ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?

April 1, 2013

(அல்லது) மாணவர்களும் அரசியலும்

என்னுடைய, தற்போதைய புத்தம்புதிய  புதிய ஆத்திச்சூடியில்,

அ: அரசியல் பழகு.
ஆ: ஆற்றாமை தவிர்.
இ: இலத்தல் இகழ்ச்சியல்ல
ஈ: ஈடுபாடு கொள்.


(ரொம்ப அறிவொர மாரி இருக்குல்ல, மன்ச்சுக்குங்க; எனக்குந்தாங்க இந்த அறிவொர, சொறிவொரல்லாம், சரீங்க்ளா?)

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது வாழ்க்கையில், சமூகத்தில், நம் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான, இன்றியமையாத அங்கம்.

மிகு பொது நலம் (’greater common good’) – மீதாகக் குவிந்த வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் விட்டுப் போனவற்றை / போனவர்களை / பாதிக்கப் பட்டவர்களை, தொடர்ந்து அரவணைத்து மேலெழுப்பிச் செல்வதும் அரசியல் நடவடிக்கைகளின் மூலமாகவே சாத்தியங்களாகவும் என்பதாகவே நான் அறிகிறேன்.

… பொதுவாக, நான் ஏற்றுக் கொண்ட தொழில், எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை அல்லது நான் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும்போது எனக்கு அவ்வேலைகளைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம். அவற்றுடைய இலக்குகளை அடைவது தான் முக்கியம். இந்த முனைவுகளில் இல்லாத அரசியலா! இதில் இல்லாத நடைமுறை தந்திரோபாயங்களா? இந்த முயற்சிகளில், தனிமனிதர்களின் தன்னல இச்சைகளையும் பொச்சரிப்புகளையும், மனமாச்சரியங்களையும் – அவை இலக்குகளை அடைவதற்கு உபயோகமாக இல்லாமலிருந்தால், அவற்றை மறித்தால், அந்த மனிதர்களையே கூட கடாசியே வந்திருக்கிறேன். நல்லிணக்கமா? க்கூட்டுறவா?? இன்னாங்கடா, இன்னாடா ஸொல்றீங்க?? இதெல்லாம் கிலோ என்ன விலை?

கருணையுள்ளம் இல்லாதவனில்லை – நானும் வாடிய பயிரைக் கண்டதும் வாடுபவன் தான். ஆனால், கருணை என்பதன் போர்வையில் அரைகுறைத்தனத்துக்குக் கொம்புசீவி விடமாட்டேன்; இரக்கம் என்ற பெயரில் வழவழா கொழகொழா வென்றெல்லாம் நடந்து கொண்டு, மென்று முழுங்கிக் கொண்டு, உள்ளூறப் புழுங்கிக் கொண்டு இருப்பது எனக்குப் பிடிக்காது.

ஒருகாலத்தில், என் இருபதுகளின் ஆரம்பத்தில் கூட, இப்படி மறுகிக் கொண்டிருந்தவன் தான் – ஆனால், கடந்த 25 வருடங்களாக, அப்படி இல்லை. தொடர்ந்த பயிற்சியால், சுயமுயற்சியால் கொஞ்சம் இறுகி விட்டேன். ஒருவர் தவறு செய்தால், அதையும் தெரிந்து செய்தால் (எம்ஜியார்! என்ன அழகான எழுச்சி தரும் ’கொள்கைப்’ பாட்டு இது!!) — அதனைச் சுட்டிக்காட்டாமல் இருப்பதன் மூலம், அவர்களுக்கு உதவி செய்யாமல், மாறாக, அவர்களின் மன / உள / லௌகீக முன்னேற்றங்களுக்கு துரோகம் இழைக்கிறோம் என எண்ணுபவன் நான். ஆனால் நான் நிச்சயம் கடவுள் விளையாட்டு விளையாடவில்லை.  நான், நீச்ச-வின் அதிமனிதனுமல்ல. இந்த விஷயத்தில் பிரமை என்றெல்லாம் இல்லை.

என் அக்காள் சொல்வார் – மற்றவன் குண்டியில் மலம் இருக்கிறது என்று சொல்லும் போதே, உன் குண்டியில் என்ன இருக்கிறது என்பதை ஒரு வினாடிக்காவது நினைத்துக் கொள். இதுவும் சரியே. ஒப்புக் கொள்கிறேன். என்னைக் குறை சொல்பவர்களின் கருத்துக்களையும் கேட்டுக் கொள்கிறேன். வேறு யாராவது ஒருவரை அல்லது ஒரு கோட்பாட்டை – விமர்சிக்கும் போது, அதே விமர்சனத்துக்கு நானும் உட்படாதபடியிருக்கிற நிலையில் இருக்கிறேனா என்று அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன். ஆனாலும் என்னை, இப்படி அநியாயமாக ஏழவாவது அறிவு பார்க்க வைத்து விட்டாயே, அக்கா!

என் பதிவுகளையும் (தலையில் அடித்துக்கொண்டு) படிக்கும் செல்ல அக்காவே! ஒன்று நல்லது என்று எனக்குப் படும்போது அதைச் சொல்வது போலவே, தவறு என்று எனக்குப் படுவதையும் பட்டவர்த்தனமாகச் சொல்லாமல் இருக்க முடியாது. இது ஒரு குறை தான், ஒப்புக் கொள்கிறேன், சில சமயம் மிகவும் புண்படுத்தி விடுகிறேனோ, நக்கல் செய்து விடுகிறேனோ என்கிற சந்தேகமெல்லாம் உண்டுதான், ஆனால் அது ஒரு சந்தேகம் மட்டுமே! என் நண்பர்கள் வட்டத்தை என்னுடைய இந்த மனப்போக்கு வளராமல் செய்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் இதுவும் கொடுக்கப் படவேண்டிய விலைதான்.

… ஆனால், எனக்குத் தோன்றுகிறது – எனக்கு இருக்கிற நண்பர்களே போதும் – அவர்களுடனேயே செலவழிக்க நேரம் இல்லாத போது, என்ன மேலே மேலே எண்ணிக்கைகளை மட்டும் வளர்த்துக் கொண்டு! Quality versus Quantity என்றால், என் வாக்கு, முன்னதற்கே!

இது என்னுடைய அரசியல்.

நான் களப்பணியாளன் என்றெல்லாம் இல்லை. தமிழ் இந்த விதத்தில் ஒரு மொண்ணை. தமிழில் நான் செய்வதற்குச் சொல்வதற்கு சரியான வார்த்தை இல்லை. இன்னொருவர் சொல்லிச் செய்யாமல், எனக்குப் பிடித்ததை, பிடித்த விதத்தில் செய்து கொண்டிருக்கிறேன்; பிடிக்காததை, காரணங்கள் சொல்லி எதிர்க்கிறேன். சூழ்நிலையும் ஒத்துழைக்கிறது, இது அரசியல் தான். அவ்வளவே.

நான் உண்மையிலேயே ஒரு களப்பணியாளனாக ஆவதற்கு, நான் போகவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.  (என்னைப் பற்றி, ஒரு போலித் தன்னடக்கத்துடன் இதனைச் சொல்லவில்லை, ’இல்ல சார் நீங்க எவ்ளோ பெரிய்ய ஆளு’ என்று பிறர் சொல்வதற்காகவோ சொல்லவில்லை. என்னுடைய தவறுகள். குறைபாடுகள் எவ்வளவோ இருக்கின்றன – இவை பற்றியும் எனக்குத் தெரியும்தான். ஆனால் மீயுணர்வு இல்லாத நிலை (lack of meta-cognition) அவற்றில் நிச்சயமாக ஒன்று இல்லை. நன்றி!)

… ஹ்ம்ம். அவ்வளவு தூரமும், ஏன், அதற்கு மேலும் சென்றிருப்பவர்களை, அப்படிப்பட்ட பலரை – நேரடியாக, தனிப்பட்ட முறையில்  அறிவேன். இவர்களெல்லாரும் வருந்தத் தக்க விதத்தில், ஒன்றுமே சொல்ல / எழுத மாட்டேன் என்கிறார்கள். அவர்களுடைய கருமமே கண்ணாயினார் என இருக்கிறார்கள். மற்ற கருமாந்திரங்களைப் பார்க்கவே மாட்டேன் என்கிறார்கள்; அவர்கள் அரசியலை வெறுக்கிறார்கள் – இவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது – ஆனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

ஆனால், எனக்கு நேரமும் (அடிக்கடி பலர் சுட்டிக் காட்டுவது போல காழ்ப்புணர்ச்சியும்  — அய்யாமார்களே – இதை தயவுசெய்து காழ்புணர்ச்சி என்று எழுதி என் மேலதிக வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொல்லாதீர்கள்), வேலைவெட்டியற்ற தனமும் மிகுந்து இருப்பதால்,  நான் எழுதுகிறேன். பாவம், நீங்கள்.

நான், அரசியல்வாதி தான். கறை படிந்த வேட்டி கட்டும் பாக்கியம், எனக்கு இல்லையே தவிர, ’ராமசாமி அரசியல் செய்கிறான் ’he is indulging in politics /  politicking’ என்பதை நான் ஒரு பெருமைக்குரிய விஷயமாகவே கருதுகிறேன் – இளமையில் படிக்கும் போதும் சரி, பொது / தனியார் நிறுவன வேலைகளிலும் சரி,  ஊடாடியிருந்த, ஊசலாடிக் கொண்டிருந்த தொழில் முனைவுகளானாலும் சரி – நான் என்னுடைய அரசியலில் தீவிரமாகவே இருந்திருக்கிறேன்.

இப்போது பல வருடங்களாக, பள்ளி ஆசிரியனாக இருக்கும் போதும் அப்படித்தான். என் குழந்தைகளுக்கு ’அரசியல் என்றால் என்ன’ என்பதை, நான் அறிந்ததைக் கற்றுக் கொடுக்கிறேன். அதன் முக்கியத்துவம் பற்றி யோசிக்க, செயல்படவைக்க முயல்கிறேன். இவர்களில் சிலர், கிராமப் பஞ்சாயத்து அரசியல் செயல்பாடுகளிலிருந்து, மேலே வளர்ந்து, பிற்பாடு பல அரசியல் கட்டமைப்புகளில் ஈடுபடுவார்கள் என்கிற சாத்தியக்கூறு எனக்குப் பெருமையளிக்கக் கூடிய விஷயம். நேரடி அரசியலில் ஈடுபடும் தீவிரமில்லாத மற்ற குழந்தைகளும், வளர்ந்தபின்னர் அரசியலை – அதற்குரிய மதிப்புடன் பார்ப்பார்கள் என்பது இன்னமும் பெருமைதான்…

பள்ளியில், என்னிடம் இருக்கும் குழந்தைகள் சுமார் 60 பேர் மட்டுமே (சுமார் 80 சதம் வன்னியர்; 20 சதம் தலித் – ஆண் குழந்தைகள் சரிபாதி) இருக்கலாம், ஆனால் இவர்களை, அவர்களின் சொந்தக் கண்களைக் கொண்டு பார்க்க என்னால் கொஞ்சம் உந்துதலும் உதவியும் செய்ய முடிந்தால் அதுவே போதும்…

விழிப்புணர்ச்சி நிலையிலும் சரி, செயலூக்கத்திலும் சரி, மிக முக்கியமாக, நேர்மையிலும் சரி என் குழந்தைகள் என் கண்மணிகள். இதில் எனக்கு மெய்யாலுமே பெருமிதம்தான். (இங்கு கர்வம் என்பதுதான் சரியான வார்த்தை)

இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்தக் குழந்தைகள் குழுவுடன் இருக்கிறேன். அவர்களுக்கு இப்போது, பிரிவினைக்கு அலையும் வெறுப்புவாதிகளை (வன்னியர்-தலித், வடக்கு-தெற்கு, ஆரிய-திராவிட, தமிழ்-ஹிந்தி, தமிழர்-பார்ப்பனபனியர்,  முஸ்லீம்-க்றிஸ்தவர்-ஹிந்து என அயோக்கிய வெறுப்புத்தீயை மூட்டுபவர்களை, அதில் குளிர் காய்பவர்களை) இனம் காணத் தெரியும், ஒதுக்கவும், தனிமைப் படுத்தவும் தெரியும் என்பது எனக்கு ஊக்க போனஸ்.

யார் சொன்னது, மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாதென்று? அவர்களை அதில் ஈடுபடுத்தக் கூடாதென்று?

-0-0-0-0-0-

 என்னளவில், என் அரசியலுக்குள்ள அறங்களை, தர்மங்களை முடிந்தவரை கடைபிடிக்க முயல்கிறேன், பல சமயங்கள் இது முடிவதில்லை என்றாலும். — ஆனால் விட்டேனா பார்தான். கற்றுக் கொண்டே இருப்பேன்.

அரசியலை வெறுப்பதை ஒரு மேட்டிமைத்தன அரைவேக்காடான கொள்கையாகவே வைத்திருந்து அயோக்கியக் கிருமி அரசியல் செய்து கொண்டிருக்கும் ‘சாக்கடை ஆய்வாள’ தொழில்முறை மனிதவுரிமை வாதிகளையும், சோம்பேறிக் கழிசடை சாய்வு நாற்காலி ’தட்டச்சு’ அறிவுஜீவிகளையும் நான் உளமாற வெறுக்கிறேன். இவர்களால் பரப்பப் படும் ‘அரசியலென்றாலே சாக்கடை’ எனும் தவறான அணுகுமுறையை நிராகரிக்கிறேன். (ஆனால், விதிவிலக்குகள் இருக்கின்றன/ர். ஒப்புக் கொள்கிறேன்.  என்னுடையது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட கருதுகோள்)

நான் அரசியலை – ஒட்டு, கட்சி, ஜனநாயகம், ஆட்சி என்கிற வட்டத்திற்குள் மட்டுமே பார்க்கவில்லை. நம்முடைய ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அரசியல் உள்ளது என்பதை, கம்யூனிஸமே சொன்னாலும் கூட ஒப்புக்கொள்பவன் – நேரடியாக உணர்ந்தவன் ஆனதால், நான் முழுநேர அரசியல்வாதிகளைத் தீண்டத் தகாதவர்களாகவே நினைப்பதில்லை. அரைகுறைத்தனமாக அரசியல்வாந்திகள், அரசியல்வியாதிகள் என்றெல்லாம் அவர்களைக் கரித்துக் கொட்டுவதில்லை.

அவர்களை நம் சமூகத்தை, அதன்  முன்னெடுத்துச் செல்பவர்களாகவே, பல விதங்களில் சமரசங்களுக்கு, நல்லிணக்கங்களுக்கு, வளர்ச்சிக்கு, விகசிப்புகளுக்கு முஸ்தீபுகள் செய்பவர்களாகவும், மகாகோர ரத்தம் சிந்தல்களுக்கு மாற்றாகவும் தான் பார்க்கிறேன்; இவர்களில் பலர், தன்னலம் கருதிச் செயல் பட்டாலும் –  அவர்களையும் மிக முக்கியமானவர்களாகவே கருதுகிறேன்.

சில வருடங்கட்கு ஒரு முறை, தேர்தலில் வேண்டாவெறுப்பாக ஓட்டுப் போட்டுவிட்டதோடு தங்கள் ஜனநாயகக் கடமை முடிந்தது என சாய்வு நாற்காலியில் அமர்ந்து அரசியலை, அரசியல்வாதிகளைக் கரித்துக் கொட்டுவது என்பது நேர்மையற்ற செயல் என நினைக்கிறேன்.

எப்பொழுதாவது யோசிக்கிறோமா, ஏன் பெண்கள் (பொதுவாக) இந்த இணைய வீரவிளையாட்டுக்களில், வெட்டி அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்று? ஏனென்றால் – அவர்கள் உண்மையாகவே இந்தச் சமூகத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் குடும்பங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள், மகத்தான பங்களிப்புக்களை, வெறித்தனமான உழைப்பை – வெகுமதியாக, முற்றிலும் இலவசமாக அளிக்கிறார்கள். நேரத்தைக் குப்பைத்தனமாக வீணடிப்பதற்கு அவர்களுக்கு ஆசையில்லை… ஆனால், ஆண்களாகிய நாம்??? #%**&^@! – இம்மாதிரி நேரத்தை வீரவிளையாட்டுக்களில் வீணடித்துக் கொண்டு, எப்படா முந்தானை விலகும் என்று நாயாக அலைகிறோம்! ஆ… எங்கேயோ போகிறேன்… ஹ்ம்ம்.

எது எப்படியோ

பாதுகாப்பான, அனாமதேயமான இடங்களில் இருந்து கொண்டு, நாம் மட்டுமே யோக்கியர்கள் என பாவித்துக் கொண்டு,  சமூக மேன்மைக்கோ, ஏன், தங்களது சொந்த மேன்மைக்கோகூட – கனவில் கூட ஒரு சுக்கும் செய்யாமல், பக்கத்து வீட்டு மனிதர்களுடன் கூட இணக்கமாக இருக்க முடியாதவர்களின், பக்கத்துக் குப்பத்துக்குச் சென்று – படிப்பு கல்வி கண்றாவி யென்றெல்லாம் கூட இல்லை – அங்கிருக்கும் குழந்தைகளுடன் நான்கு வார்த்தை அன்பாகக் கனிவாகப் பேசக்  கூட முடியாதவர்களின் – ஊருக்கு மட்டும் உபதேசம் செய்துவிட்டு, தம் வீட்டில்  ஜாதிபேதம், மதபேதம் பார்ப்பவர்களின் — இம்மாதிரி பரம அற்பர்களின் – அதி வக்கணையான – எங்கோயிருக்கும் பிரச்சினைகள் மீது, அரசியல்வாதிகள் மீது,  அதிகாரவர்க்கத்தின் மீது, தொழில்முனைவோர்கள் மீது, அமெரிக்கா – இஸ்ரேல் மீது, அறிவியல் மீது, தொழில்நுட்பம் மீது, பன்னாட்டு நிறுவனங்கள் மீது — அரைவேக்காட்டு வெறுப்புமிழ்தல்கள் / கல்லெறிதல்கள் / வசை பாடுதல்கள் / மயிர்பிளக்கும் விவாதங்கள் எனப் பேடித்தனமாக அலைபவர்களின் அலட்டல்கள், எனக்கு உவப்பானவையேயல்ல

நமக்குத் தேவையான, உவப்பான அரசியலை – வளர்த்தெடுக்க நாம் முனையா விட்டால், ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாமலிருந்தால் – நமக்கு உவப்பானவர்களா வருவார்கள்?

-0-0-0-0-0-0-

என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைகளுக்கு, படிப்பைத் தவிர உடல்-மனப் பயிற்சிகள் தவிர – ஒரு திடமான  நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்தெடுத்தலும், பகடி செய்யும், அதனைப் புரிந்து கொள்ளும் மனப்பயிற்சியும் முக்கியம்.

கல்வியைத் திறம்பட கற்பிப்பதற்கு, குழந்தைகளை பாடுபொருட்களில் ஈடுபாடு கொள்ள வைப்பதற்கு, ஒரு நாடகக் கலை சார்ந்த, சுளுவாக நடிக்கும் திறனும் முக்கியமான ஒன்று.

ஆக, என் குழந்தைகளுடன் உரையாடும்போது – நம்முடைய, தற்காலத் தமிழக அரசியல் என்பதை நம் குண்டி மாதிரி என்று கூட வைத்துக் கொள்ளலாம் என ஆரம்பிப்பேன்.10-12 வயது பிராயத்தில் இந்த உடற்கூறு சார்ந்த ஓசைகளிலும், கழிவுகளிலும் ஒரு கூச்சம் படிந்த நகைச்சுவை உணர்ச்சி இயல்பாகவே இருக்கும் குழந்தைகளுக்கு – முகத்தில் உணர்ச்சி ஒன்றும் காட்டாமல்,  நான் சொல்வதை நம்பவே முடியாது.

ஆரம்பிப்பேன். இந்த, குண்டி என்ற ஒன்று இல்லாவிட்டால், நாம் சாப்பிடத்தான், வாழத்தான் முடியுமா? ஆனால், நாம் இதனைச் சுத்தமாக வைத்துக் கொள்ளா விட்டால், கஷ்டப் படுவது யார்? அசிங்கப் படுவது யார்? நாம்தானே?? ஆக, அரசியலுக்கும் சரி, குண்டிக்கும் சரி – நம் கையே நமக்குதவி என்று அறிய வேண்டும். (அபிநயத்துடன் இதனைச் சொன்னால் குழந்தைகள் சிரிப்பார்கள் – இறுக்க உணர்வும் விலகும்)

அரசியல் குண்டி என்பதை நாம் ஒரு அனைவருக்கும் பொதுவான பொதுக் குண்டியாகவோ, அல்லது மற்றவருடைய குண்டியாகவோ பார்க்க முடியாது. நம்முடைய அரசியல் செயல்பாடு, நம்முடைய புரிதல்கள் – நம் சொந்தக் குண்டியைப் போலவேதான். (குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்)

பாரதி சொல்லவில்லையா – ’நாமார்க்கும் குண்டியல்லோம், அதனை அஞ்சோம்’ என்று?  ‘நாம் உட்காரும் குண்டி நமதென்பதறிந்தோம்’ என்று? [பாரதியார் அப்டியா ராம் எழுதினாரு?  நீ என்ன நெனக்கறே சுட்டிப் பெண்ணே? ம்… நீங்க ஜோக் அடிக்கறீங்க!]

… மேற்கண்ட, இந்த ரசக் குறைவான எடுத்துக்காட்டு, இதுவரை நான் உரையாடியுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் (தமிழ் / கன்னடம் / தெலெகு / ஹிந்தி)  பிடித்த ஒன்று. ’அரசியல் என்றால் மோசம்’ எனும் பாமரப் பார்வையிலிருந்து அவர்கள் வருவதால், இந்த உவமையை இவர்கள் வெகு சீக்கிரம், சிரித்துக் கொண்டே புரிந்து கொள்வார்கள்; பிறகு அரசியலில் ஈடுபாடு காட்டுவார்கள்.

இந்தக் குண்டியையும், அரசியலையும் இணைத்துப் புரிந்து கொள்வது முக்கியமான விஷயம் இல்லையா? (முக்கிக் காண்பிப்பேன்)

… அதே சமயம் அவர்களுக்கு உடற்கூறுவியல், உணவுப்பாதை பற்றியெல்லாம் படிப்பித்து அவர்களை, செரித்தல், கழிவுகளை வெளித்தள்ளுதல் என்பது எவ்வளவு அழகான, உயிர் தரித்தலுக்கு அத்தியாவசியமான பணி என்பதை உணர வைப்பேன்; கழிவுகள் எப்படி உணவுச் சக்கரத்தில் ஒரு மிக முக்கியமான அங்கம் என அறிய வைப்பேன் – கூட கொஞ்சம் உணவு என்றால் என்ன, சத்து முக்கியமா, எது உண்ணத்தகுந்தது, இயற்கை/செயற்கை விவசாயம் என்றெல்லாம் ஓடும் – பின்னர் ’அரசியல்= சமுதாயக் கழிவு’ எனும் பொதுப்புத்தி(யின்மை)ச் சமன்பாடு அசமன் செய்யப்படும்; இதற்குப் பின், அரசியலின் அங்கங்களைப் படிப்போம் – இவ்வளவு தூரம் வந்துள்ள குழந்தைகள், பின்னர் அரசியலின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்குவர். ஜனநாயகத்தின் முடிவிலா சாத்தியக் கூறுகளை உணர்ந்து கொள்வர்.

இந்தக் குண்டிமுதல்வாத அரசியல் அணுகலை பார்த்து – நீங்கள் அருவருப்படையலாம், சிரிக்கலாம், ஏன், நானும்தான் சிரிக்கலாம். ஆனால், இதனை நான் ஒரு தந்திரோபாயமாகவே வைத்திருக்கிறேன் – கடந்த ஏழு வருடங்களாக இந்த அணுகுமுறை  வேலை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு கழிவுகள் மேலும் அரசியல் மேலும் ஒரே சமயம் (சுமார் 6 அமர்வுகளில் ஒரு அமர்வுக்கு 1.5 மணி நேரம் எனும் விகிதத்தில்) மதிப்பு ஏற்படுத்த என் ரசக் குறைவான வழி இது. ஹ்ம்ம்.

சுபம்.

-0-0-0-0-0-0-

யதா ப்ரஜா, ததா ராஜா. (ஆம், நீங்கள் சரியாகத் தான் இதனைப் படிக்கிறீர்கள். குடிகள் எவ்வழி, அரசன் அவ்வழி என்பதுதான் சரி. இம்மாதிரி இவ்வசனங்களைப் படிப்பது முக்கியமானது என எண்ணுகிறேன்.)

ஆம், யதா ப்ரசா, ததா ராசா (கைய வச்சா) என்பதும் சரியே.  ;-)

என்ன, அரசியல்களங்களில் சில அதி தீவிர விஷக்கிருமிகளும் இருக்கின்றன, அயோக்கியத் தனம் மட்டுமே செய்துகொண்டு… அவை துப்புரவாகக் களையப் பட்டு, புது ரத்தம் பாய்ச்சப் படவேண்டும்தான் என்பது என் எண்ணமும் கூட. (இதனால்தான் திமுக (எதிர்ப்) பக்கங்களும்; நக்ஸல்பாரி போன்ற வெறுப்புமுதல்வாத இயக்கங்களும், மதவெறி முதல்வாத இயக்கங்களும், தமிழ்வெறி அரைகுறை இயக்கங்களும் இப்படியேதான் கருதப் படவேண்டியவை என்பதிலும் எனக்கு ஐயமே இல்லை)

It is rather unfortunate, but it does seem to me that, deep seated cancer can never be cured by the cosmetic skills of dermatology. Yeah.

-0-0-0-0-0-

அரசியலென்றாலே, அதன் அடிப்படை வன்முறைதான் என்கிற புரிதல் எனக்குத் தவறாகத்தான் தோன்றுகிறது. நான் பல  – முழுவதுமாக வன்முறையை நிராகரிப்பவர்களை, அரசியல்வாதிகளை (நானும் முன்னமே எழுதியுள்ள ஷங்கர் குஹா நியோகி ஒரு மகத்தான உதாரணம், இதற்கு)  நேரிடையாகப் பழகியுள்ளதால் அறிவேன்.   நாம் அவ்வளவு தூரம் – பாபுஜி வரை கூடப் போகவே வேண்டாம். இன்னமும் இப்படிப்  பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சி தரும் விஷயம். இவர்கள் பெய்யெனப் பெய்யும் மழை. நிச்சயமாக.

இருந்தாலும், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்,  நடைமுறை அரசியல் என்பது – அதன் அடிமட்டங்களில் (அதிமட்டங்களில்?) ஊடாடிக் கொண்டிருக்கும் விஷயங்கள் – கருத்துக்களாலோ அல்லது கரத்தாலோ செய்யப் படும் – வன்முறைகள்தான் என்பது சோகமான விஷயம் தான். இதற்கு முக்கியமான காரணம் என்று என் செல்லக் குழந்தைகளான திரா விடக் கட்சிகளைத் தான் சொல்ல முடியும்.

இன்னொரு விதமாகப் பார்க்க முடியுமானால், இது அறிவுஜீவிகளின் தோல்வி – failure of the intelligentsia – இவர்கள் தாங்கள் நம்பும் கோட்பாடுகளுக்காக, கோட்பாடுகளாகவே வாழ்ந்து காட்டாமல், கருத்துலகத் தலைவர்களாக பார்க்கப் படாமல் – வெறும் வாய்ப்பேச்சாளர்களாக, வெட்டிவீரர்களாக மட்டும் சுணங்கிப் போனது.

இன்னொரு விதமாகப் பார்த்தால், இது மத்தியவர்க்கங்களின் இலவசங்களுக்கும், சலுகைகளுக்கும் (ஒரு எடுத்துக்காட்டு: இடஒதுக்கீடு என்பதைச் சுற்றிச் சுற்றி மட்டுமே) அலையும் தன்மை –  failure of the middle class, hankering after concessions and freebies. இவர்களால், மேற்கண்ட அறிவுஜீவிகளைச் சுற்றி வளையங்களையும், கட்டுமானங்களையும் அமைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

இன்னொரு விதமாகப் பார்த்தால், கருத்துலக அரைகுறைகளின் ஆகாத்தியம் மேலதிகமாக வளர்ந்து வருவது – rise of the lumpen, crass theoreticians. அறிவுஜீவிகளும், மத்தியவர்க்கத்தினரும் மேலெடுத்துச் செல்ல வேண்டிய விஷயங்களை, சமூக உரையாடல்களை, தத்துவார்த்த வலைப் பின்னல்களை – அரைகுறைகளும் பொறுக்கிகளும் கீழெடுத்துச் சென்று கொண்டிருப்பது விசனத்துக்குரியது.

ஆனால் நீங்கள் கேட்கலாம் – ஏன்,  உழைப்பாளர்கள் – உழவர்கள் & தொழிலாளிகள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையென்று. அவர்கள் ஒரு பொருட்டே இல்லையா என்று.

நான் சொல்கிறேன், அவர்கள் மகத்தான, மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய சக்திகள் தாம். அவர்கள் ஏரோட்டம் இல்லையென்றால் நகரவாசிகளின், தகரவாசிகளின் காரோட்டம் இருக்காது தான். ஆனால் இவர்களுக்கு, கருத்து, கருத்தியல் மண்ணாங்கட்டி என்றெல்லாம் அலைய நேரமே இருக்காது – அவர்களுடைய தொழில் தர்மமும், செயல்பாடுகளும் அப்படிப்பட்ட ‘டைம்பாஸ்’ வேலைகளுக்கு இடம் கொடுக்க மாட்டா. ஆக, அப்போதைக்கு மனதுக்குப் பட்டதின் படி ஆக்கப் படும் அரசியல் தான் அவர்களுடையது. ஆனால், முதல் இரண்டு வீழ்ச்சிகளின் காரணமாக, இந்தப் பெரும்பான்மையினர் மீகாமன் இல்லாமல் இருக்கிறார்கள். The result is isolation, desolation & splintering of the working classes.

உடனே ஓடி வருவீர்கள் – ஏன், உழைக்கும் வர்க்கத்துக்கு தலைமையேற்கும் பண்பு கிடையாதா? ஏன் உன் மேட்டிமைத்தனத்தை வெட்கமில்லாமல் காண்பிக்கிறாய் என. சரிதான். உங்களுக்குத் தெரியும், இருந்தாலும் சொல்கிறேன். கார்ல் மார்க்ஸ், ஃப்ரெட்ரிக் எங்கேல்ஸ் போன்றவர்கள் உழைக்கும் வர்க்கத்தில் வந்தவர்கள் தான், அல்லவா? க்ராம்ஷியும் – ஏன் நம்மூர் தர்மாதத் கோசம்பி போன்றவர்களெல்லாம் கூட அப்படித்தானே? ஜோதிபாசு, ஈஎம்எஸ் விதையிட்டு, நீர்பாய்ச்சி அறுவடை செய்யாத பயிரும் உண்டா? ராஹுல்ஜீ? கோவிந்த ‘PG’ பிள்ளை?? இவர்களையே விட்டு விடுவோம்  –  இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு ‘தொழிலாளி’ அல்லது ‘விவசாயி’ தலைவரைக் காட்ட முடியுமா, அந்தக் கேடுகெட்ட நாசவேலை நக்ஸல்பாரி இயக்கங்களின் தலைமையில்? ஹ்ம்ம்?? எல்லோரும் குமாஸ்தாக்கள்தான்.

இன்னொரு விதமாகப் பார்த்தால்… (என்ன, போதுமா? ம்ம்ம்… சரி விடுகிறேன்) 8-)

-0-0-0-0-0–

எவ்வளவோ நேரம் வீணாகக் கழிகிறது. இணையத்தில் வெட்டியாக நம் கருத்துமுட்டைகளை அடைகாக்காமல், அட்டைக் கத்தியைச் சுழற்றாமல், பெட்டைப் புலம்பல்களில், அலம்பல்களில் செலவழிக்காமல் –  நம் நேரத்தை –  நம் எதிர்காலத்துக்காகவாவது, நம் சுயநலத்துக்காகவாவது உபயோகிக்க முடியாதா?

மேடைப் பேச்சு பேசி, தெருமுனைக் கூட்டங்களில் பேசித்தான் ஓட்டுச் சேகரிக்க வேண்டும் என்றில்லை.  நாம் நம்பும் விஷயத்துக்கு,  நம்மால் நேரம் ஒதுக்க முடியாதா? தெரிந்தவர்களுடன் உரையாட முடியாதா?

நாம் பணிபுரியும் அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் இரண்டு வாரம் (குறைந்த பட்சம் – அதுவும் தேர்தலுக்குச் சற்று முன்பு மட்டுமே) டாடா சொல்லி விட்டு வீடு வீடாகப் போய் – வாக்குகளை  நேர்மையாகவே சேகரிக்க / கலைக்க முடியாதா? இவ்வீடுகள்  நம் இருப்பிடத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கலாம் – ஒப்புக் கொள்கிறேன்,  நம்  வீட்டின் அருகாமையில் இப்படி அரசியல் செய்தால், நம் தமிழக திரா விட அரசியல் இருக்கும் இருப்பில் – அசிங்கமான உணர்ச்சி கூட நம்மில் எழலாம்.

வெட்கமாக இருக்கிறது, பயிற்சி தேவை என்று நீங்கள் கருதினால் – இடது/வலது கம்யூனிஸ்ட் குழுக்கள் கூடவோ அல்லது ஆர்எஸ்எஸ் குழுவினர்கள் கூடவோ  – சேர்ந்து எப்படி அவர்கள் தேர்தலுக்காக வேலை செய்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளலாம். எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் – இவர்களை விட ஜனநாயகம்,  சுயஅர்ப்பணிப்பு, செயலூக்கம், திட்டமிடல், தங்கள் கொள்கைகள் மீதான நம்பிக்கை – என்பவற்றை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் இல்லை. அவர்கள் அரசியலில் உங்களுக்கு பிடிப்பு இல்லாமலிருக்கும் பட்சத்தில், அவர்களிடம் நேரிடையாகவே – ‘எனக்கு உங்கள் கருத்துக்களுடன் ஒப்புதலில்லை – என்னை மன்னியுங்கள், ஆனால் எப்படி ஓட்டு சேகரிக்கிறீர்கள் என உங்களிடம், ஒரு மாணவனாக,  உங்களுக்குத் தொந்திரவு கொடுக்காமல்,  பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என  நேர்மையாகச் சொல்லி, அவர்களிடமிருந்து உதவி பெறலாம். என் பார்வையில் நேரிடைத் தன்மையை மக்கள் எப்பொழுதுமே வரவேற்கத்தான் செய்வர்… இன்னொரு விஷயம் – மற்ற கட்சிகளில், இயக்கங்களில் – எனக்குத் தெரிந்து, இம்மாதிரி அர்ப்பணிப்பு மிகுந்த தொண்டர்கள் இல்லை – எல்லாம் பிரியாணிக்கும், குடிக்கும், தினக்கூலிக்கும் அலையும் பொறுக்கிகள்தான் அடிமட்ட ஊழியர்கள்.

ஆனால் — எனக்குத் தெரிந்த ஒரே விதிவிலக்கு – வை கோபால்சாமி அவர்களின் மதிமுக. ஆனால், பாவம்தான் இவர், ஏமாந்தால் உணர்ச்சிவசப்பட்டு அழுது விடுகிறார். (கனவு: இவர் தன் தர்க்கபூர்வமற்ற எல்டிடிஇ தீவிரத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஜெயலலிதா கட்சியுடன் இணைந்து – பின்னவருக்கு அடுத்த தலைவராகவோ அல்லது இணையாகவோ ஒன்று சேர்ந்து உழைக்க முடிந்தால், அது தமிழகத்துக்கு நல்லது. (யாரங்கே! குழாயில் இன்னொரு தவணை கஞ்சாவை நிரப்பு!) அப்படியே பாஜகவும், தொல் திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் இணைந்தால்?? (டாய், யாரங்கே? என் கோகெய்ன் எங்கே??))

ஹ்ம்ம்.

நம்மால் நம் கருத்துக்களை அவதூறில்லாமல் (என்னை மாதிரியல்ல) எழுதி அதனை அச்சடித்து, அவற்றைப் படிக்கக் கூடியவர்களுக்கு  விநியோகிக்க முடியாதா?

நம்முடைய சுற்றுப் புரத்தில், வீடளவு சிறு அமர்வுகள் நடத்தி உரையாடல்களுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வை அதிகம் விகசிக்கச் செய்ய முடியாதா?

தேர்தலன்று – நம் சுற்றுப் புரத்தில் ஓட்டு கூடப் போடாமல், மற்றவர்கள் ஓட்டுப் போடுவதை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களை – இழுத்துக் கொண்டு ஓட்டுப் போட வைக்க முடியாதா?

குறைந்த பட்சம்,  நம் டீஷர்ட்களில் ‘கொள்கை’களை அல்லது கருத்துப் பிரகடனங்களை அச்சிட்டு வளைய வர முடியாதா?

”ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?” :-)

-0-0-0-0-0-0-

நேரடி அரசியலைக் கூட விட்டு விடலாம். எனக்குத் தெரிந்து, சமுதாய மேன்மைக்காக (அப்படியெல்லாம் சொல்லிக் கொள்ளாமல்) பாடுபடும், அவர்கள் நம்புவதை, ஆத்மார்த்தமாகச் சுணங்கவேசுணங்காமல் செய்து கொண்டிருக்கும் பலரை, அவர்களுடைய சமூகப் பங்களிப்புகளை – நேரடியான, எதிர்மறையற்ற அரசியலை, அதனைத் தளராமல் மேலெடுத்துச் செல்லும் தன்மையை – நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். இவர்களுடன் கொஞ்சம் பழகியுமிருக்கிறேன். இவர்கள் செய்வது அரசியல் தான். இந்த அரசியல் விரும்பத் தக்கது தான்.

சில  எடுத்துக்க்காட்டுகள் இங்கு: (எச்சரிக்கை: இவர்களையெல்லாம் நான் அரசியல் வாதிகளாகவும் பார்க்கிறேன்)

ரவி அண்ணா’ என்று வாஞ்சையுடன் அழைக்கப் படும் மதிப்புக்குரிய அ. வேதரத்னம் அவர்கள்: இவர் ‘சர்தார்’ வேதரத்தினம் பிள்ளை என்று சுதந்திரப் போராட்ட காலத்தில் அறியப்பட்ட  மாமனிதரின் பேரர். தாயுமானவரின் பத்தாம் தலைமுறையினர் கடந்த சுமார் 67 வருடங்களாக,  இவர் தாத்தா ஆரம்பித்த குருகுலம், வேதாரண்யத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது – இந்த அற்புத மனிதர்தான் இப்போது இதனை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். (நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் – எனக்கு 602 பெண் பிள்ளைகள் – ஆதரவற்ற அவர்கள் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் தங்கிப் படிக்கிறார்கள் – ஒரு நாளைக்கு 8 மூட்டை அரிசி தேவைப் படுகிறது- சுமார் 6000 என்  பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள் ++  எனக்குக் கூட கண்ணில் நீர் மல்கி விட்டது. இவரல்லவோ உண்மையான களப்பணியாளர்! அவர் நன்கொடையெல்லாம் கேட்கவில்லை…) ராசாக்கள் ஆளும் இக்காலங்களில், இப்படிப்பட்ட மனிதர்களின் சமூக மேன்மைப் படுத்தல்களில் இல்லாத நேர்மையான அரசியலா?  நெகிழ வைக்கிறது – இம்மனிதர்களின் நம்பிக்கையும் அரசியலும்.

தமிழ் இலக்கிய சூழலில், பணிபுரியும் ஜெயமோகன், பத்ரி சேஷாத்ரி போன்றவர்களெல்லாம்  கூட இப்படித்தான் – இவர்களுடன் நான் பெரிதாக பல்லாண்டு காலமாக அறிமுகம், தொடர்ந்த உரையாடல் என்றெல்லாம் இல்லாவிட்டாலும் இவர்களை, இவர்களில் ஆளுமையை – அவற்றின் ஆழத்தை,  கொஞ்சமாவது நான் அறிவேன்.

முன்னவருக்கு எவ்வளவோ கல்யாண குணங்கள் – அவற்றில் இரண்டை மற்றும் எடுத்துக் கொள்வோம். 1) அவர் ஆத்மார்த்தமாக நம்பும், தளராது முன்னெடுத்துச் செல்லும் காந்தி பற்றிய கருதுகோள்கள், மீட்டெடுப்புகள் – மாய்ந்து மாய்ந்து மாய்ந்து  இன்னமும் மாய்ந்து  ஒற்றை அதிவீரச் சாமுராய் போல பல முனைகளில் எதிர் கருத்துக்களை எதிர் கொண்டு – எழுதி வரும், கூர்மையான விவாத அறிவால், விஷய ஞானத்தால் செறிவு செய்யப் படுபவை இவை.  2) இவர் (அல்லது இவர் வாசகர் வட்டம்) நடத்தி வரும் வருடாந்திர நித்யா கருத்தரங்கு அமர்வுகள் – பல காலமாக இதனைச் சொந்த செலவில் (பண, முக்கியமாக, நேர) செய்து வந்திருக்கிறார். ஏன் இவர் இதையெல்லாம் செய்ய வேண்டும் இவர்? பேசாமல் சினிமா வசனம் எழுதிக் கொண்டு இருக்கலாமே! ஏனென்றால் – நான் சொல்வேன் – இவை, அவர் வழியான, சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும், நேர்மையான அரசியலின் வழிமுறைகள்தான் என்று.

பின்னவருக்கும் அப்படியே. அவற்றிலும்  இரண்டை மற்றும் எடுத்துக் கொள்வோம். 1) தமிழில் பல தளங்களில் பதிப்பித்தல் சாதனைகளைச் செய்யக் கூடும், ஓரளவு ஏற்கெனவே செய்திருக்கும் கிழக்கு பதிப்பகத்தை நண்பர்களுடன் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவது (எனக்கு இதில் கொஞ்சம் பொறாமையும் கூட). 2) வேலை மெனெக்கெட்டு கல்லூரி மாணவர்களுடன் இவர் வேலை செய்ய முனைந்து அவர்களுடைய விழிப்புணர்வையும், குடிமை உணர்ச்சியையும் வளர்த்தெடுப்பது.  இவருடைய படிப்பறிவுப் பின்புலத்தை நான் நேரடியாக, அனுபவ ரீதியாக அறிவேன். இம்மாதிரிப் பின்புலம் உடையவர்கள், படிப்பில் / ஆராய்ச்சியில் பெரிய அளவு சாதனைகள் செய்யாதவர்களாகக் கூட இருக்கலாம் – ஆனால் அவர்கள் (ஹ்ம்ம், குறைந்த பட்சம், ’அந்த’ காலத்தில்) வெகு சூட்டிகையானவர்கள், எடுத்த காரியத்தைச் செய்து முடிக்கும் மகாமகோ இயல்பூக்கம் (’கில்லர் இன்ஸ்டின்க்ட்)’  உள்ளவர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. கிழக்கு உழக்கு என்று பதிப்பகம் எல்லாம் நடத்தாமல் வேறு ஏதாவது செய்து கொண்டிருந்தால் எங்கேயோ போய்க் கொண்டிருப்பார் இவர்! ஏன் வேலை மெனக்கெட்டு இதெல்லாம் செய்கிறார்? நான் சொல்வேன் – அவருக்காக அரசியல் முனைப்பாடு அது. அவர் பார்வையில் நம் சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் அது.

இன்னும் எவ்வளவோ பேர் இருக்கின்றனர் –  நம் இந்தியா தொடர்பான அரசியலைத் தன் சொந்த முறையில், தங்கள் தளங்களில், அலட்டிக் கொள்ளாமல், புலம்பாமல், இன்னொருவருக்குத் தெரியாமல், ஊடகப் பிரகடனங்கள் இல்லாமல் – சமூக மேன்மைக்காக மட்டுமே செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள்… (பொதுவாகப் பரவலாகத் தெரிய வராதவர்கள்)

டி ஆர் நாகராஜ், குரு ஃப்ரெட்டி, மௌலானா வஹீதுத்தீன் கான், அந்தனி டி’மெல்லோ, கொர்ரேபட்டி நரேந்த்ரனாத், சேர்க்கடி ராமச்சந்திரராவ், ராஜனி திராணகம,  நியமத் அன்ஸாரி, ஸி வி சேஷாத்ரி, அடெம் ஆஸ்பார்ன் … …  எனப் பலப்பல மாமனிதர்கள்.

உயிருடன் இருப்பவர்களில் ஸ்ரீ லக்ஷ்மி தாத்தாச்சாரியார், பெர்னார்ட் டிக்லெர்க், ழான் ட்ஹ்ரீஸ்  ரெய்ஸ் கான் பதான், மது கிஷ்வர், ஜாதவ் பெயங், குத்தப்பாக்கம் இளங்கோ … … போன்றவ்ர்கள்.

எனக்குத் தெரிந்தே இப்படிச் சுமார் 200 நபர்களாவது உயிருடன் இருப்பர்.  நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும். (நேரம் எங்கே?)

”ஏன், என்னால் இதைக் கூடச் செய்ய முடியாதா?” :-)

-0-0-0-0-0-0-

அரசியல் பழகு. ஆகவே நரேந்த்ர மோடி!

இன்றைய இந்தியா குழுமம் (India Today Group) நடத்தும் வருடாந்திரக் கூட்டங்கள் – அது தொடர்பான உரையாடல்கள், அதன் பாடுபொருட்கள், இந்தியாவை முன்னெடுத்துச் செல்பவர்களின், முன்னெடுத்துச் செல்வதாகச் சொல்பவர்களின் முக்கியமான முரணியக்கங்கள் – குறிப்பாக நோக்கத் தக்கவை.

இந்த வருடம் 2013 கூட்டத்தில் – குஜராத் முதலமைச்சர் நரேந்த்ர மோடி அவர்கள் பேசிய பேச்சு – அதில் முக்கியமானது. அந்தக் கான்க்லேவ் போயிருந்த என்னுடைய சில நண்பர்கள் மிகவும் சிலாகித்துச் சொன்னது இது.

இதன் யூட்யூப் காணொளியை, கீப்விட்.காம் மூலமாகத் தரவிறக்கம் செய்து பார்த்தேன். இது சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் நிகழ்ச்சியின் பதிவு. முதல் சுமார் 14 நிமிடங்களுக்கு குஜராத் மாநில வளர்ச்சி பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு ஆங்கில ஆவணப் பதிவு – இதனை, ஒரு சுருக்கமான பவர்பாய்ன்ட் உரை என வைத்துக் கொள்ளலாம். இதை மட்டுமாவது அனைவரும் பார்க்க வேண்டும்.

இதற்குப் பின் மோடி அவர்களின் பேச்சு / உரையாடல் – ஆங்கில-ஹிந்தி ப்ரவாள நடையில். நம் தேசத்தின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

தமிழ் நாட்டின் சாபக் கேடு இந்த எழவெடுத்த ஹிந்தி எதிர்ப்பு அரைகுறைப் போராட்டம். இந்த கையலாகாத்தனத்தால் மட்டுமே நாம் கலாச்சார ரீதியாக, வரலாற்று ரீதியாக, நல்லிணக்க ரீதியாக இழந்துள்ளவை அதிகம். ஆனால் என்ன நன்மைகள் இந்த எழவால் விளைந்தன என்பது எனக்கு இதுவரை சத்தியமாகப் புரியவில்லை. என் போதாமை / அறியாமைதான் காரணமோ என்ன இழவோ.

எது எப்படியோ, ஆக, இந்தப் பதிவைப் படிக்கும் பலருக்கு ஹிந்தியைப் படிக்கும் / அறிந்துகொள்ளும் பேறு இல்லாமல் இருக்கச் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனாலும், எப்படியாவது – யாராவது ஹிந்தி தெரிந்த மனிதருடன் உட்கார்ந்து கொண்டாவது – அவசியம் பாருங்கள்…இது ஒன்றே முக்கால் மணிநேரப் பேச்சுதான்.

இதில் மாய்ந்து மாய்ந்து, நம் இந்தியாவின் வளர்ச்சி நிலையை அங்கலாய்த்து, குஜராத் மாநிலத்தில் சாதனைகள் பல புரிந்த நரேந்த்ர மோடி அவர்கள் சொல்வது ”ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?”

இந்தப் பேச்சு பற்றிய ஒரு சிறிய ஆங்கிலச் செய்தி இங்கே: “Kya ye hum nahi kar sakthey!

இது பெரும்பாலும் பொருளாதார படிப்பறிவு வட்டார வழக்கில் – கடின மொழியில் உள்ளது – எனக்கும் இதனை வெறும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புரிந்து கொள்ள, இருதடவை படிக்க வேண்டியிருந்தது. சில தவறுகள் மொழிமாற்றத்தில் / புரிந்து கொள்ளுதலில் – ஆனால், இதனையும் படிக்க வேண்டும், நீங்கள்.

”ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?” :-)

-0-0-0-0-0-

நான் தற்போது வாழ்ந்து வரும் சூழலில் – அதன் அடிப்படைகளான வன்முறையின்மை, நல்லிணக்கம், ’அன்பே சிவம்’ போன்றவைகளின் காரணமாக – தமிழக அரசியலென்றாலே வன்முறை என்றாகிவிட்ட சோகத்தில் – இரண்டு வருடங்கள் முன் குடும்பத்துக்குக் கூடப் பல சமயம் தெரியாமல் செய்த அடாவடி வேலைகள், நேரடி அரசியல் (சிலசமயம், இருவழிச் சாலை சார்ந்த ‘தள்ளுமுள்ளுகள்’ = அடிதடிகள்) எல்லாம் என்னால் வரும் வருடங்களில் செய்ய முடியாது. அது எடுத்துக் கொண்ட தர்மத்துக்குச் சரி வராது.

ஆனாலும், நான் அரசியல்வாதிதான். வரும் லோக்சபா தேர்தலுக்கு, என்னால் முடிந்ததைச் செய்து நபும்ஸக காங்க்ரெஸ் ஆட்சிக்கு எதிராக (காங்க்ரெஸை சினிமாத்தனமாக வேரறுப்பதற்காகவெல்லாம், அழித்தொழிப்பதற்காகவெல்லாம் இல்லை – அந்த அளவு இவர்கள் மீது வெறுப்பெல்லாம் இல்லை; இவர்களும் முக்கியமே!), ஊழல் திமுக அரைகுறைகளுக்கு எதிராக – பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாகச் செயல் படப் போகிறேன்.

பார்க்கலாம், என்ன நடக்கப் போகிறது என்பதை…

”ஏன், என்னால் இதைக் கூடச் செய்ய முடியாதா?” :-)

-0-0-0-0-0-0-

ஆனால்… லோக்சபா தேர்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன…

”ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?”

சரி.  ஓட்டு / கட்சி / அரசாங்கம் சார்ந்த அரசியலையே விட்டு விடுங்கள் – நமக்கான, நம்முடைய அரசியலை வளர்த்தெடுக்க முடியாதா?

