கள்?)
ஜவாஹிருல்லாஹ், மதானி, யாஸீன் மாலிக், அஸ்ஸாவுத்தீன் ஓவைஸீ போன்றவர்கள் வன்முறைவாத கொலைகாரப் பொறுக்கிகள். அவர்களுடைய மதம் இஸ்லாம் என இருப்பதால் அவர்களை இஸ்லாமியப் பொறுக்கிகள் என அழைப்பது. (பாவம், இஸ்லாமிய சமூகம் – அதென்ன பாவம் செய்தது, சொல்லுங்கள்?)
மோஹன் லஸாரஸ், ஃபாதர் ஃப்ரேங்கோ மூலக்கல் (கன்னிமார்களைப் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தவர் – மாட்டிக்கொண்டும் கத்தோலிக்கபீடங்களால் காப்பாற்றப் படுபவர்), ஃபாதர் ஜோஸஃப் பழனிவேல் ஜெயபால் (இவர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணியவர் – ஆனால் தற்போது ஊட்டியில் ஜாம்ஜாமென்று கத்தோலிக்க ‘ஊழியம்’ செய்துகொண்டிருக்கிறார்) போன்றவர்கள் பொறுக்கிகள். அவர்களுடைய மதம் க்றிஸ்தவம் என இருப்பதால் அவர்களை க்றிஸ்தவப் பொறுக்கிகள் என அழைப்பது. (பாவம், க்றிஸ்தவ சமூகம் – அதென்ன பாவம் செய்தது, சொல்லுங்கள்?)
…இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவாக இழிசொல் சொல்வது, ஒட்டுமொத்த சமூகத்தையும் அசிங்கப்படுத்துவது என்பது அயோக்கியத் தனமான செயல் – ஆனால், அன்பர் பிஏகேயின் அகராதியில் இது சரி.
ஆனால், இப்படியெல்லாம் பேசஎழுத அவருக்குத் தைரியமும் பக்குவமும் இருக்கிறதா?
ஆக, எப்படி இருக்கிறது கதை! அப்பட்டமான, பாதுகாப்பான, ‘எளிய தயிர்வடைகளாகிய இவர்கள் எங்கே எனக்குப் பதிலடி கொடுக்கப் போகிறார்கள்’ வகை தெகிர்யத்தால் உந்தப்பட்ட ஜாதிதுவேஷம் தான் பிஏகிருஷ்ணன்களால் முடியும்.
நரேந்திரமோதி பற்றிய பிஏகிருஷ்ணன் கருத்துகள் பற்றி:
நான் பிஏகிருஷ்ணன் எழுத்துகளை அவ்வப்போது படித்த அளவில் – அவருடைய தீராவிட எதிர்ப்பில் குறை சொல்லமுடியாது. ஏனெனில் தீராவிடத்திற்கு எதிராக, ஆணித்தரமான விவாதங்களை முன்வைக்கும் படிப்பறிவும் உலகஅனுபவமும் அவருக்கு அதில் இருக்கிறது.
ஆனால் என்னவோ – மோதி, ஹிந்துத்துவா (இப்போது +ஹிந்தி) விஷயங்களைப் பொறுத்தவரை அவர், தரவுகளின் பாற்பட்டு கருத்துகளைச் சமைத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம், அவர் எழுதி எனக்குப் பிறரால் அனுப்பப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்களில் அப்படித்தான் இருக்கிறது. ஏனிப்படி தர்க்கமற்ற வகையில் இயங்குகிறார் என்பதற்கு என்னிடம் கறார் பதில் இல்லை. ஏனெனில் அவரது அதீதமான நேரு, ஸோஷலிஸ, இடதுசாரி(?) அப்ரஹாமிய சார்புகள் காரணமாகவோ அல்லது லிபரல்வாத காமாலைக் கண்ணினாலோ அல்லது பாரதத்தைக் குறித்த ‘white man’s burden’ வகையால் உந்தப்பட்ட தாழ்மையுணர்ச்சியினாலோ அல்லது அவருக்கு வாய்த்த கல்வியாலோ அல்லது வரலாறுகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாததாலோ (எடுத்துக்காட்டாக இந்த ஹிந்தி-உருது அபுரிதல்) அல்லது ‘ஹிந்துத்துவா’வை பூதாகாரமாக வரித்து பயபீதியுடனும் வெறுப்புடனும் அதனைப் பார்ப்பதாலோ அல்லது வேறேதோ எழவாலோ – அல்லது அனைத்தும் கலந்துகட்டியதாலோ இருக்கலாம். அவரவருக்கு அவரவர் கலந்துகட்டல், அடியேன் உட்பட.
