தமிழர்களின் அலாதியான அடுக்குப்பிரிவு உணர்ச்சி (hierarchical mentality)

January 26, 2014

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (18/n)

சாளரம் #10: நம் தமிழர்களுக்கு ‘நாம் vs மற்றவர்கள்’ அல்லது ‘நம்மாள் vs வேற்றாள்’ குறித்த இனம் புரியாத (அதாவது, புரிந்த) அடுக்குப் பிரிவு உணர்ச்சி என்பது மிக, மிக  அதிகம்.

அதாவது இந்த உணர்ச்சி – நம்மையும், மற்றவரையும் அடுக்குப் பிரிவு சார்பாகவே பார்த்து, அது மேல், இது கீழ்  என விரித்து, முத்திரை குத்தி – அதன் மூலமாக விரியும் பிம்பங்களினூடே, அவை மூலமாக மட்டுமே  அதுவும், எந்த மானுட அடிப்படை விழுமியங்களினாலும், அறவுணர்ச்சிகளினாலும் பாதிக்கவேபடாமல்  உலகைப் பார்த்தல்.

மேல்: நாமெல்லாம் அடைய விழையும் விஷயம்; வெள்ளை நிறம்; இது மட்டுமே சரியான குறிக்கோள்; மூளையை மட்டும், அதுவும் குறைவாக உபயோகிக்கவேண்டும்; குறைந்தபட்ச உழைப்பு போதும்; எப்படியாவது அடையப் படவேண்டும்; மேற்கண்டபடி ’மேலாக’ இருப்பவர்களைப் போல ஆகவேண்டும். இவர்கள் நம் வாழ்க்கையில் நகலெடுக்கத் தக்கவர்கள் – சரியான முன்மாதிரிகள்.

கீழ்: நாமெல்லாம் சென்றடையக்கூடாத விஷயம்; கறுப்பு நிறம்; உருப்படவைக்காத குறிக்கோள்; உடலுழைப்பு கூடாது; தேவைக்கதிகமான உழைப்பு நிச்சயம் கூடாது; இதனை எப்படியாவது அடையாமல் இருக்கவேண்டியது அவசியம். இப்படிக் கீழானவர்கள் நம் வாழ்க்கையில் உதாசீனம் செய்யத் தக்கவர்கள், வெறுக்கப் படவேண்டியவர்கள். ஆனால் உபயோகிக்கப்பட வேண்டியவர்கள்.

இப்படி மேலுக்கும் கீழுக்கும் பகுப்பு செய்து – எந்த ஒரு மனிதனையும், விஷயத்தையும் பிரித்து இவற்றின் மூலமாக மட்டுமே வாழ்க்கையை அற்பத்தனமாக அணுகுவதை,  தமிழர்களாகிய நாம், ஒரு போற்றத்தக்க  நுண்கலையாகவே வளர்த்தெடுத்திருக்கிறோம்.

-0-0-0-0-0-0-0-0-0-0-

நான் இந்தியாவில் நெடுக்காகவும் குறுக்காகவும் பரவலாகப் பயணங்களும், வேலைகளும், வேலை சார்பான சுற்றல்களும், சில சமயம் ‘கொள்கை’ சார்ந்த சுற்றல்களும் – ஓரளவுக்குச் செய்திருக்கிறேன்; மூளை குழம்பி உருகிஓடிய சில தருணங்களில், கிராமம் கிராமமாக சித்தம் போக்கு சிவன் போக்கு எனப் பயணம் செய்திருக்கிறேன்; பலவித மக்களுடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். ஆகவேதான் மிக வருத்தத்துடன் சொல்கிறேன் – என் சொந்த  அனுபவத்தில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரந்துபட்ட ஜாதிபேத வெறியுணர்ச்சி அதிகம் என எனக்குப் படுகிறது.

இருப்பினும் இது நான் ஒரு தமிழன் என்கிற என்னுடைய பார்வையாலும் (participant observer என்று கூட இதனைச் சொல்லமுடியாது), என்னுடைய பலதரப்பட்ட அனுபவங்களாலும், ஏன், என் போதாமைகளாலும்கூட இக்கோட்பாடு வடித்தெடுக்கப் பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், பின்புலம் எப்படி என்னவாக இருந்தாலும், எனக்கு இந்தச் சாளரமானது,  நிகழ்கால. அக்கால நிகழ்வுகளைப் பகுத்துப் புரிந்துகொள்ள மிக உதவியாக இருக்கிறது. வேறெந்த அடிப்படைக் காரணிகளால் புரிந்துகொள்ள முடியாத விஷயத்தையும், இம்முப்பட்டகத்தை (=ப்ரிஸ்ம்) வைத்துக் காண முற்பட்டால், நிறப்பிரிகை ஏற்பட்டு, துல்லியமாக, அவ்விஷயத்தைத் தெரிந்து, அறிந்துகொள்ள முடிகிறது. அந்த அறிதலின் மேல், சில அனுமானங்களைக் கட்டமைத்து, எதிர்காலம் எப்படி அமையலாம் என்பதை கணிக்க முடிகிறது. பல சமயங்களில் இப்படி தர்க்கபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்ட கணிப்புகள் சரியாகவே இருந்திருக்கின்றன என்பது, சமயத்தில் எனக்கு  துக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே  நேரத்தில் அளிப்பது.

அதாவது எல்லா இடங்களிலும், அனைத்து மொழிப் பிராந்தியங்களிலும், மதச்சார்பினர்களிலும், இந்த ஜாதி உணர்ச்சி  பொதுவாக இருந்தாலும் — ஆங்காங்கே சில இடங்களில் படு மோசமாக இருந்தாலும், நம் தமிழகத்தில் மட்டுமே ஜாதிபேதம் என்பது வீரியத்துடன் அதன் உச்சத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.இந்த நிலைமைக்கு, நம்முடைய செல்லத் தறுதலையான திராவிட இயக்கத்தைத் தான் காரணமாகச் சொல்வேன் – ஆனால், இக்கட்டுரையின் குவியம், இந்த திராவிட இயக்கத்தைப் பற்றியல்ல. ஆகவே…

-0-0-0-0-0-0-0-0-0-0-

நம்மாளை (ஸ்ரீலங்கா தமிழர்கள்) நம்மாளே (பிரபாகரன்) கொடுமை செய்தால் கொலை செய்தால், அதுவும் தமிழ்க் குழந்தைகளைக் கொலை செய்தால் – சகோதர இயக்கத்தினரை ஒழித்தால், தமிழர்களின் பரந்துபட்ட தலைவர்களாக ஜனநாயக ரீதியாக வரக் கூடியவர்களைத் துரத்தித் துரத்தி அழித்தொழித்தால் அதனைப் பற்றி ஒரு பேச்சும் இருக்காது.

இந்த ஆயுதம் தரித்த எல்டிடிஇ குளுவான்கள், நம்முடைய இந்தியாவிற்கே வந்து, தங்களுக்கு உதவியாக இருந்த ஒரு அரசியல் தலைவரையே கொன்றது எல்லாம் நமக்குக் கவலையில்லை; ஏனெனில் ராஜீவ்காந்தி – ஒரு மாற்றாள். கொலைகாரனாக இருந்தாலும், பிரபாகரன் ஒரு ‘மாவீரன்!’ – நம்மாள்! ஆனால் – இந்த அற்புதத் தம்பியின் அயோக்கியத்தனங்களைப் பற்றிக் கவலையே படாமல் – புறநானூற்று வீரம், ரேம்போ போல துப்பாக்கி ஏந்தி எக்காளச் சிரிப்புச் சிரிக்கும் புலிகள், எலிகள், பெருச்சாளிகள் என்று நாம் புல்லரிப்படைவது நிற்கவே இருக்காது.

இந்தக் கோர கபடவேடதாரியின் ஃபாஸ்ஷிஸ்ட் பிடியிலிருந்து வெளியே வரும் மாஜி எல்டிடிஇயினரை, நம் வசதியான நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டு – நம்பிக்கைத்துரோகிகள், எட்டப்பன்கள் எனத் திட்டுவோம். இந்த எல்டிடிஇ பிடியில் இல்லாமல் முடிந்தவரை சகஜ வாழ்க்கை வாழ முயன்று கொண்டிக்கும் மற்ற பிராந்தியங்களில் உள்ள தமிழர்களை (இவர்கள் தாம் ஸ்ரீலங்காவில் பெரும்பான்மையினர்), முஸ்லீம்களை வெறுப்போம். ‘இயக்கத்’துக்கு உவப்பாக நடக்காதவர்கள் மாற்றாட்கள் தானே?

ஆனால், அதே நம்மாளை, பிறத்தியார் (ஸ்ரீலங்கா படையினர்) துன்புறுத்தினால் நமக்குப் பிடிக்காது. இனப்படுகொலை, ரத்த ஆறு, பித்த ஏழு என்று உளறிக் கொட்டிக்கொண்டு கும்மியடிப்போம்.

நம்மில் ஒரு ஆளே அயோக்கியத்தனம் செய்தால், ‘விடுதலை’ போன்ற உதிரிப் பத்திரிகைகளில் அதிகபட்சம் ஒரு முணுமுணுப்புகூட இருக்காது. மேற்கொண்டு இடி விழுந்தால்கூட நாம் கவலைப்பட மாட்டோம் (கேடி சகோதரர்கள், ராசா ஊழல்கள்). ஆனால் இவர்களைப் பார்க்கும்போது குழந்தைத்தனமாக(!)  ஊழல் செய்த கர்னாடக யெட்டியூரப்பா பற்றி வண்டைவண்டையாக ‘விடுதலை’ எழுதும்.

-0-0-0-0-0-0-

எதற்கெடுத்தாலும் ஜாதி என்று அலைவது நம் ஊரில்தான். பெரும்பாலான தமிழர்கள் வெளியூர்களுக்குச் சென்றாலும், பிற தமிழர்களுடன் பழகும்போது இந்த ஜாதிபேதம் அடிச் சுருதியாக இருந்திருப்பதை (ஏன், இன்றுவரை தொடர்ந்து  இருப்பதைக்கூட) தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன்.  என்னுடைய சொந்த, நேரடி அனுபவங்களிலிருந்து இதற்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றை இங்கு நான் கொடுக்கிறேன்.

… தமிழர்களுடைய நுண்மான் நுழைஜாதி அறியும், அதற்கேற்பத் தம்மையும் பிறரையும் ஒரு அடுக்குமானப் படிகளில் வைத்து – சிலரை நக்கிக்கொண்டும், சிலரை மிதித்துக்கொண்டும் புளகாங்கிதம் அடையும் பண்பையும் கருத்தில் கொண்டோமானால்- இரு விதங்களில் இவை, நம்முடைய ‘புலம் பெயர்ந்த’ தமிழர்களைப் பாதிக்கின்றன. இங்கு,  ‘புலம்’  என்று சொல்லப்படுவது தமிழகம் என்கிற பல மட்டைகள் ஊறும் ஒரு கொசுலார்வாக் குட்டை என அறிக.

1. புபெ தமிழர்கள் – பொதுவாக, தமிழகத்தில் இருக்கும் ஜாதி அடுக்குகளின் படியே, மேல்-கீழ் என்றே,  அங்குள்ள தங்களுடைய ‘தமிழ்ச் சொந்தங்களை’ அணுகுவார்கள். உயர உயரப் பறந்து வெளி நாடு சென்றாலும், ஊர்க்குசும்பன் ஊர்கவுடராகவா ஆகிவிடுவான்? அவன் அப்படியேதான் இருப்பான். இதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லைதான்.

2. இரண்டாவது தான் எனக்கு மாளா ஆச்சரியம் தருவது: இந்த சராசரித்தன புபெ தமிழன், வெளி நாடுகளில் உள்ள சமூக (ஏற்றத்தாழ்வு/மேல்கீழ்) அடுக்குகளைப் பார்ப்பான். மேலுக்கு – அதாவது வெள்ளைக்காரன்களுக்குக் கொஞ்சம்  கீழே தம்மை வைத்துக் கொள்வான். எப்படியாவது, வெள்ளைக்காரர்களாகவே ஆக முடியாவிட்டாலும் கூட, அவர்களுடைய மதிப்பைப் பெற்றுவிடவேண்டும் – அவர்களுக்கு வெகு அருகே சென்று விடவேண்டும் என்று துடிப்பான். நடிப்புச் சுதேசியான அவன், அவர்களைப் போலவே பேச, இயங்க, முயங்கவெல்லாம் முனைவான்.

ஆனால் அவன், இவற்றோடு – இந்த அளவிலேயே நிற்கமாட்டான்; அந்த வெள்ளைக்கார நாட்டில் (சமூக/பொருளாதார) கீழ் அடுக்குகளில் இருக்கும் மக்களை – அந்த ஊர்க் காரர்கள் நடத்துவதை விட, மிகக் கேவலமாக நடத்தி, தன்னுடைய அடுக்குவசிப்பை ஒப்பேற்றி நிர்வகிப்பான்.