”ஏன், நம்மால் இதையம் கூடச் செய்ய முடியாதா?” :-)

உஙகளை விட்டு விடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான்…

23 Responses to “ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?”


  1. பாரதிய ஜனதாவில் நிறையத்தலைவர்கள் அதிலும் தாம் மற்றவர்களைக்காட்டிலும் தகுதி படைத்தவர் என்று உளமாற நம்புபவர்கள், அதனால் தலைமை தனக்கே தரப்படல் வேண்டும் என்று நினைப்பவர்கள் (உண்மையில் சில பேர் நினைப்பு சரியாகவே இருக்கக்கூடும்.) இருக்கிறார்கள். ஆனால் தான் முக்கியமா அல்லது நாட்டின் அவலங்கள் விரைந்து நீங்கவேண்டும் என்பது முக்கியமா என்பதில் நாட்டு அவலங்கள் நீங்கவேண்டும் என்பதே முக்கியம். இந்த காலகட்டத்தில் வாக்காளர்களிடையே மோடிக்கு இருக்கும் ஆதரவு எனக்கு இல்லை ஆகையால் நான் மோடியை ஏற்பதுமட்டுமில்லாமல் அவரை பரப்புவேன் அவரை வளர்ப்பேன் என முழுமூச்சாக இறங்கும் உள்ளம் யாருக்கும் இல்லை.

    அத்வானி போன்றவர்கள் தன்னுடைய நிலையை மிகச் சரியாக வெளிப்படுத்தவேண்டும் என்ற காரணத் தினாலோ அல்லது தான் உண்மையானவன் ஆகையால் தான் சரியெனக் கருதும் கருத்துக்களைச் சொல்லத்தயங்கக்கூடாது எனக் கருதியோ பேசுவதும் எழுதுவதும் மக்களைக் குழப்பும் விதமாகவே உள்ளது.

    ஒரு தெளிவு பிறக்க வழிசெய்வது தன்னைப்போன்ற மூத்த அரசியல்வாதியின் கடமை என்பதை மறந்து அவர் செய்யும் அறிவுசால் தண்டால்களை(உடல்பயிற்சியை) எத்தனைபேர் புரிந்துகொள்வார்கள். அவர் வாஜ்பாயியை நன்கு பரப்பினார். ஆனால் வாஜ்பாய் அவருக்கு அதைச்செய்யவில்லை. அதிலிருந்தாவது பாடம் கற்றுக்கொண்டு நாடு முக்கியம் ஆகையால் மோடியை பரப்புவது நாட்டின் நலனில் அக்கறை உள்ள தன் கடமை என அவர் செயல்பட மறுக்கிறார்.

    அந்தக் காலத்தில் காந்திமட்டும் இப்படி நாசுக்கு பார்க்காமல் ராஜாஜியைப் பரப்பி இருந்திருந்தால் நாடு தாங்கள் கூறும் கொரியா ஜப்பான் போன்ற நாடுகளை விட முன்னேறி பல மாமாங்கங்கள் ஆகி இருக்கும். ராஜாஜியைத் தொலைத்த மாதிரி மோடியையும் தொலைத்துவிடுவோமோ என மனம் பதறுகிறது.

  2. ks Says:

    Dear Sir,
    A thought provoking and inspiring article.. there is a institution called Amar Seva Sangam in ayakudi , near tenkasi.
    this institution is doing yeoman service to physically challenged children.

  3. அ.சேஷகிரி Says:

    அய்யா வெங்கடாசலம் அவர்களே ,
    உங்கள் பின்னூட்டத்துடன் வரிக்கு வரி உடன்படுகிறேன்.
    முதலில் திரு.ராமசாமி அவர்களுக்கு மிக்க நன்றி “ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?” என்ற விரிவான கட்டுரையை எழுதியதற்காக.அதில்

    “தமிழ் நாட்டின் சாபக் கேடு இந்த எழவெடுத்த ஹிந்தி எதிர்ப்பு அரைகுறைப் போராட்டம். இந்த கையலாகாத்தனத்தால் மட்டுமே நாம் கலாச்சார ரீதியாக, வரலாற்று ரீதியாக, நல்லிணக்க ரீதியாக இழந்துள்ளவை அதிகம். ” என்று மிகச்சரியாக ஹிந்தி படிக்க முடியாத எல்லோருடைய ஆதங்கத்தையும் எழுதியுள்ளார்.
    இதில் ஒரு விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன் இப்பொழுது நடந்து வரும் மாணவர் போராட்டத்தை பற்றிய கட்டுரை ஒன்றின் பின்னூட்டத்தில் திரு.பூவண்ணன் அவர்கள் இப் போராட்டத்தை பெரிய சாதனையாக கருதி எழுதியிருந்தார்.ஒரு மொழியை கற்பதற்கு வலுக்கட்டாயமாக தடை விதித்ததில் என்ன ஒரு நன்மையோ எனக்கு தெரியவில்லை.

    குளத்து மீது கோபப்பட்டு ‘குண்டி கழுவாமல் போனால் யாருக்கு நட்டம்?

    அடுத்ததுதிரு.ராமசாமி அவர்கள் வரும் பாராளுமன்ற்த்தேர்தலில் பி.ஜே.பி.க்கு ஆதரவாக செயல்பட போவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    உண்மையில் அத்வானி அவர்கள் நீங்கள் எழுதியதுபோல் மோதியை இனிமேலாவது முன்னிலை படுத்தி நாட்டு மக்களிடேயே பிரச்சாரம் பண்ணவேண்டும்.அவருக்கு வயது ஆகிவிட்டது இனி உயர் பதவிகளை வகிக்க வாய்ப்புஇல்லை.

    காங்கிரஸ் இப்பொழுதுள்ள நிலைக்கும், மோதியின் வெற்றிகரமான செயல்பாடுகளை குஜராத்தில் பார்த்த பிறகும் தற்பொழுது நாடு இருக்கும் நிலையில் இதைவிட்டால் வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது.

  4. tamil Says:

    உங்கள் அரசியல் ஆதரவு யாருக்கு என்பதை தெளிவாக்கிவிட்டீர்கள். அப்புறம் எதற்கு ஷங்கர் குஹா நியோகி போன்றோர் பெயர்களை எழுதுகிறீர்கள். உங்களுடைய அரசியல் நிலைபாட்டிற்கு, அவர் போன்றவர்களுக்கும் என்னதான் தொடர்பு.

    • சான்றோன் Says:

      நடு நிலை என்பது எந்த பக்கமும் சேராமல் இருப்பதல்ல……எந்தப்பக்கம் நியாயம் உள்ளது என்று பார்த்து அந்தத்தரப்பை ஆதரிப்பதே உண்மையான நடு நிலை…….

      அந்த‌ வகையில் திரு .ராமசாமி அவர்களின் நிலைப்பாட்டை , நாட்டின் நல‌ம் விரும்புபவர்களால் புரிந்துகொள்ள முடியும்…….

  5. சான்றோன் Says:

    சேஷகிரி அவர்களே ……

    தாங்கள் குறிப்பிடுவது அனேகமாக இந்த தளம் என்று நினைக்கிறேன்……http://puthu.thinnai.com/?p=19394

    அதில் நானும் மற்ற நண்பர்களும் ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராக வாதிட்டுள்ளோம்……. இருப்பினும் வாதம் எப்படியெல்லாம் திசைதிருப்பப்ப‌டுகிறது என்று பாருங்கள்……எனவேதான் கடந்த கட்டுரையில் இப்படிப்பட்டவர்களோடு வாதிட்டு என்ன பயன் என்று கேட்டிருந்தேன்…….

  6. அ.சேஷகிரி Says:

    சான்றோன் அவர்களே,வணக்கம் நான் நீங்கள் குறிப்பிட்ட தளத்தை சொல்லவில்லை.முன்பு திரு.ராமசாமி அய்யா தளத்தில்,திரு.பூவண்ணன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி எழுதியதைத்தான் குறிப்பிட்டு இருந்தேன்.ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் சென்று பார்த்தபின் தான் உங்கள் அர்த்தமுள்ள வாதங்களையும் ,திரு,பூவண்ணனின் அபத்த வாதங்களையும் படிக்க நேர்ந்தது.
    இவர்களிடம் வாதம் புரிவது வீண் எனத்தோன்றுகிறது.
    தூங்குபவர்களைத்தான் நம்மால் எழுப்ப முடியும்.வீம்பிற்காக தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எக்காலத்திலும் எழுப்பமுடியாது.
    ஹிந்தியை கற்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் நான்
    வடநாட்டில் வேலை பார்த்த பொழுது அடைந்த கஷ்டம் அதிகம்.இதை உண்மையில் உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் வலி புரியும்.

  7. பூவண்ணன் Says:

    சான்றோன்,சேஷகிரி ,ராமசாமி சார் நான் கலப்பணியாளன் கிடையாது.கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை சார்ந்தவன்.மார்ச் முடிந்து விட்டது இன்னும் DA பற்றி ஒன்றும் வரவில்லையே என்று வருத்தத்தில் இருப்பவன்
    நாட்டின் ஒரு மூலையில் வேலை செய்து கொண்டு (மன்னிக்கவும் அரசு வேலையில் இருப்பவர்கள் எங்கே வேலை செய்கிறார்கள்.வெட்டியாக அரட்டை அடித்து கொண்டு சம்பளம் வாங்கி கொண்டிருப்பவன்)இணையம் மூலமாக பல நல்லவர்களிடம்/வல்லவர்களிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறேன்
    ஆய் போயிட்டு கல்லை வைத்து துடைப்பதா,இல்லை காகிதத்தை வைத்து துடைப்பதா என்பதை ஆய் போனவர்கள் முடிவு செய்யட்டும் எனபது தானே கட்டாய இந்தி எதிர்ப்பு போராட்டம்.
    இதில் நீ குறிப்பிட்ட நாட்டில் பிறந்ததால் ,இங்கு பெரும்பான்மை மக்கள் கல்லை வைத்து துடைப்பவர்கள் என்பதால் கட்டாயம் கல்லை வைத்து துடைக்க வேண்டும்/கற்று கொள்ள வேண்டும் எனபது ஞாயமா
    அதற்க்கு எதிராக உலகத்தில் பல நாடுகளில் காஹிதத்தை வைத்து தான் துடிக்கிறார்கள்,அதை போல நாமும் செய்யலாமே,இல்லை துடைக்க எனக்கு உரிமை வேண்டும்,என் மீது கல்லை திணிக்காதே என்ற போராட்டத்தை எதிர்த்து என் இவ்வளவு வன்மம் எனபது புரியவில்லை

  8. பூவண்ணன் Says:

    சான்றோன் சார் நேரடியாக கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

    ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எதற்காக என்று கொஞ்சம் படிக்க முயற்சி செய்யுங்களேன் .
    பொத்தாம் பொதுவாக போராட்டத்தினால் அழிந்தவர்கள் பலர் என்று பேசுவது,அதற்க்கு நீங்கள் கை தட்டுவதில் உண்மை எங்கே .எதை இழந்தார்கள்,எதனால் அழிந்தார்கள் என்று கூறுங்களேன்

    தமிழ் மொழி போராட்ட தியாகிகள் என்று அரசு அவர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு,உதவி தொகை எல்லாம் தருகிறது.

    அதற்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்தவர் பல லட்சம்,போராட்டத்திற்கு பின் அது மிகவும் குறைந்து விட்டது.போராட்டத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவர்கள்,அவர்களின் தேர்ச்சி சதவீதத்தை விட போராட்டத்திற்கு பிந்தைய வருடங்களின் எண்ணிக்கை ,தேர்ச்சி சதவீதம் குறைவு என்று ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் தாருங்களேன்
    திராவிட கட்சிகளின் ஆட்சியில் மாநில அரசு வேலை வாய்ப்புகள் அதிகரித்தன,பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது .
    தி மு க அங்கம் வகித்த வி பி சிங்க் அரசு மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஏற்று கொண்ட பின் மத்திய அரசு உயர் பதவிகளில் தமிழகத்தின் பங்கு அதன் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிகம் பெற்று வருகிறது.
    ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசு பணிகளில் கூட தமிழர்களின் பங்கு குறையவில்லை,கூடி தான் வருகிறது

    http://articles.timesofindia.indiatimes.com/2008-05-05/chennai/27776869_1_civil-services-obc-candidates-obc-category

    TN accounted for nearly a quarter of the OBC candidates selected at the all-India level in both 2004 and 2005. In 2006, it accounted for 15% while Uttar Pradesh accounted for over 20% (one in every five selected OBC candidate was from UP). But TN has the largest number of OBCs making it to the civil services, much more than even UP, which has more than double its population

  9. பூவண்ணன் Says:

    ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழுக்கும் ,இந்திக்குமான போராட்டம் அல்ல
    ஆங்கிலத்துக்கும் இந்திக்குமான போராட்டம்
    இணைப்பு மொழி இனி ஹிந்தி மட்டும் தான் என்பதை எதிர்த்து தான் போராட்டமே .ஆங்கிலம் இந்தியாவில் இணைப்பு மொழியாக இன்று இருப்பதற்கு,உத்தர்ப்ரதேச மக்கள் கூட போட்டி போட்டு கொண்டு கற்று கொள்ளும் நிலை உருவானதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
    அதன் பலனை அனுபவிப்பவர் அனைத்து மாநில மக்களும் தான்.

