பராக்கிரமம் மிக்க அடலேறு, மரியாதைக்குரிய மானமிகு மாமனிதர், மகாமகோ பேராசிரியர் இளைஞக்கருப்பனார்: சில குறிப்புகள்

February 6, 2015

ஒரு மாஜி துணை விரிவுரையாளரே, பெரும்பேரும்புகழும் பெற்ற பேராசிரியராகத் தன்னைக் கருதிக்கொண்டு, வெட்கமில்லாமல் பலரால் அப்படியே விளிக்கப்பட்டுக்கொண்டு கடந்த பல மாமாங்கங்களாக, ஒரு திராவிட இயக்கத் தலைவராய், முதிர்ந்த வயதில், மகாமகோ பெருமையுடன் பவனிவரும்போது….

… ஒரு இப்போதைய ‘அப்பாவி‘ இளைஞன், திராவிட இயக்க மறவன், சொல்லின் சிங்கம், ஜால்ராக்களின் ஜிங்கம், பப்பரப்பா பத்திரிகையாளர்களில் பர்க்காதத்,  சினிமா விமர்சனத்தில் வின்சென்ட்கேன்பி, புரட்சிக்காரர்களில் சேகுவேரா, பிரபாகரன்களில் புலி, புளிகளின் கொட்டை, காஃபியில் நரசூஸ், காப்பியின் ஸெராக்ஸ் —  பிற்காலப் பேராசிரியனாய், பின் நவீனத்துவத் திராவிடப் பேராசானாய் – 2040 வாக்கில் அறியப்படமாட்டானா என்ன?

ஏனெனில், நம் தமிழ்த்திருநாட்டில் எப்போதுமே ஜனரஞ்சக நாயகர்கள் தாம் வழிகாட்டுபவர்களாக, சமூகத்தை மேல் நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? :-(

… இப்போது நீங்கள் கேட்கலாம், யாரிவர் – புதியதாக இளைஞக்கருப்பனார் எனக் கிளம்பியிருக்கிறார் என்று. ஏற்கனவே பலமுறை இவரைப் பற்றி எழுதியிருந்தாலும் மறுபடியும் இந்த விஷயம்: ‘யுவகிருஷ்ணா’ எனும் இவருடைய பெயரில் (இதுவே ஒரு புனைபெயர்தான் என அறிகிறேன் என்றாலும்), ஆறிய ஆரியம் தூக்கலாக இருப்பதால், அது திராவிடத்தமிழ்ப் படுத்தப் பட்டு அதன்பின் திராவிட மரியாதைக்குரிய ‘ஆர்’ விகுதி சேர்க்கப்பட்டு இளைஞக்கருப்பனார் என உருமாறியிருக்கிறது என அறிக.

-0-0-0-0-0-0-

மறுபடியும் மறுபடியும் இடங்கையால் புறம்தள்ளத்தக்க இம்மாதிரி இளைஞர்களைப் பற்றி விலாவாரியாகவும் சலிக்கவைக்கும்படியும் எழுதவேண்டாம் என்றால் — விடவேமாட்டேனென்கிறார்கள், இம்மாதிரி இளைஞர்களின் அறியாமையால் ஆட்கொள்ளப் பட்ட வாசகக் குஞ்சாமணிகள்.

நானும் வெட்கமற்று, சமனநிலையற்று எதிர்வினையாற்றிகொண்டிருக்கிறேன்.  படுகேவலம். என் அறிவளவில்(!) கொஞ்சம் 10% இருந்தால்தான் பொருதவேண்டும் என்று பொதுவாக நான் நினைப்பதெல்லாம், இந்த இளைஞக்கருப்பனார் தர ரசிகர்களுக்கு ஒத்துவராது. ஆகவே இந்த சதவிகிதத்தை 0.0000000000000001% என மாற்றுகிறேன். (இருந்தாலும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது – இந்த ஐம்பதுபேர்களில், ஒரே சமயத்தில் என் எழுத்தையும்(!) அவர் இலக்கியத்தையும் படிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது – ஆனால் நான் என் எழுத்தையும், அவ்வப்போது !நிசப்தத்தையும் படிப்பதுபோலத்தானே இது?)

கீழேவருவது, இளைஞக்கருப்பனார் அவர்களுடைய ‘ரசிகர்’ ஒருவர் (என நினைக்கிறேன் – ஆனால் மூன்று மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பியிருக்கிறார்!) எழுதியிருப்பதன் சாராம்சம் – ஏச்சுகளை, எச்சல் தெறிப்புகளை, ஜாதிவெறிக் கொச்சைகளைக் கடாசி விட்டேன் – ஏனெனில் யார்மனமும் புண்பட்டுவிடக்கூடாதல்லவா? ;-)

யுவாவின் எழுத்துகளில் என்ன காப்பி? அந்த பதிவுல என்ன காப்பி செஞ்சிருக்கார்?   நீ மேதாவியா? நீ எவ்வளவு காப்பி செய்யறேன்னு லிஸ்ட் கொடுக்கவா?

சோகம் என்னவென்றால் – அரைகுறை எழுத்தாளனின் அவலமே, இம்மாதிரி சோப்ளாங்கிகளை வாசகர்களாகப் பெற்றிருப்பதுதான். ஆசிரியன் எவ்வழி, வாசகன் அதிலும் அரைகுறை வழி. இந்த அற்பர்கள், ஒதுக்கவேண்டியவைகளைப் பூஜிப்பவர்கள் ஜால்ரா போடும் வரை, அந்த ஜால்ராக்களின் பேரோசையில் ஆ-சிறியன் புளகாங்கிதம் அடைந்துகொண்டேயிருக்கும் வரை – அவனுக்கு விமோசனமே கிடையாது.

ஆமென்.

என் நிலைப்பாடு:

1. நான் இளைஞக்கருப்பனார் அவர்களைப் பற்றி வதந்தி பரப்பவில்லை – அவதூறு செய்யவில்லை; தரவுகளின் அடிப்படையில் அவர் எழுத்தை, மறுபடியும், படுகேவலமான மோசடி என நிரூபிக்கிறேன் – கவலையே வேண்டாம். முன்னேபலமுறை இதனைச் செய்திருக்கிறேன், பயிற்சி இருக்கிறது. (இனிமேலும் இம்மாதிரி என் நேரத்தை வீணடிக்க முடியாது; உங்கள் அபிமானத்துக்குரிய ஆசிரியர் திருந்தவே போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் பாடு அவருக்கு)

2. தகவல் உளறல்களுக்கு அப்பாற்பட்டு, அவருடைய தமிழில் ஆயிரம் நகைக்கத்தக்க அடிப்படைப் பிரச்சினைகள், கந்தறகோளத் தவறுகள் –  ஒருமை-பன்மை எழவுகளைக் கூடச் சரிபார்க்காத விட்டேற்றி மனப்பான்மை. (கவனிக்கவும்: என்னுடைய தமிழும் அதிசுத்தமானது என்று இல்லாவிட்டாலும், நான் என்னை ஒரு எழுத்தாளனாகக் கருதுவது இல்லை, உங்கள் ‘யுவா’ போலல்லாமல்; மேலும், தவறுகளைச் சுட்டிக்காட்டினால், என்னை நான் திருத்திக்கொள்பவன்)

3. நீங்கள் தாராளமாக, சூட்டோடுசூடாக உங்கள் ‘லிஸ்டைக்’ கொடுக்கலாம். நான் எங்கிருந்தெல்லாம், இரக்கமேயில்லாமல் சுடுகிறேன் என்றறிய எனக்குமே ஆவலாகவே இருக்கிறது. 8-)

சரி.

-0-0-0-0-0-0-0-

வாசக மாக்களுக்கு ஒரு நற்செய்தி: பீலாவின் உடன்பிறப்பான யுவகிருஷ்ணனாரின் காப்பிக்கடை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது…

அவருடைய  ‘சரோஜாதேவி‘க்காக அலையும் அவருடைய வாடிக்கையாள வாலிப வயோதிக அன்பர்கள் அவசியம் அவர் தளத்திற்கோ அலுவலகத்திற்கோ சென்று ஸெராக்ஸ் செய்து பின்னடிக்கப்பட்ட அனைத்துவிதமான கட்டுரைகளையும் கருத்துகளையும் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு, உடலில் மசுர் இருக்கும் பகுதிகளிலெல்லாம் மொட்டையடித்துக் கொண்டு அலகு குத்திக்கொண்டு காவடியெடுக்கலாம்.

அவரிடம் கூடப் போகவேண்டாம். ஒரு கணினி நிரலை எழுதி – அதன்மூலமாக எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உடன்பிறப்புத் திலகம் யுவகிருஷ்ணனார்தரக் கட்டுரை எழுதவைக்க முடியும். ஆக, தகவல்களுக்கு ஏங்கும் நீங்கள், என்னையேகூட அணுகலாம். (வேண்டாம். சும்மா சொன்னேன்!)

…ஏன் இவர் அதலபாதாளத்திலுள்ள ஒரு சேற்றுக்குழியில் தான் இருப்பேன் எனத் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்? கொஞ்சம்கூட மேலெழும்ப ஆசையே இல்லையா? மனிதன் ஒரு தடவை திருடுவான், இரண்டுதடவை திருடுவான் – ஆனால் பொழுதன்னிக்கும் திருட்டுத் தொழிலை மட்டுமே – கமுக்கமாகக் கூட அல்ல – குண்டு தைரியத்துடன் தொடர்ந்து பகிரங்கமாகச் செய்து வருவேனென்றால்? இதுதான் திராவிட இயக்கம் தன் இளைஞ அடலேறுகளுக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் அறமா?

இந்த அழகில், இந்த இளைஞ்சர் –  ஜெயமோகன் பற்றியும் விமலாதித்தமாமல்லன் பற்றியும் – கொஞ்சம்கூடக் கூச்சமேயில்லாமல் எரிச்சல்கள், வதந்தி பரப்பல்கள். திட்டிக் கட்டுரைகள் பல வடிக்கிறார், கருத்துதிர்க்கிறார். இவர் இருக்கும் அதலபாதாள, கிடுகிடு பள்ள மரியானா ட்ரென்ச்  ஆழத்துக்கு, பல்லாயிரம்  ஏணிகள் வைத்தாலும் கூட எட்டிப் பார்க்கக் கூடவேமுடியாத உயரங்களில்  இருப்பவர்களின்மீது கல்லெறிவதற்கு — ஒரு குயுக்தியும் அளவுகடந்த அற்ப விடலைத்தனமும் வேண்டும்தான்!

ஒருவரையும் 100% நேர்மையானவர் என்று கூறமுடியாது என்றாலும் – இரட்டை வேடக்காரர்களையாவது தாங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர் போடுவது அதற்கு மேற்பட்ட முட்டை வேடம்.

இப்படியா ஒரு இளைஞன், அவன் ஒரு திராவிட உடன்பிறப்பாகவே இருந்தாலும்கூட, அசிங்கமாகச் சீரழியவேண்டும்?

காப்பியடிப்பதையும் தப்புத்தப்பாகச் செய்திருக்கிறார்.

சரி.

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஒரு அண்மைக்கால எடுத்துக்காட்டாக – இளைஞக்கருப்பனார் அவர்களின் ‘இந்தியாவின் முதல் பெண் வக்கீல்‘ எனும் அதிஅற்புதக் கட்டுரையைச் சிறிது அலசலாம். :-(

என்னுடைய பிரச்சினை என்னவென்றால் – அவருடைய கட்டுரையின் பாடுபொருளான கொர்னீலியா ஸோரப்ஜி அவர்களைப் பற்றிய ஒரு புத்தகத்தையாவது, நான் முழுவதும் படித்திருக்கிறேன். இது ஷுபர்ணோ கூப்து அவர்கள் எழுதியது — இதனைப் பற்றிய (+ கொர்னீலியா ஸோரப்ஜி அவர்களைப் பற்றிய) ஒரு சரியான விமர்சனம் மனுஷி இதழில் வெளிவந்திருக்கிறது.

இந்த சுட்ட கட்டுரை பற்றிய என் விமர்சனம்: வழக்கம்போலவே ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், சிரத்தையே இல்லாமல் எழுதப் பட்டிருக்கிறது. பல வதந்திகள் பரப்பப் படுகின்றன.  மிகமுக்கியமாக – இதன் பலபகுதிகள் அட்டை/ஈயடிச்சான் காப்பிகள்! ‘தினகரன் வசந்தம்’ பகுதியில் ஆசிரியர்கள் – அடிமுட்டாள்களும் சோம்பேறிகளும்தான். இதன் பாவப்பட்ட திராவிட வாசகர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

-0-0-0-0-0-0-0-

அவருடைய கட்டுரையின் சில வரிகளைப் பற்றிமட்டும் கீழே என் விமர்சனத்தோடு கொடுத்திருக்கிறேன்.

