தன் வீட்டுக்குள், சுதேசிநாட்டுவெடிகுண்டை தியாகி கே.செல்வம் (என்கிற செல்வப்பெருந்தொகை) வீசவில்லை என்பதால், சவுக்கு சங்கர் நியாயமாக, தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவருக்கு நன்றிதானே நவிலவேண்டும்?
March 31, 2025
…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?
எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்?
1
எதற்கு இந்த நியாயமான வாதத்தை ஒரு சாத்தியக்கூறாக முன்னெடுக்கிறேன் என்றால்… … இந்தத் திருவாளன் செபெதொ (தியாகி செல்வப்பெருந்தொகை தான் – ப்ளடி நீளமாக ஒரு அற்ப அயோக்கியன் பெயரை தட்டச்சு செய்யச் சோம்பலாக இருக்கிறது) 2003 ஃபெப்ருவரியில், சென்னை ஸாஸ்திரி நகர் போலீஸ் மீதே நாட்டுவெடிகுண்டை, தன் திருக்கரங்களால் அருளிச்செய்து வீசிய பராக்கிரமும், புறநானூற்று வீரமும் படைத்தவன்!
எனக்கே ஏறத்தாழ நேரிடையாகத் தெரிந்த விஷயம்தானிது… சரி.
12ஆம் தேதி ஃபெப்ருவரி 2003 இரவில் நடந்த சம்பவமிது…சுமார் 9-10 மணிவாக்கில் நடந்தது என நினைவு. அப்போது சென்னை இந்திரா நகரில் தங்கியிருந்த நான், மாலைநேர நீண்டநெடிய நெடியடிக்கும் நடை பயில பெஸண்ட் நகர் எலீயட்ஸ் கடற்கரைக்கு, ஏதோ சிந்தனைகளில் மூழ்கி வந்திருந்தேன்… பீச்சாங்கரையிலிருந்து இந்த கசமுசாவைத் தூரத்தில் இருந்து பார்க்கவும் நேர்ந்தது… ஆனால் ஏதோ திராவிட குடிகாரக் கூவான், போதையின் பாதையில் திமுககார தெருப்பொறுக்கிக் கடமைகண்ணியம்கட்டுப்பாடின் காரணமாக, அடாவடித்தனமாக நடந்துகொண்டிருக்கிறான் என லூஸ்ல வுட்டுவிட்டு நகர்ந்தேன்; சிலபல மாதங்களுக்குப் பின், ஒரு நாள் அகஸ்மாத்தாகக் காலை தினசரியைப் பார்த்தவுடன் தான் இது பற்றிக் கொஞ்சம் மேலதிகமாகத் தெரிந்தது…
இருந்தாலும்… இதைப் பெரிதாக நினைக்கவில்லை, திமுக பெரும்பொறுக்கிகளின்மீது தான் என் முழுக் கவனமும் இருந்த காலமது… இத்தனைக்கும் அதே செபெதொ ஆசாமி, ஆடிட்டர் பாண்டியன் கொலை (1996?) வழக்கில் மனதொருமித்து ஐக்கியமாகியிருந்தான் எனவும் (இதைவிட முக்கியமாக, இன்று கடவுட்சிலைகள் கடத்தப் படுவதை எதிர்த்தும், கோவில்களின் மேன்மைக்காகக் கூவவும் செய்யும் முன்னாள் போலீஸ் ஸ்ரீமான் பொன்.மாணிக்கவேலும் அதேஅதே ஐக்கியத்தில் இருந்தார் என்பதும்) அன்றே தெரியும்… (ஆனால் இந்த ஒத்திசைவு தள எழவை சுமார் 2011ல் தான் ஆரம்பித்தேன், ஆகவே இந்தக் குப்பைகளைப் பற்றியெல்லாம் பெரிதாக அல்லது சுடச்சுட எழுதவில்லை)
ஆனால்…
இதே இதே படுபீதியளிக்கும் பராக்கிரமம் மிக்க செபெதொ ஆசாமிதான் இன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்பதை நினைத்தால்…
… … நம் காந்திஜீ மட்டும் இன்றிருதிருந்தால், பாவம்… இந்திய தோசைய காங்கிரஸ் தலைவர்களையே நாதுராம் கோட்ஸேயை விட்டுச் சுட்டுத் தள்ளியிருப்பார்..
