மன்னிக்கவும். ஆனந்தவிகடவிடுதலை நக்கீர நியாஸ்அகமது வகையறாக்கள், ஊடகப்பேடிகளோ ஊடகப்பொறுக்கிகளோ அல்லவேயல்லர்!

August 1, 2016

ஏனெனில் அவர்களை அப்படியழைத்தால், அது அக்மார்க் ஊடகப்பொறுக்கிகளும், தரம்தாழ்ந்த ஊடகப்பேடிகளுமான ஸன் டீவி, என்டிடிவி, ‘த ஹிந்து’  போன்ற உதிரி ஊடகக் குழுமங்களுக்கு நான் செய்யும் துரோகம்.  

ஏனெனில், ஆனந்தவிகட நியாஸ் அகமது உதிரிகள் வியாபித்திருக்கும் அயோக்கியப் பிரதேசத்தை – ஸன்டீவி வகையாறாக்களாலுமேகூட எம்பிஎம்பித்தான் எட்ட முடியும். இதுவும்கூடச் சந்தேகம்தான். மன்னிக்கவும்.

முகாந்திரம்:  பாரதத்துக்கான புதிய கல்விக் கொள்கை (2016) வரைவு/வடிவமைப்பு – சில குறிப்புகள், கோபங்கள்

-0-0-0-0-0-0-0-

இந்தப் பேரறிஞர், பேரறிவாளர்,  நியாஸ்அகமதுவார் தரத்தில்(!) – ‘தோட்டக்கலை மாமன்னர்’ எஸ்.விஜயானந்த் எனும் இன்னொரு உதவாக்கரை விகடஜந்து எழுதிய(!) அற்பக் கட்டுரையைப் பற்றி (=அரைகுறை விகடனின் அகடவிகடம்: ‘மாடி வீட்டுத் தோட்டம்… மர்மத்தை விளக்குமா அரசு?’ – சில குறிப்புகள்  10/02/2016) முன்னமே ஒருதடவை எழுதியிருக்கிறேன். எப்போதாவது விகடனைப் புரட்டி மாரடைப்பு வரவைத்துக்கொள்ளும் வேலைவெட்டியற்ற நான் – இந்த நியாஸ்அகமது அவர்களை, வெறுமனே ஒரு உதவாக்கரைச் சோம்பேறி ஊடகக்கரர் என மட்டுமே இதுவரை நினைத்திருந்தேன். அது தவறு –  முட்டாள்தனம் என்பதை மீறி,  இந்த மனிதருக்கு, அயோக்கியத்தனமும் அபரிமிதமாக வருகிறது என நான் தெரிந்துகொண்டுவிட்டேன், நன்றி. ஆனால்… இந்த மனிதரைச் சொல்லியும் குற்றமில்லையோ என்ன எழவோ!

ஏனெனில் சேறுமிடமறிந்து விகடச்சேற்றில் சேர்ந்திருக்கும் சேறுதான் இந்த செஞ்சேற்றுக் கடனைத் தீர்க்க வந்திருக்கும் அடலேறு.

ஆனந்தவிகட அயோக்கியர்களின் தொடரும் தகிடுதத்தமத்தின்  இன்னொரு எடிஷன்:  “குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா…?”

இது ஒரு தொடரும் சோகம். விகடனின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது; படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால், போவான் போவான், அய்யோவென்று போவான். ஆம். :-(

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, வேறென்ன சொல்ல! :-(

சரி. இதுதான் அந்த விகடவிடலைத்தனம்:  http://www.vikatan.com/news/coverstory/65043-union-govt-indirectlytrying-to-implement-kulakalvi.art

உட்கார்ந்த இடத்திலிருந்து அலுங்காமல் நலுங்காமல் இக்கட்டுரையென்ற பெயரில் மானாவாரியாகவும் அயோக்கியத்தனத்துடனும் பொய்களைக் கொட்டி நிரவியிருப்பது, மு. நியாஸ் அகமது எனும் ஒரு ஊடக நபர்; எங்கிருந்துதான் இப்படிப்பட்ட ஜந்துக்களைத் தொடர்ந்து விட்டேனாபாரெனப் பிடிக்கிறார்களோ, இந்த அகடவிகடக் கோமாளிகள், எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அல்லது இந்த எஸ்.விஜயானந்த் அவர்களின் புனைபெயர்தான் நியாஸ்அகமதுவோ? :-(


-0-0-0-0-0-

சரி. நான் முந்தைய பதிவில் எழுதியிருந்தது: “ஒருவழியாக, இந்த ஆவணம் பொதுப்பார்வைக்கு 27 மே, 2016 முதல் வைக்கப்பட்டது. இணையத்தில் தரவேற்றப்பட்டது.” நான் இதனை 28 மே, 2016 அன்றே ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டேன்.

அழுமூஞ்சித்தனமாக அறச்சீற்ற ஆவேசத்துடன் ஆரம்பிக்கும் விடலைவிகடக் கட்டுரை எழுதப்பட்டது – 9 ஜூன், 2016 அன்று.
Screenshot from 2016-08-01 13:52:38

…ஆனால் இந்த நிருப விடலையும், அதற்கு நேர்கோணல் அளித்து தங்கள் அறியாமையையும் அயோக்கியத்தையும் வெளிப்படுத்திக்கொண்ட பிறவிடலைகளும் (= ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர்’ பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு) இந்த ஆவணத்தைப் படிக்கவேயில்லை.  இருந்தாலும் குண்டுதைரியமாக உளறிக்கொட்டமுடிகிறது. (இம்மாதிரி உளறிக்கொட்டல்கள், கீழ்மையான வதந்திபரப்பல்கள் – எனக்கு இந்த ஸாஹித்ய அகடெமி விருதுகளைப் பற்றி, நம் தமிழ் அறிவுஜீவியப் பெருந்தகைகள் சிலகாலமுன் உளறிக்கொட்டியதை நினைவு படுத்துகின்றன! என் ஞாபகசக்திதான் என் சத்துரு. =ஸாஹித்ய அகடெமி விருதுகள்: ‘த டுமீல் ஹிந்து’வின் நகைக்கவைக்கும் அரைகுறைத்தனம்! 14/01/2015)

சரி. இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளில் – இந்த ஜந்துக்கள் ஒருவிதமான பரிந்துரைகளையும் அளிக்காமல், பொத்தாம்பொதுவாக காதில்விழுந்த கண்டகழுதைகளின் வதந்திகளை அள்ளிப்பருகி மறுவாந்தியெடுத்திருக்கிறார்கள். வாழ்க!

இந்த விடலைவிகடக் கட்டுரையில் மூன்று விஷயங்களைத்தான் உருட்டியிருக்கிறார்கள்.

ஒன்று:  குழந்தைகளை 8ஆம் வகுப்பு வரை ஃபெய்லாக்காமல் இருக்கும் நிலவரத்தை 4ஆம் வகுப்போடு நிறுத்திவிடப்போகிறார்கள்!
இரண்டு: குழந்தைகளை தொழிற்கல்விக்கும் குலக்கல்விக்கும் ‘தள்ளி விடுதல்’ நடக்கப் போகிறது.

மூன்று: ‘முழுக்க முழுக்க நிர்வாகிகளை கொண்ட குழு’ எப்படி ‘கல்வி குறித்த ஒரு கொள்கையை வடிவமைக்க முடியும்?’

போங்கடா, பொய்மைப் போங்காட்டக்காரங்களா!

இவற்றில் இருக்கும் தவறுகளுக்கு அப்பாற்பட்டு, வேறெந்த விஷயமும் இந்த அரைகுறைகளுக்குக் கண்ணிலேயே படவில்லை. வேறெந்த பிரச்சினையும் தெரியவில்லை, ஒரு சரியான விஷயமும் தெரியவில்லை. பெருஸ்ஸா கர்த்து ஸொல்ல வந்த்ட்டானுவ… வாழ்க!

முதலில் ஒரு விஷயம்: இந்த சுப்ரமணியன் கமிட்டி அறிக்கை – கல்விக்கொள்கைக்கான ஒரு வரைவை மட்டுமே முன்னே வைக்கிறது. இது கல்விக்கொள்கையல்ல – அதனை வடிவமைப்பதற்கான சிலபல பரிந்துரைகள்தாம்.

இரண்டாவது விஷயம்: நம் தமிழகத்தின் சாபக்கேடு என்னவென்றால் ‘ஹோம் வர்க்’ என்றால் என்னவென்றே அறியாத அரைகுறைக் கூவான்கள் மட்டுமே தங்கள் அரைவேக்காட்டு அயோக்கியக் கருத்துகளைத் தொடர்ந்து பவனி வரச் செய்கிறார்கள். இதற்கு நம்முடைய கேடுகெட்ட திராவிடப் பாரம்பரியத்தின்(!)  அறிவுஜீவிய எதிர்நிலைதான் காரணம்.  (ஆனால், சுப்ரமணியன் கமிட்டியானது – குவியப்படுத்தப்பட்ட அசாத்தியமான கடும் உழைப்பைச் செய்துதான் இந்த வரைவு ஆவணத்தைப் பதிப்பித்திருக்கிறது! இக்கமிட்டியில் திராவிடர்கள் இல்லாததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்!)

சரி. இப்போது மேற்கண்ட மூன்று அரைகுறைக் கருத்தாக்கங்களுக்கு வரலாம்.

-0-0-0-0-0-0-

ஒன்று:  குழந்தைகளை 8ஆம் வகுப்பு வரை ஃபெய்லாக்காமல் இருக்கும் நிலவரத்தை 4ஆம் வகுப்போடு நிறுத்திவிடப்போகிறார்கள்!
இதுகுறித்த ஆவணப் பக்கங்களைக் தருகிறேன். முடிந்தால் முழுவதையும் படியுங்கள்.
Screenshot from 2016-08-01 13:44:40
[ஆங்கிலம்] புதிய கல்விக் கொள்கை (2016) வடிவமைப்புக்கான டிஎஸ்ஆர் சுப்ரமணியன் கமிட்டி பரிந்துரைகள்: Report of the Committee for Evolution of the New Education Policy 2016
( 77லிருந்து 80ஆம் பக்கம்வரை)

1. சுப்ரமணியன் கமிட்டியானது – இந்த என் டி பி (பள்ளிக்கல்வியில் இடைநிறுத்தலின்மைக் கொள்கை – NDP – No Detention Policy) பற்றி குறிப்பிடத்தக்க அளவு அலசியிருக்கிறது. அதன் சாதக பாதக அம்சங்களைப் பட்டியலிடுகிறது.

2. குழந்தைகளின் படிப்பின்மீது மிகுந்த கரிசனத்துடன் பார்க்கிறது. அவர்களின் கல்வி ஒவ்வாமையைப் போக்க வழிகளைப் பேசுகிறது. கல்வி முனைவுகளில் ஆர்வமில்லாமல் இருக்கும் குழந்தைகளுடன், ஆசிரியர்கள் (பள்ளிவேளைகளுக்கு அப்பால்) மேலதிகமாகப் பணிசெய்யவேண்டும், கற்பிக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.

3. குழந்தைகளை, இடை நிறுத்தம் செய்வதற்கு முன்னால் – அவைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு முறைகளாகவது தங்களை மேம்படுத்திக்கொள்ளச் சந்தர்ப்பம் தரவேண்டுமென்கிறது.

4. மேலும், அது பரிந்துரைப்பது நான்காம் வகுப்பு விவகாரமல்ல – ஐந்தாம் வகுப்பு வரை.

-0-0-0-0-0-0-0-

இரண்டு: குழந்தைகளை தொழிற்கல்விக்கும் குலக்கல்விக்கும் ‘தள்ளிவிடுதல்’ நடக்கப் போகிறது.
Screenshot from 2016-08-01 12:59:52
‘குலக்கல்வி’ பற்றிய அயோக்கிய வதந்திகளையும் – நம் திராவிடத் தமிழகச் சூழலில் அப்பட்டமான பொய்களை அள்ளி வீசுவதையும் விட்டு விடலாம்.

ஆனால் இந்த இளையராஜா ‘ப்ரின்ஸ்’ வகையறாக்களுக்கு, தொழிற்கல்வியென்றால் கேவலமா?

இந்த ஜந்துகளுக்கு – அப்படியே இருந்தாலும்கூட,  இந்த அறிக்கையில் ஒருவார்த்தையாவது குழந்தைகளின் கல்விமேல் கரிசனமில்லாமல் இருக்கிறதா?

ஆனால் அயோக்கியப் பதர்கள் உளறிக்கொண்டுதான் இருப்பார்கள். பப்பரப்பா சூழ்வுலகமடா இது!

-0-0-0-0-0-

மூன்று: ‘முழுக்க முழுக்க நிர்வாகிகளை கொண்ட குழு’ எப்படி ‘கல்வி குறித்த ஒரு கொள்கையை வடிவமைக்க முடியும்?’
இந்த ஐவர் குழுவில் ராஜ்புத் (ராஜ்புட், ஷாட்புட் அல்ல) ஒருவருக்குத் தான் கல்வியாளர் எனும் இமேஜ் இருப்பது உண்மை. ஆனால், கொள்கை ஆவண வரைவுகளைத் தயாரிப்பதற்கு வெறும் கல்வியாளராக இருந்தால் போதாது. அவர்களுக்கு பரந்த அறிவும், நிர்வாக அனுபவமும், பலதரப்பட்ட பின்புலங்களும், நுண்மான் நுழைபுலமறியும் திறனும் வேண்டும். எடுத்த காரியத்தை முடிக்கும் திறன் வேண்டும்.
Screenshot from 2016-08-01 13:03:15

ஆனால் – இந்த ‘சுப்ரமணியன் கமிட்டி’க்குப் பதிலாக, ஒருவேளை ‘கொப்பரவாயன் கமிட்டி’ எனவொன்றை அமைத்து அதில்  மேதகு நியாஸ் அகமது, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஜேஸு அடிமை ‘ஜேப்பியார்‘ பண்டயராஜ் (அவர் ஆத்துமா சாந்திமுகூர்த்தம் அடைவதாக, ஆமென்),  தாண்டவராயபுரம் ராமசாமி ‘பாரிவேந்தர்பச்சமுத்து,  ‘கேப்டன்‘ விஜயகாந்த், எத்திராஜுலு ‘எவ வேலு‘  போன்ற கொப்பரவாயர்களுக்கும் கல்விமாமாக்களுக்கும் நியமன உறுப்பினர்களாகப் பணியாற்ற வாய்ப்பளித்தால் – நமது பாரதத்தின் கந்தறகோளக் கல்விப் பிரச்சினையைக் கடைந்தேற்ற வைக்கமுடியுமோ என்ன எழவோ!

போங்கடா ஊடகப்பேடிகளா… நீங்களும் வொங்களோட போலித்தனமும் மேதாவியமும்… த்தூ….

-0-0-0-0-0-

6 Responses to “மன்னிக்கவும். ஆனந்தவிகடவிடுதலை நக்கீர நியாஸ்அகமது வகையறாக்கள், ஊடகப்பேடிகளோ ஊடகப்பொறுக்கிகளோ அல்லவேயல்லர்!”

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    எனது எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

  2. Subhra's avatar Subhra Says:

    ஒராண்டுக்கு முன் வாங்கிய பூமணியின் அஞ்ஞாடி படித்துவிட்டீரகளா.

  3. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    நிரந்தரமாக mediocrityயில் திளைக்கும் தமிழர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிற எதுவும் குலக்கல்விதான் என்ற அடிப்படைப் புரிதல் உங்களுக்கு இல்லாதது நீங்கள் ஒரு பார்ப்பன பனியா தரகு முதலாளித்துவ பொந்துத்துவ வெறியர் என்பதையே காட்டுகிறது.

  4. A.Seshagiri.'s avatar A.Seshagiri. Says:

    திரு.ஜெயமோகன் அவர்கள் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் (http://www.jeyamohan.in/75200)குறிப்பிடப்பட்டிருக்கும் “நியாஸ் அகமது” தான் இவர் என்றால்,மிகவும் வருத்தமாக இருக்கிறது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *