திருட்டு #திராவிடமாடல் தெருப்பொறுக்கி மெகாஊழல்வாதிகள், தங்கள் பெருங்கொள்ளைப் பணத்தைக் கலர்கலராகச் சலவை செய்யும் (30+) வழிமுறை/முறைமைகள் – குறிப்புகள் (1/2)

April 14, 2024

கவனிக்கவும். அல்ல1. அல்ல2. அல்ல3.

மேலும் கவனிக்கவும்; இது ரொம்பவும் நீளம் – ஆகவே இரண்டாகப் பிரித்திருக்கிறேன்; பொறுமையாகப் படிக்கவும்; ஏனெனில் திராவிடன்களின் கன்னக்கோல் தொழில்முறை செய்நேர்த்தி பற்றியது இப்பதிவு.

1

அல்ல1:

இப்பதிவு பெரும் தீவட்டிக் கொள்ளைகள்,  திமுக திராவிடச் செங்கோல் கன்னக்கோல் ‘கலெக்சன்’ முறைமைகள், தமிழகத்தின் தற்காலிக முதலையமைச்சர் முக இசுடாலிர் உட்பட ஆனந்தமாக அடிக்கும் அடாவடிக் கொள்ளை அயோக்கியத் தனங்கள் அரங்கேற்றப் படுவது பற்றி அல்ல.

அவ்வழிகள் பலப்பல இருக்கின்றன; அவற்றில் சில: ill-gotten massive loot via: mineral mafia to commissions to appointments to contracts to procurements to tender-fixing to surreal-estate to land registration bribes to films to ‘legit’ factories to foreign investments to lottery deals to extortion rackets to tributes from industrialists to fake education factories to… …many, many other illegal ‘entrepreneurships’) டிரான்ஸ்ஃபர்ஸ், ரோட் ட்ரேன்ஸ்பொர்ட் பத்திரத் துறை, அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழகப் பதவிகள், காவல்துறை உட்பட கைநீட்டி வாங்கும் கையூட்டில் % கமிஷன், வாரும் வாரியங்கள், ‘கட்சி நிதி’ என நேரடியாகவே வாங்கும் லஞ்சங்கள்… … என நீளும் இந்தத் திருட்டுத் #திராவிடமாடல் ஜாபிதா…

என்னுடைய – தர்க்கரீதியான கணக்கீடு வழியாக, இந்த இசுடாலிர் (என என்னால் செல்லமாகவும் ர் சேர்த்து மரியாதையுடன் அழைக்கப்படும் தமிழகத்தின் தற்காலிக முதலையமைச்சர் முக ஸ்டாலின்) + இந்த ஆளுடைய குடும்பம் மட்டும் அடிக்கும் கொள்ளை, பெறும் லஞ்சம் – சுமார் ரூ 120+ கோடி – ஒவ்வொரு தினமும்.

திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles April 22, 2023

பிற குடும்பங்கள் அடிக்கும் கொள்ளைகள் மேலதிகம்…

இம்மாதிரி திராவிட அறவழிகளைப் பற்றிப். பலமுறை நானே சலித்துக்கொள்ளும் படிக்கு எழுதியாகிவிட்டது; பலப்பலர் (விசிலடிச்சான் குஞ்சப்ப யூட்யூபர்கள் உட்பட) இதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதையும் பார்க்கிறேன். இதுவும் நல்லதற்கே! எப்படியோ தெருப்பொறுக்கித் திராவிடத்துக்குச் சாவுமணி அடிக்க ஆரம்பித்தால் சரியே!

அல்ல2:

இப்பதிவானது – திராவிடத்தின் திருட்டுக் கொள்ளைப்பணம் எப்படி கருணாநிதித்தன அறிவியல் பூர்வமாக, திறமைமிக்க ஊழியர்களை மாதச் சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு சேகரிக்கப்படுகிறது,  (பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அன்ட்ராய்ட் ஆப்-கள் மூலமாகவும்) மானிட்டர் செய்து முறையாக மேலாண்மை செய்யப்பட்டு, ‘சேர்க்கப் படவேண்டியவர்களிடம் பைசா தவறாமல் கணக்கு பிசகாமல், சிந்தாமல் சிதறாமல் சேர்ப்பிக்கப் படுகிறது‘ போன்ற சோகச் சடங்குகள் பற்றியும் அல்ல.

அல்ல3:

தொடர்ந்து மலைமலையாகச் சேர்ந்திருக்கும் திருட்டுப் பணத்தை என்ன செய்வது என்பது பிடிபடாமல் அதையே அடுக்கி ஒரு கட்டிலாக மாற்றி…

…அதன்மேல் திருட்டுமுழி முழித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் திராவிட அதிகாரிகளையும் அரசியல்பேடிகளையும் பற்றியுமல்ல!

மாறாக.

…இப்பதிவு, ‘எவ்வாறு அந்த திராவிடத் தொழில்முறைத் திருட்டுப் பணம், ‘வெள்ளை’ப் பணமாக, அறிவியல் பூர்வமாக, தொழில் நுட்ப  ரீதியாக மாற்றப்படுகிறது’ எனும் பெருஞ்சோகத்தைக் கோடிட்டுக் காண்பிப்பதற்குத்தான்…

…எப்படி – பெரும் அட்டூழியங்களின் (=பயங்கரவாதத்துக்கும் மதமாற்றத்துக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் அவுசாரித்தனத்துக்கும் ஊதாரித் தனங்களுக்கும், தேசவிரோத அயோக்கியத் தனங்களுக்கும்) நிகழ்களமாகவும், தெருப்பொறுக்கித்தனத்தின் அடிப்படைக் கட்டுமான பலமாகவும் திகழ்கிறது என்பதனைக் சிறு குறிப்புகளாகக் கொடுப்பதற்குத் தான்…

…எப்படி, ஒருமாதிரி சிறிய அளவில் இம்மாதிரி கருணாஉதயதயாநிதிகளால் – வெள்ளையாக்கப் படாமல் – அப்படியே கருப்புத் திருட்டுப் பணமாக – யுவகிருஷ்ண வகை உடன்பிறப்புக் கொத்தடிமை ரூ200 பட்டுவாடாக்களுக்கும், பப்பரப்பா பரப்புரை கார்த்திகைச்செல்வனாதி அரவிந்தகுணசேகர ஊடகப் பேடிகளுக்கும் மடை மாற்றப் படுகிறது என்பது பற்றியும்தான்..

ஆகவே, மீண்டும் கவனிக்கவும். :-(

சரி.

2

ஏன் பணச் சலவை செய்கிறான்கள்?

திராவிடப் பொறுக்கிகள் கொள்ளையடித்தான்கள், தொடர்ந்து அடிக்கிறான்கள், சரி. ஆனால் ஏன் அத்திருட்டுப் பணக் குன்றுகளைச் ‘சலவை’ செய்ய வேண்டும்? அதற்கு என்ன பெரிய அவசியம்? சும்மா பொட்டியில் வைத்துப் பூட்டி வைத்தால் போதாதா?

இந்த, விரக்தி கொடுக்கும் கேள்விகளைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்:

பேரறிஞர்(!) அண்ணாவும் ஊழல்வாதி என்றாலும் அவர் கையூட்டைப் பணமாகப் பெற்றமாதிரி தெரியவில்லை, அவர் உடற்சுகத்துக்குத் தான் அடிமை. தன் சொந்த உடற்சுகத்துக்கு தமிழகத்தின் முன்னேற்றத்தைக் காவு கொடுத்தவர்; எடுத்துக் காட்டாக – “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல, அவள் படிதாண்டாப் பத்தினியும் அல்ல!” + கருணாநிதி போன்ற முடை நாற்றமடிக்கும் ஊழல்+உடற்சுகவாதிகளை ஊக்குவித்தவர்.

ஆனால் தமிழகத்தின் அயோக்கிய ஊழல்வாதப் பெருங்கொள்ளை – கருணாநிதியிலிருந்துதான் ஆரம்பித்தது.

+ அப்படியும் இப்படியும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என திமுகவின் கொள்ளைக் குடும்பங்கள் தொடர்ந்து திருடிய பணம் என்பது ஏழெட்டு லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும்.

திமுகவின் பங்காளிகள் (அஇஅதிமுக) தங்கள் பங்குக்கு வேண்டிய அளவு கொள்ளை அடித்தாலும் – திமுக பொறுக்கிகள் அடித்தது தொடர் தீவட்டிக் கொள்ளை. பகற்கொள்ளை + இரவுக்கொள்ளைகளும்கூட. மேலும் அஇஅதிமுக காரனுக்கு திமுக காரன் போல அவ்வளவு க்ரிமினல் மூளையில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

(அந்தத் தண்ட செந்திபாலாஜி வசமாக மாட்டிக்கொண்டு கம்பிஎண்ணுவதற்கு அந்த க்ரிமினல் மூளையின்மை + வெறும் தெருப்பொறுக்கித்தன்மை மட்டுமே அஇஅதிமுகரீதியாக இருந்தன என்பவைதாம் காரணம்)

சரி.