 இப்படி முத்தாய்ப்பாக ஆரம்பிக்கிறார் அவர்:

“நாடு சுதந்திரம் வாங்கியதிலிருந்து எத்தனையோ ‘முதல்’ பட்டியலிட்டிருக்கிறோம். இந்தியாவின் முதல் பெண் வக்கீல் யார் என்பதை மட்டும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதற்குப் பின்னணியில் ஓர் ‘அரசியல் உள்குத்து’ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். “

இதில் அவர் ஆரிய/காந்திய/ஆணாதிக்க சதி இருக்கிறது எனச் சொல்லவருகிறார். அப்படி என்ன ‘உள்குத்து’ என விவரமாகத் தெரிவித்தால், மேலே இந்த உதவாக்கரை சர்ச்சையைத் தொடங்கலாம். ஆனால் அவரால் இது முடியாது – ஏனெனில் இது ஒரு அப்பட்டமான, கமுக்கமான வதந்தி பரப்பல். என்ன அற்பத்தனம்!

பின் சில ‘முதல்முறையாக டட்டடா டட்டடா‘ என சில விவரங்களைச் சுட்டு சூட்டோடுசூடாக அடுக்கி, மறுபடியும்!

“இவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்றவரின் பெயர் ஏன் இந்தியாவில் அவ்வளவாக உச்சரிக்கப்படுவதில்லை. இவரைப் பற்றி ஏன் நாம் முன்பே அறிந்திருக்கவில்லை. அதுதான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டோமே. ‘அரசியல் உள்குத்து’.”

சரியான பப்பரப்பாக்காரர்தான்அவர் – என்னவென்று சொல்லாமலேயே திராவிடத்தனமான திராபைப் பகீர்ச்செய்தி!

கிறிஸ்துவ பார்ஸி கலப்புக் குடும்பத்தில் 1866ல் பிறந்தவர் சொராப்ஜி…

அப்படியா என்ன? கொர்னீலியாவின் தகப்பனார் ஒரு க்றிஸ்தவர் – அதுவும்   மதமாற்றிக்கொண்டவர் – சுயவெறுப்பால் பீடிக்கப்பட்டு மதவெறிகொண்டவர். அவர் தாம் பார்ஸீயல்லர் எனப்பிரகடனம் செய்தவர் – தன் வேர்களை அறுத்தவர். தன் வேர்களைக் குறித்த போதாமையுணர்ச்சி கொண்டவர்.  ஆகவே, அவற்றை உரத்துக் கேவலப்படுத்தியவர். கொர்னீலியாவின் தாய் – ஒரு மதப்பிரசாரகக் க்றிஸ்தவ வெள்ளைத் தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட இந்தியப் பெண், கொர்னீலியா – ஆகவே கலப்புக்கிலப்புக் குடும்பத்தில்தான் பிறந்தவர்! அப்படித்தானே?

பீலா வுடுகிறார்:

“கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெண்களுக்கு கல்வியெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சுதந்திரம். வெகுசில பெண்களுக்கு மட்டும் அதிகபட்சமாக வீட்டிலேயே எழுதப் படிக்க கற்றுத் தருவார்கள்.”

இதற்கான தரவுகள் என்ன? அப்போதைய – அதற்கும் முந்தைய கல்விமுறையென்பது என்ன? பிரிட்டானிய, மிஷனரிய சக்திகளால் அழித்தொழிக்கப்பட்ட கல்விமுறையிலிருந்து பெண்களும், மற்றவர்களும் கல்வியுரிமையற்று இருந்தார்களா? கல்வி பெரும்பாலோருக்கு மறுக்கப்பட்டிருந்ததா? ஸம்ஸ்க்ருதம் பயில மக்கட்திரளில் சிலருக்கு மட்டுமேதான் வாய்த்ததா?  விக்டோரிய ஒழுக்கமுறைகளுக்கும், சுதந்திரமாக இருந்த பாரதப் பண்பாடுகளுக்கும் என்ன தொடர்பு?

ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல் – ஏண்டா இப்படி பரப்புரைகளா வாந்தியெடுத்தே இந்த திராவிடர்கள் காலம்கழிக்கிறார்கள்?

இப்படி ஒரு தடாலடி:
“பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் இவரை சட்ட வல்லுனராக பணியாற்ற அனுமதிக்க தயங்கினார்கள். ஏனெனில் இந்தியாவில் ‘பர்தானஸின்’ (purdahnashins) என்கிற கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்தது. அதாவது பெண்கள், அந்நிய ஆண்களுக்கு மத்தியில் பணியாற்ற மத ரீதியான தடை இருந்தது.”