ஹ்ம்ம்.
2
நல்லவேளை; ‘செபெதொ நாட்டுவெடிகுண்டு‘ என் கற்பனையல்ல.
ஏனெனில், ஆச்சரியத்துக்குரிய விதத்தில், நம் தமிழகக் காவல்துறை (திமுக கட்சியின் தமிழக ஏவல்துறையாகச் சுணங்கி இருக்கும் அதேயதே கொத்தடிமையமைப்புதான்!) இதனை விரிவாக ஆவணப் படுத்தியிருக்கிறது.
நீதிபதி கனம் அஷோக்குமார் அவர்கள் வழங்கிய நீதியாணை/ஜட்ஜ்மெண்ட் ஆவணத்திலும் இது குறிப்பிடப் பட்டிருக்கிறது… (இதில் உலகப் புகழ்பெற்ற நேர்மையாளரான ஏழைப்போங்காளன் ஆரஞ்ச்-ஜஸ்டிஸ் கே சந்துரு தான் செபெதொவின் ஆஸ்தான வழக்குரைஞராக, வாங்கிக்கொண்ட காசுக்கு நேர்மையாக… … இதைக் குரைத்து மதிப்பிட முடியாதுதான் – இருந்தாலும் இது குறிப்பிடத்தக்க, சுவாரசியமிக்க விஷயம்!)
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் – தேதி: 19/04/2004
மாண்புமிகு நீதிபதி எஸ். அசோக் குமார்
CRL OP. எண். 3443 / 2004 + CRL OP. எண்கள். 3444 முதல் 3446 வரை 2004 + Crl.MP Nos., 2004 இன் 811 முதல் 814 வரை
கே. செல்வம் @ செல்வப்பெருந்தகை .. மனுதாரர்
Vs
காவல் ஆய்வாளர்கள், ஜே-5 சாஸ்திரி நகர், ஜே-6 திருவான்மியூர், ஆர்-4 பாண்டி பஜார் காவல் நிலையங்கள்
மனுதாரருக்காக :: திரு.கே.சந்துரு, மூத்த வழக்கறிஞர்
பிரதிவாதிகளுக்கு :: திரு.ஐ.சுப்பிரமணியம், எஸ்சி, அரசு வழக்கறிஞர்
மேற்கண்ட நீதியாணை/ஆர்டரில் – பெருந்தொகை குறித்த அனைத்து வழக்குகளையும் ஒன்றுசேர்த்து சிபிஐ மேற்கொண்டு விசாரிக்கவேண்டும் என்று முடிகிறது.
நம் வசதிக்காக, ஆனால், அதிலுள்ள ஒரு சிறு ‘செபெதொ நாட்டுவெடிகுண்டு‘ பகுதியை மட்டும் ஒருமாதிரி தமிழ் படுத்தியெடுத்துப் பிரசுரிக்கிறேன்; இப்பகுதியில், அதன் ஆங்கிலமூலமும் வெட்டியொட்டப் பட்டிருக்கிறது… பெட்டியடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை [… …] என் வியாக்கியானங்கள்.
இனி ரிலாக்ஸ்டா படிக்கவும். விறுவிறுப்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்த சம்பவமிது. 100% உண்மை. அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற ஆணையிலிருக்கும் வரிகள்.