ஒரு கோடி ரெண்டு கோடி என்றால் கத்தைகத்தையாகக் கட்டி வீட்டிலேயே எங்காவது (கழிப்பறை படுக்கை உட்பட) பதுக்கிவைக்கலாம். ஆனால், நாம் பேசிக்கொண்டிருப்பது மாதத்துக்கு 3000 கோடி ரூபாய் ‘வரவு’ – அதுவும் தற்காலிக முதலையமைச்சருக்கும் அவன் குடும்பத்துக்கும் மட்டுமே. கொடவுன் கிடங்கு என பலப் பல இருந்தாலும் வீட்டின் அடியில் ரகசிய அறைகளையே விடுங்கள் – நிலத்தடி ரகசியமாளிகையே இருந்தாலும் அவற்றிலெல்லாம் இந்தக் கொள்ளைப்பண மலைகள் எப்படிக் கொள்ளும், சொல்லுங்கள்?

அப்படியே பெரிய்ய்ய்ய்ய்ய்ய கொடவுன் கட்டிப் பதுக்கினாலும், அதனைக் காப்பாற்றுவது எளிதல்லவே! பொறாமை பிடித்த அன்னாடங்காய்ச்சி உடன்பிறப்புகளே போட்டுக் கொடுத்துவிடுவார்களே!

ஆகவே கொள்ளைகளைச் சலவை செய்து – புத்தம்புதிய வெள்ளைப் பணமாக மாற்றி வாழையடிவாழையாக உய்வதே வழி என்கிற திராவிடச்சிந்தாந்தத்தைக் கண்டடைந்து விட்டிருக்கின்றனர்…

மேலும்.

திராவிடர்கள் பேராசைக் காரர்கள். ‘இதுவரை நாம் அமோகமாகக் கொள்ளையடித்தது போதும்’ என்பதே அவர்கள் அகராதியில் இல்லை; அவர்கள் திரும்ப பதவிக்கு வந்ததே இன்னும் மேலதிகமாகக் கொள்ளையடிக்கத்தான்… “ஆத்தோட போற தண்ணீ, அத நீ குட்ச்சா எனக்கு வவுறெரியும், நாமட்டுந்தா அத்த குடிக்கோணும்…” மனப்போங்கு.

அடுத்த பல தலைமுறைகளுக்கும் மெகாபணம் ‘சேமிக்க’ வேண்டிய சோகக் கட்டாயம் – ஆகவேயும்.

மேலும், திராவிடன்களின் கொள்ளைப்பணம், குட்டிபோட்டு இன்னமும் வளர்ந்தால் சுகம்; ஆனால் கொள்ளைப்பணத்தை அப்படியே தொழில்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாதே… என்ன சோகம் பாருங்கள்?

பணமதிப்பு டிமானடைஸைஷன் டர்புர் என மோதியின் பாஜக சமூக நீதியை மிரட்டும் காரணத்தால் – கொள்ளையை வெள்ளையாக மாற்றி ரசவாதம் செய்யவேண்டிய கட்டாயம். இல்லையேல், மதவெறி பாஜக திடீரென்று திராவிடப் பணமூட்டைக் கரன்ஸி நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து சிறுபான்மையினருக்குத் தொந்திரவு தந்தால், எப்படித்தான் மதச்சார்பின்மையுடன் அதனை எதிர்கொள்வதாம், சொல்லுங்கள்?

மேற்கண்ட காரணங்களால் தான் திராவிடன்கள் தம் திருட்டு நிதிகளைச் சலவை செய்ய நேரிடுகிறது, புரிந்துகொள்ளுங்கள்…

எனக்கு எப்படி இந்த விஷயங்களைப் பற்றித் தெரியும்?

பலப்பல வருடங்களாக, ஏன் – மாமாங்கங்களாகவே – நேரடியாக என் பணிகள் நிமித்தமாகவும், சிலபல கட்சிகளில் ஆதங்கத்தில் இருக்கும்  பாவப்பட்ட அறிமுகங்கள் மூலமாகவும், சில தமிழக அதிகாரிகள் (காவல்துறை, ஐஏஎஸ் & ஐஆர்எஸ்) மூலமாகவும் + ஐந்தாறு மூத்த மத்திய அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் மூலமாகவும் பலவேறு காலகட்டங்களில் எனக்குத் தெரிய வந்தவைதான் இவை.