ஆனால், இதற்கென்ன தரவு?

பின்னர் சில புள்ளியியல் விவரங்கள், ஆண்டுகள் இன்னபிற. பின்னர் ஒரு புத்தக ஜாபிதா! இதில் ஒரு எழவையும் நம் இளைஞக் கருப்பனார் படித்திருக்கவேமாட்டார் என நினைக்கிறேன்!

இந்த அழகில் இப்படியொரு புளகாங்கிதம்!

நூல்களின் தலைப்புகளை பாருங்கள். இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானவர் இவர் என்பது தெரியும்.

:-)))) தலைப்புகளை மட்டும் காப்பியடித்துப் படித்துவிட்டால் போதுமல்லவா? ;-)

ஏனெனில் அவர் வரிக்குவரி – காப்பியடித்திருக்கும் இணையப் பக்கங்களில் ஒன்று – விக்கீபீடியா!  ஹஹ்ஹஹ்ஹா!! – நீங்களே அதனைப் படித்து – விக்கியையும் அதனை நக்கியையும் பொருத்தித் தொகுத்துப்பார்த்துப் புரிந்துகொள்ளுங்கள்!

பிரச்சினையென்னவென்றால் – இப்பக்கத்தில் இருக்கும் தவறுகளையும்கூட அவர் ஈயடிச்சான் செய்திருப்பதுதான்! மேலதிகமாகத் தவறுகளையும் செய்திருப்பதுதான்!

ஒரு எடுத்துக்காட்டாக:

விக்கீபீடியா: Sorabji also wrote two autobiographical works entitled India Calling (1934) and India Recalled (1936). It is acknowledged that she contributed to Queen Mary’s Book of India, 1943, which had contributions from such authors as T. S. Eliot and Dorothy L. Sayers.

நக்கீபீடியா: Indian calling (1934), India recalled (1936) –சுயசரிதையின் இரு பாகங்கள். இது தவிர்த்து Queen mary’s book of India நூலுக்கு பிரபல எழுத்தாளர்கள் டி.எஸ்.எலியட், தோரத்தி சாயர்ஸ் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
:-)

1.  இவை சுயசரிதையின் இரண்டுபாகங்கள் அல்ல. இவை தனித்தனிதான்.

2. Queen mary’s book of India அல்ல அந்தப் புத்தகத்தின் தலைப்பு. அதன் சரியான தலைப்பு – Queen Mary’s Book for India; மேட்டிமைத்தனத்துடன் – இந்தியாவை முன்னேற்றியே தீரவேண்டிய வெறியுடன் (ஏனெனில் – மேதகு கொர்னீலியா அவர்கள் ஒரு மதவாதி – சிலபல நற்பணிகள் செய்திருந்தாலும், கமுக்கமான மதமாற்றத்திற்காக வெகுவாகப் பாடுபட்டவர். பாரதத்தை – கீழானதாக வர்ணித்து மேடைப்பேச்சுகள் பேசியவர். தொடர்ந்து கண்டமேனிக்கும் கருத்துதிர்த்து அவதூறு பரப்பியவர்) எழுதப்பட்ட புத்தகம் இது. இப்புத்தகத்தையும் நான் படித்திருக்கிறேன் – கேதரீன் மேயோ எழுதிய ‘மதர் இந்தியா’ புத்தகத்தைவிட மிகக்கேவலமான நடையில் – பலரும் இந்தியாவை வசைபாடியிருக்கும் புத்தகம் இது. இங்கிலாந்து அரசியின், அரசின் புகழ்பாடியாக இருந்து – அதனிடம் இருந்து வேண்டுமளவு உதவிகள் வாங்கிக்கொண்ட கொர்னீலியா – அவர்களுக்குச் செலுத்திய நன்றிக் கடன். தன்னுடைய கடைசி இருபத்தைந்து வருடங்களை கொர்னீலியா – இங்கிலாந்தில் துதிபாடிக்கொண்டேதான் கழித்தார்!