உதாரணத்துக்கு, அமெரிக்கா (= ‘ஸ்டேட்ஸ்’) சென்ற சராசரிப் புபெ தமிழனுக்கு – கறுப்பர்கள், உயிர்வாழும் ஜந்துக்களாகவே தென்பட மாட்டார்கள் – ஆக, அவன், அங்குள்ள கறுப்பர்களை கண்டுகொள்ளவே மாட்டான். அப்படியே கண்டுகொண்டாலும் அவர்களைக் கீழாகவே, எதிர்மறையாக — தனக்குச் சமமில்லாதவர்களாக, கேவலமானவர்களாக மதிப்பான். கறுப்பர்களை – காலூ (தரக்குறைவான ஹிந்தி சொல்), நிக்கர் (nigger), கறுப்பன் என்றெல்லாம் மட்டுமே குறிப்பிடுவான். இவனுக்கு, எண்ணி ஒரு கறுப்பு நண்பன் கூட இருக்கமாட்டான். மேலும், இவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டான். அவன் நிரக்ஷரகுக்ஷி. அவ்வளவுதான்.

ஆனால் ‘மேல்’ உள்ள வெள்ளைக்காரனை – அவனுடைய  தத்துவங்களை, கோட்பாடுகளை, இயக்கங்ளை (புரிந்து கொள்ளாமல்தான்) கொண்டாடுவான் இவன்.  இவனுக்கு – வெள்ளை நிறம் மேலானதால், அந்த நிறத்தோலன் செய்வது, அவன் நோக்குதான் அடிவருடத் தக்கது, பொறாமைப்படத் தக்கது. அது தான் ‘மேல்.’ இவன் மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ‘நடு.’ பிறர் ‘கீழ்.’ கடைசிப் பிரிவினர் கடையோர். அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். ஆமென்.

… … எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அடிக்கடி எழுதுவதைப் போல,  இப்படிப்பட்ட கல்யாணகுணங்களுடைய எவ்வளவு புபெதமிழர்களை நான் பார்த்திருப்பேன்!

-0-0-0-0-0-0-0-0-0-

ஒரு சராசரித் தமிழனுக்கு, இந்த அடுக்குவாரிப்-பார்வை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு அதன் வழியாகச் சிந்தித்து தன்னளவில், சமூகத்தைப் பற்றிய அனைத்து விஷயங்களும் தான் அறிந்து / தெளிந்து / பிடிபட்டுக் கொண்டு விடுவதாக ஒரு தொடரும் பிரமை.

ஆனால், அவன் என்னதான் செய்வான்? கடந்த 60-70 ஆண்டுகளாக, இப்படிப்பட்ட குருட்டுப் பார்வை ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒரு கந்தறகோள அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசியலில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு மூளை ஒன்றும் தேவையேயில்லை – என்பதைப் புரிந்து கொண்ட இயக்கங்களும், அந்த மூளையைப் பேணுவதை விட, கல்வி, ஆரோக்கியம், உள்கட்டுமானங்கள் போன்ற கவைக்குதவாத விஷயங்களை மேம்படுத்துவதை விட – திரைப்படப் பளபளப்பு அடுக்குமொழி பொறுக்கி நடைகளை, ஜிகினாக் கவர்ச்சிகளை,  வளர்த்தின – வளர்த்திக் கொண்டிருக்கின்றன. அயோக்கியத்தனத்தை பேணுகின்றன. சராசரித் தமிழனின் திகைக்கவைக்கும் சராசரித்தனத்துக்கு, சித்தாந்தச் சகதிகளுக்கு தங்களால் ஆன சேவையைச் செய்கின்றன. தொடர்ந்து முனைந்து செய்துகொண்டே இருக்கின்றன. தமிழனை அறிவற்ற மலடனாக ஆக்குவதில் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபடுகின்றன.

நாமும் – இந்த அரைகுறை திராவிட இத்தியாதி இயக்கங்கள் வழி நடத்தும் அற்பத் தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டு, முட்டாள் திரைப்படக் கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு, தமிழகத்தை உய்விக்கிறோம்.

இதற்கு மேலதிகமாக — ஏதோ, நம்மால் முடிந்த அளவு, நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில், நமது அடுக்குப் பிரிவுக்கு ஏற்ற முறையில் – நாமும்  தமிழகத்தை முன்னேற்றுகிறோம்.

அதாவது, ‘கெட்டிக்கார, பிழைக்கத் தெரிந்த’ தமிழனை நக்கிக்கொண்டு.  ‘பாவப்பட்ட’ தமிழனை நசுக்கிமிதித்துக்கொண்டு… க்றிஸ்தவம், இஸ்லாம், ஹிந்துமதம் என அனைத்திலும் சந்தர்ப்பவாதத்துடன் ஊடாடிக்கொண்டிருந்து அவற்றிலுள்ள சிலஜாதிமக்களைத் தூற்றிக்கொண்டு, சிலஜாதிமக்களுக்குக் கொம்பு சீவி விட்டு, சில ஜாதிமக்களை நசுக்கிக் கொண்டு, சில ஜாதிமக்களைக் கொண்டாடிக்கொண்டு, சிலஜாதிமக்களைக் கண்டுகொள்ளாமலிருந்துகொண்டு, சிலஜாதிமக்களை முதுகில் குத்திக் கொண்டு, பலஜாதிமக்களைப் பிச்சை எடுக்கவைத்து … …

… மேலிருப்பவர்களை எட்டிப் பிடிப்பதற்காக நம்மை ‘மேல்’ நோக்கி முன்னேற்றிக் கொண்டு,  கீழ் இருப்பவர்களை எட்டியுதைத்துக் கொண்டு அவர்களை  ‘கீழ்’ தள்ளிப் பின்னேற்றிக் கொண்டு…

A typical, inveterate  Tamil is a shining example of Homo Hierarchicus. Yes.

சுபம்.

(வேறென்ன சொல்ல!)

குறிப்பு: ஆனால், இவற்றுக்கெல்லாம், இப் பொதுவிதிகளுக்கெல்லாம்,  விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கிறார்கள். இம் மஹானுபாவர்களினால்தான், பருவமழை பொய்க்காமல் பெய்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

(அடுத்து) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (19/n)

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

51 Responses to “தமிழர்களின் அலாதியான அடுக்குப்பிரிவு உணர்ச்சி (hierarchical mentality)”

  1. சரவணன் Says:

    /// கல்வி, ஆரோக்கியம், உள்கட்டுமானங்கள் போன்ற கவைக்குதவாத விஷயங்களை மேம்படுத்துவதை விட ///
    ஒப்பீட்டளவில், தமிழ்நாடு காங்கிரஸ் காலம் தொட்டு இன்றைய ஆட்சி வரை கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் மற்ற பல மாநிலங்களைவிட நன்றாகவே செயல்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். நமது ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல மாநிலங்களில் இருப்பவற்றைவிட நன்றாகச் செயல்படுகின்றன. தடுப்பூசிகள் போடுவதில் முன்னணி மாநிலங்களில் தமிழ்நாடு இருக்கிறது. குடும்பத் திட்டமிடலிலும் உச்சியில் இருக்கிறது (கேரளாவிற்கு அடுத்து) .மூன்றாவது பிரசவம் என்பது மிகக் குறைந்த சதவீதமாக இருக்கிறது. சத்துணவு காரணமாக பள்ளி சேர்க்கை விகிதம், இடை நிற்றலைத் தடுத்தல் ஆகியவற்றில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் இருக்கிறது.

    கட்டுமானத்தில், தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகளும் பேருந்து வசதிகளும் உள்ளன. இதிலும் இந்திய அளவில் சிறப்பான இடமே. காமராஜர் காலத்திலேயே எல்லா கிராமங்களுக்கும மின் வசதி வந்துவிட்டது. (இன்றைய மின் பற்றாக்குறை சமீப 15-20 ஆண்டுகாலப் பின்னடைவுதான்.) பீகாரில் 40 சதவீதம் கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் சென்று சேரவில்லை (குறைந்த பட்சம் நிதிஷ்குமார் வரும்வரை).

    இந்த விஷயங்கள் இந்திய அளவில் கவனிக்கப்பட்டுள்ளன. குஜராத்தைவிட தமிழ்நாடு இம்மாதிரியான விஷயங்களில் (உதாரணமாக ஊட்டச்சத்து குறைவில்) பல படிகள் மேலே இருக்கிறது. (ஏசர் ரிப்போர்ட், பைசா ரிசல்ட் போன்றவை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே மோசம்தான்)

    அடுத்தது ஒரு கேள்வி- எட்டியூரப்பாவை மோடி பூச்செண்டு கொடுத்து வரவேற்பது அற்பத்தனமான அரசியலா இல்லையா?

  2. பக்கிரிசாமி.N Says:

    என் அனுபவத்தில் வெளி மாநிலங்களில் சாதி அமைப்பை ஒத்துக்கொண்டுவிட்டதைப்போல இருக்கிறது. தமிழ் நாட்டிலும் ஒத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஒத்துக்கொள்ளாததுபோல் காட்டிக்கொள்வதால் சாதியை தங்கள் வசதிக்கேற்றவாறு உபயோகித்துக்கொள்கிறார்கள். சாதிக்கொடுமைகள் தமிழ்நாட்டைவிட வடக்கே அதிகமாகத்தான் இருக்கிறது. பு.பெ – இருப்பவர்களைப்பற்றி தாங்கள் கூறுவது தமிழ் நாட்டவர்கள் மட்டும்தான் அப்படி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அனேக இந்தியர்களும் அப்படித்தான். எனக்கு தெலுங்கு, மலையாளிகளுடன் கொஞ்சம் பழக்கம் உண்டு. அவர்கள் தமிழர்களை நல்லவர்களாக்கிவிட்டார்கள். தமிழன் என்ன செய்வான் என்று என்னால் அனுமானிக்கவாவது முடியும். இன்னொரு மாநிலத்தைக் காட்டி, அவர்கள் நீங்கள் குறிப்பிடும் குறைகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறுங்களேன் பார்க்கலாம். சிலோன் பற்றி தாங்கள் கூறுவதில் மறுப்பேதுமில்லை.

  3. poovannan73 Says:

    ஒரு புலம்பெயர்ந்த தமிழனாக உங்கள் கூற்றினை படித்ததும் வரும் வேதனையும் கோவமும் மிகவும் அதிகம் சார்.
    எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி அடித்து விடுவது ஞாயமா.மற்ற மாநில மக்கள் பொறாமையோடு கிண்டல் அடிக்கும் முக்கிய குழுக்கள் மூன்று தான்.மலையாளிகள்,தமிழர்கள்,வங்காளிகள்.
    நன்றாக இயங்கும் தமிழ்சங்கங்கள் பெரும்பாலான மாநிலங்களில் உண்டு.மற்ற மாநிலத்தை சார்ந்தவர்களின் சாதி பெயரிலேயே தெரிந்து விடுவதால் அவர்கள் எந்த நுண்மான் நுழைபுலதையும் பின்பற்றாமல் சாதிகளாக இணைகின்றனர்.அது தமிழனுக்கு கிடையாது.பல மாநிலங்களில் பணியில் இருந்ததால் பல நூறு தமிழர்களின்,அறிமுகம் நட்பு எனக்கு உண்டு.அவர்களில் பலரின் சாதி எனக்கு தெரியாது. என் சாதியையும் அவர்களுக்கு தெரியாது.
    ராஜஸ்தான் மீனா இனத்தவரும் மத்துரும் ஒன்றாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்தால் கூட எந்த தொடர்பும் அவர்களுக்கு கிடையாது.ரெட்டிகளுக்கும் காபுகளுக்கும் மடிகாக்களுக்கும் கூட எட்டாம் பொருத்தம் தான்.பிஹாரி என்பதால் வேறு சாதி பிரிவுகளை சார்ந்தவர்கள் நட்பாக இருப்பது கிடையாது.
    நண்பர்களோ நானோ வாங்கும் தமிழ் புத்தகங்கள்(ஆனந்த விகடன் முதல் ஆழம் வரை ) எத்தனை தமிழர் வீடுகளுக்கு வட்டம் அடிக்கிறது தெரியுமா.தமிழ் படத்தை டவுன்லோட் செய்து பாசத்தோடு ஷேர் செய்யும் நண்பர்கள் சாதி பார்த்து செய்வதில்லை.
    தமிழர்களின் எண்ணிக்கையும் மத்திய அரசு நிறுவனங்களில் குறைவு கிடையாது.நம் ஆட்சியாளர்கள் குஜராத் ஆட்சியாளர்கள் போல சிறந்தவர்களாக இல்லாததால் கல்வியில்,பெண் கல்வியில் ,மத்திய அரசு வேலைவாய்ப்புகளில்,தனியார் துறையில்,வெளிமாநிலங்களில் ,வெளிநாடுகளில் பணிக்காக செல்லும் தமிழர்கள் அதிகம் தான்.தயவு செய்து நேரம் ஒதுக்கி ஒரு சுற்று என்னோடு வாருங்கள்.சில மாநிலங்களின் தமிழ் சங்கங்களுக்கு ,அதில் இருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று வரலாம்.எனக்கு வந்த திருமண பத்திரிக்கைகளில் வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் வாரிசுகள் அங்கேயே வேறு மொழி பேசும்,வேறு சாதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வது தான் அதிகம்.
    பெண் கல்வியும் தமிழர்களின் குடும்பங்களில் கேரளா தவிர்த்து மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக அதிகம்.பணியில் இருக்கும் பெண்கள் எண்ணிக்கை ஒன்று போதும் உங்கள் சாதி சார்பான தமிழர்கள் மீதான பொய் கூற்றுகளை உடைக்க
    சாதி இல்லை என்று யாரும் பூசி மெழுகவில்லை.ஆனால் சாதி பார்க்காத நட்பு,மண உறவுகள் பெருகுவதால் தான் அடிப்படைவாதிகளின் குமுறல்கள் ,அடிதடிகள் அதிகமாக ஒலிக்க துவங்கி உள்ளன.
    என்னுடன் கல்லூரியில் படித்தவர்களில் எத்தனை பேர் சாதி,மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டனர்,அதே ஆண்டு வேறு மாநில மருத்துவ கல்லூரிகளில் படித்து என்னுடன் பணிபுரியும் நண்பர்களின் வகுப்புகளில் படித்தவர்கள் எத்தனை பேர் திருமணம் செய்து கொண்டனர் என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.உங்கள் கூற்றினை ஆதாரபூர்வமாக உடைக்க என்னால் முடியும்.
    உங்கள் இல்லத்திற்கு அருகே இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் நுழைந்து பாருங்கள்.அங்கு பணியில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளை சார்ந்தவர்களில் எவ்வளவு பேர் காதல் திருமணம்,மற்ற மாநிலங்களை சார்ந்தவர்களில் எவ்வளவு பேர் என்பதை அறியலாம்.
    ராஜஸ்தானை சார்ந்த தாழ்த்தப்பட்ட,வகுப்பை,obc வகுப்பை சார்ந்த ஒருவர் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதை விட பல நூறு மடங்கு தமிழர்களிடம்
    சில பகுதிகளில், கிராமங்களில் கொழுந்து விட்டு எறியும் சாதி தீயை கொண்டு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையே,தமிழனையே பழிப்பது எதனால்.

