ரத்தக் கண்ணீர் வருகுதய்யா, இந்த உதாசீனத்தைப் பார்த்தால்… Read the rest of this entry »
எஸ்ராமகிருஷ்ணன், பாவப்பட்ட ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் அவர்களை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!
August 11, 2018
…ஐயா மகாமகோ எஸ்ரா,
உங்கள் காலில் மானசீகமாக விழுந்து உருண்டுபுரண்டு, நாத்தழுதழுக்க கண்ணீர் மல்க இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர் என்ன கொடுமையைத்தான் செய்தார், உங்களுக்கு? ஏனிப்படி ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள் அவரை?
ஏன் உங்கள் லெவலுக்கு அவர் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரதரவென்று, அதல பாதாளத்துக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்ன பாவம் செய்தார் அவர்? :-( Read the rest of this entry »
முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே… Read the rest of this entry »
என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று – என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும் இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.
என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)
… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும். அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு ஒன்றுதானே!
எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!
… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே! ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.
‘rote learning’ is bloody important!
July 6, 2013
To make sense of this post, the previous post on the topic should perhaps be read. It would at least, provide some semblance of a context and continuity.
Here are the frequently avoided answers to the (should be) frequently asked questions on rote…
What is ‘rote memorization?’
I would define it as the ability to recall in a snap, certain ideas (or ‘facts,’ if you will) with very little effort or thought (or ‘logical thinking,’ if you will) – to build on these basic facts and the ability to act upon them in applicable & relevant domains.
This would be in terms of arithmetic operations, instantaneous responses to emergent situations, recalling of applicable processes and logic, recalling of mapped entities etc etc. Read the rest of this entry »
ஒரு தொழில்நுட்ப நேர்காணல் (1995)
March 8, 2013
Transcript of an interview, conducted way back in 1995 – in which is described, the travails of an interviewer…
Version information:
Had posted this stuff to the USENET (soc.* groups) – may be some 18 years back (1995) – has anything changed at all in the past 18 years with these dingbat programmers??
umm.. I received some brickbats too for having mentioned some real names. So, the disclaimer is
‘all real names have been changed to fictional ones, except when they are real.’
… Onward to the text of that offending post…
எழவாவது அறிவு
March 1, 2013
(அல்லது) ஒரு பின் நவீனத்துவ மஹாபாரத பேதி தர்மன் கதை
தர்மன் முதலில் பவுடர் போட்டுக் கொள்ளாமல் வேர்க்குருக்ஷேத்ரத்தில்தான் இருந்தான். பாடுபட்டு உழைக்காமலேயே வியர்வை வர விரும்பியவனாகவும், சூர்யா வம்சத்தைச் சேர்ந்தவனாகவும் இருந்ததால், அவன் அரைகுறைப் படங்களில் அழுது மூக்கைச் சிந்தி, அடித்துப் புரண்டு, கத்தி வசனம் பேசி, மேதகு டாலி பார்ட்டன் அவர்களே கூடப் பொறாமைப் படும் அளவுக்கு, ப்ரா போடாத வளப்பமான மார்பகங்களுடனும், கஷ்க மயிர் ஷவரம் செய்யப் பட்டும், எதற்கெடுத்தாலும் கைத்தசைகளை முறுக்கிக் காட்டியும், உதட்டைச் சுழித்தும், புருவத்தை நெரித்தும், காதல் பண்ணிக் கொண்டும், பன்ச்லைன் பேத்தியும் நடித்து வந்தான்.
அவன் படையில், நிறைய சொறி சிரங்குகளுடன், விசிலடிச்சான் குஞ்சுகளும், ஃப்ளெக்ஸ் பேன்னர் குஞ்சாலார்டுகளும், பல்வேறு ஜாதிகள்சார்ந்த வீரமணியால் மெச்சத்தக்க பால்-பீர் அர்ச்சகர்களும் இருந்தனர்.
ஆனால் தர்மனின் வளர்ச்சி – அவன் பங்காளிகளுக்குப் பிடிக்காத காரணத்தால், சகுனம் பார்த்து அஜித் சத்ரு, விக்ரம் வேதாளன் போன்றவர்களுடன் கொள்கைக்கூட்டணி வைத்து, மங்காத்தா ஆட்டத்திற்கு அவனை அழைத்து சகுனி மூலம் தோற்கடித்தனர்.