ஸெப்டெம்பர் 5 ஆசிரியர் தினம் என்றாலே…
September 5, 2018
…எனக்குக் கொஞ்சம் திகில்நடுக்கம்தான்.
–0-0–0-0–
பொதுவாக, என்னுடைய பழைய மாணவர்கள்(பாவப்பட்ட ஜந்துக்கள்தாம்!) எனக்கு இப்படியெல்லாம் எழவெடுத்த வாழ்த்துகளை அனுப்பமாட்டார்கள். ஏனெனில், வேலைவெட்டியில்லாமல் கண்டமேனிக்கும் சடங்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற வாழ்த்துமுதல்வாதத்தை நான் பொதுவாகவே விரும்புபவனல்லன் – ஆகவே தீய்த்துவிடுவேன் எனத் தெரியும்.
ஆனால், விசனத்துக்குரிய வகையில் புதுசுபுதுசாக சிலபல (சொற்ப எண்ணிக்கைதான்!) இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகிறார்கள். யாருடைய குஞ்சாமணியைப் பிடித்துத் தொங்கலாம் என – ஓடும்குஞ்சோட உறுகுஞ்சு வரும்வரையில் வாடிக்கிடக்கும் இம்மாதிரி நக்கு விடலைகளுக்கு ஒத்துவர, சாருநிவேதிதாதான் லாயக்கு, அவருக்குப் பரிந்துரைக்கலாம் என்றால் – அந்த ஆசாமி, தன்னுடையது கோவைக்காய் அளவில்தான் இருக்கிறது என ஒரு சோகமான ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார்… தேவையா?
http://charuonline.com/blog/?p=7131
பின்னர் “horizontal-ஆக உட்கார்ந்து(!)” டர்புர் என்றெல்லாம் கலைச்சொற்களை உபயோகித்து ஆங்கிலத்தை வாரிவழங்குகிறார், ஐயய்யோ!
எது எப்படியோ – வெறிபிடித்த வாசகர்கள் பிடித்துக்கொண்டு தொங்க இடஒதுக்கீடு தர, ஒரு போராளிக்கு இவ்வளவு தயக்கமா? கோபம்கோபமாக வருகிறது.
…இந்த இளைஞர்களுக்கு இப்படி அதீதமாக எப்படித்தான் புல்லரிப்பு ஏற்படுகிறது என்றே எனக்குப் புரியவில்லை – இந்த மசுர்க்கூச்செறிதலுக்குப் பதிலாக ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கடா என்றால் ஒரு எதிர்வினையுமில்லை.
எது எப்படியோ – முடிந்தவரை என் தொலைபேசி எண்ணை, பிறருக்குக் கொடுக்க மிகவும் தயங்குபவன் – இருந்தாலுமேகூட, இவர்கள் மின்னஞ்சல்கள் அனுப்பியே என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவைக்கிறார்கள்.
https://twitter.com/othisaivu/status/1037196649473495041
‘ஆசானே’ என்றெல்லாம் கூச்சம் தரும்படிக்குக் கடிதம் எழுதுகிறார்கள்! படுகேவலமாக இருக்கிறது. இப்படியெல்லாம் விளிக்கப்பட நான் என்ன பாவம் செய்தேன் அல்லது எழுதிக் கிழித்தேன் என்றே தெரியவில்லை!
தவறாக எனக்குப்போய் இப்படி அனுப்புகிறார்களோ என ஒன்றுக்கு இரண்டுமுறை (Urination two times – என்னருமை எஸ்ராவுக்கு நன்றியுடன்!) சரிபார்த்தாலும், என்னையே கிள்ளிக்கொண்டாலும் – என் உடல்தான் கண்டமேனிக்கும் ரணமாகிறது, என்ன செய்ய!
அதிமனித வழிபாடு செய்தே ஒழிந்தவர்கள் நம் செல்லத் தமிழிளைஞர்கள் – ஒன்று நடிகர்கள், இல்லை அரசியல். இல்லை ஊடகப்பேடிகள் இல்லையென்றால் தனித்துவமாக உணர, பேராசான்கள். இல்லை வேறு ஏதாவது வேலைவெட்டியற்று கும்பல் சேர்க்கும் மசுர்ப்பிடுங்கிகள்.
போங்கடா, சும்பனுங்களா.
-0-0-0-0-0-0-
இன்று காலை ஒரு தொலைபேசிக் குறுஞ்செய்தி. வேறென்ன – அதேஅதே!
இந்த இளைஞனுக்கு வயது 22/23 இருக்கலாம்; பத்துவருடம் முன் என் மாணவன். அதற்காக, இப்படியா பழிவாங்குவது?