3. கொர்னீலியா ஆசிரியராக (‘எடிட்டர்’) இருந்து வெளியிடப்பட்டது இது – இலியட், ஸாயர்ஸ் போன்றவர்கள் கூடவெல்லாம் இணைந்து பணியாற்றவெல்லாம் இல்லை. அவர்கள் கட்டுரை கொடுத்தார்கள் – இவர் படித்து அவற்றை ஏற்றுக்கொண்டார். உண்மையில் இலியட் கட்டுரைதான் இவற்றில் கொஞ்சமேனும் நன்றாக இருக்கிறது.

4. என் வாதம் என்னவென்றால் – டிஎஸ் இலியட் என்பவர் – ஆணா பெண்ணா திருநங்கையா திருமதிநம்பியா என இளைஞக்கருப்பனாருக்குத்  தெரியாது.  இருந்தாலும் விக்கிபீடியா சொல்லிவிட்டதே! டிஎஸ் எலியட் என ‘தெரிந்தாற்போல’ பெயரை உதிர்க்கலாமே என்கிற அல்பாசைதான்! சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுட்லாமே என்றுதான்!!

… சரி. இப்போதைக்குப் போதும். திராவிட அடிப்பொடிய கொசுத்தொல்லையைத் தாங்கமுடியவில்லை. :-(

ஆனால்… சில காட்சிகள் மாறவே போவதில்லை. மீட்பும் இல்லை. சலிப்பாக இருக்கிறது.

குறைந்த பட்சம், என் செல்லமான இளைஞக்கருப்பனார் அவர்கள், தம் வாசகக் குளுவான்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புவதையாவது தவிர்க்க முயற்சிப்பாரா? இனிமேலாவது??
–0-0-0–

மேலும் சில பதிவுகள் – இளைஞக்கருப்பனார் அவர்களின் தொடரும் லீலைகளைக் குறித்தவை:

12 Responses to “பராக்கிரமம் மிக்க அடலேறு, மரியாதைக்குரிய மானமிகு மாமனிதர், மகாமகோ பேராசிரியர் இளைஞக்கருப்பனார்: சில குறிப்புகள்”

  1. Venkatesan Says:

    அவர் பெயரைக் கூட இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. என்னாலானது அந்தப் புத்தகத்தின் எந்த தலைப்பு சரி என கூகுளாண்டவரிடம் கேட்பது மட்டுமே. நீங்கள் சொல்வதே சரி. விக்கிபீடியா தவறாக சொல்லி உள்ளது.

    இந்த துணுக்கு என்ற வகை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள துணுக்கு தொகுப்பு போல. இந்திய அரசியல், இந்திய சுதந்திரப் போர், இலக்கியம், விண்வெளிப் பயணம், மலையேற்றம் என பல விஷயங்களை தொடும் இந்த துணுக்கு தொகுப்பை எழுதும் முன் இவை பற்றி எல்லாம் விரிவாக படித்திருக்க வேண்டும் என்றால், பல காலம் ஆகுமல்லவா? ஒரு துணுக்கு எழுத ஒரு வருடம் பிடித்தால், துணுக்கு எழுத்தாளன் தலையில் துண்டு போட்டு உட்கார வேண்டியதுதானா?

    “இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு

    இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத்

    நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர்

    விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா

    எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் இந்தியர் அவதார் சிங் சீமா”


    • அய்யா வெங்கடேசன்,

      துணுக்கு எழுத்தாளனின் கொட்டையை – அவன் துணுக்குக்கான தரவுகளைக் கேட்டு, யாரும் நசுக்குவதில்லை. துணுக்கர்களினால் துணுக்குறுபவர்கள் இல்லை. அவர்கள் மதிப்பு அவ்வளவுதான்; பஜ்ஜி கட்டிக்கொடுத்த காகிதத்தைக் கசக்கி விட்டெறிவது போல்தான் – அவர்களும் அவர்கள் எழுதும் துணுக்கும்.

      ஆனால் – யுவகிருஷ்ணா அவர்களுக்கு தப்பும்தவறுமாகக் காப்பியடித்து எழுதினாலும், தான் ஒரு சுவாரசியமான பத்தி எழுத்தாளன் போலவும், தான் ஒரு திராவிடன்(!) என்பதால், தன்னை நசுக்குகிறார்கள் என்றெல்லாம் பேதலிப்பு. யார் தான் எழுதுவதைப் போய்ப் படித்துச் சரிபார்க்கப் போகிறார்கள் என எண்ணம். ஒன்றையும் படிக்காமல், தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்து கருத்துக் குசுக்களையும் வதந்திவாந்திகளையும் வெளியனுப்பிய வண்ணம் இருக்கிறார். மேலதிகமாகக் குயுக்தியும் வன்மமும் பொறாமையும்.

