vairamuthu as well as the book used by him to deride andal are both bunkum, sorry to spoil the fun…
January 12, 2018
Poet(sic) Vairamuthu – in the grand tradition of the Tamil filmi nonsense – is a hilarious clown and ignorant buffoon at best, but as usual has a ‘mASS’ following. Read the rest of this entry »
தமிழ் மொழியைக் கேவலப்படுத்துவது எப்படி? (அல்லது ‘இன்குலாப்’ அவர்களுக்கு ஸாஹித்ய அகடெமி விருதாமே!)
December 30, 2017
அடப்பாவிகளா! மூச்சு முட்டுகிறதே. :-( Read the rest of this entry »
எஸ்ராமகிருஷ்ணம்
June 9, 2017
…எஸ்ராமகிருஷ்ணம், எஸ்ராமகிருஷ்ணம்
எஸ்ராமகிருஷ்ணம் மூடமதே!
[இதனை எம்எஸ் சுப்புலட்சுமி அம்மையார் பாடிய ‘பஜகோவிந்தம்’ பாடலைப் போலவோ, அல்லது திடீரெக்ஸ் கர்நாடக இசை வல்லுநரான எம்டி முத்துக்குமாரசாமி அண்ணனார் பாடக்கூடியது போலவோ எடுத்துக் கொல்லலாம்; நன்றி] Read the rest of this entry »
திராவிடத் தமிழனானவன் புண்படுவது எப்படி?
January 22, 2015
… ஆனால் அதற்கு, சோம்பேறித் தமிழனான அவன் — — பெண்-பெண்ணின்மை, ஆண்-ஆணின்மை, திருநங்கை-திருமதிநம்பி, ஜாதி-ஜாதியின்மை, மதம்-மதச்சார்பின்மை, புண்-புண்ணின்மை, சீழ்-சீழின்மை, சினிமா-உப்புமா என்றெல்லாம் விலாவாரியாக, பொதுவாக மூளை-மூளையின்மை எனக் காரணம் கொடுப்பான் என்பது ஒரு நடைமுறை உண்மை; சார்லி ஹெப்டொ கொலைகாரர்களே, அடிப்படையில் திராவிடர்களாமே! அய்யய்யோ!!
தமிழனுக்கு பண்படுதல் என்பதே புண்படுதல்தான்!
தயவுசெய்து, இதைப் பற்றி மனுஷ்யபுத்திரனிடமோ அல்லது எஸ். ராமகிருஷ்ணனிடமோ ஒரு எழவையும் சொல்லி விடாதீர்கள்! ப்ளீஸ்!!
September 30, 2014
தயவு செய்து…
உங்களிடம் கண்ணீர் மல்க மன்றாடி, நெஞ்சு விம்ம, மூக்குச்சளி ஒழுக, நெடுஞ்சாண் கிடையாக உங்கள் காலடியில் விழுந்து, நிபந்தனையற்றுச் சரணாகதியடைந்து கேட்டுக் கொள்கிறேன் – நம் தமிழகத்துக்காக, பாவப்பட்ட சகதமிழ் வாசகர்களின் மன நிம்மதிக்காக, இதைக் கூடவா உங்களால் செய்ய முடியாது? :-(
… ஏனெனில், அவர்கள் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு, காணொலியைப் பார்த்துவிட்டு எம்மாதிரி கந்தறகோள தத்துப்பித்துவ மலச்சிக்கல் கவிதையையும், மகாகோர மனிதச்சிங்கநேயக் கட்டுரையையும் ஊசிப்போன உப்புமாப் பிண்டங்களாக, முறையே, முறையாக, ஒரு வரைமுறையே இல்லாமல் அநியாயத்துக்குக் கிண்டி – நம் மாசிலா நற்றமிழ்த் தாயின் உயிரை – முறையே மாறுகவிதை, மாறுகட்டுரை வாங்கி ஒருவழி செய்துவிடுவார்களோ என்பதை நினைத்துப் பார்த்தாலே கதி கலங்குகிறது… :-(((
அம்மணிகளே, அய்யாமார்களே! தயவுகூர்ந்து, புரிந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »
மனுஷ்யபுத்திரன்(புலி வேட்டை)=ராக்ஷசபுத்திரி(புளிக் கொட்டை)
September 28, 2014
டொன்மைமிகு டொல்காப்பியப் பூங்காவில்
மரத்தின் கீழ் விழுந்த புளியம்பழத்தை
மனுஷ்யபுத்திரன் ஒருவன்
பிய்த்துச் சாப்பிட்டுவிட்டான்.
பிராண்டிப் பிய்ப்பதற்கு முன்
நீ பிரெண்டா இல்லையா என
பத்து நிமிடம் கத்திக் கொண்டே
உற்றுப் பார்த்துக்கொண்டு அதனை
அன்ஃப்ரெண்ட் செய்தான்
கருத்துப் படம்: முன்நவீனத்துவ புளியம்பழமும், பின்நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றி பல!)
வழுக்கி விழுந்துகொண்டிருக்கும்
புளியம் பழத்தை பின் வழித்தெடுத்து அதன்
தத்துப் பித்துவார்த்த பிரச்சினையை
நீர்க்கச் செய்து புளியோதரை செய்யலாமா
என எண்ண வேண்டியிருந்தது அவனுக்கு Read the rest of this entry »
பலவந்தமாகப் பாலியல் பலாகாரம் செய்வது எப்படி?
June 23, 2014
ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்; அதுவும், தினசரி குறிப்பிட்ட வேளைகளில், பலவந்தமாகப் பாலியல் பலாகாரம் செய்தால் கிடைக்கக்கூடிய பலான பலன்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.
இது அக்கப்போர் அல்ல. இதனை இன்னொரு முறை அடிக்கோடிட்டுக் கொள்ளவும். Read the rest of this entry »
இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள், ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக முக்கியம்.
ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள் புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள். ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »
(அல்லது) டீடலஸ், இகரஸ் – நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)
இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))
<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>
சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.
அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-( ம்ம்ம் B-)!
ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…
என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான தீர்வு இருந்தது.
கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.
எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது. இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.
இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம் என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »
ஸ்ரீலஸ்ரீ சொம்பேஸ்வரானந்த தம்பிரான் மஹாமஹோ பெரிய சந்நிதானேந்திர பூர்வாஸ்ரம மௌல்வி அப்துல் ஹமீதாச்சாரிய நேதி மனுஷ்யபுத்திர மஹராஜ் நாகநந்தியார்
October 7, 2013
முதலில், சில பத்திகள் – புத்தகச் சந்தை பற்றி… பின்னர் ‘கவிஞர்’ கதை.
இன்று பகல்நேரத்தில் எனக்குச் சுளையாக நான்கு மணி நேர அவகாசம் கிடைத்ததால், ஆங்க்லோ-ஃப்ரெஞ்ச் நெசவாலைத் திடலில் புதுச்சேரி அரசு நடத்திக் கொண்டிருக்கும் புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தேன்; சிறிய அளவில் சுமார் 80த்திச் சொச்சம் கடைகளே விரிக்கப் பட்டிருந்தாலும் – அதன் மேலாண்மை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. (வழக்கம்போல, குடி நீர், கழிப்பறை வசதிகளெல்லாம், சந்தைக்குச் செல்பவர்களையே விடுங்கள் – சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களுக்குக் கூட பரிதாபமான கட்டுமானங்கள் தான்; இதைத் திருத்த பலபத்தாண்டுகளாகும் எனத்தான் நினைக்கிறேன்.)
வாங்கும் புத்தகங்களுக்கு 25% கழிவு; நுகர்வோர் ரொக்க ரசீதுகள் அனைத்தும் புதுச்சேரி அரசின் கலை-பண்பாட்டுத்துறை கொடுத்திருக்கும் பில்-புத்தகங்களில் போடப்பட்டன. அரசு இந்தக் கழிவில் 15%த்தை கடைக் காரர்களுக்குத் திரும்பிக் கொடுத்துவிடுமாம். ஆக – புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஏகக் கெடுபிடி. வெளிவாசலில் – பில்களையும் புத்தகங்களையும் மாய்ந்து மாய்ந்து சரிபார்த்து ஒவ்வொன்றிலும் ‘15% DISCOUNT – NOT FOR RESALE’ என ரப்பர்ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார்கள். ஏனென்று கேட்டால் சில கடைக்காரர்கள் அரசு கொடுக்கும் தள்ளுபடியைக் கயமையாகக் ‘கறக்க’ மறுபடியும் மறுபடியும் புத்தகங்களையும், பில்களையும் மறு சுழற்சி செய்தவண்ணம் இருந்ததால் தான் என்றார்கள்.
என்னவாக இருந்தாலும் நாம் வாங்கும் புத்தகங்களிலெல்லாம் இப்படி அச்சடித்துக் கொடுத்தது ‘இந்த டம்ப்ளர் வசந்தாபவனிலிருந்து திருடியது’ என வசந்தாபவன் காரர்களே அவர்கள் டம்ப்ளர்களில் பொறித்துக் கொள்வது போல, கொஞ்சம் அசிங்கமாகவே இருந்தது, என்ன செய்ய… Read the rest of this entry »
(அல்லது) “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?”
ஆ! க ம் ப ன். % ^ # @ ! *& சும்பன்.
கம்பன் அப்படி என்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?
சரி. ஒப்புக் கொள்கிறேன். அவன் ஒன்றும் பெரியதாகச் செய்து கிழித்து விடவில்லைதான். நானும் கம்பராமாயணம் முழுக்கவெல்லாம் படித்துக கரைத்துக் குடித்தவனில்லை – ஆகவே என் அரைகுறைப் படிப்பு தந்த அதிகாரத்தில், அற்பகுஷியில், நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.
என்ன பெரியதாகப் புடுங்கி விட்டான் இந்தக் கொம்பன்? நேரடித் தன்மையும், புதிய பைந்தமிழ்ச் சொல்லாடல்களும் ( = ’ஜிங்குச்சான்’) கொண்டு வீரிட்டெழும் நம் திரைப்படப் பாடல் எழுத்தாளர்களின் வீரியத்துக்கும், ஆழத்துக்கும் வீச்சுக்கும் எதிரில் – இந்தக் கம்பன் எம்மாத்திரம்!
நம்மவர்கள் அடலேறுகள் போல் ஆர்பரித்து முன்னேறிச் சென்றால் – அவன் வீட்டிலிருந்து கட்டுத்தெறிக்க, விதிர்விதிர்த்து, தட்டுத்தடுமாறி ஓட விட மாட்டானா?
கட்டுத் தறியாவது, கவி பாடுவதாவது, காட்டுக்கோழிக் கறியாவது! ஆழி சூழ் உலகாம் – அண்டப் புளுகாம்…
இதெல்லாம் இன்னாடா? ரொம்ப ஊத்திக்கினு மானாவாரியா கத வுட்ரயே கம்பா!
வொங்க வூரு டாஸ்மாக்கு சரக்கு எப்டீ? மப்பு சுர்ருன்னு ஏறுமோ?? Read the rest of this entry »