(இந்த நண்பர்கள்/சான்றோர்கள் ஜாபிதாவில் – இன்டெல்லிஜென்ஸ் ப்யூரோவின் மூத்தஅதிகாரி ஒருவரும் (பணி மூப்பு பெற்றவர்) அடங்குவார்; படுபுத்திசாலிகளும் தேசபக்தர்களும் + திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரிகளாகவும் இருந்த டிஎன்சேஷன் (மத்திய தேர்தல் ஆணையராக இருந்து ஒருமாதிரி சிம்மசொப்பனமாக விளங்கியவர்), கமல்காந்த் ஜஸ்வல் (இவர் அந்த தண்டக்கருமாந்திரத் திருடனான தயாநிதிமாறன் கூடவெல்லாம் பணிபுரிந்த துர்பாக்கியத்தைப் பெற்றவர்) போன்றவர்களிடம் இவை குறித்துச் சிலபல முறை விவாதித்து வாயடைத்துப் போயிருக்கிறேன்.)

இவை அனைத்தும் உண்மை. துளிக்கூட மிகைப்படுத்தவில்லை.  பலவற்றுக்கு என்னிடமே கத்தைகத்தையாக ஆவண ருசுக்கள் இருந்தன – சிலமுறை நானே இவைகள் குறித்து. தனிமனிதனாக, ஒரு பாரதப் பிரஜையாக – தமிழக காவல்துறையின் ஊழலெதிர்ப்பு அமைப்பு (இப்போது அதன் பெயர் டிவிஏஸி – Directorate of Vigilance and Anti-Corruption என நினைக்கிறேன்) அதிகாரிகளுக்கும் ஒருமுறை ஸாஸ்த்ரிபவனில் இருந்த சிபிஐ அலுவலகத்திலும் கருணாநிதியின் பினாமி கம்பெனிகள் விஷயமாக என நினைவு) கொடுத்திருக்கிறேன்.

…சிலமுறை ஃபால்லொஅப் செய்து அலைந்து கொண்டிருந்தேன் கூட.

இந்த முனைவுகளால் ஒரு சுக்குக்கும் பிரயோஜனம் இல்லை, ஆனால் நான் எழுதவந்தது ‘அவை ப்ளடி ஒரு மயிருக்கும் உதவவில்லை.’

சரி. நானும் ஓரளவுக்கு மேல் விட்டேனா பார் எனப் பொருதவில்லை. கோர்ட் வழக்கு வ்யாஜ்யம் என மேலதிகமாக அலைய எனக்கு நேரமோ, என்னிடம் அபரிமிதமாகப் பணமோ இல்லை. ஏற்கனவே என் சிறு நிறுவனங்களை நடத்தவே (மாதத்தின் மூன்றாம் வாரத்திலிருந்தே எப்டிடா இந்த மாத சம்பளத்தைக் கொடுக்கப்போகிறோம் என்கிற நமநம வேறு!), அது குறித்து அழிச்சாட்டிய அரசதிகாரிகளுடன் மோதவே எனக்கு நேரமில்லாத கெடுபிடி.

…தனிமனிதனாக ஓரளவு ரகசியமாகவும் இந்த ஊழல் களேபர விஷயங்களை அகழ்வாராய்ச்சி செய்ததால், கூட வந்து ஒத்தாசையாக இருக்க கொள்ள என முதுகெலும்புள்ள நண்பர் குழாமும் இல்லை. தனிமனிதனாக இவை குறித்துப் பரப்புரை செய்ய அக்காலங்களில் ஸோஷியல்மீடியாவும் இல்லை. சுபம்.

… பின்னர், ஒவ்வொருமுறை இம்மாதிரி அயோக்கியத்தனங்களைக் குறித்த விஷயங்களைக் கேள்விப் படும்போதும் நொந்து போய் கையறு நிலையில் இருந்தாலும் – இப்போது முடிந்தவரை அட்டூழியங்களைத் தொகுத்து, ஆனால் அவற்றின் குறிப்பிட்ட/தனிப்பட்ட விவரங்களை முடிந்தவரை தவிர்த்துத் தான் இதனை எழுதுகிறேன்.