      மேலும் (எனக்கு)அவருடைய ரசிகக் குஞ்சாமணிகளின் தொல்லை. எனக்குச் சகிப்புத் தன்மை குறைவு – ஒப்புக்கொள்கிறேன்.

      இளைஞக்கருப்பனார் ஒரு அற்ப துணுக்கு எழுத்தாளராக, தன் அளவைப் புரிந்துகொண்டு அதலபாதாளத்துக்கும் அதலபாதாளத்துக்குச் சென்றால் அதனை வரவேற்பவனே நான் தான்!

      குறிப்பு: ஆனால், இவர் ஒருவர்தான் இப்படியென்றும் இல்லை. பலர் இருக்கிறார்கள். நமது புளகாங்கிதத்துக்கு அளவேயில்லைதான்!

    • Venkatesan Says:

      துணுக்கர்களை அவ்வளவு அற்பமாக நான் கருதவில்லை. பச்சேந்திரி பால் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவதார் சிங் சீமா பற்றி நான் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. அந்த விதத்தில் நான் எழுதிய துணுக்கு எனக்கு ஒரு புதிய தகவலை தருகிறது. எவரஸ்ட் மலையேற்றம் பற்றி நூல்கள் படிக்க தொடங்க இந்த துணுக்கு கூட தூண்டுகோலாக இருக்கலாம்.

      வதந்தி பரப்புதல், பொதுப் புத்தி கருத்துக்களை உண்மை போல எழுதுவது, குயுக்தி, வன்மம், பொறாமை போன்றவை குற்றம்தான். ஒரு துணுக்கன், சுவாரஸ்யம் என்பதனால் கவரப்பட்டு, வதந்தி பரப்பக் கூடும். ஆனால், அவனிடம் வன்மம், குயுக்தி, பொறமை போன்றவை இருப்பதில்லை.

      யானைக்கு இடமிருக்கும் உலகில், எலிக்கும் இடமிருக்கிறது. ஆய்வாளர்களுக்கு மத்தியில் துணுக்கர்களுக்கும் இடம் உண்டு.

      துணுக்கு போற்றுதும்! துணுக்கர் போற்றுதும்!


      • உங்கள் கருத்துக்கு உடன்பட்டு கட்டையேறுகிறேன்.

        பச்சேந்திரி பால் என்பது முந்திரி பச்சையாக இருக்கும்போது அதனை நசுக்கி, பசுவின் பாலில் கலந்து அதனுடன் பனங்கல்கண்டு சேர்த்து அருந்தப் படுவது. இது இந்திரியங்களை வீரியம் அடையச் செய்யும். இதனைப் பற்றி நிக்குமா நிக்காதா நிகண்டுவில் ஒரு பாடல் இருக்கிறது.
        — ‘துணுக்கு’ துண்டன்.

        அவதார் என்பது ஒரு படம். சிங் என்றால் பாடு. சீமா என்றால் ஒரு பண்டமிழ் நடிகை. ஆகவேதான் அவதார் சிங் சீமா என்பவர் திரைப்பட எவரெஸ்ட் உச்சத்திற்கு ஏற முடிந்தது. ஆனால் பாவம். அவரால் எவரெஸ்டில் இருந்து இறங்க முடியவில்லையாம். ஆகவே எவரெஸ்ட் இன் பீஸ்.
        — சுங்கநல்லூர் ‘துணுக்குச் சிற்பி’ சும்பன்

        துணுக்கே துணை! வெற்றித் துணுக்கு!! வீரத் துணுக்கு!!!

        துணுக்கர்கள் புண்பட இடம் கொடேல்!

        ஆமென்.

  2. Prabhu Says:

    Here’s what Aravindan Kannaiyyan (Contrarian) had to say about this guy for his stupid article on reservations.

    “யுவ கிரிஷ்ணா (லக்கி லுக்) அவர்கள் சினிமா நடிகையின் கவர்ச்சிப் பற்றி எழுதுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியவர். கல்விப் பற்றியெல்லாம் அவர் எழுதுவது என்பது குருடன் தாஜ் மஹாலை வர்ணிப்பதுப்போல். ப்ர்யாமணியின் மார்பு, அனுஷ்கா தொப்புள் என்று எழுதிக் கொண்டிருக்கும் தி.மு.க அல்லக்கைக்கு யார் MBBS படித்தால் என்ன?
    In 2013 the number of OC candidates selected for PG out of 200 seats is……..(take a wild guess)………….. a grand total of 1. (check the DME list for July 1st and July 2nd in http://www.tn.gov.in/whatsnew/archives/2013/07)”

  3. Venkatachalam Says:

    துனைப்பேராசியரா டியூட்டரா?

  4. சரவணன் Says:

    திருமதிநம்பி என்று நீங்கள் கிண்டலாகக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் ‘திருநம்பி’ என்பது உண்மையிலேயே நடப்பில் இருக்கும் தற்காலத் தமிழ்ச் சொல் ஆகும். திருநங்கை, திருநம்பி என்ற சொற்களில் என்ன பிரச்னை? டிரான்ஸ்ஜென்டர்களைத் தமிழில் எப்படிக் குறிப்பிட வேண்டும் என்கிறீர்கள்? (பை தி வே டிரான்ஸ்ஜென்டர்ஸ் = மாற்றுப்பாலினத்தவர்) Orinam.net போன்ற மாற்றுப்பாலினத்தவர் சார்பான தளங்கள் இந்தச் சொற்களை ஏற்றுக்கொண்டுள்வே?

    அதேபோல முன்பு மாற்றுத்திறனாளி என்ற பதத்தைப் பற்றியும் குறைகூறி எழுதியிருந்தீர்கள். கால்கள் இல்லாத ஒருவரால் நடக்க முடியாது, ஆனாலும் சக்கர நாற்காலி அல்லது செயற்கைக்கால்கள் உதவியால் அவராலும் இடம்பெயர முடியும். இதேபோல பார்வை இல்லாத ஒருவர் பிரெய்ல் எழுத்துகளின் உதவியால் படிக்க முடியும். ஆகவே அவர்களை disabled என்று முடிவுகட்டிவிடாமல் differently-abled என்று குறிப்பிடுவது பொருத்தம்தானே? அதையே மாற்றுத் திறனாளி என்று தமிழாக்கம் செய்திருப்பதில் எனக்குத் தவறு எதுவும் தெரியவில்லை. ‘நொண்டி’, ‘குருடன்’ என்று சொல்லி வந்தவர்கள் ‘ஊனமுற்றவர்’ என்று சொல்லி, இப்போது மாற்றுத் திறனாளி என்று குறிப்பிடுவதில் பரிணாம வளர்ச்சி இல்லையா?

    ‘அரசியல் சரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று சொல்லி trans, disabled மனிதர்களைப் புண்படுத்தும் பதங்களை உபயோகிக்க முடியாது அல்லவா? நீங்களே வேறு எப்படிக் குறிப்பிடுவது என்று சொல்லுங்களேன்.

  5. Mr Hangover Says:

    சார்… அந்தாளுக்கு சூடு சுரனைனு ஏதாச்சும் இருந்திருந்தா இந்நேரம் இந்த டமில் எலுத்தாலர்ன்ர வேலைய விட்டுட்டு குறைஞ்சது வண்டலூர் zoo ல புலிக்கு பூ … ச்சே… புலிய குளிப்பாட்டுற வேலைக்காவது போயிருக்கலாம்… ஏன் புலின்னு சொன்னேன்னா திராவிட ரத்தம் பாருங்க… எலினா கோவம் வந்துரும்…

    அப்புறம்ம்ம்ம்ம்… சார், நீங்களும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்! இத்துப்போன நிசப்த(!) எய்த்தாலரோட மொக்க கட்டுரைகள வாசிச்சு கொஞ்சம் மனதளவுல இல்ல இல்ல எழுத்தளவுல பாதிக்கப்பட்டிருக்கீங்க போல! பாருங்க அந்தாளப் போலவே இந்த ‘அல்லவா?’ கருமத்த மூணு எடத்துல பயன்படுத்தியிருக்கீங்க! ஜாக்கிரத சார்! இந்த கோமாளிங்க கொஞ்சம் ஏமாந்தாலும் நம்மளையும் இவனுங்க கோஷ்டியில சேர்த்துடுவானுங்க…

    அன்புடன்…
    ஹேங்ஓவர் ரைட்டர்


  6. […] பராக்கிரமம் மிக்க அடலேறு, மரியாதைக்க…06/02/2015 […]


Leave a reply to Venkatesan Cancel reply