நான் அவருடைய எழுத்துகள் அனைத்தையும் முழுமையாகப் படித்தவனோ படிப்பவனோ (முக்கியமாக, படிக்கப் போகிறவனோ) அல்லன். அவர் ஒரு ஃபேஸ்புக் செயல்பாட்டுக்கார வீரராக கம்புகேழ்வரகு சுற்றிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்; எனக்கு அது பொதுவாகவே ஒத்துவராது. நேரமும் பொறுமையும் இருக்கும்போது அவருடைய இணையதளத்துக்குச் சென்று படித்திருக்கிறேன், அவ்வளவுதான். (இதில்வேறு அவருடைய அதிஅற்புத ஹைலெவல் அனலிஸிஸ் படித்து சென்றவருடம் எனக்குப் பேதி வந்தது நினைவுக்கு வருகிறது!)
மோதியையும் ஹிந்துத்துவாவையும் – ஒரு மசுரையும் புரிந்துகொள்ளாமல் விமர்சனம் செய்வது ரொம்ப சுலபம். இது நம் மேட்டிமைத்தனம் மிக்க தேங்காய் அறிவுஜீவிகளின் விருப்பத்துக்குரிய காலட்சேபம். (தேங்காய் வெளியே பழுப்பாக இருக்கும் – உள்ளே வெள்ளை)
மேலும் தரவுகளுடன் அவர் கருத்துகளுக்கு ஒரு எதிர்வினையைக் கொடுத்தால் அவர் மறுபடியும் – ‘நான் எரிச்சலில் சொன்னேன் அல்லது எழுதினேன்’ அல்லது ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ அல்லது ‘நான் இன்னமும் தெளிவாக எழுதியிருக்கலாமோ’ அல்லது ‘உங்களைக் குறித்துச் சொல்லவில்லை’ அல்லது ‘நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்’ என்று அதற்கு ஒருமாதிரி ஒப்புக்கொள்ளக்கூடிய ‘பெரிய மனித’ பதிலைக் கொடுத்துவிடுவார், பாவம்.
ஆனால் – அவர் பெரியவர், படித்தவர், என்னைப் பொறுத்தவரை பொறுமையாகத்தான் பின்னூட்டமிட்டிருக்கிறார், பிறரிடம் எப்படியோ; எது எப்படியோ, அவருக்கு அவருடைய மேலான கருத்துகளைச் சமைத்துக்கொள்வதற்கும் அவற்றைப் பரப்புரை செய்வதற்கும் சகல உரிமைகளும் இருக்கின்றன. அவருடைய வாசகர் வட்டத்தைக் குஷிப்படுத்த அவர் எழுதுகிறார். நான் வெறுமனே சகஎழரைகளுக்காக என மட்டும்தான் கடை விரித்திருக்கிறேன். (மேலும், இவற்றையெல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்கோ அவருக்கோ தெரியவேண்டிய விஷயங்களும் இல்லை)
நான் மத்தியஸ்தம் செய்யும் தொழிலில் இல்லை. என்னுடையது கசாப்புக் கடை – வெட்டினால் ஒன்று துண்டு இரண்டு.
அதனால் சொல்கிறேன்: என்னுடைய எல்லா கருத்துகளுக்கும் அவருடைய எல்லா கருத்துகளுக்கும் ஒத்துவரும் என்று தோன்றவில்லை. இனிமேல் அவசியமும் இல்லை. (எந்த இருவருக்குமே அப்படித்தானே!)
இதற்கு அப்பாற்பட்டு, நான் நரேந்திர மோதி அவர்களை வழிபடாவிட்டாலும் – அவர்போன்ற செயலூக்கமும், ஆன்மபலமும், குவியமும் உள்ள ஊழலற்ற ஒரு மக்கள் தலைவரைப் பெறுவதற்கு, அவரைப் போன்ற பாரதத்தத்துவத்தில் நம்பிக்கையுள்ள மானுடர்கள் நிரம்பியுள்ள கட்சியைத் தெரிவு செய்து தேர்ந்தெடுப்பதற்கு, நமக்கெல்லாம் இந்த 2019ல் மறுபடியும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை, ஒரு புண்ணியமாகவே கருதுகிறேன். மேலும் – ஏகோபித்த இடைஞ்சல்களுக்கிடையே, கடுமையான நெருக்கடிகளுக்கிடையே, மோதி அவர்கள் நம் தேசத்துக்குச் செய்துள்ள விஷயங்கள் அசாத்தியமானவை என்பதையும் நேரடியாக உணர்ந்துள்ளேன்.