  4. poovannan73 Says:

    பெண் குழந்தைகளின் எண்ணிக்கை,பெண் கல்வி,பெண் வேலைவாய்ப்பு.பெண்ணின் திருமண வயது போன்றவற்றை அளவுகோலாக எடுத்து கொண்டால் தமிழகத்தின் நிலை விளங்கும்.சாதி,மதம் இரண்டும் பெண்களுக்கு எதிரான கட்டமைப்புகள் தான்.நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண் பெரும்பாலும் தன விருப்பத்தின்படி சாதி,மதங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் தான் துணையை தேர்ந்தெடுக்கிறார்.
    என்ன படிப்பு படித்து இருந்தாலும் பெண்ணை வேலைக்கு செல்ல அனுமதி தராத,குறைந்த வயதில் பெண்ணை திருமணம் செய்து தரும்,பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் (ஆண் பெண் சதவீதம் தமிழகத்தில் 1000-995,கேரளம் 1000=1084,குஜராத் 1000-918. 0-6 ஆண் பெண் குழந்தைகள் சதவீதம் தமிழகம் 946 கேரளம் 959 குஜராத் 886.குஜராத்தில் உள்ள இஸ்லாமியர் மற்றும் பழங்குடியினரின் ஆண்பெண் சதவீதம் தேசிய சரசாரிக்கு அதிகமாக இருப்பதால் தான் இந்த 918 மற்றும் 886 கூட குஜராத்தில்.

    இல்லை என்றால் அங்கு நடக்கும் பெண் சிசுகொலைகளினால் சதவீதம் இன்னும் மோசமான நிலையில் இருக்கும்)மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களை தூக்கி பிடிப்பது ஞாயமா

    பெண் கல்வி,பெண் சொத்துரிமையின் பலனால் சாதி வேற்றுமைகள் வெகுவாக ஓரிரு தலைமுறைகளில் குறையும் வாய்ப்புள்ள மாநிலம் தமிழகம்.புலம்பெயர்ந்த தமிழர்களில் பெண்களுக்கு சிறுவயதில் திருமணம் செய்து வைத்துவிடுபவர்கள்,பெண் கல்வியை பொருட்டாக மதிக்காதவர்கள் வெகு குறைவு.தமிழகத்திலும் பெண் சிசுகொலை அதிகம் நடக்கும் மாவட்டங்கள்,குழந்தை திருமணம் நடைபெறும் மாவட்டங்கள்,சாதிகளில் தான் சாதிய வெறியாட்டங்கள் அதிகம்.

    இதை விட அதிகமாக குழந்தை திருமணங்கள் ,பெண்சிசுகொலைகள் நடைபெறும் மாநிலங்களை,பெண் கல்வியில் ,பணிகளில் மகளிரின் சதவீதங்கள் மிகவும் குறைவாக இருக்கும் மாநிலங்களை விட தமிழகம் மோசம் என்று சொல்வது சரியா

  5. Anonymous Says:

    பாப்பார சாதிவெறிதான் இப்பிடி எழுதவைக்குது மற்ற சாதில ஒன்னுரெண்டுதான் இப்பிடி. ஆனா நீங்க எல்லாரும் இப்பிடி.

  6. பக்கிரிசாமி.N Says:

    பூவண்ணன் மிகவும் அழகாக சொல்லிவிட்டார். நன்றி.

  7. veeran Says:

    orutharukum puriyama ezutharathukunu oru gumpal. yaRum padika matanga. waste.Ivar innonnu jemo timepass.

  8. veeran Says:

    u r bore person

  9. veeran Says:

    STOPWRITINNG

  10. tamil Says:

    win win fore tamillans

  11. Yayathi Says:

    Thol. Thirumvalavan is quoted in this news article as referring to a study that has reported that the percentage of inter-caste marriages is only 2.6% and is only better than Jammu & Kashmir and Rajasthan and way below the national average of 9.9% and states like Kerala (21.3%).
    http://archives.deccanchronicle.com/130213/news-current-affairs/article/study-reveals-tamil-nadu-low-romance
    Here is the link to the original paper: http://paa2011.princeton.edu/papers/111281

  12. poovannan73 Says:

    யயாதி சார் இந்த ஆராய்ச்சி முடிவுகளை முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் எழுத்தாளரும் ஆன ரவிகுமார் முன் வைத்தார்.

    http://nirappirikai.blogspot.in/2013/02/blog-post_11.html

    அதற்கு வந்த பதில்களை கொஞ்சம் பாருங்கள்

    மற்ற மாநிலங்களில் சாதிமறுப்பு திருமணங்கள் மிக அதிகம் என்று நீங்கள் எடுத்துகாட்டாக கூறும் சர்வே முட்டாள்தனமான உண்மைக்கு புறம்பான ஒன்று .
    அதில் டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி கூட வருகிறது. தலித் மக்களோடு கலப்பு திருமணம் செய்த திருமணங்களின் எண்ணிக்கை 3495,4205.4750 என்று முறையே வருகிறது.தமிழக அரசு சாதிமறுப்பு திருமண திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை மேலே வரும் எண்ணிக்கைகளில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேல்.
    ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்கள் 6395 என்று அரசு குறிப்புகள் தெரிவிக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டுக்கு 1200 பேர் தோராயமாக தமிழகத்தில் உதவி பெற்ற நிலை இருக்கும் போது ஆந்திரமும்,மகாராஷ்ற்றமும் 1000 திருமணங்கள் மூலம் முதல் நிலை என்ற முடிவு எப்படி எடுத்தார்கள் என்று புரியவில்லை
    உங்கள் கடலூர் மாவட்ட உதவி பெற்றவர்களின் பட்டியலை பார்த்தால் தலித் பெண்களை திருமணம் செய்த பிற வகுப்பு ஆண்கள் தான் அதிகம் எனபது தெள்ளதெளிவாக விளங்குகிறது.
    அந்த சர்வே முட்டாள்தனமாக வேறு மதத்தை சார்ந்தவரை செய்து கொள்ளும் திருமணத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறது.
    மதம் மாறிய தலித் மக்கள்,obc மக்கள் தமிழகத்தில் குறிபிடத்தக்க சதவீதம்.பொருளாதரத்தில் உயர்ந்த பிறகு சாதியை வெளிக்காட்டாமல் மதத்தை மட்டும் ஏற்று கொண்டு சலுகைகளை நிராகரிக்கும் மக்கள் அரசு உதவி திட்டத்தில் பயன்பெற விரும்புவதில்லை.அதனால் அரசு உதவி பெரும் தம்பதிகள் எண்ணிக்கை குறைகிறது.
    ஆசாரி,நாவிதர்,வன்னியர்,கள்ளர்,நாடார்,கௌண்டர் ,யாதவர் என அனைவரையும் மொத்தமாக ஒரே குழுவில் அடைத்து அவர்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் ஒரே சாதி திருமணங்கள் எனபது போல எடுத்து கொள்கிறது.கிட்டத்தட்ட 70 சதவீத மக்களை ஒரே குழுவாக ஆக்கி விட்ட பிறகு அதை தாண்டி எத்தனை சதவீதம் கிடைக்கும் இப்படி குறைவான அளவில் தமிழகத்தில் கலப்பு திருமணம் நடைபெறுவது போல திட்டமிட்டு உருவாக்க முயற்சிக்கிறது

    தமிழகத்தில் இருந்து 3411 பேர் ,கேரளாவில் இருந்து 356 பேர்,கோவில் இருந்து 15 பேர்.எந்த அடிப்படையில் என்று எந்த விளக்கமும் இல்லை..பதினைந்து பேரை வைத்து கொண்டு கோவில் 25 சதவீதத்திற்கும் அதிகம் என்று முடிவுக்கு வருவது விந்தை தான்.இட ஒதுக்கீடு குறைவாக உள்ள மாநிலம் கோவா.அனைத்து துறைகளிலும் உயர்சாதியினரின் பங்கு வெகு அதிகம்.அங்கு நாளில் ஒரு திருமணம் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளுக்கும்,பெறாத சாதிகளுக்கும் இடையே எனபது சாத்தியம் இல்லாத ஒன்று

  13. poovannan73 Says:

    http://www.tn.gov.in/documents/tnataglance.html#SOCIAL%20WELFARE

    மொத்தமாக இந்தியாவில் தலித் மக்களுக்கும் மற்ற சாதிகளுக்கும் இடையே நடக்கும் திருமணம் என்று 3495,4205.4750 என்று கடந்த மூன்று ஆண்டுகளின் தாழ்த்தப்பட்டோர் தொடர்புடைய திருமணங்களாக எண்ணிகையை எடுத்து காட்டி விட்டு கேரளாவில் இருவத்தைந்து சதவீதம்,கோவாவில் 26,குஜராத்தில் பத்து,ஹரியானாவில் பனிரெண்டு எனபது எந்த அடிப்படையில்.
    குறிப்பிட்ட சர்வே எடுத்து கொண்ட பல்வேறு சாதிகளின்/ இட ஒதுக்கீட்டு குழுக்களின் எண்ணிக்கை கூட தரவில்லை.இதில் முற்பட்டவர்-பிற்படுத்தப்பட்டவர் இடையே நடைபெறும் திருமணம் எத்தனை சதவீதம்,பிற்பட்ட-தாழ்த்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட-முற்பட்ட என்று எந்த சதவீதமும் இல்லை.
    அவர்களே சாதிகளை மூன்றே மூன்று குழுக்களாக பிரித்து கொண்டு அதில் கூட தனி சதவீதங்களை தராமல் இப்படி முடிவுகளை வெளியிட என்ன உள்நோக்கம் என்று தெரியவில்லை

    தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்கள்2007-08 ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் பயன்பெற்றவர் 2265.மொத்த இந்தியாவில் நடைபெற்ற திருமணங்கள் -4205 .
    2.59 சதவீத தமிழகம் 4205திருமனங்களில் 2265.இது தான் 2.59 சதவீதமா

    http://articles.timesofindia.indiatimes.com/2012-02-14/chennai/31058567_1_inter-caste-marriages-caste-identity-registration

    Officials in the registration department claim that the number of such marriages has been on the rise with figures indicating that at least 10% of couples have opted for inter-religious marriages.

    According to the registration department, about 77,000 marriages were registered across the state under the Hindu Marriage Act 1955 during 2010-11. A total of 7,601 marriages were registered under the Special Marriage Act, indicating that 10% of the registered marriages were inter-religious.

  14. poovannan73 Says:

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-continues-to-lead-in-organ-donation/article5000427.ece

    தமிழர்களையோ,தமிழ்நாட்டையோ அவர்களின் தவறுகளுக்காக,மூர்க்கத்தனதிற்காக ,முட்டாள்தனங்களுக்காக திட்டுவது அவசியமான ஒன்று தான் சார்.ஆனால் அவர்கள் தான் உலகிலேயே மோசமானவர்கள்,அதற்கு காரணம் நமக்கு பிடிக்காத ஆட்சியாளர்கள் என்பது நியாயமான ஒன்றா
    மற்ற மாநிலங்களில் தாண்டவமாடும் மதவெறி பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.ஹிந்துக்களில் மாமிசம் உண்பவர்கள் மற்ற மதத்தவர் விற்கும் கடைகளில் மாமிசம் வாங்க மாட்டார்கள்.மாற்று மதத்தவர் நடத்தும் விடுதிகளில் சென்று உணவு அருந்த மாட்டார்கள்.இங்கு அப்படியா
    மதத்தினால்,சாதி வெறியினால் குழந்தை பேறு இல்லை என்றாலும் அநாதை இல்லங்களில் இருந்து குழந்தைகளை தத்து எடுப்போர் எண்ணிக்கை வட மாநிலங்களில் வெகு வெகு குறைவு.இங்கு குழந்தைகளை அநாதை இல்லங்களில் இருந்து தத்து எடுப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
    உடல் தானத்தில்,உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகம்.யாரும் இல்லாத குழந்தைகள்,நோயாளிகளுக்கு உதவும் இல்லங்களும் தமிழநாட்டில் தான் அதிகம்.
    பெண் குழந்தைகளோடு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியினரின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது பல மடங்கு.ஆண் குழந்தை வேண்டும் என்று வரிசையாக குழந்தைகளை பெற்று கொள்வோர்,அல்லது அதற்காக தொடர்ந்து பெண் சிசுக்களை கலைப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களை எடுத்துகாட்டு மாநிலங்கள் என்று புகழ்ந்து கொண்டு தமிழ்நாட்டை இகழ்வது மிகவும் அநியாயம் அல்லவா

  15. TAMIL Says:

    ramasamy u r anothr jeymohan. joker cho of iNaiyam. u r a tamil hatter DOG. STOP WRTNG.

