“இந்தியாவில் இப்படியொரு சமூகவியல் ஆராய்ச்சி நடக்கத்தான் கூடுமா?”

January 12, 2015

மகாமகோ தட்டச்சுவீரனும், திடீரெக்ஸ் ஞாணியும், அலுங்காத நலுங்காத விரல்நுனிப் போராளியும் ஆன, எனதருமை பெங்காலி பாபு[1], மின்னஞ்சலில் சுமார் இரண்டு மாதங்கள் முன் ஒரு ஆராய்ச்சி ஆவணத்தை அனுப்பியிருந்தான் – அதனுடன் தான் மேற்கண்ட இளக்காரப் பிலாக்கணத்தையும் அனுப்பியிருந்தான்.

சரி. அதன் சாராம்சத்தைக் குறிப்பிடுவதற்கு முன்னால் – ஏன் இதனை அனுப்பினான் என்ற கேள்வி எனக்குள் எழும்பி என்னை அரித்ததைக் குறிப்பிடவேண்டும். “ஏண்டா, நான் இதைப் படிக்கவேண்டும்?” எனக் கேட்டதற்குப் பதில்  “ஃபெர்கூஸன் நிகழ்ச்சி!” – ஒரு கருப்பன் அக்கிரமமாகத் தண்டிக்கப்பட்டமை + பின்விளைவுகள். அமெரிக்காவே பற்றியெறிகிறதே தெரியாதா, அறிவிலியே! அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிந்து, இனவாதம் நொறுங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை!”

<இங்கு, பெங்காலிபாபுவின் உணர்ச்சிகளைப் பொங்கவைக்கும், முக நரம்புகளைத் தெறிக்கவைக்கும், ரத்தத்தைச் சுண்டவைக்கும், உட்கார்ந்த இடத்திலிருந்தே முஷ்டிதூக்கிய லால்ஸலாம் (=புரட்சிகர செவ்வணக்கம்!) ஒன்றை இலவச இணைப்பாக கற்பனை செய்துகொள்ளுங்கள்!>

ஒரு வழியாகச் சென்றவாரம்தான் அதனைச் சுமார் இரண்டு மணி நேரம் செலவழித்துக் கவனமாகப் படித்தேன்.  இருந்தாலும், பெங்காலிபாபுவால் சுட்டப்பட்டதே? ஒவ்வொரு வரியையும் உன்னிப்பாகப் படிக்கவேண்டுமே! பின்னர் தானே, வரிக்கு வரியாகவும், சாராம்சமாகவும் விமர்சனம் செய்ய முடியும்? ஆகவே. (அந்த ஆவணம்:  Are Emily & Greg more employable than Lakisha & Jamal? A field experiment on labor market – authored by Mariyann Bertrand & Senthil Mullainathan – மரியான் பெர்ட்ரன்ட் & செந்தில் முல்லைநாதன் (ஆ! தமிழர்!!)  எழுதிய – “லகிஷா, ஜமால்களை விட எமிலி, க்ரெக்குகளுக்கு வேலை கிடைப்பது சுளுவா? வேலைவாய்ப்புச் சந்தையிலொரு களப் பரிசோதனை)

இது ஒரு சராசரித்தர ஆராய்ச்சி ஆவணம்தான். என் நோக்கில் – இவ்வாவணம், ஒரு பரிசோதனை அளவில் இருக்கிறதே தவிர ஒரு சீரிய ஆய்வு என்கிற முறையில் இல்லை. பல சிடுக்கல்கள் – ஆனால் வெகுசுலபமான சிடுக்கவிழ்த்தல்கள்!

ஆனால் அந்த ஆவணத்தைப் பற்றிய பதிவல்ல  இது. பெங்காலிபாபு எழுப்பிய இளக்காரக் கேள்வியை எதிர்கொள்ளும் வகையாகத்தான்!

-0-0-0-0-0-

இந்தியாவிற்கு என அதன் நெடிய அறிவியல்/கணித பாரம்பரியம் இருந்தாலும், தத்துவ உச்சங்கள் இருந்திருந்தாலும் – பல காரணங்களால், தொடர்ந்து இருக்கவேண்டிய அளவுக்கு ஆராய்ச்சிகளும், மேன்மைக்கான நல்ல விஷயங்களும் நடப்பதில்லை எனும் குறை எனக்கும் உண்டு. இருந்தாலும், எதை எடுத்தாலும் விட்டேற்றியாகப் பேசி உங்கள் இந்தியாவில் ஒன்றுமே உருப்படியாக நடப்பதில்லை எனும் வாதத்தை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது. (நம்முடைய தமிழில் மானுடவியல், சமூகவியல், ஜாதி, சமூக அடுக்குவரிசைப் பகுப்பு, ஜாதி அரசியல் இன்னபிற பற்றிய மதிக்கக்கூடிய ஆய்வுகள்/புத்தகங்கள் ஏன் இல்லவேயில்லை?19/11/2014)

ஆனாலும் எனக்குப் பொதுவாக, தம் வாழ்நாளில் ஒரு விஷயத்திலும்கூட ஆழமும்வீச்சும் அடையாத குளுவான்கள் – ஒன்றையும் சாதிக்க ஆரம்பிக்கக்கூட முயலாத அறிவிலிகள், அடிப்படையில் அகங்காரம் பிடித்த முட்டாள்கள் – வெகு கரிசனத்துடன் இந்தியாவில் அது இல்லை இது இல்லை என்று பேசி, உளறிக் கொட்டுவதை சப்புக் கொட்டிக்கொண்டு ரசிப்பது ஒரு கெட்ட பழக்கம். சிலசமயம் அலுப்பும் சலிப்பும்தரும் மனித வாழ்வில் மகாமகோ நகைச்சுவைகள் தேவைதானே? ஆகவே.

மேலும் – எனக்குப் பல முறை – இந்தியாவில் பொறியாளர்களே இல்லை, ஆராய்ச்சியே சுத்தமாக நடப்பதில்லை, இஸ்ரோ ராக்கெட்டெல்லாம் சும்மா தீபாவளி ராக்கெட் (இப்படிப் பேசும் பலருக்கு சிவகாசி ராக்கெட் எப்படிப் போகும் என்பதும் மேலோட்ட அற்பமான ‘ந்யூட்டனின் மூன்றாம் விதி’ என்பதற்கு அப்பால் ஒரு எழவும் தெரியாது என்பதும் உண்மை!) என வழிந்துகொண்டு அலையும் அற்பர்களுடன் பொருத நேர்ந்திருக்கிறது. ஆகவேயும்.

சரி.  இந்த ஃபெர்கூஸன் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் கேள்விப்படவில்லையாதலால்,  கொஞ்சம் அதனுடைய பின்புலத்தைப் படிக்க முயன்றேன். (என்னிடம் தொலைக்காட்சி இல்லை; தினசரிப் பத்திரிகைகளை வாரம் ஒரு முறை தூரத்திலிருந்து பார்ப்பேன், யாராவது (= நான் மதிப்பவர்கள், கண்ட கழுதைகளல்லர்) ஏதாவது தினசரிக் கட்டுரையை/சுட்டியை வெகுவாகப் பரிந்துரைத்தால் அது இணையத்தில் இருந்தால் படிக்க முயற்சிப்பேன், அவ்வளவுதான்; நான் சமூக(விரோத) வலைத் தளங்களிலும் இல்லை, ஏனெனில் வேறுவிஷயங்களில் என்னால் நேரத்தை வீணடிக்கமுடியும் – ஆகவே அன்றாட நிகழ்ச்சிகளால், பப்பரப்பாக்களால், திடீரெக்ஸ் அறச் சீற்றங்களால் உட்கார்ந்த இடத்திலேயே பாதிக்கப் படுவதில்லை. ப்ர்ஹ்மத்துக்கு நன்றி)

ஓரு மகிழ்ச்சிதரும் விஷயம். இப்போதெல்லாம், நம் செல்லப் பப்பரப்பா கேள்விஞானிகள்,  கருப்பர் பிரச்சினையைப் பற்றி கரிசனப்பட்டு அதனைச் சுத்தமாகத் தீர்த்துவிட்டதால், அடுத்ததாக ட்விட்டருலகத்தில் கவலைப்படாமல் எல்லோரும் டீ குடித்துக்கொண்டே டீவிரவாதத்தைப் பற்றிப் பேசி – அதனைட் ட்விட்டரிலேயே டீர்த்து விடுகிறார்கள் என்படை அறிண்டு புளகாங்கிடம் அடைந்தேன். :-(((

அற்ப சராசரி இணையக் குளுவான் பொங்கியெழுந்து வீரவசனம் பேச, இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது ஏதாவது உலகளாவிய பயங்கர எழவு நடக்கவேண்டியிருக்கிறது அல்லவா? :-)))

-0-0-0-0-0-0-
எப்படித்தான் இப்படி மட்டையடி அடிக்கிறார்களோ நம் இடதுசாரி (+அவ்வப்போது இடதுசாரித்தனமாகக் கருத்துதிர்க்கும்) அறிவுஜீவிகள்!ஆனால் நான், சும்மனாச்சிக்கும் ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாகப் பொங்கிக்கொண்டிருக்கமாட்டேன் – கருத்துதிர்த்தவுடன் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சென்றுகொண்டேயிருக்க மாட்டேன். ஏனெனில் –  என் ஹோம்வர்க் என்பது, பின்புலச் சூழல்களை அறிந்துகொள்ளும் முனைப்பென்பது மிக அதிகம். எப்படியாவது நேரத்தை உருவாக்கிக்கொண்டு முடிந்த வரை கருத்துகளைக் கோர்த்து, தரவுகளைச் சேர்த்து, முடிந்தால் விஷயம் தெரிந்தவர்களுடன் பேசி – என்னைச் செழுமைப் படுத்திக்கொள்ள முயற்சி செய்வேன். அவ்வளவுதான். ஆகவே.

ஜாதி அடுக்குமுறையின் சமகால வேலைவாய்ப்புகளின் மீதான தாக்கத்துகளையும்  பற்றி நம் தமிழகத்தில் (எனக்குத் தெரிந்தவரை; நான் இன்றைக்கும் ஒரு சமூகவியல், சமூகமானுடவியல் மாணவன் என்கிற முறையில்) ஒரு எழவு பொருட்படுத்தத்தக்க அடிப்படை ஆராய்ச்சியும் இல்லையென்றாலும் அகில இந்திய அளவில் பலபத்தாண்டுகளாகப் பல பொருட்படுத்தத்தக்க ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றனதான்.ஏனெனில், பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே அவர்களின் – இது பற்றிய ஒரு முக்கியமான புத்தகமான ‘ஜாதிமுறையில் இலக்கணம்’ எனும் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். (Ashwini Deshpande / The Grammar of Caste : Economic Discrimination in Contemporary India  / 9780198072034 / OUP / 2011)

இவருடைய நெறிப்படுத்தலில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் பல மாணவர்களின் குவியமும் இதேதான். எனக்குத் தெரிந்து வாராணசி, ஜாதவ்பூர்,  ஜேஎன்யு, ஷாந்தி நிகேதன், காந்தி, காகதீய போன்ற பல பல்கலைக் கழகங்களில் (மேலும் இருக்கலாம், எனக்கு இவ்வளவுதான் தெரியும்) இம்மாதிரி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான இன்னொரு முக்கியமான புத்தகம் (என எனக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது – நான் இன்னமும் இதனைப் படிக்கவில்லை) – ஒரு முன்னாள் யுஜிஸி தலைவரால் இணைந்தெழுதப் பட்டுள்ளது – அவர், என் மதிப்பிற்குரிய பேராசிரியர் சுகதேவ் தோரட்.  (Sukhadev Thorat & Katherine Newman / Blocked by caste: Economic discrimination in modern India / 9780198081692 / OUP / 2012)
என்னுடைய சொந்த வரலாறு தொடர்பாக அவ்வப்போது ஐஐடி-களில் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்வதிலும் எனக்கு கொஞ்சம் அக்கப்போர் இன்பம்ஸ் என்பதை, முதலில் தெரிவித்துக்கொண்டு – பேராசிரியர் ஸௌரப் பால் அவர்களின் சுட்டியை இங்கே கொடுக்கிறேன்: http://web.iitd.ac.in/~sbpaul/

இந்தப் பேராசிரியர் – ஒரு பக்கம் முழுவதும் பெரும்பாலும் இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட, இந்தப் பதிவின் கருப்பொருள் சார்ந்த, இருபதுக்கும் மேற்பட்ட சுவாரசியமான ஆராய்ச்சிகளைச் சுட்டியிருக்கிறார்: http://web.iitd.ac.in/~sbpaul/HUL736/readinglist.php

இவ்விஷயங்களை நான் இந்த பெங்காலிபாபுவிற்கு அனுப்பியிருந்தேன்.  ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து, பேரோசையுடன்கூடிய ஒரு அமைதி மட்டுமே!

ஆம்!  “இந்தியாவில் இப்படியொரு சமூகவியல் ஆராய்ச்சி நடக்கத்தான் கூடுமா?” போங்கடா போக்கத்த அரெகொறெங்களா!
-0-0-0-0-0-0-
இந்த ட்விட்டர்+ஃபேஸ்புக் பெங்காலி பாபு போராளி – என்னுடைய சோம்பேறித்தனத்தையும், செய்திகளைச் சுடச்சுடத் தெரிந்துகொள்ளா தன்மையையும், உலகத்தின் எந்த நிகழ்ச்சி நடந்தாலும்  நடக்கநடக்க உடனுக்குடன் சுடச்சுட என் மேலான கருத்துகளைச் சொல்லமுடியாத முட்டாள் தனத்தையும் கண்டித்து – எப்போது நான் திருந்தப் போகிறேன் என அங்கலாய்த்து, கிண்டலாக அவன் கடிதத்தை இப்படி முடித்தான்:
Good luck for your future endeavours!
இதற்கு என் பதில்: கவைக்குதவாத தட்டச்சுப் போராளியே – நீ வரவர ஆங்கிலத்திலும் சொதப்புகிறாய். என்ன மசுத்துக்கு (=wtf?) ஃப்யூச்சர்  என்டீவர்ஸ்? என்டீவர் என்றாலே எதிர்காலத்தில் நடக்கக் கூடுவது – ஒரு எத்தனம் மாதிரிதானே? வெறுமனே future அல்லது endeavours என சொல்லியிருக்கலாமே! உன்னோட ஸ்டீஃபன்ஸ் காலேஜ் சொல்லிக்கொடுத்த குப்பை ஆங்கிலமா இது? ஜேஎன்யுவில் அரசு செலவில் ( = என்னுடைய வரிப்பணம்!) அமர்க்களமாகப் படித்து ஆவேசக்குசு விடுபவர்களுக்கு குறைந்தபட்சம் கொஞ்சமாவது சரியாக ஆங்கிலத்தில் எழுதவரும் என இதுவரை நினைத்தேனே!

பின்குறிப்பு: ஒரு மசுத்தையும் தெரிந்துகொள்ள முயற்சிகூடச் செய்யாமல், பொத்தாம் பொதுவாக ஏண்டா இப்படி கருத்துகளை உருவாக்கிக்கிறீங்க கஸ்மாலங்களா? ஆராய்ச்சின்னா லிட்டர் எவ்வளவ கிலோன்னு கூட தெரியாதவனெல்லாம் ஏண்டா பெர்த்தியார் ஆராய்ச்சியப் பத்தியெல்லாம் மேலான கருத்து சொல்ல வர்ரீங்க? சும்பப் பசங்களா!

பின்பின்குறிப்பு: இந்தப் பதிவு எழுதும் வரை எனக்கு, அவனுடைய பதில் வரவில்லை; அவன் அடுத்த புல்லரிப்பு, உணர்ச்சிபிரவாக நிகழ்ச்சிக்காக உடனே கருத்துதிர்க்கக் காத்துக்கொண்டிருக்கிறானோ என்ன எழவோ! சலிப்பாக இருக்கிறது – கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது ஏதாவது கொழுகொம்பு என்று ஒன்றாவது இருந்திருக்குமே! :-(

கடைசிக் குறிப்பு: என் படுசெல்லங்களான தமிழ்ச் சிகாமணிகள் யாராவது, இந்த பெங்காலிபாபு சுட்டிய ஆராய்ச்சியைப் போல எதையாவது குறிப்பிட்டு, சூட்டோடுசூடாக ஏதாவது பிலாக்கணம் வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

It is too good an opportunity for our fellow dumbass ITKWs (= Intellectual Tamil Keyboard Warriors) to pass up, yeah? If they had not done it, I would be rather surprised! But then, even typing on the keyboard, does require some effort, no?  :-(

[1] பெங்காலி பாபு மஹாத்மியம்: கீழ்கண்ட சுட்டிகளில் எல்லாம் இந்த மகாமகோ சாக்கடை ஆய்வாளனாகிய  பெங்காலிபாபுவின் வீரபராக்கிரமங்கள் இருக்கின்றன – படித்துத் துன்புறவும்: (இவனிடம் என்ன வசீகரம் இருக்கிறதென்று எனக்குப் புரியவேயில்லை – இவனையும் கட்டிக்கொண்டு மாரடித்துக்கொண்டிருக்கிறேன்! அவ்வப்போது என் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கும் பதிவுகள் சில இடுவதற்கும் மட்டுமேதான் இவன் உதவிகரமாக இருக்கிறானோ? ஆனால், இவனும் இல்லாவிட்டால் ஒரு டொக்கில் இருக்கும் எனக்கு, நம்முடைய செல்ல அறிவுஜீவிகளின் (public intellectuals!) சிந்தனைகள்(!) பற்றி ஒரு எழவும் தெரியவராது என்பதும் உண்மைதான்!)

3 Responses to ““இந்தியாவில் இப்படியொரு சமூகவியல் ஆராய்ச்சி நடக்கத்தான் கூடுமா?””

  1. Anonymous Says:

    can we find equivalent studies in india? no this is a purely merit based country. http://www2.econ.iastate.edu/classes/econ321/orazem/bertrand_emily.pdf … (via @m_sendhil )

    twitter.com/arulselvan/status/537082389155946497


    • Sir, Anony-mouse – thanks for the pointer. Glad to note what the tweet said. :-(

      Dunno who this arulselvan is – but may be he said it in jest or it was just a momentary lapse of reason on his part!

      OTOH, if he had said it in derison just like my BegaliBabu did, with his attitude(!) – then it is merely QED for my post, yeah? :-)

      Either way it is a wince-wince situation, I agree. :-)

  2. ராஜேஷ் Says:

    ஒரு வேண்டுகோள்.புத்தக கண்காட்சி நடக்கும் இத்தருணத்தில் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்துவைக்கும் ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s