இதற்குமேல் இப்போதைக்குச் சொல்வதற்கு இல்லை. அவ்வளவுதான்.

3

முதலில் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கறுப்புப் பணம் என்பது திருட்டுப் பணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை; கொள்ளையடித்த பணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

எடுத்துக் காட்டாக – ஒரு ஆசாமி ஒரு வீட்டுமனையை விற்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அதன் சந்தைமதிப்பு ரூ 10 லட்சம் என்றால், அதனை கைட்லைன் வேல்யுவான 5 லட்சத்துக்கு (இது வெள்ளைப் பணம், கணக்கில் வருவது) பத்திரரீதியாக விற்றால் – மிச்சம் 5 கணக்கில் வராது; அதற்கு வருமானவரி, அதாவது கேபிடல்கெய்ன் (முதலீடுயுயர்வு) வரி கட்டமாட்டான் அவன். ஆனால் வரி-ஏய்த்த இந்தப் பணம் கறுப்புப் பணம் மட்டுமே – சட்டரீதியாக இப்படி சம்பாதிப்பது குற்றம் என்றாலும், ஒரு தொழில் மூலமாக வருவது, அதன் பரிவர்த்தனைகள் பாற்பட்டு நிற்பது. அந்த ஆசாமியானவன் அரசை (அதன் வழியாக நம் மக்களை) ஏமாற்றுகிறான் என்றாலும் அங்கு நடப்பது நிலம் வாங்கல்-விற்றல் எனும் பொருளாதாரம் சார் விஷயம்.

ஒரு பொருளுக்குச் சந்தை மதிப்பு கிடைக்கவேண்டும் என்பது விற்பவனின் ஒரு நியாயமான எதிர்பார்ப்பு; ஆனால் அந்த மதிப்பும் கிடைக்கவேண்டும், அதேசமயம் வரியையும் ஸ்டாம்ப்பத்திரச் செலவையும் குறைக்க வேண்டும் என மக்கள் அலைவதால் இப்படி நடக்கிறது.

…இது மோசமான குற்றமல்ல எனச் சப்பைக் கட்டுக் கட்டவில்லை; ஆனால் அவன் வரி ஏய்ப்பு என்கிற கேவலத்தைச் செய்கிறான் என்கிற ஒரே காரணத்துக்காகவே அவனை இவ்விஷயத்தில் குற்றம் சாட்டமாட்டேன்; ஏனெனில் சர்வசாதாரணமாக இக்குற்றத்தை நம் குடிமக்களில் பலரும் செய்கிறோம். மேலும் முக்கியமாக – அவன் பிறத்தியார் சொத்தை, நேரடியாக திராவிடத் திருடல் செய்யவில்லை.

(முழுவதும் வெள்ளையில் தான் என் வீட்டு மனையை விற்பேன் என அடம் பிடித்து ஆகாத்தியம் செய்து ஆனால் சந்தைமதிப்பில் 70% தாம் வாங்குபவர்கள் ‘முழு வெள்ளையில்’ தருவார்கள் என்பதால் அதனை ஒப்புக்கொண்டு என் நிலத்தைக் கிரயம் செய்து கொடுத்தால், சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரே பிரச்சினை. கசமுசா. ஏனெனில் உடனடியாக அப்பகுதியில் கைட்லைன் மதிப்பு ஏறிவிடும். அதனால் பிற வாங்குபவர்களும் விற்பவர்களும் ‘படுபயங்கரமாகப் பாதிக்கப் படுவார்கள்’ என்று. ‘பிறர் வயிற்றில் இப்படி அடிப்பது நியாயமா’ என்ற பிலாக்கணம்வேறு, ஐயகோ!)

சரி. வரியைச் சரியாகச் செலுத்திவிட்டால் கறுப்புப் பணம் வெள்ளைப் பணமாகிவிடும். அவ்ளோதான்.

மாறாக – கொள்ளை/திருட்டுப் பணம்:

மேற்கண்ட ஆசாமியின் கேஸையே எடுத்துக் கொள்வோம். இந்த வீட்டுமனை விற்பனையில் கொஞ்சம் ‘எல்லாரும் செய்யற அட்ஜஸ்ட்மெண்ட்’ இருப்பதால், பத்திரப்பதிவு ரெஜிஸ்ட்ராரிலிருந்து அனைவருக்கும் அவர்கள் ரெவலுக்குத் தகுந்தாற்போல அழவேண்டும். கையூட்டு. ஆனால் ஒரு இடத்தில் கொடுத்தால் போதும்; ஏனெனில் – இந்தப் பணம் (நிலப்பதிவு சார் கையூட்டு) முறையாகப் பிரிக்கப்பட்டு நம் திராவிட முதலையமைச்சன் வரை பங்கு போகும்.