  16. TAMIL Says:

    RAMASAMY DOWN DOWN

  17. Yayathi Says:

    Poovannan Sir,
    1. The data used in the paper was from the National Family Health Survey (005-06). Yes, it could be argued that actual count should be used. But then, if you refer to the TOI article you provided, the Registration department official himself says that not all people are willing to provide the caste information. So, this survey is as good as any other government statistics we could rely on.
    2. Regarding the link “http://www.tn.gov.in/documents/tnataglance.html#SOCIAL%20WELFARE”, I get the message “The requested page could not be found”
    3. The 10% figure quoted in the TOI article “A total of 7,601 marriages were registered under the Special Marriage Act, indicating that 10% of the registered marriages were inter-religious” – This is inter-religious and not inter-caste, which would be a different but related discussion – The data quoted in the paper states, they considered only those identified as Hindu, so it does not reflect marriages between all other religions.
    4. On the two points made: (a) Not accounting for marriages within the OBC groups (b) Percentage of the OBC population in each state. But these points are applicable to all states. It is agreed that the larger the OBC %, the larger the effect of cancelling out inter-caste marriages among OBC. So, if you just take top four states with highest OBC % in the population (source: NSS 61st round 2004-05 quoted in a EP &W article): TN (72.64%), Kerala (61.1%),Bihar (58.6%), UP (45.4%) and do a simple but crude normalization of the % of Inter-caste marriages to TN’s OBC percentage, you get TN (2.6%), Kerala (17.9%), Bihar (3.8%), UP (5.9%).
    5. Agree, the data can be sliced and diced but from a big picture point of view, though TN has made good social progress with respect to caste, it does not seem to be anything extra ordinary, considering all the hype created by the Dravidian parties.

  18. சான்றோன் Says:

    ராமசாமி சார்……

    முடியல………. பூவண்ணன் போன்றோரை திருப்திப்படுத்தவேனும்….. ” தமிழர்களாகிய நாம் எப்படி இவ்வளவு உயர்வாக இருக்கிறோம் ” என்று ஒரு கட்டுரை எழுதிவிடுங்களேன்….ப்ளீஸ்….

    தாங்க முடியவில்லை……

  19. poovannan73 Says:

    yayathi sir

    i have a bit of experience and knowledge in sampling studies and this study has followed no standard procedure nor given the numbers after taking arbitrary criterias as base for considering which constitutes intercaste marriage.
    The high percentage reported in certain states is mathematically not possible given the social structure and gross numerical variation between the groups.
    Lets take Goa

    http://articles.timesofindia.indiatimes.com/2014-01-16/goa/46263448_1_obcs-27-reservation-goa-assembly

    The reservation for OBC s has been increased to 27% and SC remain at 2%. in exact proportion their population.There exists quiet a bit of christian communities in the OBC list.If we exclude the christians from the obc list the total% of hindu obc/sc will be around 20%.3/4th of those marriages in the community should be with castes in OC to reach a figure of 26% of intercaste marrriages for the state among hindus.

    The study says that in goa 15.8%women marry lower than their caste and another12.6%marry men higher than their caste.
    Hindus are 73% of goa lets take it as 730 in numbers.270 in that are obcs and 20 are SC making OC 440.lets divide 730 by two into men and women.15.8% of 220 is 35 and 15.8% of 135 OBC is 21(though SC are just 2% to OBC 27% and there exists just 10 men out of total strength of 20 and hence 15.8% of obc women marrying someone less than their caste is not even remotely possible ,lets take it as correct for disproving the given facts in the study )

    OC women cannot marry anyone higher and hence this has to be entirely from OBC as SC numbers are very insignificant.12.6% of 135 is 16.12.6% of 10 SC women can be taken as 2.Totalling the number of women who have had intercaste marriages ,it comes to 35+21+16+2=74.The study figures if taken logaically for the two caste groupings which have caste higher than them,indicate SC men marrying double their number of women of higher caste to reach the figure of 74 which out of 365 is still around 20%.

    When the population of the three groups varies significantly ,there will be significant differences in the percentage of intercaste marriages in each group.

    Its surprising that the interreligious marriages is 1.3% in the same state which has the highest intercaste marriage ratio in the country irrespective of progressiveness and significant presence of christians which is more than 27%

    The arbitrary amalgamation of entire group of castes into just 3 castes oc/obc/sc has very little merit.The study makes tamilnadu having 3 castes with one caste around 65% and the other two around 15 and 4 excluding christians.Making 2/3 population of the state as a single caste group and considering all marriages between different castes under the same obc banner as same caste marriages will defenitely result in very low percentage irrespective of increased number of intercaste marriages.

  20. Venkatesan Says:

    யயாதி சுட்டிய ஆய்வுக் கட்டுரை மீதான பூவண்ணனின் விமர்சனங்கள் நியாயமானவை. பல நூறு ஜாதிகளை OC, BC, SC என வெறும் மூன்று பெட்டிகளில் அடைத்து ஆய்வு செய்ய முடியாது. இந்த வகையில் பெட்டிகளுக்குள் திருமணம், பெட்டிமறுப்பு திருமணம் என பிரிக்க முடியுமே தவிர கலப்பு மணம் என்பதை கண்டறிய முடியாது. அடுத்து மூன்று பெட்டிகளில் எத்தனை சதவீத மக்கள் உள்ளார்கள் என தெரியாமல் பேசுவதில் அர்த்தமில்லை. உதாரணமாக ஒரு மாநிலத்தில் அனைவரும் ஒரே பெட்டி ஆசாமிகள் என்றால், பெட்டிமாறிய திருமணங்கள் சாத்தியமில்லை. அடுத்து OC-BC, OC-SC, BC-SC என்ற வகைகள் பார்க்கப்படவில்லை. அடுத்து மதம் மாறியோர் ஜாதி சொல்ல விரும்புவதில்லை ஆதலால், கலப்பு மணங்கள் மதக்கலப்பு திருமண வகைக்குள் போய்விடும். இப்படி பல பிரச்சனைகள் உண்டு. எனவே, இது ஒரு மோசமான கட்டுரை என்பதை ஏற்கிறேன்.

    எனினும், இது தொடர்பாக வேறு தகவல்கள் (facts) தேடும் முயற்சியற்ற சோம்பேறியாகிய நான், உள்ள தகவல்களை வைத்து என்ன ஒப்பேற்ற முடியும் என மோட்டுவளையை பார்த்து சிந்தித்தபோது தோன்றிய விஷயங்கள் கீழே.

    மற்ற மாநிலங்களை விட்டுவிட்டு தமிழகம் என குறுக்கிக் கொள்வோம். முதலில் மூன்று பெட்டிகளில் எத்தனை சதவீத மக்கள் இருக்கிறார்கள் என வரையறுக்க வேண்டும். பூவண்ணன் BC 70% சதவீதம் என்கிறார். இடஒதுக்கீடு கணக்குப்படி SC 18%. எனில், OC 12%. வேறெங்கோ OC 13% என படித்த நினைவு. எனவே மேற்சொன்னவற்றை உண்மை எனக் கொள்வோம். மேலும், கால்குலேட்டர் தேவையை தவிர்க்க இதை OC 10%, SC 20%, BC 70% என எளிமைப் படுத்திக்கொள்வோம்.

    தமிழகம் என்ற ஒற்றை மாநிலத்தில் நிலவரம் எப்படி என்பதை எதனோடு ஒப்பிட்டு பார்ப்பது? இதற்கு ஒரு எளிய வழி சாதிக்கும், திருமணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றால் (uncorrelated) சதவீதம் எவ்வளவு இருக்க வேண்டும் என கணக்கிடுவது. இதை கோல்ட் ஸ்டாண்டர்ட் ஆக கொள்ளலாம். இதன்படி, உதாரணமாக, OC – BC கலப்பு மணம் 2 x 0.7 x 0.1 = 14% இருக்க வேண்டும். பெட்டிக்குள் திருமணம் 0.7 x 0.7 + 0.2 x 0.2 + 0.1 x 0.1 = 54% இருக்க வேண்டும். எனில், பெட்டிமறுப்பு திருமணம் 46% இருக்க வேண்டும். ஆனால், கட்டுரையின் படி சாம்பிள் சர்வே இந்த எண்ணிக்கை 2.6% சதவீதம் என்கிறது! இது எனக்கு கோல்ட் ஸ்டாண்டர்டுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக தோன்றுகிறது.

    சரி, பெட்டிமறுப்பு என்பதும் கலப்புமணம் என்பதும் ஒன்றல்ல. BC பிரிவு மக்களுக்குள் கலப்புமணம் நிகழ்வது கணக்கில் வராது. எனவே. வேறொரு மெட்ரிக் எடுத்துக்கொள்வோம். “தீண்டாமை மறுப்பு திருமணம்” என்பது (for the want of better terminology). (OC/BC) – SC என்றவகை திருமணங்கள். கோல்ட் ஸ்டாண்டர்ட் படி இது 2 x (0.7 + 0.1) x 0.2 = 32% இருக்க வேண்டும். ஆனால் மொத்த பெட்டிமருப்பு திருமணங்களே 2.6% தான் (இதற்குள் OC -BC திருமணமும் அடங்கும் என்பதை நினைவில் வைப்போம்). இதுவும் மிகக் குறைவாக தெரிகிறது.கடைசியாக, OC பிரிவு மக்கள் ஜாதி வெறி பிடித்து தங்களுக்குள் மட்டுமே திருமணம் செய்கின்றனர் என கொள்வோம். எனில், தீண்டாமை மறுப்பு திருமணங்கள் 2 x 0.7 x 0.2 = 28% இருக்க வேண்டும். இருப்பது அதிகபட்சம் 2.4%. அப்படியும் இது குறைவே.

    மேலே சொன்ன வெட்டிவேலையில் இருந்து மூன்று முடிவுகளுக்கு நான் வருகிறேன். 1. மேலே சொன்ன ஆய்வுக் கட்டுரை மிக மோசமானது. 2. தமிழகத்தில் பெட்டிமறுப்பு திருமணங்கள், தீண்டாமை மறுப்பு திருமணங்கள் கோல்ட் ஸ்டாண்டர்டுடன் ஒப்பிடும்போது மிக மோசம். 3. ஜாதி பற்றியும், அதன் தீமைகள் பற்றியும் அதிகம் பேசப்படும் தமிழகத்தில் கலப்புமணம் குறித்து புள்ளியியல் அடிப்படையில் சீரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என எனக்குத் தெரியவில்லை. அப்படி இல்லையாயின், தமிழக சமூக ஆர்வலர்களும், பல்கலைகழக சமூகவியல் துறையினரும் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்?

  21. பக்கிரிசாமி.N Says:

    //நம் தமிழர்களுக்கு ‘நாம் vs மற்றவர்கள்’ அல்லது ‘நம்மாள் vs வேற்றாள்’ குறித்த இனம் புரியாத (அதாவது, புரிந்த) அடுக்குப் பிரிவு உணர்ச்சி என்பது மிக, மிக அதிகம்.

    அதாவது இந்த உணர்ச்சி – நம்மையும், மற்றவரையும் அடுக்குப் பிரிவு சார்பாகவே பார்த்து, அது மேல், இது கீழ் என விரித்து, முத்திரை குத்தி – அதன் மூலமாக விரியும் பிம்பங்களினூடே, அவை மூலமாக மட்டுமே அதுவும், எந்த மானுட அடிப்படை விழுமியங்களினாலும், அறவுணர்ச்சிகளினாலும் பாதிக்கவேபடாமல் உலகைப் பார்த்தல். //

    பின்னூட்டங்களிலிருந்து தாங்கள் கூறும் இந்தக் கருத்து மட்டும் மிகவும் உண்மை என்று புரிகிறது.
    But, I do believe this is valid for the whole world too.

  22. poovannan73 Says:

    சார் நான் மேலே தமிழ்நாட்டில் அரசு உதவி பெற்ற கலப்பின தம்பதியர் பற்றிய பட்டியலையும் ,எண்ணிக்கைகளையும் தந்திருக்கிறேனே.
    சாதிமறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்காக (2008 க்கு முன் வரை இருவரில் ஒருவர் SC/ST ஆக இருக்க வேண்டும்)தமிழக அரசு தரும் அரசு ஊக்க தொகை பெற்றவர்களின் எண்ணிக்கையை ,இந்தியாவில் மொத்தத்தில் நடைபெற்ற SC/ST வகுப்பை சார்ந்தவர்களின் வேறுசாதி திருமணங்கள் எண்ணிகையோடு ஒப்பிட்டால் தமிழநாட்டின் பங்கு தெரிந்து விடுகிறது.

    http://articles.timesofindia.indiatimes.com/2013-09-19/india/42216749_1_inter-caste-dalits-himachal-pradesh

    IInterestingly, Tamil Nadu in 2011 notched 2,750 marriages, up from 2,356 in 2010. The state witnessed violence in July after a dalit boy from Dharmapuri married a Vanniyar-OBC girl, a love affair that ended in social unrest with groom Ilavarasan found dead on the railway tracks in mysterious circumstances.

    2010 ஆம் ஆண்டு எந்த மாநிலத்தில் அதிகம் என்று பாருங்கள்..தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களின் சதவீதம் மற்ற மாநிலங்களோடு அதிகம் என்பதால் சதவீத கணக்கில் தமிழகத்தை விட அவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் நடைபெறும் சாதிமறுப்பு திருமணங்களில் தமிழகத்தின் பங்கு எவ்வளவு என்பதை பாருங்கள்

    தமிழ்நாட்டில் கிருத்துவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க சதவீதம்
    அவர்களில் சாதி மறுப்பு காதல் மணம் புரிந்து கொண்ட பெரும்பான்மையானோர் தங்கள் திருமணதிற்கான அரசின் ஊக்கதிகையை பெறுவதில் ஆர்வம் காட்டுவது கிடையாது.வெளிநாடுகளில் உயர்பதவிகளில்,மத்திய அரசு பணிகளில்,தனியார் துறையில் பணி புரியும் பலர் அரசின் ஊக்க தொகைக்கு விண்ணப்பிப்பது கிடையாது.அந்த நிலையிலும் தமிழகத்தில் நடைபெறும் எண்ணிக்கை இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் எத்தனை சதவீதம் என்பதை பாருங்கள்

  23. Venkatesan Says:

    அன்புள்ள பூவண்ணன்,
    மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கலப்புத் திருமணம் என்ற வகையில் தமிழகம் தாழ்ந்துள்ளது என்பது என் கூற்று அல்ல. தமிழகத்தில் இன்றைய நிலை என்ன என அறிவதே என் நோக்கம். இந்த விஷயத்தில் ஈடுபாடு கொண்டுள்ள நீங்களும், நானும் ஒன்றிணைந்து அறிவியல் பூர்வ முறையில் இந்த கேள்விக்கு விடை காண முயல்வோம்.

    கலப்பு திருமணம் என்பது சிக்கலானது. முதலில் ஜாதிகளை வரிசைப்படுத்தி எந்தெந்த ஜாதிகள் இணைவதை கலப்பு என வரையறுக்க வேண்டும். எனவே, நமது ஆய்வை தீண்டாமை மறுப்பு திருமணங்கள் எளிமைப்படுத்திக் கொள்வோம். அதாவது, தலித்-தலித்தல்லாதோர் இடையேயான திருமணம். அடுத்து, இந்திய அளவில் ஆய்வதும் மாநிலங்களை ஒப்பிடுவதும் அதிக நேரம் பிடிக்கும். எனவே, “தமிழ் நாட்டில் தீண்டாமை மறுப்பு திருமணங்களின் நிலை” என சுருக்கிக் கொள்வோம். அடுத்து, இதன் பின்புல நிலைகள், தடைகள், வரலாறு என விரிக்காமல், புள்ளிவிவர ஒப்பீடு என்ற வகையில் சுருக்கிக் கொள்வோம். இப்போது நமது ஆய்வின் எல்லைகள் வரையறுக்கப் பட்டுள்ளன.

    நமது ஆய்வுக்கு சில புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன.
    1. தமிழகத்தில் தலித் மக்களின் விகிதம் எவ்வளவு? 20% என்ற தோராய கணக்கை ஏற்கிறீர்களா? எனில், தலித்தல்லாதோர் 80%.

    2. ஏதாவது ஒரு ஆண்டை (2010 என்பது போல) நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டில் தமிழகத்தில் நடை பெற்ற மொத்த திருமணங்களின் எண்ணிக்கை என்ன? நான் ஒரு தோராய கணக்கு சொல்கிறேன். தமிழக மக்கள் தொகை சுமார் 7 கோடி. சராசரி வாழ்காலம் (life expectancy) 70 ஆண்டுகள் என கொண்டால், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் திருமணம் செய்கின்றனர் என கொள்ளலாம். எனில் 5 லட்சம் திருமணங்கள். சரியான கணக்கு தெரிந்தால் நலமாக இருக்கும்.

    3. மேலே சொன்ன ஆண்டில் எத்தனை தீண்டாமை மறுப்பு திருமணங்கள் நடந்தன? இதில் மதம் மாறிய தலித்களையும் சேர்த்துக்கொள்வதில் எனக்கு சம்மதம்.

    மேலே உள்ள கேள்விகளுக்கு பத்திரிகை செய்திகள், அரசுக் குறிப்புகள், NHS போன்ற சர்வேக்கள் என நம்பத்தகுந்த எதையும் நான் ஏற்க தயாராக இருக்கிறேன். இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தால், மொத்த திருமணங்களில் தீண்டாமை மறுப்பு எத்தனை சதவீதம் என தெரியவரும். இந்த சதவீதத்தை R என அழைப்போம் (to represent reality).

    R உயர்ந்ததா, மோசமா என எப்படி அறிவது? இதற்கு நான் கோல்ட் ஸ்டான்டர்ட் (G) என்ற பெயரில் ஒரு வழிமுறையை (method) முன்வைக்கிறேன். இதன் படி, சாதிக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றால் என்ன சதவீதம் என கண்டறிவது. இதை சுலபமாக கணக்கிடலாம்: G = 2 x D x (100 – D)/100. இங்கே D என்பது தலித் மக்கள் தொகை சதவீதத்தை குறிக்கிறது. நான் சொன்ன 20% என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், G = 32%. அதாவது, சாதிக்கும் திருமணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றால் நடக்கும் திருமணங்களில் 32% சதவீதம் தீண்டாமை மறுப்புத் திருமணங்களாக இருக்கும் (in expectation). R என்பதை G என்பதோடு ஒப்பிட்டு தமிழகத்தில் தீண்டாமை மறுப்பு திருமணங்களின் நிலையை அறிய முடியும்

    மேலே நான் பரிந்துரைத்த கோல்ட்ஸ்டாண்டர்ட் வழிமுறை உங்களுக்கு ஏற்பில்லையானால், இருவரும் சேர்ந்து வேறு வழிமுறை வகுத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

    நன்றி.

    • கல்யாணராமன் Says:

      2010இல் அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இங்கே:

      http://epc2010.princeton.edu/papers/100157

      தமிழ்நாட்டில் கலப்புத் திருமண விகிதம் மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை.

      தமிழ்நாட்டில் சாதி மனப்பான்மை குறைந்துள்ளது என்பது ஒருவகை பரப்புரை. இன்றைய சாதியத்தின் செயல்பாட்டையும் நடைமுறை இயக்கத்தையும் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர் “சாதியும் நானும்” (தொகுப்பசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு, 2013) எனும் நூலைப் படித்துப் பயன்பெறலாம்.

      நன்றி.

    • Venkatesan Says:

      கல்யாணராமன்,
      மேலே யயாதி இதே போன்ற (அல்லது இதே?) கட்டுரைக்கு சுட்டி கொடுத்ததிலிருந்து தான் இந்த உரையாடல் தொடங்கியது. இந்த இரு கட்டுரைகளும் இடையே சிறு வேறுபாடுகள்தான் உள்ளன. ஆனால், இருவேறு ஆய்வு மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளனர். இதன் மீது பூவண்ணன் பல்வேறு விமர்சனங்கள் செய்துள்ளார். அவற்றை நான் ஏற்கிறேன்.

      மேலும், இப்போது இந்த கட்டுரையின் தரத்தின் மீதான எனது சந்தேகம் வலுத்துள்ளது. நீங்கள் சுட்டிய கட்டுரை EPC 2010 என்ற மாநாட்டிலும், யயாதி சுட்டிய கட்டுரை PAA 2011 என்ற மாநாட்டிலும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. முதலில், ஒரே கட்டுரையை உல்டா செய்து இருவேறு மாநாடுகளில் சமர்ப்பிக்கும் வழக்கம் எனக்கு பரிச்சயமான கணினியியல் துறையில் கிடையாது. சொல்லப்போனால், இது பெரிய நேர்மையற்ற செயலென கருதப்படும். சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் பெயர் நாறிவிடும். சமூகவியல் துறையில் மரபு என்ன என எனக்குத் தெரியவில்லை.

      அடுத்து, இரண்டு கட்டுரைகளும் NHFS சர்வே III அடிப்படையில் எழுதப்பட்டவை. EPC 2010 கட்டுரையில் இந்த சர்வேயில் இருந்து 43102 தம்பதிகளை ஆய்வு செய்ததாக கூறுகிறது. ஆனால், இதற்கு பின்னர் வெளியான PAA 2011 கட்டுரையில் இது 32160 என மாறிவிட்டது. ஓராண்டுக்குப்பின் எதற்கு சாம்பிள் அளவை குறைக்க வேண்டும்?

      இந்த மாநாடுகளில் ஒன்று வியன்னா நகரிலும், மற்றொன்று வாஷிங்டன் நகரிலும் நடந்துள்ளது. பிரின்ஸ்டன் பல்கலைக்கும் இவற்றிற்கும் என்ன சம்பந்தம் என எனக்கு புரியவில்லை. இந்த பல்கலை இணையதளத்தை ஒரு பெட்டகமாக (archive) பயன்படுத்தி இருக்கலாம்.

      தொழில் ரீதியான எனது அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிறேன். நமது ஊர் ஆட்கள் பொய்யான, மோசமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும், அதைய உல்டா செய்து பல இடங்களில் பிரசுரப்பதிலும் வல்லவர்கள். With due respect, இத்தகு ஆய்வுக்கட்டுரைகளை உஷாராக அணுக வேண்டும்.

      • கல்யாணராமன் Says:

        சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன்.

        ஆனால் சாதி மனப்பான்மையின் பரவலான செயல்பாட்டிற்கோ தீவிரத்துக்கோ, ஆண்டுக்கு சில ஆயிரம் என்று நிகழும் திருமணங்கள் சரியான அளவுகோலாக இருக்கமுடியாது.

        சமூகச் செயல்பாட்டுக்கான இடங்கள் திருமணம் எனும் அந்தரங்கமான வெளியைத் தாண்டி விரிந்திருக்கின்றன. முக்கிய அரசியல் கட்சிகள், ஊராட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், கல்விச் சாலைகள், காவல் துறை, ஊடக நிறுவனங்கள், வேளாண்மை உற்பத்தித் துறை என்று எங்கும் சாதியம் செயல்படுவது கண்கூடு. சாதியத்தைத் தவிர்த்திருக்கக்கூடிய நவின, செக்யூலர் அமைப்புகளும் நிறுவனங்களும் சாதியத்தால் ஊடுருவப்பட்டிருப்பது எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

        பூவண்ணன் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்துவதை நம்பினால் இன்றைய தமிழ்நாடுதான் சாதிய எதிர்ப்பைப் பொறுத்தவரை The best of all possible worlds என்ற முடிவுக்கு வரலாம். நான் அறிந்தவரை இது உண்மையல்ல என்றுதான் தோன்றுகிறது.

  24. Yayathi Says:

    1. Three of the authors of the paper are identified to be with International Institute of Population Sciences,(IIPS) jointly sponsored by GOI, Tata Trust and UN. IIPS is supposedly the nodal agency for coordinating the NHS. IIPS is a “Deemed University” and has a full fledged teaching and research programs. They provide studies & reports as part of their consulting and research services provided to the Health ministry.
    2. I do see the point of 70% OBC in one major group, made by Mr. Poovannan and Mr. Venkatesan. But please see the spatial distribution in TN:
    a. Chennai is only one major cosmopolitan area, and the Coimbatore-Tirupur industrial belt comes distant next.
    b. The major castes in the OBC – Vanniyar, Thevar, Kongu Vellalar, Nadar are all distributed and they do not overlap each other for most part. Vanniyars –> Ariyalur to Thiruvallur; Thevar –> Thanjavur to Tirunelvei; Kongu Vellalar –> Coimbatore to Salem; Nadar–>Kanyakumari, Toothukudi.
    c. Places like Madurai have some mixed population but OBCs like Kongu vellalars and Vanniyars are not in large numbers there.
    d. On the other hand, Dalits are spread all over the state – even on that, there are some regional variations depending on their sub-caste, which may also lessen the chance of inter-marriage among the sub-castes.
    e. In the absence of a clear cut data substantiating Mr. Poovannan’s claim, I find it difficult to expect a high number of inter-caste marriage among OBC, just on the basis of 70% claim.

    Thanks!

  25. poovannan73 Says:

    சார்
    தலித் மக்கள் கணக்கெடுப்பு என்பதில் தோராயம் கிடையாது.அதன் அடிப்படையில் தன சட்டசபை தொகுதிகளில் இட ஒதுக்கீடு.

    http://ceotamilnadu.nic.in/delimitation.htm

    Based on the Census figures published by the Registrar General of India, the Delimitation Commission prepared Paper I containing district-wise 2001 population data and the entitlement of seats for each district. The Commission also prepared Paper II indicating entitlement of seats for SC and ST in the Assembly/ Parliament and distribution of ST/SC seats in the districts. The total number of SC seats increased from 42 to 44, while the total number seats reserved for ST which was 3 as per 1976 delimitation got reduced to 2.