இதற்கு மேல், நான் பிறந்த சூழ்நிலையால் நான் ஒரு தமிழ் பிராமணன். (எனக்குத் தெரிந்தவரை எனக்கு ஜாதிவெறி கிடையாது என நம்புகிறேன்; மாறாக, நீ பொய் சொல்கிறாய் என யாராவது ஆதாரத்தோடு சுட்டிக் காட்டினால், சுயபரிசீலனை செய்துகொண்டு ‘திருந்தவும்’ தயார்!)
ஆனால்+ஆகவே, பெரியவர் பிஏகிருஷ்ணன் கூற்றுப்படி, நான் ஒரு பொறுக்கி. நல்லதுதான்.
இதனை இத்தோடு விடுகிறேன். மரியாதையுடன் விலகிவிடுகிறேன். நம் அனைவரின் வாழ் நாட்களும் குறைந்துகொண்டே வருகின்றன, செய்து முடித்தேயாகவேண்டிய வேலைகளோ அதிகம்.
ஆகவே.
அன்பரே, என்னையும் தயவு செய்து விட்டுவிடுங்கள். இப்படி முடித்துவிட்டானே எனக் கோபம் வந்தால் இடத்தைக் காலி செய்யுங்கள். எண்ணிக்கை ஏழரையிலிருந்து ஏழானால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நன்றி. இன்னொரு தடவை அவர் இப்படி எழுதினாரே, சரியா என்றெல்லாம் எனக்குத் தயவுசெய்து எழுதாதீர்கள், என்னைத் தேவையற்று உசுப்பி விடாதீர்கள்.
மாறாக ‘படித்தவன் சூதும்வாதும் பண்ணினால் ஐயோவென்று போவான்‘ என விட்டுவிடுங்கள். ஏனெனில் மிகுதியிருக்கும் என் வாழ்நாட்களை என் மேன்மைக்கும் நகைச்சுவைக்கும்தான் செலவழிப்பதாக இருக்கிறேன். நான் சுயநலப்பேய்.
எப்படியும் எனக்குச் செய்வதற்கு ஆயிரம் பிற விஷயங்கள் இருக்கின்றன.(பிஏகேவுக்கு எப்படி என்று தெரியவில்லை, அவர் மோதி குறித்து அபாண்ட வெறுப்பியவிடலைத்தனமான ஈடுபாட்டுடன் தொடர்கேளிக்கையில் (‘பி ஏ கிருஷ்ணன் ஒரு list ready செய்றாரு‘) படுதீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது – ஆனால் உங்களுக்கு? உமக்கு வேறு வேலை இல்லையா என்ன?)
நன்றி.
இப்படிக்கு
பொறுக்கி.
March 18, 2019 at 11:01
உங்களின் சிறந்த பதிவுகளில் ஒன்று இது. பிஏகே வின் வயதுக்கு தரப்படும் மரியாதையின் பொருட்டு யாரும் அவரை மார்க்சிய நேருவிய பொறுக்கி என்று அழைக்கவில்லை
March 19, 2019 at 09:04
ஐயா நன்றி. ஆனால் என் நேரத்தை வீணாக்கியிருக்கிறேனோ எனச் சந்தேகம்.
ஆனால் ஒருவருமே அழிச்சாட்டியப் பூனைக்கு மணிகட்டவில்லையானால்…
இருந்தாலும் – ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்கூட இந்தப் பிஏகே அவர்கள் குறித்த கருத்துகளை மறுபரிசீலனை செய்யவேண்டிவரும் என நான் நினைத்ததில்லை.
காலத்தின் கோலம்.
March 18, 2019 at 16:09
ஒரு கோரிக்கை: எனக்கு முன்னேபின்னே தெரியாத இருவரின் பின்னூட்டங்களை அகற்றியிருக்கிறேன்.
அனாவசியமான வசைபாடல்களைத் தவிர்க்கவும். அவரவளவுக்கு இறங்கவேண்டாம். நன்றி.
March 18, 2019 at 23:39
(பிஏகிருஷ்ணன் அவர் லிஸ்டைப் போட்டுக்கொள்ளட்டும். அவருடைய தரத்தைக் குறித்துக் கொஞ்சம் பயமாக இருந்தாலும் – நான் அவரைப் பற்றி எப்படியும் எழுதப்போகிறேன். நன்றி.)
அவரபத்தி எழுத சொல்வில்லை சாரே! அவர் போடுற list போல உங்ககிட்ட list இருக்கான்னு கேட்டேன். அல்லது அவர் லிஸ்டக் க்கு மறுப்பு உண்டா ? என்ன சாரே சொல்றது புரியாத மாதிரி டபாய்க்கிறே. சரி விடு – யார் மோடி பத்தி சொன்னாலும் சாருக்கு பத்திக்கிட்டு வருது
March 19, 2019 at 08:58
ஐயா யாரோ!
1. பி ஏ கே லிஸ்ட் வகையறா என்ன எனத் தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வமில்லை. ஏனெனில் அவர் விவரங்களைச் சரிபார்க்காமல், தரவுகளில்லாமல் அட்ச்சிவுடுபவர் என்பது என் தற்போதைய முடிவு. (ஆர்சி அவர்களின் எதிர்வினை குறித்த என் விளக்கத்திலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன்)
2. என் பார்வையில் சில விவரணைகள் (தரவுகளுடன்) வரும்.
3. மோதி பற்றி மதுகிஷ்வர் போன்றவர்கள் சொன்னால் ஒப்புக்கொள்வேன். விமர்சனம் செய்வதற்கும் தராதரம் வேண்டும். சகதியில் புரண்டுகொண்டிருக்கும் கருத்தடிச்சான் குஞ்சப்பர்களை நான் பொதுவாகப் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அந்தப் பிரிவில் சேர முயற்சிக்கிறீர்களோ?
4. உங்களுடன் பொருதவும் எனக்கு நேரமில்லை.
5. நன்றி.
March 18, 2019 at 23:41
அன்பு ஐயா, நீங்கள் முகநூலில் இல்லாத போது இந்த அளவு பதவுரை தேவையா? உங்கள் நேரத்தை வீணடிக்கிறார் உங்கள் நண்பர்.
திரைச்சொட்டு கொடுத்து திரு.பிஏகே அவர்களுக்கு முட்டு கொடுக்க ஆசை ஏதும் இல்லை.ஆனால் மேற்சொன்ன சமீபத்திய பதிவில் அவரை தொடரும் வாசகன் (புத்தகம் + இணையப்பக்கம் பதிவு+முகநூல் பதிவு) என்ற முறையில் முகநூல் உடனடி எதிர்வினைக்கு இவ்வளவு பெரிய பதவுரையா? என்றே திகைக்கிறேன்.பிஏகே வும் சம்பத்தப்பட்ட நபரை குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறிவிட்டார்.மேலும் நேருவையும் காந்தியையும் சிறிதும் மரியாதையின்றி பதிவிடும் தமிழ் பிராமணரையே பொறுக்கி என்று அழைப்பேன் என்கிறார்.
முகநூலில் வேகம் கொண்டு வெளிப்படும் நேரு காந்தியை விமர்சிப்போர்,இந்துத்வா+பாஜக ஆதரவளிப்போர் பெரும்பான்மையோர் பிராமணராய் இருப்பது துரதிர்ஷ்டம் என்பேன் என்னளவில்.அல்லது மிதமாய்/சமனமாய் வெளிப்படும் உள்ளம்கொண்டோர் இந்துத்வா+பாஜக முகமாய் வேண்டும் (எனக்கு).ஆனால் அதற்கு வாய்ப்பேதும் தெரியவில்லை.
மேலும் பிரதமரை பிஏகே மரியாதையின்றி குறிப்பிடுவதில்லை.மேற்சொன்ன நபர்களுக்கு எதிர்வினையாகவே பக்தர்களின்/நபரின் ஃப்யூரர் என்பார்.
ஆள விடுங்க சாமி முடியல..உங்கள் அனுபவத்திற்கு இவ்வகை நேர வீணடிப்பு தேவையில்லை என்னளவில்.நன்றி.
March 19, 2019 at 06:24
அன்பருக்கு நன்றி.
நேரம் வியர்த்தம்தான். வயதாகியும் விவேகம் இல்லை (எனக்கு). ‘திரைச் சொட்டு’ பதம் அழகாக இருக்கிறது. :-)
முதலில், அரைகுறை ராஜஸ்தானிய இளசுகளிடம் வீரப்பிரதாபமாகவும் விட்டேற்றியாகவும் ஹிந்தி-உருது அட்ச்சிவுட்டாக்ஸ் கருத்தாக்கம் ஒன்றை, அந்தப் பெரியவர் உதிர்த்ததாகச் சொன்னபோதுதான் எனக்குக் கோபம். ஏனெனில் – அவர் ஜெயமோகனோ கடலூர்சீனுவோ அல்லரே! (ஆனாலும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்திருக்கலாம், எனக்கென்ன வந்தது?)