அனாமதேயமாக அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்திக்குப் பதிலாக (அவனுடைய பெயரை நான் பதிவுசெய்துகொண்டிருக்கவில்லை!), பணிவாகக் கேட்டேன் – ஆங்கிலத்தில் தான்: Dear Sir (or Ma’am), dunno who you are. Please identify yourself.
பதிலுக்கு – அவன் இரட்டைப் புண்பட்டுவிட்டதால் எதிர்வினை: Sir, I am sad that you have forgotten me! I am your ex-student. Now a girl. Upset that you think I could be a man.
என்னடா இது விபரீதம் என்று கேட்டால் ஏதோ ஜெண்டர்ட் ப்ரானௌன் என்று ஏதோ உளறினான்; ஆணின் உடலில் ஒரு பெண்ணாக இருக்கிறேன் என்றான். ஆகவே நீங்கள் என்னை பெண் என்றுதான் விளிக்கவேண்டும் என்றான். எனக்கு ஒர்ரே கோபம். நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள், இதில் எனக்கு ஒழுக்கரீதியான பிரச்சினை ஒன்றுமில்லை; பிறத்தியாருக்கு அதீத உபத்திரவம் கொடுக்காமல், தேவையற்ற வன்முறையில் ஈடுபடாமல் என்னவேண்டுமானாலும் செய்துகொள் – ஆனால் நீ என்னை பலவந்தம் செய்யமுடியாது என்றேன்.
அதற்கு அவன் – “என்னை நீங்கள் பெண் என்று கருதவேண்டும் என நான் உரிமை கோர எனக்குச் சுதந்திரம் இருக்கிறது. இல்லையேல், பொதுவாக என்னை ze எனக் குறிப்பிடலாம்!”
நான் – “நீ இப்படி உரிமை சுதந்திரம் என்றெல்லாம் பேத்தினால் – அதேபோல எனக்கும் அமோகமாகப் பேத்த உரிமை உண்டல்லவா? நான் சொல்வதையும் பேத்தல் என நினைத்துக்கொள், ஆளைவிடு. நன்றி!”
அவள் – “நீ ஒரு ஆணாதிக்க வெறியன்”
நானா உன்னிடம் வந்து வம்புவலித்தேன்? நீயே என்னிடம் வந்துவிட்டு பேத்துகிறாய். ஓட்றா என்றேன்.
வெறுப்பு. ஒருவேளை ஓட்றீ எனச் சொல்லியிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பாளோ என்ன எழவோ…
வரவர இந்த அரசியல் சரிகமபதநி விவகாரங்கள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கின்றன எனத்தான் படுகிறது.
நான் அவளல்ல. ஆனால் அவள் அவன் தானோ? ஹ்ம்ம்…?
மின்னஞ்சலில் ஒரு தளத்தின் முகவரியை (http://www.transstudent.org/pronouns101/) அனுப்பியிருந்தான்/ள். அதிலிருந்து…
https://twitter.com/othisaivu/status/1037248664488501248
ஆக – இந்த எழவையெல்லாம் மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் – அம்மணிகளாக இருக்கக்கூடும் அம்மணர்களே! அம்மணர்களாக இருக்கக்கூடும் அம்மணிகளே – என்னைத் தயவு செய்து மன்னித்துவிடுங்கள், சரியா?
சுபம்.
September 6, 2018 at 16:57
I strongly condemn your attack on our Thalaivar Charu! He can sit horizotally and can sleep vertically! Ithanai naalai vilimbile thongi innum vizhamal irupavar engal thalaivar. If you had any knowledge of world literature, you would have known that this is very common in Latin America and Uzbekistan.
If you want to perform any prayachittam for the mahapavam that you have done, do parayanam of ‘zero degree’ for 108 days
September 6, 2018 at 17:05
ayyo saar! zero degree??
that would be a third degree torture! :-(
please call for emergency ambulance service #108!
saar, are you my well wisher or you wish that I drop dead into a well?
HELP!!
September 6, 2018 at 18:30
Ok Saar!
‘Zero degree’ venam.
Naveena Kanni theevu (venmurasu) ok va? 108 dhadavai venam, ore oru murai podhum!
September 6, 2018 at 19:45
Now, saar – that’s a dangerous territory and am no sinbad the sailor either – though I have sinned badly otherwise.
I was quite hopeful when it started off, but after a few episodes/posts I felt that we have to put up with it till it ends – all because of this darn freedom of speech and expression, dammit.
O what to do.
September 7, 2018 at 11:02
Shabash, the punishment should fit the crime :)