    சரியான ஆய்வுகளை ஏற்று கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.பொய்யாக தமிழநாட்டி தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுவதால் எந்த பயனும் கிடையாது.ஆனால் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சீரழிந்த மாநிலம் என்ற வாதத்தை ஆதாரம் இல்லாமல் அடித்து விடுவதை எப்படி ஏற்று கொள்வது

    http://timesofindia.indiatimes.com/…/22728944.cms…

    அரசு தரும் எண்ணிக்கைகள்
    இந்தியாவில் நடைபெற்ற SC/ST சாதிகளை சார்ந்த ஒருவர் தம்பதியரில் ஒருவராக இருக்கும் சாதி மறுப்பு திருமணங்கள்

    2010–மொத்தம் 7148 அதில் தமிழ்நாடு 2356
    2011–மொத்தம் 7617 அதில் தமிழ்நாடு 2750

    குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் மாநிலங்களில்,பெண் கல்வி,வேலைவாய்ப்பு மிக குறைவாக இருக்கும் மாநிலங்களில் சாதிமறுப்பு திருமணங்கள் அதிகம் என்ற ஆய்வு முடிவுகள் அரைகுறை ஆராய்ச்சியின் முடிவுகள்.
    கேரளாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்களின் சதவீதம் 10 சதவீதம்.பெண் கல்வியில்,ஒட்டு மொத்தமாக கல்வியில்,பல அடிப்படைகளின் கீழ் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் மாநிலம் கேரளம்.அங்கு SC மக்கள் தம்பதியரில் ஒருவராக இருக்கும் சாதிமறுப்பு திருமணம் எவ்வளவு என்ற அரசின் எண்ணிக்கைகளை பார்த்தால் ஆய்வின் அபத்தங்கள் விளங்கும்.
    ஆய்வில் எடுத்து கொள்ளப்பட்ட சாதிகள் மூன்று தான்.அதில் OC-BC எவ்வளவு OC.SC எவ்வளவு என்ற அடிப்படையை கூட தராத ஆராய்ச்சியின் முடிவுகள் உள்நோக்கம் கொண்டது என்பதில் தவறு உள்ளதா
    கோவா போன்ற மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு சாதியினர் அனைவரும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டால் தான் ஆய்வு காட்டும் சதவீதத்தை எட்ட முடியும்.
    ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எடுத்து கொள்ளப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மக்கள் தொகையோடு தொடர்புடையதாக இல்லை.அதை விட்டு விட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகையில் குறிப்பிட்ட OC,BC ,SC மக்கள் இருக்கும் சதவீதத்திற்கு ஏற்ப ஆய்வுக்கு அந்தந்த குழுக்களில் இருந்து குடும்பங்கள் எடுக்கப்பட்டதா.
    சென்னையில் அதன் சுற்றுபுரங்களில் சாதிமறுப்பு திருமணங்கள் அதிகமாக இருக்கும்.குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் சில மாவட்டங்களில்,ஒரு சாதியினர் மிக பெரும்பான்மையினராக வசிக்கும் ,கிராமப்புற பகுதிகளில் மிக குறைவாக இருக்கும்.எப்படி எடுக்கப்பட்டது என்பதை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.
    ஒபினியன் போல் ,எக்ஸ்சிட் போல் எடுக்கும் குழுக்கள் முடிந்த அளவிற்கு மக்கள் தொகையில் பல்வேறு குழுக்களின் சதவீதங்களுக்கு ஏற்ப தங்கள் ஆய்வுகளுக்கு வேண்டிய நபர்களை தேர்வு செய்வர்.அதை போல இந்த ஆய்வில் நடந்துள்ளதா

  26. Venkatesan Says:

    யயாதி,
    மேலே சொன்ன ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்களின் பின்புலம் குறித்த தகவல்களுக்கு நன்றி. இது கட்டுரைகளில் குறிப்பிடப்படாதது எனக்கு ஆச்சரியம் தருகிறது. மேலே கூறப்பட்ட விமர்சனங்கள் தவிர, இக்கட்டுரைகளை ஏற்க எனக்கு வேறு சில தயக்கங்களும் உள்ளன.

    1. EPC 2010 மற்றும் PAA 2011 ஆய்வுக்கட்டுரைகள் இடையே அதிக வித்தியாசம் இல்லை. சொல்லப்போனால், பல பத்திகள் அப்படியே இரண்டிலும் உள்ளன. இரண்டாவது கட்டுரையில் புதிய insight எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனில் இரண்டு கட்டுரைகள் எதற்கு?

    2. இரண்டாவது கட்டுரையில் முதல் கட்டுரை சுட்டப்படவில்லை (citation).

    மற்ற விமர்சனங்கள் தவிர மேலே சொன்ன காரணங்களுக்காகவும் இந்த ஆய்வுக் கட்டுரைகளை என்னால் ஏற்க முடியவிலை. The knowledge of the affiliation of the authors has not affected my opinion about the quality of these papers.

    எனக்கு இதற்கு மேல் இந்தக் கட்டுரைகளை பற்றி பேச விருப்பமில்லை. மேலே வேறொரு மறுமொழியில் சில குறிப்பட்ட ஆய்வு எல்லைகளை முன்வைத்து சில கேள்விகள் கேட்டுள்ளேன். அது குறித்து உரையாட மட்டும் விரும்புகிறேன். நன்றி.

    • கல்யாணராமன் Says:

      திருவாளர் வெ ராமசாமியின் பதிவு தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியப் பார்வையைப் பற்றிப் பேசுகிறது. இதைக் குறித்த விவாதத்தில் சாதி கடந்த திருமணத்தின் பங்கு மிகச் சிறியதுதான். சாதி கடந்த திருமணங்களனைத்தும் சாதி மறுப்பு திருமணங்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

      ஆனால் சாதியப் பார்வையும் செயல்பாடும் சமூகவாழ்வின் எல்லா கூறுகளிலும் விரவியிருக்கின்றன. சாதியத்தைப் பற்றிப் பேசவேண்டுமென்றால் வேளாண்மை உற்பத்தியில் சாதியின் இயக்கம், திமுக/அதிமுக போன்ற கட்சிகளில் சாதியின் செயல்பாடு, பிசி-க்களுக்கான 30% ஒதுக்கீடு நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் ஏற்படுத்தியிருக்கும் சாதியச் சூழல் இவற்றையெல்லாம் பேசுவது அவசியம்.

    • Venkatesan Says:

      கல்யாணராமன்,
      உண்மைதான். “தமிழகத்தில் ஜாதி நிலை” என ஆய்வு செய்தால் நீங்கள் சொல்லும் அனைத்தையும் சேர்த்து அலசி ஆராய வேண்டும். இது ஒரு மிகப்பெரிய ஆய்வாக அமையும். இதை சொந்த அனுபவங்கள் என்ற அடிப்படையில் அன்றி அறிவியல் பூர்வமாக செய்வதனால், மேலே சொன்ன ஆய்வை சிறு சிறு பகுதிகளாக பிரித்து தனித்தனியாக ஆய்வு செய்துவிட்டு பிறகுதான் big picture பக்கம் போக முடியும். செங்கல், செங்கலாக வைத்துத்தான் மாளிகை எழுப்ப முடியும். இந்த விஷயம் மட்டுமல்ல. தமிழக/இந்திய அளவில் பல விஷயங்களிலும் நேரடி களஆய்வு மூலம், புள்ளியியல் ரீதியான data analysis செய்யப்படாமல் பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள் என்பது என் எண்ணம். “தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் (2010 என்பது போல) நடை பெற்ற மொத்த திருமணங்களில் எத்தனை சதவீதம் தீண்டாமை மறுப்புத் திருமணங்கள்?” என்ற எளிய கேள்விக்குகூட நம்பத்தகுந்த விடை இருப்பதாக தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இது போன்ற எளிய கேள்விகளுக்கு கூட விடை தெரியாமல் big picture பற்றி பேசுவது அறிவியல் பூர்வமான முறையல்ல என்பது என் அபிப்ராயம்.

    • Venkatesan Says:

      மேலே சொன்ன விமர்சனம் இந்த வலைப்பதிவு மீதானதன்று. ஒரு வலைப்பதிவில் சொந்த அனுமானங்களைதான் பெரும்பாலும் சொல்ல முடியும். அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது.

      எனது விமர்சனம் தமிழக அளவிலான சமூகவியல் ஆய்வு பற்றியது. எளிதில் விடை கண்டறிய முடியக்கூடிய சாதாரண கேள்விகளுக்கு கூட விடை தெரியாமல், எல்லாரும் மாளாமல் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு. இங்கே எதுவும் அறிவியல் பூர்வமாக ஆராயப்படுவதில்லை என்ற ஆதங்கம். தமிழக பல்கலைக்கழக சமூகவியல் துறையினர் மீதான விமர்சனமாக கொள்ளலாம்.

      • கல்யாணராமன் Says:

        வெங்கடேசன்,

        தமிழகத்தில் சாதி நிலை பற்றி அறிய திருமணத்தைத் தவிர மற்ற பொது வெளிகளையும் கவன்ப்படுத்தவேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சொன்னேன். திருமண வெளியைப் போலவே இவையும் தனிச் செங்கற்கள்தான். தமிழ்நாட்டு மந்திரிகளில் எத்தனை விகிதம் அதிக்க சாதியினர் என்பது போன்ற கேள்விகளுக்கும் விடை தேட வேண்டும். இவ்வெளிகள் பேசப்படுவதே இல்லை. தமிழ்நாட்டில் நில உடைமைப் பரவல் சாதிரீதியாக ஆராயப்படவில்லை. சாதியத்துக்குட்பட்ட பல பொதுவெளிகளையும் அடையாளப்படுத்துவது என்னைப் பொறுத்தவரை ‘அறிவியல்பூர்வமானதுதான்’.

        சாதியச் செயல்பாட்டைப் பற்றி எழுப்பக்கூடிய கேள்விகளில் கலப்புமணங்களின் விகிதம் பற்றிய கேள்வி அவ்வளவு முக்கியமானதல்ல என்பதும் என் தாழ்மையான கருத்து. சமூக அதிகாரம் சார்ந்த வெளிகளைப் பற்றிப் பேசுவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

        இந்த எளிய கேள்விகளுக்கு ஏன் விடைகளைக் கண்டறிய முடிவதில்லை என்றால், அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படாத ஆய்வுகள் எதையும் நாம் மேற்கொள்வதில்லை என்பதுதான் பதில். இத்தகைய ‘ஏற்பாடு’களின் மீதும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

      • கல்யாணராமன் Says:

        வெங்கடேசன்:

        இன்னும் பேசப்படாத, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் சமூகவெளிகளைப் பற்றிய முதல்நிலைத் தகவல்கள தனிமனித அனுபவப் பதிவுகளிலிருந்தே பெறமுடியும்.

        திருமணச் சத்திரத்தை வாடகைக்கு விடுவதில் எந்த அளவு சாதி பார்க்கப்படுகிறது என்பதற்கான ஆய்வை மேற்கொள்வதற்குமும் அது பரவலாக நடக்கிறது என்பதை தனிநபர் அனுபவப் பதிவுகள்தான் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதுபோல எத்த்தனையோ சாதிய நடைமுறைகள் பொது கவனத்துக்கு வருவதில்லை. அவற்றை கணிசமான அளவில் பதிவு செய்வதும் அறிவியல்பூர்வமானதுதான் என்பது என் தாழ்மையான கருத்து.

    • Venkatesan Says:

      கல்யாணராமன்,
      நான் குறிப்பிட்ட செங்கல் பற்றி மட்டும்தான் எல்லாரும் பேசவேண்டும் என சொல்லவில்லை. எனது தற்போதைய கவனம் அந்த செங்கல் பற்றி உள்ளது. உங்களுக்கு விருப்பமான மற்ற செங்கல்கள் பற்றியும் பேசுங்கள். ஆனால், எல்லாவற்றையும் சேர்த்து கதம்பமாக்காமல், அது எந்த செங்கல் என வரையறுத்துவிட்டு, விடையை அதன் கீழே எழுதி வையுங்கள். பல செங்கல்களுக்கு விடை தெரியும் போது big picture கிடைக்கும். ஒரு செங்கல் பற்றிய சொந்த அனுமானங்கள், அனுபவங்களைவிட நேரடியான புள்ளியியல் பூர்வ களஆய்வு மேலானதும், தெளிவு தரக்கூடியதும் அல்லவா? உதாரணமாக, நீங்கள் குறிப்பிட்ட இரண்டு செங்கல்கள் பற்றி சில நேரடிக் கேள்விகள்.

      1. “தமிழகத்தில் திருமண மண்டபம் வாடகை விடுவதில் ஜாதி” : 2010 ஆம் ஆண்டு தமிழகத்தில் மொத்தம் எத்தனை திருமணங்கள் நடந்தன? இதில் எத்தனை திருமண மண்டபங்களில் நடந்தன? அவற்றில் எத்தனை கேஸ்களில் ஒருவர் விரும்பிய மண்டபம் ஜாதிகாரணமாக கிடைக்கவில்லை? பதில் தெரியும்போது இந்த செங்கல்லின் கீழே எழுதி வையுங்கள்.

      2. “தமிழகத்தில் ஜாதிரீதியான நிலவுடமை”. தமிழகத்தில் தனியார் வசமுள்ள மொத்த நிலத்தின் மதிப்பு என்ன? அதில் ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு பங்குள்ளது. பதில் தெரியும் பொது இந்த செங்கல்லின் கீழே எழுதுங்கள்.

      இப்போதைக்கு நான் எனது விருப்ப செங்கல் பற்றி விடை கிடைக்கிறதா என பார்க்கிறேன். பூவண்ணன் சில பகுதித் தகவல்கள் தருகிறார். முழுமையான, திருப்தி தரும் பதில் கிடைக்கும்போது இந்த செங்கல் கீழே எழுதி வைக்கிறேன்.

  27. poovannan73 Says:

    Its not flowing milk and honey in TN but its better than many other states in overall development of all caste groups from OC to ST and the power of the downtrodden groups to fight back too as increased in TN in comparison with other states.
    The proportion of various castes among high court judges,lawyers,doctors,professors,vice chancellors,small scale industries ,artists etc is far better than other states in the country.

    http://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/india/31597294_1_upper-castes-scs-durables

    While poverty among STs is fairly widespread across all states with a significant ST population, Kerala, Tamil Nadu and Punjab are the only states where the proportion of SCs who do not own basic assets is around 10% or lower, lowest of all in Tamil Nadu. Asset ownership among SCs in these three states is higher than that among “others” in all other states.

    While part of the explanation for Tamil Nadu’s status as the best state for dalit asset ownership might be that the previous state government ran a scheme giving free television sets to poor households, this is not the only explanation, as ownership of other consumer durables like phones and computers is also among the highest in TN.

    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/bc-dalit-candidates-excel-in-civil-judge-exams/article3386170.ece

    The next big success was achieved by Scheduled Caste candidates. About 1,341 (20.01 per cent) of them, including 977 male and 364 female, wrote the examinations and 111 got selected for the viva voce taking the percentage of successful candidates in their category to 24.13 per cent.

    They were followed by the Most Backward Classes and Denotified Communities, whose percentage of participation — 27.42 — was more than SCs but the percentage of success within their category was only 20.65 as only 95 out of 1,838 (1,311 male and 527 female) candidates managed to clear the examinations.

    Quiet a number of states have a huge backlog of vacancies in posts reserved for SC/ST unlike tamilnadu where the performance has increased dramatically and reserved candidates belonging to TN from obc/sc claim more seats and jobs in central institutions than their poroportional share in the population of the country.

    Reservation for SC/ST exist across the country in accordance to their population and the increased presence of canddiates from TN than most other states should be seen due to the conducive situation in TN for education of all castes and good governance

  28. poovannan73 Says:

    Yayathi sir

    The study quoted surprisingly fails to give the % of intercaste marriages involving SC across the country and in each state inspite of they having access to the facts.
    It has taken 3 groups for consideration but falis to give the % of OC-SC,BC-SC,OC-BC across the country or in the states.
    It dwelves into funny criterias of exposure to mass media and comes with funny figures of very high % of intercaste marriages among those who have no exposure to massmedia in kerala but conveniently ignores the basic detail.
    There exist 1000 or more castes in tamilnadu and the activitiies of 3 or 4numerically dominant communities in pockets of their influence which is restricted to villages where they are in brutal majority as representative of entire tamilnadu.
    The differences between the various caste groupings have narrowed down considerably in tamilnadu unlike other states and facts to the contrary can be provided to dispute this

  29. tamil Says:

    PK ramasamy, you always hate Tamils and Dravidian parties, so it’s not surprise to see an article from you.
    But please note, Tamil nadu is one of the developed state in India, it is because of Dravidian parties only.
    If you don’t like Tamil people, please don’t write in Tamil, and please write in Sanskrit, English and Hindi.
    Because of your hate culture, push the common mans to admire the Dravidian parties and hate Brahmins.

  30. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ஸ்ரீ பூவண்ணன், வெங்கடேசன் மற்றும் கல்யாணராமன், யயாதி

    Its one thing to accept or reject some of the propositions you people are discussing. But sure, it is one of the discussions which is done with decorum and with decent language devoid of heat in recent past. And kudos to all of you.

    இப்படி ஒரு அழகான விவாதத்திற்கு ஒரு த்ருஷ்டி பொட்டு வேண்டாம். Tamil அவர்களின் கமெண்ட்ஸ். பொலிக பொலிக.

  31. Anonymous Says:

    பார்ப்பனர்கள்தான் ஜாதியை தமிழகத்துக்குக் கொண்டுவந்தவர்கள். இந்த ஆரிய வந்தேறிகளால்தான் ஜாதிவெறி தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. இவர்களைத் துரத்தினால், தமிழ் நாட்டில் ஜாதிப் பிரச்சினை ஒழிந்துவிடும்.

  32. tamil tiger Says:

    u r tamizh hater. if ppl like you vacate tamizhnad, dravidians wll win.

  33. Yayathi Says:

    1. Mr. Venkatesan: I am not in the field of social studies either and could not verify the authenticity or inappropriateness of the two papers on the same topic and nor I am trying to bring a sense of credibility to the paper. Since you mentioned we need a place to look for data (I am totally with you on discussions based on data or about data), I did some followup research and found out their background. In fact, if you are further interested in the said topic, you may want to get in touch with Dr. P. Arokiasamy Professor at IIPS and was coordinator for TN for NHS and his email address is parokiasamy@iips.net and web page: http://www.iipsindia.org/faculty_f_02.htm. That may be a good starting point.

    2. Mr. Poovannan:
    a. It is true that some of the statistics at the state level is not in the paper , which I also was expecting. If only they had that , this discussion would have been some what simpler, right :) This was the only one available and I’ll keep looking :-)
    b. On your links to TOI articles, I am not denying those. But please remember, those are “Economic” and “Political” progress. Economic and Political progress is a necessary but not sufficient condition to say that we have achieved “Social” progress. The progress on Economic and Political fronts are largely due to the institutional policies and programs (i.e. Government, Judiciary, Election commission etc.). Social progress happens outside of these institutions – on the houses and streets, between individuals – how and why they acquire certain identities. In fact, the most surprising is the amplification (I would not use the word resurgence) of the caste identities, in spite of such progress on E & P fronts in TN.
    c. That’s where, we need to ask the question (for analysis) : Is there an implicit or embedded hierarchical mindset ( Mr. Ramasamy’s blog) or, what age a Tamil child gets to know his/her caste identity? By whom and how? Is there something happening secretly that is outside the purview of TV cameras and “Kala Paniyalargal”. Recently, I saw an episode of “Neeya Naana” ( I like watching for the innocent, honest response from the audience and ignore the so called experts). They had about 50 college going boys and girls. When they were asked to name some Tamil books they read recently, only about 5 or 6 could answer. But when they were asked to name their “Kula Deivam” the number was in the range of about 30 (quoting from memory), including a Christian girl.

    3. Mr Kalyanaraman: I too did not think of inter-caste marriage as the only indicator but it is a major measure in that a successful inter-caste marriage indicates (as culmination of the interactions that precedes it) :
    a. Gender relationship ( inter-caste is mostly from romantic relationship and I am ignoring same sex marriage)
    b. Avenues for Social interaction
    c. Acceptance of rituals solemnizing weddings ( rituals symbolize religious, cultural and social beliefs)
    d. Vehicle for inculcating such values for next generation
    Thanks!

    • கல்யாணராமன் Says:

      Mr. Yayati:

      Thank you for your useful intervention, bringing the debate back to the original observation of Mr. Ramasamy that Tamils have a deep-rooted fixation that makes them see other people in terms of caste hierarchy all the time.

      If this mentality is at play, then it would be manifest more frequently and tangibly in everyday interactions, such as workplaces, public spaces subject to private discretion (ranging from kalyana mandapams to private schools and colleges) and the state machinery. While the prospect of an inter-caste marriage has the effect of focussing and intensifying caste sentiment, thereby dramatically increasing the visibility of casteism, it is the all-pervasive, everyday incidence of casteism that we must focus on if we are to examine Mr. Ramasamy’s original observation.

      While I am second to none in affirming that inter-caste marriages should be promoted and provided every means of social and institutional support when they occur, their role in denting the structure of casteism is highly overstated. I know that this lopsided focus on inter-caste marriages is a Periyarist credo, but in my view, it only prevents us from paying attention to the much larger casteist reality that surrounds us everywhere, all the time. The fact that inter-caste marriages are so few and far between even after a hundred years of Periyarist Iyakkam and nearly fifty years of Periyarist rule should tell us that the widely prevalent casteist mindset, manifest in all spheres of human life, needs to be tackled first.

      Moreover, casteist mindset is bound up not just with social hierarchy but with relations of production and with unequal access to resources and opportunities. Unless this inequality is dismantled, or at least mitigated through political participation, we won’t make a dent on casteism. Why is it that there is such poor SC representation in the major political parties in TN? Casteist mindset, of course, and an unwillingness to share political and State power with the hitherto oppressed castes. To my mind, these are far more important issues to be tackled. They are, in fact, the chicken that should come before the egg of inter-caste marriages.

      Finally, on the need for data based analysis: I have no quarrel with this. But we are faced with a situation where the local academic institutions or even the media are not interested in systematic study of our social reality in terms of casteist practices. Our inhibitions are such that we don’t even talk about the largest manifestation of casteism in our society viz. the casteism of the non-Brahmin dominant castes. But phenomena have to observed and acknowledged first before hypothesis can be formulated and subsequently validated by data collection and analysis. As far as the wider casteist reality is concerned, we are still in the first stage of primary observation and acknowledgment.

      “Is there an implicit or embedded hierarchical mindset ( Mr. Ramasamy’s blog) or, what age a Tamil child gets to know his/her caste identity? By whom and how? Is there something happening secretly that is outside the purview of TV cameras and “Kala Paniyalargal”.”

      I can’t thank you enough for asking these questions, because these are precisely the questions that need to be asked right now. It is by way of responding to these questions that I recommended the recent anthology of personal accounts of casteism, ”சாதியும் நானும்” (Kaalachuvadu, 2013), compiled by Perumal Murugan. Many more such accounts should follow before we begin to understand and admit the scale and extent of casteism prevalent in our society. I hope you and others will read this timely book.

      Thank you.

  34. தமிழ்புலி Says:

    பாப்பார நாய்கலை தமிழகத்தை விட்டு விரடினால் சரியாப் போதும்.

  35. PROUD PERIYARIST Says:

    MR RAMASAMY, YOU ARE NOT A TAMIL. SO YOU WRITE RUBBISH. YOU ARE ARIYAN. YOU ARE JACKAL.

    TAMILS ARE OLDEST RACE. LIFE ON EARTH WAS STARTED BY TAMILS. OTHER PEOPLES LIKE YOU ARE JEALOUS OF US.

    YOU ARE A TEA CHER? YOUR KNOLEDGE OF HISTORY AND TAMIL IS WORST. IS SANSKRIT OLDER TO TAMIL? TAMIL IS THE FIRST LANGUAGE ON EARTH.

    STOP TELLING BAD LIES. TAMIL PEOPLES ARE GREAT. THERE IS NO அடுக்குப்பிரிவு உணர்ச்சி IN TAMILNADU.

    SEE YOUR GUJARAT MODI IS KILLING MUSLIMS. TAMILS ARE NOT KILLING MUSLIMS. MODI IS ARIYAN BRAMIN DOG

    DONT WRITE BLOG

  36. poovannan73 Says:

    Yayathi sir

    We are making the same mistake as done by the study group in creating 3 monolithic blocks as 3 castes which is far away from truth.
    Areas where certain castes are in brutal majority are the ones where major incidents of discrimination and atrocities happen.
    The castes which are currently leading the fights against dalits are not high in the hierarchy and are among the lowest in obc pool.They too where denied housing or where farm labourers in the farms of reddys,naidus,mudaliars and vellala gounders.
    palli the word used to denote a section of vanniars too is a swear word (palli paya)used by the landowning castes even till recent past.
    the first caste in andhra backward class list and part of the denotified tribe group is palli @palli kapu@vanniar@vanni kaapu and they are still under the iron grip of reddys and kammas in andhra and have very poor representation in all wlaks of life including politics.
    devendra kula vellalar @pallar prominently found in southern districts too claim themselves as a ruling clan and try to come out of SC list as palli@vanniars and saanar@nadars did before independence when they where clubbed in scheduled castes.They do not suffer atrocities similar to those suffered by adidravidas or arundhathiyars and are a landowning community.

    There exist clear discrimination in having people from certain castes or religions as tenants across the country which is a far more pressing issue than the commercial marriage halls where commerce overrides all considerations in most cases except few exceptions.A Reddy or naidu or mudaliyar refuses to give house or agree to the intercaste marriage of their daughter to a isai vellalar or palli too and the political mobilisations of numerically stronger castes like palli have turned the equations upside down within decades.The castes which where the bosses of them few decades back will think twice before trying to punish them economically or physically

    The same will happen with dalits too in tamilnadu as they are now present significantly in police,govt jobs,administration,legal profession and have increased political awareness.Absence of brutal numerical strength in specific areas to dominate is the only factor preventing them from becoming the palli of this decade.
    There are certain marriage halls run by community groups which refuse them to anyone from outside the community and not for their community people who are marrying outside their caste.Most of the marriage halls vie with each other during nonmuhurtham days with discounts for conducting workshops,clearance sales of clothes,household cheap furniture etc.Most of the marriage halls have a premium for muhurtham dates and unofficial bidding too happens to get the hall on the coveted date.
    Separate burial grounds/crematoriums is another clear discrimination existing across the country and cities in tamilnadu are now able to overcome caste based crematoriums to a certain extent..Tamilnadu has reached a state where people are in a psoition to fight against injustice and most states are yet to reach that state where they have the power to even raise their voice.

  37. Venkatesan Says:

    யயாதி,
    தகவல்களுக்கு நன்றி.

    1. எனக்கு பரிச்சயமான கணினியியல் மரபுகள் மற்ற துறைகளிலிருந்து மாறுபட்டவை என்பதை அறிகிறேன். இந்த உலகில் ஒரு கட்டுரை இரு மாநாடுகளில் சமர்ப்பிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று. மற்ற துறைகள் பற்றி எனக்கு நிச்சயமில்லை. Atmospheric sciences துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவரிடம் பேசியதில், அவர்கள் அரிதாகவே இவ்வாறு செய்வதாகவும், எனினும் இவ்வாறு செய்ய கறாரான தடை எதுவுமில்லை என்றும் கூறினார். சமூகவியல் துறை ஆசாமி யாரிடமாவது பேசவேண்டும். எனக்கு நேரிடையாக யாரையும் தெரியாது. பார்ப்போம்.

    2. NHF சர்வேயின் தமிழகம் தொடர்பான அறிக்கை இங்கே கிடைக்கிறது : http://www.rchiips.org/nfhs/report.shtml. நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் ஆரோக்கியசாமி இதன் ஆசிரியர்களில் ஒருவர் என்பதை அறிகிறேன். இந்த அறிக்கையை இரண்டு மூன்று முறை புரட்டினேன். ஆனால், நமது விவாதப் பொருளான கலப்புமணம் பற்றி நேரிடையாக எதுவும் கண்ணில் படவில்லை.

    3. ஆனால், மேலே சொன்ன அறிக்கை slice and dice செய்து தொகுக்கப்பட்டது. மூல data முழுதும் இங்கு கிடைக்கிறது: http://www.measuredhs.com/data/dataset/India_Standard-DHS_2006.cfm?flag=0. இது STATA, SAS, SPSS ஆகிய format களில் கிடைக்கிறது (இதெல்லாம் என்ன?). கூடவே, flat file தந்திருக்கிறார்கள். நாமே இந்த data வை விருப்பபடி ஆராயலாம்! awk, excel, C என்பன போன்றவற்றை flat file மீது ஏவிவிட்டு சமாளிக்க முடியும் போல என தோன்றுகிறது! தரவிறக்கம் செய்து பார்த்தால்தான் தெரியும்.

    4. மேலும், நான் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் இந்த சர்வேயில் விடை இருக்கக் கூடும் என தோன்றுகிறது. Of course, this would not be the same as a full fledged census. But, the sample considered in the survey should be more than sufficient for our purposes.

    5. எல்லாம் சரி. கூகுல்ல தேடறது மட்டுமே “ஆராய்ச்சி” அப்பிடின்னு தேமேன்னு இருக்க இந்த அட்டைக்கத்தி ஆசாமியை போயி, ஆரோக்கியசாமி கிட்ட பேசு, டேட்டாவை நீயே அனலைஸ் பண்ணுன்னு சொல்லிட்டீங்களே! முன்ன கூட ஒரு தடவை இப்படிதான் பேஜாரா ஆயிடிச்சு. மோடி பத்தி பேச்சு வந்தப்போ, மது கிஷ்வர் உன் ஊர்ல தான் இருக்காங்க. நேரப் போயி பேசுன்னு சொல்லிட்டாரு ராமசாமி ஐயா. இதெல்லாம் நியாயமாரே! அதை விட இந்த data analysis ஈசியோன்னு தோணுது. ராமசாமி ஐயா அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ணாருன்னா, இறங்கிடலாம்னு இருக்கேன்.

  38. Yayathi Says:

    1. I concur with Mr. Kalyanaraman (KR) that Inter-Caste Marriages (ICM) cannot be termed as “means” to social integration and only be one of the “indicators/measures” of social integration.
    2. Poovannan (PV) Sir has provided a key observation: The necessity to form groups based on caste identity to fight for political and economic advancement. This necessity in turn could have caused estrangement among caste groups, thereby creating impediment to social integration. This is somewhat of a nonlinear characteristic – the more you associate yourself with a group for Political & Economic purposes, the lesser the social interaction/integration with other members of the society, as individual. Mathematically, this would be “Pareto optimal” – meaning, when you have multiple objectives, you cannot improve one thing without lowering another (i.e. Economic, Political and Social)
    3. I find a similar pattern in Mr. Ramasamy’s (VR) blog , especially on NRI (USA) and I take “Horizontal mentality” as something in terms of meme/trait and not blood/gene. The NRI associations (in general) are not for E&P but for cultural/religious purposes but in effect it is similar to the previous (bullet item 2): the more you associate yourself with a group for Cultural/Religious purposes, the lesser the social interaction/integration with other members of the society, as individual. There are differences within US, depending on whether NRI is in Bay Area or North Dakota or Atlanta but what he said is largely true :-)
    4. In reality, the ability of individual’s social interaction/integration with other members of the larger society gets constrained due to both:
    a. Association of an individual with a specific group for Economic/Political purposes
    b. Association of an individual with a specific group for Cultural/Religious purposes
    5. The common thing I find between VR and PV is “compartmentalization” and the difference is whether they are “horizontally spread” or “vertically stacked”. To find that out, we need to understand the origin of the group identities (when, how, why, family, etc.) mentioned in my previous comment.
    6. My take on “Horizontal Mentality” in an abstracted sense: A common theme across all caste groups/Tamil Nationalists/Dravidian Ideologues is the duality “Aanda Paramparai & Adimaigal” – cultural pride from a distant past and the necessity to come together now to fight as a group to reclaim the lost glory and rights. But with the game of numbers and power, this gets convoluted into “You better dominate, otherwise you would end up as subservient” and actually ends up subjugating their own people. I see that as “horizontal mentality” Mr. Ramasamy is alluding to.

    7. Mr.Venkatesan: Since you are a Computer Scientist, this data analysis is right in your alley – Big Data & Analytics :-) Hope it does not get messy such that ” தன் முயற்ச்சியில் முற்றும் மனம் தளராத வெங்கடேசன், வெப் சைட்டில் இருந்து டௌன் லோட் செய்தபோது, அதிலிருந்து கிளம்பிய பூதம் ……” :-) Good luck!

    I think I have reached my limit on this topic – appreciate other’s capacity and appetite for this topic. Thanks very much !

    “Everyone hopes society will return to its original freedom, and the man to its primitive purity” – Octavio Paz in “The Labyrinth of Solitude”.

  39. poovannan73 Says:

    certain facts about Tamils

    Tamils where the first to join british forces and robert clive had his first victories with the madras regiment.It was made of communities now fighting against each other.
    Most of the army regiments under british and even now are based on caste except the madras regiment.
    There exist separate regiments for dalit sikhs and other sikhs.There exist mahar regiment and maratha regiment.There exists jat rejiment,rajput regiment,rajputana regiments(consisting of separate companies for jats and rajputs)kumaon regiments consisting of separate regiments for ahirs@yadavs and kumoanis mostly kumoani rajputs and few brahmins ,dogra,JAKRIF ,grenadiers where separate companies exist for different castes and muslims and subedhar major comes in rotation based on caste .
    Britishers and post independent India found just the south indians (tamils are maximum followed by keralites ,andhra and karnataka) to work as a unit irrespective of belonging to different castes.
    The attempts post 1984 rebellion of sikh troops to change the pure regiments(consisting of single castes or religion)to mixed was met with resistance and attempts to mix have been changed and people reverted back on the basis of caste.
    People recruited and posted without caste check and background in the country happen only in MADRAS regiments and newly raised units.
    Tamils for centuries had no issues fighting as a single unit without caste differences a feat yet to be acheived by people from most parts of India
    Majority of tamilians requires a large number from his caste to become casteist and discriminate and has the least hesitation to join on the basis on language when he is outside his village ghettos unlike others.
    Tamils have thrown of the hierarchical mindset completely when it comes to those who where considered above them from top to bottom and no caste in tamilnadu irrespective of whichever group BC,OC,SC,ST it belongs to considers anyone higher than them and every caste group claims the topmost position.
    Its not my argument to say that there exist no casteist atrocities in TN but I defenitely contest the fact that tamilnadu is the worst.On the contrary TN has progressed quiet a bit and has all chances to be the first in the country to cross caste differences and reduce the gross disparity existing between various caste groups

  40. PROUD PERIYARIST Says:

    RAMASAMY HAS RUNAWAY AFTER BAD LIES. HE CANT FACE TRUTH. HE CANT FACE DRAVIDAN BRAVE PEOPLE.


  41. பல நாட்களுக்குப் பின் உட்கார்ந்து — ஒரு வழியாக இன்றுதான் இந்த ஐம்பது போல வந்திருக்கும் பின்னூட்டங்களைப் படித்துமுடித்தேன். :-)

    அன்புள்ள பூவண்ணன், சான்றோன், சரவணன், கல்யாணராமன், வெங்கடேசன், யயாதி, பக்கிரிசாமி – உங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஓரளவு நல்ல விவாதமாகவே இருந்தது; நான் தான் விவாதம் நடந்தபோது படிக்கவோ பங்குபெறவோ இல்லை. மன்னிக்கவும்.

    இந்தப் பதிவு முதலில் 3300 வார்த்தைகளுடனிருந்தது – அதனை நான் சுமார் 1000 வார்த்தைகளுக்குக் குறைத்தேன். இதன் மூலவரைவில் — ஜாதிசார்பு கல்யாண மண்டபங்களிலிருந்து, ஜாதிசார் நிலவுரிமை, நீருரிமை என ஜாதிசார்பு பிணஎரிப்பு மேடைகள் வரை (அருகில் உள்ள கருவடிக்குப்ப மயானத்தில் ஜாதிவாரியாக எரியூட்ட 20சொச்சம் மேடைகள்!) நிறைய (நான் நேரடியாகவே அறிந்துள்ள) எடுத்துக்காட்டுகளைக் கொடுத்திருந்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஊடகங்களைத் தவிர வெட்டியரட்டைகளைத் தவிர ஒரு குசுவுக்கும் சமூகத்துக்கு உபயோகப்படாத ‘கலப்பு’ அல்லது ‘ஜாதி மறுப்பு(!)’ மணங்களைப் பற்றி — ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஆனால், இதனைப் பற்றி இவ்வளவு விவாதம் நடக்கிறது என்பது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது. நாம் பல அடிப்படை பிரச்சினைகளை — எவ்விஷயங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கருதுகிறோம் என்பதே ஒரு ‘கண்ணைத் திறக்கும்’ விஷயம் தான்.

    நான் சில ஆய்வுகளையும் சுட்டியிருந்தேன் என நினைவு. என் துணிபு: திராவிட இயக்கத்தினால்தான், பொதுவான ’சில ஜாதிகள் மட்டும் எதிர்ப்பு’ என்று ஆரம்பித்த வெறுப்பியக்கம் பின்னர் ஜாதியுணர்வுகள் ஜாதிவெறியாக உருமாற அடிகோலியது என்பது; தமிழகத்தின், தமிழின், மக்களின் எதிரி #1 இந்த திராவிட இயக்க அபத்தங்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. நான் பூசி மெழுகுபவன் அல்லன். ஆனால் அலுப்படைந்திருப்பவன்.

    ஆக, அந்த வரைவு மிக நீண்டிருந்தது என்பதாலும் – இந்த சாளரம் பதிவுகள் நீண்டுகொண்டே போவதாலும், அதனை நறுக்கினேன்.

    பூவண்ணன், இந்த சாளரம் எனக்கு, என்னுடைய மண்புழுவினைய அளவில் – தமிழகத்தின் ஊடுபாவான இந்த அடுக்குப்பிரிவு உணர்ச்சியை ஓரளவு புரிந்து கொள்ள உபயோகமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களில் அப்படியில்லாமல் இருக்கலாம். பின்னர் ஒரு பதிவில் இவை பற்றி அவசியம் விவாதிக்கவேண்டும்.

    கல்யாணராமன், வெங்கடேசன், யயாதி – உங்கள் புரிதல்களுக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

    அனைவருக்கும் நன்றி. (கண்ட கழுதைகளை உள்ளே விட்டுவிட்டாள், இந்த தளத்தைக் கடந்த பத்து நாட்களாக நிர்வகித்த ஒரு கற்றுக்குட்டி சிஷ்யாயினி – அதனால்தான் ஒரே ஆளோ அல்லது ஒரு சிலரோ கண்டமேனிக்கும் திராவிட-ஆரிய பாலபாடம் எடுத்திருக்கிறார்கள். வழக்கமாக இவற்றை குப்பைக்கு அனுப்பிவிடுவேன். இருந்தாலும் நடந்தது நடந்துவிட்டது – இந்தமுறை பரவாயில்லை என்று விட்டுவிட்டேன்.)


Leave a reply to Yayathi Cancel reply