சிலசமயம் (சுயானுபவம்தான், வேறு பெரிதாகச் சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை) – இம்மாதிரி விஷயங்கள் ஒருமாதிரி ‘civilizational war’ அளவுக்குப் போய்விடுகின்றன; ஓரளவுக்கு அறிந்துதெளிந்துகொண்ட வரலாறுகள் (தரம்பால் அவர்களுக்கு நன்றியுடன் , உப கருத்தாளர்களாக அம்பேட்கர் பாபுஜி சீதாராம்கோயல் போன்றவர்களுக்கும்) அப்படிச் செய்துவிடுகின்றன; ஆசிரியர்களைக் குற்றம் சொல்லவில்லை – நான் போகவேண்டிய தூரம் அதிகம், அவ்வளவுதான். கடந்ததும் அதிகமில்லை. குறைந்தபட்சம் ஓளிவேகத்தில் விரிந்துகொண்டிருக்கும் அண்டவெளியில், மாற்றுக்காலனாக, திக்குத் தெரியாத திறனாள நடை நடந்துகொண்டிருக்கிறேன் என்பதும் புரிகிறது.
சரி. உங்கள் பரிந்துரை சரியானது. இந்த விவகாரத்தை இனிமேல் விட்டுவிடுகிறேன். பிஏகே அவர் pakrishnan.com தளத்தில் எழுதியுள்ள மூன்று கட்டுரைகளில் இருந்த அடிப்படை அபத்தங்கள் குறித்து அடிக்குறிப்புகளுடன் எதிர்வினை புரிய இருந்தேன். விட்டேன். தேவையில்லை எனத்தான் தோன்றுகிறது.
ஊக்கபோனஸாக, ஃபேஸ்புக்கில் எனக்கு ஒரு ஃபேக் ஐடி தயாரித்துக்கொண்டு ரகசியமாக ஊடாடவும் ஒரு திட்டம் கைவசம் இருக்கிறது.
சாராம்சம்: வயதாகியும் விவேகம் இல்லை (எனக்கு).
சமயசஞ்சீவினி பரிந்துரைக்கு நன்றி.
March 19, 2019 at 10:15
அன்பின் ராம், நலமா?
ஸ்ரீ பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் அவர்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.
\\\ ஏனெனில் அவர் விவரங்களைச் சரிபார்க்காமல், தரவுகளில்லாமல் அட்ச்சிவுடுபவர் என்பது என் தற்போதைய முடிவு. \\\
வெகு நிச்சயமாக இது தவறான கணிப்பு. அவருடன் மிகக் காட்டமாக அபிப்ராய பேதம் உள்ளவர்களும் இப்படிச் சொல்ல மாட்டார்கள். ஓரிரு விஷயங்களில் எப்போதாவது அப்படி அவர் தவறுதலாகத் தன் கருத்தைச் சொல்லி தகுந்த ஆதாரங்களுடன் அதை மறுதலித்தால் தன் கருத்தை அவர் மாற்றிக்கொள்வார். அல்லது ரீ ஃப்ரேஸாவது நிச்சயம் செய்வார். ஆர் எஸ் எஸ் இயக்கமே ஸ்தாபன ரீதியாக காந்தியடிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது என்று ஒரு முறை கருத்து தெரிவித்தார்.
முந்தைய ஆர் எஸ் எஸ் ப்ராதஸ்மரணம் இன்றைய ஏகாத்மதா ஸ்தோத்ரம் இவற்றிலிருந்து
“மஹாமனா மாளவீயோ மஹாத்மா காந்திரேவச” என்று ஸ்வயம் சேவகர்கள் நிதம் சொல்லும் வரியைச் சுட்டிக்காண்பித்தவுடன் நன்றி தெரிவித்து ஆர் எஸ் எஸ் மீது தான் ஆரோபித்த கருத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் ஹிந்துத்வப் பொறுக்கிகள் / ப்ரேயிங்க் ப்ரிகேட் மீது இந்த காந்திக்கு எதிரானவர்கள் என்று ஒரேயடியாக கருப்பு மசி இட்டு வருகிறார்.
நிற்க. ஹிந்துத்வத் தரப்பினர்களும் எல்லா இடதுசாரிகளும் நக்ஸல்வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் என்ற படிக்கு ஒரு கருத்தினைப் பகிர்வதையும் புளகாங்கிதத்துடனேயே நாம் படித்து கண்டும் காணாமல் போய் வருகிறோம்.
கழிசடைகளுக்கு பாரதத்தில் பஞ்சமா சொல்லுங்கள். இங்கே மெட்ராஸ் ரௌடிகள் போல அங்கே இல்லை தான். ஆனால் ஹிந்தி தெரியாத மதறாஸி மாட்டிக்கொண்டால் வெச்சி செய்யத் தயங்கமாட்டார்கள். அதுவும் உபி பீஹார் இங்கே உள்ள படித்தவர்கள் நிச்சயம் அப்படிச் செய்யக் கூடியவர்கள் தான்.