    உங்கள் நவோதய வித்யாலய பற்றிய கேள்விக்கு ஏற்கனவே பதில் கொடுத்ததாக ஞாபகம்
    மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் கொடுக்கும்.அங்கு மத்திய அரசு ஹோச்டேல் வசதியுடன் இலவச கல்வி,உணவு,தங்குமிடம் வழங்கும் பள்ளி நடத்தும்.இடம் கொடுக்க தமிழக அரசு தயாராக இருந்தது.அதன் ஒரே கோரிக்கை ,கட்டாய ஹிந்தி வேண்டாம்,விருப்ப பாடமாக இந்தி இருக்கலாம் எனபது தான்.
    தமிழகம் இந்தியாவில் ஒரு பகுதி என்றால் ,இங்கு இருப்பவர்களும் இந்தியர்கள் என்று மத்திய அரசு கருதினால் ,இங்குள்ள ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும்,அவர்களும் நம் மக்கள் தானே என்று எண்ணி இருந்தால் விருப்ப பாடமாக ஹிந்தியை ஒத்து கொண்டு இருக்கலாம்.
    ஆனால் இங்கு இருக்கும் ஏழை மக்களுக்கு கல்வி தருவதை விட ஹிந்தி திணிப்பு முக்கியம் என்பதால் பள்ளிகளை இன்றுவரை மத்திய அரசு திறக்கவில்லை

    புதுச்சேரியில் வசிப்பவர் பலர் பிரான்ஸ் சென்று வேலை செய்ய ஆசைபடுவர்.பிரெஞ்சு மொழி படிப்பர்.
    அதே போல டெல்லி சென்று வாழ,வேலை செய்ய விருப்பபடுபவர்கள் தேவையான மொழியை படித்து கொள்கிறார்கள்

    கேரளாவில் படிப்பவர்களுக்கு அரேபியா மொழி சொல்லி கொடுக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும்.ஹிந்தி பேசும் இடங்களுக்கு சென்று வேலை செய்பவர்களை விட gulf நாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டுபவரால் கேரளாவிற்கு வரும் பணம் பலமடங்கு

    வெளிமாநிலத்திற்கு வேலைக்கு செல்லும் வரை எனக்கு பொட்டு ஹிந்தி கூட தெரியாது.சில மாதங்களில் கற்று கொள்வது ஒன்றும் கடினமான ஒன்று கிடையாது
    நண்பர் வினோதகன் முகநூலில் அற்புதமான கருத்து வைத்தார். மொழியை எப்போது வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்.ஆனால் உணவு பழக்கம் அப்படி அல்ல ,உலகமெங்கும் மாட்டு கறி உண்ணும் நாடுகள் தான் அதிகம்.அங்கு சென்று உணவு கிடைக்க மிகவும் கஷ்டபடுவதை தடுக்க சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் அனைத்து கறியும் உண்ணும் பழக்கத்தை உருவாக்கி விட்டால் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய எந்த தடையும் இருக்காது என்று
    வெளி ஊரில் வேலை செய்ய தடை என்று குதிக்கும் நண்பர்கள் இதை ஒத்து கொள்கிறார்களா

  10. சான்றோன் Says:

    @பூவண்ணன்……..

    //தமிழ் மொழி போராட்ட தியாகிகள் என்று அரசு அவர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு,உதவி தொகை எல்லாம் தருகிறது.//

    ஆமாம் சார்…….காங்கிரஸ் ஆட்சியில் , திருப்பூரில் பட்டப்பகலில் ஒரு போலீஸ் இண்ஸ்பெக்டரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த கிரிமினல்கள் ,ஆட்சி மாறியவுடன் , மொழிப்போர் தியாகிகளாக மாறிவிட்டனர்…..

    இதெல்லாம் உங்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்…..ஒரு தமிழனாக நான் வெட்கப்படும் சம்பவம் அது…….

    மத்திய அரசுப்பணிகளில் எத்தனைபேர் சேர்ந்தால் என்ன? முக்கியமான இடங்களில் ஹிந்தி தெரிந்தவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்…….ஒருவேளை , ஹிந்தியின் தேவை அறிந்து தன்னுடைய சொந்த முயற்சியால் ஹிந்தி கற்றுக்கொள்பவர்கள் முக்கிய பதவிகளை வகிக்கலாம்……அதுவரை அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு? ஹிந்தி எதிர்ப்பால் நாம் இழந்த , இழந்து கொண்டிருக்கிற விஷயங்களை நான் பட்டியலிட்டிருந்தேனே?அதற்கு உங்கள் பதில் என்ன?

    இன்று தமிழக அரசின் முக்கிய பதவிகளில் பெரும்பாலும் வேற்று மா நிலத்தவரேஇடம் பெற்றுள்ளார்களே ?அதன் காரணம் என்ன? ஒப்பீட்டளவில் அப்படி எத்தனை மா நிலங்களில் தமிழர்கள் உயர் பதவி வகிக்கிறார்கள்?

  11. பொன்.முத்துக்குமார் Says:

    அன்புள்ள பூவண்ணன்,

    ஹிந்தி திணிப்பை எதிர்ப்பவன்தான் நானும். தியரிட்டிக்கலாக ஹிந்தி ஆதிக்கத்தை விரும்பாதவனே.

    நீங்கள் சொல்லும் ‘கல்லா காகிதமா’ வாதம் ஒப்புக்கொள்ளக்கூடியதே. இந்த விஷயத்தில் ஜெயமோகன் (எழுத்தாளர் :)) இன்னும் தர்க்க ரீதியாக ஒன்றும் சொல்கிறார். ‘பண்டைய காலத்தில் சமஸ்கிருதம் அறிவுபூர்வமான இணைப்பு மொழியாக விளங்கியது. (விவாத சபை போன்ற இடங்களில்) காரணம் அதற்குரிய தகுதியை அது பெற்றிருந்தது. ஹிந்திக்கு அதற்கிணையான தகுதி இல்லாததாலும், சமஸ்கிருதம் நடைமுறையில் வழக்கொழிந்து போனதாலும் ஆங்கிலமே அந்த இடத்திற்கு இன்று பொருத்தமான மொழி’ என்கிறார். மேலும் “அதிகம் பேர் பேசுவதனால் ஒரு மொழி பொதுமொழியாக இருக்க முடியாது. அது மொழிச்சிறுபான்மையினர் மீதான பண்பாட்டு வன்முறையாக ஆகிவிடவே வாய்ப்பதிகம்.” என்றும் “மும்மொழிக்கொள்கை வந்தால் இந்திபேசுபவர் இருமொழி கற்க தெற்கே மும்மொழி கற்க வேண்டியிருக்கும். அது சமமற்ற போட்டியை உருவாக்கும்.” என்றும் விரிவாக விளக்குகிறார். (முழு கட்டுரையையும் படிக்க இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

    ஆனால் …

    நடைமுறை சிக்கல் என்று ஒன்று இருக்கிறது. தமிழகம் இந்தியாவில் எப்போதும் தனித்தே இயங்கிவிட இயலாது. நிறைய விஷயங்களில் ஒத்துப்போகவேண்டும். குறிப்பாக மைய அரசின் நலத்திட்டங்கள் – உதாரணமாக ரயில்வே, நெடுஞ்சாலைப்போக்குவரத்து, தகவல், தொலை தொடர்பு – விஷயத்தில் நாம் மைய அரசோடு இணக்கமாக செயல்படவும் சான்றோன் சொன்னது போல திறமையாக லாபி செய்யும் அளவுக்கு திறன் வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

    மிக சமீபத்திய உதாரணம், இரு கேரள மீனவர்கள் (அதில் ஒருவர் தமிழராமே) இத்தாலி கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம். நினைத்தே பார்க்க இயலாத அளவுக்கு கேரள அரசியல்வாதிகள், மைய அரசின் மந்திரிகள், உயரதிகாரிகள் ஒன்றுபட்டு மைய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ‘அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது’ என்று ஆட்டம் காட்டிய இத்தாலியை பணியவைக்க முடிந்தது, உச்சநீதி மன்றம் மூலம் இத்தாலி தூதரை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று ஆணை பிறப்பிக்க முடிந்தது.

    ஆனால் நூற்றுக்கணக்காக தொடர்ச்சியாக சுட்டுக்கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற தமிழக மீனவர்கள் விஷயத்தில் மைய அரசு இலங்கையை கண்டிக்க வைக்கக்கூட நமக்கு ஒற்றுமையோ தெம்போ திராணியோ இல்லை.

    நாம் ஆங்கிலம் பேச தெரிந்தவர்களாக இருக்கலாம். அதே அளவுக்கு ஹிந்தியை அல்லாது ஆங்கிலத்தை மட்டுமே இணைப்பு மொழியாக கருத, அங்கீகரிக்க, உபயோகிக்க மைய அரசும், வட இந்திய அரசுகளும், அதிகார வர்க்கமும் தயாராக இருக்கும்போது மட்டுமே நாமும் இதே போன்ற லாபியை செய்ய முடியும். ஆனால் இது நடைமுறை சாத்தியமா சொல்லுங்கள் ?

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்.

  12. பூவண்ணன் Says:

    முத்துகுமார் சார் அர்னாப் கோஸ்வாமி போல சத்தம் போடுவதால் உரிமை கிடைத்து விட்டது என்று பலர் சிந்திக்க துவங்கி விட்டது வருத்தம் தரும் நிகழ்வு .நாதியற்ற சமூகம் என்றால் அது மலையாளி தான்
    இந்திய ,உலகெங்கும் சென்று பெண்கள் வேலை செய்வது கேரளாவில் இருந்து தான்.மிகவும் புனிதமான,முக்கியமான செவிலியர் தொழிலில் அவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் மொத்த மருத்துவ துறையும் ஆடி விடும்
    அவர்களின் படிப்பு சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு மிக அதிக நேரம் வேலை வாங்காத /குறைவான ஊதியம் தராத இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
    gulf நாடுகளில் சிறு குற்றங்கள்/அல்லது போலி பாஸ்போர்ட்/ஏஜென்ட் மூலம் ஏமாற்றப்பட்ட /விசா முடிந்த பின்னும் தங்கிய என்று சிறையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கேரளகாரர்களுக்கு எந்த லாபியும் இது வரை உதவியது கிடையாது
    செவிலியர் படிப்பு படிக்காமல் பயிற்சி மட்டும் எடுத்து கொண்டு நோயாளிகளை மாதகணக்கில் அவர்கள் வீட்டில் தங்கி பார்த்து கொள்ளும் வேலையை செய்பவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தை சார்ந்த பெண்கள் தான்.மிக குறைவாக ஊதியம் கிடைக்கும் அவர்களுக்கு இன்றுவரை எந்த லாபியும் ஒரு துரும்பை அசைத்தது கிடையாது
    தவறு செய்யவில்லை ,அது ஒரு விபத்து என்ற எண்ணத்தில் வந்து மாட்டிய இருவரை வைத்து கொண்டு ஆடும் நாடகங்களை பார்த்து கேரளா வாழ் மக்களுக்கு உதவ/லாபி செய்ய ஆட்கள் அதிகம் என்று எண்ணுவது தவறான ஒன்று
    நாடக திருமணம் என்று குதிக்கும் சாதிகளை/புனித காதல் என்று என்று எதிர்க்கும் சாதிகள் என்று எல்லா சாதியை சார்ந்த மருத்துவர்களும்/மருத்துவ மாணவர்களும் திருமண எண்ணத்தை ஏற்படுத்தி பழகி அதிகம் ஏமாற்றும் பெண்களில் பெரும்பாலானோர் கேரள பெண்கள் தான்.அவர்களுக்கு உதவ சாதி/மத/மொழி இயக்கம் ஒன்று கூட கிடையாது

    இறந்த இருவரில் ஒருவர் தமிழகத்தை சார்ந்தவர்.http://en.wikipedia.org/wiki/2012_Italian_shooting_in_the_Arabian_Sea

    The bodies of the two fishermen, Gelastine (45) and Ajesh Binki (25), were brought to Neendakara harbour late on the night of 15 February 2012 and were taken to the Medical College Hospital, Thiruvananthapuram, for post mortem. Subsequently, Gelastine’s body was taken to Kollam and buried on the morning of 17 February, while the body of Ajesh Binki, was taken to Erayammanthurai in Tamil Nadu’s Kanyakumari district and buried

  13. பூவண்ணன் Says:

    சான்றோன் சார்
    வேலையில் சேர்ந்த பிறகு ஹிந்தி கற்று கொள்வது பெரிய விஷயம் அல்ல.மத்திய அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசு ஹிந்தி வாத்தியார்களை நியமித்து ஒப்புக்கு தேர்வு நடத்தி 20000 ரூபாய் வரை பரிசும் வழங்குகிறது. என் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் ஹிந்தியில் இரு மாதங்களாக கையெழுத்து போடுவதால் தலா ஆயிரம் ரூபாய் ஹிந்தி வளர்ப்பு வார நிகழ்வுகளில் பரிசு பெற்றனர்.யார் ஹிந்தியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் அலுவலக பணிகளில் என்பதை பார்த்து கொடுக்கப்படும் பரிசு அது.
    அரசு உயர் அதிகாரிகளோ,ராணுவ,விமானபடை/கப்பல்படை தலைமை பொறுப்புகளோ/உயர்ந்த பதவிகளோ/மத்திய அரசியலிலோ தமிழர்கள் பங்கு மற்ற மூன்று தென்னிந்திய மாநிலங்களை விட மிக அதிகம்.
    தமிழன் என்பதால்,இங்கு கட்டாய ஹிந்தி கிடையாது என்பதால் வேலையில் சேர்ந்த தமிழர்கள் ஒதுக்கபபடுகிரார்கள் எனபது ஆதாரமில்லாத கூற்று.
    எமேர்கேன்சிக்கு பிறகு கூட இந்திரா காங்கிரஸ் கூட்டணி ஓரிரு இடங்களை தவிர்த்து அனைத்தையும் வென்றது.இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சிக்கு மத்தியில் தொடர்ந்து ஆதரவு தந்த மாநிலங்களில் முதன்மையான மாநிலம் தமிழகம் தான்.அப்படி இருந்தும் தமிழகதிர்ற்கு காங்கிரஸ் கட்சி பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றால் அதற்க்கு யாரை திட்டுவது.திராவிட கட்சிகளையா/இயக்கத்தையா
    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் எம் பி க்களை தமிழகம் அனுப்பி வந்த காலகட்டத்தை விட திராவிட கட்சிகளை அதிகம் அனுப்பும் காலகட்டத்தில் தான் நமக்கு சக்திவாய்ந்த அமைச்சகங்களும் கிடைத்தன,பல நெடுஞ்சாலைதுறை வேலைகள்,கல்லூரிகள் /மத்திய அரசு நிறுவனங்கள்/ரயில்வே கோட்டங்கள் கிடைத்தன எனபது எதை காட்டுகிறது
    தமிழகம் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது போன்ற வாதத்தில் துளியாவது உண்மை இருக்கிறதா

  14. சான்றோன் Says:

    பூவண்ணன் …..

