ஓஷோ என்று தன்னை அழைத்துக் கொண்ட ஆன்மிக அரைகுறை ரஜ்னீஷ் அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஏன், அவருடைய சமகால ஸேம்-ரெவல் ஜே க்ருஷ்ணமூர்த்தியையும்…

ஆனால்… Read the rest of this entry »

ஏனெனில் – இதற்கு ஒருமாதிரி,  என் கடலூர்சீனுகுருவி மூளைக்கு எட்டிய வகையில் சிலபல காரணங்கள்: Read the rest of this entry »

​என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுக்குமிடையே ஒரு பெரிய மசுருக்கும் வித்தியாசம் இல்லை. நன்றி.

Read the rest of this entry »

இலவச இணைப்பு: அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!

வாலிப, வயோதிக அல்லது சுக்ரீவப ‘நின்று ஆடும்’இளவல் தமிழகத்துத் தமிழ் நண்பர்களே!

தமிழகத்தில் நகைச்சுவை உணர்ச்சி அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஆகவே, இன்றைய தினம் நீங்கள், துக்கத்தில் ஆழ்ந்து மனம்பேதலித்து சட்டையைப் பிய்த்துக்கொண்டு கோமணமில்லாமல் (cow no-smellingly ©எஸ்ராமகிருஷ்ணன்) அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன்.
Read the rest of this entry »

இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?

தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(

Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.

கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி,  தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

Read the rest of this entry »

இந்த  (இந்தியா – சமூகம் – இஸ்லாம் – முஸ்லீம் – நான்: சில குறிப்புகள்) வரிசையின் முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி. இது நான்காம் பகுதி. இந்த வரிசையில் இன்னமும் இரண்டு பதிவுகள் வரலாம்.

சரி. எனக்கு இதுவரை கிடைத்துள்ள செறிவான அனுபவங்களில் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் எழுதலாமென எண்ணம்.

Read the rest of this entry »

பொதுவாக, எனக்கு – இந்த புலம்(!) பெயர்ந்த(!!)  ‘NRI’  தட்டச்சு குமாஸ்தா இந்திய  ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை(!) வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும்  கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்!

இவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற  கடைகளில் மெகாடன்னளவு வாங்கும்  சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ்  இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து!)  தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல  இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.
Read the rest of this entry »

இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…

இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட்  கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள்.  இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.

இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.

வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும்  கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.

இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்! Read the rest of this entry »

விஷயங்கள் நடக்க நடக்க அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வமோ, அதற்காக இணையத்திலோ தொலைக்காட்சிப் பொட்டியிடமோ நிபந்தனையற்றுச் சரணடையும் கொடுப்பினையோ எனக்கில்லை. ஏனெனில், சுடச்சுட என் மேலான கந்தறகோளக் கருத்துகளை எவர்மேலும் கவிழ்த்தவேண்டிய அத்தியாவசியமோ நமைச்சலோ என்னிடம் இல்லை; பொதுவாக, நான் என் எல்லைகளை உணர்ந்திருப்பவன். நான் எழுதுவதைப்(!) படிப்பவர்களும் வெகுசொற்பமானவர்கள் (அதாவது நான் உட்பட!) என்பதும் ஒரு வசதிதான்.

So, I don’t have to play to the gallery. நீங்கள் நம்பக்கூடும் உங்களுடைய செல்லக் கடவுளுக்கு நன்றி. அப்பாடா!

Read the rest of this entry »

(அல்லது) கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை  இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (2/2)

முந்தைய பகுதியின் தொடர்ச்சி… (என்னைப் பொறுத்தவரை சில முக்கியமான விஷயங்களை, விவாதிக்கப் படவேண்டியவைகளை – இப்பதிவில் ஆவணப் படுத்தியிருக்கிறேன். பொறுமையாக, பொங்கிவழியாமல் படிக்கவும், சரியா?)

-0-0-0-0-0-

… இன்னொன்று: நடைமுறை/பெரும்பான்மை இஸ்லாமில் பெண்களுக்குக் கதிமோட்சமேயில்லை எனும் கில்யஸின் துணிபு.

“எப்படித்தான் உங்களூர் முஸ்லீம் பெண்கள், இப்படிச் சுட்டெரிக்கும் வெய்யிலில் கறுப்புப் பர்தா போட்டுக்கொண்டு நடமாடுகிறார்களோ?”
Read the rest of this entry »

| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்:  ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |

சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.

ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.


பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…

Read the rest of this entry »