மு ‘முக்காலே மூணு வீசம் கிணற்றைத் தாண்டிய’ கருணாநிதி: சில குறிப்புகள்
May 22, 2016
பொய்கள், அண்டப் புளுகுகள், புள்ளியியல் விவரணைகள் – என, ஒரு ஆங்கிலப் பதம் (= Lies, Big lies & Statistics) உண்டு.
இதற்கு அப்பாற்பட்டு – அடிப்படை புள்ளியியல் விவரணைகளை, பாவப்பட்ட எண்ணிக்கைகளை – தமக்கேற்றவாறு சுழற்றிக் கவிழ்த்தி உருட்டிப் புரட்டி சம்மட்டியால் அடித்து, ஊதிப் பெருக்கி உபயோகப்படுத்திக்கொண்டு கரமைதுனம் செய்துகொண்டு இன்புறுவது என்பது ஒரு கலை. இதில் திராவிடர்கள் விற்பன்னர்கள்.
திமுகவுக்குச் சாதகமாக அபுள்ளியியல் ரீதியாகத் தொகுக்கப்பட்ட(!) அரைகுறை எக்ஸிட் போல் எழவுகள், கேளிக்கைகள் பதிப்பிக்கப் பட்டபோது அளவுக்கு மீறிய புளகாங்கிதத்துடன் குரங்குக் குட்டிகள் போலத் துள்ளித் துள்ளிக் குதித்தல்கள்; பின்னர் அவை அரைகுறைகள் என நிரூபிக்கப்பட்டபின் அவற்றைக் குதறாமல், தோல்விக்குக் காரணமாக பணம் பிணம் எனப் பிதற்றுவதிலும், தேர்தல் ஆணையத்தைச் சாடுவதிலும் இந்தத் திராவிடர்கள் கைதேர்ந்தவர்கள்.
தம் நகைக்கத்தக்க தோல்விகளுக்கு திமுகவினர் – தம் அயோக்கியத் தனங்களை, கூட்டுக்கொள்ளைக் குடும்பத்தை, சுயலாபக் கயமைகளைக் காரணங்களாக மிகச் சரியாகவே பார்க்காமல் – ஏதோ பிறத்தியார் விஷயங்களை, தொடர்பேயற்ற புள்ளிவிவரங்களைக் காரணம் காட்டுவது என்பது நடிப்புக் கலையின், குடும்ப அங்கத்தினர்கள் ஒருங்கிணைந்து, ஆனந்தமாகக் கூட்டுகரமதுனம் செய்வதன் உச்சம்.
நடிகர் திலகம் என அழைக்கப்படத் தகுதியானவர், சர்வ நிச்சயமாக அந்த ‘உணர்ச்சிப் பெருக்கார்’ சிவாஜி கணேசனார் அல்லர். அந்தப் பட்டத்துக்குப் பல திராவிடத் தலைவர்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது.
-0-0-0-0-0-0-
‘தாம் யாருக்கும் வாக்களிக்க விருப்பப்படவில்லை’ வகை நோடா ஓட்டுகளால் தான் திமுக தோற்றது. இல்லாவிடில் பலப்பல மேற்படி தொகுதிகளை வென்றிருப்போம்.
திராவிட அறிவிலிகளின் ‘நோடாவால் வீழ்ந்தோம்!’ வகை விளக்கங்கள் விழுந்துவிழுந்து சிரிக்கத்தக்கவை, அவ்வளவுதான்.
“அதிமுக – திமுக இடையில் 1.1 சதவிகிதம் தான் வித்தியாசம் என்றும், இருந்தாலும் எதிரணியினர் ஆளும்கட்சி, நாங்கள் பிரதான எதிர்கட்சி!” (திமுக தலைவர் கருணாநிதி விளக்கம்)
துட்டு வாங்கிக்கொண்டு நன்றியுடன் ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி:
திருவாரூர் தொகுதியில் கழக வேட்பாளராக இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட நிலையில், 1 லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை அளித்து, தமிழ்நாட்டிலே அதிக வித்தியாசமான 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியினைக் குவிக்கின்றேன். (திமுக தலைவர் கருணாநிதி நன்றி நவிலல்)
அதாவது கருணாநிதி அவர்களின் வெற்றியும் அமோகமாக வாங்கப் பட்டதுதான்.
மு ‘முக்காலே மூணு வீசம் கிணற்றைத் தாண்டிய’ கருணாநிதி:
“சட்டசபை 15வது பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அ.தி.மு.க. அணிக்கு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.“இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.க அணிக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான்; அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். எப்படி என்றாலும் அவர்கள் ஆளும்கட்சி. நாம் எதிர்க் கட்சி. எதிர்க் கட்சி என்றால், தமிழகச் சட்டப் பேரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.
உங்களையும் உங்கள் கட்சியினரையும், அவர்கள் விருப்பப்படி ‘மக்கள்’ கடலில் தூக்கிப் போட்டிருக்கிறார்கள், உண்மைதான். ஆனால், உங்கள் கூற்றுப்படியே, நீங்கள் கட்டுமரமாக ஆகி ஆனந்தமாக மிதந்துகொண்டிருக்கமுடியாதா என்ன?
மிதப்பு என்றாலே வறட்டுப் பெருமிதம்தானே?
—
மேலும் புரிந்துகொள்ள:
- மு. கருணாநிதி வெற்றிக்காகக்கூட பாவம், திமுக, லஞ்ச துட்டு கொடுத்திருக்கிறது! படுகேவலம்!!! 15/05/2016
- முதலாவதாக, தமிழக அரசியலிலிருந்து துப்புரவாக ஒழிக்கப்படவேண்டிய கட்சி: திமுக 12/05/2016
- ங்கொம்மாள, இன்னா மாரீ பேஸ்ராங்கடா, நம்ம தலைவனுங்கோ! தாங்க முடிய்லயேடா!! :-(
- நவீண பஞ்ச பாண்டவர்கள், தமிழகத் தேர்தல்கள் – சில குறிப்புகள் 11/04/2016
- 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (3/3) 15/03/2016
- 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3) 14/03/2016
- 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3) 13/03/2016
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)
May 22, 2016 at 14:23
You’re right and it is so typical of DMK. Whenever they win by a narrow margin or the vote to seat conversion is in their favor, they would not make such noises. In the 1967 assembly election, Congress got 41.1% of the vote share, but got only 51 seats, which would be 21.8% of vote share. DMK got 40.7% of the vote share and 137 seats, which is 58.6% of seat share. Similarly, in the 2006 election, ADMK got 32.6% of the vote share and 61 seats, which is 26.1% of seat share, while DMK got 26.5% of vote share and 96 seats, which is 41.03% of seat share.
May 22, 2016 at 16:15
Thank you sire, that was useful data!
DMK jackasses – with their sour grape theories and their usual put-on victimhood are indeed a sight to behold.
I love them, I love them, I love them…
May 23, 2016 at 07:48
தோல்விக்குக் காரணங்களை உண்மையாக ஆராய்ந்து சுய பரிசோதனை செய்து அவர்கள் உருப்பட்டுவிட்டால் அது நமது தேசத்துக்குத்தானே கேடாகும்? தேர்தல் ஆணைய சதி, ஆரிய சதி, பார்ப்பன சதி என்று உளறிக்கொண்டு அவர்கள் இப்படியே இருக்கக்கடவது! அடுத்த தேர்தலில் இன்னும் உதிரக்கடவது!
May 23, 2016 at 09:00
“குடும்ப அங்கத்தினர்கள் ஒருங்கிணைந்து, ஆனந்தமாகக் கூட்டுகரமதுனம் செய்வதன் உச்சம்.”
ஆஹா! ஆஹா!! எப்படிப்பட்ட ‘சொல்லாடல்’ கட்டுமரத்தைப் பற்றி எழுதுவது என்றால் உங்களுக்கு தனி “குஷி” வந்து விடுகிறது!
May 23, 2016 at 20:05
பல வித கணக்குகள் … புலம்பல்கள் ..தேர்தல் ஆணையத்தை குறை கூறுவது என்பதெல்லாம் தான் அவரது மாமூலான வழக்கமாச்சே …. என்றுமே ” மாறாத ” ஒரே … மனிதர் ?