    உங்கள் ஸ்டீரியோ டைப் வாதங்கள் அலுப்பூட்டுகின்றன…….

    என்னவோ திராவிட கழகங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் தமிழகம் மிகவும் பின் தங்கியிருந்தது போலவும் , கழகங்கள்தான் தமிழகத்தை முன் நிலைக்கு கொண்டுவந்ததுபோல் திரிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்……உண்மையில் ,ஒப்பீட்டளவில் தமிழகம் எப்போதுமே முன்னேறிய மாநிலம்தான்…….சொல்லப்போனால் காமராஜர் ஆட்சிக்காலம் வரை தமிழகத்துக்கிடைத்த திட்டங்கள் , அதன்பிறகு கிடைக்கவில்லை……பட்டியிலிட தொடங்கினால் பக்கங்கள் போதாது…..

    //திராவிட கட்சிகளை அதிகம் அனுப்பும் காலகட்டத்தில் தான் நமக்கு சக்திவாய்ந்த அமைச்சகங்களும் கிடைத்தன//

    அதெல்லாம் சரி…அந்த அமைச்சகங்களை வைத்துக்கொண்டு இவர்கள் தங்களை வளப்படுத்திக்கொண்டார்களே தவிர தமிழகத்துக்கு என்ன நன்மை? 2 ஜி முதல் ,சேதுசமுத்திரம் வரை எல்லாவற்றிலும் ஊழல்……. நெடுஞ்சாலைத்துறை வேலைகளில் , டி .ஆர். பாலுவின் ”சேவை ”உலகப்புகழ் பெற்றது…யாரை வேண்டுமானாலும் அமைச்சர் ஆக்குங்கள் , இந்த ஆள் மட்டும் வேண்டாம் என்று ஊழலில் கரைகண்ட காங்கிரஸே கதறியதைத்தான் பார்த்தோமே…….

  15. பூவண்ணன் Says:

    சான்றோன் சார்
    ச்டீரியோவோ கிராம்போனோ பள்ளிகூடத்தில் கட்டாய ஹிந்தி இல்லாததால் தமிழர்கள் ஒதுக்கபடுகிரார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் கொடுங்களேன்

    காங்கிரஸ் கட்சியில் பல தமிழர்கள் உயர் பதவியில் இருந்தார்கள்.ஆர் வி பல முக்கிய மந்திரி பதவிகள் ,துணை குடியரசு தலைவர்,குடியரசு தலைவர் பதவி வகித்தார். பா ஜ கா வில் NDA அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பா ஜ க வின் தேசிய தலைவராக ,சட்ட அமைச்சராக ஜனா கிருஷ்ணமூர்த்தி இருந்தார்.
    மரகதம் சந்திரசேகர்,மூப்பனார்,அருணாசலம்,மணி ஷங்கர் ஐயர்,ப சிதம்பரம் என்று கடந்த நாப்பது,ஐம்பது ஆண்டுகளில் காங்கிரஸ் முதல் குடும்பத்திற்கு நெருக்கமான பலரும் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தான்.இவர்களால் தமிழகத்திற்கு ஆதரவாக உருவாக்க முடியாத கருத்து சூழலை பள்ளியில் கட்டாய ஹிந்தி எப்படி உருவாகி இருக்கும்.
    பள்ளியில் கட்டாய ஹிந்தி இருக்கும் அஸ்ஸாம் மாநில மக்களை பற்றி,அவர்களின் பிரட்சினைகள் பற்றி வேறு யாராவது கவலைபடுகிரார்க்ளா,இல்லை பள்ளிகளில் ஹிந்தி படிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்காக லாபி செய்கிறார்களா
    தமிழகத்தில் பெருகிய மெட்ரிக் பள்ளிகளில் இரண்டாவது மொழியாக ஹிந்தி அல்லது பிரெஞ்சு அல்லது வடமொழி அல்லது தமிழ் படிக்கலாம் என்று தான் ஐம்பது வருடமாக இருந்தது.ஹிந்தியை ஒதுககியதால் ஒதுக்கப்பட்ட தமிழகம் எனபது கலப்படமில்லாத பொய்.
    மத்திய அரசில் உயர் பதவி வகித்த தமிழ் அதிகாரிகள்,விஞ்ஞானிகள் பட்டியலும் வெகு நீலம்.அறிவியல் ஆலோசகராக (scientific advisor ) கலாம் வகித்த முக்கிய பதவி பெரும்பாலும் தமிழர்கள் கையில் தான் இருந்தது என்று மற்ற மாநிலத்தவர் பொறுமுவர்
    தமிழர்கள் பலர் பதவியில் இருந்தும் ஒன்றும் கிழிக்கவில்லை என்ற கூற்றை ஓரளவிற்கு ஏற்று கொள்ளலாம்,ஆனால் கட்டாய இந்தி இல்லை என்பதால் தமிழர்கள் பல உயரிய பதவிகளில் இருந்தாலும்,பொறுப்புகள் வகித்தாலும் தமிழ் மக்களுக்கு உதவ முடியவில்லை எனபது சரியான வாதமா

  16. poovannan Says:

    சான்றோன் சார்

    ஹி ஹி ஹி தமிழகத்தில் BPL எவ்வளோ இருந்தார்கள் இப்போது எவ்வளவு என்று கொஞ்சம் பாருங்களேன்

    1973 இல் 56.94 சதவீதம்
    2010 இல் 17.01 சதவீதம்
    எப்பவோ முன்னேறிய மாநிலத்தில் பாதிக்கு மேல் வறுமைகோட்டிற்கு கீழே இருந்தனர் என்றால் .தலை சுத்தவில்லையா

    Click to access MPRA_paper_42347.pdf

    2
    month income of Rs.49.10 and Rs.56.00 for rural and urban areas respectively based on
    1973

    74 base year. In terms of per cap
    ita expenditure, Rs.15 and Rs.20 per month in rural
    and urban areas respectively at 1960

    61 prices are taken to determine the poverty levels.
    The monthly per capita income for dividing people
    as
    BPL in Tamil Nadu is estimated a
    t
    Rs.639 for rural and Rs.808
    .8 for urban areas.
    The Tendulkar Committee recommended
    use of implicit prices derived from quantity and value data collected in household
    consumer expenditure surveys for computing and updating the poverty lines.
    The level of
    poverty could be also measure
    d based on standard of living index constructed using
    socio

    economic indicators.
    T
    he prevalence of poverty in both rural and urban areas had been estimated for Tamil
    N
    adu. Table 1 provides the trends in the number of persons below poverty line
    indicating
    the incidence of poverty
    in Tamil
    N
    adu for the period 197
    3

    7
    4 to 2009

    10
    .
    Table

    1
    Trends in
    Incidence of Poverty in Tamil Nadu
    Number of Persons Below Poverty Line (in millions)
    Year
    Rural
    Urban
    Combined
    1973

    74
    17.26
    (57.43)
    6.69
    (49.40)
    23.95
    (5
    6
    .
    94
    )
    1977

    78
    18
    .25
    (57.
    68
    )
    7
    .30
    (4
    8
    .
    69
    )
    25
    .95
    (5
    4
    .
    79
    )
    1983
    18.25
    (
    53
    .
    99
    )
    7.85
    (
    46
    .9
    6
    )
    2
    6.
    1
    0
    (5
    1
    .
    16
    )
    1987

    88
    16
    .18
    (45.80)
    6
    .
    9
    3
    (38.6
    4
    )
    23
    .1
    1
    (4
    3
    .
    39
    )
    1993

    94
    12
    .17
    (32.48)
    8
    .04
    (39.77)
    20
    .
    2
    1
    (3
    5
    .
    03
    )
    1999

    2000
    8.05
    (
    20
    .
    55
    )
    5.00
    (22
    .
    11
    )
    1
    3
    .05
    (
    2
    1
    .
    12
    )
    200
    4

    0
    5
    *
    13
    .4
    4
    (37.50)
    5.97
    (19.70)
    19
    .
    4
    1
    (2
    9
    .40)
    2009

    10
    *
    7
    .83
    (21.20)
    4
    .35
    (12.80)
    12
    .18
    (17.01)
    Note:
    1. Figures in ( ) indicate percentage share to the respective total population.
    2. Estimates are based on
    Tendulkar Methodology
    .
    Source: Planning C
    ommission, Government of Ind

    http://articles.timesofindia.indiatimes.com/2012-06-12/edit-page/32176123_1_gujarat-narendra-modi-industrial-growth

    What about inclusive growth in Gujarat? Though Gujarat, with 31.8% people below the poverty line did better than Maharashtra and Karnataka, it still lagged behind Kerala, Punjab, Himachal Pradesh and Haryana, where poverty levels were 19.7%, 20.9%, 22.9% and 24.1%, respectively.

    On three important social indicators, viz life expectancy at birth (LEB), mean years of schooling (MYS) and school life expectancy (SLE), Gujarat is far behind some other states. In Gujarat, the LEB during 2002-06 was 64.1 years and it ranked ninth among major Indian states. In the areas of MYS and SLE, during 2004-05, it ranked seventh and ninth, respectively. Kerala ranked first in all three indicators. Even Maharashtra, Himachal Pradesh, Punjab, Haryana, Tamil Nadu and Karnataka performed much better than Gujarat.

    எத்தனை அரசு கல்லூரிகளை,பள்ளிகளை,மாணவர்களுக்கு உதவி திட்டங்களை திராவிட கட்சி அரசுகள் துவங்கி உள்ளன என்று பார்க்கலாமா

  17. சான்றோன் Says:

    பூவண்ணன் அவர்களே….

    உங்கள் வாதத்திறமை புல்லரிக்க வைக்கிறது……

    விட்டால் இன்றைக்கு எத்தனை கார்கள் ஓடுகின்றன…….எத்தனைபேரிடம் செல்போன்கள் இருக்கின்றன….1971 ல் ஏன் இல்லை என்று கேட்பீர்கள் போலிருக்கிறது…..கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை கழகங்களின் சாதனைகளாக மாற்றும் வேலை இன்னும் எத்தனை நாளைக்கு எடுபடும் என்று நினைக்கிறீர்கள்?

    அது நேருவின் புண்ணியத்தில் வீணாய்ப்போன சோஷியலிசத்தை இந்தியா கட்டியழுதுகொண்டிருந்த காலம்……..அன்றைய நிலையில் மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழகம் பல துறைகளிலும் முன்னிலையில் தான் இருந்தது….[ இன்றும் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை ] …..தமிழகம் என்றுமே முன்னேறிய மாநிலம்தான்….அதில் திராவிட இயக்கங்கள் ஒன்றும் ஸ்பெஷலாக கிழிக்கவில்லை என்பதுதான் எனது வாதம்…..

    //.பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் எம் பி க்களை தமிழகம் அனுப்பி வந்த காலகட்டத்தை விட திராவிட கட்சிகளை அதிகம் அனுப்பும் காலகட்டத்தில் தான் நமக்கு சக்திவாய்ந்த அமைச்சகங்களும் கிடைத்தன,பல நெடுஞ்சாலைதுறை வேலைகள்,கல்லூரிகள் /மத்திய அரசு நிறுவனங்கள்/ரயில்வே கோட்டங்கள் கிடைத்தன //

    மனம‌றிந்து எவ்வள‌வு பெரிய பொய்யைச்சொல்ல உங்களால் முடிகிறது?
    புள்ளிவிபரப்புலி பூவண்ணன் அவர்கள் அளவுக்கு இல்லையென்றாலும் , என்னாலும் சில விபரங்கள் தர இயலும்…..

    காமராஜர்
    தமிழகத்தை இந்தியாவிலெயே
    தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
    கொண்டுவந்து நிறுத்தினார்!