இப்படி அந்தப் பொறுக்கிகள் (திராவிடன்கள், அதிகாரிகள், ப்ரோக்கர்கள் உட்பட) சம்பாதிப்பது கொள்ளைப் பணம் – இதற்கு அவர்களால் நேர்மையாகக் கணக்கு காண்பிக்க முடியாது.

ஆகவே இந்த பணத்தின் ஓட்டம் பெஞ்சுக்கு அடியிலேயே இருந்து கொண்டிருக்கும்.

4

நாம் முன்னமே குறிப்பிட்டது போல – நம் தமிழக, வெளி நாடு வாழ் திராவிடர்களின் அயோக்கியக் கொள்ளைகளைச் சலவை செய்வதற்கு பலப்பல வழிமுறைகள் இருக்கின்றன; கீழ்கண்ட அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். (இன்னமும் இருக்கின்றன – ஆனால் இப்பதிவின் 2.0 வந்தால் அவற்றையும் பார்க்கலாம்)

  1. பினாமி பேமானிகள்
  2. திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், கலெக்ஷன்
  3. ரியல்-எஸ்டேட் தகிடுதத்தங்கள்
  4. லாட்டரி அடிப்பது
  5. ஆன்லைன் ரம்மி – பெட்டிங் சீட்டாட்டங்கள்
  6. போலி, ‘லெட்டர் பேட்’ தொழிற்சாலைகள்  – ‘அக்காமடேஷன்’ இன்வாய்ஸ்கள்
  7. அரசு யானைவிலையில் பலப்பல பொருள்/கருவிகளைக் கொள்முதல் செய்யும் தனியார் தொழிற்சாலைகள்
  8. அறக்கட்டளைகள் பள்ளிகள், கல்லூரிகள்
  9. சொந்தஜாதி நியமன அரசுப் பதவிகள் வழி
  10. பலப்பல பெயர்களில், கணக்குகளில் – உள்நாட்டு வங்கிக் கமுக்கங்கள்
  11. ஹவாலா
  12. வெளி நாட்டு முதலீடுகள்
  13. வெளி நாடுகளில் இருந்து முதலீடுகள்
  14. பிற மாநில முதலீடுகள்
  15. நேபாளம் வழிச் சலவை
  16. போதைப்பொருள் கொள்முதல்+விற்பனை
  17. பாரத எதிரிகளுக்கு ஆயுதவுதவி
  18. தங்கமே தங்கம்
  19. தன்னார்வக் கூவான்கள் மேலாண்மை
  20. சுபவீ போன்ற எடுபிடி அல்லக்கைகள், அறிவுஜீவிகள் மேலாண்மை
  21. ‘கட்சி-சாரா’ ஆனால் அமைப்புரீதி கூலிப் படையினர்
  22. ஊடகப் பேடிகளுக்கு மண்டகப் படி + ‘கவர்’ + விளம்பரங்கள்
  23. ஆயுதம்தாங்கிய கூலிப் படையினர் மேலாண்மை (குண்டர் படைகள்)
  24. ‘செயல் வீரர்கள்’ பொற்கிழி+++
  25. கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் விசிக கட்சி (அதாவது கூலிப்படையினர்) கருணைப்பிச்சைத் தொகைகள்
  26. ரூ 200/- சமூகவலைத்தள ஐடிவிங் கூலிப்படையினர்
  27. மாநாடுகள், பிரியாணி, சாராயம்
  28. தேர்தல் சமயத் திருட்டுப்பண விநியோகம் (கழகச் செயல்வீர குண்டர்களுக்கு)
  29. தேர்தல் சமயத் திருட்டுப்பண விநியோகம் (கூறுகெட்ட வாக்காளர்களுக்கு)
  30. ஆடம்பர டாம்பீகங்கள்
  31. விருதுகள், உதவித் தொகைகள், மொய்கள்
  32. கந்துவட்டி (சிறு அளவில்)

… மேற்கண்டவற்றை, ஒவ்வொன்றாக இனிமேல் (ஒரளவு சுருக்கமாக, அடுத்த பதிவில்) பார்க்கலாம்.

சரியா? :-(

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *