மெல்லத் தமிழ் இனி பேஸ்த்தட்ச்சி ஜகா வாங்கிக்கினு போய் புட்டுக்கும்

August 24, 2024

1

மிகவும் நொந்துபோன சில (ஹ்ம்ம், சொல்லப் போனால், பலப்பல)  சமயங்களில் இப்படியாப்பட்ட விபரீதச் சிந்தனைகள் மண்டையைக் குடைந்து தள்ளிவிடும். அதே சமயம், “கவலை சரிதான். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு, தமிள் புட்டுக்கினுபோவாம இர்க்க நான் என்ன மசுத்தை புடுங்கிக் கொண்டிருக்கிறேன்?” என்கிற கேள்வியும் எழும்பும். ஸப்பாஷ் ஸர்யான போட்டீ.

மேலும் ‘தொல்காப்பியர்’ என நம்மால் செல்லமாகப் பெயர் வைக்கப் பட்டிருக்கும் அனானிமஸ் மயிலாப்பூர் மாமா, சுமார் 1000 வருடங்கள் முன் தன்(?) நாட்டிய நாடகத்துக்கான ‘தொல்காப்பியம்’  அழகியல் இலக்கணத்தை (சிலபல பகுதிகளில் மொழிக்கான இலக்கணமாகப் பிற இலக்கணங்களிலிருந்து பீராய்ந்து) எழுதும்போதும் இதே அங்கலாய்ப்புடன் எழுதியிருக்கலாம் என்பது ஒரு நியாயமான வரலாற்று நீட்டிப்பு – என்பதையும் கருத்தில் கொள்கிறேன்.

…அதாவது எந்தவொரு காலகட்டத்திலும் நாம் மானுடர்கள் ‘முற்கால மேன்மை’ கஞ்சாப்புகை மூட்டப் பெருமூச்சில் ஈடுபட்டு, இக்காலத்தில் இப்படியிருக்கிறதே என அங்கலாய்த்து, எதிர்காலங்களில் நிலைமை இன்னமும் மோசமாகி விடுமோ என மனக்கிலேசமுற்று…

ப்ளடி ஹெல். தேவையா? என் மரியாதைக்குரிய ரேண்டல்மன்ரொ தன் எக்ஸ்கேஸிடி தளத்தில் இட்ட ஒரு அழகான பதிவு நினைவுக்கு வந்து தொலைக்கிறதுவேறு… 

வாழையடிவாழையாகத் தொடர்வது தான் இந்த “இந்தக் காலத்துல நீங்க இப்படி…. அந்தக் காலத்துல நாங்க அப்படி…”

(…ஆனாலும் ஐயன்மீர், அக்காலங்களில் விஜய்குஜய் சூரியாபூரியா உதைசிதை என்றெல்லாம் கோடம்பாக்ககோபாலபுர உதிரிப் பொறுக்கிக் கோமகன்கள் இருந்திருக்கவில்லையே… என்று புத்தி பேதலிக்கும்போதே….  

…அதிபுனைவான ‘சிலப்பதிகார’ காலகட்டங்களில் கூறுகெட்ட கோவலனாக நடித்திருக்கக்கூடும் கோமணகேவலனும் கருப்பரசி கண்ணகியாக நடித்திருக்கக் கூடும் மூக்கூத்தியாளும் (மேலும் அக்கால ‘இந்நாட்டு இங்கர்ஸால்’ அண்ணாதுரையான இளங்கோவும், கூடத் தள்ளாடிக்கொண்டே அந்தாளுடைய இரட்டையரான முதுகம்மும்) என்னைச் சுற்றிக் கெக்கலி கொட்டிக் கூத்தடித்து விழுந்து விழுந்துச் சிரித்து எள்ளி நகையாடுகிறார்களே…

…எதிர்காலத்தில் உதைகுமார் விஜய்குமார் சூரியாகுமார் என அடுத்த தலைமுறையும் நம் தமிழர்களை ரவுண்டு கட்டி அடிக்கப் போகிறார்களே… …)

(விடிவே இல்லையா?)