பாக் சார் பக்கத்தில் ஆமைக்குஞ்சுகள் அணில் குஞ்சுகள் லூஸு அருணன் அடிப்பொடி இடதுசாரிகள் மூச்சுக்கொருதரம் பிரிவினைவாதம் பேசும் போதெல்லாம் ஈயடிப்பது போலும் கொசு விரட்டுவது போலும் அவர்களை பாக் சார் விரட்டியடித்து வருவது தொடர்ந்து நிகழ்கிறது. நமது அதிப்ரியமான மாணவர் வார் டேன்ஸ் (=போராட்டம்) ஆதரவாளரான மேஜர் பூவண்ணன் சார் பாரதம் பிளக்கப்படுவது……….தேசிய இனம்….. இத்யாதி இத்யாதி என்று அவரிடம் சவுண்டு விடும்போதெல்லாம் ………….. தெளிவாக பிரிவினைவாதத்தை மறுதலித்து கண்டித்திருக்கிறார். ஒரு முறை அம்பேத்கர் அவருடைய பேச்சு ஒன்றினை மிகத் தெளிவாக குறிப்பிட்டு (நேரடியாக மூலத்தினை தரவு பூர்வமாக குறிப்பிட்டு) அதில் பாரதம் எப்படி பிரிக்க முடியாத பிரிக்கப்படக்கூடாத தேசம் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த சுட்டி கிடைத்தால் பகிருகிறேன்.
\\ ஆனால், ஹிந்தி அதற்கு மாறாக, மேலதிக ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைக் கடன் வாங்கிக்கொண்டு வளர்ந்தது; \\
மானக் ஹிந்தி என்பதை நமது அரசியல் சாஸன ஷரத்து 351வ் தெளிவாக வரையறை செய்கிறது. மானக் ஹிந்தி ஸம்ஸ்க்ருதத்திலிருந்து ப்ரதானமாகவும் அடுத்தபடி மற்றைய பாரதீய பாஷைகளிலிருந்து தன் சொற்களஞ்சியத்தை கரந்துறைய வேண்டும் என்று இந்த ஷரத்து பரிந்துரை செய்கிறது.
ராஜ்பாஷா நீதியின் படி ராஜ்பாஷா ஹிந்தி ப்ரயோகத்திலிருக்கிறது. இதில் தேவநாகரி லிபிக்கு முக்யத்துவம். ஒரு ஆங்க்ல வார்த்தையை தேவநாகரி லிபியில் எழுதிக்கொண்டு செல்லலாம்.
போல்சால் கீ ஹிந்தி புழக்கத்தினார் வளர்ச்சியுறும் ஹிந்தி. இப்படி மூன்று நிலைகளில் ஹிந்தி வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மூன்றையும் ஆய்வு செய்வது ஒரு முழுமையான புரிதலைக் கொடுக்கும் என்பது என் கணிப்பு.
மோடி சர்க்கார் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று உரத்துச் சொல்லி வருகிறார். ஒரு சில காரணிகளையும் அடுக்கியுள்ளார். அவற்றை ஒவ்வொன்றாக விளக்கப்போவதாயும் சொல்லியுள்ளார். இந்த விஷயம் பற்றி அப்படி விளக்கம் சொல்லியவுடன் அதை மறுப்பது சரியாக இருக்கும்.
March 19, 2019 at 11:22
ஐயா, நன்றி. வேறெங்கோ படுபிஸியாக இருந்திருக்கிறீர்கள் போல!
1. பிஏகே என்னுடைய தற்போதைய கணிப்புப்படி இல்லையென்றால் தாராளமாக மாற்றிக்கொள்கிறேன். (அடியேன் என்ன, பெரிய்ய மசுரா என்கிற நியாயமான கேள்விக்கு அப்பாற்பட்டு)
2. அவர் அலுப்பிலும் கோபத்திலும் braying brigade எனக் குறிப்பிட்டதையும் நான் சிரித்துத்தான் ரசித்திருக்கிறேன். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.
3. அவர் பிரிவினைவாதத்திற்குத் துணைபோகிறார் எனச் சொல்லவேயில்லையே! அவர் அப்படியல்லர் மேலும் அவருடைய கீர்த்தி + படிப்பறிவு பற்றிக் கொஞ்சம், எனக்கு அறிமுகமான இரண்டு நபர்கள் மூலம் தெரியும். சொல்லப்போனால் – இவர்களில் ஒருவரிடம் இருந்து என் தொலைபேசி எண்ணைக் கடன்வாங்கி அவர் எனக்கு ஒருமுறை போன் போட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். (ஒரு திராவிடஎதிர்ப்பதிவுக்குப் பிறகு என நினைவு)
4. ஸோஷியல்மீடியா எழவுகளில் – ஏதாவது கருத்துச் சொல்லிக்கொண்டேயிருக்க கை துருதுரு நமநம என இருப்பதன் காரணமாகச் சில கடும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என நினைக்கிறேன். மேலும் கையில் நேரம் இருந்து ‘ஊக்குவிக்க’ ஒரு குழாமும் இருந்து ஓடிவந்து லைக்போட்டால் ஒரு இன்பலாகிரியே என்ன எழவோ! (எனக்கு எந்த முடிப்பிச்சைக்காரனும் லைக் போடவே மாட்டெனென்கிறான் என்கிற பொறாமையும் இருக்கிறது)
4. பிஏகே அவர்களை வசைபாடி வந்த பின்னூட்டங்களை (அதில் ஒன்று ‘பாப்பாரப்பொறுக்கி’ எனச் சொல்லி! ஆச்சரியம் ஆச்சரியம்!!) நான் அனுமதிக்கவில்லை. எனக்கு மற்றபடி, அவருடன் வேறெந்த வாய்க்காத் தகராறு கிடையாது. சொல்லப்போனால் – ஏப்ரல்மே மாதங்களில் (ஓட்டு போட்டுவிட்டு அடுத்த நாள் கிளம்பி) தில்லியில் இரண்டுமூன்று வாரம் இருந்து, மகனுடன் ஊர்சுற்றலாம் என நினைத்திருக்கிறேன். அப்போது அவரையும் தொடர்புகொண்டு இன்னும் சில நண்பர்களையும் பார்த்து அரட்டை அடிக்கவேண்டும் எனக்கூட நினைத்திருந்தேன். ஆனால்.
5. மோதிகுறித்த அவருடைய கருத்துகளைக் கருத்தில்கொள்ள எனக்கு முனைப்பில்லை. அவருக்கு அவருடைய கருத்துரிமை. எனக்கு என் சலிப்புரிமை.
6. அரவிந்தன்கண்ணையன் அவர்களை ஒரு பொருட்படுத்தத் தகாத அற்பநபராக நான் கருதுவதுபோல் பிஏகே அவர்களையும் கருதாமல் இருக்கவேண்டும் எனவே விழைகிறேன் – அந்த ஸதாவத்ஸலே மாத்ருபூமா தேவிதான் அருள்புரியவேண்டும். (எப்படியும் என்னைப்போன்ற ஆசாமியின் கருத்துக்கு அவர் செவிசாய்க்கவேண்டும் எனக்கூட இல்லை, ஏன் அரவிந்தன்கண்ணையனும்தான்!)
6. ஆனால், இப்போதைக்கு, அவர் வேண்டாம். என் பிரச்சினைதான்.
7. நன்றி.
March 19, 2019 at 10:47
முக நூலில் பகிர்ந்துள்ளேன்.உண்மையில் பிஏகே அவர்களூக்கு மறுமொழி கூறினால் எந்தவிதமான அர்ச்சனைகிடைக்குமோ என்ற பயத்தினாலேயே விலகி நின்று வேடிக்கை பார்ப்பேன்.உங்கள் எதிர்வினை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
March 19, 2019 at 11:24
என்ன செய்வது சொல்லுங்கள்.
ஒரு பொறுக்கியாகப் பிறந்துவிட்டால், அதுவும் குமாஸ்தாவாக இல்லாவிட்டால் வாழ்க்கையே ஒரு கேளிக்கைதான். :-)
என்னவோ போங்க… ;-)
March 20, 2019 at 20:44
சார், பி.ஏ .கே.யைப்பற்றிய எனது ஆதங்கமெல்லாம் மோதியை அவர் கண்டபடி எதிர்ப்பதை பற்றி கூட பொருட்படுத்த ஒன்றுமில்லை ஆனால் அவர் சமயத்தில் ராகுலை தூக்கி கொண்டாடுவது தான் சகிக்கமுடியவில்லை.நீங்கள் ஏற்கனவே மோதியின் ஆட்சியின் சிறப்பை பற்றிய தங்கள் கணிப்பை எழுதப்போவதாக கூறியிருந்தீர்கள் அதை சீக்கிரம்செய்தால் நலம்.
March 21, 2019 at 12:26
ஆனால் பி ஏ கிருஷ்ணன், கிறித்துவ பொறுக்கிகள் முஸ்லீம் பொறுக்கிகள், தேவர் பொறுக்கிகள், செட்டியார் பொறுக்கிகள், நாயுடு பொறுக்கிகள், கோனார் பொறுக்கிகள் என்றெல்லாம் வசை பாடுவதோ சாதிப்பெயரால் இழித்துரைப்பதோ இல்லை. அதை கவனமாகத்தவிர்க்கிறார். நாசி திக பொறுக்கிக்கும்பல் செய்வதுபோல பிராமணர்களை மட்டும் ஜாதிப்பெயர் சொல்லி இழிவசை பொழிகிறார்.
March 21, 2019 at 14:30
பெரியவர், விட்டுவிடவேண்டியதுதான்.
அல்லிடத்தில் காக்கில் என், காவாக்கில் என்.
பாரதத்துக்கு உள்ளேயே நமக்கு அவ்வளவு எதிர்மறை எண்ணங்கள்.
March 21, 2019 at 20:12
“தேங்காய் அறிவுஜீவி” reminded me of the description “coconut socialism” by my late friend Prof T J Nossiter of the LSE while referring to Indian communists nearly half a century back.
March 22, 2019 at 05:47
Thanks! But I think it is possible that he was actually referring to the coconut/coir workmen and their ‘mobilization’ by the communists circa 1940 – (and not really in the context of ‘whiteman’s burden’ etc maybe that I was actually contextualizing??).
Of course I could be completely off the mark here. Please correct me if I am wrong. ISRT that looooong back, I had read a couple of his articles – not in this coconut context, but about communism in kerala.
Anyway, it is also interesting that you studied in LSE. Hey, you should write in Tamil and about your ideas – anecdotally or just about anything. We are otherwise becoming a sterile land peppered with half-baker wannabe ‘scholars’ – not actual scholars! Please!
Look – what Cuddalore Seenu has done to the ‘history’ of Lakulisa now… https://www.jeyamohan.in/119350 :-( He is demolishing everything, a veritable JCB jackhammer.
(next in the exciting series: How Mahmood of Ghaznavi, built the BigTemple at Thanjavur? Stay tuned. Thanks!)
March 22, 2019 at 11:12
உங்களுடைய ப்ரதேயக கவனத்திற்கு. புல்வாமாவுக்கு எதிரான ஹிந்துஸ்தானத்தின் தாக்குதலை உலகமே நமது தேசத்தின் வெற்றி என்று கொண்டாடியபின்னரும் அண்டைய நாடான பாகிஸ்தான் வெளியே என்ன சொன்னாலும் உள்ளூற புழுங்கிப் பொங்குகையில் பாக் சார் எதிர்த்தாக்குதல் பாரதத்திற்கு தோல்வி என்று எழுதியிருக்கும் வவ்யாசம்…………….https://pakrishnan.com/2019/03/22/pulwama-and-its-aftermath/?fbclid=IwAR1em7_XaeeqEXbxZnOk0UnT6YmWFIM020iEQZ3eqAhCIao6tu91AxfqwY4
March 22, 2019 at 11:41
அவர் வெறும் ஃபேஸ்புக் கர்த்தாளர் என்பதற்கு அப்பாற்பட்டு, தற்போது தேசத்தின் பாதுகாப்பு நிலவர விற்பன்னன் எனவும் கடை விரித்திருக்கிறார் எனப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக, ஸர்க்கஸில் வேலைவாய்ப்பு அவசியம் இருக்கிறது. நல்லதுதான்!
அவருக்கும், ‘அவர் தரவுகளுடன் தான் பேசுவார்’ என்று சொல்லிய உங்களுக்கும் வாழ்த்துகள். நன்றி!
March 22, 2019 at 11:57
இன்னொன்று: அவருக்குத் திறமையோ அறிமுகமோ இல்லாத துறைகளில் அவர் அட்ச்சிவுடுபவர் என இருமுறை ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறேன். ஆக, அந்தக் கதை தொடர்கிறது. இதில் என்ன ஆச்சரியம்?
ஆகவே, அவர் குற்றம் வாழ்க எனச் சொல்லி, நகைச்சுவைக்காக அவருக்கும் நன்றி தெரிவித்து, அவருக்குப் பிடித்தமாக, ஒரு பொறுக்கியாகவே தொடர்கிறேன்.
நன்றி.
March 22, 2019 at 11:23
What is wrong with Patchirajan’s opinion? Can you explain?
March 22, 2019 at 13:17
Sir, sorry. I do not want to waste anymore time on his half-baked opinions.
March 22, 2019 at 14:02
Sir, are you angry with Patchirajan or jealous of him?
March 22, 2019 at 15:45
ME?
Of course, I am jealous of HIM!
Because – I can never NEVER reach the depths of PAK, I agree.
It is my misfortune that I do not want to flog a dead arse. Thanks.
March 22, 2019 at 19:30
[…] பிஏகிருஷ்ணன் அவர்களிடம் எனக்கு ஏன் பொறாமைஎனக் கேட்கிறார்… காலத்தின் […]
August 30, 2019 at 08:01
[…] his rather erudite opinions on Hindi, to Indic Sciences & Technology to Bhavaprakaashana to… … Except when taking down […]
April 9, 2020 at 17:54
[…] […]
February 11, 2021 at 10:08
[…] […]