படுபீதியளிக்கும் வகையில் வளர்ந்திருக்கும் அட்டகாசமான தமிழகத்தின், அற்புத நகைச்சுவை உச்சம் எது?
December 28, 2024
இல்லை, அது செந்தில்கவுண்டமணிவடிவேலுவிவேக்விஜைஉதைஇசுடாலிர் கிளுகிளுப்பு -கிச்சுக்கிச்சு-வெடிச்சிரிப்பு விவகாரமில்லை. ஏன், அது அந்த படுகேவலமான திராவிடமாடல் திமுக இசுடாலிர் அரசாங்கம்கூட இல்லை.
மாறாக. அது… அது ஒரு பிரபல, தொடர்ந்து கொண்டிருக்கும் எக்காளச் சிரிப்பு.
பொறுப்புத்துறப்பு. *
தமிழக ஏவல் துறை.
….ஐயோ! தமிழகக் காவல் துறையின் நிலை. அதாவது, திராவிட ஏவல்துறை. அதாவது, திராவிடப் பொறுக்கித்தனத்தை அனுசரித்து நடந்து, அதன் அல்லக்கைப் பொறுக்கிகளின் ஏவலாளாகச் செயல்பட்டு, அதன் அயோக்கியத்தனங்களைக் கண்டுகொள்ளாமல் லூஸ்லவிட்டு, அதே சமயம் அப்பொறுக்கித்தனத்தை சாத்வீக ரீதியாக எதிர்ப்பவர்கள் மீதுகூட ‘சட்டம் தன் மடமையைச் செய்யும்’ ரீதியாகக் குரைத்துப் பாய்ந்து விழுந்து கடித்துப்பிடுங்கி, இம்மாதிரிப் பொதுச்சேவைகளுக்காக ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என உதவியும் கயமைச் சுயலாபங்களும் ஏகத்துக்கும் பெற்று, கடந்த 50+ ஆண்டுகளாகக் காயடிக்கப்பட்டு, நேர்மை நாளங்கள் நறுக்கப்பட்டு… ஆகவே திராவிட எஜமானர்களுக்கு மிகமிகவிசுவாசமாக இருக்கும் துறை.
இதுதான், இந்த ஏவல் துறைதான் தமிழகத்தின் மிகச் சிறந்த, மன்னிக்கவும், ஆகச் சிறந்த நகைச்சுவை.
ஏவல்துறை தொழிலறமின்மையுடன் ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, ஒரு சுக்கு செய்தியைக் கூட பாதுகாப்பு செய்ய வக்கில்லாமல், ‘ஐபிஸி->பிஎன்எஸ் மாறும்போது டெக்னிகல் க்லிட்ச்’ அதுஇது என வாய்ஜாலம் மாய்மாலம் செய்து…
… ஆகவே, ‘தவறு நடந்து விட்டது, மன்னிப்பை வேண்டுகிறேன்’ எனக்கூடச் சொல்லாமல், தீங்கு இழைக்கப்பட்டவர் மீதே பாயும் வக்கிரம் என்பது – திராவிடமாடலில் சகஜமப்பா.
அதுவும் அந்த பாவப்பட்ட பெண்ணுக்கு “போலீஸ் நடவடிக்கைகளில் திருப்தி”யாம்! என்ன படு அசிங்கமான மனோவக்கிரம் இது! இதற்கு ஒரு ஐபிஎஸ் முத்திரை தேவையா?
திராவிடஎஜமான் எவ்வழி, ஏவலாள் அவ்வழி.
நன்றி.
பின்குறிப்பு1:
1980களில் இருந்து பலமுறை தமிழக ஏவல்துறையிடம் சென்றிருக்கிறேன். ருசுக்களுடன் புகார் கொடுப்பதற்காக; பல சமயங்களில் ‘ரைட்டர் இல்லை’ – ‘பந்தோபஸ்த் ட்யூட்டி போய்ர்க்காங்க’ – ‘கோர்ட் போய்ட்டார்’ – ‘அனுசரிச்சி போங்க சார்’ +++ – இன்னபிற விஷயங்களின் காரணமாக அலைந்திருக்கிறேன்; இருந்தாலும் என் அலுப்பைக் காட்டிக்கொள்ளாமல், காவல்துறை/ராணுவம் போன்ற அமைப்புகளின் மீதான எனது பொதுவான நேர்மறை நம்பிக்கையின் காரணமாக, பல முறை ஒரே விஷயத்திற்காகவேகூடச் சென்றிருக்கிறேன், இழுத்தடிக்கப் பட்டிருக்கிறேன் – ஒரேயொரு முறை என்மேல் கொடுக்கப்பட்ட புகார் சார்பாகவும்தான்.
இருந்தாலும், அது – ஒட்டுமொத்த தமிழக ஏவல்துறையானது ஒரு சுக்குக்கும் பிரயோஜனமில்லாத, ஊழல் மலிந்த, அதிகார கர்வமிக்க, திராவிட அடிவருடிக் கட்டுமானம் எனும் என் பிரத்யட்சக் கருத்தை மாற்றிக் கொள்ள எனக்கு இதுவரை வாய்ப்பே (ஒரே ஒரு வாய்ப்புக் கூட!) கிடைக்கவில்லை. :-(
(ஒரிரு உயர் காவலதிகாரிகள் ஊழலற்றவர்களாக, மக்களின் மீதும் தேசப் பாதுகாப்பின் மீதும் கரிசனமுடையவர்களாக இருக்கலாம் – ஏன், பல பாவப்பட்ட அடிநிலைக் காவலர்கள்++ ஏகத்துக்கும் பணிப்பளுவினால் வாடுபவர்களாகவும் இருக்கலாம், குமைந்து கொண்டிருக்கலாம் – என்ன சொல்ல, அவர்கள் பிழைக்கத் தெரியாத அதிராவிடப் பிரக்ருதிகள், அவ்வளவே!)
மும்பய், சத்தீஸ்கட், உத்தர்ப்ரதேஷ், பிஹார், கர்நாடக காவல் துறை ஸ்டேஷன்களுக்கும் சிலபல பணிகள்/பிரச்சினைகள் நிமித்தமாகச் சென்றிருக்கிறேன். சர்வ நிச்சயமாகச் சொல்வேன் – அவர்களுடைய ப்ரொஃபெஷனலிஸ்ம் கிட்டேகூட போக முடியாதவர்கள்தாம், நம் தமிழகத்தின் திராவிடமாடல் போலீஸார். அந்த பிற மாநிலங்களில் அடிமட்ட ஊழலில்லை எனச் சொல்லவில்லை – ஆனால் தமிழகம் போலப் படுமட்ட ஏவல்துறை ஊழலில்லை, அரசதிகாரத்துக்கும் அரசகுண்டர்களுக்கும் வாலாட்டல்-குரைப்பு எனும் தமிழநகைச்சுவை அதிகமில்லை என அறுதியிட்டுச் சொல்வேன்.(இத்தனைக்கும் எனக்கு – மத்தியப் ப்ரதேச போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் ஒரேயொரு குளிரிரவு கோவணாண்டியாக லாக்கப்பில் இருந்த இளமை ஊசலாடும் அனுபவமும் இருக்கிறது – இருந்தாலும் சொல்வேன், அது என்னை அப்போதைக்குக் கூனிக்குறுகிப் போகச் செய்தாலும், அந்த சுவையான சம்பவம் அவ்வளவு மோசமாக இருந்திருக்கவில்லை எனத் தான் படுகிறது. ஏனெனில் – தமிழகபோலீஸ்தாம் அடாவடி லாக்கப் சித்திரவதைகளிலும், பல்பிடுங்கல் திறமைகளிலும் தொழிலறத்திலும் ப்ளடி ஸ்காட்லேண்ட்யார்ட் ஆசாமிகள் எனப் பலர் மூலமாக அறிவேன். நீங்களும் ஆல்ரெடி அறிவீர்களே; ஆனால் நான் இவர்களிடம் மாட்டிக் கொள்ளவில்லையே!)
பின்குறிப்பு2:
அதேபோல, ஜாதிவெறியிலும் தமிழகம் தாம், பாரத அளவில் முதலிடம் – ஏனெனில் இது பெரியார் மண்ணாங்கட்டி.
இதையும் என்னால் சர்வ நிச்சயமாகச் சொல்ல முடியும். (இன்னமும் வேங்கைவயல் ஜாதிவெறிக் கேவலத்தைத் தட்டிக் கேட்க முடியாத, அதைப் பற்றிப் புலன் விசாரணை செய்வதற்குக் கூட முதுகெலும்போ திராணியோ – ஏன், நியாய உணர்ச்சியோ துளிக்கூட இல்லாத நிலையில்தான் தமிழகஏவல் துறை இருக்கிறது என்பதை நினைவு கூர்வோம்!)
திராவிடமாடலின் நேரடி விளைவுதான் இந்தத் தரம் தாழ்ந்த தமிழ்நாடு.
குப்பைக் கல்வி. குடிபோதை. சீரழிவுச் சினிமா. அட்டைகத்தி நடிகர்கள், ரசிக விசிலடிச்சான்குஞ்சாமணிகள். தொடர் தீவட்டிக் கொள்ளை. தொடர்ந்த திராவிடக் கற்பழிப்புகள். தரம் தாழ்ந்த அதிகாரிகள், ஊடகப் பேடிகள். அறிவுஜீவிக் கோமாளிகள். கம்மீனிஸ்ட் கம்னாட்டிகள், மனிதவுரிமைத் தொழிலதிபன்கள் … … இப்போது +தரம் தாழ்ந்த ஒட்டுகேஜ் ம்யூஸிக் அகடெமி… … …. (இது முடிவிலாத் தொடர், பொறுக்கித்தனமே பொதுவாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு, வேறேன்ன – ப்ளடி பாலும் தேனுமா ஒடும்? எல்லாம் சாக்கடைதான்…)
எது எப்படியோ… இவற்றுக்கெல்லாம் பெருமைப் படாமல், சும்மா நொள்ளை சொல்லிக் கொண்டிருந்தால், கொள்ளை நோயில்தான் போவேன்.
-0-0-0-0-
* நான் என்ன தமிழக ஏவல்துறையா? ப்ளடி பொறுப்பின்மையுடனும் சொல்லொணா அகந்தையுடனும் நடந்துகொண்டு, வாய்கூசாமல் அரசுசார்பிலும் புளுகி, மக்கள் வரிப்பணத்தில் மினுக்கிக்கொண்டு, அதே பாவப்பட்ட மக்களையே வதைப்பதற்கு?
—
—



December 28, 2024 at 15:21
‘ஸ்காட்லேண்ட் யார்ட்’ புகழ் (என நாமே சொல்லிக்கொள்ளும்) தமிழக ஏவல் துறையின் எஃப்ஐஆர் / முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் லக்ஷணம் பற்றி, திரு கே அண்ணாமலை… 🙏🏾💐
போட்டுக் கிழித்திருக்கிறார் இந்த ஒட்டுண்ணி திராவிடமாடல் ஏவல்துறையின் பராக்கிரமத்தை… ப்ளடி.
https://x.com/annamalai_k/status/1872897743636840648
December 28, 2024 at 16:49
அவரைத்தான் இப்போது வரைமுறையின்றி பகடி(?) செய்து பல்லிளிக்கின்றன திராவிஷத்தில் ஊறித்திளைக்கும் உடன்பருப்புகள். நியாயமாக, இப்படிப்பட்ட கும்பலைத் தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரும் சாட்டையால் அடித்துக்கொள்ள வேண்டும்.
January 1, 2025 at 11:20
வரும் 2026 லாவது தமிழகத்திற்கு விடியல் உண்டா ?
January 1, 2025 at 11:21
வரும் 2026 லாவது தமிழகத்திற்கு விடியல் உண்டா ?