இரான் நாட்டில் சங்ககால ஆதிப் பெரியார் கண்டுபிடிப்பு!
July 29, 2022
சங்ககாலத்திலேயே ஆதிப்பெரியார் இருந்திருக்கிறார்கள்! இது கடவுளுக்குச் சத்தியமாக உண்மை!
சான்று:
மேற்படி அகழப்பட்ட, பாடம் செய்து பாதுகாக்கப் பட்டிருக்கும் பெரியாரை, இக்காலத்தில் தனித்தமிழ் தேசியவாதிகளால் இகழப்படும் பெரியாரின் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்…
திராவிடம் வெல்லும்!
இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, அவருடைய ஈவெரா குறுக்கப் பெயரில், ரா என்பது இராமசாமி என்பதல்ல, மாறாக அது இரானியசாமி தான் என்பது தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
அதைவிட முக்கியமாக, திராவிடர்களே ஆரியர்கள்தாம் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது.
ஆதித்திராவிடர்களே ஆதிஆரியர்கள்தாம் என்பதும் தான்.
ஆகவே, தமிழகத்தின் வேர்ல்ட்ஃபேமஸ் குடிசைத் தொழிலான ‘ஆரிய பூச்சாண்டிவாதம்’ பாதிக்கப் படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கி வீரமணி அவர்கள் கிக்கீ எனச் சிரித்துக்கொண்டே, தம் கழகத்தை, ‘ஆரியர் கழகம்’ எனப் பெயர்மாற்றம் செய்திருக்கிறார்.
மேலதிகமாக, அவர்கள் கொடியின் நிற-வடிவமைப்பையும் மாற்றியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
படிப்படியாக எங்கள் கீழ்ப்படி லட்சியத்தை நோக்கி முன்னேறுவோம் எனப் புன்முறுவல் பூத்தார்.
உற்சாக மிகுதியில் “ஆர்யதிராவிட் மாதா கீ ஜெய்!” முழக்கமெழுப்பினார்.
எல்லாம் நல்லதற்கே!
மேலே படிக்க: