என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மது கிஷ்வர் அவர்களைப் பற்றி – சில மாதங்கள் முன்பு   என் கருத்துக்களை எழுதியிருக்கிறேன்.

அவர், சென்ற பல மாதங்களாக ( நவம்பர் 2012-லிருந்து என நினைவு) பலமுறை குஜராத் சென்று – மக்களுடன் கலந்து பேசி, அங்கேயே தங்கி ஆராய்ந்து – குஜராத் பற்றி, மோதி ஆட்சி பற்றி, சிறுபான்மையினர் பற்றியெல்லாம் அவர் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். (அதற்கு முன்னும் கூட பலமுறை சென்றிருக்கிறார்; மேலும், மிக முக்கியமாக — அவர் சிரமங்களுக்கும், செலவுகளுக்கும் வேறு எவரையும் நம்பிக் கொண்டிருக்கவில்லை; அதாவது மோதி அவர்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ – மது, ஒரு சுக்குப் பலனும் பெறவில்லை – இது பொதுவாக, நம் ‘துட்டு கொடுத்தால் தூக்கி எழுதும்’ அல்லது சிரத்தையேயில்லாமல் வெறும் அட்டைக்காப்பி அடித்து எழுதி மினுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும்!) Read the rest of this entry »