3
“3. [சென்னை] சாஸ்திரி நகர் காவல் நிலையத்தின் (எல் & ஓ) ஜே.5 காவல் ஆய்வாளர் பி.ரவிசேகரன் மட்டும் 2004 ஆம் ஆண்டு Crl.OP No: 3443 இல் ஒரு எதிர்மனுவை தாக்கல் செய்தார், மற்ற மூன்று Crl.OPகளில் எந்த எதிர்மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மேற்கூறிய எதிர்மனுவில் காவல் ஆய்வாளர் பின்வருமாறு சம்பவத்தை விவரித்தார்:
(i) அதே காவல் நிலைய காவல் கண்காணிப்பாளர் கே. ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், ஜே.5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தின் 2003 ஆம் ஆண்டின் குற்றம் எண்.136, பிரிவு 353 மற்றும் 307 ஐபிசி மற்றும் வெடிபொருள் சட்டம், 1908 இன் பிரிவு 3 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. புகாரில், புகார்தாரரும் அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த கே. சாமிநாதன் என்ற தலைமைக் காவலர் எண்.8075 உம் 15.2.2003 அன்று மாலை 4வது பிரதான சாலை, பெசந்த் நகர், 6வது அவென்யூ, காவல் நிலையத்திற்கு முன்னால் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், TN-07 R.4361 என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஒரு வாகனம் (ஸ்கார்ப்பியோ) பெசண்ட் நகர் 6வது அவென்யூ, அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து வடக்கு நோக்கி மிகவேகமாகச் சென்று கொண்டிருந்தது, மேலும் அது குளோபல் டிரஸ்ட் வங்கி (ஏடிஎம்) க்கு எதிரே உள்ள எலியட்ஸ் கடற்கரையில் உள்ள வேகத் தடையின் முன் சுமார் 21.05 மணிக்கு நின்றது.
இதைக் கண்டதும், மேற்கூறிய துணை ஆய்வாளரும் தலைமைக் காவலர்களும் வாகனத்தின் அருகே சென்று, வாகனத்தில் இருந்த நபரிடம், ஏன் இவ்வளவு படுவேகமாக வாகனம் ஓட்டுகிறீர்கள் என்று கேட்டார்கள்.
ஓட்டுநரின் அருகில் அமர்ந்திருந்தவர் செல்வப்பெருந்தகை @ செல்வம், மனுதாரர், ஆடிட்டர் கொலை வழக்கில் தொடர்புடையவர், காவல் அதிகாரிகளை மோசமான வார்த்தைகளில் திட்டி,[உங்கள்] கணினியை [ஃபைன் ரசீது கொடுப்பதற்காக] இயக்கினால் ‘முடித்து விடுவேன்’ என்று மிரட்டினார்.
காவல் துணை ஆய்வாளரும் தலைமைக் காவலர்களும் அந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுநரை வெளியே கொண்டு வர முயன்றபோது, மனுதாரர் தனது பையில் இருந்து பந்து வடிவிலான ஒரு பொருளை எடுத்து காவல் துணை ஆய்வாளரை நோக்கி வீசினார். இதைக் கண்டதும், காவல் துணை ஆய்வாளர் [அந்தக் குண்டைத் தவிர்க்கக்] குனிந்து கொண்டார் – அந்தப் பந்து வடிவிலான பொருள் தரையில் விழுந்து வெடித்து புகை மூட்டத்தை உருவாக்கியது.
இந்தப் புகை மேகத்தைப் பயன்படுத்தி, செல்வப்பெருந்தகை சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். [💪🏾 🔥]
அந்த துணை ஆய்வாளரின் துரத்தலையும் மீறி, செல்வப்பெருந்தகை காணாமல் போனார். [:-) 💐🤣🤣]
கட்டுப்பாட்டு அறைக்கு செய்தி அனுப்பிவிட்டு, தலைமைக் காவலரை சம்பவ இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்திய பிறகு, காவல் துணை ஆய்வாளர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு வந்து காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்து, சம்பவத்தை விவரித்தார்.”
“(ii) மேற்கண்ட புகாரின் அடிப்படையில், மனுதாரருக்கு எதிராக J.5 சாஸ்திரி நகர் PS Cr.No.136 of 2003 இல் பிரிவு 353 மற்றும் 307 IPC மற்றும் வெடிபொருள் சட்டம், 1908 இன் பிரிவு 3 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதைய காவல் ஆய்வாளர் திரு. AR.Mohan அவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அவர் ஏழு சாட்சிகளை விசாரித்தார்.
அதே நாள் (15.2.2003), காவல் ஆய்வாளர் வெடித்த பொருட்களின் எச்சங்களை மீட்டு காபந்து செய்தார், அதாவது கண்ணாடி துண்டுகள், சாம்பல் நிற கிழிந்த துணி, செய்தித்தாள் துண்டுகள், இரும்புத் துண்டுகள், சிறிய இரும்பு உருண்டைகள் [பெல்லெட்ஸ், pellets], சணல் துண்டுகள், எம் மணல் [M Sand sized granite] போன்றவை, சாட்சிகளான பாபு மற்றும் சரவண் [சரவணன்?] ஆகியோரால் சான்றளிக்கப்பட்ட 23.15 மணிக்கு மஹஜரின் படி மீட்கப்பட்ட பொருட்கள் கற்றறிந்த நீதிபதி வழிகாட்டல் மூலம் வேதியியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டன. சென்னை வெடிபொருள் தடயவியல் அறிவியல் துறையின் உதவி வேதியியல் ஆய்வாளர் மற்றும் உதவி இயக்குநர் மேற்கண்ட பொருட்களை ஆய்வு செய்த பிறகு ஸல்ஃபர், கார்பன், அலுமினியம், பொட்டாசியம், குளோரேட், சல்பேட், தயோ-சல்பேட் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர். மேற்கண்ட பொருட்களில் கண்டறியப்பட்ட கூறுகள் நாட்டு வெடிகுண்டின் [இம்ப்ரொவைஸ்ட் எக்ஸ்ப்ளோஸிவ் டிவைஸ் – ஐஇடி, நம் செல்ல திமுக துரைமுருகன் போல] வெடிமருந்து எச்சங்கள் ஆகும்; ‘வீரியம் குறைந்த’ வெடிபொருள். நாட்டு வெடிகுண்டு வெடிக்கும்போது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார். அப்போதைய காவல் ஆய்வாளர் விசாரணையை முடித்து, வெடிபொருள் சட்டத்தின் வழிகாட்டுதல்படி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரினார். இதற்கிடையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
(iii) அவர் 21.6.2003 அன்று சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் 5.12.2003 தேதியிட்ட A5/63811/203 இல் தனது நடவடிக்கைகளின் மூலம் வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளார், மேலும் அது 29.12.2003 அன்று பெறப்பட்டது. வழக்கு 2.2.2004 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4.2.2004 அன்று குற்றப்பத்திரிகைக்கு வழக்குத் தொடர துணை இயக்குநர் ஒப்புதல் அளித்தார், மேலும் 5.2.2004 அன்று நகர அரசு வழக்கறிஞர் குற்றச்சாட்டுப் பதிவை அங்கீகரித்தார், அதே நாளில் இறுதி அறிக்கை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள IX பெருநகர நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட்டு, அது PRC எண்.19/2004 ஆக கோர்க்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், வழக்கை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கேள்வி எழவில்லை.”
“(iv) மனுதாரர் [=மறந்துவிட்டீர்களா, இந்த ப்ளடி மனுதாரர் நம் செல்ல செல்வப் பெருந்தொகைதான்!] குற்றவியல் சட்டத்தின் பத்தி 9 இல் அற்பமான, கேலிக்கூத்தான, எரிச்சலூட்டும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
சம்பவம் நடந்த உடனேயே மனுதாரர்/குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டதால் [தற்காலத் தமிழ் வழக்காடல்படி ‘மாயமாகிவிட்டார்!’], காவல்துறையினரால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
ஆனால், திருவான்மியூர் காவல் நிலைய குற்றவியல் எண்.451/2003 தொடர்பாக மனுதாரர் தடுப்புக் காவலில் இருந்தபோது, அப்போதைய காவல் ஆய்வாளரால் 2.5.2003 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை மத்திய சிறையில் முறையான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரிவு 294(b) 307 , 506 (ii) IPC மற்றும் வெடிபொருள் சட்டம், 1908 இன் பிரிவு 3 இன் கீழ் மனுதாரர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். மேலும், வழக்கின் உண்மைத்தன்மையின் அடிப்படையில், சம்பவத்தை செய்தித்தாள் வழியே தெரிவிப்பது விசாரணை அதிகாரியின் விருப்பத்துக்குட்பட்ட விஷயமாகும்.
மேற்கண்ட வழக்கு ஒரு உண்மையான வழக்கு.“
[முழு ஆணை: https://indiankanoon.org/doc/636440/]
4
இப்போது புரிந்துகொண்டீர்களா?
சவுக்கு சங்கர் அவர்கள், செபெதொவுக்கு நன்றி தெரிவிக்கவேண்டிய அவசியம் அவருக்குப் புரியுமா? உங்களுக்கு அவரிடம் அறிமுகம் இருந்தால், அவரிடம் மேற்படி ‘செபெதொ நாட்டுவெடிகுண்டு‘ விஷயங்களைச் சொல்லி ஆசுவாசப் படுத்த முடியுமா?
ஏனெனில்…
நம் செல்ல செல்வப்பெரும்தொகை – உடல்வாகிலும் சரி, தொழில்முறையிலும் சரி – சுதேசிவெடிகுண்டர். இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்! அஹிம்ஸாவாதி. தியாகத்தாலும் யோகத்தாலும் உடல் மெலிந்திருந்தாலும், சுடர்விடும் செம்மல். ஞானப் பிழம்பு. ‘வாழ்க நீ எம்மான்’ வகையறா. நடமாடும் காந்திஜி!
ஓட்டப்பந்தயம் வைத்தால் – அதுவும் பின்னாலேயே ஒரு பாவப்பட்ட போலீஸ்காரன் துரத்துவது போல ஒரு ஸெட்அப் செய்தால்… மூச்சுவிடாமல் தொய்வில்லாமல் படுப்படுவேகமாக உலகையே சுற்றி, ஓட்டமாக ஓடி முதல்பரிசு வாங்க வந்துவிடுவார், நம் செபெதொ!
புகைமூட்டத்தில் மாயமாக மறையும் காட்சிகள், பேய்க்கதைகள் எல்லாவற்றுக்கும் முன்னோடி நம் செல்ல செபெதொதாம்!
…இப்படி ஏகப்பட்ட படிப்பினைகள், செல்வப்பெரும்தொகையால் நமக்கு வாரிவழங்கப் பட்டாலும்…
இந்த சுதேசிவெடிகுண்டனைப் போய் ஒரு தலைவனாக அங்கீகரித்து, இவன் பின்னால் கார்த்திக் சிதம்பரம் போன்ற படிப்பாளிகள் (இவர்கள் ஊழல்வாதிகளில்லை எனச் சொல்லவரவில்லை) அணிவகுப்பது… …. சிர்ப்புசிர்ப்பா வர்த்பா!
அதே சமயம் இந்த அடிப்பொடியே இவ்வளவு பராக்கிரமம் மிக்கவன் என்றால், யோசித்துப் பாருங்கள் – ராஹுல்காந்தி, உதைநிதி போன்ற கடைந்தெடுத்த கொள்ளைப்பணக்கார அயோக்கியர்களின் வீரியத்தை…
இப்போதைக்கு முடிந்தது.
நன்றி!




