இதுதாண்டா ப்ர்ஹ்ம்மம்!

August 9, 2015

என் மதிப்புக்குரிய தளங்களில் ஒன்றான ‘அரூபக் கருத்து நிலை வாத்து’ – AbstractGoose! ;-/  – முன்னெப்போதோ பதிப்பித்த சித்திரங்களில் ஒன்றை உங்கள் தலையில் கட்டுவதில் நான் பெருமைப் படுகிறேன்!

ஒரு சாதாரண மனிதன் கீழ்கண்ட காட்சியைப் பார்த்து – அதிக பட்சம் ஒரு மண்டைக்குடைச்சல் அனுபூதிநிலைக் கவிதையை எழுதலாம்.

Screenshot from 2015-08-08 22:49:36

அதையும் கமுக்கமாக நகுலன் கவிதை மோஸ்தரில் கொஞ்சம் தருமுசிவராமுவைத் தாளித்துப் பரிமாறி மினுக்கலாம்.

கேரட் முயல் நான்
நான் முயல் கேரட்
முயல் கேரட் நான்
நான் நான் நான்
பிடித்த முயல்
கால் கால் கால்
ஒருகால்?
கூக்ள் ஜித்தன்

ஒரு சாதாரண வாசகனாகிய நானும் இதனைப் படித்துவிட்டு புல்லரிப்புப் பெறலாம்.

மேலும் – இதனைப் படித்த கவிதானுபவத்தைப் பற்றி நெகிழல் பொழிப்புரைகளைப் பொழிந்து தள்ளி, எப்படிக் கவிதை எழுதுவது என முழ நீளத்துக்குச் சிலாகித்து, எப்படி அது ரசிக்கப்படவேண்டும்,  அந்த வரிகளில் இருந்திருக்கக்கூடிய ஆன்மாவை எவ்வாறு ஜேப்படி செய்யலாம், கற்பழிக்கலாம் என்றெல்லாம் தொடரலாம்…

-0-0-0-0-0-0-0-

…ஆனால்,  விஞ்ஞானிகள்  அதே காட்சியை  எப்படி உள்வாங்கிக்கொள்வர்?

இப்படித்தான்: :-)

Screenshot from 2015-08-08 22:50:09இதுதாண்டா ப்ர்ஹ்ம்மம்! :-)))

எவ்வளவு அழகான கார்ட்டூன்! நான், ஒருமுறைக்கு இருமுறை, இந்த இரண்டாம் படம் சுட்டும் விஞ்ஞான தாத்பரியங்களைச் சரிபார்த்தேன். இதில் தவறொன்றுமில்லை. வெறும் மகாமகோ அழகுதான்!

பார்க்கப்போனால், இரண்டாவதில் கவித்துவம் அதிகமாக வெளிப்படுகிறதோ?

பிலாக்கணம்: எப்போதுதான் நம் தமிழில் இம்மாதிரி அழகான படைப்புகள் வரப்போகின்றன? தமிழ் வழிச் சிந்தனை இம்மாதிரி உச்சங்களை அடைய முடியுமா?

எல்லா கலைச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி எடுக்கிறேன் என்று தமிழையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே ஒழிப்பதுதான் நடக்குமா?

திராவிடப் பகுத்தறிவின் கொடுமையிலிருந்து, பாவப்பட்ட சாதா தமிழனின்  சாதா அறிவு விடுதலை பெறப்போவது எப்போது?

 தொடர்புள்ள யுஆர்எல்கள்:

2 Responses to “இதுதாண்டா ப்ர்ஹ்ம்மம்!”

  1. Ramanan Says:

    Thanks for sharing

    reminded me of the below quote, which also happens to be one of my favorites

    “The scientist does not study nature because it is useful to do so. He studies it because he takes pleasure in it, and he takes pleasure in it because it is beautiful. If nature were not beautiful it would not be worth knowing, and life would not be worth living. I am not speaking, of course, of the beauty which strikes the senses, of the beauty of qualities and appearances. I am far from despising this, but it has nothing to do with science. What I mean is that more intimate beauty which comes from the harmonious order of its parts, and which a pure intelligence can grasp.”

    ― Henri Poincaré, Science and Method

  2. Sivakumar Viswanathan Says:

    Many thanks for introducing abstrusegoose to us.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s