    1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
    2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
    3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
    4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
    5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
    6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
    7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
    8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
    9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
    10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
    11.துப்பாக்கித் தொழிற்சாலை
    12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
    13.சேலம் இரும்பு உருக்காலை
    14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
    15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
    16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
    17.சென்னை அனல்மின் நிலையம்
    18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

    இவை மட்டுமா?

    மணிமுத்தாறு
    ஆரணியாறு
    சாத்தனூர்
    அமராவதி
    கிருஷ்ணகிரி
    வீடூர்
    வைகை
    காவிரி டெல்டா
    நெய்யாறு
    மேட்டூர்
    பரம்பிக்குளம்
    புள்ளம்பாடி
    கீழ்பவானி

    என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு
    நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள்
    காமராஜ் உருவாக்கியவை!

    அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது
    3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
    அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14

    இன்னும் சொல்லவோ?

    159 நூல் நூற்பு ஆலைகள்
    4 சைக்கிள் தொழிற்சாலைகள்
    6 உரத் தொழிற்சாலைகள்
    21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
    2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
    ரப்பர் தொழிற்சாலை
    காகிதத் தொழிற்சாலை
    அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

    கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை,
    மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி,
    தஞ்சாவூர்,திருச்சி…என்று

    தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்

    மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
    பாருங்கள் …………….

    காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!
    (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)

    அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
    இந்தச் சாதனைகளில்

    5 முறை ஆட்சி நாற்காலியை ஆக்கிரமித்த
    கருணாநிதி எவ்வளவு சாதனைகளை இதுவரை
    செய்தார்?

    3 முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த M.G.R என்ன செய்தார்?

    2 முறை ஆண்ட ஜெயலலிதா என்ன கிழித்தார்?

    இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக்
    கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா?

    இல்லை

    “இலவச”த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக
    மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
    செய்கை சாதனையா?

    இந்த சாதனைகளையெல்லாம் நிகழ்த்த அவருக்கு ஆதாரமாக இருந்தது என்ன? அவர‌து தேசிய சிந்தனை…….அந்த ஆணிவேரை ஆட்டியது ஹிந்தி எதிர்ப்பு வன்முறை………அதன் பின் விளைவுகளை நாடறியும்……

    எழுபதுகள் வரை தமிழகத்தின் நிர்வாக முறையே ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக இருந்தது…….

  18. venkatesan Says:

    சான்றோன், பூவண்ணன் இடையே நடைபெறும் உரையாடல் மிக நன்றாக உள்ளது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் பல நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன என்றும் அதன் பிறகு பெரிதாக ஒன்றும் இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இது தொடர்பாக இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போது சான்றோன் காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானங்கள் பற்றி சொல்லி விட்டார்! எனினும் எனக்கு கிடைத்த புள்ளிவிவரங்கள் கீழே.

    தமிழக அரசின் நீர் ஆதாரத் துறை நம்மாநில நீர்த்தேக்கங்கள், அவற்றின் கொள்ளளவு, கட்டப்பட்ட ஆண்டு போன்றவற்றை உள்ளடக்கி இணையத்தில் வெளியட்ட ஆவணம் கீழே உள்ளது. இதை அடிப்படையாக வைத்து இந்த புள்ளிவிவரங்கள் சேகரித்தேன் (Excel வாழ்க!)

    Click to access Reservoir_details.pdf

    இந்த ஆவணத்தில் 84 நீர்த்தேக்கங்கள் பற்றி விபரம் உள்ளது. இவற்றில் பெரிய பத்து நீர்த்தேக்கங்கள், கட்டப்பட்ட (அல்லது கட்டி முடிக்கப்பட்ட?) ஆண்டு, அவற்றின் கொள்ளளவு (மில்லியன் கன மீட்டர்) இதோ:

    1. மேட்டூர் – 1934 – 2700
    2. பவானி – 1955 – 930
    3. பரம்பிக்குளம் – 1967 – 500
    4. பெரியார் – 1897 – 440
    5. சாத்தனூர் – 1958 – 207
    6. வைகை – 1959 – 175
    7. பேச்சிப்பாறை – 1906 – 150
    8. சோலையார் – 1971 – 150
    9. அமராவதி – 1958 – 120
    10. மணிமுத்தாறு – 1958 – 110

    ஆங்கிலேயர் காலம் (1950 க்கு முன்), காங்கிரஸ் காலம் (1950-1967), கழக காலம் (1967 – ) என மூன்றாக பிரித்துக் கொள்வோம். இம்மூன்று காலகட்டங்களில் முதல் பத்து அணைகளில் முறையே மூன்று, ஆறு, ஒன்று என கட்டப்பட்டுள்ளன.

    மொத்த கொள்ளளவு கொள்ளளவு (மில்லியன் கன மீட்டர்) கணக்கு இதோ:

    ஆங்கிலேயர் காலம் : 3750
    காங்கிரஸ் காலம் : 2300
    கழக காலம் : 450

    84 நீர்த்தேக்கங்களில் எண்ணிக்கை அடிப்படையில் இப்படி உள்ளது:

    ஆங்கிலேயர் காலம் : 10
    காங்கிரஸ் காலம் : 14
    கழக காலம் : 60

    கழக காலத்தில் பெரிய அணை எதுவும் கட்டப்படவில்லை என தெரிகிறது. அணை கட்ட தோதான இடங்களை எல்லாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தப் பட்டுவிட்டதால் கழக காலத்தில் செய்ய ஒன்றும் இல்லாமல் போயிருக்கும் சாத்தியக் கூறு ஒன்று உள்ளது. யாராவது விஷயம் தெரிந்தவர் சொன்னால் தான் தெரியும்.

  19. poovannan Says:

    சான்றோன் சார்
    செல் போன்,கார் மட்டுமல்ல தொப்பை கூட வளர்ச்சியை காட்டும் ஒரு அளவுகோல் தான்.உங்கள் உறவு நட்புகளின் திருமணதிற்கு சென்றால் அங்கு உருண்டையாக (ஆன் ,பெண்,குழந்தைகள்)வருபவர்கள் அதிகம் என்றால் அது முன்னேறிய குடும்பம் என்று அர்த்தம்.வத்தலும் தொத்தலுமாக பலர் இருந்தால் BPL உறவினர்கள்,நண்பர்கள் அதிகம் என்றால் முன்னேற துடிக்கும் குடும்பம் என்று அர்த்தம்
    இப்போது வத்தலும் தொத்தலுமாக அதிகம் பேர் உள்ளனரா இல்லை உருண்டையாக அதிகமா என்று பாருங்களேன்

    http://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/india/31597294_1_upper-castes-scs-durables
    Research by Institute of Applied Manpower Research director-general Santosh Mehrotra has shown that the human development indicators of SCs and OBCs in Kerala and Tamil Nadu are better than those of upper castes in Uttar Pradesh and Bihar. Moreover, all four states have a similar proportion of ‘backward castes’ in their population: so the key determinant of each of these states’ human development situation is not its caste composition, but its politics and governance, Mehrotra says.

    அளவுகோல்களில் முக்கியமானவையாக கருதபடுபவை சராசரி ஆயுள்,தாய் சேய் இறப்பு ,கல்வி அறிவு போன்றவை
    இவற்றில் மற்ற மாநிலங்களை போல இருந்த தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் மிகவும் முன்னேறி உள்ளது என்றால் அதற்க்கு யார் காரணம்

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/better-equipped-phcs-deliver/article4439739.ece

    In 2004-2005, about 42.8 per cent of all deliveries in Tamil Nadu took place in private health care institutions; it came down by 10 percentage points to about 32.8 per cent in 2011-2012. While some of them have gone to government hospitals, the bulk have shifted to PHCs closer to their homes. The one improvement that public health officials said really gladdens them is the reduction in the percentage of domiciliary deliveries, or deliveries happening at home. What was about 35 per cent in 1993 has come down dramatically down to 0.2 per cent in 2011-2012.

    இந்தியாவில் அதிக அளவில் பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவது தமிழகத்தில் தான்.
    http://www.indianexpress.com/news/why-most-roads-from-nhai-lead-to-165km-stretch-in-tn/299443/

    The Indian Express had earlier reported how the minister had got Rs 10,800 crore sanctioned for highway development in Tamil Nadu in the last three years — the maximum spent on NHDP projects in any single state in the country.

  20. சான்றோன் Says:

    பூவண்ணன் அவர்களே………

    ஒப்பிடுவதிலும் ஒரு நியாயம் வேண்டும்………1960 களில் தமிழகத்தின் நிலை பற்றி பேசவேண்டுமானால் , அன்றைய இதர இந்திய மாநிலங்களோடு ஒப்பிடவேண்டும்…… அதைவிட்டுவிட்டு 1970 ஐயும் 2013ஐயும் ஒப்பிட்டுக்கொண்டு அன்று நீ ஒல்லி , இன்று நான் குண்டு என்பதெல்லாம் சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு……..

    நேருவின் தொலை நோக்கின்மை காரணமாக , சோஷியலிசம் என்ற பெயரில் , சோவியத்தின் திருதராஷ்டிர ஆலிங்கனத்தில் இந்தியா சிக்கித்தவித்த காலம் அது…….பஞ்சத்தின் காரணமாக நேரு அமெரிக்காவிடம் மக்காச்சோளத்துக்காக கையேந்திய காலம் அது……. அப்போதைய தமிழகத்தையும் , இன்று இந்தியாவெங்கிலும் உள்ள‌
    தானியக்கிடங்குகளில் , உணவு தானியங்கள் மக்கிப்போகும் காலத்தையும் ஒப்பிட்டு, நாங்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லிகொள்வதெல்லாம் ரொம்ப ஓவர்…….

  21. poovannan Says:

    சார் மோடி இப்ப தெரு தெருவா போய் பெருமைகளை அள்ளி விட்டு கொண்டு இருக்கிறார்.
    குஜராத்தில் அவர் என்ன மாற்றங்களை கொண்டு வந்ததால் அவரை ஆதர்கிரீர்கள் என்று கொஞ்சம் நீளமாக (உங்களுக்கு சொல்லவா வேணும்)விளக்கலாமே
    மற்ற மாநிலங்களை விட அங்கு பெண்கள் அதிக அளவில் படிக்கிறார்களா,எல்லா பிரிவுகளில் இருந்தும் நீதிபதிகள் முதல் ஆசிரியர்கள் வரை மக்கள் அதிக சதவீதங்களில் உள்ளனரா
    குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள்,தாய் செய் இறப்பில்/ஆன் பெண் சதவீதத்தில் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் குஜராத் இருக்கின்ற நிலையை பெருமிதத்தோடு விவரியுங்கள் சார்
    காவல்துறையில் பெண்கள் எவ்வளவு பேர். அதில் பாதியாவது தமிழகத்தில் இருப்பார்களா போன்ற விவரங்களை தூக்கி கடாசுங்கள் சார். பிறகு எவன் வாயை திறக்கிறான் என்று பார்ப்போம்
    கடந்த 10,12 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் எட்டு அரசு மருத்துவ கல்லூரிகள் துவங்கியுள்ளன என்று பெருமை பீற்றி கொள்ளும் முட்டாள்களிடம் மோடி துவங்கிய 80 கல்லூரிகளை வரிசை போட்டு அவர்கள் முகத்தில் கரியை பூசுங்கள் சார்
    பொறியியல் கல்வியில்,படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் குஜராத் அடைந்த உச்சத்தை நீங்கள் எடுத்து காட்டுவதை விட்டு எதிராக பேசுபவர்கள் உச்சா போக வேண்டும் ஐயா
    தமாதூண்டு மணிபூர் 48 தங்கம் வாங்குது ,குஜராத் இரண்டு வெள்ளி தேசிய போட்டிகளில் என்று இருந்த நிலையை மாற்றி குஜராத்தை கலை/கல்வி/விளையாட்டு அனைத்திலும் குஜராத்தை மோடி முதன்மை மாநிலம் ஆக்கிய கதையை விலாவரியாக எழுதுங்கள் சார்
    தனிநாடு வேண்டும் என்று போராடும் காஷ்மீர் ,வட கிழக்கு மாநிலங்களில் இருந்து கூட குஜராத்தில் ராணுவத்தில்/துணை ராணுவ படைகளில் சேருபவர்களை விட பல மடங்கு மக்கள் அதிகம் சேருகிறார்கள் என்ற இழிநிலையை மாற்றி எப்படி குஜராத்திகள் மத்திய அரசு பணிகள்,ராணுவம் போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் அவரின் பொற்கால ஆட்சியில் சேர்ந்து இருக்கிறார்கள் என்பதை எடுத்து விடுங்க சார்


  22. I am associated with rural students especially Govt High school and Higher Secondary schools. First let us not compare with other states or earlier days. Now live alone their ability to think, they are not able to read write in tamil or english do simple arithmetic . If you see their 10 and 12th mark sheets you can find in many subject they have scored only cut off mark. This cut off mark is given to boost overall pass percentage.
    We need to mainly focus on this issue , everything will follow.


Leave a reply to சான்றோன் Cancel reply