((இல்லை))

2

(((இருக்கிறது)))

நமக்கு முன்னும் தமிழ் இருந்தது. (ஆனால் ‘தமிழி’ இருந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்)

நமக்குப் பின்னும் தமிழ் இருக்கும். (ஆனால், அது புட்டுக்குமா புட்டுக்காதா என்பது, மூமாவீரர்கள் தமிழினஉணர்வாளர்கள் எனப் பெரியதாக அறியப் படப்போகும் உதைகுமார் விஜய்குமார் சூரியாகுமார் வாயில் தான் இருக்கிறது.)

நம் அங்கலாய்ப்பாளர்களிடம் அது, சர்வ நிச்சயமாக இல்லை.

ஸ்ஸ்ஸ்ஸ்…. அப்பாடா! எப்படியாப்பட்ட விடுதலை இது!

…நம்மிடம் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பொறுப்புணர்ச்சி அகன்றது. பிற-சக தமிழர்கள் போலவே நாம் வெறும் உணர்ச்சிப் புணர்ச்சிகளிடம் விதியே என்று சரணாகதியடைந்து விடலாம்.

அந்தந்தக் காலங்களுக்கு ஏற்ப சீரிளமைச் சீரழிவுகள் அவற்றின் போக்கில் நடந்தே தீருவது காலத்தின் நியதி. தர்மம். ரிதம். (சீரமைப்புப் பாவலாக்களும் அப்படியே)

அவ்ளோதான்.

நன்றி.

3

நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் இதே மாதிரிக் கவலைகளைச் சுருக்கமாக எழுதியிருக்கிறார், அதனை அவசியம் படிக்கவும்:

தேங்கிவிட்ட தமிழ் – உவமைகளும் நகரவாசிகளும்

நானும் விட்டேனா பார் என்று அங்கு போய் பின்னூட்டமிட்டு, அவர் பதில் எழுத என…

(ஆனால், அடுத்த தலைமுறைக்கு நம் நெடிய நெடியடிக்கும் திராவிடக் கலாச்சாரத்தை எடுத்துச் செல்ல உதய நிதியாதிகள் இருக்கிறார்களே என்றால்… ….)

எது எப்படியோ!

அதற்குப் பிறகும், அவருடன் இது குறித்த சச்சரவுகள் தொடர்வதால், மேலதிகக் குறிப்புகள்:

  1. பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என்பவை அனைத்தும் செயற்கை, மொழியும் ப்ளடி செயற்கை – நம் முன்னோர்கள் போல முக்கிமுனகிக்கொண்டே நாம் இருந்திருக்கலாமே! 
  2. ஆகவே – நம் படிமங்களும் இன்னபிற எழவுகளும் ஏன் தொடர்ந்து ப்ளடி இயற்கையைச் சார்ந்து இருக்கவேண்டும்? அவரவர் வாழ்க்கைத் திறனும் வாய்ப்புகளும் சார்ந்து கிடைக்கும் உவமைகளை வைத்து ஆயுளை ஒப்பேற்ற முடியாதா?
  3. நகர வாழ்க்கைக்கு என்ன படிமங்களும் உவமானங்களும் உருவகங்களும் தேவையோ அவை ஏகத்துக்கும் இருக்கின்றனதாமே?
  4. உவமைகள் படிமங்கள் போன்ற அனைத்து எழவுகளுக்கும் ‘எக்ஸ்பைரி டேட்’ என ஒன்று இருக்கிறது.
  5. இந்த எழவுகளெல்லாம் எல்லாருக்கும் எக்காலத்திலும் புரிந்தேயாக வேண்டும் என்கிற அவசியமே ப்ளடி இல்லை.
  6. இந்த மெடஃபர்ஸ் இமேஜரிஸ் வகை படிமம் படிக்காதேடேட்டி எல்லாம் எப்போதுமே குறுகிய வட்டங்களில் நிலவுவவைதாம் – பரந்துபட்ட மக்களுக்கு இவையெல்லாம் புரியவேண்டியதும் இல்லை. புரிந்தவர்கள் பெரிய மயிறாண்டிகளும் அல்லர்.
  7. இந்த ப்ளடி படிப்பு புத்தகம் வாசிப்பனுபவம் இலக்கியம் வகையறா கண்றாவிகள் எல்லாமே 99% வசதியுள்ள குமாஸ்தாக்களும் பிற மனம் சிதைந்த கிறுக்கர்களுக்கும் தான் ஒத்துவரும். இதில் வியாபார நோக்கே இல்லாமல் சமூகசேவை இடியாப்பம் செய்கிறேன், சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்கிறேன் எனப் பினாத்தும் இலக்கியப் புரவலர்கள் வேறு! ப்ளடி இலக்கியத்தை புரந்து புரந்து புரண்டு புரண்டு எழுதியே நம்மைப் புறமுதுகு காட்டி ஓடவைத்துவிடுகிறார்கள், பாவிகள்!  
  8. “புரிந்தவன் பிஸ்தா!”
  9. புதுப்புதுச் சொல்லாடல்கள் வழக்காடல்கள் படிமங்கள் குறியீடுகள் உவமைகள் ஒவ்வாமைகள் எல்லாம்  ப்ளடி கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன…  செந்தில்வாழைப்பழம், மெர்சலாய்ட்டேன்… … இதெல்லாம் எழவெடுத்த கோடம்பாக்கத் திருடர்களால் பரப்பப் பட்டிருக்கலாம்… ஆனால் இதெல்லாம் குறியீடுகளும் புதிய சொல்லாடல்களும் இல்லையா கோப்பால்?
  10. ஆயிரங்காலத்துப் பயிர் என்றால்  என்ன, அதன் தாத்பர்யம் என்ன, என்ன ஆழமான விஷயமது என – தமிழ் கிமிழ் எனவுருகும் சீமானாதிகள் தொல்திருமாவளவளவளவனாதிகளின் பிள்ளைகளுக்கு, மன்னிக்கவும்,விசிலடிச்சான் குஞ்சப்பர்களுக்கு என்ன ப்ளடி பெரிதாகப் புரிய வேண்டும்?

என்ன சொல்ல வருகிறேன் என்றால்:

  1. ஒவ்வொரு எழவெடுத்த சமூகமும் அதனதன் ரெவலுக்கு தன் சொல்லாடல்களையும் படிமங்களையும் உருவகங்களையும் பழமொழிகளையும் கிழக்கிழவிகளையும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
  2. ஆனால் நமக்கு மட்டும் நம்முடைய “”கொக்குக்கு ஒன்றே மதி”

புரிந்தவன் பிஸ்தா.

பின்தற்குறிப்பு: 2011 வாக்கில் மெட்றாஸ் ஹைகோர்ட்டில் ஒரு பாவப்பட்ட ஆசாமியைப் பார்த்தேன், பேசிக்கொண்டிருந்தேன். பாவம்.

ஏதோ வழக்கு வியாஜ்யம் என தன் வேலூர் வீடு தொடர்பாக (பக்கத்து மனைக்காரருடன்) இரண்டாம் தலைமுறையாகப் பிணக்கு என நினைவு. 1954லோ என்னவோ அவர் தந்தையாரால் போடப்பட்ட வழக்கு. 2011 வரை அது ஒரு மசுத்துக்கும் நகரவேயில்லை. சலித்துப் போயிருந்தார் பாவம்.

“எப்போ வழக்கொழிந்து போகுமோன்னு காத்திட்டு இருக்கேன்” என்று அவர் சொன்னாரே பார்க்கலாம்!

நீதி: வாய்ப்புக் கிடைத்தால் வாய்பெருத்த தமிழன் பழைய+நைந்த சொற்றொடர்களுக்கு புதிய அர்த்தம் கற்பிப்பான்.

கல் கற்பி எனச் சொன்ன பீம்ராவ் ராம்ஜியாருக்கே பெப்பே காட்டி, அவருக்கு, அவர் விருப்பம் போலவே கற்சிலை வைத்து நீலப்பெய்ண்ட் அடித்தது போதாது என அவரை கம்பிச் சிறையிலும் தள்ளி அவருக்கும் பாடம் கற்பிப்பவன் தானே ப்ளடி தமிழன்?

இந்த அழகில் ‘தேங்கிவிட்ட தமிழ்’ என்று புலம்புகிறார்கள்… தேவையா?

எதற்கு கோடம்பாக்கம் இருக்கிறது, ப்ளடீ?

(…ஆனாலும் ஐயன்மீர்… எதிர்காலத்தில் உதைகுமார் விஜய்குமார் சூரியாகுமார் என அடுத்த தலைமுறையும் நம் தமிழர்களை ரவுண்டு கட்டி அடிக்கப் போகிறார்களே… …)

:-(

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *